என் மலர்
ஆட்டோமொபைல்ஸ் - Archive
ஜாகுவார் நிறுவனத்தின் 2021 எக்ஸ்.எப். மாடல் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் 2021 எக்ஸ்.எப். ஆடம்பர செடான் மாடலை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் தெய்தது. புதிய செடான் மாடல் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. 2021 ஜாகுவார் எக்ஸ்.எப். துவக்க விலை ரூ. 71.60 லட்சம், எக்ஸ்-ஷோரூம் ஆகும்.
பேஸ்லிப்ட் மாடல் என்பதால், எக்ஸ்.எப். மாடலின் வெளிப்புறம் சிறு மாற்றங்கள் மட்டும் செய்யப்பட்டு இருக்கிறது. முன்புற கிரில் சற்றே பெரிதாகவும், ஸ்டட்-ரக டிசைன் கொண்டிருக்கிறது. இதன் எல்.இ.டி. ஹெட்லேம்ப் வடிவமைப்பும் மாற்றப்பட்டு இருக்கிறது. பின்புறம் மெல்லிய எல்.இ.டி. டெயில் லைட்கள், புதிய கிராபிக் டிசைன் கொண்டிருக்கிறது.

உள்புறம் 11.4 இன்ச் பி.வி.-ப்ரோ தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி வழங்கப்படுகிறது. இத்துடன் புதிய ஸ்டீரிங் வீல், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், வயர்லெஸ் சார்ஜிங் பேட், ஹெட்-அப் டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது.
புதிய ஜாகுவார் எக்ஸ்.எப். மாடலில் 2.0 லிட்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 201 பி.ஹெச்.பி. திறன், 430 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இதன் 2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 247 பி.ஹெச்.பி. திறன், 365 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
போர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் 2021 குர்கா மாடல் இந்திய வினியோக விவரங்களை பார்ப்போம்.
போர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனம் 2021 குர்கா எஸ்.யு.வி. மாடலை கடந்த மாதம் அறிமுகம் செய்தது. இந்தியாவில் புதிய குர்கா மாடல் விலை ரூ. 13.59 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டது.
இந்த நிலையில், புதிய குர்கா மாடல் நாடு முழுக்க வினியோகம் செய்யும் பணிகள் துவங்கி உள்ளன. வரும் மாதங்களில் வினியோக பணிகள் பல்வேறு நிகரங்களுக்கு நீட்டிக்கப்பட இருக்கின்றன.

இந்திய சந்தையில் புதிய போர்ஸ் குர்கா மாடல் மஹிந்திரா தார் மாடலுக்கு போட்டியாக அமைகிறது. இரண்டாம் தலைமுறை மாடலான குர்கா பி.எஸ்.6 பல்வேறு மாற்றங்களை கொண்டிருக்கிறது. இந்த மாடலில் பி.எஸ்.6 புகை விதிகளுக்கு பொருந்தும் 2.6 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
புதிய 2.6 லிட்டர் டீசல் என்ஜின் 89 பி.ஹெச்.பி. திறன், 250 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. குர்கா பி.எஸ்.6 மாடலின் சஸ்பென்ஷன் டபுள் விஷ்போன் மற்றும் காயில் ஸ்ப்ரிங்களை கொண்டு மேம்படுத்தப்பட்டு இருக்கிறது.
ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தனது எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விரைவில் வினியோகம் செய்ய இருக்கிறது.
ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களின் டெஸ்ட் ரைடை துவங்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. தற்போதைய தகவல்களின்படி ஓலா எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோ மாடல்களின் டெஸ்ட் ரைடு நவம்பர் 10 ஆம் தேதி துவங்க இருக்கிறது.
டெஸ்ட் ரைடு மட்டுமின்றி ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் முதல் ஹைப்பர்-சார்ஜரை அந்நிறுவனத்தின் நிறுவனர் பாவிஷ் அகர்வால் அறிவித்தார். முன்பதிவில் மட்டும் ஓலா எலெக்ட்ரிக் இதுவரை ரூ. 1,100 கோடி வருவாய் ஈட்டி இருக்கிறது.

