என் மலர்
கார்
கியா நிறுவனம் வெளியிட்டு வரும் கார்கள், விற்பனையில் பெரும் சாதனை படைத்து வருகின்றன.
தென் கொரிய கார் உற்பத்தி நிறுவனமான கியா, இந்தியாவில் கடந்த 2019-ம் ஆண்டு செல்டோஸ் காருடன் தனது விற்பனையை தொடங்கியது. கியாவின் கார்களுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் இருந்து வருகிறது.
இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் மட்டும் 18,121 யூனிட்டுகளை விற்பனை செய்துள்ளதாக கியா இந்தியா அறிவித்துள்ளது. இது கடந்த பிப்ரவரி மாதத்தை விட 8.5 சதவீதம் அதிகமாகும்.
கடந்த மாதத்தில் கியாவின் செல்டோஸ் 6,575 யூனிட்டுகளும், சோனெட் 6,154 யூனிட்டுகளும் விற்பனையாகி உள்ளது. கார்னிவல் லக்சரி எம்.பி.வி கார் 282 யூனிட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது அறிமுகமாகியுள்ள புதிய கேரன்ஸ் கார் விற்பனையில் புதிய இலக்கை எட்டும் என்றும், அதன் விற்பனை இந்தியாவில் கியாவின் நிலையை வலுவாக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
தற்போது அனந்தபூரில் தொடங்கப்பட்டுள்ள கியா தொழிற்சாலையின் காரணமாக கார் உற்பத்தி அதிகரிக்கப்படும் என்றும், உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள செமி கண்டெக்டர் பற்றாக்குறை கார் தயாரிப்பாளர்களை பெரிதாக பாதித்து இருந்தாலும், அதனை ஈடுகட்டும் நடவடிக்கைகளில் கியா ஈடுபடும் எனவும் கூறியுள்ளது.
கியாவின் கேரன் காரில் 2 பெட்ரோல் மோட்டார், 1 டீசல் மோட்டார் என 3 இன்ஜின் தேர்வுகள் தரப்பட்டுள்ளன. மேலும் இதில் பல்வேறு டிரான்ஸ்மிஷன், சீட் லே அவுட் ஆப்ஷன் உள்ளிட்ட அம்சங்களும் இடம்பெற்றுள்ளன.
மெர்சிடிஸ், பி.எம்.டபில்யூ, லெக்சஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் டாப் கிளாஸ் கார்களை இந்த மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது.
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஆட்டோமொபைல் விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சாதாரண காரில் இருந்து பிரீமியம் கார்கள் வரை விற்பனையில் சாதனை படைத்து வருகின்றன. இந்நிலையில் இந்த மாதம் இந்தியாவில் அறிமுகமாகவுள்ள கார்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.
இதன்படி ஸ்கோடா நிறுவனம் ஸ்லாவியா காரை வரும் 3-ம் தேதி அறிமுகம் செய்யவுள்ளது. 1.5 லிட்டர் வெர்ஷன் காரான இதற்கு ரூ.10 லட்சத்து 69 ஆயிரம் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த காரில் 1.5 லிட்டர் டிஎஸ்ஐ மோட்டார், ஆக்டீவ் சிலிண்டர் தொழில்நுட்பம் ஆகியவை இடம்பெற்றுள்ளன. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 148 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. இதனுடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 7 ஸ்பீடு டிஎஸ்ஜி யூனிட்டும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
மெர்சிடிஸ் மேபேக் எஸ்-கிளாஸ் கார் வரும் 3ம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது. அதிக லக்சூரி அம்சங்களுடன் உருவாக்கப்பட்டுள்ள கார் இரு விதமான ட்ரிம்களில், இரு விதமான எஞ்ஜின் தேர்வுகளில் விற்பனைக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் விர்சுஸ் காரை இந்த மாதம் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரை எம்க்யூபி ஏ0 ஐஎன் பிளாட்பாரத்தில் வைத்து உள்ளூரிலேயே தயாரிக்க திட்டமிட்டுள்ளது.
