என் மலர்

    கார்

    மஹிந்திரா எலெக்ட்ரிக் வாகனம்
    X
    மஹிந்திரா எலெக்ட்ரிக் வாகனம்

    உற்பத்தி திறனை இருமடங்கு அதிகரிக்கும் மஹிந்திரா எலெக்ட்ரிக்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    மஹிந்திரா எலெக்ட்ரிக் நிறுவனம் தனது வாகனங்கள் உற்பத்தியை இருமடங்கு அதிகப்படுத்த திட்டமிட்டு இருக்கிறது.


    சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மாசில்லா போக்குவரத்து பற்றிய விழிப்புணர்வு காரணமாக எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு சமீப காலங்களில் அதிகரித்து வருகிறது. தொடர் வரவேற்பு காரணமாக மஹிந்திரா எலெக்ட்ரிக் நிறுவனம் எலெக்ட்ரிக் வாகன முதலீட்டில் பத்து சதவீத தொகையை தனது லாஸ்ட்-மைல் மொபிலிட்டி பிரிவில் ஒதுக்கீடு செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இதன் மூலம் மஹிந்திரா எலெக்ட்ரிக் உற்பத்தி திறனை இருமடங்கு அதிகரித்து மூன்று மற்றும் நான்கு சக்கரங்கள் கொண்ட குவாட்ரிசைக்கிள் பிரிவில் மொத்தம் ஆறு புதிய வாகனங்களை அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது.

     மஹிந்திரா

    அடுத்த நிதியாண்டில் 14-இல் இருந்து 15 ஆயிரம் எலெக்ட்ரிக் வாகனங்களில் இருந்து 2023 நிதியாண்டில் இந்த எண்ணிக்கையை இருமடங்கு அதிகரிக்க மஹிந்திரா எலெக்ட்ரிக் திட்டமிட்டுள்ளது. எனினும், தற்போதுள்ள செமிகண்டக்டர் குறைபாடு எதிர்காலத்தில் மேலும் மோசமடையாமல் இருக்க வேண்டும். 

    இந்த நிதியாண்டு மஹிந்திரா எலெக்ட்ரிக் நிறுவனம் லாஸ்ட் மைல் மொபிலிட்டி பிரிவில் 7 ஆயிரம் எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்துள்ளது.
    Next Story
    ×