என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
கல்விக்கு அதிபதியான சரஸ்வதியை கொண்டாடும் விதமாக சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகிறது. சரஸ்வதி தேவியை நாம் மனமுருக வேண்டினால் நிறைந்த கல்வி செல்வத்துடன் சகல பாக்கியங்களும் நமக்கு கிட்டும்.
யாராலும் கொள்ளை அடிக்க முடியாத, அள்ள அள்ள குறையாத அமுத சுரபி தான் கல்வி. செல்வத்துள் குறையாத கல்வி செல்வம் ஒருவருக்கு கிடைத்து விட்டால் வீரமும், செல்வமும் தானாகவே தேடி வரும். கல்விக்கு அதிபதியான சரஸ்வதியை கொண்டாடும் விதமாக சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகிறது. கலைகளுக்கு அதிபதியான சரஸ்வதிக்கு என தனிக்கோவில் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே பூந்தோட்டத்தில் அமைந்துள்ளது. புராண காலத்தில் அம்பாள் புரி என்றும், பூந்தோட்டம் என்றும் அழைக்கப்பட்டது இந்த ஊர். பிற்காலத்தில் இந்த ஊரை 2-ம் ராஜராஜ சோழன் தன் அவைப்புலவர் ஒட்டக்கூத்தருக்கு தானமாக வழங்கியதால் கூத்தனூர் என்று பெயர் பெற்று விளங்குகிறது.
தன்னை தரிசிக்க வரும் மாணவர்களுக்கு கல்வி செல்வத்தை அள்ளி வழங்கி அருள்பாலித்து வருகிறார். தமிழகத்தில் சரஸ்வதிக்கு என தனிக்கோவில் இங்கு மட்டுமே உள்ளது. கருவறையில் சரஸ்வதி தேவி வெண்ணிற ஆடை உடுத்தியவளாக, வெண் தாமரை மலரில் பத்மாசனத்தில் வீற்றிருக்கிறாள். விஜயதசமி அன்று பல்வேறு ஊர்களை சேர்ந்த பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளை இந்த கோவிலுக்கு அழைத்து வந்து சாமி தரிசனம் செய்து பள்ளியில் சேர்ப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
அதேபோல மாணவர்கள் தேர்வு எழுதும் முன் பேனா, நோட்டு, பென்சில் உள்ளிட்டவற்றை சரஸ்வதியின் பாதத்தில் வைத்து வணங்கி எடுத்து செல்வர். இவ்வாறு வணங்கி செல்லும் மாணவர்களுக்கு தடையில்லா கல்வியை வழங்கி வருகிறார் கூத்தனூர் சரஸ்வதி. கல்வி கடவுளான சரஸ்வதி தான் ஆயக்கலைகள் அறுபத்து நான்கிற்கு தலைவியாகவும், தெய்வமாகவும் திகழ்கிறாள். சரஸ்வதி தேவியை நாம் மனமுருக வேண்டினால் நிறைந்த கல்வி செல்வத்துடன் சகல பாக்கியங்களும் நமக்கு கிட்டும்.
தன்னை தரிசிக்க வரும் மாணவர்களுக்கு கல்வி செல்வத்தை அள்ளி வழங்கி அருள்பாலித்து வருகிறார். தமிழகத்தில் சரஸ்வதிக்கு என தனிக்கோவில் இங்கு மட்டுமே உள்ளது. கருவறையில் சரஸ்வதி தேவி வெண்ணிற ஆடை உடுத்தியவளாக, வெண் தாமரை மலரில் பத்மாசனத்தில் வீற்றிருக்கிறாள். விஜயதசமி அன்று பல்வேறு ஊர்களை சேர்ந்த பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளை இந்த கோவிலுக்கு அழைத்து வந்து சாமி தரிசனம் செய்து பள்ளியில் சேர்ப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
அதேபோல மாணவர்கள் தேர்வு எழுதும் முன் பேனா, நோட்டு, பென்சில் உள்ளிட்டவற்றை சரஸ்வதியின் பாதத்தில் வைத்து வணங்கி எடுத்து செல்வர். இவ்வாறு வணங்கி செல்லும் மாணவர்களுக்கு தடையில்லா கல்வியை வழங்கி வருகிறார் கூத்தனூர் சரஸ்வதி. கல்வி கடவுளான சரஸ்வதி தான் ஆயக்கலைகள் அறுபத்து நான்கிற்கு தலைவியாகவும், தெய்வமாகவும் திகழ்கிறாள். சரஸ்வதி தேவியை நாம் மனமுருக வேண்டினால் நிறைந்த கல்வி செல்வத்துடன் சகல பாக்கியங்களும் நமக்கு கிட்டும்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும் நவராத்திரி விழாவின் 6-ம் நாளில் பாணபத்திரருக்கு திருமுகம் கொடுத்த லீலை அலங்காரத்தில் மீனாட்சி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். இதில் மீனாட்சி அம்மனுக்கு என்று தனியாக ஆடி முளைக்கொட்டு, நவராத்திரி விழா, ஐப்பசி கோலாட்ட உற்சவ விழா போன்ற திருவிழாக்கள் சிறப்பு வாய்ந்தவை. இந்த ஆண்டு நவராத்திரி உற்சவ விழா 17-ம் தொடங்கியது. இந்த விழா வருகிற 15-ந் தேதி வரை நடக்கிறது.
நவராத்திரி திருவிழா நாட்களில் தினசரி மாலை 6 மணி இரவு 8.30 மணி வரை மூலஸ்தான சன்னதியில் உள்ள மீனாட்சி அம்மனுக்கு திரை போட்டு அபிஷேகம், அலங்காரம் ஆகி கல்பபூஜை மற்றும் சகஸ்ரநாம பூஜை போன்ற விஷேச பூஜைகள் நடைபெறும். அந்த நேரத்தில் அர்ச்சனைகள் மூலஸ்தான அம்மனுக்கு நடத்தப்படாது. எனவே பக்தர்கள் வரிசையில் நின்று அம்மனை மட்டும் தரிசித்து சென்றனர். மேலும் அர்ச்சனை கொலு மண்டபத்தில் எழுந்தருளும் அலங்கார அம்மனுக்கு செய்யப்பட்டது.
நவராத்திரி திருவிழாவையொட்டி அம்மன் சன்னதி 2-ம் பிரகாரத்தில் உள்ள கொலு மண்டபத்தில் உற்சவர் மீனாட்சி அம்மன் எழுந்தருளி ஒவ்வொரு நாளும் வெவ்வேறு அலங்காரத்தில் காட்சி தருவார்.
நவராத்திரி விழாவின் 2-ம் நாளான 9-ம்தேதி மீனாட்சி அம்மன் ஊஞ்சல் அலங்காரத்தில் கொலு வீற்றிருந்தாள்.
நவராத்திரி திருவிழாவின் நான்காம் நாளான 10-ம் தேதி, மீனாட்சி அம்மன் திருநீலகண்ட யாழ்ப்பாணருக்கு தங்கப்பலகை கொடுத்த அலங்காரத்தில் கொலு வீற்றிருந்தாள்.
நவராத்திரி விழாவின் 5-ம் நாளான 11-ம்தேதி சங்கீத சியாமளா அலங்காரத்தில் மீனாட்சி அம்மன் கொலுவீற்றிருந்தார்.
