search icon
என் மலர்tooltip icon

    கார்

    • புதிய கார் பற்றிய தகவல்கள் அனைத்தும் ரகசியமாகவே உள்ளது.
    • முக்கிய அறிவிப்பை வெளியிட எம்.ஜி. மோட்டார்ஸ் திட்டம்.

    எம்.ஜி. மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் பயன்படுத்துவதற்காக புதிய பெயரை டிரேட்மார்க் செய்துள்ளது. இந்த பெயரில் தான் எம்.ஜி. நிறுவனத்தின் மூன்றாவது எலெக்ட்ரிக் கார் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுகிறது.

    புதிய எலெக்ட்ரிக் கார் மாடல் எக்செல்லார் என்ற பெயரில் விற்பனை செய்யப்பட உள்ளது. சர்வதேச சந்தையில் எம்.ஜி. நிறுவனம் எந்த மாடலுக்கும் எக்செல்லார் பெயரை பயன்படுத்துவதில்லை. அந்த வகையில், இந்த வாகனம் பற்றிய தகவல்கள் அனைத்தும் ரகசியமாகவே உள்ளது.

     


    இந்த எலெக்ட்ரிக் கார் கொமெட் மற்றும் ZS EV மாடல்களுக்கு மத்தியில் நிலை நிறுத்தப்படும் என்று தெரிகிறது. புதிய எலெக்ட்ரிக் கார் டாடா நெக்சான் EV மாடலுக்கு போட்டியாக அமையும். மார்ச் 20-ம் தேதி மிக முக்கிய அறிவிப்பை வெளியிட எம்.ஜி. மோட்டார்ஸ் திட்டமிட்டு வருகிறது.

    அந்த வகையில், புதிய எக்செல்லார் எலெக்ட்ரிக் கார் பற்றிய விவரங்கள் வெளியிடப்படும் என்று தெரிகிறது. புதிய எலெக்ட்ரிக் கார் மட்டுமின்றி எம்.ஜி.மோட்டார்ஸ் நிறுவனம் தனது குளோஸ்டர் ஃபேஸ்லிஃப்ட் மாடலை டெஸ்டிங் செய்து வருகிறது. வரும் மாதங்களில் இந்த மாடல் அறிமுகம் செய்யப்படலாம்.

    • இந்த சலுகைகள் இம்மமாத இறுதிவரை வழங்கப்படும்.
    • சலுகைகள் கார் மாடல், வேரியண்டிற்கு ஏற்ப வேறுபடும்.

    வோக்ஸ்வேகன் நிறுவனம் தனது கார் மாடல்களுக்கு மார்ச் மாத சலுகைகளை அறிவித்து இருக்கிறது. அதன்படி வோக்ஸ்வேகன் டுகன், விர்டுஸ் போன்ற எஸ்.யு.வி. மாடல்களுக்கு அசத்தல் சலுகைகள் மற்றும் தள்ளுபடி வழங்கப்படுகின்றன. இவை ரொக்க தள்ளுபடி, கார்ப்பரேட் தள்ளுபடி மற்றும் எக்சேன்ஜ் போனஸ் வடிவில் வழங்கப்படுகின்றன.

    இந்த சலுகை மற்றும் பலன்கள் மார்ச் மாத இறுதி வரை வழங்கப்படுகின்றன. இதில் வோக்ஸ்வேகன் விர்டுஸ் மாடலுக்கு அதிகபட்சம் ரூ. 75 ஆயிரம் வரையிலான பலன்கள் கிடைக்கும். இதில் ரூ. 30 ஆயிரம் ரொக்க தள்ளுபடி, ரூ. 30 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ் மற்றும் ரூ. 15 ஆயிரம் வரை கார்ப்பரேட் தள்ளுபடி அடங்கும்.

     


    வோக்ஸ்வேகன் டைகுன் மாடலுக்கு ரூ. 1 லட்சத்து 30 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகின்றன. இதில் ரூ. 60 ஆயிரம் ரொக்க தள்ளுபடி, ரூ. 40 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ் மற்றும் ரூ. 30 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி அடங்கும்.

