என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆட்டோமொபைல்
X
விரைவில் இந்தியா வரும் டொயோட்டா ருமியன்
Byமாலை மலர்25 Oct 2021 12:24 PM GMT (Updated: 25 Oct 2021 12:24 PM GMT)
டொயோட்டா நிறுவனத்தின் புதிய எம்.பி.வி. மாடல் காப்புரிமை விவரங்கள் வெளியாகி இருக்கிறது.
டொயோட்டா மோட்டார் நிறுவனம் ருமியன் மாடலுக்கு காப்புரிமை கோரி விண்ணப்பித்து இருக்கிறது. இந்த கார் மாருதி சுசுகியின் எர்டிகா மாடலை தழுவி உருவாகி இருக்கிறது. விரைவில் இந்த மாடல் இந்திய சந்தையின் எம்.பி.வி. பிரிவில் விற்பனைக்கு அறிமுகமாகும் என கூறப்படுகிறது.
இது டொயோட்டா பிராண்டிங்கில் விற்பனைக்கு வரும் மூன்றாவது மாருதி சுசுகி மாடல் ஆகும். சமீபத்தில் இந்த மாடல் தென் ஆப்ரிக்கா சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதுபற்றி டொயோட்டா சார்பில் எவ்வித அதிகாரப்பூர்வ தகவலும் வழங்கப்படவில்லை.
தற்போது தென் ஆப்ரிக்காவில் விற்பனை செய்யப்படும் ருமியன் மாடல் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகிறது. தோற்றத்தில் இந்த கார் மாருதி எர்டிகா எம்.பி.வி. போன்றே காட்சியளிக்கிறது. ருமியன் மாடலில் 1.5 லிட்டர், 4 சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்த என்ஜின் 138 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த என்ஜினுடன் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 4 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X