என் மலர்tooltip icon

    கார்

    மாருதி சுசுகி நிறுவனத்தின் புதிய செலரியோ மாடல் முன்பதிவில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.


    மாருதி சுசுகி நிறுவனத்தின் அடுத்த தலைமுறை செலரியோ மாடலின் விற்பனை கடந்த மாதம் துவங்கியது. இதுவரை புதிய செலரியோ மாடலை வாங்க சுமார் 15 ஆயிரத்திற்கும் அதிகமானோர் முன்பதிவு செய்துள்ளனர். இந்தியாவில் புதிய செலரியோ மாடலுக்கான முன்பதிவு நவம்பர் 2 ஆம் தேதி துவங்கியது.

    இதுவரை 15 ஆயிரத்திற்கும் அதிக முன்பதிவுகள் செய்யப்பட்டுள்ளன. முன்பதிவு துவங்கிய முதல் இரு மாதங்களில் ஒவ்வொரு மாதமும் 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் யூனிட்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. தற்போது இந்த காரை வாங்க முன்பதிவு செய்பவர்கள் குறைந்தபட்சம் 12 வாரங்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

     மாருதி சுசுகி செலரியோ

    உதிரிபாகங்கள் குறைபாடு காரணமாக மாருதி சுசுகி நிறுவனத்தின் மாதாந்திர உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 2021-இல் மட்டும் மாருதி சுசுகியின் உற்பத்தி 60 சதவீதம் சரிவடைந்துள்ளது. தற்போது மாருதி சுசுகி கார்களுக்கான காத்திருப்பு காலம் 9 முதல் 12 வாரங்கள் வரை இருக்கிறது. சி.என்.ஜி. மாடல்களுக்கான காத்திருப்பு காலம் 17 முதல் 18 வாரங்கள் வரை இருக்கிறது.
    ஆடி நிறுவனத்தின் புதிய 2022 கியூ7 மாடல் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    ஆடி இந்தியா நிறுவனம் 2022 ஆடி கியூ7 எஸ்.யு.வி. மாடல் உற்பத்தியை இந்தியாவில் துவங்கி இருக்கிறது. புதிய ஆடி கார் உற்பத்தி ஔரங்காபாத் ஆலையில் துவங்கியுள்ளது. இந்த கார் அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

    இந்திய சந்தையில் ஆடி நிறுவனத்தின் மொத்த விற்பனையில் 45 சதவீதம் கியூ சீரிஸ் மாடல்கள் ஆகும். புதிய கியூ7 முன்புறம் மேட்ரிக்ஸ் எல்.இ.டி. ஹெட்லைட் யூனிட்கள், பெரிய ஏர் இன்டேக், குரோம் கார்னிஷ், பின்புறமும் எல்.இ.டி. லைட்டிங் உள்ளது.

     2022 ஆடி கியூ7

    ஆடி கியூ7 பல்வேறு ஆடம்பர வசதிகள் நிறைந்த பிரீமியம் மாடல் ஆகும். அம்சங்களை பொருத்தவரை புதிய கியூ7 மாடலில் ரியர்-சைடு ஏர்பேக், ஹீடெட் ஓ.ஆர்.வி.எம்.-கள், மேம்பட்ட டையர் பிரெஷர் மாணிட்டரிங் சிஸ்டம் மற்றும் அடாப்டிவ் குரூயிஸ் கண்ட்ரோல் உள்ளது.

    2022 ஆடி கியூ 7 மாடலில் மேட்ரிக்ஸ் எல்.இ.டி. ஹெட்லைட், டெயில்-லைட்கள், பெரிய ஏர் இன்டேக், வட்ட வடிவ வீல் ஆர்ச்கள் உள்ளன. சர்வதேச சந்தையில் புதிய ஆடி கியூ7 மாடல் ஆறு வேரியண்ட்களில் கிடைக்கிறது. புதிய மாடல் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது.
    ஜீப் இந்தியா நிறுவனம் தனது காம்பஸ் எஸ்.யு.வி. மாடல் விலையை இந்தியாவில் உயர்த்தி இருக்கிறது.


