search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Hero Electric"

    • ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனத்தின் அதிவேக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களில் நைடெக் மோட்டார்கள் வழங்கப்படுகின்றன.
    • இதுதவிர புதிதாக உற்பத்தி ஆலையை ராஜஸ்தான் மாநிலத்தில் கட்டமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

    இந்திய சந்தையில் பழமையான மற்றும் மிகப் பெரும் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் உற்பத்தியாளராக ஹீரோ எலெக்ட்ரிக் விளங்குகிறது. 2022 ஆண்டில் மட்டும் விற்பனையில் ஒரு லட்சத்திற்கும் அதிக யூனிட்களை கடந்து அசத்தியுள்ளது. நாட்டில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான தட்டுப்பாடு அதிகரித்து வருவது வினியோக பிரிவில் எலெக்ட்ரிக் வாகன பயன்பாடு உள்ளிட்ட காரணங்களால் ஹீரோ எலெக்ட்ரிக் விற்பனை வளர்ச்சி பெற்று இருக்கிறது.

    ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் இந்திய சந்தையில்- ஃபோடான் LP, ஆப்டிமா CX, NYX HS500ER மாடல்களை ஹை-ஸ்பீடு பிரிவிலும், லோ-ஸ்பீடு பிரிவில் NYX E5, அட்ரியா LX மற்றும் எடி என மொத்தத்தில் ஏழு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வருகிறது. இந்திய சந்தையில் ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனத்திற்கு 6 லட்சத்திற்கும் அதிக வாடிக்கையளர்கள் உள்ளனர் என அந்நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.

    அடுத்த மூன்று ஆண்டுகளில் 5 மில்லியன் எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயித்து இருப்பதாக ஹீரோ எலெக்ட்ரிக் தெரிவித்துள்ளது. இதற்காக உற்பத்தி திறன், டீலர்ஷிப் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது, பயிற்சி அளிப்பது போன்ற பிரிவுகளில் முதலீடு செய்ய இருக்கிறது. இத்துடன் 25 ஆயிரம் மெக்கானிக்-களுக்கு பயிற்சி இளிக்கவும் ஹீரோ எலெக்ட்ரிக் திட்டமிட்டுள்ளது.

    எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த சார்ஜிங் மையங்கள் பிரிவில் கவனம் செலுத்தும் வகையில், ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் 20 ஆயிரம் சார்ஜிங் நெட்வொர்க்குகளை இன்ஸ்டால் செய்ய இருக்கிறது. உள்நாட்டு உற்பத்தியை அதிகப்படுத்த ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் ஜப்பானை சேர்ந்த நைடெக் நிறுவனத்துடன் கூட்டணி அமைத்து இருக்கிறது. நைடெக் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் மோட்டார்கள் ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவன அதிவேக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களில் வழங்கப்பட இருக்கிறது.

    மத்திய அரசின் PLI திட்டத்தின் கீழ் அனுமதிக்கப்பட்டு இருக்கும் 75 நிறுவனங்களில் ஒன்றாக நைடெக் இருக்கிறது. உற்பத்தியை பொருத்தவரை ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் ஆண்டுக்கு ஒரு லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட லூதியானா ஆலை திறனை அதிகப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த ஆலை 2012 வாக்கில் அமைக்கப்பட்டது. ஜூலை 2022 வாக்கில் ஆப்டிமா மற்றும் NYX எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள பிதம்பூர் மஹிந்திரா நிறுவன ஆலையில் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.

    இதைத் தொடர்ந்து ராஜஸ்தான் அரசுடன் இணைந்து மாபெரும் எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி ஆலையை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஹீரோ எலெக்ட்ரிக் கையெழுத்திட்டது. இந்த ஆலையில் ஆண்டுக்கு இரண்டு மில்லியன் யூனிட்கள் உற்பத்தி செய்யும் திறன் கொண்டிருக்கும். இந்த ஆலை சலர்பூர் பகுதியில் சுமார் 170 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு இறுதியில் இந்த ஆலையில் உற்பத்தி துவங்க இருக்கிறது.

    ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் பெங்களூரை சேர்ந்த இ.வி. சார்ஜிங் உள்கட்டமைப்பு நிறுவனத்துடன் இணைந்து ஒரு லட்சம் சார்ஜர்களை கட்டமைக்க இருக்கிறது.


    ஹீரோ எலெக்ட்ரிக் மற்றும் சார்ஸர் நிறுவனங்கள் இணைந்து அடுத்த மூன்று ஆண்டுகளில் நாடு முழுக்க சுமார் ஒரு லட்சம் சார்ஜர்களை கட்டமைக்க திட்டமிட்டுள்ளன. நாட்டின் முன்னணி இருசக்கர வாகன உற்பத்தியாளரான ஹீரோ எலெக்ட்ரிக் பெங்களூரை சேர்ந்த இ.வி. சார்ஜிங் ஸ்டார்ட்-அப் நிறுவனமான சார்ஸர் உடன் கூட்டணி அமைத்து இருக்கிறது.

