என் மலர்
கார்
இந்த காரை வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு அனைத்து வித சேவைகளும் தொடர்ந்து வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரெனால்ட் நிறுவனத்தின் டஸ்டர் கார் இந்தியாவில் நல்ல வரவேற்பை பெற்றது. சந்தையில் 10 ஆண்டுகளை நிறைவு செய்ய இருந்த இந்த காரின் உற்பத்தியை ரெனால்ட் நிறுவனம் நிரந்தரமாக நிறுத்தியுள்ளது.
டாஸ்டர் காரின் மாடல் டிசைன் மற்றும் ஃபீச்சர்ஸ் ஆகியவை பழையதாகிவிட்டதே இதற்கு காரணம் என கூறப்படுகிறது. இருப்பினும் அந்நிறுவனம் டஸ்டர் காரின் 3-வது ஜெனரேஷனை இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது.
டஸ்டர் காரின் செகண்ட் ஜெனெரேஷன் உலகளவில் விற்பனையில் இருந்தாலும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படாமல் இருந்தது.
இந்நிலையில் தற்போது நேரடியாக 3-வது ஜெனரேஷன் டஸ்டர் கார் அறிமுகம் ஆகவுள்ளது.
முதல் ஜெனரேஷன் டஸ்டர் காரின் விற்பனை நிறுத்தப்பட்டாலும் ஏற்கனவே இந்த காரை வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு அனைத்து வித சேவைகளும் தொடர்ந்து வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் டீலர் ஸ்டாக்கில் முதல் ஜெனரேஷன் கார்கள் விற்பனையில் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த கார் ப்ரீமியம், ப்ரெஸ்டீஜ், ப்ரெஸ்டீஜ் ப்ளஸ், லக்சூரி, லக்சூரி ப்ளஸ் ஆகிய 5 ட்ரிம்களில் விற்பனைக்கு வந்துள்ளது.
தென் கொரிய கார் உற்பத்தி நிறுவனமான கியாவின் புதுவித எம்பிவி காரான கேரன்ஸ் இன்று விற்பனைக்கு வந்துள்ளது. இந்த காரில் பல வகையான சிறப்பு வசதிகள் இடம்பெற்றுள்ளன. இக்காருக்கான முன்பதிவு முன்பே தொடங்கப்பட்ட நிலையில் இதுவரை 19,089 பேர் இந்த காரை புக் செய்துள்ளனர். இந்த காரின் விலை வெளியாவதற்கு முன்னரே பலரும் புக்கிங் செய்தது குறிப்பிடத்தக்கது.
கியாவின் கேரன்ஸ் கார் ப்ரீமியம், ப்ரெஸ்டீஜ், ப்ரெஸ்டீஜ் ப்ளஸ், லக்சூரி, லக்சூரி ப்ளஸ் ஆகிய 5 ட்ரிம்களில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த அனைத்து வகைகளில் 6/7 இருக்கைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் இந்த கார் இம்பீரியல் ப்ளூ, மோஸ் பிரவுன் மற்றும் இன்டென்ஸ் சிவப்பு நிறத்துடனான ஸ்பார்க்கிளிங் சில்வர், அரோரா பிளாக் பியர்ல், கிராவிட்டி கிரே, கிளாசியர் ஒயிட் பியர்ல் மற்றும் கிளியர் ஆகிய வண்ணங்களில் கிடைக்கிறது.
கியா கேரன்ஸ் காரின் முகப்பு பகுதி, பின் பகுதியை அலங்கரிக்கும் விதமாக எல்இடி லைட்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. 16 இன்ச் மெஷின் கட் அலாய் வீல்கள், பாடி கிளாடிங் மற்றும் குரோம் பூச்சு கொண்ட ஆக்ஸசரிஸ்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் 64 நிறங்கள் கொண்ட ஆம்பியண்ட் லைட்டுகள், ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே இணைப்பு வசதிக் கொண்ட 10.25 இன்ச் அளவுள்ள தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 8 ஸ்பீக்கர்கள் கொண்ட போஸ் சவுண்ட் சிஸ்டம், ஓடிஏ மேப் உள்ளிட்ட அம்சங்களும் இதில் வழங்கப்பட்டுள்ளன.

