search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆட்டோ டிப்ஸ்"

    • மென்மையாக திராட்டில் செய்தால், காரின் எரிபொருள் தேவையை பெருமளவுக்கு குறைக்க முடியும்.
    • கார்களில் கியர் மாற்றும் முறை அதன் மைலேஜிலும் பிரதிபலிக்கும்.

    மழை காலத்தில் கார் ஓட்டுவது சற்றே சவாலான காரியம் ஆகும். பொதுவாக மழை காலங்களில் கார் ஓட்டும் போது, மைலேஜ் சற்று குறைவதை பலரும் அனுபவித்து இருப்பர். அந்த வகையில், மழை காலங்களிலும் காரின் மைலேஜ் குறையாமல் இருக்க என்னென்ன செய்யலாம் என்பது பற்றி தொடர்ந்து பார்ப்போம்.

    திட்டமிடல்:

    சமயங்களில் குறுக்கு வழியை தேர்வு செய்வது ஆபத்தில் முடியலாம். அதுவும் மழை காலங்களில் எந்த பகுதியில் தண்ணீர் தேங்கி இருக்கும் என்பது தெரியாது. இதனால் மழை காலங்களில் குறுக்கு வழிகளை தவிர்த்து, முன்கூட்டியே பயணத்தை திட்மிடுவது நல்லது.

     

    திராட்டில்:

    கார் பயன்பாட்டில் திராட்டில் செய்வதில் மென்மையாக செயல்பட்டால் காரின் மைலேஜ் சீராக அதிகப்படுத்த முடியும். காரை அக்செல்லரேட் செய்யும் போது தான் அதிக எரிபொருள் தேவைப்படும். இதனால் மென்மையாக திராட்டில் செய்தால், காரின் எரிபொருள் தேவையை பெருமளவுக்கு குறைக்க முடியும்.

    டயர் அழுத்தம்:

    டயரின் அழுத்தத்தை அதிகப்படுத்தினால், காரின் மைலேஜ் அதிகரிக்கும். ஆனால் இவ்வாறு செய்யும் போது க்ரிப் இழக்க நேரிடலாம். இது மிகவும் ஆபத்தான காரியம் ஆகும். இதன் காரணமாக மழை காலங்களில் கார் டயர் அழுத்தத்தை உற்பத்தியாளர் பரிந்துரைக்கும் படி வைத்துக் கொள்வது நல்லது.

     

    ஏசி:

    மழை காலங்களில் கார்களை ஏசி இல்லாமல் பயன்படுத்தும் போது வின்ட்ஷீல்டு முழுக்க புகை மூட்டம் ஏற்பட்டு சாலை சரியாக தெரியாமல் போகும் வாய்ப்புகள் உண்டு. அந்த வகையில், மழை காலங்களில் ஏசி-யை அதிக குளிர்ச்சியை ஏற்படுத்தும் அளவுக்கு வைக்காமல், குறைந்த குளிர்ச்சி ஏற்படும் வகையில் வைத்துக் கொள்ளலாம்.

    கியர்:

    கார்களில் கியர் மாற்றும் முறை அதன் மைலேஜிலும் பிரதிபலிக்கும். அந்த வகையில், கார் ஓட்டும் போது முடிந்தவரை அதிகபட்ச கியருக்கு விரைந்து மாறிக் கொள்வது நல்லது. குறைந்த கியரில் வாகனம் ஓட்டும் போது அதிக எரிபொருள் செலவாகிவிடும்.

    Photo Courtesy: Freepik

    • மிக எளிமையான டூல்களை கொண்டு கார் பேட்டரியை எளிதில் மாற்றலாம்.
    • நீங்களாகவே காரின் பேட்டரியை மாற்றும் போது, பணத்தை மிச்சப்படுத்தலாம்.

    கார்களில் வழங்கப்படும் பேட்டரி குறைந்த பட்சம் ஐந்து ஆண்டுகள் வரையிலும், எவ்வித பிரச்சினையும் இன்றி சீராக இயங்கும் திறன் கொண்டிருக்கும். எனினும், இதைத் தொடர்ந்து காரின் பேட்டரியை மாற்றுவதற்கான தேவை கட்டாயம் ஏற்படும்.

    அந்த வகையில் காரின் பேட்டரியை மாற்றுவதற்கான தேவை ஏற்படும் போது, நீங்களாகவே கார் பேட்டரியை மாற்ற என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி தொடர்ந்து பார்ப்போம். மிக எளிமையான டூல்களை கொண்டு கார் பேட்டரியை எளிதில் மாற்றிவிட முடியும். நீங்களாகவே காரின் பேட்டரியை மாற்றிக் கொள்ளும் போது, ஒரளவுக்கு பணத்தை மிச்சப்படுத்தவும் முடியும்.

     

    கார் பேட்டரியை அறிந்து கொள்ளுங்கள்:

    ஆன்லைன் வலைதளம் அல்லது உள்ளூர் பேட்டரி கடைகளில் பேட்டரியை வாங்கும் முன், கார் பேட்டரியின் அம்சங்கள் அறிந்து வைப்பது அவசியம் ஆகும். இதற்கு பேட்டரி பேக் மீதோ அல்லது, யூசர் மேனுவலை பார்க்க வேண்டும்.

