என் மலர்
- இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்துள்ளார்.
- ‘சிறை’ திரைப்படம் வருகிற 25-ந்தேதி முதல் உலகமெங்கும் வெளியாகவுள்ளது.
நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில், அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் சிறை. டாணாக்காரன் இயக்குநர் தமிழ், தான் உண்மையில் சந்தித்த அனுபவத்தை வைத்து, இப்படத்தின் கதையை எழுதியுள்ளார். இயக்குநர் வெற்றிமாறனின் இணை இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இப்படத்தினை எழுதி இயக்கியுள்ளார்.
7 ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில், SS லலித் குமார் இந்த படத்தை தயாரித்துள்ளார். ஒரு காவலதிகாரிக்கும், விசாரணைக் கைதிக்குமான பயணம் தான் இப்படத்தின் மையம்.
நடிகர் விக்ரம் பிரபு நாயகனாக நடிக்க, ஜோடியாக நடிகை அனந்தா நடித்துள்ளார். இப்படத்தில் தயாரிப்பாளர் SS லலித் குமார் மகன் LK அக்ஷய் குமார் அறிமுகமாகிறார். இவருக்கு ஜோடியாக அனிஷ்மா நடித்துள்ளார். இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்துள்ளார். 'சிறை' திரைப்படம் வருகிற 25-ந்தேதி முதல் உலகமெங்கும் வெளியாகவுள்ளது.
டிரெய்லரின் படி காவல் அதிகாரியான விக்ரம் பிரபு சிவகங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த குற்றவாளியை அழைத்து செல்கிறார். அப்போது அந்த குற்றவாளி துப்பாக்கியுடன் தப்பிச்செல்கிறார். இதன்பின் நடக்கும் சம்பவங்களே படத்தின் கதையாக இருக்கும் என தெரிகிறது.
நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ள 'சிறை' படத்தின் டிரெய்லர் சமூக வலைத்தளங்களில் படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
- இயக்குநராகவும் புதிய அவதாரம் எடுத்துள்ளார் ஷாம்.
- கிச்சா சுதீப் இப்பாடலை பாடியுள்ளார் என்பது தான் இந்த ஆல்பத்தின் இன்னொரு ஹைலைட்டான அம்சம்.
தமிழ் சினிமாவில் கடந்த 25 வருடங்களாக தனக்கென ஒரு நிலையான இடத்தை தக்கவைத்து பயணித்து வருபவர் நடிகர் ஷாம்.
தற்போது முதன் முறையாக ஆல்பம் தயாரிப்பில் இறங்கி, 'வரும் வெற்றி' என்கிற இசை ஆல்பத்தை இயக்கியுள்ளதன் மூலம் ஒரு இயக்குநராகவும் புதிய அவதாரம் எடுத்துள்ளார் ஷாம்.
SIR ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் ஷாம் தயாரித்து இயக்கியுள்ள இந்த இசை ஆல்பத்தில், ஷாமுடன் நடிகை நிரா இணைந்து நடித்துள்ளார்.
அம்ரிஷ் இசையமைத்துள்ள இப்பாடலுக்கு ஸ்ரீதர் மாஸ்டர் நடனம் வடிவமைத்துள்ளார்.
கன்னட திரை உலகின் முன்னணி நட்சத்திரமான கிச்சா சுதீப் இப்பாடலை பாடியுள்ளார் என்பது தான் இந்த ஆல்பத்தின் இன்னொரு ஹைலைட்டான அம்சம்.
பிரபலமான டி சீரிஸ் நிறுவனம் இந்த ஆல்பத்தை வெளியிட்டுள்ளது.
- இப்படத்தை பால சுப்ரமணியன் ஒளிப்பதிவு மேற்கொண்டுள்ளார்.
- ‘கொம்புசீவி’ கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியாகும் என படக்குழு அறிவித்து இருந்தது.
இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் மறைந்த விஜயகாந்தின் இளைய மகனான சண்முக பாண்டியன் நடிப்பில் வெளியாக உள்ள படம் 'கொம்புசீவி'. இப்படத்தில் சரத்குமார், காளி வெங்கட் மற்றும் கல்கி ராஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
யுகபாரதி, பா. விஜய், சினேகன் மற்றும் சூப்பர் சுப்பு ஆகியோரின் பாடல் வரிகளுக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தை பால சுப்ரமணியன் ஒளிப்பதிவு மேற்கொண்டுள்ளார்.
