என் மலர்tooltip icon

    கார்

    நிசான் மேக்னைட் காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடல் இந்திய விற்பனையில் புது மைல்கல் எட்டியுள்ளது.


    நிசான் நிறுவனத்தின் மேக்னைட் எஸ்.யு.வி. மாடல் இந்தியாவில் 30 ஆயிரம் யூனிட்கள் வினியோகம் செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட நிசான் மேக்னைட் மாடலை வாங்க இதுவரை சுமார் 72 ஆயிரத்திற்கும் அதிக யூனிட்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.

    விற்பனை மைல்கல்லை கொண்டாடும் வகையில், மேக்னைட் எஸ்.யு.வி. மாடலின் 30 ஆயிரத்து யூனிட்டை நிசான் நிறுவன மூத்த அதிகாரி குயிலாம் கார்டியர் வாடிக்கையாளரிடம் வழங்கினார். நிசான் மேக்னைட் மாடல் சி.எம்.எப். ஏ பிளஸ் பிளாட்பார்மில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. 

     நிசான் மேக்னைட்

    இந்த பிரிவில் மிகவும் எடை குறைந்த கார் என்ற போதிலும் நிசான் மேக்னைட் ஏ.எஸ்.இ.ஏ.என். என்.சி.ஏ.பி. பாதுகாப்பு சோதனையில் நான்கு நட்சத்திர குறியீடுகளை பெற்று அசத்தியது. நிசான் மேக்னைட் மாடல் 1 லிட்டர் பெட்ரோல் என்ஜின், டர்போ சார்ஜ் செய்யப்பட்ட என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
    வோக்ஸ்வேகன் நிறுவனம் இந்திய சந்தையில் தனது கார் மாடல் விலையை திடீரென உயர்த்தி இருக்கிறது.


    வோக்ஸ்வேகன் நிறுவனத்தின் டைகுன் எஸ்.யு.வி. மாடல் விலை இந்தியாவில் உயர்த்தப்பட்டு இருக்கிறது. இந்தியாவில் வோக்ஸ்வேகன் டைகுன் மாடல்- கம்ஃபர்ட்லைன், ஹைலைன், டாப்லைன், ஜிடி மற்றும் ஜிடி பிளஸ் என ஐந்து வேரியண்ட்களில் கிடைக்கிறது. 

    இவற்றில் கம்ஃபர்ட்லைன் வேரியண்ட் விலை ரூ. 5200 உயர்த்தப்பட்டு இருக்கிறது. மற்ற வேரியண்ட்களின் விலை ரூ. 4300 உயர்த்தப்பட்டுள்ளது. முன்னதாக வோக்ஸ்வேகன் டைகுன் மாடல் இந்திய சந்தையில் 18 ஆயிரத்திற்கும் அதிக முன்பதிவுகளை கடந்ததாக வோக்ஸ்வேகன் அறிவித்து இருந்தது. 

    வோக்ஸ்வேகன் டைகுன்

    இந்தியாவில் புதிய வோக்ஸ்வேகன் காரை பெற குறைந்தபட்சம் இரண்டு மாதங்களுக்கும் மேல் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. வோக்ஸ்வேகன் டைகுன் மாடல் எம்.கியூ.பி. ஏ.ஒ. ஐ.என். பிளாட்பார்மில் உருவாகி இருக்கிறது. 

    டைகுன் மாடல் 1 லிட்டர் மற்றும் 1.5 லிட்டர் டி.எஸ்.ஐ. என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவை 147 பி.ஹெச்.பி. திறன், 178 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இதன் 1.5 லிட்டர் என்ஜின் 148 பி.ஹெச்.பி. திறன், 250 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.
    மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் புதிய ஏ.எம்.ஜி. மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.


    மெகர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ஏ.எம்.ஜி. ஏ45 எஸ் காரை அறிமுகம் செய்தது. இந்தியாவில் புதிய பென்ஸ் கார் விலை ரூ. 79.50 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த மாடல் சி.பி.யு. முறையில் இந்தியா கொண்டுவரப்படுகிறது. 