பாதுகாப்பு அம்சங்களும் இந்த காரில் வழங்கப்பட்டுள்ளன. வலுவான ஸ்டீலை கொண்டு இந்த கார் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் ஆறு ஏர் பேக்குகள், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ், 360 டிகிரி திறன் கொண்ட கேமராக்கள், பிளைண்ட் ஸ்பாட் மானிட்டர், டவுன்ஹில் பிரேக்கிங் கன்ட்ரோல், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், டிராக்சன் கன்ட்ரோல், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் மற்றும் முன்-பின் பார்க்கிங் சென்சார்கள், டயர் பிரஷ்ஷர் மானிட்டர் சிஸ்டம் மற்றும் ஐசோஃபிக் சைல்டு சீட்ஸ் உள்ளிட்ட பல அம்சங்கள் இந்த காரில் இடம்பெற்றுள்ளன.
கொரோனா சூழலை கவனத்தில் கொண்டு வைரஸ் மற்றும் பாக்டீரியக்களை அழிக்கும் திறன் கொண்ட ஏர் ப்யூரிஃபையர், ஏர் வெண்டிலேட் வசதிக் கொண்ட முன் பக்க இருக்கைகள், ஸ்போர்ட் / ஈகோ / நார்மல் என 3 வகை டிரைவிங் மோட்கள், கார் இணைப்பு வசதி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.
காரின் பின்புறம் அமர்ந்துள்ள இருக்கையாளர்களும் செல்லும் வகையில் ஏசி அமைப்புகள், வசதியான இருக்கைகள், இருக்கையில் அட்ஜஸ்டபிள் ஹெட்ரெஸ்ட் வசதி ஆகியவையும் உள்ளன.
கியா கேரன்ஸ் 1.5 லிட்டர் பெட்ரோல், 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் மோட்டார் ஆகிய எஞ்ஜின் தேர்வுகளில் விற்பனைக்கு வந்துள்ளது.
இந்த காரின் அறிமுக எக்ஸ் ஷோரூம் விலை ரூ. 8.99 லட்சத்தில் தொடங்கி ரூ. 16.99 லட்சம் வரை உள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நெக்சான் இ.வி. மாடல் இந்திய விற்பனையில் புதிய மைல்கல் எட்டியுள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நெக்சான் இ.வி. மாடல் இரண்டு ஆண்டுகளுக்கு முன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. அறிமுகமானது முதல் நெக்சான் இ.வி. மாடல் இந்திய விற்பனையில் விற்பனையில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
டாடா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார் விற்பனையை தொடர்ந்து அதிகப்படுத்துவதில் நெக்சான் இ.வி. தினி இடம் பிடித்துள்ளது. அந்த வகையில் இந்திய சந்தை விற்பனையில் டாடா நெக்சான் இ.வி. மாடல் இதுவரை 13,500 யூனிட்களை கடந்துள்ளது. இந்திய சந்தையின் எலெக்ட்ரிக் கார் விற்பனையில் பயணிகள் வாகனங்கள் பிரிவில் அதிகம் விற்பனையாகும் மாடலாகவும் நெக்சான் இ.வி. இருக்கிறது.

நெக்சான் இ.வி. மாடலில் 30.2 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இதனை முழுமையாக சார்ஜ் செய்தால் 312 கிலோமீட்டர் வரை செல்ல முடியும். இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 9.14 நொடிகளில் எட்டி விடும். இதில் வழங்கப்பட்டு இருக்கும் மோட்டார் 127 பி.ஹெச்.பி. திறன், 245 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் நெக்சான் இ.வி. மாடல் இந்திய விற்பனையில் 10 ஆயிரம் யூனிட்களை கடந்தது. இந்திய எலெக்ட்ரிக் வாகனங்கள் பிரிவில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பயணிகள் வாகன பிரிவில் 70 சதவீதத்திற்கும் அதிக பங்குகளை கொண்டிருக்கிறது.