ஓலா எலெக்ட்ரிக் தனது முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை ஆகஸ்ட் 15 ஆம் தேதி அறிமுகம் செய்தது. பின் இதற்கான முன்பதிவு ஒரு மாதம் கழித்து தொடங்கியது.
இ-பைக்-கோ நிறுவனத்தின் ரக்கட் எலெக்ட்ரிக் வாகனம் இந்திய சந்தையில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இ-பைக்-கோ நிறுவனம் தனது ரக்கட் எலெக்ட்ரிக் பைக் ஒரு லட்சம் முன்பதிவுகளை பெற்று இருப்பதாக அறிவித்து இருக்கிறது. இந்தியாவில் இந்த மாடல் அறிமுகமாகி இரண்டு மாதங்கள் ஆகிவிட்டது. முன்பதிவில் மட்டும் ஆயிரம் கோடி ரூபாய் கிடைத்து இருப்பதாக இ-பைக்-கோ அறிவித்தது.
இதுவரை உருவாக்கப்பட்டதிலேயே உறுதியான எலெக்ட்ரிக் பைக் இது ஆகும். இந்திய விற்பனையை மேலும் சில நகரங்களுக்கு நீட்டிக்க இ-பைக்-கோ திட்டமிட்டு உள்ளது. ரக்கட் மாடலுக்கென முக்கிய விற்பனையாளர்களை மூன்று மாநிலங்களில் இ-பைக்-கோ தேர்வு செய்து இருக்கிறது. இத்துடன் 22 விற்பனை மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

வரும் மாதங்களில் மேலும் 50 ஆயிரத்திற்கும் அதிக முன்பதிவுகள் கிடைக்கும் என இ-பைக்-கோ எதிர்பார்க்கிறது. தீபாவளிக்கென இ-பைக்-கோ ரக்கட் மாடல் - ரெட், புளூ, பிளாக் மற்றும் ரக்கட் ஸ்பெஷல் எடிஷன் என நான்கு புதிய நிறங்களில் வெளியிடப்பட்டு இருக்கிறது.
டொயோட்டா நிறுவனத்தின் புதிய எம்.பி.வி. மாடல் காப்புரிமை விவரங்கள் வெளியாகி இருக்கிறது.
டொயோட்டா மோட்டார் நிறுவனம் ருமியன் மாடலுக்கு காப்புரிமை கோரி விண்ணப்பித்து இருக்கிறது. இந்த கார் மாருதி சுசுகியின் எர்டிகா மாடலை தழுவி உருவாகி இருக்கிறது. விரைவில் இந்த மாடல் இந்திய சந்தையின் எம்.பி.வி. பிரிவில் விற்பனைக்கு அறிமுகமாகும் என கூறப்படுகிறது.
இது டொயோட்டா பிராண்டிங்கில் விற்பனைக்கு வரும் மூன்றாவது மாருதி சுசுகி மாடல் ஆகும். சமீபத்தில் இந்த மாடல் தென் ஆப்ரிக்கா சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதுபற்றி டொயோட்டா சார்பில் எவ்வித அதிகாரப்பூர்வ தகவலும் வழங்கப்படவில்லை.

தற்போது தென் ஆப்ரிக்காவில் விற்பனை செய்யப்படும் ருமியன் மாடல் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகிறது. தோற்றத்தில் இந்த கார் மாருதி எர்டிகா எம்.பி.வி. போன்றே காட்சியளிக்கிறது. ருமியன் மாடலில் 1.5 லிட்டர், 4 சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்த என்ஜின் 138 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த என்ஜினுடன் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 4 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பன்ச் மாடல் வினியோக விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பன்ச் மைக்ரோ எஸ்.யு.வி. மாடலை இம்மாத துவக்கத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்தது. புதிய பன்ச் மாடல் விலை ரூ. 5.49 லட்சம், எக்ஸ்-ஷோரூம் ஆகும். இந்த காருக்கான முன்பதிவு ரூ. 21 ஆயிரம் கட்டணத்தில் நடைபெற்று வருகிறது. முன்பதிவை தொடர்ந்து டாடா பன்ச் வினியோகம் துவங்கி இருக்கிறது.
டாடா பன்ச் மாடல் மொத்தம் ஏழுவித நிறங்கள் மற்றும் நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இந்த மாடலில் 1.2 லிட்டர், 3 சிலிண்டர் ரெவோடிரான் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 85 பி.ஹெச்.பி. திறன், 113 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல், ஏ.எம்.டி. யூனிட் வழங்கப்படுகிறது.