    பழைய பேட்டரியை கண்டறிதல்:

    அனைத்து கார்களிலும் பேட்டரி, பொனெட்டின் கீழ் பொருத்தப்பட்டு இருக்காது. சில கார்களில் பேட்டரி, பூட் பகுதியிலும் பொருத்தப்பட்டு இருக்கலாம். இதற்கும் யூசர் மேனுவலை பார்க்கவோ அல்லது சர்வீஸ் சென்டரை தொடர்பு கொண்டு பேட்டரி இருக்கும் இடத்தை அறிந்து கொள்ளலாம்.

     

    துண்டித்தல்:

    கார் பேட்டரியை கண்டறிந்த பிறகு, அதில் இணைக்கப்பட்டு இருக்கும் வயர்களை கழற்றி விட வேண்டும். அனைத்து பேட்டரி பேக்-களிலும் இரண்டு முனையங்கள் இருக்கும். ஒன்று பிளாக் வயர் மூலமாகவும், மற்றொன்று ரெட் வயர் மூலமாகவும் இணைக்கப்பட்டு இருக்கிறது. இதில் ரெட் வயர் பாசிடிவ் முனையம் ஆகும்.

    சுத்தம் அவசியம்:

    காரில் இருந்த பழைய பேட்டரியை கழற்றிய பிறகு, பேட்டரி முனையங்களை சுத்தம் செய்ய வேண்டியது அவசியம் ஆகும். சில சமயங்களில் பேட்டரி முனையங்களில் அரிப்பு ஏற்பட்டு இருக்கலாம். இவ்வாறு முனையங்கள் அரித்த நிலையில் இருப்பது கனெக்டர்களின் திறனுக்கு நல்லது கிடையாது.

    இதன் காரணமாக பேட்டரி முனையம் மற்றும் பேட்டரி டிரே உள்ளிட்டவைகளை சுத்தம் செய்ய வேண்டும். இவ்வாறு செய்யும் போது மின்சாரம் சீராக பாயும். முனையங்கள் சுத்தமாக இருக்கும் போது, பேட்டரி ஆயுள் நீடிக்கும்.

     

    புதிய பேட்டரி:

    முனையங்கள் மற்றும் பேட்டரி டிரே சுத்தம் செய்த பிறகு, புதிய பேட்டரியை இன்ஸ்டால் செய்து விடலாம். இன்ஸ்டால் செய்யும் போது, பிளாக் வயரை நெகடிவ் முனையத்திலும், ரெட் வயரை பாசிடிவ் முனையத்திலும் இணைக்க வேண்டும். பேட்டரி முனையங்கள் சீராக இணைக்கப்பட்டு இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும். இதன் பிறகு பேட்டரி பேக்-ஐ பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    • கனமழை காலக்கட்டங்களில் காரின் பேட்டரி இணைப்பை துண்டித்து விடுவது நல்லது.
    • வெள்ள பாதிப்பில் சிக்கிய கார்களை சரி செய்ய அதிக பணம் செலவாகும்.

    நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பருவமழை காலம் துவங்கி விட்டது. கேரளா, மகாராஷ்டிரா மாநிலங்களில் கனமழை வெளுத்து வாங்கும் நிலையில், தமிழகத்திலும் வானிலை அடிக்கடி மாறிக் கொண்டே தான் வருகிறது. வரும் மாதங்களில் பருவமழை பெய்யும் என்பதால், கார் பயன்படுத்துவோர் அதனை பராமரிக்க என்னென்ன செய்ய வேண்டும் என்பது பற்றி தொடர்ந்து பார்ப்போம்.

    பார்கிங்கில் கவனம் தேவை:

    வெள்ள பாதிப்பில் சிக்காமல் இருக்க கார்களை எளிதில் தண்ணீர் சூழும் பகுதிகளில் பார்கிங் செய்வதை தவிர்க்க வேண்டும். மழை பெய்யும் காலத்தில் முன்கூட்டியே விழிப்புடன் செயல்பட்டு காரை பாதுகாப்பான இடத்தில் பார்க் செய்வது பெருமளவு பாதிப்பை தவிர்க்க உதவும். வெள்ள பாதிப்பில் சிக்கிய கார்களை சரி செய்ய அதிக பணம் செலவாகும் என்பதால் எச்சரிக்கையாக இருந்து பணத்தை மிச்சம் செய்யலாம்.

    பேட்டரி பாதுகாப்பு:

    கனமழை காலக்கட்டங்களில் காரின் பேட்டரி இணைப்பை துண்டித்து விடுவது காரில், ஷாட் சர்கியூட் அல்லது எலெக்ட்ரிக் பாதிப்புகள் ஏற்படுவதை தவிர்க்க செய்யும். புதிய கார் மாடல்களில் எலெக்ட்ரிக் சார்ந்த பிரச்சினைகளை சரி செய்வது சற்றே கடினமான காரியம் ஆகும்.

     

    ஜன்னல்களில் கவனம்:

    மழை மட்டுமின்றி கார் பயன்பாட்டின் போது பின்பற்ற வேண்டிய மிக முக்கிய விஷயம் ஜன்னல்களை மூடி வைப்பது. பலரும் கார் ஜன்னல் மற்றும் கதவுகளை சரியாக மூடாமல் விட்டுவிடுவர். இதனை சரியாக செய்தால், மழை காலங்களில் கார்களுக்குள் நீர் புகாமல் இருக்கும்.