டாடா நெக்சான் இ.வி. மாடலை டி.சி. ஃபாஸ்ட் சார்ஜர் மூலம் சார்ஜ் செய்யும் போது ஒரு மணி நேரத்தில் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்திட முடியும். எனினும், வழக்கமான சார்ஜர் பயன்படுத்தும் போது 10 சதவீதத்தில் இருந்து 90 சதவீதம் வரை சார்ஜ் ஆக 8.30 மணி நேரம் ஆகும்.
மாருதி சுசுகி நிறுவனத்தின் மேம்பட்ட பலேனோ பேஸ்லிப்ட் மாடலின் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
மாருதி சுசுகி நிறுவனம் இந்திய சந்தையில் மேம்பட்ட பலேனோ பேஸ்லிப்ட் மாடலை வெளியிடும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. முந்தைய தகவல்களின் படி புதிய பலேனோ பேஸ்லிப்ட் மாடல் பிப்ரவரி மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்பட்டது. எனினும், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் புதிய பலேனோ பேஸ்லிபிட் மாடல் மார்ச் மாத வாக்கில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.
இதுதவிர புதிய பலேனோ மாடலுக்கான முன்பதிவும் துவங்கி நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இது மாருதி சுசுகி அறிவிப்பின்றி விற்பனையாளர்கள் தரப்பில் மேற்கொள்ளப்பட்ட அதிகாரப்பூர்வமற்ற முன்பதிவுகள் ஆகும். சமீபத்தில் இந்த மாடலின் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகின. அதன்படி பலேனோ பேஸ்லிப்ட் மாடலின் வெளிப்புறம் மாற்றப்பட்டு இருக்கிறது.

மேலும் புதிய மாடலில் அகலமான முன்புற கிரில், ரி-டிசைன் செய்யப்பட்ட ஹெட்லேம்ப் யூனிட்கள், புதிய அலாய் வீல்கள், ஸ்ப்லிட் எல்.இ.டி. டெயில் லேம்ப் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. கடந்த வாரம் மாருதி சுசுகி நிறுவனம் புதிய பலேனோ மாடலுக்கான உற்பத்தி பணிகளை துவங்கியது.
உபகரணங்களை பொருத்தவரை பெரிய தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, குரூயிஸ் கணட்ரோல், என்ஜின் ஸ்டார்ட் / ஸ்டாப் பட்டன், ஸ்டீரிங் வீல் மற்றும் பல்வேறு இதர அம்சங்கள் வழங்கப்படுகிறது. இந்த மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் மைல்டு ஹைப்ரிட் பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படலாம்.
டெஸ்லா நிர்வாக இயக்குனர் எலான் மஸ்க் இந்த வருடம் எலக்ட்ரிக் கார் வெளியிடப்படாது என கூறியதால், நிறுவனத்தின் மதிப்பு வெகுவாக குறைந்துள்ளது.
டெஸ்லா எலக்ட்ரிக் கார் தயாரிப்பில் முன்னணி நிறுவனமாக விளங்கி வருகிறது. அந்த நிறுவனத்தின் பங்குகள் அதிக அளவில் விற்பனை செய்யப்படுகிறது. அந்த நிறுவனத்தின் சி.இ.ஓ. எலான் மஸ்க், டெஸ்லா இந்த வருடம் எலக்ட்ரிக் கார்களை வெளியிடாது. ஆட்களுக்குப் பதிலாக வேலைக்கு ரோபோக்களை ஈடுபடுத்துவதில் கவனம் செலுத்துகிறோம் என்றார்.

எலான் மஸ்க் இவ்வாறு கூறி மறுநாளே நியூயார்க் பங்குச்சந்தையில் டெஸ்லாவின் மதிப்பு 12 சதவீதம் குறைந்தது. இதனால் அந்த நிறுவனத்தின் மதிப்பு 100 பில்லியன் டாலர் அளவிற்கு சரிந்துள்ளது.