லெக்சஸ் நிறுவனம் என்எக்ஸ் 350எச் ஃபேஸ்லிஃப்ட் காரை மார்ச் 9-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்கிறது. இக்காரின் விலை பற்றி விபரம் இன்னும் அறிவிக்கப்படதா நிலையில், பல்வேறு அம்சங்களுடன் இந்த கார் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எம்.ஜி நிறுவனம் 2022-ம் ஆண்டுக்கான எம்ஜி இசட்எஸ் இவி காரை இந்த மாதம் அறிமுகம் செய்யவுள்ளது. இந்த காரில் பழைய வெர்ஷனில் இருந்து மாற்றப்பட்ட முன்-பின் பம்பர்கள், ஹெட்லைட்டுகள், அலாய் வீல்கள் மற்றும் மறு வடிவமைப்பு செய்யப்பட்ட சார்ஜிங் போர்ட் உள்ளிட்டவை இடம்பெறும் என கூறப்படுகிறது.

பிஎம்டபிள்யூ நிறுவனம் எக்ஸ்4 சொகுசு காரை இந்த மாதத்தில் வெளியிடவுள்ளது. இதற்கான டீசர் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த கார் குறித்த எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.
டொயோட்டா நிறுவனம் ஹைலக்ஸ் பிக்-அப் ட்ரக் ரக வாகனத்தை அறிமுகம் செய்யவுள்ளது. இக்காருக்கு ரூ. 1 லட்சம் என்ற முன் தொகையில் புக்கிங் நடைபெற்று வருகிறது. இக்காரில் 2.8 லிட்டர் டீசல் மோட்டார் கொண்டுள்ளது.
இது 201 பிஎச்பி பவர் மற்றும் 420 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறனையும் கொண்டுள்ளது. இது தவிர டொயோட்டா நிறுவனம் கிளான்ஸா ஃபேஸ்லிஃப்ட் காரையும் அறிமுகம் செய்யவுள்ளது.
மாறிவரும் காலங்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் விருப்பங்களுக்கு ஏற்ப இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி விற்பனை குறித்து புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதன்படி இனி மாருதி சுஸூகி நிறுவனத்தின் அசல் உதிரி பாகங்கள், நாடு முழுவதும் 100-க்கும் மேற்பட்ட நகரங்களில் ஆன்லைனில் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளது.
தற்போது 2,000-க்கும் மேற்பட்ட மாருதி சுஸுகியின் அசல் உதிரிபாகங்கள் ஆன்லைனில் கிடைக்கும் என்றும், மேலும் உள்ள தயாரிப்புகளும் விரைவில் ஆன்லைனில் விற்பனைக்கு வரும் என்று அந்நிறுவனம் கூறியுள்ளது.
இதுகுறித்து மாருதி சுஸூகி இந்தியாவின் எம்.டி மற்றும் சி.இ.ஓ கெனிச்சி அயுகாவா கூறியதாவது:-
வாடிக்கையாளர்கள் இனி தேடி அலைய தேவையில்லாமல் உண்மையான மாருதி சுஸுகி உதிரிபாகங்களை இணையதளத்தில் மூலமே ஆர்டர் செய்துகொள்ளலாம். மேலும் அவற்றை வீட்டிலேயே வைத்து நிறுவுவதற்கு வழிவகை செய்யவும் ஆன்லைனில் ஆப்ஷன் தரப்பட்டிருக்கும்.
மாறிவரும் காலங்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் விருப்பங்களுக்கு ஏற்ப இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது. இது வாடிக்கையாளர்கள் மாருதி சுஸூகிக்கான அசல் பாகங்களைப் பெறுவதை எளிதாக்கும்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்த கார் 2019 பிஎம்டபிள்யூ எக்ஸ்4 காரை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பிஎம்டபிள்யூ நிறுவனம் எக்ஸ்4 பிளாக் ஷேடோவ் எடிசன் என்ற புதிய சொகுசு கார் மாடல் ஒன்றை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.
எஸ்யூவி ரக காரான இதில் பல சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த கார் 2019 பிஎம்டபிள்யூ எக்ஸ்4 காரை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. எக்ஸ்4 காரின் டேஷ்போர்டு இந்த காரில் மறு வேலைப்பாடு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது. இத்துடன், 10.25 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், 12.3 இன்ச் அளவுள்ள டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவை இதில் இடம்பெற்றுள்ளன.

