என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்ஸ் - Archive

    மழைக்காலத்தில் வாகனம் பழுதாகாமல் இருக்க என்னென்ன செய்ய வேண்டும் என்ற விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


    இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை பயன்படுத்துவோர் அதனை அவ்வப்போது பராமரிப்பது அவசியம் ஆகும். வாகனங்களை சரியான காலஇடைவெளியில் பராமரித்தால் தான் வாகனம் சீராக இயங்கும். வாகன பராமரித்தல் மற்றும் மழைக்காலத்தில் வாகன பராமரிப்பின் போது கவனிக்க வேண்டியவை பற்றி தொடர்ந்து பார்ப்போம்.

    மழைக்காலத்தில் வாகனத்தில் அதிக அளவு மண் சேரும் வாய்ப்பு உள்ளது. இதை கவனிக்க தவறினால் வண்டியில் துரு ஏறும். எனவே இதை தவிர்க்க மட்கார்டின் உள்பக்கம் பெயிண்ட் அடிக்க வேண்டும்.

     கோப்புப்படம்

    மழை நேரத்தில் வெளியே சென்று வந்தவுடன் தண்ணீரால் வண்டியை சுத்தம் செய்ய வேண்டும். பின்பு துணியால் துடைக்க வேண்டும். வண்டியை மழை தண்ணீர் விழாத இடங்களில் பாதுகாப்பாக நிறுத்த வேண்டும். மழை காலம் முடிந்ததும் வண்டியை சர்வீஸ் செய்ய வேண்டும்.

    செயின் லூப்ரிகேசன் செய்யப்பட வேண்டும். அனைத்து கேபிள்களும் சுத்தம் செய்யப்பட வேண்டும். தேவைப்படும் இடங்களில் கிரீஸ், ஆயில் இட வேண்டும். 10 நாட்களுக்கு மேல் வெளியூர் செல்வதாக இருந்தாலும் வண்டியை உபயோகப்படுத்தாமல் இருக்கும் நிலை ஏற்படும் போது வண்டியை சுத்தம் செய்ய வேண்டும். பெட்ரோலை மூட வேண்டும். 

    மேலும் என்ஜினை ஓட விட்டு கார்ப்பரேட்டரை காலி செய்ய வேண்டும். டயர்கள் இரண்டும் தரையை தொடாத நிலையில் வண்டியை நிறுத்த வேண்டும். கேன்வாஸ் கொண்டு வண்டியை முழுவதுமாக மூடி வைக்க வேண்டும். மீண்டும் வண்டியை உபயோகத்துக்கு எடுக்கும் போது உடனே ஓட்டி செல்லக்கூடாது. வண்டியை ஸ்டார்ட் செய்து 10 நிமிடம் ஐடில் நிலையில் ஓட விட வேண்டும்.
    மெர்சிடிஸ் நிறுவனத்தின் புதிய ஏ.எம்.ஜி. ஏ45 எஸ் மாடலின் இந்திய வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.


    மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் ஏ.எம்.ஜி. ஏ45 எஸ் மாடல் இந்தியாவில் நவம்பர் 17 ஆம் தேதி அறிமுகமாகிறது. புதிய ஏ45 எஸ் மாடலில் 2 லிட்டர், 4 சிலிண்டர், டர்போசார்ஜ் செய்யப்பட்ட என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 416 பி.ஹெச்.பி. திறன், 500 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

    இத்துடன் டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 3.9 நொடிகளில் எட்டிவிடும். மேலும் இந்த கார் மணிக்கு அதிகபட்சம் 270 கிலோமீட்டர் வேகத்தில் மட்டும் செல்லும் வகையில் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது.

     மெர்சிடிஸ் ஏ.எம்.ஜி. ஏ45 எஸ்

    புதிய மெர்சிடிஸ் ஏ.எம்.ஜி. மாடலில் ஏ.எம்.ஜி. ரக முன்புற கிரில், அகலமான ஏர் இன்டேக், பிளேர்டு வீல் ஆர்ச்கள், 19 இன்ச் லைட் அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் டூயல் டிப் எக்சாஸ்ட் பைப்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

    கவாசகி நிறுவனத்தின் 2022 வெர்சிஸ் 1000 மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் அடுத்த மாதம் வினியோகம் செய்யப்படுகிறது.