    கசிவு மற்றும் துரு:

    காரில் ஏதேனும் பகுதியில் கசிவு அல்லது துருப்பிடித்து இருக்கிறதா என்பதை சரிபார்க்க வேண்டியது அவசியம் ஆகும். மழை காலங்களில் கார் எளிதில் துருப்பிடிக்கும் அபாயம் அதிகம் ஆகும். இதனை சரிபார்க்கும் போது கார்களில் உள்ள ரப்பர் பீடிங்களையும் சரிபார்ப்பது நல்லது.

    ரப்பர் மேட்:

    காரை சுத்தமாக வைத்துக் கொள்ள ரப்பர் மேட் பயன்படுத்தலாம். ரப்பர் மேட்களை சுத்தப்படுத்துவது எளிமையான காரியம் ஆகும். இதனை நிமிடங்களில் கழுவவும், காய வைக்கவும் முடியும். இதுதவிர ரப்பர் மேட்கள் கார்பெட் லைனிங் ஈரமாவதை தடுக்கும். 

    • பிரகாசமான நிறங்களில் கிடைக்கும் ஹெல்மட்களை அணிவது நல்லது.
    • மழையில் பைக் ஓட்டும் சூழலை எல்லா நேரத்திலும் தவிர்த்து விட முடியாது.

    மழையில் நனைந்து கொண்டு மோட்டார்சைக்கிள் ஓட்டும் வழக்கம் அனைவருக்கும் இருக்காது. சிலருக்கு இவ்வாறு செய்வது பிடிக்கும், சிலருக்கு மழையில் பைக் ஓட்டுவது சிக்கலான காரியமாக இருக்கும். ஒருசிலர் எதற்கு ரிஸ்க் எடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மழையில் பைக் ஓட்டுவதை தவிர்த்து விடுவர்.

    எதுவாயினும், மழையில் பைக் ஓட்டும் சூழலை எல்லா நேரத்திலும் தவிர்த்து விட முடியாது. அந்த வகையில், மழையில் பைக் ஓட்டும் நிலை ஏற்பட்டால், சில வழிமுறைகளை பின்பற்றினால் அச்சம் கடந்து பாதுகாப்பாகவும், மகிழ்ச்சியாகவும் பயணத்தை நிறைவு செய்து விடலாம். அந்த வகையில், மழையில் பைக் ஓட்டும் போது கவனிக்க வேண்டியவற்றை தொடர்ந்து பார்ப்போம்.

     

    நிறங்கள்:

    மழையோ, வெயிலோ எந்த காலத்தில் பைக் எடுத்தாலும், சீட்டில் உட்காரும் முன் தேவையான பாதுகாப்பு அக்சஸரிக்களை அணிந்து கொள்வது அவசியம் ஆகும். மழையின் போது சாலையை அதிக தெளிவாக பார்க்க முடியாது என்பதால், சற்றே பிரகாசமான நிறங்களில் கிடைக்கும் ஹெல்மட்களை அணிவது நல்லது. இத்துடன் நீர்புகாத வசதி கொண்ட ஜாக்கெட் அணிந்து கொள்ள வேண்டும். இதுவும் சற்றே பிரகாசமான நிறம் கொண்டிருத்தல் நல்லது.

    வேகம்:

    மழையில் பைக் ஓட்டும் போது முன்னால் செல்லும் வாகனத்தில் இருந்து குறைந்தபட்சம் 15 முதல் 20 மீட்டர்கள் இடைவெளி விட்டு செல்வது அவசியம் ஆகும். மேலும் பைக்கை முடிந்த வரை குறைந்த வேகத்தில் இயக்க வேண்டும்.

    ஒருவேளை காரின் பின்னாடி பைக் ஓட்ட வேண்டிய நிலை ஏற்பட்டால், பைக்கினை டயர் காரின் பின் செல்வதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இவ்வாறு பைக் ஓட்டும் போது, கார் ஏதேனும் பள்ளத்தில் இறங்குவதை முன்கூட்டியே அறிந்து கொள்ள முடியும். இதனால் வீண் பதற்றம் ஏற்படுவதை தடுக்க முடியும்.

     

    பாதை:

    மழை காலங்களில் எல்லா சாலைகளிலும் நீர் தேங்கி நிற்பதில்லை. சில இடங்களில் சாலையில் நீர் உடனடியாக வடிந்து விடும். சில பகுதிகளில் ஈரம் காய்ந்துவிடும். இதுபோன்ற பகுதிகளில் ஈரமான பகுதியை தவிர்த்து, நீர் காய்ந்து போன பகுதியில் பைக் ஓட்டலாம். ஈரமான தரையை விட ஈரமற்ற தரையில் பைக் அதிக சீராகவும், கண்ட்ரோல் சிறப்பாகவும் இருக்கும்.

    சுற்றுப்புறம்:

    மழையின் போது சுற்றுப்புறங்களை அதிக கவனமுடன் கையாள வேண்டியது அவசியம் ஆகும். அடிக்கடி கண்ணாடிகளை சரிபார்ப்பதை வழக்கமாக வைத்திருக்க வேண்டும். இன்டர்செக்ஷன் அல்லது ரவுன்டானா உள்ளிட்டவைகளை கடக்கும் போது, மற்ற வாகனங்கள் வருகிறதா என்பதை கூர்ந்து கவனிக்க வேண்டும். 

    • இந்திய சந்தையில் பயன்படுத்திய கார் மாடல்கள் விற்பனை அதிகரித்து வருகிறது.
    • பயன்படுத்திய கார் வாங்கும் போது பல்வேறு விஷயங்களில் விழிப்பாக இருப்பது அவசியம் ஆகும்.

