என் மலர்tooltip icon
    cinema banner
    cinema banner
    நான் கல்லூரியில் படிக்கும் போது, என் பெயர் உமர் ஷெரீப் என்று எல்லோரிடமும் சொல்வேன்.

    மலையாளத் திரையுலகில் மெகாஸ்டார் என்று லட்சக்கணக்கான ரசிகர்களால் போற்றப்படும் நடிகர் மம்மூட்டி உடைய இயற்பெயர் 'முகமது குட்டி பனப்பரம்பில் இஸ்மாயில்' ஆகும்.

    இந்நிலையில் தனது பெயர் மம்மூட்டி என மறுவியதற்கு பின்னால் உள்ள சுவாரஸ்யமான கதையை அவர் பகிர்ந்துள்ளார்.

    கேரளாவில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில், மம்மூட்டி தனது கல்லூரி நாட்களை நினைவு கூர்ந்தார்.

    அப்போது, "நான் கல்லூரியில் படிக்கும் போது, என் பெயர் உமர் ஷெரீப் என்று எல்லோரிடமும் சொல்வேன். என் உண்மையான பெயர் முகமது குட்டி என்று யாருக்கும் தெரியாது.

    ஒரு நாள், என் ஐடி கார்டு தற்செயலாக பாக்கெட்டில் இருந்து கீழே விழுந்துவிட்டது. இதன் காரணமாக, எனது உண்மையான பெயர் முழு கல்லூரிக்கும் தெரிய வந்தது என்று தெரிவித்தார்.

    அந்த நேரத்தில், அவரது நண்பர்களில் ஒருவரான சசிதரன், ஐடி கார்டில் 'முகமது குட்டி' என்ற பெயரை 'மம்மூட்டி' என்று தவறாகப் படித்ததாகக் கூறினார்.

    எனவே, "அவர் தவறாகப் படித்த பெயர் பின்னர் எனக்குப் பொருத்தமாகிவிட்டது" என்று மம்மூட்டி சிரித்தபடி கூறினார்.

    இந்த சந்தர்ப்பத்தில், அவர் தனது நண்பர் சசிதரனை மேடைக்கு அழைத்து பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்தினார். ரஜினியின் குசேலன் படம் போல நடந்த இந்த நிகழ்வு அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. 

    சான் ரோல்டனின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம்.

    நாயகி கீர்த்தி சுரேஷ் பாண்டிச்சேரியில் தாய் ராதிகா, அக்கா மற்றும் தங்கையுடன் வாழ்ந்து வருகிறார். ஒரு நாள் அக்கா குழந்தையின் முதல் பிறந்தநாள் கொண்டாட இருக்கும் நிலையில், பிரபல ரவுடி சூப்பர் சுப்பராயன் போதையில் வீட்டுக்கு வருகிறார். அப்போது எதிர்பாராத விதமாக ரவுடியை கீர்த்தி சுரேஷும், ராதிகாவும் அடிக்கிறார்கள். மயங்கி கீழே விழுந்த ரவுடி இறந்து விடுகிறார்.

    சூப்பர் சூப்பராயன் பிணத்தை எப்படி அப்புறப்படுத்துவது என்று குடும்பத்தினருடன் கீர்த்தி சுரேஷ் திட்டம் போடுகிறார். இதற்கிடையில் ரவுடியின் எதிர் கும்பல் பிணத்தை அடைய  முயற்சி செய்கிறார்கள்.  சூப்பர் சுப்பராயனின் மகன் சுனில் தந்தையைத் தேடி அலைகிறார்.

    இறுதியில் கீர்த்தி சுரேஷ் சூப்பர் சூப்பராயனின் பிணத்தை எப்படி அப்புறப்படுத்தினார்? பிணத்தை அடைய நினைத்த கும்பலின் நிலை என்ன ஆனது? தந்தை தேடி அலைந்த சுனில் என்ன செய்தார் என்பதே படத்தின் மீதி கதை?