    கவாசகி மோட்டார்ஸ் நிறுவனம் 2022 வெர்சிஸ் 1000 மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய மோட்டார்சைக்கிள் கேண்டி லைம் கிரீன் நிறத்தில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 11.55 லட்சம், எக்ஸ்-ஷோரூம் ஆகும். புதிய மோட்டார்சைக்கிள் மாடலுக்கான வினியோகம் நவம்பர் மாத மத்தியில் துவங்குகிறது.

    புதிய 2022 வெர்சிஸ் 1000 மோட்டார்சைக்கிளில் 1043சிசி, இன்-லைன், 4 சிலிண்டர், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 118 பி.ஹெச்.பி. திறன், 102 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு உள்ளது.

     2022 கவாசகி வெர்சிஸ் 1000

    அம்சங்களை பொருத்தவரை கவாசகியின் 2022 வெர்சிஸ் 1000 மாடலில் குரூயிஸ் கண்ட்ரோல், கவாசகி கார்னெரிங் மேனேஜ்மண்ட், டிராக்‌ஷன் கண்ட்ரோல் சிஸ்டம் மற்றும் ஏ.பி.எஸ். உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய மாடல் கவாசகியின் கே-கேர் பேக்கேஜ் பலன்களை பெறுகிறது.

    வோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனத்தின் புதிய எஸ்.யு.வி. மாடல் ஒரே மாதத்தில் விற்றுத்தீர்ந்தது.


    வோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனம் தனது டைகுன் எஸ்.யு.வி. மாடல் முன்பதிவு ஒரே மாதத்தில் 18 ஆயிரத்திற்கும் அதிக யூனிட்களை கடந்துள்ளதாக அறிவித்து இருக்கிறது. இந்தியாவில் வோக்ஸ்வேகன் டைகுன் மாடல் ரூ. 10.50 லட்சம், எக்ஸ்-ஷோரூம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டது.

    அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பே டைகுன் மாடலை வாங்க சுமார் 12 ஆயிரம் பேர் முன்பதிவு செய்து இருந்தனர். அதன்பின் ஒவ்வொரு நாளும் சுமார் 250-க்கும் அதிக முன்பதிவுகளை டைகுன் கார் பெற்று வருகிறது. முன்பதிவில் நல்ல வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து முன்பதிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

     வோக்ஸ்வேகன் டைகுன்

    வோக்ஸ்வேகன் டைகுன் மாடலில் 1 லிட்டர், 3 சிலிண்டர், டி.எஸ்.ஐ. பெட்ரோல் என்ஜின், 1.5 லிட்டர், 4 சிலிண்டர், டி.எஸ்.ஐ. பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இவை முறையே 115 பி.ஹெச்.பி. திறன், 175 நியூட்டன் மீட்டர் டார்க், 148 பி.ஹெச்.பி. திறன், 250 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகின்றன.
    ஹூண்டாய் நிறுவனம் தனது கிரெட்டா பேஸ்லிப்ட் மாடலினை முதற்கட்டமாக தென்கிழக்கு ஆசிய நாடுகளில் அறிமுகம் செய்ய இருக்கிறது.


    ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் 2022 கிரெட்டா பேஸ்லிப்ட் மாடலுக்கான டீசரை வெளியிட்டு இருக்கிறது. டீசரினில் புதிய கிரெட்டா மாடலின் முன்புறம் மற்றும் பக்கவாட்டு பகுதிகள் காணப்படுகிறது. இந்த கார் அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    தற்போதைய தகவல்களின்படி புதிய கிரெட்டா பேஸ்லிப்ட் கார் கைகிண்டோ இந்தோனேசியா சர்வதேச ஆட்டோ விழாவில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. டீசரின் படி புதிய கிரெட்டா பேஸ்லிப்ட் மாடல் எல்.இ.டி. ஹெட்லைட், எல்.இ.டி. டி.ஆர்.எல்.களை கொண்டிருக்கும் என தெரிகிறது. 