    புதிய கார் வாங்க வங்கிகள் ஏராளமான நிதி சலுகைகளை வழங்கி வருகின்றன. என்ற போதிலும், புதிய கார் வாங்குவதற்கான பட்ஜெட் சற்று அதிகம் ஆகும். இது அனைவருக்கும் ஏற்றதாக இருக்காது. இதை எதிர்கொள்ளவே பலரும் பயன்படுத்திய கார் மாடல் வாங்குகின்றனர். இந்தியாவிலும் பயன்படுத்தப்பட்ட கார் மாடல்கள் விற்பனை அதிகரிக்க துவங்கி இருக்கிறது.

    ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட கார் மாடலை வாங்குவது அத்தனை எளிதான காரியம் இல்லை. நீங்கள் வாங்கும் பயன்படுத்தப்பட்ட காரில் தீர்க்க முடியாத அல்லது அடிக்கடி பிரச்சினை தரக்கூடிய கோளாறு இருக்க அதிக வாய்ப்புகள் உண்டு. மேலும் அந்த கார் விபத்தில் சிக்கிய ஒன்றாகவும் இருக்கலாம். அந்த வகையில், காரை செகன்ட் ஹேன்ட்-ஆக வாங்கும்போது கவனிக்க வேண்டியவற்றை தொடர்ந்து பார்ப்போம்.

     

    கவனம் அவசியம்:

    விலையை கேட்கும் போது கவர்ச்சிகரமான ஒன்றாக தெரிந்தாலும், பிரீமியம் கார்கள் மற்றும் எஸ்யுவிக்களை வாங்கினால், அவற்றை பராமரிப்பதற்கான செலவீனங்கள் அதிகரிக்கும். இதனால் உங்களின் தேவைக்கு பட்ஜெட்டில் பார்ப்பதை விட, பயன்பாட்டுக்கு தேவையான கார் மாடலை தேர்வு செய்வது நல்லது.

    காரின் நிலை:

    காரை தேர்வு செய்த பிறகு, அதனை முழுமையாக சரிபார்க்க வேண்டியது அவசியம் ஆகும். உங்களுக்கு கார்களை பற்றிய தொழில்நுட்ப விவரங்கள் தெரியாத பட்சத்தில், அந்த விஷயத்தில் விவரம் அறிந்தவர்கள் உதவியை நாடுவது நல்லது. கார் வாங்கும் முன் அதன் நிலை எப்படி இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

    இதில் காரின் ஒட்டுமொத்த தோற்றம், அதன் இன்டீரியர் பாகங்கள், டயரின் நிலை உள்ளிட்டவைகளை முழுமையாக சரிபார்க்க வேண்டியது அவசியம் ஆகும்.

     

    டெஸ்ட் டிரைவ்:

    கார்கள் பெரும்பாலும் தோற்றத்தில் மிகவும் அழகாக காட்சியளிக்கும். ஆனால், ஓட்டும் போது தான் அவற்றின் உண்மையான நிலை நமக்கு தெரியவரும். அந்த வகையில், காரை வாங்கும் முன் அதனை டெஸ்ட் டிரைவ் செய்வது நல்லது. டெஸ்ட் டிரைவ் முடித்த பிறகு, கார் நிலை பற்றி ஏதேனும் சந்தேகம் இருந்தாலோ அல்லது, ஏதேனும் கோளாறு இருக்குமோ என்ற எண்ணம் எழுந்தால், அதனை வாங்காமல் தவிர்த்து விடுவது நல்லது.

    பராமரிப்பு வரலாறு:

    கார் நல்ல நிலையில், இருப்பதை உறுதிப்படுத்திய பிறகு காரை ஓட்டுவதற்கு உங்களுக்கு பிடித்திருந்தால், இந்த விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம் ஆகும். கார் பயன்படுத்தும் அனைவரும் அதன் பராமரிப்பு விஷயங்களை தகவல்களாக வைத்திருப்பது இல்லை. ஆனால் ஒருசிலர் இவ்வாறு செய்யும் வழக்கம் கொண்டுள்ளனர். இதனால், கார் பராமரிப்பு எத்தனை கால அளவில் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது என்பதை சரிபார்ப்பது நல்லது.

     

    தரவுகள்:

    மேலே குறிப்பிடப்பட்டு இருக்கும் விவரங்கள் அனைத்தும் சரியாக இருப்பின், கடைசியாக காருக்கான பதிவு சான்று, காப்பீடு போன்ற தரவுகள் சரியாக உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். இதோடு காரை வாங்கியதும் பதிவு சான்றில் உங்களின் பெயரை இணைத்துக் கொள்ள வேண்டியது அவசியம் ஆகும்.

    • கார் பயன்படுத்துவோர் வைப்பர் பிலேடுகளை சீரான இடைவெளியில் மாற்ற தவறி விடுகின்றனர்.
    • வின்ட்ஷீல்டில் ஸ்கிராட்ச் ஏற்படுத்துவதோடு, வைப்பர் பிலேடுகளையும் சேதப்படுத்தும்.

    கார் பாகங்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவைகளில் ஒன்று வைப்பர் பிலேடுகள். இவற்றை எளிதில் சரி செய்யவும், குறைந்த செலவில் மாற்றியும் விட முடியும். எனினும், கார் பயன்படுத்துவோர் வைப்பர் பிலேடுகளை சீரான இடைவெளியில் மாற்ற பெரும்பாலும் தவறி விடுகின்றனர்.