    நடிகர்கள்

    படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கும் கீர்த்தி சுரேஷ் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். படம் ஆரம்பித்திலேயே டெலிவரிக்கு பிளான் சொல்லும் காட்சி, போலீஸ் ஸ்டேஷனில் இருந்து தப்பிக்கும் காட்சி, சுனிலுடன் நீண்ட வசனம் பேசும் காட்சி, ஆகிய இடங்களில் சிறப்பான பங்களிப்பை கொடுத்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ். இவருக்கு அடுத்தபடியாக தாயாக நடித்திருக்கும் ராதிகா தனது வெகுளித்தனமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார்.

    வில்லனாக நடித்திருக்கும் சுனில் படம் முழுக்க தந்தையை இறுக்கமான முகத்துடன் தேடி வருகிறார். அதிக வசனமும் அதிக முக பாவனைகள் இல்லாதது வருத்தம். போலீஸ் அதிகாரியாக வரும் ஜான் விஜய், ஓவர் ஆக்டிங் போல் இருக்கிறது. ரெடிங் கிங்ஸ்லி, கல்யாண் மாஸ்டர், சுரேஷ் சக்கரவர்த்தி. சென்ராயன் ஆகியோரின் நடிப்பு திரைக்கதை ஓட்டத்திற்கு உதவி இருக்கிறது.

    இயக்கம்

    கர்மா இஸ் பூமராங் என்பதை மையமாக வைத்து படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் ஜே கே சந்துரு. கதாபாத்திரங்களிடையே திறமையாக வேலை வாங்கி இருக்கிறார். படம் ஆரம்பம் முதல் இறுதி வரை விறுவிறுப்பாக திரைக்கதை நகர்த்திருக்கிறார். ஆனால் டார்க் காமெடி பெரியதாக ஒர்க் அவுட் ஆகவில்லை.

    இசை

    சான் ரோல்டனின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.

    ஒளிப்பதிவு

    தினேஷ் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.

    ரேட்டிங்: 2.5/5

    • D55 படத்தில் இருந்து கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் விலகியுள்ளது.
    • இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி D55 படத்தை ஒரு பெரிய அளவில் ஆக்‌ஷன் அதிரடி படமாக எடுக்க முடிவு செய்துள்ளார்.

    கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் தனுஷ், ராஜ்குமார் பெரியசாமி இணையும் படம் D55. இப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிப்பதாக கூறப்பட்டது. மேலும் இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைப்பதாகவும் அறிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில், தனுஷ், ராஜ்குமார் பெரியசாமி இணையும் D55 படத்தில் இருந்து கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் விலகியுள்ளது. இப்போது இப்படம் தனுஷின் வுண்டர்பார் ஸ்டுடியோ தயாரிப்பில் உருவாக உள்ளது.




    இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி D55 படத்தை ஒரு பெரிய அளவில் ஆக்ஷன் அதிரடி படமாக எடுக்க முடிவு செய்துள்ளார். மலையாள நடிகர் மம்முட்டி இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடப்பதாகவும் இதற்காக அவருக்கு 15 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. மேலும் இப்படத்தின் கதாநாயகியாக சாய் பல்லவி நடிக்க உள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இனிவரும் நாட்களில் இப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    • இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் புதிய கேங்ஸ்டர் படம் உருவாகிறது.
    • மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்க உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு இறுதியில் தொடங்க திட்டம்.

    தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ, கூலி போன்ற கேங்ஸ்டர் படங்களை இயக்கி பெயர் பெற்றவர் லோகேஷ் கனகராஜ்.

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அடுத்த என்ன படம் வெளியாகும் என ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக அறிமுகமாக உள்ளார்.

    சாணிக் காயிதம், கேப்டன் மில்லர் படங்களின் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் புதிய கேங்ஸ்டர் படம் உருவாகிறது. இந்த படத்தின் மூலம் கதாநாயகனாக லோகேஷ் கனகராஜ் அறிமுகமாகிறார்.

    பல நடிகர்களை இயக்கி வெற்றிப் படங்களை வழங்கிய பிறகு, லோகேஷ் கதாநாயகனாக அறிமுகமாவதை காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். அவர் ஒரு கதாநாயகனாக வெற்றி பெறுவாரா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

    இதனிடையே, லோகேஷ் கனகராஜ், ஒரு பான் இந்தியா படத்தை இயக்க உள்ளதாக சினிமா வட்டாரத்தில் தகவல் வெளியாகி உள்ளது.