     2022 கிரெட்டா பேஸ்லிப்ட் டீசர்

    புதிய ஹூண்டாய் கிரெட்டா மாடலில் பானரோமிக் சன்ரூப், போஸ் பிரீமியம் சவுண்ட் சிஸ்டம், புதிய 10.25 இன்ச் டி.எப்.டி. எல்.சி.டி. கிளஸ்டர், மேம்பட்ட அம்சங்கள் வழங்கப்படும் என தெரிகிறது. இத்துடன் புளூலின்க் கனெக்டிவிட்டி வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
    மஹிந்திரா நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த எக்ஸ்.யு.வி.700 வினியோக விவரங்கள் வெளியாகி உள்ளது.


    மஹிந்திரா நிறுவனத்தின் புதிய எக்ஸ்.யு.வி.700 விரைவில் இந்திய சாலைகளில் வலம்வர இருக்கிறது. புதிய பிளாக்‌ஷிப் எஸ்.யு.வி.700 மாடலின் வினியோகம் இந்தியாவில் அக்டோபர் 30 ஆம் தேதி துவங்க இருக்கிறது. கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்டது முதல் புதிய எக்ஸ்.யு.வி.700 வாங்க இதுவரை சுமார் 65 ஆயிரத்திற்கும் அதிகமானோர் முன்பதிவு செய்துள்ளனர்.

    முதற்கட்டமாக பெட்ரோல் யூனிட்களை வினியோகம் செய்யப் போவதாக மஹிந்திரா அறிவித்து இருக்கிறது. அடுத்த ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதிக்குள் குறைந்தபட்சம் 14 ஆயிரம் எக்ஸ்.யு.வி.700 யூனிட்களை வினியோகம் செய்ய மஹிந்திரா திட்டமிட்டு இருக்கிறது. சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பெருந்தொற்று காரணமாக வினியோக திட்டத்தில் மாற்றம் செய்யப்படலாம் என்றும் அந்நிறுவனம் அறிவித்து இருக்கிறது.

     மஹிந்திரா எக்ஸ்.யு.வி.700

    இந்தியாவில் புதிய மஹிந்திரா எக்ஸ்.யு.வி.700 மாடல் ரூ. 11.99 லட்சம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த விலை எக்ஸ்.யு.வி.700 மாடலின் முதல் 25 ஆயிரம் யூனிட்களுக்கு மட்டுமே பொருந்தும். தற்போது புதிய எக்ஸ்.யு.வி.700 விலை ரூ. 12.49 லட்சம் என துவங்குகிறது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
    பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இந்திய சந்தையில் இரண்டு புதிய பல்சர் மோட்டார்சைக்கிள் மாடல்களை அறிமுகம் செய்தது.
     

    பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தனது பல்சர் சீரிசை இந்தியாவில் அப்டேட் செய்தது. இந்திய சந்தையில் பல்சர் என்250 மற்றும் எப்250 என இரண்டு புதிய மோட்டார்சைக்கிள் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றன. இவற்றின் விலை முறையே ரூ. 1.38 லட்சம் மற்றும் ரூ. 1.40 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    இரு மாடல்களிலும் ஒரே மாதிரியான அம்சங்களே வழங்கப்பட்டு இருக்கின்றன. இவற்றில் 249.07சிசி, சிங்கில் சிலிண்டர், ஏர்/ஆயில் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 24 பி.ஹெச்.பி. திறன், 21.5 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

     பஜாஜ் பல்சர் எப்250

    அம்சங்களை பொருத்தவரை இரு மாடல்களிலும் புல் எல்.இ.டி. லைட்டிங், செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், ஸ்ப்லிட்-ஸ்டைல் சீட், சைடு-ஸ்லிங் டூயல் பாரெல் எக்சாஸ்ட், டூயல் சேனல் ஏ.பி.எஸ். உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கின்றன. 

