என் மலர்
கார்

ரெனால்ட் டஸ்டர் கார்
இந்தியாவில் பிரபல காரின் உற்பத்தியை நிறுத்திய ரெனால்ட் நிறுவனம்
இந்த காரை வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு அனைத்து வித சேவைகளும் தொடர்ந்து வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரெனால்ட் நிறுவனத்தின் டஸ்டர் கார் இந்தியாவில் நல்ல வரவேற்பை பெற்றது. சந்தையில் 10 ஆண்டுகளை நிறைவு செய்ய இருந்த இந்த காரின் உற்பத்தியை ரெனால்ட் நிறுவனம் நிரந்தரமாக நிறுத்தியுள்ளது.
டாஸ்டர் காரின் மாடல் டிசைன் மற்றும் ஃபீச்சர்ஸ் ஆகியவை பழையதாகிவிட்டதே இதற்கு காரணம் என கூறப்படுகிறது. இருப்பினும் அந்நிறுவனம் டஸ்டர் காரின் 3-வது ஜெனரேஷனை இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது.
டஸ்டர் காரின் செகண்ட் ஜெனெரேஷன் உலகளவில் விற்பனையில் இருந்தாலும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படாமல் இருந்தது.
இந்நிலையில் தற்போது நேரடியாக 3-வது ஜெனரேஷன் டஸ்டர் கார் அறிமுகம் ஆகவுள்ளது.
முதல் ஜெனரேஷன் டஸ்டர் காரின் விற்பனை நிறுத்தப்பட்டாலும் ஏற்கனவே இந்த காரை வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு அனைத்து வித சேவைகளும் தொடர்ந்து வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் டீலர் ஸ்டாக்கில் முதல் ஜெனரேஷன் கார்கள் விற்பனையில் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
Next Story