இதையும் படியுங்கள்... சிறார்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி - ஆஸ்திரேலிய அரசு அங்கீகாரம்
ஆடி நிறுவனத்தின் புதிய 2022 கியூ7 மாடலின் இந்திய வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
ஆடி இந்தியா நிறுவனம் 2022 ஆடி கியூ7 மாடலை பிப்ரவரி 3 ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய கியூ7 ஃபேஸ்லிப்ட் வடிவில் இந்தியா வருகிறது. முன்னதாக இந்த மாடல் அறிமுகம் செய்யப்பட்டு, இதன் விவரங்கள் அறிவிக்கப்பட்டு விட்ட நிலையில், பிப்ரவரி 3 ஆம் தேதி இதன் விலை மற்றும் விற்பனை விவரங்கள் அறிவிக்கப்பட இருக்கின்றன.
இந்திய சந்தையில் இரண்டு ஆண்டுகள் இடைவெளி விட்டு மீண்டும் அறிமுகமாக இருக்கும் 2022 ஆடி கியூ7 மாடல் புது என்ஜின் கொண்டிருக்கிறது. புது மாடலின் வெளிப்புறம் மற்றும் உள்புறங்களில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன்படி இந்த மாடலில் புது டிசைன் கொண்ட முன்புறம் கொண்டிருக்கிறது. இத்துடன் ஆடி பாரம்பரிய டே-டைம் ரன்னிங் லைட்கள், புது டிசைன் கொண்ட கிரில், மேட்ரிக்ஸ் எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள் உள்ளன.
Unveiling the future. Get set for the #AudiQ7, arriving on 3rd February. #FutureIsAnAttitudepic.twitter.com/J28o15nFBD
— Audi India (@AudiIN) January 24, 2022
இத்துடன் புது பம்ப்பர், பெரிய ஏர் இன்டேக், புது அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன. பின்புறம் புதிய ஆடி கியூ7 மாடலில் டுவீக் செய்யப்பட்ட எல்.இ.டி. டெயில் லைட்கள் மற்றும் குரோம் ட்ரிம் செய்யப்பட்டுள்ளன. உள்புறத்தில் 10.1 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மெண்ட் ஸ்கிரீன் வழங்கப்பட்டுள்ளது. இரண்டாம் அடுக்கு இருக்கையில் உள்ள பயணிகளுக்காக டேப்லெட் போன்ற திரைகள் உள்ளன.
2022 ஆடி கியூ7 மாடலில் 3 லிட்டர் வி6 டர்போசார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 340 ஹெச்.பி. திறன், 500 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 6 நொடிகளில் எட்டிவிடும். மேலும் மணிக்கு அதிகபட்சம் 250 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கிறது.
மசிராட்டி நிறுவனத்தின் எம்.சி.20 சீரிஸ் மாடல்களின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
மசிராட்டி நிறுவனம் இந்த ஆண்டு மூன்று மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இவற்றில் முதல் மாடல் மசிராட்டி லெவாண்ட் ஹைப்ரிட் ஆகும். இது இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டு வாக்கில் அறிமுகமாகிறது.
இதைத் தொடர்ந்து எம்.சி.20 ஸ்போர்ட்ஸ்கார் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த மாடல் இந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதன் கன்வெர்டிபில் வேரியண்ட் இந்த ஆண்டு இறறுதியில் அறிமுகம் செய்யப்படுகிறது. முன்னதாக இந்த மாடலுக்கான டீசரை மசிராட்டி வெளியிட்டு இருந்தது.

புதிய மசிராட்டி எம்.சி.20 மாடல்களில் 3 லிட்டர், 6 சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 641 பி.ஹெச்.பி. திறன், 730 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 2.9 நொடிகளில் எட்டிவிடும்.
மாருதி சுசுகி நிறுவனம் இந்திய சந்தையில் தனது கார் மாடல்கள் விலையை உயர்த்தியது. இதன் விவரங்களை பார்ப்போம்.