    ஜீப் இந்தியா நிறுவனத்தின் காம்பஸ் எஸ்.யு.வி. மாடல் விலை இந்தியாவில் உயர்த்தப்பட்டது. முன்னதாக அக்டோபர் மாதம் ஜீப் காம்பஸ் விலை உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் இதன் விலை உயர்த்தப்பட்டு இருக்கிறது. இம்முறை காம்பஸ் மாடல் விலை ரூ. 58 ஆயிரம் வரை அதிகரித்து இருக்கிறது. 

    1.4 லிட்டர் பெட்ரோல் டி.சி.டி. என்ஜின் கொண்ட காம்பஸ் ஸ்போர்ட் மாடல் விலை ரூ. 58 ஆயிரம் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடல் தவிர அனைத்து பெட்ரோல் மற்றும் டீசல் வேரியண்ட்களின் விலை ரூ. 50 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. 

     ஜீப் காம்பஸ்

    ஜீப் காம்பஸ் மாடலில் 1.4 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதன் பெட்ரோல் என்ஜின் 161 பி.ஹெச்.பி. திறன், 250 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இதன் டீசல் என்ஜின் 168 பி.ஹெச்.பி. திறன், 350 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.
    மஹிந்திரா நிறுவனத்தின் புதிய எக்ஸ்.யு.வி.700 டீசல் மாடல்களின் வினியோக விவரங்களை பார்ப்போம்.


    மஹிந்திரா நிறுவனம் எக்ஸ்.யு.வி.700 மாடலை இந்தியாவில் ரூ. 11.99 லட்சம், எக்ஸ்-ஷோரூம் விலையில் அறிமுகம் செய்து. பின் அக்டோபர் மாதத்தில் எக்ஸ்.யு.வி.700 பெட்ரோல் வேரியண்ட் வினியோகம் துவங்கியது. தற்போது எக்ஸ்.யு.வி.700 டீசல் வேரியண்ட் வினியோகமும் துவங்கி இருப்பதாக மஹிந்திரா அறிவித்து இருக்கிறது.

    புதிய எக்ஸ்.யு.வி.700 டீசல் வேரியண்ட் 2.2 லிட்டர், எம்-ஹாக் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் இருவித டியூனிங்கில் வழங்கப்படுகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் யூனிட்கள் வழங்கப்பட்டு உள்ளன.

     மஹிந்திரா எக்ஸ்.யு.வி.700

    அம்சங்களை பொருத்தவரை மஹிந்திரா எக்ஸ்.யு.வி.700 மாடலில் எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், மல்டி-ஸ்லாட் கிரில், புதிய மஹிந்திரா லோகோ, ஃபாக் லைட்கள், பானரோமிக் சன்ரூஃப், ஸ்மார்ட் டோர் ஹேண்டில்கள், 18 இன்ச் அலாய் வீல்கள், ராப்-அரவுண்ட் எல்.இ.டி. டெயில் லைட்கள் உள்ளன.
    ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில் ஆறு புதிய எலெக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.


    ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் எலெக்ட்ரிக் கார் மாடல்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்த திட்டமிட்டு இருக்கிறது. புதிய எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்வது மட்டுமின்றி சார்ஜிங் உள்கட்டமைப்புகளை உருவாக்கவும் திட்டமிடுவதாக ஹூண்டாய் தெரிவித்துள்ளது.

    சந்தையில் கடும் போட்டியை ஏற்படுத்தும் விலையை நிர்ணயிக்க உள்நாட்டு உற்பத்தியில் ஹூண்டாய் அதிக கவனம் செலுத்துகிறது. இருச்சகர வாகனங்கள் பிரிவில் இந்திய எலெக்ட்ரிக் வாகன சந்தை கணிசமான வளர்ச்சியை பதிவு செய்து வருகிறது. எனினும், பயணிகள் வாகன பிரிவு அதிக வளர்ச்சியை இதுவரை பதிவு செய்யவில்லை.

     ஹூண்டாய் எலெக்ட்ரிக் கார்

    ஹூண்டாய் அறிமுகம் செய்ய இருக்கும் எலெக்ட்ரிக் கார்கள் பல்வேறு ஸ்டைல்களில் எஸ்.யு.வி. மற்றும் இதர பிரிவுகளில் விற்பனைக்கு வரும். இந்தியாவில் தற்போது ஹூண்டாய் நிறுவனம் ஒரு எலெக்ட்ரிக் கார் மாடலை விற்பனை செய்து வருகிறது.
    ஆடி நிறுவனத்தின் புதிய ஏ4 பிரீமியம் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.