    புதிய 2021 மெர்சிடிஸ் ஏ.எம்.ஜி. ஏ45 எஸ் மாடலில் 2 லிட்டர், 4 சிலிண்டர், டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 416 பி.ஹெச்.பி. திறன், 500 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 8 ஸ்பீடு டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. 

     மெர்சிடிஸ் ஏ.எம்.ஜி. ஏ45 எஸ்

    புதிய மெர்சிடிஸ் கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 3.9 நொடிகளில் எட்டிவிடும். மேலும் இந்த கார் மணிக்கு அதிகபட்சம் 270 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் வகையில் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது. மெர்சிடிஸ் ஏ.எம்.ஜி. மாடலில் எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள், அகலமான ஏர் இன்டேக், 19 இன்ச் அலாய் வீல்கள், புதிய எல்.இ.டி. டெயில் லைட்கள் உள்ளன.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அல்ட்ரோஸ் எக்ஸ்.இ. பிளஸ் வேரியண்ட் இந்தியாவில் அறிமுகமாகி இருக்கிறது.


    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அல்ட்ரோஸ் எக்ஸ்.இ. பிளஸ் வேரியண்டை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டுவந்த எக்ஸ்.எம். வேரியண்ட் நீக்கப்பட்டு அதற்கு மாற்றாக புதிதாக எக்ஸ்.இ. வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை ரூ. 6.34 லட்சத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 7.54 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    புதிய எக்ஸ்.இ. பிளஸ் வேரியண்ட் டாடா அல்ட்ரோஸ் பேஸ் வேரியண்ட் எக்ஸ்.இ. காரின் மேல் அல்ட்ரோஸ் எக்ஸ்.எம். பிளஸ் வேரியண்டின் கீழ் நிலைநிறுத்தப்பட்டு இருக்கிறது. புதிய எக்ஸ்.இ. பிளஸ் மாடல் விலை எக்ஸ்.எம். பிளஸ் வேரியண்டை விட ரூ. 15 ஆயிரம் குறைவு ஆகும். 

     டாடா அல்ட்ரோஸ்

    டாடா அல்ட்ரோஸ் எக்ஸ்.இ. பிளஸ் மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் பெட்ரோல் என்ஜின் 85 பி.ஹெச்.பி. திறன், 113 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. டீசல் என்ஜின் 89 பி.ஹெச்.பி. திறன், 200 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.
    பி.எம்.டபிள்யூ. நிறுவனம் இந்திய சந்தையில் புதிய 2 சீரிஸ் கிரான் கூப் பிளாக் ஷேடோ எடிஷனை அறிமுகம் செய்தது.


    பி.எம்.டபிள்யூ. குழுமம் இந்திய சந்தையில் 2 சீரிஸ் கிரான் கூப் பிளாக் ஷேடோ எடிஷன் காரை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய 220ஐ பிளாக் ஷேடோ எடிஷன் விலை ரூ. 43.50 லட்சம், எக்ஸ்-ஷோரூம் ஆகும். 

    இந்த கார் சென்னையில் உள்ள பி.எம்.டபிள்யூ. ஆலையில் உற்பத்தி செய்யப்பட்டு பி.எம்.டபிள்யூ. ஆன்லைன் தளத்தில் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த காரின் விலை எம் ஸ்போர்ட் லைன் வேரியண்டை விட ரூ. 1.6 லட்சம் அதிகம் ஆகும். இதன் ஆல்பைன் வைட் மற்றும் பிளாக் சபையர் நிற வேரியண்ட்கள் மொத்தத்தில் 24 யூனிட்களே விற்பனை செய்யப்பட இருக்கின்றன.

     பி.எம்.டபிள்யூ. 220ஐ பிளாக் ஷாடோ எடிஷன்

    பி.எம்.டபிள்யூ. 2 சீரிஸ் கிரான் கூப் பிளாக் ஷேடோ எடிஷன் மாடலில் 2 லிட்டர், 4 சிலிண்டர், டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 189 பி.ஹெச்.பி. திறன், 280 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 7 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
    ஸ்கோடா நிறுவனத்தின் குஷக் மிட்-சைஸ் எஸ்.யு.வி. மாடல் இந்திய முன்பதிவில் புது மைல்கல் எட்டியுள்ளது.


    ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனம் இந்திய ஆட்டோமொபைல் சந்தையின் மிட்-சைஸ் எஸ்.யு.வி. பிரிவில் குஷக் மாடலை அறிமுகம் செய்து களமிறங்கியது. இந்தியாவில் அறிமுகமாகி நான்கு மாதங்களில் குஷக் எஸ்.யு.வி. மாடல் முன்பதிவில் 15 ஆயிரம் யூனிட்களை கடந்துள்ளது. 

    ஸ்கோடா நிறுவனத்தின் இந்தியா 2.0 திட்டத்தின் கீழ் அறிமுகமான முதல் மாடல் குஷக் ஆகும். ஸ்கோடா குஷக் கேண்டி வைட், பிரிலியண்ட் சில்வர், ஹனி ஆரஞ்சு, கார்பன் ஸ்டீல் மற்றும் டொர்னாடோ ரெட் போன்ற நிறங்களில் கிடைக்கிறது. இந்த எஸ்யுவி 1 லிட்டர் டி.எஸ்.ஐ. மற்றும் 1.5 லிட்டர் டி.எஸ்.ஐ. என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

     ஸ்கோடா குஷக்

    இதன் 1 லிட்டர் டி.எஸ்.ஐ. என்ஜினுடன் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. 1.5 லிட்டர் டி.எஸ்.ஐ. என்ஜினுடன் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 7 ஸ்பீடு டி.எஸ்.ஜி. ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
    மஹிந்திரா நிறுவனம் தனது கார் மாடல்களுக்கு அசத்தலான சலுகை மற்றும் தள்ளுபடி வழங்குகிறது.


    மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் நவம்பர் மாதத்திற்கான சலுகை விவரங்களை அறிவித்து இருக்கிறது. அந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதளத்தின் படி மஹிந்திராவின் எஸ்.யு.வி. மாடல்களுக்கு அதிகபட்சம் ரூ. 81,500 வரையிலான சலுகை மற்றும் தள்ளுபடி வழங்கப்படுகிறது. 

    இவை தள்ளுபடி, எக்சேன்ஜ் பலன்கள், கார்ப்பரேட் தள்ளுபடி மற்றும் கூடுதல் சலுகை வடிவில் வழங்கப்படுகின்றன. இந்த சலுகைகள் நவம்பர் 30 ஆம் தேதி வரை வழங்கப்படுகிறது. சலுகை பலன்கள் ஒவ்வொரு விற்பனை மையத்திற்கு ஏற்ப வேறுபடும். மஹிந்திரா தார், பொலிரோ நியோ மற்றும் எக்ஸ்.யு.வி.700 மாடல்களுக்கு எந்த பலன்களும் வழங்கப்படவில்லை.

     மஹிந்திரா கார்

    கே.யு.வி.100 என்.எக்ஸ்.டி. மாடலுக்கு ரூ. 61,055, மஹிந்திரா ஸ்கார்பியோவிற்கு ரூ. 32,320, அல்டுராஸ் ஜி4 மாடலுக்கு ரூ. 81,500, எக்ஸ்.யு.வி.300 மாடலுக்கு ரூ. 49 ஆயிரம், மஹிந்திரா மராசோ மாடலுக்கு ரூ. 40,200, பொலிரோ மாடலுக்கு ரூ. 13 ஆயிரம் வரையிலான சலுகைகள் வழங்கப்படுகின்றன.
    போர்ஷ் நிறுவனத்தின் புதிய டேகேன் எலெக்ட்ரிக் கார் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.