2022 ஆண்டில் கார் மாடல்கள் விலையை உயர்த்துவதாக மாருதி சுசுகி அறிவித்து இருந்தது. அதன்படி தற்போது கார் மாடல்கள் விலை 1.7 சதவீதம் உயர்த்துகிறது. விலை உயர்வு நேற்று (ஜனவரி 15, 2022) அமலுக்கு வந்தது.
இந்திய சந்தையில் மாருதி சுசுகி தற்போது 14 மாடல்களை விற்பனை செய்து வருகிறது. இதுதவிர வரும் மாதங்களில் மேலும் சில புது மாடல்களை அறிமுகம் செய்ய மாருதி சுசுகி திட்டமிட்டுள்ளது. அதன்படி முதலில் செலரியோ சி.என்.ஜி. மாடலும் அடுத்த மாதம் பலேனோ ஃபேஸ்லிப்ட் மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது.

முன்னதாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாத வாக்கில் மாருதி சுசுகி நிறுவனம் தனது கார் மாடல்கள் விலையை 1.9 சதவீதம் உயர்த்தியது. கடந்த ஆறு மாதங்களில் மாருதி சுசுகி தனது கார் மாடல்களின் விலையை இரண்டாவது முறையாக உயர்த்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.
கியா இந்தியா நிறுவனம் தனது புதிய கேரன்ஸ் எம்.பி.வி. மாடலை விரைவில் வெளியிட இருக்கிறது.
கியா இந்தியா நிறுவனம் பிரீமியம் எம்.பி.வி. மாடலான கேரன்ஸ் முன்பதிவை இந்தியாவில் துவங்கியது. புதிய கேரன்ஸ் மாடலுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 25 ஆயிரம் ஆகும். முன்பதிவு கியா இந்தியா வலைதளம் மற்றும் அதிகாரப்பூர்வ விற்பனை மையங்களில் நடைபெற்று வருகிறது.
புதிய கேரன்ஸ் மாடல் கியா செல்டோஸ் மாடலில் பயன்படுத்தப்பட்ட பிளாட்பார்மிலேயே உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதில் ஸ்ப்லிட் ரக லைட்டிங், எல்.இ.டி. டி.ஆர்.எல்., மெல்லிய எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், அலாய் வீல்கள், பின்புறம் ராப்-அரவுண்ட் எல்.இ.டி. டெயில் லேம்ப்கள் உள்ளன.

கியா கேரன்ஸ் மாடலில் 1.4 லிட்டர், 4 சிலிண்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர், 4 சிலிண்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன், டர்போ பெட்ரோல் என்ஜினுடன் 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷனும் டீசல் என்ஜினுடன் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனும் வழங்கப்படுகிறது.
இந்திய சந்தையில் புதிய கேரன்ஸ் எம்.பி.வி. மாடல் ஹூண்டாய் அல்கசார், மாருதி சுசுகி எக்ஸ்.எல்.6, டாடா சபாரி, டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா மற்றும் மஹிந்திரா மராசோ போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. புதிய கேரன்ஸ் எம்.பி.வி. இந்தியாவில் கியா நிறுவனத்தின் நான்காவது மாடல் ஆகும்.
ஆட்டோமொபைல் லம்போர்கினி நிறுவனம் கடந்த ஆண்டு வாகன விற்பனையில் புது சாதனை படைத்துள்ளது.
ஆட்டோமொபைல் லம்போர்கினி நிறுவனம் வருடாந்திர விற்பனையில் 13 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து அசத்தி இருக்கிறது. சர்வதேச சந்தையில் லம்போர்கினி நிறுவனம் கடந்த ஆண்டு மட்டும் 8405 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. இது அந்நிறுவனத்தின் சிறப்பான வருடாந்திர விற்பனையாக அமைந்துள்ளது.
அமெரிக்கா மற்றும் ஆசிய பசிபிக் பகுதிகளில் லம்போர்கினி வாகன விற்பனை 14 சதவீதம் அதிகரித்துள்ளது. ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் ஆப்ரிக்கா பகுதிகளில் 12 சதவீத வளர்ச்சியை லம்போர்கினி பதிவு செய்து இருக்கிறது.