இந்த காரில் பெட்ரோல் மற்றும் டீசல் என இரு விதமான இன்ஜின் தேர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளன. 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் 3.0 லிட்டர் டீசல் ஆகிய மோட்டார் தேர்வுகளும் இதில் இடம்பெற்றுள்ளது. இந்த காரின் பெட்ரோல் எஞ்ஜின் 248 பிஎச்பி பவர், 350 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. டீசல் எஞ்ஜின் 282 பிஎச்பி பவர் மற்றும் 650 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறனை கொண்டுள்ளது. இத்துடன், 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட இருக்கின்றது.
இது தவிர இந்த காரில் மூன்று ஜோன் க்ளைமேட் கன்ட்ரோல், இன்ஜின் ஸ்டார்ட்-ஸ்டாப் பட்டன், எலெக்ட்ரிக் பார்க்கிங் பிரேக், ட்வீக்கட் சென்டர் கன்சோல் மற்றும் புதிய கியர் லிவர் உள்ளிட்ட கொடுக்கப்பட்டுள்ளன. எலெக்ட்ரிக் பார்க்கிங் பிரேக், ஹில் டெசன்ட் கன்ட்ரோல், பிஎம்டபிள்யூ லைவ் காக்பிட் ப்ளஸ், ஹெட்ஸ்-அப் டிஸ்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே உள்ளிட்ட அம்சங்களும் இதில் வழங்கப்பட்டுள்ளன.
இந்த காரில் ஸ்போர்ட்டி லுக் கிட்னி க்ரில் முகப்பு பகுதியில் பயன்படுத்தப்பட்டுள்ளது. அடாப்டீவ் எல்இடி ஹெட்லைட் மேட்ரிக்ஸ், முழு எல்இடி வால் பகுதி மின் விளக்கு, புதிய ஏப்ரான் மற்றும் ரெஃப்ளக்டர்கள் உள்ளிட்டவை இந்த எடிசனில் தரப்பட்டுள்ளன.
ரூ.67.50 லட்சம் எக்ஸ் ஷோரூம் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இந்த காரின் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது. விருப்பமுள்ளவர்கள் ரூ.50,000 மட்டும் செலுத்தி காரை முன்பதிவு செய்யலாம்.
இதற்கான முன்பதிவுகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில், இந்த கார் மார்ச் 9-ம் தேதி அறிமுகமாகும் என கூறப்படுகிறது.
ஜப்பானை சேர்ந்த லெக்சஸ் நிறுவனம், லெக்சஸ் என்எக்ஸ் 350எச் என்ற காரை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.
இந்த கார் பெட்ரோல் மற்றும் மின்சாரம் இரண்டிலும் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக இந்த காரில் பெட்ரோல் மோட்டாருடன், மின்சார மோட்டாரும் பொருத்தப்பட்டுள்ளது. இதில் இடம்பெற்றுள்ள மோட்டாருக்கு மின்சாரத்தை வழங்குவதற்கு சிறிய பேட்டரி பேக் ஒன்றையும் வழங்கியுள்ளது.
இந்த காரி எக்ஸ்க்யூசைட், லக்சரி, எஃப் ஸ்போர்ட் உள்ளிட்ட 3 வேரியண்டுகளில் வருகிறது.

இந்த காரில் 2.5 லிட்டர் நேச்சுரலி அஸ்பயர்டு 4 சிலிண்டர் இன்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இவற்றுடன் சேர்த்து மின்சார மோட்டாரும் இணைக்கப்பட்டுள்ளதால் இரண்டும் சேர்ந்து 235 எச்.பி ஆற்றலை தரும் என கூறப்படுகிறது.
இது தவிர இந்த காரில் டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டர், ஸ்மார்ட் போன் இணைப்பு உள்ளிட்ட தொழில்நுட்ப வசதிகளும் உள்ளது.
இந்த காரின் விலை ரூ.58.13 லட்சத்தில் இருந்து தொடங்கி ரூ.63.57 லட்சம் வரை இருக்கிறது. இதற்கான முன்பதிவுகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்த கார் மார்ச் 9-ம் தேதி அறிமுகமாகும் என கூறப்படுகிறது.