    இந்த சலுகைகள் ஸ்டாக் இருப்பு, வேரியண்ட், பகுதி விற்பனை மையம், காரின் நிறம், பவர்டிரெயின் மற்றும் இதர நிலைகளுக்கு ஏற்ப வேறுபடும். 

    • ஆடியின் எதிர்கால இ டிரான் மாடல்கள் உருவாக்கப்பட இருக்கின்றன.
    • இந்த எஸ்.யு.வி. இருவித ஆப்ஷன்களில் கிடைக்கும்.

    ஆடி நிறுவனம் தனது முற்றிலும் புதிய கியூ6 இ டிரான் மாடல் மார்ச் 18-ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. ஆடியின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட எஸ்.யு.வி. மாடல் முற்றிலும் புதிய PPE (பிரீமியம் பிளாட்ஃபார்ம் எலெக்ட்ரிக்) பிளாட்ஃபார்மில் உருவாகி இருக்கிறது. இதே பிளாட்ஃபார்மில் ஆடியின் எதிர்கால இ டிரான் மாடல்கள் உருவாக்கப்பட இருக்கின்றன.

    புதிய காரின் புகைப்படங்களை ஆடி நிறுவனம் வெளியிட்டு உள்ளது. இந்த மாடல் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஆடி கியூ4 மற்றும் கியூ8 இ டிரான் எலெக்ட்ரிக் எஸ்.யு.வி.-க்களை போன்ற டிசைன் கொண்டிருக்கும் என்று தெரியவந்துள்ளது. அதன்படி பல்கேரியன் பியர்டு கிரில் மூடப்பட்டு மெல்லிய லைட் கிளஸ்டர்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.

     


    போர்ஷே மக்கன் மாடலை போன்றே புதிய கியூ6 மாடலிலும் ஸ்ப்லிட் ஹெட்லைட் டிசைன், எல்.இ.டி. டி.ஆர்.எல்.-கள் வழங்கப்படுகின்றன. புதிய கியூ6 இ டிரான் உள்புறத்தில் இரட்டை டிஜிட்டல் ஸ்கிரீன்கள்- ஒன்று இன்ஃபோடெயின்மென்ட் மற்றொன்று இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டராக வழங்கப்படுகின்றன.

    புதிய ஆடி கியூ6 இ டிரான் மாடலில் 800 வோல்ட் எலெக்ட்ரிக் ஆர்கிடெக்ச்சர் வழங்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதன் பவர்டிரெயின் பற்றிய விவரங்கள் மர்மமாகவே உள்ளன. இந்த எஸ்.யு.வி. மாடல் 2-வீல் மற்றும் ஆல்-வீல் டிரைவ் என இருவித ஆப்ஷன்களில் கிடைக்கும் என்று தெரிகிறது.

    • கிரெட்டா N லைன் மாடல் இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.
    • இந்த கார் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் கொண்டிருக்கிறது.

    ஹூண்டாய் இந்தியா நிறுவனம் தனது அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கிரெட்டா N லைன் மாடலை அறிமுகம் செய்தது. புதிய கிரெட்டா N லைன் எஸ்.யு.வி. மாடலின் விலை ரூ. 16 லட்சத்து 82 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த கார் N8 மற்றும் N10 என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.

    புதிய கிரெட்டா N லைன் எஸ்.யு.வி.-இல் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 158 ஹெச்.பி. பவர், 253 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 7 ஸ்பீடு DCT கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு உள்ளது.

     


    இந்த கார் லிட்டருக்கு எவ்வளவு மைலேஜ் வழங்கும் என்ற விவரங்கள் வெளியாகி உள்ளது. அதன்படி புதிய கிரெட்டா N லைன் எஸ்.யு.வி. மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் வெர்ஷன்கள் லிட்டருக்கு முறையே 18 மற்றும் 18.2 கிலோமீட்டர்கள் வரை மைலேஜ் வழங்கும் என்று ARAI சான்று பெற்று இருக்கின்றன.