வாகனங்கள் விற்பனையை பொருத்தவரை அமெரிக்காவில் 2472 யூனிட்களும், சீனாவில் 935 யூனிட்களும், ஜெர்மனியில் 706 யூனிட்களும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. பிரிட்டனில் 564 யூனிட்களும், இத்தாலியில் 359 யூனிட்களை லம்போர்கினி விற்பனை செய்துள்ளது.
மாடல்களை பொருத்தவரை உலகம் முழுக்க லம்போர்கினி உருஸ் 5021 யூனிட்கள், ஹரிகேன் 2586 யூனிட்கள், அவென்டெடார் 798 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
மஹிந்திரா நிறுவனம் இந்திய சந்தையில் தனது கார் மாடல்களுக்கு அசத்தலான சலுகை மற்றும் தள்ளுபடி அறிவித்து இருக்கிறது.
மஹிந்திரா நிறுவனம் ஜனவரி மாதத்திற்கான சிறப்பு சலுகை மற்றும் தள்ளுபடி விவரங்களை அறிவித்து இருக்கிறது. இவை தள்ளுபடி, எக்சேன்ஜ் போனஸ், அக்சஸரீஸ் மற்றும் கார்ப்பரேட் பலன்கள் வடிவில் வழங்கப்படுகின்றன.
இந்தியாவில் மஹிந்திராவின் எண்ட்ரி லெவல் எஸ்.யு.வி. மாடலான கே.யு.வி.100 என்.எக்ஸ்.டி. ரூ. 61,055 வரையிலான சலுகைகள் வழங்கப்படுகின்றன. ஸ்கார்பியோ மாடலுக்கு ரூ. 29 ஆயிரம் மதிப்பிலான பலன்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மஹிந்திரா பொலிரோ மாடலுக்கு ரூ. 13 ஆயிரம் வரையிலான சலுகைகள் வழங்கப்படுகின்றன. பொலிரோ நியோ மாடலுக்கு எந்த சலுகையும் அறிவிக்கப்படவில்லை. மராசோ எம்.பி.வி. மாடலுக்கு ரூ. 40,200 வரையிலான சலுகைகள் வழங்கப்படுகிறது. அல்டுராஸ் ஜி4 பிளாக்ஷிப் மாடலுக்கு ரூ. 81,500 வரையிலான சலுகைகள் கிடைக்கின்றன. மஹிந்திரா எக்ஸ்.யு.வி.300 மாடலுக்கு ரூ. 69,003 மதிப்பிலான பலன்கள் வழங்கப்படுகின்றன.
எம்.ஜி. மோட்டார் நிறுவனம் இந்திய சந்தையில் தனது ஆஸ்டர் மாடலின் விலையை உயர்த்தி இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
எம்.ஜி. மோட்டார் நிறுவனத்தின் ஆஸ்டர் மாடல் விலை இந்தியாவில் உயர்த்தப்பட்டது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஆஸ்டர் மாடல் ரூ. 9.78 லட்சம், எக்ஸ்-ஷோரூம் துவக்க விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது ஆஸ்டர் மாடலின் விலை ரூ. 35 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது.
அதன்படி எம்.ஜி. ஆஸ்டர் எஸ்.யு.வி. விலை தற்போது ரூ. 9.98 லட்சம் என துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 17.73 லட்சம் என மாறி இருக்கிறது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

எம்.ஜி. ஆஸ்டர் மாடல் இருவித பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதன் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 108.5 பி.ஹெச்.பி. திறன், 144 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 1.3 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இது 138 பி.ஹெச்.பி. திறன், 220 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.
இதன் 1.5 லிட்டர் என்ஜினுடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 8 ஸ்பீடு சி.வி.டி. கியர்பாக்ஸ் பெறலாம். 1.3 லிட்டர் என்ஜினுடன் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.






