search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    ஆடி
    X
    ஆடி

    இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி செய்யும் ஆடி?

    ஆடம்பர கார் உற்பத்தியாளரான ஆடி விரைவில் எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியை இந்தியாவில் துவங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


    ஜெர்மன் நாட்டை சேர்ந்த ஆடி நிறுவனம் தனது எலெக்ட்ரிக் கார் மாடல்களை இந்தியாவிலேயே அசெம்பில் செய்யலாமா என ஆலோசனை செய்து வருகிறது. இந்தியாவில் முதலீடு செய்ய மத்திய அரசின் அதிக வரி மற்றும் நிலையற்ற திட்டங்கள் இடையூறாக இருப்பதாக ஆடி இந்தியா தெரிவித்து இருக்கிறது.

    'இந்திய கார் சந்தை மற்றும் எலெக்ட்ரிக் வாகனங்கள் மீது அதீத நம்பிக்கை கொண்டிருக்கிறோம். எனினும், எங்களுக்கு நிலையான திட்டம் தேவை. திட்டம் நிலையாக இல்லையெனில், சரியாக திட்டம் தீட்ட முடியாது. இதன் காரணமாக ஜெர்மனியில் உள்ள எங்களின் தலைமையகத்திடம் முதலீட்டு திட்டத்தை நியாயப்படுத்த முடியாது,' என ஆடி இந்தியா தலைவர் பல்பிர் சிங் திலான் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார். 

     ஆடி எலெக்ட்ரிக் கார்

    2020 ஏப்ரல் மாதம் முதல் இந்திய சந்தையில் ஆடி நிறுவனம் டீசல் மாடல்களுக்கு மாற்றாக பெட்ரோல் மற்றும் எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்து வருகிறது. இதுவரை இந்திய சந்தையில் மூன்று எலெக்ட்ரிக் மாடல்களை ஆடி அறிமுகம் செய்துள்ளது. 
    Next Story
    ×