    கிரெட்டா ஸ்டான்டர்டு வெர்ஷனில் உள்ள டர்போ பெட்ரோல் என்ஜின் DCT கியர்பாக்ஸ் வெர்ஷன் லிட்டருக்கு 18.4 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் என்று கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஹூண்டாய் i20 N லைன் மற்றும் வென்யூ N லைன் மாடல்கள் வரிசையில் கிரெட்டா N லைன் மூன்றாவது N சீரிஸ் மாடலாக இணைந்துள்ளது.

    • நபோலி பிளாக் நிறத்திற்கு மாற்றாக அறிமுகம் செய்யப்பட்டது.
    • இதர எஸ்.யு.வி.-க்கள் நபோலி பிளாக் நிறத்தில் கிடைக்கிறது.

    மஹிந்திரா நிறுவனம் தனது இரண்டு பிரபல எஸ்.யு.வி.- தார் மற்றும் ஸ்கார்பியோ கிளாசிக் மாடல்களை சத்தமின்றி அப்டேட் செய்துள்ளது. இரண்டு எஸ்.யு.வி.-க்களும் தற்போது புதிய பிளாக் நிறத்தில் கிடைக்கின்றன. இந்த நிறம் ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு வந்த நபோலி பிளாக் நிறத்திற்கு மாற்றாக அறிமுகம் செய்யப்பட்டது.

     


    தற்போது தார் மற்றும் ஸ்கார்பியோ கிளாசிக் மாடல்கள் முறையே ஐந்து மற்றும் நான்கு வித நிறங்களில் விற்பனைக்கு கிடைக்கின்றன. அதன்படி இரு எஸ்.யு.வி.-க்களும் ஸ்டெல்த் பிளாக் நிறத்திலும் கிடைக்கின்றன. மஹிந்திராவின் இதர எஸ்.யு.வி.-க்கள்- ஸ்கார்பியோ N, XUV700, XUV300 மற்றும் பொலிரோ நியோ உள்ளிட்டவை நபோலி பிளாக் நிறத்தில் கிடைக்கிறது.

     


    முன்னதாக மஹிந்திரா நிறுவனம் தனது XUV300 மாடலுக்கான முன்பதிவுகளை நிறுத்துவதாக அறிவித்தது. அந்த வகையில், இந்த காரின் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட வெர்ஷன் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கலாம்.

    • புதிய மாடல்களுக்கு இந்த சலுகைகள் வழங்கப்படுகின்றன.
    • ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட மாடல்களுக்கு வழங்கப்படவில்லை.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது எலெக்ட்ரிக் கார் மாடல்களுக்கு மாதாந்திர சலுகைகளை அறிவித்து இருக்கிறது. எனினும், இந்த சலுகைகள் எதுவும் பன்ச் EV மாடலுக்கு மட்டும் வழங்கப்படவில்லை. மேலும் 2023 ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட கார்கள் மற்றும் 2024 புதிய மாடல்களுக்கு இந்த சலுகைகள் வழங்கப்படுகின்றன.

    2023 ஆண்டு உற்பத்தி செய்யப்பட்ட ஃபேஸ்லிஃப்ட்-க்கு முந்தைய மாடல்களுக்கு டாடா உற்பத்தியாளர்கள் அசத்தல் சலுகைகளை அறிவித்துள்ளனர். அதன்படி நெக்சான் EV பிரைம் மாடலுக்கு ரூ. 2 லட்சத்து 30 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 50 ஆயிரம் வரை எக்சேன்ஜ் போனஸ் வழங்கப்படுகிறது. நெக்சான் EV மேக்ஸ் மாடலுக்கு ரூ. 2 லட்சத்து 65 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 50 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ் வழங்கப்படுகிறது.

    நெக்சான் EV பிரைம் மாடலில் 129 ஹெச்.பி. பவர் வெளிப்படுத்தும் எலெக்ட்ரிக் மோட்டார், 30.2 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 312 கிலோமீட்டர்கள் வரை செல்லும் என சான்று பெற்று இருக்கிறது.