    மழை காலங்களில் வைப்பர் பிலேடுகளில் உள்ள ரப்பர் பாகம் வின்ட்ஸ்கிரீனில் உள்ள நீரை சுத்தப்படுத்தி, சாலையை தெளிவாக பார்க்க செய்கிறது. எனினும், இந்த ரப்பர் பாகம் நாளடைவில் பாழாகிவிடும். அந்த வகையில் காரின் வைப்பர் பிலேடுகளை பராமரிக்க எளிய டிப்ஸ்களை தொடர்ந்து பார்ப்போம்.

     

    வின்ட்ஷீல்டு பயன்படுத்தாமலேயே இருக்கும் போது, அவைகளில் தூசு படியும். பிறகு வைப்பர் ஆன் செய்யப்பட்டால், தூசியும் வின்ட்ஷீல்டில் பாதிப்பை ஏற்படுத்தும். இது வின்ட்ஷீல்டில் ஸ்கிராட்ச் ஏற்படுத்துவதோடு, வைப்பர் பிலேடுகளையும் சேதப்படுத்தும். இதனால் வைப்பர் பயன்படுத்தும் முன், வின்ட்ஸ்கிரீனை சுத்தப்படுத்துவது அவசியம் ஆகும்.

     

    கார்களை எப்போதும் மறைக்கப்பட்ட இடத்திலோ அல்லது மூடப்பட்ட பார்கிங்கில் நிறுத்துவது நல்லது. இவ்வாறு செய்யும் போது வைப்பர் பிலேடின் ரப்பர் பாகம் எளிதில் பாதிக்கப்படாது. மேலும் ரப்பர் பிலேடு மென்மையாகவும், சீராகவும் இயங்க செய்கிறது. வைப்பரில் உள்ள ரப்பர் பிலேடு பிளாஸ்டிக் மூலம் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    இதனால் அதிக ரசாயனம் இல்லாத டிடர்ஜென்ட்களை கொண்டு காரின் வின்ட்ஷீல்டை சுத்தப்படுத்த வேண்டும். இவ்வாறு செய்யும் போது வைப்பர் பிலேடில் ஏற்படும் சேதம் குறைக்கப்படும்.

    • இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்கள் சந்தை பெருமளவு வளர்ச்சியை பதிவு செய்து வருகிறது.
    • தொடர்ச்சியான பயன்பாடு காரணமாக பேட்டரி பேக் பாழாகும் வாய்ப்புகள் அதிகம்.

    இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் வாகனங்கள் விற்பனை கணிசமான அளவுக்கு அதிகரித்து வருகிறது. சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத திறன், எளிய பயன்பாடு மற்றும் பராமரிப்பு மத்திய அரசின் ஃபேம் 2 திட்டத்தின் கீழ் மானியம் உள்ளிட்டவை எலெக்ட்ரிக் வாகன பயன்பாட்டிற்கு முக்கிய காரணங்களாக உள்ளன.

    உலகம் முழுக்க செகன்ட் ஹேண்ட் எனப்படும், ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட பொருட்களை விலைக்கு வாங்கி, அதனை மீண்டும் பயன்படுத்தும் வழக்கம் உள்ளது. இதே வழக்கம் வாகன பயன்பாட்டிற்கு அதிகம் பொருந்தும். அந்த வகையில், ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட எலெக்ட்ரிக் இருசக்கர அல்லது நான்கு சக்கர வாகனம் வாங்க திட்டமிடுகின்றீர்களா? இவ்வாறு செய்யும் முன் என்னவெல்லாம் கவனிக்க வேண்டும் என்பது பற்றி தொடர்ந்து பார்ப்போம்.

    இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்கள் சந்தை பெருமளவு வளர்ச்சியை பதிவு செய்து வருகிறது. எனினும், இன்றைய காலக்கட்டத்தில் பெட்ரோல், டீசல் வாகனங்கள் விற்பனையாகும் அளவுக்கு எலெகட்ரிக் வாகனங்கள் விற்பனையாவதில்லை. பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு இணையான விற்பனையை எலெக்ட்ரிக் வாகனங்கள் எட்டுவதற்கு மேலும் சில காலம் ஆகும்.

    எலெக்ட்ரிக் வாகனங்கள் விற்பனை சீராக இருந்து வருகிறது. இதே போன்று எலெக்ட்ரிக் வாகனங்கள் துறை மீதான விருப்பமும் அதிகரித்து வருவதால், பலர் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்க விருப்பம் தெரிவித்து வருகின்றனர். தற்போது எலெக்ட்ரிக் வாகனங்கள் விலை கணிசமான அளவுக்கு அதிகமாக நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக குறிப்பிட்ட வாடிக்கையாளர்கள் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்கும் திட்டத்தை ஒத்திவைப்பது, தற்காலிகமாக ரத்து செய்வது போன்ற முடிவுகளை எடுக்கின்றனர்.