தனது போட்டியாளர்கள் அனைவரையும் விட பலேனோ காரே அதிக மைலேஜை வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாருதி சுசுகி நிறுவனம் கடந்த பிப்ரவரி 22-ம் தேதி பலேனோ காரை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வந்தது. இந்த காரின் மைலேஜ் விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.
இதுகுறித்து வெளியான தகவலின்படி, புதிய 2022 ஆட்டோமேட்டிக் பலினோ கார் ஒரு லிட்டருக்கு 22.35 கி.மீ முதல் 22.94 கி.மீ வரை மைலேஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல பலேனோவின் மேனுவல் வேரியண்ட், 22.35 கிமீ மைலேஜை வழங்கும் என கூறப்பட்டுள்ளது.
மேலும் புதிய பலேனோ காரில் 90 பிஎச்பி பவரை வெளியேற்றக் கூடிய 1.2 லிட்டர் ட்யூவல் ஜெட் கே12என் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்ஜின் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வில் விற்பனைக்குக் கிடைக்கும்.
இத்துடன், இதன் எஞ்ஜினில் 12 வோல்ட் மைல்டு ஹைபிரிட் தொழில்நுட்பத்திற்கு பதிலாக எஞ்ஜின் ஐடில் ஸ்டார்ட்/ஸ்டாப் வசதிக் கொடுக்கப்பட்டுள்ளது. இது எரிபொருள் சிக்கனத்தை வழங்க உதவும் என கூறப்படுகிறது.
2020-ம் ஆண்டு பலேனோவிற்கு போட்டியாக ஹூண்டாய் ஐ20, டாடா அல்ட்ராஸ், ஃபோக்ஸ்வேகன் போலோ மற்றும் ஹோண்டா ஜாஸ் ஆகிய பிரீமியம் தர கார்கள் விற்பனையில் இருக்கின்றன. இவை அனைத்தையும் விட பலேனோ அதிக மைலேஜை வழங்குகிறது.
வெறும் 30 யூனிட் எண்ணிக்கையில் இந்த காரை மினி நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது.
பிரபல கார் உற்பத்தி நிறுவனமான மினி, அதன் முதல் மின்சார காரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. மினி எலெக்ட்ரிக் என்ற பெயரில் இந்த கார் விற்பனைக்கு வந்துள்ளது. மேலும் இந்த கார் மினி கூப்பர் எஸ்இ என்ற பெயரில் சர்வதேச சந்தையில் கிடைக்கிறது.
வெறும் 30 யூனிட் எண்ணிக்கையில் இந்த காரை மினி நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது. இதற்கான முன்பதிவு கடந்த 2021ம் ஆண்டு தொடக்கியபோது இரண்டு மணி நேரங்களிலேயே அனைத்து யூனிட்டுகளும் புக் செய்யப்பட்டன.
இந்த காரின் அறிமுக எக்ஸ் ஷோரும் விலை ரூ. 47,20,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இப்போது இந்த காரில் இடம்பெற்றுள்ள சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கலாம்:-
இந்த காரில் பயன்படுத்தப்பட்டுள்ள மின் மோட்டார் அதிகபட்சமாக 181 பிஎச்பி மற்றும் 270 என்எம் டார்க்கை வெளியேற்றும் தன்மையை கொண்டது. இதில் 32.6 கிலோவாட் திறன் கொண்ட லித்தியம் அயன்-பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது.இதனால் இந்த காரின் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 270 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.

இந்த காரை 2.5 மணி நேரத்தில் பூஜ்ஜியத்தில் இருந்து 80 சதவீதம் சார்ஜ் செய்து கொள்ள முடியும். இதற்கு 11 கிலோ வாட் வசதிக் கொண்ட சார்ஜிங் பாயிண்ட் தேவைப்படும். 50 கிலோவாட் திறன் கொண்ட சார்ஜிங் பாயிண்டில் இந்த காரை சார்ஜ் செய்தால் வெறும் 36 நிமிடங்களிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய முடியும்.