    லோகேஷ் கனகராஜ் கூறிய கதை அல்லு அர்ஜூனுக்கு பிடித்து உள்ளதாகவும் இதனால் அவர் கதாநாயகனாக நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்க உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு இறுதியில் தொடங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    அட்லி இயக்கத்தில் நடிகர் அல்லு அர்ஜூன் தற்போது மிகப்பிரமாண்டமான ஒரு படத்தில் நடித்துக்கொண்டு வருகிறார். எனவே அப்படத்தை முடித்துக்கொண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அவர் நடிக்க தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

    • 30 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான பாடல்கள் தற்போது ‘டிரெண்ட்' ஆகியுள்ளது.
    • முன்கூட்டியே வழக்கு தொடராமல், படம் ஓ.டி.டி. தளத்தில் வெளியான பின்னர் தொடர்வது ஏன்?'' என்று கேள்வி எழுப்பினார்.

    நடிகர்கள் பிரதீப் ரங்கநாதன், சரத்குமார், மமிதா பைஜு உள்ளிட்டோர் நடித்த 'டியூட்' திரைப்படத்தில் இளையராஜா இசையமைத்த 'கருத்த மச்சான்', '100 வருஷம்' ஆகிய பாடல்கள் அனுமதியில்லாமல் பயன்படுத்தப்பட்டுள்ளதாக சென்னை ஐகோர்ட்டில் இளையராஜா வழக்கு தொடர்ந்து இருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதி என்.செந்தில்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, படத்தயாரிப்பு நிறுவனம் தரப்பில், இந்த பாடல்கள் மீதான உரிமையை எக்கோ நிறுவனத்திடம் இருந்து சோனி நிறுவனம் பெற்றுள்ளது. சோனி நிறுவனத்திடம் இருந்து தாங்கள் அனுமதி பெற்றோம் என்று கூறப்பட்டது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்த இளையராஜா தரப்பு வக்கீல், ''இந்த விவகாரத்தில் எக்கோ நிறுவனத்துக்கு எதிராக இந்த ஐகோர்ட் தடை விதித்துள்ளது'' என்று கூறினார். உடனே நீதிபதி, ''30 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான பாடல்கள் தற்போது 'டிரெண்ட்' ஆகியுள்ளது. இதனால் இளையராஜாவுக்கு என்ன பாதிப்பு? அதுமட்டுமல்ல முன்கூட்டியே வழக்கு தொடராமல், படம் ஓ.டி.டி. தளத்தில் வெளியான பின்னர் தொடர்வது ஏன்?'' என்று கேள்வி எழுப்பினார்.

    அதற்கு இளையராஜா தரப்பு, ''படம் வெளியானதும் தயாரிப்பு நிறுவனத்துக்கு இளையராஜா தரப்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால், அதுபோல யாரும் இல்லை என்று நோட்டீஸ் கடிதம் திரும்ப வந்துவிட்டது'' என்று விளக்கம் அளிக்கப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

    இதனை தொடர்ந்து இவ்வழக்கில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இளையராஜா பாடல்களின் புனிதத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் பாடல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால் 'கருத்த மச்சான்' பாடலை நீக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

    இதனிடையே, 'கருத்த மச்சான்' பாடலை 'டியூட்' படத்தில் இருந்து நீக்க 7 நாள் அவகாசம் தேவை என்ற தயாரிப்பு நிறுவனத்தின் கோரிக்கையே நீதிபதி நிராகரித்தார்.

    இசையமைப்பாளர் இளையராஜா மனுவுக்கு பதிலளிக்க தயாரிப்பு நிறுவனத்திற்கு உத்தரவிட்ட நீதிபதி வழக்கை ஜனவரி 7-ந்தேதிக்கு ஒத்திவைத்தார். 

    • சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார்.
    • சொற்பொழிவு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.

    தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகர் சிவகுமார். இவர் 1965-ம் ஆண்டு வெளியான 'காக்கும் கரங்கள்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். 1967-ம் ஆண்டு வெளியான 'கந்தன் கருணை' திரைப்படம் தான் இவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை பெற்று தந்தது.