நவராத்திரி 6-ம் நாள் விழாவில் நேற்று பாணபத்திரருக்கு திருமுகம் கொடுத்த லீலை அலங்காரத்தில் மீனாட்சி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
நவராத்திரி திருவிழா நாட்களில் தினசரி மாலை 6 மணி இரவு 8.30 மணி வரை மூலஸ்தான சன்னதியில் உள்ள மீனாட்சி அம்மனுக்கு திரை போட்டு அபிஷேகம், அலங்காரம் ஆகி கல்பபூஜை மற்றும் சகஸ்ரநாம பூஜை போன்ற விஷேச பூஜைகள் நடைபெறும். அந்த நேரத்தில் அர்ச்சனைகள் மூலஸ்தான அம்மனுக்கு நடத்தப்படாது. எனவே பக்தர்கள் வரிசையில் நின்று அம்மனை மட்டும் தரிசித்து சென்றனர். மேலும் அர்ச்சனை கொலு மண்டபத்தில் எழுந்தருளும் அலங்கார அம்மனுக்கு செய்யப்பட்டது.
நவராத்திரி திருவிழாவையொட்டி அம்மன் சன்னதி 2-ம் பிரகாரத்தில் உள்ள கொலு மண்டபத்தில் உற்சவர் மீனாட்சி அம்மன் எழுந்தருளி ஒவ்வொரு நாளும் வெவ்வேறு அலங்காரத்தில் காட்சி தருவார்.
நவராத்திரி விழாவின் 2-ம் நாளான 9-ம்தேதி மீனாட்சி அம்மன் ஊஞ்சல் அலங்காரத்தில் கொலு வீற்றிருந்தாள்.
நவராத்திரி திருவிழாவின் நான்காம் நாளான 10-ம் தேதி, மீனாட்சி அம்மன் திருநீலகண்ட யாழ்ப்பாணருக்கு தங்கப்பலகை கொடுத்த அலங்காரத்தில் கொலு வீற்றிருந்தாள்.
நவராத்திரி விழாவின் 5-ம் நாளான 11-ம்தேதி சங்கீத சியாமளா அலங்காரத்தில் மீனாட்சி அம்மன் கொலுவீற்றிருந்தார்.
நவராத்திரி 6-ம் நாள் விழாவில் நேற்று பாணபத்திரருக்கு திருமுகம் கொடுத்த லீலை அலங்காரத்தில் மீனாட்சி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
சென்னை அடுத்த செங்கல்பட்டு அருகே உள்ளது, நென்மேலி கிராமம். இங்கு லட்சுமி நாராயணப் பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
சென்னை அடுத்த செங்கல்பட்டு அருகே உள்ளது, நென்மேலி கிராமம். அந்தக் காலத்தில் இந்த ஊர் ‘புண்டரீக நல்லூர்’, ‘பிண்டம் வைத்த நல்லூர்’ என்று அழைக்கப்பட்டு வந்துள்ளது. இங்கு லட்சுமி நாராயணப் பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது. இவ்வாலயம் காசி, கயா திருத்தலங்களுக்கு இணையாகப் போற்றப்படுகிறது. இந்த ஆலயத்தில் மகாளய அமாவாசை நாட்களில் தர்ப்பணம் செய்வது சிறப்பான பலனைப் பெற்றுத் தரும் என்கிறார்கள். இந்த ஆலயத்தின் உற்சவ மூர்த்தியாக ‘சிரார்த்த சம்ரட்சண நாராயணர்’ அருள்கிறார்.
ஆற்காடு நவாப் காலத்தில் திவானாகப் பணிபுரிந்தவர், ஸ்ரீயாக்ஞ வல்கியரைக் குருவாகக் கொண்ட யாக்ஞ நாராயண சர்மா. இவரது மனைவி சரஸ வாணி. இவர்களுக்கு நென்மேலி தலத்தில் உள்ள பெருமாளின் மீது அளவுகடந்த பக்தி இருந்தது. அந்த பக்தியின் காரணமாக, அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய வரிப்பணத்தைக் கூட, ஆலயத்தின் திருப்பணிக்காக செலவிட்டுவிட்டனர். இதனால் அவர்களுக்கு அரசாங்கம் தண்டனை வழங்கியது.
அந்த தண்டனையை ஏற்க விரும்பாத அந்த தம்பதி, திருவிடந்தை ஆலய திருக்குளத்தில் மூழ்கி தங்களுடைய உயிரை மாய்த்தனர். அவர்களின் ஈம காரியங்களைச் செய்ய வாரிசு என்று யாரும் இல்லை. இதனால் அவர்களின் ஆன்மா நற்கதி கிடைக்காமல் அலைந்தது. அவர்களின் ஆன்மாவுக்கு நன்மை செய்ய நினைத்த நென்மேலி லட்சுமி நாராயணப் பெருமாள், அந்த தம்பதியருக்கு ஈமக் காரியங்களை செய்ததாக தல வரலாறு சொல்கிறது. தினந்தோறும் பகல் 12 மணி முதல் 1 மணி வரையான காலம், பித்ருக்களின் காலம் என்று கருதப்படுகிறது. இந்த காலவேளையில் நடைபெறும் பூஜையை ஏற்றபடி, இத்தலப் பெருமாள் விரதமிருப்பதாக சொல்லப்படுகிறது.
எனவே இந்த ஆலயத்தில் திதி செய்ய விரும்புபவர்கள், இங்கு பித்ரு கால பூஜை நடைபெறும் வேளையில், அதில் கலந்துகொண்டு பெருமாளிடம் தங்களின் காரியத்தை ஒப்படைக்க வேண்டும். இதனை திதி சம்ரட்சணம் என்கிறார்கள். அந்த நேரத்தில் பெருமாளுக்கு வெண் பொங்கல், தயிர் சாதம், பிரண்டை மற்றும் எள் கலந்து செய்த துவையல் ஆகியவை நைவேத்தியமாக படைக்கப்படுகிறது. இந்த நைவேத்தியங்களை ஏற்றுக்கொண்டு, நம்முடைய பித்ருக்களை திருப்திப்படுத்தும் பணியை பெருமாள் செய்வதாக நம்பிக்கை.
முன்னோர்களின் திதி நாட்கள், அமாவாசை, ஏகாதசி போன்ற நாட்களில், இந்த ஆலயத்தில் நடைபெறும் பித்ரு கால பூஜையில் பங்கேற்பவர்களுக்கு, கயா மற்றும் காசிக்கு சென்று திதி கொடுத்த பலன் கிடைக்கும். இந்த ஆலயத்திற்கு வந்து வழிபடுபவர்களுக்கு, பித்ரு தோஷம் நீங்கும். முன்னோர்களின் சாபத்தால் தடைபட்டு வந்த காரியங்கள் விரைவாக நடைபெறும்.
செங்கல்பட்டில் இருந்து திருக்கழுக்குன்றம் செல்லும் சாலையில், சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது, நென்மேலி திருத்தலம்.
ஆற்காடு நவாப் காலத்தில் திவானாகப் பணிபுரிந்தவர், ஸ்ரீயாக்ஞ வல்கியரைக் குருவாகக் கொண்ட யாக்ஞ நாராயண சர்மா. இவரது மனைவி சரஸ வாணி. இவர்களுக்கு நென்மேலி தலத்தில் உள்ள பெருமாளின் மீது அளவுகடந்த பக்தி இருந்தது. அந்த பக்தியின் காரணமாக, அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய வரிப்பணத்தைக் கூட, ஆலயத்தின் திருப்பணிக்காக செலவிட்டுவிட்டனர். இதனால் அவர்களுக்கு அரசாங்கம் தண்டனை வழங்கியது.
அந்த தண்டனையை ஏற்க விரும்பாத அந்த தம்பதி, திருவிடந்தை ஆலய திருக்குளத்தில் மூழ்கி தங்களுடைய உயிரை மாய்த்தனர். அவர்களின் ஈம காரியங்களைச் செய்ய வாரிசு என்று யாரும் இல்லை. இதனால் அவர்களின் ஆன்மா நற்கதி கிடைக்காமல் அலைந்தது. அவர்களின் ஆன்மாவுக்கு நன்மை செய்ய நினைத்த நென்மேலி லட்சுமி நாராயணப் பெருமாள், அந்த தம்பதியருக்கு ஈமக் காரியங்களை செய்ததாக தல வரலாறு சொல்கிறது. தினந்தோறும் பகல் 12 மணி முதல் 1 மணி வரையான காலம், பித்ருக்களின் காலம் என்று கருதப்படுகிறது. இந்த காலவேளையில் நடைபெறும் பூஜையை ஏற்றபடி, இத்தலப் பெருமாள் விரதமிருப்பதாக சொல்லப்படுகிறது.