இந்த மினி எலெக்ட்ரிக் கார் உச்சபட்ச வேகமாக மணிக்கு 150 கிமீ-ஐ எட்டும். வெறும் 7.3 நொடிகளில் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ எனும் வேகத்தை எட்டும் திறனையும் கொண்டுள்ளது.
இந்த கார் மூன்று கதவுகள் அமைப்பைக் கொண்ட மின்சார காராகும். மேலும் இந்த காரை கவர்ச்சியூட்டும் வகையில் 17 இன்ச் அலாய் வீல்கள், வட்ட வடிவ ஹெட்லேம்ப், யூனியன் ஜேக் தீமிலான எல்இடி டெயில்-லைட், வட்ட வடிவ ஓஆர்விஎம்கள் உள்ளிட்டவை பயன்படுத்தப்பட்டுள்ளன.
இந்த கார் ஒயிட் சில்வர், மிட்நைட் பிளாக், மூன் வால்க் கிரே மற்றும் பிரிட்டிஷ் ரேசிங் கிரீன் ஆகிய நிறங்களில்
பிரீமியம் மற்றும் லக்சூரி அம்சங்கள் கொண்ட இந்த எலெக்ட்ரிக் காருக்கு இந்தியாவில் நேரடி போட்டியாளர்கள் இல்லை.
ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் காரான இது இதுவரை 2.5 லட்சம் யூனிட்டுகள் விற்பனையாகி உள்ளது.
ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் இந்தியாவில் 12 ஆண்டு காலமாக விற்பனையில் உள்ள போலோ நிறுத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது ஒரு பிரீமியம் ரக ஹேட்ச்பேக் கார் வகையாகும்.
இதுவரை ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் இந்தியாவில் 6 தலைமுறை போலோ கார்களை அறிமுகம் செய்துள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு 6-வது தலைமுறை போலோ கார் வெளியானது.
மஹாராஷ்டிரா மாநிலம் சக்கன் உற்பத்தி ஆலையில் உற்பத்தி செய்யப்படும் இந்த போலோ கார்கள் இதுவரை 2.5 லட்சம் யூனிட்டுகள் விற்பனையாகி உள்ளன.

விற்பனைக்கு வந்த புதிதில் இந்தியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற இந்த காரின் மதிப்பு சமீபத்திய ஆண்டுகளில் பெரிதும் சரிந்துள்ளது. மாதத்திற்கு ஆயிரத்திற்கும் குறைவான போலோ காரின் யூனிட்டுகளே விற்பனையாகி வருகின்றன.
இதனால் போலோ காரின் உற்பத்தி நிறுத்தப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம், விர்சுஸ் காரை அறிமுகம் செய்து உலக அளவில் உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது. இதுவும் போலோ காரின் உற்பத்தி பணியை நிறுத்துவதற்கு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
இதேபோல விர்சுஸ் காரின் வருகை வெண்டோ காரின் உற்பத்தியையும் பாதிக்கலாம் என கருதப்படுகிறது.
இந்த வகை டயர்கள் செலவீனங்களை குறைக்கவும், பொருட்கள் வீணாவதை தடுக்கவும் பயன்படும் என கூறப்பட்டுள்ளது.
மிச்செலின் நிறுவனம் பஞ்சர் ஏற்படாத டயர் அமைப்பை உருவாக்கி வருவதாக தெரிவித்துள்ளது. அடுத்த தலைமுறை செவ்ரொலெட் போல்ட் மின்சார வாகனங்களுக்காக இந்த அமைப்பை உருவாக்கி வருகிறது.
இந்த வகை டயர்களுக்கு ’மிச்செலின் அப்டிஸ்’ என அந்நிறுவனம் பெயரிட்டுள்ளது. இந்த வகை டயர்கள் அடுத்த 3 முதல் 5 வருடங்களில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.
செவ்ரோலெட் நிறுவனம் புதிய தலைமுறைக்கான செவி போல்ட் மின்சார காரை உருவாக்கி வருகிறது. இந்த மாடல் 2025-ல் வெளியாகும் என கூறப்படுகிறது. இந்த கார் முழுவதும் பஞ்சர் ஆகாத ( காற்று அடைக்கப்படாத டயரை) டயரை கொண்டிருக்கும் என கூறப்பட்டுள்ளது.