    இந்திய சந்தையில் பஜாஜ் பல்சர் என்250 சுசுகி ஜிக்சர் 250 மற்றும் யமஹா எப்.இசட்.250 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. புதிய பஜாஜ் பல்சர் எப்250 மாடல் சுசுகி ஜிக்சர் 250 எஸ்.எப். மற்றும் யமஹா பேசர் 250 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய எலெக்ட்ரிக் வாகன சந்தையில் பெரும் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.


    டாடா பவர் நிறுவனம் நாடு முழுக்க ஆயிரம் எலெக்ட்ரிக் வாகன சார்ஜிங் மையங்களை நிறுவி இருக்கிறது. இத்துடன் நாடு முழுக்க சுமார் 10 ஆயிரம் எலெக்ட்ரிக் வாகன சார்ஜிங் பாயிண்ட்களை நிறுவி இருக்கிறது. இதன் மூலம் எலெக்ட்ரிக் வாகன பயன்பாடு கணிசமான அளவு அதிகரிக்கும்.

    நாடு முழுக்க 180 நகரங்களில் டாடா பவர் சார்ஜிங் மையங்கள் செயல்பட்டு வருகின்றன. அலுவலகங்கள், மால்கள், ஓட்டல்கள், ரீடெயில் அவுட்லெட்கள், பொது இடங்கள், மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட இடங்களில் டாடா பவர் சார்ஜிங் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

     நெக்சான் இ.வி.

    இந்தியாவில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நெக்சான் இ.வி. மற்றும் டிகோர் இ.வி. மாடல்களை விற்பனை செய்து வருகிறது. மேலும் அடுத்த 18 மாதங்களில் எலெக்ட்ரிக் வாகன பிரிவில் டாடா மோட்டார்ஸ் ரூ. 7,500 கோடி முதலீடு செய்ய இருக்கிறது.
    ஜப்பானை சேர்ந்த அலி டெக்னாலஜிஸ் நிறுவனம் உலகின் முதல் பறக்கும் பைக் மாடலை அறிமுகம் செய்தது.


    பறக்கும் கார்கள் உருவாக்கப்படுவதை அனைவரும் அறிவோம். பல்வேறு நிறுவனங்கள் பறக்கும் கார்களின் ப்ரோடோடைப் மாடல் வெளியிட்டுள்ளன. தற்போது ஜப்பானில் உலகின் முதல் பறக்கும் பைக் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த பைக் வானில் பறப்பது மட்டுமின்றி, காற்றில் மிதக்கவும் செய்யும்.

    ஜப்பானை சேர்ந்த அலி டெக்னாலஜிஸ் நிறுவனம் பறக்கும் பைக் மாடல்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. தற்போது இந்த பைக் எவ்வாறு இயங்கும் என்பதை விளக்கி வீடியோ ஒன்று வெளியிடப்பட்டு இருக்கிறது. 

     எக்ஸ்-டுரிஸ்மோ லிமிடெட் எடிஷன்

    இந்த பறக்கும் பைக் எக்ஸ்-டுரிஸ்மோ லிமிடெட் எடிஷன் என அழைக்கப்படுகிறது. இந்த பறக்கும் பைக் புஜியில் உள்ள பந்தய களத்தில் இயக்கி காண்பிக்கப்பட்டது. எக்ஸ்-டுரிஸ்மோ மாடலுக்கான முன்பதிவுகள் ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த மாடல் மொத்தத்தில் 200 யூனிட்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட இருக்கிறது.

    புதிய எக்ஸ்-டுரிஸ்மோ லிமிடெட் எடிஷன் விலை இந்திய மதிப்பில் ரூ. 5.10 கோடி என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 300 கிலோ எடை கொண்ட எக்ஸ்-டுரிஸ்மோ தொடர்ச்சியாக 30 முதல் 40 நிமிடங்கள் வரை பறக்கும். இதன் அதிகபட்ச வேகம் குறித்து அலி டெக்னாலஜிஸ் நிறுவனம் எந்த தகவலையும் வழங்கவில்லை.
    ஆடம்பர கார் உற்பத்தியாளரான ஆடி விரைவில் எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியை இந்தியாவில் துவங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


    ஜெர்மன் நாட்டை சேர்ந்த ஆடி நிறுவனம் தனது எலெக்ட்ரிக் கார் மாடல்களை இந்தியாவிலேயே அசெம்பில் செய்யலாமா என ஆலோசனை செய்து வருகிறது. இந்தியாவில் முதலீடு செய்ய மத்திய அரசின் அதிக வரி மற்றும் நிலையற்ற திட்டங்கள் இடையூறாக இருப்பதாக ஆடி இந்தியா தெரிவித்து இருக்கிறது.