புதிய பன்ச் மைக்ரோ எஸ்.யு.வி. மாடலில் ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், எல்.இ.டி. டி.ஆர்.எல்., பாக் லைட்கள், ரூப் ரெயில்கள், 16 இன்ச் டூயல் டோன் அலாய் வீல்கள், எல்.இ.டி. டெயில் லைட்கள் உள்ளன.
பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் டாமினர் 400 மோட்டார்சைக்கிள் டூரிங் அக்சஸரீக்களுடன் விற்பனைக்கு வந்தது.
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் புதிய டாமினர் 400 மோட்டார்சைக்கிளை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்த மோட்டார்சைக்கிள் டூரிங் அக்சஸரீக்கள் பிட்டிங்குடன் வழங்கப்படுகிறது. புதிய டாமினர் 400 விலை ரூ. 2.17 லட்சம், எக்ஸ்-ஷோரூம் ஆகும்.
புதிய டாமினர் 400 மாடலில் பேக்டரி-பிட் செய்யப்பட்ட டால் வைசர், ஹேண்ட் கார்டு, பேக் ரெஸ்ட் மற்றும் லக்கேஜ் கேரியர் உள்ளது. இத்துடன் என்ஜின் பேஷ் பிளேட், இண்டகிரேட் செய்யப்பட்ட மெட்டல் ஸ்கிட் பிளேட், புதிய லெக் கார்டு சேடில் ஸ்டே, மற்றும் யு.எஸ்.பி. சார்ஜிங் போர்ட் வழங்கப்பட்டு இருக்கிறது.

கூடுதல் அக்சஸரீக்கள் தவிர டாமினர் 400 மெக்கானிக்கல் அம்சங்களில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. அதன்படி புதிய டாமினர் 400 மாடலிலும் 373.3சிசி, சிங்கில் சிலிண்டர், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 39.42 பி.ஹெச்.பி. திறன், 35 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது.
மினி இந்தியா நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் மாடலுக்கான டீசர் வெளியிடப்பட்டு இருக்கிறது.
மினி இந்தியா நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் கார் டீசர் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளது. மினி நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் என தெரிகிறது. முன்னதாக மினி கூப்பர் எஸ்.இ. மாடல் 2019 வாக்கில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
தோற்றத்தில் மினி கூப்பர் எஸ்.இ. மாடல் அதன் ஐ.சி.இ. மாடலை போன்றே காட்சியளிக்கிறது. எனினும், எஸ்.இ. மாடலில் பிளான்க்டு-அவுட் முன்புற கிரில், குரோம் பார்டர், புதிய இ பேட்ஜ் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் புதிய அலாய் வீல்கள், டூயல் எக்சாஸ்ட் டெயில் பைப்கள் உள்ளன.