எனவே இந்த ஆலயத்தில் திதி செய்ய விரும்புபவர்கள், இங்கு பித்ரு கால பூஜை நடைபெறும் வேளையில், அதில் கலந்துகொண்டு பெருமாளிடம் தங்களின் காரியத்தை ஒப்படைக்க வேண்டும். இதனை திதி சம்ரட்சணம் என்கிறார்கள். அந்த நேரத்தில் பெருமாளுக்கு வெண் பொங்கல், தயிர் சாதம், பிரண்டை மற்றும் எள் கலந்து செய்த துவையல் ஆகியவை நைவேத்தியமாக படைக்கப்படுகிறது. இந்த நைவேத்தியங்களை ஏற்றுக்கொண்டு, நம்முடைய பித்ருக்களை திருப்திப்படுத்தும் பணியை பெருமாள் செய்வதாக நம்பிக்கை.
முன்னோர்களின் திதி நாட்கள், அமாவாசை, ஏகாதசி போன்ற நாட்களில், இந்த ஆலயத்தில் நடைபெறும் பித்ரு கால பூஜையில் பங்கேற்பவர்களுக்கு, கயா மற்றும் காசிக்கு சென்று திதி கொடுத்த பலன் கிடைக்கும். இந்த ஆலயத்திற்கு வந்து வழிபடுபவர்களுக்கு, பித்ரு தோஷம் நீங்கும். முன்னோர்களின் சாபத்தால் தடைபட்டு வந்த காரியங்கள் விரைவாக நடைபெறும்.
செங்கல்பட்டில் இருந்து திருக்கழுக்குன்றம் செல்லும் சாலையில், சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது, நென்மேலி திருத்தலம்.
ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே தாயாரின் திருவடிகளை தரிசிக்க முடியும் என்பதால் ஏராளமான பக்தர்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடித்து நீண்ட வரிசையில் காத்திருந்து தாயார் திருவடியை தரிசனம் செய்தனர்.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ரெங்கநாச்சியார் நவராத்திரி உற்சவம் கடந்த 6-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விழா நாட்களில் தாயார் சன்னதி மூலஸ்தானத்தில் இருந்து உற்சவர் ரெங்கநாச்சியார் தினமும் மாலை புறப்பட்டு கொலு மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
பெருமாள் கோவில்களில் பெருமாள் மற்றும் தாயாரின் திருவடிகளை தரிசனம் செய்வதற்கு முக்கியத்துவம் கொடுத்து வழிபடுவது மரபாக இருந்து வருகிறது. ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் ரெங்கநாச்சியார் படி தாண்டா பத்தினி என்ற சிறப்பு கொண்டவர். சாதாரண நாட்களில் இவரது பாதங்கள் தெரியாத வகையிலேயே அலங்காரம் செய்யப்படும்.
ஆனால் நவராத்திரி உற்சவத்தின் 7-ம் திருநாள் மட்டும் தாயாரின் பாதங்களை பக்தர்கள் தரிசிக்கும் வகையில் அலங்காரம் செய்யப்படும். இதனால் வருடத்தில் ஒரு நாள் மட்டுமே தாயாரின் திருவடியை பக்தர்கள் தரிசனம் செய்ய முடியும். இந்த ஆண்டுக்கான ரெங்கநாச்சியார் திருவடி சேவை தாயார் சன்னதியில் உள்ள கொலு மண்டபத்தில் நேற்று மாலை நடைபெற்றது.
இதையொட்டி ரெங்கநாச்சியார் மாலை 4 மணிக்கு மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு மாலை 4.45 மணிக்கு கொலுமண்டபம் வந்தடைந்தார். கொலு இரவு 7.30 மணிக்கு ஆரம்பித்து இரவு 9.30 மணிக்கு முடிவடைந்தது. அங்கிருந்து இரவு 10.30 மணிக்கு ரெங்கநாச்சியார் புறப்பட்டு இரவு 11 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.
திருவடி சேவையையொட்டி தாயார் சாய்கொண்டை, கிளிமாலை, வைரத்தோடு, கையில் தங்க கிளி,
பவளமாலை, முத்துச்சரம், காலில் தங்க கொலுசு அணிந்து சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே தாயாரின் திருவடிகளை தரிசிக்க முடியும் என்பதால் ஏராளமான பக்தர்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடித்து நீண்ட வரிசையில் காத்திருந்து தாயார் திருவடியை தரிசனம் செய்தனர்.
பெருமாள் கோவில்களில் பெருமாள் மற்றும் தாயாரின் திருவடிகளை தரிசனம் செய்வதற்கு முக்கியத்துவம் கொடுத்து வழிபடுவது மரபாக இருந்து வருகிறது. ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் ரெங்கநாச்சியார் படி தாண்டா பத்தினி என்ற சிறப்பு கொண்டவர். சாதாரண நாட்களில் இவரது பாதங்கள் தெரியாத வகையிலேயே அலங்காரம் செய்யப்படும்.
ஆனால் நவராத்திரி உற்சவத்தின் 7-ம் திருநாள் மட்டும் தாயாரின் பாதங்களை பக்தர்கள் தரிசிக்கும் வகையில் அலங்காரம் செய்யப்படும். இதனால் வருடத்தில் ஒரு நாள் மட்டுமே தாயாரின் திருவடியை பக்தர்கள் தரிசனம் செய்ய முடியும். இந்த ஆண்டுக்கான ரெங்கநாச்சியார் திருவடி சேவை தாயார் சன்னதியில் உள்ள கொலு மண்டபத்தில் நேற்று மாலை நடைபெற்றது.
இதையொட்டி ரெங்கநாச்சியார் மாலை 4 மணிக்கு மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு மாலை 4.45 மணிக்கு கொலுமண்டபம் வந்தடைந்தார். கொலு இரவு 7.30 மணிக்கு ஆரம்பித்து இரவு 9.30 மணிக்கு முடிவடைந்தது. அங்கிருந்து இரவு 10.30 மணிக்கு ரெங்கநாச்சியார் புறப்பட்டு இரவு 11 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.
திருவடி சேவையையொட்டி தாயார் சாய்கொண்டை, கிளிமாலை, வைரத்தோடு, கையில் தங்க கிளி,
பவளமாலை, முத்துச்சரம், காலில் தங்க கொலுசு அணிந்து சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே தாயாரின் திருவடிகளை தரிசிக்க முடியும் என்பதால் ஏராளமான பக்தர்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடித்து நீண்ட வரிசையில் காத்திருந்து தாயார் திருவடியை தரிசனம் செய்தனர்.
இந்த ஆலயம் சிறந்த பரிகாரத் தலமாகவும் திகழ்கிறது. இங்குள்ள இறைவனையும், இறைவியையும் வழிபாடு செய்தால், ஆயுள் கூடும் என்பது ஐதீகம்.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் இருந்து கீரமங்கலம் செல்லும் சாலையில் இருக்கிறது, திருச்சிற்றம்பலம் என்ற திருத்தலம். இந்த ஆலயத்தில் அருளும் இறைவன் ‘புராதனவனேஸ்வரர்’ என்றும், அம்பாள் ‘பெரியநாயகி’ என்றும் அழைக்கப்படுகிறார்கள்.