    நெக்சான் EV மேக்ஸ் மாடலில் 143 ஹெச்.பி. பவர் வெளிப்படுத்தும் எலெக்ட்ரிக் மோட்டார் உள்ளது. இந்த காரில் உள்ள 40.5 கிலோவாட் ஹவர் பேட்டரி முழு சார்ஜ் செய்தால் 437 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்கும் என சான்று பெற்று இருக்கிறது.

    கடந்த ஆண்டு உற்பத்தி செய்யப்பட்ட நெக்சான் EV மாடல்களுக்கு ரூ. 50 ஆயிரம் வரை கிரீன் போனஸ், 2024 ஆண்டு உற்பத்தி செய்யப்பட்ட மாடல்களுக்கு ரூ. 20 ஆயிரம் வரை கிரீன் போனஸ் வழங்கப்படுகிறது. இவைதவிர ரொக்க தள்ளுபடி மற்றும் எக்சேன்ஜ் போனஸ் உள்ளிட்டவை ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட மாடல்களுக்கு வழங்கப்படவில்லை.

    இந்திய சந்தையில் நெக்சான் EV மாடல் மீடியம் ரேன்ஜ் மற்றும் லாங் ரேன்ஜ் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவற்றுடன் 7.2 கிலோவாட் AC சார்ஜர் ஸ்டான்டர்டு அம்சமாக வழங்கப்படுகிறது. மீடியம் ரேன்ஜ் வேரியண்டை இந்த சார்ஜர் 4.3 மணி நேரத்தில் 10-இல் இருந்து 100 சதவீதம் வரை சார்ஜ் செய்துவிடும். லாங் ரேன்ஜ் வேரியண்டில் இது 6 மணி நேரத்தில் சார்ஜ் செய்துவிடும்.

    • அம்சங்களை இயக்குவதற்கு டச் கண்ட்ரோல்களையே வழங்குகின்றன.
    • செலவீனமும் குறையும் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    ஆட்டோமொபைல் துறையில் அதிநவீன தொழில்நுட்பங்களின் வரவு காரணமாக கார் உற்பத்தியாளர்கள் தங்களது மாடல்களில்- அளவில் பெரிய தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்கள், டிஜிட்டல் காக்பிட் மற்றும் ஏராளமான டச் கண்ட்ரோல்களை வழங்குகின்றன. இதன் காரணமாக கார்களின் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் ஏராளமான பட்டன்கள் காணாமல் போயின.

    பாதுகாப்பு காரணங்களை முன்வைத்து, ஓட்டுநர்கள் கவனம் சிதறுவதை தடுக்கும் வகையில் யூரோ என்கேப் (NCAP) புதிய விதிகளை அமலுக்கு கொண்டுவரும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. புதிய விதிகளின் படி ஐந்து நட்சத்திர குறியீட்டை பெறுவதற்கு கார்களின் டர்ன் சிக்னல்கள், வைப்பர் உள்ளிட்டவைகளை இயக்க கட்டாயமாக பட்டன்களை வழங்க வேண்டும்.

     


    கார் உற்பத்தியாளர்கள் டர்ன் சிக்னல்கள், ஹாரன், வைப்பர்கள், எச்சரிக்கை மின்விளக்கை இயக்குவது, அவசர அழைப்புகளை மேற்கொள்வது போன்ற வசதிகளை இயக்க பட்டன்கள் மற்றும் டயல்களை வைத்துள்ளன. எனினும், டெஸ்லா, வோக்ஸ்வேகன் போன்ற கார் உற்பத்தியாளர்கள் பல்வேறு அம்சங்களை இயக்குவதற்கு டச் கண்ட்ரோல்களையே வழங்குகின்றனர்.