    ஜெர்மனி நாட்டு ஆடம்பர கார் உற்பத்தியாளரான போர்ஷ் முழுக்க எலெக்ட்ரிக் திறன் கொண்டு இயங்கும் டேகேன் மாடலை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய போர்ஷ் டேகேன் இ.வி. மாடல் விலை ரூ. 1,50,28,000 ஆகும். டேகேன் மற்றும் டேகேன் கிராஸ் டூரிஸ்மோ என இரு மாடல்களும் இந்தியாவில் அறிமுகமாகி இருக்கின்றன.

    புதிய போர்ஷ் டேகேன் ஜெர்மன் கார் உற்பத்தியாளரின் முதல் எலெக்ட்ரிக் வாகனம் ஆகும். புது டேகேன் எலெக்ட்ரிக் கார்- டேகேன், 4எஸ், டர்போ மற்றும் டர்போ எஸ் என நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது. நான்கு வேரியண்ட்களும் 2 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் மற்றும் ரேன்ஜ், ஸ்போர்ட், ஸ்போர்ட் பிளஸ் மற்றும் இண்டிவிஜூவல் போன்ற டிரைவிங் மோட்களை கொண்டிருக்கிறது. 

     போர்ஷ் டேகேன்

    டேகேன் பேஸ் மாடலில் ஒற்றை எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இது 469 பி.ஹெச்.பி. திறன், 357 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த எண்ட்ரி-லெவல் மாடல் முழு சார்ஜ் செய்தால் 484 கிலோமீட்டர் வரை செல்லும்.
    மஹிந்திரா நிறுவனத்தின் புதிய எக்ஸ்.யு.வி.700 மாடல் இந்திய சந்தையில் தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.


    இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளரான மஹிந்திரா தனது புதிய எக்ஸ்.யு.வி.700 மாடல் முன்பதிவில் புது மைல்கல் எட்டியதாக அறிவித்தது. இந்தியாவில் அறிமுகமான ஒரே மாதத்தில் புதிய எக்ஸ்.யு.வி.700 மாடல் முன்பதிவில் 70 ஆயிரத்திற்கும் அதிக யூனிட்களை கடந்துள்ளது.

    முன்னதாக மஹிந்திரா எக்ஸ்.யு.வி.700 மாடலின் முதல் யூனிட் பாராலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற சுனில் அன்டிலுக்கு வினியோகம் செய்யப்பட்டது. தற்போது மஹிந்திரா நிறுவனம் எக்ஸ்.யு.வி.700 பெட்ரோல் வேரியண்ட்களை மட்டும் வினியோகம் செய்து வருகிறது. இம்மாத இறுதியில் டீசல் வேரியண்ட்களின் வினியோகம் துவங்குகிறது.

     மஹிந்திரா எக்ஸ்.யு.வி.700

    மஹிந்திரா நிறுவனம் அடுத்த ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதிக்குள் நாடு முழுக்க 14 ஆயிரம் எக்ஸ்.யு.வி.700 யூனிட்களை வினியோகம் செய்ய இலக்கு நிர்ணயித்து இருப்பதாக அறிவித்துள்ளது. இந்தியாவில் புதிய மஹிந்திரா எக்ஸ்.யு.வி.700 நான்கு வேரியண்ட்கள், இரண்டு என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

    ஹோண்டா நிறுவனம் தனது கார் மாடல்களுக்கு அசத்தலான சலுகைகளை அறிவித்து இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம் வாடிக்கையாளர்களை கவரும் வகையில், தி கிரேட் ஹோண்டா பெஸ்ட் எனும் பெயரில் சிறப்பு திட்டத்தை அறிவித்து இருக்கிறது. இந்த திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 38,600 மதிப்பிலான சலுகை மற்றும் பலன்கள் வழங்கப்படுகிறது.

    இந்த சலுகைகள் ஹோண்டா அமேஸ், ஜாஸ், புதிய சிட்டி, 4-ம் தலைமுறை சிட்டி மற்றும் டபிள்யூ.ஆர்.வி. போன்ற மாடல்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த சலுகைகள் நவம்பர் 30 ஆம் தேதி அல்லது ஸ்டாக் இருக்கும் வரை வழங்கப்படும் என ஹோண்டா அறிவித்து இருக்கிறது. 