திருவாரூரில் பிறந்தால் முக்தி, திருவண்ணாமலையை நினைத்தால் முக்தி, காசியில் இறந்தால் முக்தி என்பார்கள். அந்த வரிசையில் திருச்சிற்றம்பலம் மண்ணை பூசிக் கொண்டால் முக்தி கிடைக்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கை.
இந்த ஆலயம் திருமணத் தடை நீக்கும் அற்புதத் தலமாக விளங்குகிறது. ஆடி மற்றும் மார்கழி மாதங்களைத் தவிர்த்து மற்ற மாதங்களில் வரும் சுபமுகூர்த்த நாட்களில், இங்கு ஏராளமான திருமண நிகழ்வுகள் நடைபெறுகின்றன. மேலும் காதுகுத்து, நிச்சயதார்த்தம் போன்ற சுப நிகழ்வுகளும் அரங்கேறுகின்றன. இந்த ஆலயம் சிறந்த பரிகாரத் தலமாகவும் திகழ்கிறது. இங்குள்ள இறைவனையும், இறைவியையும் வழிபாடு செய்தால், ஆயுள் கூடும் என்பது ஐதீகம்.
இந்த ஆலயத்தில் இருந்து வெளியே வந்து, கிழக்கு நோக்கி 15 நிமிட நடைபயணமாகச் சென்றால், எமதர்மன் கோவில் இருக்கிறது. இங்கு எருமை வாகனத்தில் அமர்ந்து வலது காலை மடக்கி, இடது காலை தொங்கவிட்ட நிலையில் எமதர்மன் காட்சி தருகிறார். இவரது கையில் கதாயுதம், பாசக்கயிறு, மந்திரக்கோல் தாங்கியுள்ளார். இவரை வழிபாடு செய்தால் எம பயம் நீங்கி, பலம் சேரும். மன வியாதி, உடல்பிணி, தீராத பகை, சோம்பல், போட்டி- பொறாமை போன்றவை நீங்கும்.
திருவாரூரில் பிறந்தால் முக்தி, திருவண்ணாமலையை நினைத்தால் முக்தி, காசியில் இறந்தால் முக்தி என்பார்கள். அந்த வரிசையில் திருச்சிற்றம்பலம் மண்ணை பூசிக் கொண்டால் முக்தி கிடைக்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கை.
இந்த ஆலயம் திருமணத் தடை நீக்கும் அற்புதத் தலமாக விளங்குகிறது. ஆடி மற்றும் மார்கழி மாதங்களைத் தவிர்த்து மற்ற மாதங்களில் வரும் சுபமுகூர்த்த நாட்களில், இங்கு ஏராளமான திருமண நிகழ்வுகள் நடைபெறுகின்றன. மேலும் காதுகுத்து, நிச்சயதார்த்தம் போன்ற சுப நிகழ்வுகளும் அரங்கேறுகின்றன. இந்த ஆலயம் சிறந்த பரிகாரத் தலமாகவும் திகழ்கிறது. இங்குள்ள இறைவனையும், இறைவியையும் வழிபாடு செய்தால், ஆயுள் கூடும் என்பது ஐதீகம்.
இந்த ஆலயத்தில் இருந்து வெளியே வந்து, கிழக்கு நோக்கி 15 நிமிட நடைபயணமாகச் சென்றால், எமதர்மன் கோவில் இருக்கிறது. இங்கு எருமை வாகனத்தில் அமர்ந்து வலது காலை மடக்கி, இடது காலை தொங்கவிட்ட நிலையில் எமதர்மன் காட்சி தருகிறார். இவரது கையில் கதாயுதம், பாசக்கயிறு, மந்திரக்கோல் தாங்கியுள்ளார். இவரை வழிபாடு செய்தால் எம பயம் நீங்கி, பலம் சேரும். மன வியாதி, உடல்பிணி, தீராத பகை, சோம்பல், போட்டி- பொறாமை போன்றவை நீங்கும்.
ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோவிலில் நவராத்திரி விழாவின் 6-வது நாளில் அம்மன் காத்யாயனி தேவி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோவிலில் நவராத்திரி விழாவின் 6-வது நாளான நேற்று ஞானப்பிரசுனாம்பிகை சன்னதி எதிரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொம்மை கொலுவில் அம்மன் காத்யாயனி தேவி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
தொடர்ந்து இரவு 7 மணிக்கு ஞான பிரசுனாம்பிகா தாயார் வியாக்ர சுயவதம் அலங்காரத்தில் காட்சி அளித்தார். பின்னர் கோவில் வளாகத்தில் உள்ள பால ஞானாம்பிகா சன்னதி வரை ஊர்வலமாக சென்று அங்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடத்தப்பட்டது.
இதில் கோவில் நிர்வாக அதிகாரி பெத்தி.ராஜு மற்றும் அதிகாரிகள் வேதப்பண்டிதர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து இரவு 7 மணிக்கு ஞான பிரசுனாம்பிகா தாயார் வியாக்ர சுயவதம் அலங்காரத்தில் காட்சி அளித்தார். பின்னர் கோவில் வளாகத்தில் உள்ள பால ஞானாம்பிகா சன்னதி வரை ஊர்வலமாக சென்று அங்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடத்தப்பட்டது.
இதில் கோவில் நிர்வாக அதிகாரி பெத்தி.ராஜு மற்றும் அதிகாரிகள் வேதப்பண்டிதர்கள் கலந்து கொண்டனர்.
புரட்டாசி மாதத்தில் இந்த எட்டெழுத்து மந்திரத்தை தவறாமல் சொல்ல வேண்டும். இந்த மந்திரத்தை எந்த அளவுக்கு உளப்பூர்வமாக உச்சரிக்கிறோமோ அந்த அளவுக்கு மனம் பக்குவப்படும்.
புரட்டாசி சனியன்று நாராயணாய நமக என்ற எட்டெழுத்து மந்திரத்தை தவறாமல் சொல்ல வேண்டும். இந்த மந்திரத்தை எந்த அளவுக்கு உளப்பூர்வமாக உச்சரிக்கிறோமோ அந்த அளவுக்கு மனம் பக்குவப்படும்.
இதிலுள்ள நம என்ற சொல்லுக்கு உனக்கே நான் உரியவன் என்பது அர்த்தம். ஓம் காரமாக விளங்கும் நாராயணனே உனக்கே நான் உரியவன் என்பது மந்திரத்தின் முழுப்பொருள். அதாவதுஉலகத்தில் வந்து விட்ட பிறகு, என்றோ ஒருநாள் செல்லப்போகிறோம்.
அவ்வாறு செல்லும் நாளில் நாராயணா! உன்னால் வந்த நாங்கள் உன் இடத்திற்கே திரும்பி வந்து விடுகிறோம் என்று சரணாகதி அடைவதாக அர்த்தம். கலியுகக் கொடுமைகளில் இருந்து தப்பித்து, பூலோகத்தில் சுகமாகவும், நிம்மதியாகவும் வாழ ஓம் நமோ நாராயணாய என்று சொல்வது பொருத்தமானது.
இதிலுள்ள நம என்ற சொல்லுக்கு உனக்கே நான் உரியவன் என்பது அர்த்தம். ஓம் காரமாக விளங்கும் நாராயணனே உனக்கே நான் உரியவன் என்பது மந்திரத்தின் முழுப்பொருள். அதாவதுஉலகத்தில் வந்து விட்ட பிறகு, என்றோ ஒருநாள் செல்லப்போகிறோம்.
அவ்வாறு செல்லும் நாளில் நாராயணா! உன்னால் வந்த நாங்கள் உன் இடத்திற்கே திரும்பி வந்து விடுகிறோம் என்று சரணாகதி அடைவதாக அர்த்தம். கலியுகக் கொடுமைகளில் இருந்து தப்பித்து, பூலோகத்தில் சுகமாகவும், நிம்மதியாகவும் வாழ ஓம் நமோ நாராயணாய என்று சொல்வது பொருத்தமானது.
அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் நவராத்திரி திருவிழா அரசு வழிகாட்டுதல் படி நேற்று 6-வது நாளாக நடந்தது. மூலவர் சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.
அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் நவராத்திரி திருவிழா அரசு வழிகாட்டுதல் படி நேற்று 6-வது நாளாக நடந்தது. இதில் அங்குள்ள கொலு மண்டபம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. மூலவர் சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து மாலையில் ஊஞ்சல் அலங்காரத்தில் கல்யாணசுந்தரவல்லி தாயார் பூமாலைகளுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்.
மேளதாளம், பட்டர் களின் வேத மந்திரங்கள் முழங்க விஷேச பூஜைகள், தீபாராதனை நடந்தது. கொரோனா கட்டுப்பாடுகளினால் பக்தர்கள் அனுமதியின்றி இந்த விழா நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், துணை ஆணையர் அனிதா மற்றும் பணியாளர்கள் செய்துள்ளனர். இதேபோல நவராத்திரி விழாவையொட்டி திருப்பரங்குன்றம்முருகன் கோவிலில் கோவர்த்தனாம்பிகை கலைவாணிசரஸ்வதி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
மேளதாளம், பட்டர் களின் வேத மந்திரங்கள் முழங்க விஷேச பூஜைகள், தீபாராதனை நடந்தது. கொரோனா கட்டுப்பாடுகளினால் பக்தர்கள் அனுமதியின்றி இந்த விழா நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், துணை ஆணையர் அனிதா மற்றும் பணியாளர்கள் செய்துள்ளனர். இதேபோல நவராத்திரி விழாவையொட்டி திருப்பரங்குன்றம்முருகன் கோவிலில் கோவர்த்தனாம்பிகை கலைவாணிசரஸ்வதி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
ஒரு மனிதனுக்கு கல்வி எவ்வளவு முக்கியமோ, அதே போல அவர் செய்யும் தொழிலும் முக்கியத்துவம் பெற்றது. எனவே இந்த தினம் ‘ஆயுத பூஜை’ என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது.
நவராத்திரி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த விழாக்களில் ஒன்று. ஒன்பது நாட்கள் நடைபெறும் இந்த விழாவில், முதல் மூன்று நாட்கள் துர்க்கையையும், அடுத்த மூன்று நாட்கள் லட்சுமியையும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதியையும் வழிபடுகிறோம். இறுதிநாளில் சரஸ்வதியை வழிபாடு செய்வதால், அந்த நாளை ‘சரஸ்வதி பூஜை’ என்ற பெயரில் கொண்டாடுகிறோம்.
கல்விக்கு அதிபதியாக விளங்குபவர், சரஸ்வதி. அவரை தினமும் வழிபாடு செய்தாலும், அவருக்கான சிறப்பு நாளாக சரஸ்வதி பூஜை இருக்கிறது. இந்த நாளில் கலைகளில் தேர்ச்சி பெறவும், ஞானம் வேண்டியும், நினைவாற்றல் வலுப்பெறவும், படிப்பில் நல்ல நிலையை எட்டவும் அனைத்துத் தரப்பினரும் வழிபாடு செய்வார்கள்.
ஒரு மனிதனுக்கு கல்வி எவ்வளவு முக்கியமோ, அதே போல அவர் செய்யும் தொழிலும் முக்கியத்துவம் பெற்றது. ‘செய்யும் தொழிலே தெய்வம்’ என்பது பழமொழி. எனவே நாம் செய்யும் தொழிலையும், அதற்கான கருவிகளையும் இறைவனின் முன்பாக வைத்து வழிபடும் முறையும், இந்த நாளில் பின்பற்றப்படுகிறது. எனவே இந்த தினம் ‘ஆயுத பூஜை’ என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது.
மகாபாரத காவியத்தில், ஆயுத பூஜையின் முக்கியத்துவம் சொல்லப்பட்டிருக்கிறது. கவுரவர்களுடனான சூதாட்டத்தில் தோல்வியைத் தழுவிய பாண்டவர்கள், தங்களுடைய நாடு, உடமைகளை இழந்து வனவாசம் செல்ல நேர்ந்தது. கடைசி ஒரு வருடம் ‘அஞ்ஞாத வாசம்’ மேற்கொள்ள வேண்டும். அதாவது யாரும் அறிந்து கொள்ளாதபடி, எவர் கண்ணிலும் படாமல் வாழ வேண்டும். இல்லையென்றால் மீண்டும் வனவாசத்தை மேற்கொள்ளும் நிலை ஏற்பட்டுவிடும். எனவே பாண்டவர்கள் அனைவரும் தங்களுடைய ஆயுதங்களை ஒரு மறைவான இடத்தில் வைத்து விட்டு, மாறுபட்ட தோற்றத்தில் வேறு வேறு இடத்தில் தங்கியிருக்க நினைத்தனர். அதன்படி அவர்கள் அனைவரும் ஒரு வன்னி மரத்தின் அடியில் தங்களுடைய ஆயுதங்களை பதுக்கிவைத்துவிட்டு, ஆளுக்கொரு திசையில் சென்றனர்.
ஓராண்டு அஞ்ஞாத வாசம் முடிந்த பிறகு, மீண்டும் அவர்கள் வன்னி மரத்தின் கீழ் வந்து கூடினர். அவர்களின் ஆயுதங்கள் அங்கேயே பாதுகாப்பாக இருந்தது. பாண்டவர்கள் அனைவரும் ஒன்பது நாட்கள் விரதம் மேற்கொண்டு, ஆயுதங்களுக்கு பூஜை செய்து, அதன்பிறகு அதை எடுத்து பயன்படுத்தத் தொடங்கினர். அன்றைய தினமே ‘ஆயுதபூஜை’ என்றும், ‘அஸ்திர பூஜை’ என்றும் அழைக்கப்படுகிறது.
கல்விக்கு அதிபதியாக விளங்குபவர், சரஸ்வதி. அவரை தினமும் வழிபாடு செய்தாலும், அவருக்கான சிறப்பு நாளாக சரஸ்வதி பூஜை இருக்கிறது. இந்த நாளில் கலைகளில் தேர்ச்சி பெறவும், ஞானம் வேண்டியும், நினைவாற்றல் வலுப்பெறவும், படிப்பில் நல்ல நிலையை எட்டவும் அனைத்துத் தரப்பினரும் வழிபாடு செய்வார்கள்.
ஒரு மனிதனுக்கு கல்வி எவ்வளவு முக்கியமோ, அதே போல அவர் செய்யும் தொழிலும் முக்கியத்துவம் பெற்றது. ‘செய்யும் தொழிலே தெய்வம்’ என்பது பழமொழி. எனவே நாம் செய்யும் தொழிலையும், அதற்கான கருவிகளையும் இறைவனின் முன்பாக வைத்து வழிபடும் முறையும், இந்த நாளில் பின்பற்றப்படுகிறது. எனவே இந்த தினம் ‘ஆயுத பூஜை’ என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது.
மகாபாரத காவியத்தில், ஆயுத பூஜையின் முக்கியத்துவம் சொல்லப்பட்டிருக்கிறது. கவுரவர்களுடனான சூதாட்டத்தில் தோல்வியைத் தழுவிய பாண்டவர்கள், தங்களுடைய நாடு, உடமைகளை இழந்து வனவாசம் செல்ல நேர்ந்தது. கடைசி ஒரு வருடம் ‘அஞ்ஞாத வாசம்’ மேற்கொள்ள வேண்டும். அதாவது யாரும் அறிந்து கொள்ளாதபடி, எவர் கண்ணிலும் படாமல் வாழ வேண்டும். இல்லையென்றால் மீண்டும் வனவாசத்தை மேற்கொள்ளும் நிலை ஏற்பட்டுவிடும். எனவே பாண்டவர்கள் அனைவரும் தங்களுடைய ஆயுதங்களை ஒரு மறைவான இடத்தில் வைத்து விட்டு, மாறுபட்ட தோற்றத்தில் வேறு வேறு இடத்தில் தங்கியிருக்க நினைத்தனர். அதன்படி அவர்கள் அனைவரும் ஒரு வன்னி மரத்தின் அடியில் தங்களுடைய ஆயுதங்களை பதுக்கிவைத்துவிட்டு, ஆளுக்கொரு திசையில் சென்றனர்.