    'இந்திய கார் சந்தை மற்றும் எலெக்ட்ரிக் வாகனங்கள் மீது அதீத நம்பிக்கை கொண்டிருக்கிறோம். எனினும், எங்களுக்கு நிலையான திட்டம் தேவை. திட்டம் நிலையாக இல்லையெனில், சரியாக திட்டம் தீட்ட முடியாது. இதன் காரணமாக ஜெர்மனியில் உள்ள எங்களின் தலைமையகத்திடம் முதலீட்டு திட்டத்தை நியாயப்படுத்த முடியாது,' என ஆடி இந்தியா தலைவர் பல்பிர் சிங் திலான் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார். 

     ஆடி எலெக்ட்ரிக் கார்

    2020 ஏப்ரல் மாதம் முதல் இந்திய சந்தையில் ஆடி நிறுவனம் டீசல் மாடல்களுக்கு மாற்றாக பெட்ரோல் மற்றும் எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்து வருகிறது. இதுவரை இந்திய சந்தையில் மூன்று எலெக்ட்ரிக் மாடல்களை ஆடி அறிமுகம் செய்துள்ளது. 
    ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் இந்தியாவில் விற்பனை டச் பாயிண்ட்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்த திட்டமிட்டுள்ளது.


    ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் 2022 நிதியாண்டின் இறுதிக்குள் நாடு முழுக்க ஆயிரம் விற்பனை டச் பாயிண்ட்களை கட்டமைக்க திட்டமிட்டுள்ளது. நாடு முழுக்க 300 புதிய விற்பனை டச் பாயிண்ட்களை திறக்க ஹீரோ எலெக்ட்ரிக் திட்டமிட்டுள்ளது.

    விற்பனை மையங்கள் மட்டுமின்றி உற்பத்தி திறனை அதிகப்படுத்தவும் ஹீரோ எலெக்ட்ரிக் திட்டமிட்டு வருகிறது. கடந்த நிதியாண்டுடன் ஒப்பிடும் போது தற்போதைய நிதியாண்டில் விற்பனை இருமடங்கு அதிகரிக்கும் என தெரிகிறது. 

     ஹீரோ எலெக்ட்ரிக் வாகனம்

    தற்போது ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் அடிரா, பிளாஷ், ஆப்டிமா ஹெச்.எக்ஸ். மற்றும் என்.வை.எக்ஸ். ஹெச்.எக்ஸ். போன்ற மாடல்களை இந்திய சந்தையில் விற்பனை செய்து வருகிறது. 
    கோமகி எலெக்ட்ரிக் நிறுவனத்தின் புதிய குரூயிசர் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் விரைவில் அறிமுகமாகிறது.


    கோமகி எலெக்ட்ரிக் வெஹிகில்ஸ் நிறுவனம் இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் குரூயிசர் மோட்டார்சைக்கிள் மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த எலெக்ட்ரிக் பைக் ஜனவரி 2022 வாக்கில் அறிமுகமாகிறது. 

    இந்தியாவில் பேட்டரி திறன் கொண்ட வாகனங்களை அதிக வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் கோமகி நிறுவனம் தனது ஐந்தாவது எலெக்ட்ரிக் வாகனத்தை இந்திய சந்தையில் அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. 

     கோமகி டீசர்

    ஏற்கனவே நான்கு எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்து வரும் கோமகி நிறுவனம் புதிதாக எலெக்ட்ரிக் குரூயிசர் மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது. எலெக்ட்ரிக் பைக் மட்டும் எலெக்ட்ரிக் திறன் கொண்ட ஸ்கூட்டர் மாடல்களையும் கோமகி இந்திய சந்தையில் விற்பனை செய்து வருகிறது. 
    ×