    இதனை தொடர்ந்து நடிகர் சிவகுமார் கடைசியாக 2001-ம் ஆண்டு வெளியான 'பூவெல்லாம் உன் வாசம்' படத்தில் நடித்திருந்தார். சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார். தற்போது நடிப்பை நிறுத்திவிட்டு சொற்பொழிவு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.

    இந்த நிலையில், தமிழ்நாடு இசை மற்றும் கவின் பல்கலைக் கழகம் சார்பில் நடிகர் சிவகுமார், ஓவியர் சந்துரு ஆகியோருக்கு மதிப்புமிக்க டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

    சென்னை கலைவாணர் அரங்கில் இன்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் நடிகர் சிவகுமாருக்கு மதிப்புறு முனைவர் பட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். 

    • ‘பைசன்’ எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
    • உங்களின் படங்கள் அழுத்தமானதாகவும், பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையிலும் உள்ளன.

    மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் வெளியான படம் 'பைசன்'. இப்படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். கபடி வீரரின் வாழ்க்கையை தத்துரூபமாக வெளிப்படுத்தி உள்ள 'பைசன்' படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வசூலையும் குவித்தது.

    இப்படத்தை பார்த்து பிரபலங்கள் பலரும் படக்குழுவினரை பாராட்டி வந்தனர். இந்த நிலையில், முன்னாள் கிரிக்கெட்டி வீரர் தினேஷ் கார்த்திக் 'பைசன்' படத்தை பாராட்டியுள்ளார். இதுதொடர்பாக தினேஷ் கார்த்திக் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,




    'பைசன்' எனக்கு மிகவும் பிடித்திருந்தது. என்ன ஒரு அருமையான திரைப்படம் மாரிசெல்வராஜ். உங்களின் படங்கள் அழுத்தமானதாகவும், பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையிலும் உள்ளன. இந்த எதார்த்தமான நடிப்பிற்காக துருவ் கடுமையாக உழைத்துள்ளார். மற்ற நடிகர்களும் சிறப்பாக நடித்திருந்தனர். படக்குவுக்கு என் வாழ்த்துகள் என கூறியுள்ளார்.



    • கதாநாயகியாக திரிஷா நடித்துள்ளார்.
    • இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.

    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் வெளியான 'கங்குவா' அவரது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறாத நிலையில், அடுத்து வெளியான 'ரெட்ரோ' படம் ஓரளவு வரவேற்பை பெற்றது என்று சொல்லாம்.

    இதனை தொடர்ந்து, ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நடித்துள்ள சூர்யாவின் 45-வது படமான 'கருப்பு' படம் விரைவில் வெளியாக உள்ளது. டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி உள்ள இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். கதாநாயகியாக திரிஷா நடித்துள்ளார். மேலும், சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி மற்றும் நட்டி நட்ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    இப்படம் நீதிமன்ற வழக்கு ஒன்றை மையமாக வைத்து அதில் கடவுள் நம்பிக்கையை இணைத்து உருவாகியுள்ளது. 'கருப்பு' திரைப்படத்தை அடுத்தாண்டு ஜனவரி 23-ந்தேதி வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாக சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது.

    இந்த நிலையில், 'கருப்பு' படத்தின் ஓ.டி.டி. உரிமத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் அதிக தொகைக்கு வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், சாட்டிலைட் உரிமத்தை ஜீ5 நிறுவனமும் கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது.

    • தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகனுடன் ‘பராசக்தி' படத்திலும் நடித்துள்ளார்.
    • விமர்சனங்கள் பெரியளவில் வரவில்லை என்றாலும், எனக்கும் சவால்கள் என்பது இருந்தது.

    தமிழ் சினிமாவில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நடிகர்களில் ஒருவர் முரளி. அவரது மூத்த மகனான அதர்வா வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கிய இடம் வகிக்கிறார். அதர்வாவின் நடிப்பில் இந்தாண்டு வெளியான டி.என்.ஏ. படம் ரசிகர்களிடையே வரவேற்பு பெற்றது. தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகனுடன் 'பராசக்தி' படத்திலும் நடித்துள்ளார்.