ஓராண்டு அஞ்ஞாத வாசம் முடிந்த பிறகு, மீண்டும் அவர்கள் வன்னி மரத்தின் கீழ் வந்து கூடினர். அவர்களின் ஆயுதங்கள் அங்கேயே பாதுகாப்பாக இருந்தது. பாண்டவர்கள் அனைவரும் ஒன்பது நாட்கள் விரதம் மேற்கொண்டு, ஆயுதங்களுக்கு பூஜை செய்து, அதன்பிறகு அதை எடுத்து பயன்படுத்தத் தொடங்கினர். அன்றைய தினமே ‘ஆயுதபூஜை’ என்றும், ‘அஸ்திர பூஜை’ என்றும் அழைக்கப்படுகிறது.
தொடக்க காலத்தில் குருசடியில் இறைவேண்டலும், திருவழிபாடும் நடத்தி வந்த மக்கள் அருகில் இருந்த முளகுமூடு ஆலயத்திற்கு சென்று திருப்பலியில் பங்கெடுத்தனர்.
குன்றின் மீது ஒளிரும் தீபம் குழித்துறை மறை மாவட்டத்தின் துடிப்புமிக்க இறைசமூகங்களில் ஒன்று செட்டிச்சார்விளை தூய குழந்தை இயேசுவின் தெரசாள் பங்குதலம்.
இயேசுவின் நற்செய்தி விதையை நூறாண்டுகளுக்கு மேலாகவே உள்வாங்கிக் கொண்ட இந்த பகுதிக்கு செட்டிச்சார்குழிவிளை என்பதே இயற்பெயராகும். கிறிஸ்து பிறப்பு விழாவில் முளைப்பாரி வைப்பதில் தமக்கும் உரிமை வேண்டும் என்ற உணர்வு கொண்ட சுயமரியாதை இறை நம்பிக்கையாளர்கள் தமக்கென ஓர் ஓலைக்குடிசையாவது இறை வழிபாட்டுக்கு வேண்டும் என்ற ஆதங்கத்தில் சிறு குடிசையை உருவாக்கி அதனை சிறுமலர் தூய குழந்தை இயேசுவின் தெரசாவுக்கு அர்ப்பணித்தனர். ஊரின் உருவாக்கத்திலும் குருசடி அமைத்தலிலும் குறிப்பிடத்தக்கவர்கள் மரிய மெய்யல், நாடகக்கார ஆசான் சவரியாரடிமை, மரிய அருளப்பன், சத்தியநாதன், வைத்தியநாதன் ஆவர்.
தொடக்க காலத்தில் குருசடியில் இறைவேண்டலும், திருவழிபாடும் நடத்தி வந்த மக்கள் அருகில் இருந்த முளகுமூடு ஆலயத்திற்கு சென்று திருப்பலியில் பங்கெடுத்தனர். இறைவன் அருளால் கிறிஸ்துவில் நம்பிக்கை கொண்டவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் வளர்ந்து வந்தது. இந்தநிலையில் 21-1-1950-ல் இந்த பகுதியை சேர்ந்த இறைமக்களின் ஆன்மிக பராமரிப்பு பணி மணலிக்கரையை தலைமையிடமாகக் கொண்ட கார்மல் சபை துறவிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. துறவற தவ வாழ்வில் தன்னிகரற்று விளங்கும் கார்மல் சபை துறவிகளின் அரும்பணியால் 60 ஆண்டுகாலம் செட்டிச்சார்விளை பல்வேறு வளர்ச்சிகளைக் கொண்டது. 1951-ல் புதிய ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
ஓலைகள் வேயப்பட்ட சிறு குருசடி திருக்கோவிலாய் எழுந்தது. 1964-ல் கோபுரம் அமைக்கப்பட்டு வேர்க்கிளம்பி-சுவாமியார்மடம் சாலையில் கம்பீரமாய் நிமிர்ந்து நின்றது. மக்களின் எண்ணிக்கை மேலும் உயரவே தற்போது ஆலயம் அமைந்துள்ள இடத்தில் புதிய ஆலயம் கட்டுவதற்கு 1996-ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு 1999-ம் ஆண்டு ஆயர் லியோன் தர்மராஜ் என்பவரால் அர்ச்சிக்கப்பட்டது. மேலும் அதன் தொடர்ச்சியாக 2008-ல் ஆலயத்திற்கு அழகு சேர்க்க வானுயர்ந்த எழில் கோபுரம் நிறுவப்பட்டது.
உள்ளூர் மக்களுக்கும், அருகில் உள்ள கிராமத்தினருக்கும் தரமான ஆங்கில கல்வி வழங்க வேண்டுமென்ற நோக்கில் 2006-ல் லிட்டில் பிளவர் ஆங்கில உயர்நிலைப்பள்ளி பங்குமக்களின் பங்களிப்பால் உருவாக்கப்பட்டது.கார்மல்சபை துறவிகளின் தியாகத்தொண்டு காலத்தால் மறக்க இயலாத மாணிக்க வரலாறு. கார்மல்சபை அருட்தந்தையர் ஸ்டீபன் மேரி, கமால்ஸ், பாஸ்கல், ஜெரோம், இரபேல், ஆல்பர்ட், பீட்டர், கிறிஸ்துதாஸ், கிறிஸ்டோபர், ரசல்ராஜ் உள்ளிட்டவர்கள் செட்டிச்சார்விளையை செழுமைப்படுத்தியதில் குறிப்பிடத்தக்கவர்கள்.
இறையாட்சி பயணத்தில் அடுத்த கட்டமாக 9-6-2010 அன்று செட்டிச்சார்விளை இறைச்சமூகம் அந்த நாளைய ஒருங்கிணைந்த கோட்டார் மறைமாவட்டத்தோடு இணைக்கப்பட்டு தனிப்பங்காக உயர்த்தப்பட்டது. அருட்தந்தை மரிய அற்புதம் முதல் பங்கு பணியாளராக நியமிக்கப்பட்டார். அவரை தொடர்ந்து அருட் தந்தையர் ஜார்ஜ் யூஜின்ராஜ், ராபர்ட் பென்னி, ஜாக்சஸ் இளங்கோ ஆகியோர் சிறப்பாக பணியாற்றி பங்கின் வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்தனர். 7-6-2021-ல் அருட்தந்தை டேவிட் மைக்கேல் பங்கு பணியாளராக பொறுப்பேற்று பணிகளை தொடர்கின்றார்.
ஆன்மிக மறுமலர்ச்சி, சமூக மேம்பாடு, பொருளாதார தன்னிறைவு, உறவால் சமூக கட்டுமானம், இளைஞர் நலம், ஆரோக்கியமான குடும்பம் ஆகிய இலக்குகளை கொண்டு இறையாட்சி பாதையில் வீறுநடை போடுகிறது.. விசுவாச வாழ்வின் மையமான திருக்கோவில் தூய குழந்தை இயேசுவின் தெரசாவின் பாதுகாவலில் மக்களின் பங்கேற்புடன் எழில் மாளிகையாய் நிமிர்ந்து நிற்கிறது. அழகுற புதுப்பிக்கப்பட்ட ஆலயம், திருப்பலி பீடம், மண்ணின் மைந்தர் சிற்பக்கலைஞர் ஜாண்குமாரால் நன்கொடையாய் வடிவமைக்கப்பட்ட வியத்தகு வியாகுல அன்னை கெபி முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் என்பவரால் அர்ச்சிக்கப்பட்டது. எழிலாய் ஒளிரும் ஆலயம் போல் மக்களின் வாழ்வும் ஒளிரட்டும்.