    பேட்டரி பேக் ஆயுள்:

    எலெக்ட்ரிக் வாகனங்களில் ஏற்படும் சிக்கல்களில் ஒன்று இது. தொடர்ச்சியான பயன்பாடு காரணமாக பேட்டரி பேக் பாழாகும் வாய்ப்புகள் உண்டு. சீரற்ற சார்ஜிங் பழக்கங்கள் இதனை வெகு விரைவில் ஏற்படுத்த செய்யும். பெட்ரோல் அல்லது டீசல் என்ஜின் வாகனங்களில் என்ஜினில் ஏற்படும் விசித்திர சத்தம் கொண்டு என்ஜின் கோளாறை கண்டறிந்து விடலாம். எலெக்ட்ரிக் வாகனங்களை பொருத்தவரை பேட்டரியை முழுமையாக தீர்ந்து போக செய்து அதன்பிறகு மீண்டும் முழு சார்ஜ் செய்ய வேண்டும்.

    இவ்வாறு செய்யும் போது பேட்டரியை சார்ஜ் செய்ய, குறிப்பிட்ட நிறுவனம் தெரிவித்ததை விட அதிக நேரம் ஆகும் பட்சத்திலோ அல்லது விரைவில் சார்ஜ் இறங்கும் பட்சத்திலோ பேட்டரி பாழாகி இருப்பதை உறுதிப்படுத்தி விடலாம். ஒருவேளை பேட்டரி பாழாகும் பட்சத்தில் அதனை எளிதில் சரி செய்யவோ அல்லது மாற்றிக் கொள்ளவோ முடியும்.

     

    தேய்மானம்:

    பிரீமியம் கார்கள் மற்றும் எலெக்ட்ரிக் வாகனங்கள் விரைந்து தேய்மானம் ஆகிவிடும். இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டும் பெரும்பாலான எலெக்ட்ரிக் வாகனங்கள் பிரீமியம் மாடலாகவே கருதப்படுகின்றன. இதன் காரணமாகவே பயன்படுத்தப்பட்ட எலெர்க்ரிக் வாகனத்தை வாங்க விரும்புகின்றனர்.

    பராமரிப்பு:

    பெட்ரோல், டீசல் வாகனங்களை விட எலெக்ட்ரிக் வாகனங்களை பராமரித்தல் மிகவும் எளிமையான காரியம் ஆகும். இதன் பவர்டிரெயினில் அசையும் பாகங்கள் எண்ணிக்கை மிகவும் குறைவு ஆகும். இதன் காரணமாக பராமரிப்பு கட்டணம் பெருமளவு குறைவு ஆகும். ஆனால் எலெக்ட்ரிக் வாகனங்களின் பேட்டரியை மாற்றுவதற்கான கட்டணம் அதிகம் ஆகும்.

    எலெக்ட்ரிக் வாகனங்களை சார்ஜ் செய்வதால், ஏற்படும் மின் கட்டண செலவு குறித்து வாடிக்கையாளர்கள் விழிப்புடன் இருப்பது அவசியம் ஆகும்.

     

    சார்ஜிங் உள்கட்டமைப்பு:

    எலெக்ட்ரிக் வாகனம் பயன்படுத்தும் போது சார்ஜிங் உள்கட்டமைப்பு மிகவும் அத்தியாவசியமானது ஆகும். ஏத்தர் 450 போன்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் ஃபாஸ்ட் சார்ஜர்களுக்கு சப்போர்ட் கொண்டிருக்கின்றன. ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட எலெக்ட்ரிக் வாகனத்தை வாங்குவோர், வீட்டில் ஃபாஸ்ட் சார்ஜர் இன்ஸ்டால் செய்து வைப்பது அதிக பயனுள்ளதாக இருக்கும்.

    பயன்பாடு மற்றும் பராமரிப்பு கட்டணம்:

    எலெக்ட்ரிக் வாகனங்களை பராமரிப்பது மிகவும் எளிய காரியம் ஆகும். இதற்கான வருடாந்திர பராமரிப்பு கட்டணம் மிகவும் குறைவு ஆகும். தொடர்ந்து அதிகரித்து வரும் எரிபொருள் கட்டணம் காரணமாக எலெக்ட்ரிக் வாகன உபயோகிப்பாளர்கள் கவலை கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

    எலெக்ட்ரிக் வாகன தொழில்நுட்பம்:

    எலெக்ட்ரிக் வாகனங்களில் உள்ள தொழில்நுட்பம் முன்பு இருந்ததை விட பெருமளவு அதிநவீனமாக மாறிவிட்டன. இவற்றில் எளிதில் மென்பொருள் அப்டேட் வழங்கும் நிலை வந்துவிட்டது. சமீபத்திய எலெக்ட்ரிக் வாகனங்கள் பழைய மாடலை விட பல விஷயங்களில் மேம்பட்டவைகளாகவே இருக்கின்றன. 

    • எலெக்ட்ரிக் வாகனங்கள் தீப்பிடித்து எரியும் சம்பவங்கள் ஆங்காங்கே நடைபெறுகின்றன.
    • எலெக்ட்ரிக் வாகனம் பயன்படுத்தும் போது பேட்டரி பேக் சூடாக அதிக வாய்ப்புகள் உண்டு.

    எலெக்ட்ரிக் வாகனங்களில் ஏராளமான பாதுகாப்பு அம்சங்கள் வழங்கப்படுவது சாதாரண காரியம் தான். எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் உள்கட்டமைப்புகளிலும் பயனர்களுக்கு உச்சக்கட்ட பாதுகாப்பு வழங்குவது உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது.

    அதிகபட்ச பாதுகாப்பு வழங்கப்படும் நிலையிலும், எலெக்ட்ரிக் வாகனங்கள் தீப்பிடித்து எரியும் சம்பவங்கள் ஆங்காங்கே நடைபெற்றுக் கொண்டு தான் வருகின்றன. இதுபோன்ற சம்பவங்களில் சிக்காமல் இருக்கவும், எலெக்ட்ரிக் வாகனங்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளவும் மேற்கொள்ள வேண்டியவை பற்றி தொடர்ந்து பார்ப்போம்.