    அதர்வாவிடம் 'வாரிசு நடிகர் என்ற விமர்சனத்தை எப்படி எதிர்கொண்டீர்கள்?' என்று கேட்கப்பட்டது. அதற்கு அதர்வா பதிலளிக்கையில் ''விமர்சனங்கள் பெரியளவில் வரவில்லை என்றாலும், எனக்கும் சவால்கள் என்பது இருந்தது. என்னதான் ஒரு அடையாளத்துடன் வந்தாலும், நான் சந்தித்த ஒவ்வொரு களமும் எனக்கென உத்வேகத்தை தந்தது. அடையாளத்தை ஏற்படுத்தியது. எனவே விமர்சனங்கள் என்னை பாதிக்கவில்லை'', என்றார்.

    • இசையமைப்பாளர் M.S. ஜோன்ஸ் ரூபர்ட் இசையில் உருவாகியுள்ள பாடல்கள் ரசிக்கும்படி உள்ளது.

    கதாநாயகன் ரஜினி கிஷன் மற்றும் கதாநாயகி திவிகா இருவரும் காலக்கின்றனர். இவர்கள் ஓடிப்போய் திருமணம் செய்துக் கொள்ள முடிவு செய்கின்றனர். திவிகாவை எப்படியாவது திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என்று திட்டமிடுகிறார் அவரது மாமாவான கூல் சுரேஷ். இருவரும் ஓடிப்போய் திருமணம் செய்துக்கொள்வதை தெரிந்த கூல் சுரேஷ் தடுக்க முயற்சிக்கிறார். ஆனால், முனீஷ்காந்த் மற்றும் நண்பர்களின் உதவியுடன் இருவருக்கும் திருமணம் நடக்கிறது. பிறகுதான் தெரிகிறது, ரஜினி கிஷன் திவிகாவின் கழுத்தில் கட்டியிருக்கும் தாலியில் பேய் மறைந்து இருப்பது தெரிய வருகிறது.

    பேய் இருக்கும் தாலி எப்படி இவர்கள் கையில் சிக்கியது..? திவிகாவை விட்டு பேய் விரட்டியடித்தார்களா? என்பது படத்தின் மீதிக்கதை..

    நடிகர்கள்

    கதாநாயகனாக நடித்துள்ள ரஜினி கிஷன் இப்படத்தி்கு பொறுத்தம். திவிகா கதாப்பாத்திற்கு ஏற்ப நடித்திருக்கிறார். கூல் சுரேஷ், மொட்டை ராஜேந்திரன், முனீஷ்காந்த், கல்கி உள்ளிட்டோர் படத்திற்கு பலம்.

    இயக்கம்

    இயக்குநர் எம்.ரமேஷ் பாரதி இயக்கியுள்ள காமெடி த்ரில்லர் கதை வர்க் அவுட் ஆகியுள்ளது. முதல் பாதி படம் கொஞ்சம் இழுவையாக இருந்தாலும், இரண்டாவது பாதியில் நகைச்சுவை கலந்து ஹாரர் படமாக விறுவிறுப்பாக எடுத்திருக்கிறார். பேயை வைத்து கமெடி செய்ய முயற்சித்திருக்கிறார்.

    இசை

    இசையமைப்பாளர் M.S. ஜோன்ஸ் ரூபர்ட் இசையில் உருவாகியுள்ள பாடல்கள் ரசிக்கும்படி உள்ளது.

    ஒளிப்பதிவு

    ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.

    • தமிழில் அம்பிகாபதி என்ற பெயரில் வெளியானது.
    • பனாரஸின் குறுகிய பாதைகளில் குந்தன் என்ற பெயர் இன்னும் எதிரொலிக்கிறது.

    பாலிவுட்டில் இயக்குனர் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் தனுஷ், சோனம் கபூர் நடிப்பில் கடந்த 2013 இல் வெளியாகி வரவேற்பை பெட்ரா படம் 'ராஞ்சனா'.

    தமிழில் அம்பிகாபதி என்ற பெயரில் வெளியானது. குந்தன் என்ற கதாபாத்திரத்தில் தனுஷ் வாழ்ந்திருந்தார். படத்தில் ஏஆர் ரகுமான் இசையில் இடம்பெற்ற ஒவ்வொரு பாடலும் ஒரு கிளாசிக்.