-அருட்தந்தை டேவிட் மைக்கேல்
இயேசுவின் நற்செய்தி விதையை நூறாண்டுகளுக்கு மேலாகவே உள்வாங்கிக் கொண்ட இந்த பகுதிக்கு செட்டிச்சார்குழிவிளை என்பதே இயற்பெயராகும். கிறிஸ்து பிறப்பு விழாவில் முளைப்பாரி வைப்பதில் தமக்கும் உரிமை வேண்டும் என்ற உணர்வு கொண்ட சுயமரியாதை இறை நம்பிக்கையாளர்கள் தமக்கென ஓர் ஓலைக்குடிசையாவது இறை வழிபாட்டுக்கு வேண்டும் என்ற ஆதங்கத்தில் சிறு குடிசையை உருவாக்கி அதனை சிறுமலர் தூய குழந்தை இயேசுவின் தெரசாவுக்கு அர்ப்பணித்தனர். ஊரின் உருவாக்கத்திலும் குருசடி அமைத்தலிலும் குறிப்பிடத்தக்கவர்கள் மரிய மெய்யல், நாடகக்கார ஆசான் சவரியாரடிமை, மரிய அருளப்பன், சத்தியநாதன், வைத்தியநாதன் ஆவர்.
தொடக்க காலத்தில் குருசடியில் இறைவேண்டலும், திருவழிபாடும் நடத்தி வந்த மக்கள் அருகில் இருந்த முளகுமூடு ஆலயத்திற்கு சென்று திருப்பலியில் பங்கெடுத்தனர். இறைவன் அருளால் கிறிஸ்துவில் நம்பிக்கை கொண்டவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் வளர்ந்து வந்தது. இந்தநிலையில் 21-1-1950-ல் இந்த பகுதியை சேர்ந்த இறைமக்களின் ஆன்மிக பராமரிப்பு பணி மணலிக்கரையை தலைமையிடமாகக் கொண்ட கார்மல் சபை துறவிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. துறவற தவ வாழ்வில் தன்னிகரற்று விளங்கும் கார்மல் சபை துறவிகளின் அரும்பணியால் 60 ஆண்டுகாலம் செட்டிச்சார்விளை பல்வேறு வளர்ச்சிகளைக் கொண்டது. 1951-ல் புதிய ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
ஓலைகள் வேயப்பட்ட சிறு குருசடி திருக்கோவிலாய் எழுந்தது. 1964-ல் கோபுரம் அமைக்கப்பட்டு வேர்க்கிளம்பி-சுவாமியார்மடம் சாலையில் கம்பீரமாய் நிமிர்ந்து நின்றது. மக்களின் எண்ணிக்கை மேலும் உயரவே தற்போது ஆலயம் அமைந்துள்ள இடத்தில் புதிய ஆலயம் கட்டுவதற்கு 1996-ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு 1999-ம் ஆண்டு ஆயர் லியோன் தர்மராஜ் என்பவரால் அர்ச்சிக்கப்பட்டது. மேலும் அதன் தொடர்ச்சியாக 2008-ல் ஆலயத்திற்கு அழகு சேர்க்க வானுயர்ந்த எழில் கோபுரம் நிறுவப்பட்டது.
உள்ளூர் மக்களுக்கும், அருகில் உள்ள கிராமத்தினருக்கும் தரமான ஆங்கில கல்வி வழங்க வேண்டுமென்ற நோக்கில் 2006-ல் லிட்டில் பிளவர் ஆங்கில உயர்நிலைப்பள்ளி பங்குமக்களின் பங்களிப்பால் உருவாக்கப்பட்டது.கார்மல்சபை துறவிகளின் தியாகத்தொண்டு காலத்தால் மறக்க இயலாத மாணிக்க வரலாறு. கார்மல்சபை அருட்தந்தையர் ஸ்டீபன் மேரி, கமால்ஸ், பாஸ்கல், ஜெரோம், இரபேல், ஆல்பர்ட், பீட்டர், கிறிஸ்துதாஸ், கிறிஸ்டோபர், ரசல்ராஜ் உள்ளிட்டவர்கள் செட்டிச்சார்விளையை செழுமைப்படுத்தியதில் குறிப்பிடத்தக்கவர்கள்.
இறையாட்சி பயணத்தில் அடுத்த கட்டமாக 9-6-2010 அன்று செட்டிச்சார்விளை இறைச்சமூகம் அந்த நாளைய ஒருங்கிணைந்த கோட்டார் மறைமாவட்டத்தோடு இணைக்கப்பட்டு தனிப்பங்காக உயர்த்தப்பட்டது. அருட்தந்தை மரிய அற்புதம் முதல் பங்கு பணியாளராக நியமிக்கப்பட்டார். அவரை தொடர்ந்து அருட் தந்தையர் ஜார்ஜ் யூஜின்ராஜ், ராபர்ட் பென்னி, ஜாக்சஸ் இளங்கோ ஆகியோர் சிறப்பாக பணியாற்றி பங்கின் வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்தனர். 7-6-2021-ல் அருட்தந்தை டேவிட் மைக்கேல் பங்கு பணியாளராக பொறுப்பேற்று பணிகளை தொடர்கின்றார்.
ஆன்மிக மறுமலர்ச்சி, சமூக மேம்பாடு, பொருளாதார தன்னிறைவு, உறவால் சமூக கட்டுமானம், இளைஞர் நலம், ஆரோக்கியமான குடும்பம் ஆகிய இலக்குகளை கொண்டு இறையாட்சி பாதையில் வீறுநடை போடுகிறது.. விசுவாச வாழ்வின் மையமான திருக்கோவில் தூய குழந்தை இயேசுவின் தெரசாவின் பாதுகாவலில் மக்களின் பங்கேற்புடன் எழில் மாளிகையாய் நிமிர்ந்து நிற்கிறது. அழகுற புதுப்பிக்கப்பட்ட ஆலயம், திருப்பலி பீடம், மண்ணின் மைந்தர் சிற்பக்கலைஞர் ஜாண்குமாரால் நன்கொடையாய் வடிவமைக்கப்பட்ட வியத்தகு வியாகுல அன்னை கெபி முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் என்பவரால் அர்ச்சிக்கப்பட்டது. எழிலாய் ஒளிரும் ஆலயம் போல் மக்களின் வாழ்வும் ஒளிரட்டும்.
-அருட்தந்தை டேவிட் மைக்கேல்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழாவின் 6-வது நாளில் கல்யாண உற்சவ மண்டபத்தில் வெங்கடத்திரி ராமர் அலங்காரத்தில் மலையப்ப சாமி தோன்றினார்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடைபெற்று வருகிறது. விழாவின் 6-வது நாளான நேற்று காலை 9 மணிக்கு கோவில் கல்யாண உற்சவ மண்டபத்தில் வெங்கடத்திரி ராமர் அலங்காரத்தில் மலையப்ப சாமி தோன்றினார்.
மாலை 4 மணிக்கு மேல் 5 மணி வரை, சர்வ பூபால வாகன சேவை நடைபெற்றது.
இரவு 7 மணிக்கு கஜ வாகனத்தில் மலையப்பசாமி எழுந்தருளி தரிசனம் கொடுத்தார். சேவைகளில் பெரியஜியார் சுவாமி, சின்னஜியார் சுவாமி, அறங்காவல் குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி, நிர்வாக அதிகாரி ஜவஹர் ரெட்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மாலை 4 மணிக்கு மேல் 5 மணி வரை, சர்வ பூபால வாகன சேவை நடைபெற்றது.
