என் மலர்
கார்

ஸ்கோடா கோடியக்
இந்தியாவில் புதிய கோடியக் உற்பத்தியை துவங்கிய ஸ்கோடா
ஸ்கோடா நிறுவனத்தின் புதிய கோடியக் பேஸ்லிப்ட் மாடல் இந்திய உற்பத்தி விவரங்களை பார்ப்போம்.
ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனம் தனது மேம்பட்ட கோடியக் மாடலின் உற்பத்தியை மகாராஷ்டிரா மாநிலத்தின் அவுரங்காபாத் ஆலையில் துவங்கியது. இந்தியாவில் புதிய ஸ்கோடா கோடியக் பேஸ்லிப்ட் மாடல் அடுத்த ஆண்டு ஜனவரி மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது.
புதிய கோடியக் பேஸ்லிப்ட் மாடலில் 2 லிட்டர் 4 சிலிண்டர் டி.எஸ்.ஐ. பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 187 பி.ஹெச்.பி. திறன், 320 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 7 ஸ்பீடு டி.எஸ்.ஜி. ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

தோற்றத்தில் ஸ்கோடா கோடியக் பேஸ்லிப்ட் மாடலில் பிளாக்டு-அவுட் பட்டர்ஃபிளை கிரில், புதிய ஹெட்லேம்ப்கள், பக்கவாட்டில் மல்டி-ஸ்போக் அலாய் வீல்கள், பிளாக் ஒ.ஆர்.வி.எம்.கள், ஸ்ப்லிட் எல்.இ.டி. டெயில்-லைட்கள் உள்ளன.
Next Story