    ஆடி இந்தியா நிறுவனம் புதிய ஏ4 ஆடம்பர செடான் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. ஏ4 பிரீமியம் என அழைக்கப்படும் புதிய ஆடி கார் விலை ரூ. 39.99 லட்சம், (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது பிரீமியம் பிளஸ் வேரியண்டை விட ரூ. 3.70 லட்சம் விலை குறைவு ஆகும். 

    2021 ஏ4 மாடல் தற்போது- பிரீமியம், பிரீமியம் பிளஸ் மற்றும் டெக்னாலஜி என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. பிரீமியம் வேரியண்டில் எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், எல்.இ.டி. டெயில் லைட்கள், கிளாஸ் சன்ரூஃப் வழங்கப்படுகிறது. 

     ஆடி ஏ4 பிரீமியம்

    புதிய காரில் ஆடி சவுண்ட் சிஸ்டம், 10 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், டிரைவ் செலக்ட், சிங்கில் சோன் கிளைமேட் கண்ட்ரோல், வயர்லெஸ் சார்ஜர், குரூயிசர் கண்ட்ரோல் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. 

    ஆடி ஏ4 பிரீமியம் மாடலில் 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 188 பி.ஹெச்.பி. திறன், 320 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
    ஹூண்டாய் நிறுவனம் தேர்வு செய்யப்பட்ட கார் மாடல்களுக்கு ரூ. 50 ஆயிரம் வரையிலான சிறப்பு சலுகை வழங்குகிறது.
     

    ஹூண்டாய் இந்தியா நிறுவனம் தேர்வு செய்யப்பட்ட கார் மாடல்களுக்கு ஆண்டு இறுதி சலுகைகளை அறிவித்து இருக்கிறது. இதுபற்றிய விவரங்கள் அந்நிறுவன வலைதளத்தில் பட்டியலிடப்பட்டு உள்ளது. அதன்படி தேர்வு செய்யப்பட்ட மாடல்களுக்கு ரூ. 50 ஆயிரம் வரையிலான சலுகைகள் வழங்கப்படுகிறது. 

    சிறப்பு சலுகைகள் சாண்ட்ரோ, ஆரா, ஐ20 மற்றும் கிராண்ட் ஐ10 நியோஸ் போன்ற மாடல்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த சலுகைகள் டிசம்பர் 31, 2021 வரை வழங்கப்படுகிறது. ஹூண்டாய் நிறுவனத்தின் அல்கசார், வென்யூ, வெர்னா, எலாண்ட்ரா, டக்சன், ஐ20 என் லைன் மற்றும் கோனா இ.வி. போன்ற மாடல்களுக்கு எந்த சலுகையும் வழங்கப்படவில்லை.

     ஹூண்டாய் கார்

    ஹூண்டாய் சாண்ட்ரோ மாடலுக்கு ரூ. 40 ஆயிரமும், ஆரா மாடலுக்கு ரூ. 50 ஆயிரமும், கிராண்ட் ஐ10 நியோஸ் மாடலுக்கு ரூ. 50 ஆயிரம் வரையிலான சலுகையும் வழங்கப்படுகிறது. 

    மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்தியாவில் தனது கார் மாடல்கள் விலையை உயர்த்துவதாக அறிவித்து இருக்கிறது.


    மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த ரீடெயில் ஆப் தி பியூச்சர் வியாபார பிரிவில் ஆயிரம் கார்களை விற்பனை செய்தது. இதனை கொண்டாடும் வகையில் ஆயிரமாவது யூனிட் சாவியை மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிர்வாக இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான மார்டின் ஸ்கிவென்க் வாடிக்கையாளரிடம் வழங்கினார். 

    மெர்சிடிஸ் பெனஸ் இந்தியா தேர்வு செய்யப்பட்ட கார் மாடல்கள் விலையை ஜனவரி 1, 2022 முதல் உயர்த்துகிறது. இம்முறை கார்களின் விலை இரண்டு சதவீதம் வரை உயர்த்தப்பட இருக்கிறது. கார் உற்பத்தி செலவீனங்கள் அதிகரிப்பதே விலை உயர்வுக்கு காரணமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. 