    உடனே சார்ஜ் செய்ய வேண்டாம்:

    எலெக்ட்ரிக் வாகனம் பயன்படுத்தும் போது பேட்டரி பேக் சூடாக அதிக வாய்ப்புகள் உண்டு. இதன் காரணமாக வாகனத்தை பயன்படுத்திய உடனே அதனை சார்ஜ் செய்வதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு செய்யும் போது பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுவதோடு, பேட்டரி ஆயுளும் மேம்படும்.

    நீண்ட நேர சார்ஜிங்:

    எலெக்ட்ரிக் வாகனங்களை அதிகளவுக்கு சார்ஜ் செய்வது பேட்டரி ஆயுளை பெருமளவு பாதிக்கும். மேலும் அதிக வெப்பம் காரணமாக பேட்டரியில் அழுத்தம் ஏற்படும். இதன் காரணமாக வாகனம் தீப்பிடித்து எரிய அதிக வாய்ப்புகள் உண்டு.

    மழையின் போது சார்ஜிங்:

    நீரும், மின்சாரமும் ஒன்றாகும் போது ஏற்படும் விளைவு அனைவரும் அறிந்ததே. வாகன உற்பத்தியாளர்கள் சிறப்பான வாட்டர் ப்ரூஃபிங் வசதி வழங்கினாலும், சில சமயங்களில் சிறு ஓட்டை மூலம் மின்சாரம் பாய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் ஆகும். இதனால் மழை பெய்யும் போது வாகனங்களை சார்ஜ் செய்வதை தவிர்க்க வேண்டும்.

    சார்ஜர்களில் கவனம் அவசியம்:

    எலெக்ட்ரிக் வாகனங்களை சார்ஜ் செய்ய சான்றளிக்கப்பட்ட சார்ஜிங் மையத்தை பயன்படுத்த வேண்டும். இதன் மூலம் எலெக்ட்ரிக் வாகனம் மற்றும் அதனை பயன்படுத்துவோருக்கு பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும்.

    பேட்டரி பயன்பாடு:

    எலெக்ட்ரிக் வாகன பேட்டரியை முழுமையாக தீர்ந்து போகும் வரை பயன்படுத்தக்கூடாது. இவ்வாறு செய்யும் போது பேட்டரி பேக்கிற்கு அழுத்தம் அதிகரித்து, அதன் ஆயுளை குறைக்கும். இதோடு பேட்டரி பாதுகாப்பிற்கும் கேடு விளைவிக்கும். 

    • கார்களில் டிரெயின் பிளக்-களை கண்டறிதல் சிரமமமான காரியம் ஆகும்.
    • கார் இன்டீரியரில் ஏற்படும் ஈரத்தன்மையை போக்குவது சவாலான காரியம் ஆகும்.

    மழை வெளுத்து வாங்கும் கனமழை காலமோ அல்லது நீர்நிலைகளுக்கு எடுத்து செல்வதோ கார் இன்டீரியரில் எப்போது வேண்டுமானாலும் எளிதில் நீர் புகும் வாய்ப்புகள் அதிகம் தான். எத்தனை பாதுகாப்பாக இருந்தாலும், இதனை முழுமையாக தவிர்ப்பது முடியாத காரியம் தான். அந்த வகையில், ஈரமாகும் கார் இன்டீரியரை விரைந்து காய வைக்க என்ன செய்ய வேண்டும் என்று தொடர்ந்து பார்ப்போம்.

    மழை பெய்யும் போது சன்ரூஃப் லீக் அல்லது ஜன்னல் வழியே கார் இன்டீரியரில் நீர்புகும் சூழல் ஏற்பட்டால், எதில் பிரச்சினை ஏற்பட்டது என்று உறுதிப்படுத்த வேண்டும். ஒருவேளை நீர் 3 செமீ அளவுக்கு அதிகமாக இருந்தால், அதிகாரப்பூர்வ சர்வீஸ் சென்டர் உதவியை நாடுவதே சிறந்தது.

     

    டிரெயின் பிளக்:

    பெரும்பாலான கார்களில் இன்டீரியரில் இருந்து நீரை வெளியேற்றுவதற்கு டிரெயின் பிளக் வழங்கப்பட்டு இருக்கிறது. இதனை பயன்படுத்தி இன்டீரியரில் உள்ள நீரை வெளியேற்றலாம். சில கார்களில் டிரெயின் பிளக்-களை கண்டறிதல் சிரமமான காரியம் ஆகும்.

    மைக்ரோஃபைபர் துணி:

    தரமான மைக்ரோஃபைபர் துணி அல்லது டவல்களை கொண்டு நீரை முடிந்த வரை உறிஞ்சி அதனை வெளியில் பிழிந்துவிடலாம். இவ்வாறு செய்யும் போது கார்களின் இன்டீரியர் அதிவேகமாக காய்ந்து விடும். முதலில் செய்யும் போது, இந்த வேலை செயலற்றதாக தோன்றும். ஆனால், இதுவே சிறப்பான வழிமுறை ஆகும்.