    இவ்வாறு செய்யும் போது இன்ஃபோடெயின்மென்டிலேயே பல்வேறு வசதிகளும் வழங்கப்படுகின்றன. வழக்கமான கண்ட்ரோல்களை வழங்குவதை விட அதிநவீன டச் ஸ்கிரீன்களை பயன்படுத்தும் போது செலவீனமும் குறையும் என புதிய விதிகளில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    "அதிகளவில் தொடுதிரை பயன்படுத்துவது சந்தை முழுக்க பிரச்சினையை ஏற்படுத்துகிறது. கிட்டத்தட்ட அனைத்து வாகன உற்பத்தியாளரும் சென்ட்ரல் டச் ஸ்கிரீன்களில் மிக முக்கிய கண்ட்ரோல்களை வழங்குகின்றன. இதன் காரணமாக ஓட்டுநரின் கவனம் சிதைந்து, விபத்துகள் ஏற்படும் ஆபத்தை அதிகப்படுத்துகிறது," என யூரோ என்கேப் திட்ட அதிகாரி மேத்யூ அவெரி தெரிவித்துள்ளார்.

    • மாருதி ஜிம்னி மாடல் இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.
    • இந்த காரில் 1.5 லிட்டர் NA பெட்ரோல் என்ஜின் உள்ளது.

    இந்திய சந்தையில் மாருதி சுசுகி ஜிம்னி மாடலுக்கு அதிரடி விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. தற்போது இந்த எஸ்.யு.வி. மாடலுக்கு ரூ. 1 லட்சத்து 50 ஆயிரம் வரை பலன்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இவை மார்ச் மாத இறுதி வரை வழங்கப்படுகிறது.

    இந்த கார் சீட்டா மற்றும் ஆல்ஃபா என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. 2023 மாடலை வாங்கும் போது அதிகபட்சம் ரூ. 1 லட்சத்து 50 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. 2024 மாருதி ஜிம்னி மாடலுக்கு ரூ. 50 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகிறது.

     


    இத்துடன் ரூ. 3 ஆயிரம் வரை கார்ப்பரேட் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த சலுகைகள் ஒவ்வொரு பகுதி, ஸ்டாக் இருப்புக்கு ஏற்ப வேறுபடும். மாருதி ஜிம்னி மாடலில் 1.5 லிட்டர் NA பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 4 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் யூனிட் வழங்கப்படுகிறது.

    இந்த என்ஜின் 103 ஹெச்.பி. பவர், 134 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது.

    • இருவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
    • இந்த கார் 5 பேர் அமரக்கூடிய எஸ்.யு.வி. மாடல் ஆகும்.

    எம்.ஜி. மோட்டார் இந்தியா நிறுவனம் தனது ஹெக்டார் எஸ்.யு.வி.-யை ஷைன் ப்ரோ மற்றும் செலக்ட் ப்ரோ என இரண்டு வேரியண்ட்களில் அறிமுகம் செய்தது. இவற்றின் விலை முறையே ரூ. 16 லட்சம் மற்றும் ரூ. 17 லட்சத்து 30 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    தற்போது எம்.ஜி. ஹெக்டார் என்ட்ரி லெவல் மாடலுக்கான விலையை அந்நிறுவனம் அதிரடியாக குறைத்து இருக்கிறது. விலை குறைப்பின் படி எம்.ஜி. ஹெக்டார் மாடலின் விலை ரூ. 13 லட்சத்து 99 ஆயிரம் என துவங்குகிறது. முன்னதாக இதன் விலை ரூ. 14 லட்சத்து 95 ஆயிரம் என நிர்யணயம் செய்யப்பட்டு இருந்தது. அதன்படி தற்போது இதன் விலை ரூ. 96 ஆயிரம் குறைக்கப்பட்டு இருக்கிறது.

    விலை குறைப்பு எம்.ஜி. ஹெக்டார் ஸ்டைல் 1.5 லிட்டர் பெட்ரோல் மேனுவல் வேரியண்டிற்கு மட்டுமே அறிவிக்கப்பட்டு இருக்கிறது. முன்னதாக எம்.ஜி. மோட்டார் நிறுவனம் தனது கொமெட் EV மாடலின் இரண்டு வேரியண்ட்களிலும் ஃபாஸ்ட் சார்ஜரை அறிமுகம் செய்தது.