     ஹோண்டா சலுகை

    சிறப்பு திட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்ட சலுகைகள்- தள்ளுபடி, லாயல்டி போனஸ், எக்சேன்ஜ் தள்ளுபடி வடிவில் வழங்கப்படுகின்றன. ஹோண்டா அமேஸ் பேஸ்லிப்ட் மாடலுக்கு ரூ. 15 ஆயிரம் வரையிலான சலுகைகள் வழங்கப்படுகின்றன. ஹோண்டா ஜாஸ் மாடலுக்கு ரூ. 36,147 வரையிலான பலன்கள் வழங்கப்படுகிறது.

    ஹோண்டா டபிள்யூ.ஆர்.வி. மாடலுக்கு ரூ. 29,058 வரையிலான சலுகைகளும், 4-ம் தலைமுறை ஹோண்டா சிட்டி மாடலுக்கு ரூ. 38,608 வரையிலான பலன்களும் வழங்கப்படுகின்றன.
    எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய ஆஸ்டர் எஸ்.யு.வி. மாடல் வினியோக விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


    எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் ஆஸ்டர் எஸ்.யு.வி. மாடல் வினியோகத்தை துவங்கியது. முன்னதாக இந்த மாடல் ரூ. 9.78 லட்சம், எக்ஸ்-ஷோரூம் விலையில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. கடந்த வாரம் இந்த காருக்கான முன்பதிவு துவங்கியது. முன்பதிவு துவங்கிய முதல் நாளிலேயே 5 ஆயிரம் யூனிட்கள் விற்றுத்தீர்ந்தன.

    இந்த நிலையில், முன்பதிவு செய்யப்பட்ட 5 ஆயிரம் யூனிட்களில் முதல் 500 யூனிட்கள் ஏற்கனவே வினியோகம் செய்யப்பட்டன. இந்த ஆண்டு இறுதிக்குள் 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் யூனிட்களை வினியோகம் செய்ய எம்ஜி மோட்டார் திட்டமிட்டுள்ளது.

     எம்ஜி ஆஸ்டர்

    புதிய ஆஸ்டர் மாடலில் 1.5 லிட்டர் பெட்ரோல், 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இவை முறையே 110 பி.எஸ். திறன், 144 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசை மற்றும் 140 பி.எஸ். திறன், 220 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகின்றன.

    எம்ஜி ஆஸ்டர் மாடலின் அனைத்து வேரியண்ட்களிலும் 27 பாதுகாப்பு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் டாப் எண்ட் மாடல்களில் 49 பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன.
    மாருதி சுசுகி நிறுவனம் தனது புதிய செலரியோ மாடலினை அடுத்த வாரம் இந்தியாவில் அறிமுகம் செய்கிறது.


    மாருதி சுசுகி நிறுவனம் புதிய செலரியோ மாடலுக்கான முன்பதிவை துவங்கி இருக்கிறது. இந்தியாவில் புதிய செலரியோ மாடல் நவம்பர் 10 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த நிலையில், புதிய மாடலுக்கான முன்பதிவை மாருதி சுசுகி துவங்கி இருக்கிறது. 

    மாருதி சுசுகியின் புதிய செலரியோ மாடல் முன்பதிவு கட்டணம் ரூ. 11 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய மாருதி சுசுகி செலரியோ மாடலில் கே சீரிஸ் டூயல் ஜெட், டூயல் விவிடி என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜினுடன் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் ஏ.எம்.டி. யூனிட் வழங்கப்படுகிறது. 

     மாருதி சுசுகி செலரியோ

    இந்த மாடலில் புதிய கிரில், ஹாலோஜன் ஹெட்லேம்ப், பிளாக் அலாய் வீல்கள், புதிய பம்ப்பர், டெயில் லைட்கள் உள்ளன. காரின் உள்புறம் பெரிய தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், என்ஜின் ஸ்டார்ட்-ஸ்டாப் பட்டன், புதிய ஏ.எம்.டி. லீவர் வழங்கப்படுகிறது.
    ×