மினி எலெக்ட்ரிக் காரில் 32.6 கிலோவாட் ஹவர் லித்தியம் அயன் பேட்டரி பேக் வழங்கப்படுகிறது. இந்த மோட்டார் 181 பி.ஹெச்.பி. திறன், 270 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 3.7 நொடிகளில் எட்டிவிடும். மேலும் இது மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும்படி கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது.
வால்வோ நிறுவனம் இந்திய சந்தையில் புதிய எக்ஸ்.சி.90 மைல்டு ஹைப்ரிட் மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது.
வால்வோ கார் இந்தியா நிறுவனம் எக்ஸ்.சி.60 மற்றும் எஸ்90 மாடல்களை சமீபத்தில் இந்திய சந்தையில் அப்டேட் செய்தது. தற்போது எக்ஸ்.சி.90 மைல்டு ஹைப்ரிட் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்யும் பணிகளில் வால்வோ ஈடுபட்டு வருகிறது.
முந்தைய மாடல்களை போன்றே புதிய எக்ஸ்.சி.90 மாடலும் அப்டேட் செய்யப்பட இருக்கிறது. அதன்படி புதிய எக்ஸ்.சி.90 மாடலில் ட்வீக் செய்யப்பட்ட பம்ப்பர்கள், புதிய அலாய் வீல் டிசைன், குரோம் பிட்டிங் உள்ளிட்டவை வழங்கப்பட இருக்கிறது.

தற்போதைய மாடலில் உள்ள 2 லிட்டர் டீசல் என்ஜினுக்கு மாற்றாக 2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் 10.4 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் செயல்திறன் மற்றும் இதர விவரங்கள் இன்னும் மர்மமாகவே உள்ளது.
மாருதி சுசுகி நிறுவனம் பலேனோ பிரீமியம் ஹேட்ச்பேக் காரின் பேஸ்லிப்ட் மாடல் வெளியீட்டு விவரங்களை பார்ப்போம்.
மாருதி சுசுகி நிறுவனம் தனது பலேனோ பேஸ்லிப்ட் மாடலை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த மாடல் அடுத்த ஆண்டு அறிமுகமாகும் என கூறப்படுகிறது. முன்னதாக இந்த மாடல் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட படங்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கின்றன.
அந்த வகையில் புதிய பலேனோ பேஸ்லிப்ட் மாடல் முற்றிலும் புதிய கிரில், பம்ப்பர், ரீ-ஸ்டைல் செய்யப்பட்ட ஹெட்லேம்ப்கள் வழங்கப்படும் என தெரிகிறது. இதன் பின்புறமும் மாற்றப்பட்டு புதிய பம்ப்பர் மற்றும் டெயில்கேட்கள் வழங்கப்படலாம். காரின் பக்கவாட்டில் அதிக மாற்றங்கள் செய்யப்படாது என்றே தெரிகிறது.

வெளிப்புற மாற்றங்கள் தவிர இதன் ஹார்டெக்ட் பிளாட்பார்மில் எந்த மாற்றமும் செய்யப்படாது என கூறப்படுகிறது. உள்புறமும் சிறு மாற்றங்கள் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் டேஷ்போர்டு மாற்றப்படுகிறது.
இந்த காரில் ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி, சிறிய எம்.ஐ.டி. இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், புஷ் பட்டன் ஸ்டார்ட் ஸ்டாப் போன்ற அம்சங்களும் வழங்கப்படுகிறது.
கார் பயன்படுத்துவோர் அதன் எரிபொருள் செலவீனத்தை குறைக்க என்ன செய்ய வேண்டும் என்பதை தொடர்ந்து பார்ப்போம்.
இந்தியாவில் எரிபொருள் விலை அன்றாடம் உயர்ந்து கொண்டே தான் இருக்கிறது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை வரலாறு காணாத வகையில் அதிகரித்து வரும் நிலையில், பலர் எலெக்ட்ரிக் வாகனங்களை உபயோகிக்க துவங்கியுள்ளனர். சிலர் ஏற்கனவே பயன்படுத்தும் வாகனங்களில் மைலேஜை அதிகப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.
எரிபொருள் விலை உயர்வு மற்றும் சிக்கனமாக பணம் செலவழிக்கவும் கார் உபயோகிப்பவர்கள் மைலேஜ் அதிகம் தரும் கார்களை தான் விரும்புகின்றனர். கார் வாங்கும்போது சிறந்த மைலேஜ் தரும் கார் வாங்குவது அவசியம். அதிகம் செலவழித்து கார் வாங்கும் போது, அதனை சீராக பராமரித்தால் தான் அதன் மைலேஜ் சிறப்பாக இருக்கும். இதற்கு காரை சிறந்த முறையில் கையாள்வது அவசியம் ஆகும். காரின் மைலேஜ் அதிகரிக்க என்னென்ன செய்ய வேண்டும் என தொடர்ந்து பார்ப்போம்.
கார் வாங்கும்போது அதிக மைலேஜ் தரும் காரை தேர்ந்தெடுப்பது அவசியம். விலை கூடுதலாக இருந்தாலும் பரவாயில்லை அதன் மூலம் நமது தினசரி பயன்பாட்டு செலவை குறைக்க முடியும்.
கார் பராமரிப்பு சிறந்த கலை. பராமரிப்பில்லாத கார் அதிகமான எரிபொருளை செலவழிக்கும்.