    இந்திய சந்தையில் எம்.ஜி. ஹெக்டார் மாடல் ஐந்து பேர் அமரக்கூடிய இருக்கை அமைப்பில் கிடைக்கிறது. இந்த கார் 1.5 லிட்டர் மற்றும் 2 லிட்டர் என இருவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

    • பிப்ரவரில் 3,73,177 யூனிட்கள் விற்பனையாகி உள்ளன
    • கார்கள் விற்பனை பிப்ரவரியில் மிகச்சிறப்பாக அமைந்துள்ளது

    கடந்த ஆண்டு பிப்ரவரியில் கார்கள் 3,35,324 யூனிட்கள் விற்பனையாகி இருந்த நிலையில் இந்த ஆண்டு பிப்ரவரில் 3,73,177 யூனிட்கள் விற்பனையாகி உள்ளன. மேலும் கார்கள் விற்பனை பிப்ரவரியில் மிகச்சிறப்பாக அமைந்துள்ளது.

    தொழில்துறை மதிப்பீட்டின்படி இது கடந்த நிதியாண்டின் இதே காலத்தில் விற்பனையான 3,35,324 யூனிட்களை விட 11.3 சதவீதம் அதிகம். உள்நாட்டு சந்தையில் இதுவரை பதிவு செய்யப்பட்ட பயணிகள் வாகன விற்பனையில் 3-வது சிறந்த மாதமாக பிப்ரவரி அமைந்துள்ளது.

    உள்ளூர் சந்தையில் விளையாட்டு பயன்பாட்டு வாகனங்கள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர்களின் விற்பனை பிப்ரவரியில் அதிகரித்துள்ளது. மஹிந்திரா வாகன விற்பனை 40 சதவீதம் அதிகரித்துள்ளது. டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் வாகனங்கள் மாதாந்திர விற்பனை 23,300 ஆக உள்ளது

    • எலெக்ட்ரிக் கார் உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வந்ததாக தகவல்.
    • திட்ட இயக்குனர் கெவின் லின்ச் கூட்டத்தில் கலந்து கொண்டதாக தகவல்.

    ஆப்பிள் நிறுவனம் தனது எலெக்ட்ரிக் கார் திட்டத்தை ரத்து செய்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆப்பிள் நிறுவனம் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக எலெக்ட்ரிக் கார் உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

    ஊழியர்களுடன் நிறுவனத்திற்குள் நடைபெற்ற கூட்டத்தில் ஆப்பிள் கார் திட்டம் ரத்து செய்யப்படுதாக அதன் தலைமை நிர்வாக அலுவலர் ஜெஃப் வில்லியம்ஸ் தெரிவித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின் போது திட்ட இயக்குனர் கெவின் லின்ச் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

    இந்த திட்டத்தில் பணியாற்றி வந்த 2 ஆயிரத்திற்கும் அதிக டெக்னிஷியன்கள் ஆப்பிள் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு பிரிவுக்கு மாற்றப்படுவர் என தெரிகிறது. இவ்வாறு செய்வதன் மூலம் செயற்கை நுண்ணறிவு சார்ந்த திட்டங்களில் அதிக கவனம் செலுத்த முடியும். புதிய தகவல் குறித்து ஆப்பிள் சார்பில் எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

    ஆப்பிள் கார் திட்டம் ரத்து செய்யப்படுவதற்கான மிகப்பெரிய காரணம், சந்தையில் தற்போது ஆப்பிள் சாதனங்கள் ஈட்டி வரும் லாபத்தை புதிய கார் ஈட்டுமா என்பதும், காரை வெளியிடுவதற்கு மட்டுமே இன்னமும் பல மில்லியன் டாலர்களை முதலீடு செய்ய வேண்டியிருக்கும் என்பதும் தான் என்று கூறப்படுகிறது.