    இந்நிலையில் தனுஷ் - ஆனந்த் எல் ராய் - ஏஆர் ரகுமான் கூட்டணியில் புதிதாக உருவாகி உள்ள படம் "தேரே இஸ்க் மேன்" (Tere Ishk Mein). இதில் ஷங்கர் என்ற கதாபாத்திரத்தில் தனுஷ் நடித்துள்ளார். 

    இதுவும் ராஞ்சனா போலவே காதல் படமாக அமைந்துள்ளது. அந்த கதையோடு தொடர்புடையது என்றும் கூறப்படுகிறது. 

    இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை கிரித்தி சனோன் நடித்துள்ளார். இப்படம் நாளை, 28ம் தேதி வெளியாக உள்ளது.

    இப்படத்தில் ஏ ஆர் ரகுமான் இசையில் வெளியான 'உசே கெனா' மனதை உருக்கும் வகையில் இருந்தது.

    இந்நிலையில் ரே இஷ்க் மெய்ன் புரமோஷனுக்காக வாரணாசி சென்றுள்ள தனுஷ் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில், "நினைவுப் பாதையில் ஒரு நடை. இதெல்லாம் எங்கிருந்து தொடங்கியது. குந்தன், ஒரு தசாப்தத்திற்கும் மேலாகியும் என்னை விட்டு விலக மறுக்கும் ஒரு கதாபாத்திரம்.

    பனாரஸின் குறுகிய பாதைகளில் குந்தன் என்ற பெயர் இன்னும் எதிரொலிக்கிறது. மக்கள் என்னை அழைக்கும்போது நான் இன்னும் திரும்பிச் சிரிக்கிறேன்.

    எனக்கு குந்தனைக் கொடுத்த மனிதருடன் இப்போது அதே பாதைகளில் நடந்து, அதே வீட்டின் முன் அமர்ந்து, அதே தேநீர் கடையில் இருந்து தேநீர் அருந்தி, புனித கங்கைக் கரையில் நடந்து, ஒரு முழு வட்டம் பூர்த்தியானது போல் உணர்கிறேன். இப்போது ஷங்கருக்கான நேரம். தேரே இஷ்க் மெய்ன்… நாளை வெளியாகிறது. ஹர் ஹர் மகாதேவ்" என்று பதிவிட்டுள்ளார்.   

    உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாகி இருக்கும் படம் 'ப்ராமிஸ்'.

    "ப்ராமிஸ்" கதையின் நாயகனாக நடித்து இந்தத் திரைப்படத்தை அருண்குமார் சேகரன் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் ஒளிப்பதிவாளராக வினோத்குமார் DFT பணியாற்றி உள்ளார்.

    சரவண தீபன் இசையமைத்துள்ளார்.படத்தொகுப்பு ஸ்ரீராம் விக்னேஷ், பாடலாசிரியர் பாலா, DI மணிகண்டன், நடனம் அகிலா பணியாற்றியுள்ளனர்.

    நாயகன் அருண்குமார் சேகர னுடன் கதாநாயகியாக புதுமுகம் நதியா சோமு நடித்துள்ளார். படத்தின் பிற கதை மாந்தர்களாக சுஜன், அம்ரிஷ் ,பிரதாப், கோகுல், சுந்தரவேல், ராஜ்குமார்,கலைவாணி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

    சங்கமித்ரன் ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் அம்மன் ஆர்ட் க்ரியேஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளன. 

    மக்களிடம் புகழ்பெற்ற உண்மையையே பேசிய அரிச்சந்திரனும் அவனைப் பின்பற்றிய காந்தியும் வரலாற்றில் சத்தியத்தின் சாட்சியங்களாக இருப்பதை அறியலாம்.

    அப்படி அந்தச் சத்தியத்தை மையமாக வைத்து உருவாகி இருக்கும் படம்தான் ப்ராமிஸ். இந்த நிலையில் 'ப்ராமிஸ்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை திரைப் பிரபலங்கள் வெளியிட்டு வாழ்த்தியிருக்கிறார்கள்.

    'ப்ராமிஸ்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் சேரன் மற்றும் ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்டி நட்ராஜ் ஆகியோர் வெளியிட்டு படக்குழுவினரை வாழ்த்தினர்.

    ×