இப்படம் 1996 வாக்கில் உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, வைகை அணை பகுதியில் நடந்த கதைகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சில நாட்களுக்கு முன்பு இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ, முதல் பாடல் என வெளியானது. அதனை தொடர்ந்து 'கொம்புசீவி' கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியாகும் என படக்குழு அறிவித்து இருந்தது.
இந்த நிலையில், 'கொம்புசீவி' படம் கிறிஸ்துமஸுக்கு முன்னதாக வருகிற 19-ந்தேதி வெளியாகும் என டிரெய்லரை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. டிரெய்லரில் கிராமத்திற்காக போராடும் சரத்குமார், சண்முக பாண்டியனை சுற்றி வரும் கதையில் ஆக்ஷன், காதல், நகைச்சுவை கலந்து உருவாகி உள்ளது.
- இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்.
- அரசியல் கதைகளத்துடன் கூடிய இப்படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
'டாடா' பட இயக்குநர் கணேஷ் கே.பாபு இயக்கத்தில் நடிகர் ரவி மோகன் நடித்துள்ள படம் 'கராத்தே பாபு'. ரவி மோகனின் 34-வது படமான இப்படத்தை ஸ்கிரீன் சீன் மீடியா தயாரித்துள்ளது.
இப்படத்தில் தமிழ்நாடு டி.ஜி.பி. சங்கர் ஜிவாலின் மகள் தவ்தி ஜிவால் கதாநாயகியாக நடித்திக்கிறார். இப்படத்தின் மூலம் தவ்தி ஜிவால் நடிகையாக அறிமுகமாகி உள்ளார்.
மேலும் இப்படத்தில் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், நாசர், விடிவி கணேஷ், ந சக்தி வாசுதேவன், காயத்ரி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். அரசியல் கதைகளத்துடன் கூடிய இப்படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில், 'கராத்தே பாபு' திரைப்படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளதாக சிறப்பு வீடியோ வெளியிட்டு படக்குழு தெரிவித்துள்ளது.
- சவுதி அரேபியாவில் செங்கடல் திரைப்பட விழா நடைபெற்றது.
- இதில் நடிகை ஆலியா பட்டிற்கு கோல்டன் குளோப் விருது வழங்கப்பட்டது.
சவுதி அரேபியா:
சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் வரும் 13-ம் தேதி வரை செங்கடல் திரைப்பட விழா நடைபெறவிருக்கிறது. இந்த செங்கடல் திரைப்பட விழாவில் சிறப்பான நடிகர், நடிகைகளுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன.
இந்நிலையில், பாலிவுட் நடிகையான ஆலியா பட்டின் சிறந்த பங்களிப்பிற்காக 'கோல்டன் குளோப்' விருது வழங்கப்பட்டுள்ளது
அப்போது, தனது தொடக்க காலத்தில் மிகுந்த ஆர்வமாக நடித்ததாக ஆலியா பட் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். ஓமர் ஷெரிப் விருதை துனிசிய நடிகை ஹெண்ட் சப்ரி வென்றார்.
இதுதொடர்பாக கோல்டன் குளோப் தனது எக்ஸ் வலைதளத்தில், கோல்டன் குளோப் ஓரிஸான் விருதினை ஆலியா பட்டிற்கு கிடைத்ததில் வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளது.
கடந்த ஆண்டு நடந்த செங்கடல் திரைப்பட விழாவில் நடிகர் அமிர் கானுக்கு விருது வழங்கப்பட்டது.
- ஜோக்கர், குக்கூ, ஜப்பான் போன்ற படங்களின் இயக்குநர் ராஜ்மோகன் இயக்கியுள்ளார்.
- பாடல் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டுள்ளது.
