என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "love"
- தனது கணவரை பொறுப்புடன் பார்த்துக் கொண்டு வந்துள்ளார்.
- இரண்டு குழந்தைகளும் உதவி வந்துள்ளனர்.
சீனாவின் அன்ஹூய் மாகாணத்தை சேர்ந்தவர் சன் ஹாங்சியா. இவரது கணவர் கடந்த 2014 ஆம் ஆண்டு மாரடைப்பு ஏற்பட்டு கோமா நிலைக்கு சென்றார். கோமாவில் இருந்த கணவர் நிச்சயம் குணமடைவார் என்ற நம்பிக்கையில் ஹாங்சியா தனது கணவரை பொறுப்புடன் பார்த்துக் கொண்டு வந்துள்ளார்.
பத்து ஆண்டுகளாக கோமாவில் இருந்த போதிலும், மனைவி ஹாங்சியா தனது கணவரை அன்புடன் பாசமாக கவனித்து வந்துள்ளார். கணவரை பராமரித்துக் கொள்வதில் ஹாங்சியாவின் இரண்டு குழந்தைகளும் உதவி வந்துள்ளனர்.
கோமாவில் இருந்து மீண்ட கணவர் மருத்துவமனையில் இருக்கும் நிலையில், அவருக்கு கடந்த காலங்களில் என்னவெல்லாம் நடந்தது என்பதை ஹாங்சியா இன்ப அதிர்ச்சியில் தெரிவித்து வருகிறார்.
இது தொடர்பாக தனியார் செய்தி நிறுவனத்திடம் பேசிய ஹாங்சியா, "தற்போது நான் சோர்வாக இருக்கும் போதிலும், குடும்பம் ஒன்றிணைந்ததும் எல்லாமே சரியாகிவிடும். கணவருக்கு இப்படியொரு நிலை ஏற்பட்டது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனினும், கணவரை தொடர்ந்து பார்த்துக் கொள்ள என் குழந்தைகள் ஆதரவாக இருந்தனர்," என்று தெரிவித்தார்.
- தனது கணவர் மீண்டும் சுயநினைவுக்கு திரும்புவார் என சன்ஹாங்சியா உறுதியாக நம்பினார்.
- வீடியோ வைரலான நிலையில் பயனர்கள் பலரும் இதுதான் உண்மையான காதல் என பதிவிட்டு வருகின்றனர்.
சீனாவின் அன்ஹுய் மாகாணத்தை சேர்ந்த ஒருவருக்கு கடந்த 2014-ம் ஆண்டு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு வீட்டில் மயங்கி விழுந்தார். இதனால் கோமா நிலைக்கு சென்ற அவர் அதன் பிறகு சுயநினைவுக்கு திரும்பவில்லை. ஆண்டுகள் பல கடந்த போதும் அவருக்கு நினைவு திரும்பாததால் அவரது மனைவி சன்ஹாங்சியா மற்றும் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.
ஆனாலும் தனது கணவர் மீண்டும் சுயநினைவுக்கு திரும்புவார் என சன்ஹாங்சியா உறுதியாக நம்பினார். மேலும் கணவர் மீது மிகவும் அன்பு செலுத்திய அவர் வீட்டில் கணவரை தொடர்ந்து கவனித்து வந்தார். இதன் பயனாக அவரது கணவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோமாவில் இருந்து மீண்டுள்ளார். இது தொடர்பான வீடியோக்கள் சீனாவில் உள்ள சமூக வலைதளங்களில் வைரலாகியது.
அதில், படுக்கையில் விழித்திருக்கும் கணவரின் அருகில் சன்ஹாங்சியா அமர்ந்திருக்கும் காட்சிகளும் கடந்த சில வருடங்களாகவே அவர் அனுபவித்த வலிகளை பற்றி கூறும் காட்சிகளும் உள்ளது.
அப்போது அவரது கணவரின் கண்களில் இருந்து கண்ணீர் வழிகிறது. இந்த வீடியோ வைரலான நிலையில் பயனர்கள் பலரும் இதுதான் உண்மையான காதல் என பதிவிட்டு வருகின்றனர்.
- ஒமாஹா பகுதியில் கடும் சூறாவளி காற்று வீசும் என எச்சரிக்கை செய்யப்பட்டிருந்தது.