    இது தொடர்பாக வெளியான தகவல்களின் படி ஒருவேளை ஆப்பிள் கார் வெளியாகும் பட்சத்தில் அதன் விலை நிச்சயம் 1 லட்சம் டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 83 லட்சம் வரையிலான விலையை கொண்டிருக்கும். இத்தனை விலை கொடுத்து காரை வாங்குவோர் எண்ணிக்கை மிகவும் குறைவு. இதனால் சந்தையில் இது எதிர்பார்த்த லாபத்தை ஈட்டும் வாய்ப்புகள் குறைவு தான் என ஆப்பிள் நிர்வாக குழு உறுப்பினர்கள் கவலை தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    • எலெக்ட்ரிக் கார்களை இந்தியாவில் அசெம்பில் செய்யும் வால்வோ.
    • 690 எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்துள்ளது.

    வால்வோ நிறுவனத்தின் இரண்டு புதிய எலெக்ட்ரிக் கார் மாடல்கள் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட உள்ளது. முற்றிலும் எலெக்ட்ரிக் வடிவில் உருவாக்கப்பட்ட வால்வோ EX90 மற்றும் EX30 EV மாடல்கள் அடுத்த ஆண்டு இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என வால்வோ கார்ஸ் இந்தியா நிர்வாக இயக்குனர் ஜோதி மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.

    இந்திய சந்தையில் வால்வோ நிறுவனம் XC40 ரிசார்ஜ் மற்றும் C40 ரிசார்ஜ் என இரண்டு எலெக்ட்ரிக் கார் மாடல்களை விற்பனை செய்து வருகிறது. வால்வோ புது அறிவிப்பின் படி இந்த எண்ணிக்கை அடுத்த ஆண்டு இருமடங்கு அதிகரிக்க இருக்கிறது.

     


    புதிய எலெக்ட்ரிக் கார்கள் அறிமுகம் செய்யப்படுவதோடு, இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களை அசெம்பில் செய்வதற்கான பணிகளிலும் வால்வோ ஈடுபட்டு வருவதாக ஜோதி மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.

    விற்பனையை பொருத்தவரை வால்வோ இந்தியா நிறுவனம் 2023 ஆண்டில் 690 எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்துள்ளது. இது அந்நிறுவனத்தின் மொத்த விற்பனையில் 28 சதவீதம் ஆகும். இதில் 519 யூனிட்கள் XC40 ரிசார்ஜ், 180 யூனிட்கள் C40 ரிசார்ஜ் அடங்கும். இந்த ஆண்டு தனது எலெக்ட்ரிக் வாகன விற்பனை 33 சதவீதம் ஆக அதிகரிக்கும் என வால்வோ இந்தியா நம்பிக்கை தெரிவித்துள்ளது.

     


    எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. என்ற வகையில், வால்வோ EX90 மாடல் கடந்த 2022-ம் ஆண்டு சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இது ஒரு 7 சீட்டர் எலெக்ட்ரிக் கார் ஆகும். இந்த கார் EV SPA2 ஆர்கிடெக்ச்சரில் உருவான வால்வோ-வின் முதல் மாடல் என்ற பெருமையை பெற்றது.

    இந்த காரின் டாப் எண்ட் மாடலில் 111 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்படுகிறது. இது முழு சார்ஜ் செய்தால் 600 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்கும் என சான்று பெற்று இருக்கிறது. இதில் உள்ள எலெக்ட்ரிக் மோட்டார்கள் 517 ஹெச்.பி. பவர் வெளிப்படுத்துகிறது.

    வால்வோ EX30 மாடல் என்ட்ரி லெவல் எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. ஆகும். இதில் 69 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்படுகிறது. இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 442 கிலோமீட்டர்கள் வரை செல்லும் என சான்று பெற்றிருக்கிறது. இதில் உள்ள எலெக்ட்ரிக் மோட்டார் 427 ஹெச்.பி. பவர் வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. 

    ×