2019-ம் ஆண்டே இந்த வகை டயரை உருவாக்கி தற்போது இதன் மேம்படுத்தப்பட்ட டயரை உருவாக்குவதற்காக 50 பேட்டண்ட்களை மிச்செலின் நிறுவனம் பதிவு செய்துள்ளது.
இந்த வகை டயர்கள் செலவீனங்களை குறைக்கவும், பொருட்கள் வீணாவதை தடுக்கவும் பயன்படும் என கூறப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்கள் இணையதளத்தில் தங்களுக்கு பிடித்த விதத்தில் புதிய பலேனோ காரினை வடிவமைத்து கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
மாருதி சுஸுகி நிறுவனம் மேம்படுத்தப்பட்ட பலேனோ ஃபேஸ்லிஃப்ட் காரினை வரும் பிப்.23-ம் தேதி அறிமுகம் செய்யவுள்ளது. இந்நிலையில் இந்த காரின் தோற்றம் குறித்த வீடியோக்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.
இதன்படி இந்த 2022 மாருதி பலேனோ கார் சிக்மா, டெல்டா, ஸெடா மற்றும் ஆல்ஃபா என்கிற நான்கு விதமான வேரியண்ட்களில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இந்த காரின் டேஸ்போர்ட் நீலம், சில்வர் மற்றும் அடர் நீலம் என மூன்று விதமான நிறங்களில் வருகிறது. வாடிக்கையாளர்கள் நீலம் மற்றும் கருப்பு கலவையில் இருக்கை மற்றும் கதவு ட்ரிம்களை அலங்கரித்து கொள்ளலாம்.
கதவுகளில் பவர் கண்ணாடிகள், தட்டையான-தாழ்வான ஸ்டேரிங் சக்கரம், ரிமோட் மைய லாக்கிங் மற்றும் டிஜிட்டல் ஓட்டுனர் திரை உடன் செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல் உள்ளிட்டவையும் இந்த காரில் வழங்கப்படவுள்ளது.
பயணிகள் பாதுகாப்பாக பயணம் செய்வதற்கு இரட்டை காற்று பைகள் தரப்பட்டுள்ளன. இதுதவிர பின்பக்கம் பார்க்கிங் சென்சார்கள், ஏபிஎஸ் மற்றும் அதிவேக எச்சரிக்கை கருவிகளும் வழங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த கார் ஆரம்ப நிலையில் வரக்கூடிய வேரியண்ட் என்பதால் சக்கரங்களில் வண்ணங்கள் இல்லாமல் இரும்பு நிறம் தான் தரப்பட்டிருக்கும்.
இந்த 2022 பலேனோ காரில் 1.2 லிட்டர் கே12என் ட்யுல்ஜெட் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட உள்ளது. இது அதிகப்பட்சமாக 89 பிஎச்பி மற்றும் 113 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் தன்மையை கொண்டிருக்கும்.
பலேனோ சிக்மா வேரியண்ட்டில் டிரான்ஸ்மிஷனுக்கு 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மட்டுமே தரப்படும் மேலும் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வு எதுவும் கொடுக்கப்பட வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.
இந்த புதிய பலேனோ காரின் விலையை மாருதி அறிவிக்கப்படவில்லை.
இந்த காரினை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் மாருதி நெக்ஸா இணையதள பக்கத்தில் புக் செய்து கொள்ளலாம். இணையதளத்தில் தங்களுக்கு பிடித்த விதத்தில் புதிய பலேனோ ஃபேஸ்லிஃப்ட் காரினை வடிவமைத்து கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
மகிந்திரா நிறுவனம் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் இந்த புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
மகிந்திரா நிறுவனம் தனது Mahindra XUV700 மற்றும் புதிய Thar SUV மாடல் கார்களுக்கு சந்தா சேவையை அறிமுகம் செய்துள்ளது.
இதற்காக குயிக்லிஸ் என்ற நிறுவனத்துடன் இணைந்து மகிந்திரா செயல்படுகிறது. இதன்படி, மகிந்திராவின் காரை வாங்க முடியாதவர்கள் குறிப்பிட்ட காலத்திற்கு வாடகைக்கு எடுக்கலாம்.