- பார்ப்பதற்கு சினிமாவில் இடம்பெறும் காட்சிகளை போல உள்ள வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் அந்த காதல் ஜோடியினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
காதலை காதலியிடம் முன்மொழிய இளைஞர்கள் பல்வேறு வித்தியாசமான செயல்களை செய்கிறார்கள். நடுரோட்டில் பொதுமக்கள் முன்னிலையில் காதலை வெளிப்படுத்தியது முதல் பறக்கும் விமானத்தில் சக பயணிகள் மத்தியில் வெளிப்படுத்துவது வரை ஏராளமான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி இருந்தது.
இந்நிலையில் தற்போது எக்ஸ் தளத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், சூறாவளிக்கு முன்பு ஒரு இளம்ஜோடி மோதிரத்தை மாற்றி நிச்சயதார்த்தம் செய்த காட்சிகள் உள்ளது. அமெரிக்காவின் நெப்ராஸ்கா மாகாணத்தில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. அங்கு கடந்த வாரம் சக்தி வாய்ந்த சூறாவளி காற்றுடன் புயல் வீசியது.
அப்போது அங்கு உள்ள ஒமாஹா பகுதியில் கடும் சூறாவளி காற்று வீசும் என எச்சரிக்கை செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் அப்பகுதிக்கு சென்ற ஒரு இளம்ஜோடி சூறாவளிக்கு மத்தியில் மோதிரத்தை மாற்றி நிச்சயதார்த்தம் செய்துள்ளனர். இதுதொடர்பான வீடியோ எக்ஸ் தளத்தில் வெளியாகி 2 லட்சத்து 46 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்றது. பார்ப்பதற்கு சினிமாவில் இடம்பெறும் காட்சிகளை போல உள்ள வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் அந்த காதல் ஜோடியினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
also i proposed to my partner today!! we pulled over so we could see the tornado that was ~40 min from us. we both love storms and storm chasing so i wanted to propose in front of a storm. i never thought i would actually have the opportunity to do it in front of a tornado pic.twitter.com/kLbEZOD8A6
— ?♡ june bug ♡? SAW FNOWAE (@g00dluckbabe) April 26, 2024
- 2019 ஆம் ஆண்டு ஸ்ருதிஹாசன் மற்றும் டூடுல் ஆர்டிஸ்டான சாந்தனு ஹசாரிகாவும் பழகி டேடிங் செய்தனர்.
- இந்நிலையில் 4 ஆண்டுகள் தொடர்ந்த ரிலேஷன்ஷிப் இப்பொழுது முறிவடைந்துள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளுள் ஒருவர் ஸ்ருதிஹாசன். 7 ஆம் ஆறிவு, 3 ஆகிய படங்களில் நடித்து மக்கள் மனதை கவர்ந்தார் ஸ்ருதிஹாசன். சில மாதங்களுக்கு முன் பிரபாஸ் நடிப்பில் வெளியான சலார் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார்.
சமீபத்தில் இவர் இசையில் கமல்ஹாசன் எழுதிய பாடல் வரிகளில் லோகேஷ் கனகராஜ் நடிப்பில் 'இனிமேல்' என்ற ஆல்பம் பாடல் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இசையில் மிகவும் ஆர்வமிக்கவர் ஸ்ருதிஹாசன்.
2019 ஆம் ஆண்டு ஸ்ருதிஹாசன் மற்றும் டூடுல் ஆர்டிஸ்டான சாந்தனு ஹசாரிகாவும் பழகி டேடிங் செய்தனர். விருது வழங்கும் விழாக்களுக்கு எல்லாம் ஒன்றாக சென்றனர். இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பதிவிடுவார். 4 ஆண்டுகள் அவர்கள் ஒன்றாக வாழ்ந்தனர். இந்நிலையில் 4 ஆண்டுகள் தொடர்ந்த ரிலேஷன்ஷிப் இப்பொழுது முறிவடைந்துள்ளது.
இருவரும் அவர்களின் இன்ஸ்டாகிராமில் ஒருவரை ஒருவர் அன்ஃபாலோ செய்தனர். ஸ்ருதிஹாசன் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து சாந்தனுவுடன் எடுத்துக் கொண்ட அனைத்து புகைப்படங்களையும் டெலிட் செய்துள்ளார்4 ஆண்டுகள் பிறகு பிரிந்த ஸ்ருதிஹாசன் மற்றும் சாந்தனு ஹசாரிகா
. அதைத் தொடர்ந்து தற்காலிகமாக சமூக வலைதளங்கலில் இருந்து ஒரு பிரேக் எடுத்துள்ளார். அவர் கடைசியாக பகிர்ந்த பதிவில் என்னை பற்றியும் , மக்களை பற்றியும் நிறைய கற்றுக் கொண்டே இருக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- பிரீத்தி அஸ்ரானி அப்பாவி முகத்துடன் தன் அம்மாவை இழந்த துக்கத்தை மிகத் திறம்பட அயோத்தி படத்தில் நடித்திருப்பார்.