     மெர்சிடிஸ் பென்ஸ் கார்

    ஏற்கனவே பென்ஸ் கார்களை முன்பதிவு செய்தவர்கள், டிசம்பர் 31, 2021 வரை புதிய கார்களை முன்பதிவு செய்வோருக்கு தற்போதைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகின்றன. இதுதவிர பென்ஸ் ஜி.எல்.இ.400 மற்றும் ஜி.எல்.இ.400டி எஸ்.யு.வி.க்களை முன்பதிவு செய்தவர்களுக்கும் பழைய விலையிலேயே விற்பனை செய்யப்பட இருக்கின்றன.
    மாருதி சுசுகி நிறுவனம் தனது கார் மாடல்கள் விலையை மீண்டும் மாற்ற இருப்பதாக அறிவித்து இருக்கிறது.


    மாருதி சுசுகி இந்தியா லிமிடெட் நிறுவனம் தனது கார் மாடல்கள் விலையை உயர்த்துவதாக அறிவித்து இருக்கிறது. விலை உயர்வு ஜனவரி 2022 முதல் அமலுக்கு வருகிறது. விலை உயர்வு மாருதி சுசுகி நிறுவனத்தின் அனைத்து கார் மாடல்களுக்கும் பொருந்தும்.

    கார் உற்பத்தி செலவீனங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதை தொடர்ந்து கார் மாடல்கள் விலை உயர்த்தப்படுகிறது. கார் மாடல்களின் வேரியண்ட்களுக்கு ஏற்ப விலை உயர்வு நிர்ணயிக்கப்படுகிறது. தற்போது மாருதி சுசுகி நிறுவனம் இந்தியாவில் 14 கார்களை விற்பனை செய்து வருகிறது. 

     மாருதி சுசுகி கார்

    மாருதி சுசுகி எண்ட்ரி லெவல் மாடலான ஆல்டோ விலை ரூ. 3.15 லட்சம் என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் எக்ஸ்.எல்.6 மாடல் துவக்க விலை ரூ. 9.98 லட்சம் ஆகும். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    முன்னதாக மாருதி சுசுகி நிறுவனம் தனது கார் மாடல்கள் விலையை இந்த ஆண்டில் மட்டும் மூன்று முறை உயர்த்தியது குறிப்பிடத்தக்கது. தற்போது கார்களின் விலை எத்தனை சதவீதம் உயர்த்தப்பட இருக்கிறது என்பது குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
    நிசான் இந்தியா நிறுவனத்தின் புதுவரவு மாடலான மேக்னைட் விற்பனையில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.


    நிசான் இந்தியா நிறுவனம் விற்பனையில் தொடர்ந்து கணிசமான வளர்ச்சியை பதிவு செய்து வருகிறது. நவம்பர் 2021 மாதத்தில் மட்டும் நிசான் நிறுவனம் 2651 யூனிட்களை விற்பனை செய்து இருக்கிறது. இது 2020 நவம்பர் மாதத்துடன் ஒப்பிடும் போது 161 சதவீதம் அதிகம் ஆகும். 

    இதே காலக்கட்டத்தில் நிசான் நிறுவனம் 2654 வாகனங்களை இந்தியாவில் இருந்து மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து இருக்கிறது. அதன்படி வருடாந்திர அடிப்படையில் நிசான் இந்தியா நிறுவனத்தின் வாகன ஏற்றுமதி 152 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. 

     நிசான் கார்

    நிசான் மேக்னைட் மாடல் தொடர்ந்து அதிக யூனிட்கள் விற்பனையாகி வருகிறது. நவம்பர் 2021 மாதத்தில் மட்டும் நிசான் நிறுவனம் ஒட்டுமொத்தமாக 5605 யூனிட்களை விற்பனை செய்து இருக்கிறது.