     

    காற்றாடி:

    இனி அனைத்து கதவுகளையும் திறந்து வைத்து, போர்டபில் காற்றாடி கொண்டு ஒரே திசையில் வீச செய்ய வேண்டும். சமயங்களில் ஹேர் டிரையர் போன்ற சாதனங்களை கொண்டும் இன்டீரியரில் உள்ள ஈரத்தை சரி செய்யலாம். இது கார் இன்டீரியரில் உள்ள ஈரத்தை பெருமளவுக்கு நீக்கிவிடும்.

    ஈரத்தன்மை:

    கார்களில் நீர் புகுந்தால், நீரை எப்படியோ வெளியேற்றி விட முடியும். எனினும், அதன் பிறகு ஏற்படும் ஈரத்தன்மையை போக்குவது சவாலான காரியம் ஆகும். இதற்கு சிலிகா ஜெல் பயன்படுத்தலாம். கார் இன்டீரியரை சுற்றி சிலிகா ஜெல் பாக்கெட்களை வைத்தால் ஈரத்தன்மையை பெருமளவு குறைக்க முடியும்.

    • என்ஜினில் உள்ள ஏராளமான பாகங்கள் அசையும் திறன் கொண்டிருப்பதால் லூப்ரிகேஷன் அவசியம்.
    • கூலிங் சிஸ்டம் சீராக இயங்க வைக்க கூலனட் சரியான அளவில் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

    கார்களுக்கு என்ஜின் தான் இதயம் எனலாம். இதனை சரியாக வைத்துக் கொண்டாலே இவற்றில் ஏற்படும் சிக்கல் மற்றும் பிரச்சினைகளை தவிர்க்க முடியும். இவ்வாறு என்ஜினை சரியாக பரிமரித்தால், அதன் திறன் சீராக இருப்பதோடு, நீண்ட காலத்திற்கு சிரமம் இன்றி பயன்படுத்த முடியும். அந்த வகையில் கார் என்ஜினை எப்போதும் சீராக வைத்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி தொடர்ந்து பார்ப்போம்.

    என்ஜின் ஆயில்:

    என்ஜின் பராமரிப்பில் மிக முக்கியமான விஷயம் லூப்ரிகேஷன் தான். என்ஜினில் உள்ள ஏராளமான பாகங்கள் அசையும் திறன் கொண்டிருப்பதால் லூப்ரிகேஷன் அத்தியாவசியமான ஒன்று ஆகும். குறைந்த அளவு என்ஜின் ஆயில் அல்லது பழைய என்ஜின் ஆயில் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இவை என்ஜினை விரைந்து பாழாக்கி விடும்.

    என்ஜின் பாழாகும் பட்சத்தில் அதனை சரியாக சரிசெய்வது மிகவும் கடினம் ஆகும். இவ்வாறு சரி செய்தாலும், பெரும்பாலான சூழல்களில் இவை மீண்டும் மீண்டும் பிரச்சினையை ஏற்படுத்தும் வாய்ப்புகள் அதிகம் ஆகும். இதனை தவிர்க்க என்ஜினுக்கு சீரான இடைவெளியில் ஆயிலை மாற்றுவது நல்லது.

    என்ஜின் கூலன்ட்:

    இன்டர்னல் கம்பஷன் என்ஜின் அல்லது ஐ.சி. என்ஜின் அதிகளவு வெப்பத்தை வெளிப்படுத்தும். இந்த வெப்பத்தை என்ஜினில் உள்ள என்ஜின் கூலிங் சிஸ்டம் தான் குறைக்கும். கூலிங் சிஸ்டம் சீராக இயங்க வைக்க கூலனட் சரியான அளவில் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். இது என்ஜின் எப்போதும் சீரான வெப்பநிலையில் இருப்பதை உறுதிப்படுத்திவிடும்.

    ஏர் ஃபில்ட்டர்:

    காரின் மிக முக்கிய பாகங்களில் ஒன்று தான் ஏர் ஃபில்ட்டர். இது காரின் செயல்திறனை நேரடியாக பாதிப்பதோடு, என்ஜினில் வெளிப்புற அம்சங்கள் நுழைந்து ஏற்படுத்தும் பாதிப்புகளை தடுக்கிறது. இதன் காரணமாக ஏர் ஃபில்ட்டரை சீரான இடைவெளியில் மாற்றிக் கொண்டே இருப்பது அவசியம் ஆகும்.

    ஆயில் ஃபில்ட்டர்:

    தொடர்ச்சியான பயன்பாடு காரணமாக சேகரிக்கப்படும் அழுக்குகளை நீக்கும் பணியை ஆயில் ஃபில்ட்டர் மேற்கொள்கிறது. இதில் பாழாகி போன என்ஜின் ஆயில் சேகரிக்கப்படும். சீரான இடைவெளியில் இதனை அகற்றாத பட்சத்தில் என்ஜினில் கோளாறு ஏற்படும் அபாயம் அதிகம் ஆகும்.

    ஆயில் லீக் மற்றும் புகை:

    காரினை விரைந்து சரிபார்க்க வேண்டும் என்பதை உணர்த்தும் அபாய எச்சரிக்கை தான் ஆயில் லீக் மற்றும் புகை வெளியீடு. காரில் இந்த பிரச்சினை ஏற்பட்டால், அதனை விரைந்து சரிபார்க்க வேண்டியது அவசியம் ஆகும். இதனை தவிர்க்கும் பட்சத்தில், புதிதாக ஏற்படும் பிரச்சினைகளை சரி செய்ய அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும். 

    ×