    கூட்டணியின் அங்கமாக சார்ஸர் நிறுவனம் நாட்டின் 30 நகரங்களில் முதற்கட்டமாக 10 ஆயிரத்திற்கும் அதிக சார்ஜர்களை கட்டமைக்கிறது. ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் தனது விற்பனை மையங்களில் கிரானா சார்ஸர்களை நிறுவ இருக்கிறது. தற்போது ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் நாடு முழுக்க 20 நகரங்களில் விற்பனை மையங்களை கொண்டிருக்கிறது. 

     கிரானா சார்ஸர்

    இ.வி. சார்ஜிங்கை அனைவரிடமும் கொண்டுசேர்க்கும் வகையில் ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் சார்ஜர்களை உள்ளூர் கடைகள் மற்றும் ஏராளமான பொது இடங்களில் கட்டமைக்க திட்டமிட்டு இருக்கிறது.
    ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் இந்திய சந்தையில் புது மைல்கல் எட்டியதாக அறிவித்து இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் இந்திய சந்தை விற்பனையில் 50 ஆயிரம் யூனிட்களை கடந்துள்ளது. தற்போதைய நிதியாண்டில் கடும் வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து இது சாத்தியமானது என ஹீரோ எலெக்ட்ரிக் தெரிவித்து உள்ளது.

    இதன் மூலம் 2022 நிதியாண்டு இறுதியில் சந்தையில் கணிசமான பங்குகளை பெற முடியும் என ஹீரோ எலெக்ட்ரிக் நம்பிக்கை தெரிவித்தது. ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனத்தின் ஆப்டிமா மற்றும் என்.வை.எக்ஸ். மாடல்கள் அதிக யூனிட்கள் விற்பனையாகி இருக்கின்றன. 

     ஹீரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

    அடுத்த ஐந்து ஆண்டுகளில் பத்து லட்சம் எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்ய ஹீரோ எலெக்ட்ரிக் இலக்கு நிர்ணயித்து உள்ளது. இதற்காக ஹீரோ எலெக்ட்ரிக் 300 புதிய விற்பனை டச் பாயிண்ட்களை திறக்க திட்டமிட்டுள்ளது.
    ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் விரைவில் அதிவேக எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.




    இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஹீரோ, விரைவில் அதிவேக இ-ஸ்கூட்டரை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

    ஹீரோ வெளியிட இருக்கும் புதிய ஸ்கூட்டர் அதிக செயல்திறன் மற்றும் நீண்ட தூரம் செல்லும் திறன் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விட ஃபியூயல் வாகனங்களை பலரும் தேர்வு செய்ய அதன் செயல்திறன் முக்கிய காரணமாக கூறப்படும் நிலையில், புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்த பிரச்சனையை எதிர்கொள்ளும் வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    வழக்கமான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மணிக்கு அதிகபட்சம் 50 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் போது பலரும் இவற்றை வாங்க வேண்டாம் என்ற முடிவையே எடுக்கின்றனர். புதிய ஹீரோ எலெக்ட்ரிஸ் ஸ்கூட்டர் AXHLE-20 என்ற குறியீட்டு பெயர் கொண்டு தலைசிறந்த அம்சங்களை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



    ஹீரோவின் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அதிவேக சீரிஸ் (High Speed series) ரக பிரிவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்சமயம் அதிவேக பிரிவில் நிக்ஸ், ஃபோட்டான் மற்றும் ஃபோட்டான் 72v என மூன்று மாடல்கள் உள்ளன. அந்த வகையில் AXHLE-20 மாடல் விலை உயர்ந்த ஸ்கூட்டராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    புதிய AXHLE-20 ஸ்கூட்டரில் 4kW மோட்டார் (8 பிஹெச்பி) வழங்கப்படும் என்றும் இது மணிக்கு அதிகபட்சம் 85 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் என கூறப்படுகிறது. இத்துடன் புதிய AXHLE-20 ஸ்கூட்டர் ஒருமுறை சார்ஜ் செய்தால் 110 கிலோமீட்டர் வரை செல்லும் என்றும் கூறப்படுகிறது. 

    ஹீரோ இ-ஸ்கூட்டர் மாடலில் ப்ளூடூத் மொபைல் கனெக்டிவிட்டி வசதியும், இதன் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோலில் ஸ்மார்ட்போன் நேவிகேஷன் வசதி வழங்கப்படும் என கூறப்படுகிறது.
    ×