காரின் ஏர்பில்டர் சுத்தமாக இருந்தால் சிறந்த மைலேஜ் பெறலாம். பில்டர் மாற்ற வேண்டியிருந்தால் மாற்றுவது அவசியம். ஸ்பார்க் பிளக் நல்லதாக இருக்க வேண்டும். அதிகமான தேய்மானம் உள்ள டயர்கள், ஓடும் திறனை குறைக்கும். அதனால் இழுவை திறன் குறையும். எனவே, சிறந்த டயர்களை பயன்படுத்த வேண்டும்.
கார் ஓட்டும்போது அடிக்கடி பிரேக் பிடித்து ஓட்டுவதால் அதிகமான எரிபொருள் இழப்பு ஏற்படும். எனவே, டிராபிக் ஜாம் மற்றும் அதிக நெருக்கடியான சாலைகளில் கவனமாக ஓட்ட வேண்டும்.
கைகளில் இயக்கும் கியர்களை மாற்றும்போது அதிகமாக அழுத்தம் கொடுத்து ஆக்சிலேட்டரை அழுத்த கூடாது. மென்மையாக அழுத்தி இலகுவாக கியரை மாற்ற வேண்டும். இதனால், எரிபொருள் இழப்பு ஏற்படாது.
டிவிஎஸ் நிறுவனம் தனது ரேடியான் மோட்டார்சைக்கிளை இரண்டு புதிய நிறங்களில் விற்பனைக்கு அறிமுகம் செய்து இருக்கிறது.
டிவிஎஸ் மோட்டார் கம்பெனி நிறுவனம் ரேடியான் மாடலை இரண்டு புதிய நிறங்களில் அறிமுகம் செய்து இருக்கிறது. அதன்படி ரேடியான் மாடல் தற்போது ரெட் மற்றும் பிளாக் மற்றும் புளூ மற்றும் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இரு நிறங்களிலும் டூயல் டோன் பியூவல் டேன்க் தவிர மோட்டார்சைக்கிள் முழுக்க பிளாக் நிறம் கொண்டிருக்கிறது.
பக்கவாட்டில் மட்டும் புளூ அல்லது ரெட் நிற பெயிண்ட் செய்யப்படுகிறது. புதிய டூயல் டோன் நிறம் தவிர ரேடியான் மாடலின் என்ஜின், சஸ்பென்ஷன் மற்றும் பிரேக் போன்ற அம்சங்களில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

இந்த மாடலில் எல்.இ.டி. டி.ஆர்.எல்., யு.எஸ்.பி. சார்ஜிங் போர்ட் வழங்கப்பட்டு இருக்கிறது. டூயல் டோன் மாடல்களின் விலை மற்ற வேரியண்ட்களை விட விலை அதிகம் ஆகும். டிவிஎஸ் ரேடியான் டிரம் வேரியண்ட் விலை ரூ. 68,982 ஆகும். இதன் டிஸ்க் பிரேக் வேரியண்ட் விலை ரூ. 71,982 ஆகும்.
புதிய நிறங்கள் சேர்த்து டிவிஎஸ் ரேடியான் மாடல் மொத்தம் பத்து நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் பண்டிகை காலம் துவங்க இருப்பது மற்றும் ரேடியான் மாடலின் 4 லட்சம் யூனிட்கள் விற்பனையை அனுசரிக்கும் வகையில் புதிய நிற வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.