இரவு 7 மணிக்கு கஜ வாகனத்தில் மலையப்பசாமி எழுந்தருளி தரிசனம் கொடுத்தார். சேவைகளில் பெரியஜியார் சுவாமி, சின்னஜியார் சுவாமி, அறங்காவல் குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி, நிர்வாக அதிகாரி ஜவஹர் ரெட்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
புரட்டாசி மாத சனிக்கிழமையில் விரதம் இருந்து, மஞ்சள் ஆடை உடுத்தி, பாத யாத்திரையாக சென்று சனிக்கிழமையன்று பாலாஜியை தரிசித்து யாத்திரையை முடித்துக் கொள்வது வழக்கம்.
புரட்டாசி மாதம் விரதம் இருப்பவர்கள் முதலில் வீட்டில் பூஜை அறையை சுத்தம் செய்து கோலமிட வேண்டும். பின்னர் அலமேலுமங்கையுடன் கூடிய வேங்கடேசப் பெருமாள் படத்தை அலங்கரிக்க வேண்டும். இரு பக்கங்களிலும் ஐந்து முக குத்து விளக்கை ஏற்றி வைக்க வேண்டும். பூஜைக்குரியவற்றை சேகரித்து வைத்து, ராகு காலம், எமகண்டம் நேரம் இல்லாமல் நல்ல நேரத்தில் மாவிளக்கேற்றி பூஜிக்க வேண்டும். சர்க்கரைப்பொங்கல், வடை, எள் சாதத்தை நிவேதனமாக படைக்கலாம்.
புரட்டாசி மாதம் சனிக்கிழமையன்று மாவிளக்கு ஏற்றி, பூஜைகள் செய்வது மிக, மிக நல்லது. அரிசிமாவு, வெல்லம் ஆகியவற்றை கலந்து மாவில் ஒரு பகுதியை இளநீர் விட்டு பிசைந்து தீபம் போல் செய்து, மீதி மாவை குவித்து அதன்மேல் பஞ்சினால் பூவத்திபோல் செய்து அதை தீபத்தில் வைத்து சுத்தமான நெய் ஊற்றி விளக்கேற்ற வேண்டும்.
அதன் பிறகு பூஜைகள் செய்து ஆரத்தி காட்ட வேண்டும். பூஜை முடிந்ததும் தேங்காயை துருவி, மாவுடன் அதனை கலந்து அனை வருக்கும் பிரசாதமாக கொடுக்கலாம். துளசி தண்ணீர், புளி சாதம் மற்றும் எலுமிச்சை சாதம் வைத்து வேங்கடவனை வழிபடுவதும், துளசி, தாமரை மற்றும் குங்குமத்தால் அர்ச்சிப்பதும் இன்னும் விசேஷமாகும்.
பின் தூபதீபம் காட்ட வேண்டும். பால், பழம், பாயாசம், கற்கண்டு, பொங்கல் ஆகியவற்றை நிவேதனப் பொருட்களாக படைக்க வேண்டும்.
வெங்கடாஜலபதியின் மகிமை பற்றிய நூல்களைப்படித்து “ஓம் நமோ நாராயணா” என்ற மந்திரத்தை ஜபம் செய்ய வேண்டும். இதேபோல் மாலையிலும் வழிபாடு செய்ய வேண்டும். இதுவே சனி வார விரதம் எனப்படும்.
புரட்டாசி சனிக்கிழமை விரதத்தை மேற்கொண்டால் குலதெய்வத்தின் அருள் கிடைக்கும். செல்வம் செழிக்கும். துன்பங்கள் விலகும். எந்த விரதமானாலும் பகலில் தூங்கக் கூடாது. வெற்றிலை, பாக்கு போடக்கூடாது. மது, மாது மற்றும் மாமிசத்தை விலக்கி பாவம் செய்வதை தவிர்க்க வேண்டும். இதை உறுதியாக மேற்கொள்ள வேண்டும்.
புரட்டாசி மாத சனிக்கிழமையில் விரதம் இருந்து, மஞ்சள் ஆடை உடுத்தி, பாத யாத்திரையாக சென்று சனிக்கிழமையன்று பாலாஜியை தரிசித்து யாத்திரையை முடித்துக்கொள்ளும் வழக்கம் பேருந்து இல்லாத அந்தக் காலத்திலேயே இருந்தது. தற்போது சகல வசதிகளும் உள்ள இந்த நாள்களிலும் பாத யாத்திரை தொடர்வதுதான் வேங்கடவனின் மகிமைக்குச் சான்று. சென்னையிலிருந்து திருப்பதிக்குப் பாத யாத்திரை மேற்கொள்பவர்களும் இருக்கிறார்கள்.
புரட்டாசி மாதம் சனிக்கிழமையன்று மாவிளக்கு ஏற்றி, பூஜைகள் செய்வது மிக, மிக நல்லது. அரிசிமாவு, வெல்லம் ஆகியவற்றை கலந்து மாவில் ஒரு பகுதியை இளநீர் விட்டு பிசைந்து தீபம் போல் செய்து, மீதி மாவை குவித்து அதன்மேல் பஞ்சினால் பூவத்திபோல் செய்து அதை தீபத்தில் வைத்து சுத்தமான நெய் ஊற்றி விளக்கேற்ற வேண்டும்.
அதன் பிறகு பூஜைகள் செய்து ஆரத்தி காட்ட வேண்டும். பூஜை முடிந்ததும் தேங்காயை துருவி, மாவுடன் அதனை கலந்து அனை வருக்கும் பிரசாதமாக கொடுக்கலாம். துளசி தண்ணீர், புளி சாதம் மற்றும் எலுமிச்சை சாதம் வைத்து வேங்கடவனை வழிபடுவதும், துளசி, தாமரை மற்றும் குங்குமத்தால் அர்ச்சிப்பதும் இன்னும் விசேஷமாகும்.
பின் தூபதீபம் காட்ட வேண்டும். பால், பழம், பாயாசம், கற்கண்டு, பொங்கல் ஆகியவற்றை நிவேதனப் பொருட்களாக படைக்க வேண்டும்.
வெங்கடாஜலபதியின் மகிமை பற்றிய நூல்களைப்படித்து “ஓம் நமோ நாராயணா” என்ற மந்திரத்தை ஜபம் செய்ய வேண்டும். இதேபோல் மாலையிலும் வழிபாடு செய்ய வேண்டும். இதுவே சனி வார விரதம் எனப்படும்.
புரட்டாசி சனிக்கிழமை விரதத்தை மேற்கொண்டால் குலதெய்வத்தின் அருள் கிடைக்கும். செல்வம் செழிக்கும். துன்பங்கள் விலகும். எந்த விரதமானாலும் பகலில் தூங்கக் கூடாது. வெற்றிலை, பாக்கு போடக்கூடாது. மது, மாது மற்றும் மாமிசத்தை விலக்கி பாவம் செய்வதை தவிர்க்க வேண்டும். இதை உறுதியாக மேற்கொள்ள வேண்டும்.
புரட்டாசி மாத சனிக்கிழமையில் விரதம் இருந்து, மஞ்சள் ஆடை உடுத்தி, பாத யாத்திரையாக சென்று சனிக்கிழமையன்று பாலாஜியை தரிசித்து யாத்திரையை முடித்துக்கொள்ளும் வழக்கம் பேருந்து இல்லாத அந்தக் காலத்திலேயே இருந்தது. தற்போது சகல வசதிகளும் உள்ள இந்த நாள்களிலும் பாத யாத்திரை தொடர்வதுதான் வேங்கடவனின் மகிமைக்குச் சான்று. சென்னையிலிருந்து திருப்பதிக்குப் பாத யாத்திரை மேற்கொள்பவர்களும் இருக்கிறார்கள்.