சசிகுமார் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ரூரிஸ்ட் ஃபேமிலி. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதோடு மட்டுமல்லாமல், சசிகுமார் படங்களிலையே அதிக வசூல் செய்த படம் என்ற பெருமையையும் பெற்றது. இப்படத்தை தொடர்ந்து தற்போது அவர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'மை லார்ட்'. இப்படத்தை ஜோக்கர், குக்கூ, ஜப்பான் போன்ற படங்களை இயக்கிய ராஜுமுருகன் இயக்கி வருகிறார்.
இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். இதில் கன்னட நடிகை சைத்ரா ஜே ஆச்சார் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தின் முதல் பாடல் 'எச காத்தா' கடந்த மாதம் வெளியானது. இந்நிலையில் இப்படத்தின் இரண்டாவது பாடல் ராசாதி ராசா இன்று வெளியாகி உள்ளது. இப்பாடல் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டுள்ளது. யுவபாரதி வரிகளில் மகாலிங்கள், முத்துசிற்பி பாடியுள்ளனர்.
- அட்டக்கத்தி தினேஷ் நாயகனாக நடிக்க, ஆர்யா வில்லனாக நடிக்கிறார்.
- இன்று 45வது பிறந்தநாளை கொண்டாடுகிறார் ஆர்யா
ஆர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிக்கவுள்ள 40வது படத்தின் பூஜை இன்று நடைபெற்றுள்ளது.
தங்கலான் படத்தை தொடர்ந்து நடிகர் ஆர்யாவை வைத்து சர்பட்டா-2 படத்தை ரஞ்சித் இயக்குவார் என எதிர்பார்த்திருந்த நிலையில், வேட்டுவம் படப்பிடிப்பை தொடங்கினார். இப்படத்தில் அட்டக்கத்தி தினேஷ் நாயகனாக நடிக்க, ஆர்யா வில்லனாக நடிக்கிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நடிகர் ஆர்யாவின் 40வது படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஆர்யாவின் பிறந்தநாளான இன்று அவர் நடிக்கவுள்ள 40வது படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. நிகில் முரளி தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இதனை தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ள ஜிவி பிரகாஷ், ராஜா ராணிக்கு பிறகு ஆர்யாவிற்கு ஓர் காதல் படத்திற்கு இசையமைக்கிறேன் என தெரிவித்துள்ளார். இதன்மூலம் காதல்கதையை மையமாக கொண்ட படம் என தெரிகிறது.
படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- படையப்பா படத்திற்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார்.
- படையப்பா படத்தில் நடித்த அனுபவம் குறித்து ரஜினி பேசும் வீடியோ சமீபத்தில் வெளியானது.
கடந்த 1999-ம் ஆண்டு கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான படம் தான் படையப்பா. சிவாஜி கணேசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த இந்த படத்தில், ரஜினிகாந்த், மறைந்த நடிகை சௌந்தர்யா, வில்லியாக ரம்யா கிருஷ்ணன், நாசர், செந்தில், ரமேஷ் கண்ணா, லட்சுமி, ராதாரவி, உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
இந்த படத்திற்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். படத்தில் அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
இந்நிலையில் திரைத்துரையில் ரஜினியின் 50வது வருடத்தை கொண்டாடும் விதமாக அவரது பிறந்தநாளான நாளை படையப்பா படம் ரீரிலீஸ் செய்யப்பட இருக்கிறது.
இதனை முன்னிட்டு படையப்பா படத்தில் நடித்த அனுபவம் குறித்து ரஜினி பேசும் வீடியோ சமீபத்தில் வெளியானது.
இந்நிலையில், படையப்பா திரைப்படம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் கொடுத்த சிறப்பு நேர்காணலின் BTS காட்சியை சௌந்தர்யா ரஜினிகாந்த் வெளியிட்டுள்ளார்.
- 'வா வாத்தியார்' திரைப்படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.
- கடனை திருப்பி செலுத்தாமல் படத்தை வெளியிடக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டது.
'மெய்யழகன்' படத்தைத் தொடர்ந்து, நலன் குமாரசாமி இயக்கத்தில் 'வா வாத்தியார்' என்ற படத்தில் கார்த்தி நடித்து முடித்துள்ளார். கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடித்துள்ளார். சத்யராஜ், ராஜ்கிரண் உள்பட பலரும் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் டீசரும், பாடல்களும் ஏற்கனவே வெளியாகி கவனம் ஈர்த்தன. இப்படம் வரும் 12ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்தது.