வாடகை காலம் முடிந்த பிறகு, வாடிக்கையாளர்கள் காரை திரும்ப அளிக்கலாம். இல்லையென்றால் அதே கார் அல்லது தாங்கள் விரும்பும் வேறு புதிய காரை மீண்டும் வாடகைக்கு எடுக்கலாம். இந்த திட்டத்தில் ஒரு காரை 24 முதல் 60 மாதங்கள் வரை வாடகைக்கு எடுக்க முடியும். அல்லது ஆண்டுக்கு 10,000 கிமீ வரை வாடகை என்ற திட்டங்களையும் தேர்வு செய்யலாம்.

இதற்கு வாடகை மாதம் ரூ.21,000 என்ற விலையில் இருந்து தொடங்குகிறது. இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்கள் பெட்ரோலைத் தவிர வேறு எதற்கும் செலவழிக்க வேண்டியதில்லை. காப்பீடு, பராமரிப்பு மற்றும் சாலையோர உதவி அனைத்தையும் நிறுவனமே ஏற்கும்.
இந்த சந்தா வசதி தற்போது மும்பை, புனே, டெல்லி, நொய்டா, குருகிராம், பெங்களூர், ஹைதராபாத் மற்றும் சென்னை உள்ளிட்ட இந்தியாவின் முக்கிய நகரங்களில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
காரை வாடகைக்கு எடுக்க விரும்புபவர்கள் மஹிந்திரா ஆட்டோ போர்ட்டல் அல்லது டீலர்ஷிப்புக்கு சென்று முன்பதிவு செய்ய வேண்டும்.
இந்த எக்ஸ்3 கார் பெட்ரோல் ட்ரிமில்லும் விற்பனையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான பி.எம்.டபில்யூ எஸ்.யூ.வி வகை எக்ஸ்3 டீசல் காரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த கார் சென்னையில் அமைந்துள்ள பி.எம்.டபில்யூ தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டது.
இந்த புதிய பி.எம்.டபில்யூ எக்ஸ்3 டீசல் கார், சக்தி வாய்ந்த டீசல் இன்ஜினுடன் ட்வின் பவர் டர்போ டெக்னாலஜி கொண்டுள்ளது. 2 லிட்டர் 4 சிலிண்டர் கொண்ட இந்த இன்ஜின் 140 kw/ 190 hp-ஐ தயாரிக்கும் வல்லமை கொண்டது. மேலும் 1,750 – 2,500 rpm-ல் 400 Nm அதிகபட்ச டார்க்கை உருவாக்கக்கூடியது.
இதன் மூலம் இந்த கார் வெறும் 7.9 நொடிகளில் 0-100 மணிக்கு கி.மீ வேகத்தை எட்டும் வல்லமை கொண்டது. மேலும் மணிக்கு 213 கி.மீ அதிகபட்ச வேகத்தில் செல்லக்கூடியது.
இந்த கார் மினரல் ஒயிட், பைதானிக் ப்ளூ, ப்ரூக்ளின் க்ரே, சோபிஸ்டோ க்ரே, பிளாக் சேப்பையர், கார்பன் ப்ளாக் ஆகிய வண்ணங்களில் வருகிறது.

இந்த காருடன் ‘பி.எம்.டபில்யூ சர்வீஸ் இங்கிளூசிவ்’ மற்றும் ‘பி.எம்.டபில்யூ சர்வீஸ் இங்கிளூசிவ் பிளஸ்’என்ற கம்பெனி சேவையையும் வழங்கப்படுகிறது. இந்த சேவையில் கன்டிஷன் பேஸ்டு சர்வீஸ்கள் மற்றும் மெயின்டனன்ஸ்கள் 3 வருடங்களுக்கு/ 40,000 கி.மீ வரையில் இருந்து 10 வருடங்களுக்கு/ 2 லட்சம் கி.மீ வரை வழங்கப்படுகிறது.
இந்த காரின் எக்ஸ் ஷோரூம் விலை ரூ.65.50 லட்சமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த எக்ஸ்3 கார் பெட்ரோல் ட்ரிமில்லும் விற்பனையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.