    "அறிமுகம் செய்தது முதல் நிசான் மேக்னைட் மாடல் சுமார் 73 ஆயிரத்திற்கும் அதிக முன்பதிவுகளை பெற்று இருக்கிறது. இந்த மாடலை முன்பதிவு செய்தவர்களில் 31 சதவீதம் பேர் டிஜிட்டல் தளங்களில் முன்பதிவை மேற்கொண்டுள்ளனர். வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில், குறைந்த கட்டணத்தில் வழங்குவதோடு புதிதாக 18 சர்வீஸ் மையங்களை துவங்கி இருக்கிறோம்," என நிசான் மோட்டார் இந்தியா நிர்வாக இயக்குனர் ராகேஷ் ஸ்ரீவஸ்தவா தெரிவித்தார்.
    வோக்ஸ்வேகன் நிறுவனம் இந்தியாவில் தனது கார் மாடல் விற்பனையை திடீரென நிறுத்தி இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    வோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனம் டிகுவான் ஆல்ஸ்பேஸ் மாடல் விற்பனையை நிறுத்தியுள்ளது. இந்த மாடல் வோக்ஸ்வேகன் இந்தியா அதிகாரப்பூர்வ வலைதளத்தில் இருந்தும் நீக்கப்பட்டுவிட்டது. வோக்ஸ்வேகன் நிறுவனம் விரைவில் டிகுவான் பேஸ்லிப்ட் மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது.

    இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வந்த வோக்ஸ்வேகன் டிகுவான் ஆல்ஸ்பேஸ் ஒற்றை வேரியண்டில் கிடைத்தது. இந்த மாடலில் 2 லிட்டர், 4 சிலிண்டர், டி.எஸ்.ஐ. பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 7 ஸ்பீடு டி.எஸ்.ஜி. ஆட்டோமேடிக் யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 188 பி.ஹெச்.பி. திறன், 320 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

     வோக்ஸ்வேகன் டிகுவான் ஆல்ஸ்பேஸ்

    வோக்ஸ்வேகன் டிகுவான் ஆல்ஸேப்ஸ் மாடலின் விற்பனை நிறுத்தப்பட்ட நிலையில், விரைவில் பேஸ்லிப்ட் மாடல் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து இந்த மாடல் அடுத்த ஆண்டு வாக்கில் விற்பனைக்கு வரும் என தெரிகிறது.
    மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்.யு.வி.300 இ.வி. மாடல் இந்த பெயரில் விற்பனைக்கு அறிமுகமாகும் என கூறப்படுகிறது.


    மஹிந்திரா நிறுவனம் பல்வேறு பயணிகள் வாகனங்களை புதிதாக உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இதில் 13 புதிய கார்கள், எட்டு எலெக்ட்ரிக் வாகனங்கள் அடங்கும். இவை அனைத்தையும் 2027 ஆம் ஆண்டுக்குள் அறிமுகம் செய்ய மஹிந்திரா திட்டமிட்டுள்ளது.

    இந்த நிலையில், மஹிந்திரா எக்ஸ்.யு.வி.300 மாடலின் எலெக்ட்ரிக் வேரியண்ட் பற்றிய விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. இந்த எலெக்ட்ரிக் கார் எக்ஸ்.யு.வி.400 பெயரில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. 

     மஹிந்திரா எக்ஸ்.யு.வி.300

    மஹிந்திரா குழுமத்தின் ஆட்டோ மற்றும் ஃபார்ம் பிரிவு நிர்வாக இயக்குனர் ராஜேஷ் ஜெஜுரிக்கர் செய்தியாளர்களுடன் உரையாடும் போது எக்ஸ்.யு.வி.300 இ.வி. மாடல் எக்ஸ்.யு.வி.400 பெயரில் அறிமுகம் செய்வது பற்றி பரிசீலனை செய்யப்படுகிறது என தெரிவித்தார். எனினும், இதுபற்றிய இறுதி முடிவு எட்டப்படவில்லை.

    முன்னதாக எக்ஸ்.யு.வி.400 பெயரில் மிட்-சைஸ் எஸ்.யு.வி. மாடலை அறிமுகம் செய்ய மஹிந்திரா திட்டமிட்டது. இந்த மாடல் போர்டு நிறுவனத்தின் பி பிளாட்பார்மில் உருவாகும் என்றும் கூறப்பட்டது. பின் மஹிந்திரா மற்றும் போர்டு நிறுவனங்கள் இடையிலான கூட்டணி அமையாத காரணத்தால், எக்ஸ்.யு.வி.300 இ.வி. மாடலை எக்ஸ்.யு.வி.400 பெயரில் அறிமுகம் செய்வது பற்றிய ஆலோசனை நடைபெற்று வருகிறது.

    ×