இந்நிலையில், ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பில் கார்த்தி நடிக்கும் 'வா வாத்தியார்' திரைப்படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
கடனாக பெற்ற ரூ.21 கோடியை ஞானவேல் ராஜா திருப்பிச் செல்லும் வரை வா வாத்தியார் திரைப்படத்தை வெளியிடக்கூடாது என் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதேபோல், வா வாத்தியார் திரைப்படத்தை அனைத்து ஓடிடி தளங்களிலும் வெளியிட அனுமதி இல்லை.
திவாலான தொழிலதிபர் அர்ஜூன்லால் சுந்தர் தாஸ் என்பவரிடம் வாங்கிய கடனை திருப்பி செலுத்தாமல் படத்தை வெளியிடக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், நாளை இப்படம் வெளியாக வா வாத்தியார் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
- பிறந்தநாளில் வழக்கமாக ரஜினி சென்னையில் இருப்பதை தவிர்த்து வருகிறார்.
- பிறந்தநாளில் ரஜினியை பார்ப்பதற்காக தமிழகம் முழுவதும் இருந்து ரசிகர்கள் வருகை தந்து ஏமாற்றமடைந்து வருகின்றனர்.
தமிழ் திரை உலகில் 50 ஆண்டுகளாக ஒரு சகாப்தமாக திகழ்ந்து வருபவர் ரஜினிகாந்த்.
எத்தனை நடிகர்கள் வந்தாலும் ஒட்டு மொத்த தமிழகத்திலும் ரஜினி என்ற பெயர் மந்திர சொல்லாக ஒலித்து வருகிறது. அவரது தனி ஸ்டைல்தான், ரஜினியின் தாரக மந்திரம். இந்த மந்திரம் தான் அவரை சூப்பர் ஸ்டாராக உயர்த்தியது.
இத்தனை ஆண்டு காலம் திரை உலகில் தனி சகாப்தத்தை உருவாக்கி வரும் ரஜினி நடிப்பில் படம் எப்போது வரும் என காத்திருக்கும் ரசிகர்கள், தமிழகம் மட்டுமின்றி சர்வதேச அளவில் காத்திருக்கின்றனர்.
அந்த அளவுக்கு சினிமாவில் ஒரு மாயாஜாலத்தை உருவாக்கி உள்ளார் ரஜினிகாந்த். இது நான் சேர்த்த கூட்டம் அல்ல. இது தானாக சேர்ந்த கூட்டம் என ரஜினியின் கம்பீர குரல் தமிழ் சினிமா ரசிகர்களை ஆட்டுவித்து வருகிறது.
இந்நிலையில் ரஜினி தனது 75-வது பிறந்தநாளை நாளை கொண்டாடுகிறார். அவரது பிறந்த நாளை ரஜினி ரசிகர்கள் திருவிழாவாக கொண்டாட இருக்கின்றனர்.
பிறந்தநாளில் வழக்கமாக ரஜினி சென்னையில் இருப்பதை தவிர்த்து வருகிறார். பிறந்தநாளில் ரஜினியை பார்ப்பதற்காக தமிழகம் முழுவதும் இருந்து ரசிகர்கள் வருகை தந்து ஏமாற்றமடைந்து வருகின்றனர்.
நாளை 75-வது பிறந்த நாள் என்பதால் ரஜினி ரசிகர்களை சந்திப்பார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவி வருகிறது. இது தொடர்பாக ரஜினி தரப்பில் விசாரித்த போது, 'ரஜினிகாந்த் பிறந்தநாளின் போது எப்போதும் சென்னையில் இருப்பதில்லை. அதுபோல் அவரது பிறந்தநாளான நாளையும் ரஜினி சென்னையில் இல்லை எனவும், ரசிகர்களை சந்திக்க வாய்ப்பில்லை எனவும் தெரிவித்தனர்.
திருப்பரங்குன்றம் பகுதியில் வாழ்ந்து வரும் நாயகன் நிஷாந்த், தனது மாமா லொள்ளு சபா மாறன் நண்பர்கள் பால சரவணன், கும்கி அஸ்வின் ஆகியோருடன் திருச்சிக்கு வேலைக்கு செல்கிறார். அங்கு நாயகி காயத்ரியை பார்த்தவுடன் காதலில் விழுகிறார். பின்னர் அவருடன் பழக்கம் ஏற்பட்டு அடிக்கடி சந்திக்கிறார்.
ஒரு கட்டத்தில் நிஷாந்த் காதலை சொல்லும் போது, காயத்ரி மறுக்கிறார். காதல் தோல்வியை தாங்க முடியாத நிஷாந்த் தற்கொலைக்கு முயற்சி செய்கிறார். அப்போது ஆமானுஷ்ய சக்தி கொண்ட மொட்டை ராஜேந்திரன், நிஷாந்த் தற்கொலையை தடுக்கிறார்.
இறுதியில் நிஷாந்த், காயத்ரியுடன் இணைந்தாரா? மொட்டை ராஜேந்திரன் யார்? நிஷாந்த் தற்கொலையை மொட்டை ராஜேந்திரன் தடுக்க காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் நிஷாந்த் ரூசோ காதல், ஆக்ஷன், காமெடி என நடிப்பில் ஸ்கோர் செய்து இருக்கிறார். நாயகியாக நடித்து இருக்கும் காயத்ரி அழகாக வந்து அளவான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
மொட்டை ராஜேத்திரன், பால சரவணன், லொள்ளு சபா மாறன், கும்கி அஸ்வின் ஆகியோர் ஆங்காங்கே சிரிக்க வைத்து இருக்கிறார்கள். அர்ஷத் வில்லத்தனத்தில் மிரட்ட முயற்சி செய்து இருக்கிறார்.
இயக்கம்
காதல் கதையை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் விக்னேஷ் பாண்டியன். இதில் பேண்டஸி, காமெடி கலந்த திரைக்கதை அமைத்திருக்கிறார். முதல் பாதி காதல் இரண்டாம் பாதி பேண்டஸி என திரைக்கதையை நகர்த்திருக்கிறார். காமெடி காட்சிகள் பெரிதாக எடுபடவில்லை. முதல் பாதி திரைக்கதை வழக்கமான சினிமா தனம் போல் அமைந்திருப்பது படத்திற்கு பலவீனம்.
இசை
சமந்த் நாக் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது.
ஒளிப்பதிவு
ஜோன்ஸ் வி ஆனந்த் ஒளிப்பதிவு திரைக்கதை ஓட்டத்திற்கு பலம் சேர்த்து இருக்கிறது.
ரேட்டிங்- 2/5
- இப்படத்திற்கு ரஞ்சின் ராஜ் இசையமைத்துள்ளார்.
- திகில் மற்றும் நகைச்சுவை கலந்து இப்படம் உருவாகி உள்ளது.
2023-ம் ஆண்டு வெளியான 'பார்க்கிங்' படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக சிறந்த துணை நடிகருக்கான விருதை வென்ற எம்.எஸ்.பாஸ்கர், தற்போது குட்டி ஸ்டோரிஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் புவனேஷ் சின்னசாமி தயாரிக்கும் 'கிராண்ட் பாதர்' என்ற படத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்தை பிராங் ஸ்டார் ராகுல் இயக்குவதுடன், எம்.எஸ்.பாஸ்கருடன் இணைந்து முதன்மை கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். மேலும், இவர்களுடன் ஸ்மீகா, அருள் தாஸ், முனீஸ்காந்த், ஸ்ரீநாத், சிவா அரவிந்த், பிரியதர்ஷினி, அஞ்சலி ராவ், அபிநயா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ரஞ்சின் ராஜ் இசையமைத்துள்ளார். திகில் மற்றும் நகைச்சுவை கலந்து இப்படம் உருவாகி உள்ளது.
இந்த நிலையில், 'கிராண்ட் பாதர்' படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்ததாக படக்குழு தெரிவித்துள்ளது. இதனால் இனி வரும் நாட்களில் இப்படம் தொடர்பான ஃபர்ஸ்ட் லுக், டிரெய்லர், வெளியீட்டு தேதி உள்ளிட்டவை வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.