- பிரீத்தி அஸ்ரானி அடுத்ததாக கவினின் 5 வது படத்தில் நடித்து வருகிறார்.
சசிகுமார் நடிப்பில் அறிமுக இயக்குனரான மந்திர மூர்த்தி இயக்கத்தில் 2023 ஆம் ஆண்டு அயோத்தி திரைப்படம் வெளியாகியது. யாஷ்பால் ஷர்மா, பிரீத்தி அஸ்ரானி, புகழ், போஸ் வெங்கட் ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து இருப்பர்.
பிரீத்தி அஸ்ரானி அப்பாவி முகத்துடன் தன் அம்மாவை இழந்த துக்கத்தை மிகத் திறம்பட அயோத்தி படத்தில் நடித்திருப்பார். அயோத்தி திரைப்படம் மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது.
இதைத் தொடர்ந்து பிரீத்தி அஸ்ரானி அடுத்ததாக கவினின் 5 வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை நடன இயக்குனரான சதீஷ் இயக்கி வருகிறார். இது ஒரு ஜாலியான நகைச்சுவை கதைக்கள பிண்ணனியில் உருவாகவுள்ளது. அயோத்தியில் நான் நடித்த கதாப்பாத்திரத்தை விட இது முற்றிலும் மாறுப்பட்டது என்று சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளார்.
இதற்கடுத்து ரியோ நடிக்கும் அடுத்த படத்திலும் ஒப்பந்தம் ஆகியிருப்பதாக கூறியுள்ளார் பிரீத்தி அஸ்ரானி.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இருவருக்கும் இடையே வயது வித்தியாசம் மிகவும் அதிகமாக இருந்தது என்றாலும், அவர்கள் அதை பெரியதாக எடுத்துக்கொள்ளவில்லை.
- நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் முன்னிலையில் இருவரும் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர்.
ஸ்மார்ட்போன்களை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசமின்றி அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர். அதில், சமூக வலைதளங்களில் நேரத்தை அதிகம் செலவிடுபவர்களும் இருக்கிறார்கள்.
இந்நிலையில் மத்திய பிரதேசத்தின் அகர் மாவட்டத்தின் மகாரியா கிராமத்தை சேர்ந்த 80 வயதான பலுராம் பக்கிரி என்ற முதியவருக்கு மகாராஷ்டிரா மாநிலம் அமராவதியை சேர்ந்த 34 வயதான ஷீலா இங்கிள் என்ற பெண்ணுடன் சமூக வலைதளம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
சில நாட்களில் இந்த பழக்கம் காதலாக மாறியது. இருவருக்கும் இடையே வயது வித்தியாசம் மிகவும் அதிகமாக இருந்தது என்றாலும், அவர்கள் அதை பெரியதாக எடுத்துக்கொள்ளவில்லை. மாறாக இருவரும் திருமணம் செய்து மண வாழ்க்கையில் இணைய முடிவு செய்தனர்.
இதைத்தொடர்ந்து நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் முன்னிலையில் இருவரும் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர். அங்குள்ள கோர்ட்டு வளாகத்தில் இவர்களது திருமணம் நடைபெற்றுள்ளது. இதுதொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- தேவாலயங்கள் மனிதர்களுக்கும் ஆறுதலை தரக்கூடிய இடமாக இருக்கிறது.
- இயேசு ஆலயத்தை தன் தந்தையின் இல்லமாக பார்த்தார்.
தேவாலயம் அல்லது வழிபாட்டுக்கூடம் என்பது எல்லா மனிதர்களுக்கும் ஆறுதலை தரக்கூடிய இடமாக இருக்கிறது. மனதில் உள்ள கவலைகளை, கண்ணீரை கொட்டித் தீர்க்கிற இடமாகவும், விடை தெரியா கேள்விகளுக்கு விடை தருகிற இடமாகவும், வழி தெரியா வாழ்க்கைக்கு வழிகாட்டுகிற இடமாகவும் இருக்கிறது.
ஆலயத்திற்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்புகிற போது ஒரு இனம் புரியாத அமைதி மனதில் தங்கி விடுகிறது. வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை நோக்கி நடந்திட ஆற்றல் கிடைக்கிறது. அத்தகைய சிறப்புமிகு ஆலயத்தை யூதர்கள் எப்படி பார்த்தார்கள்? இயேசு எப்படி பார்த்தார்? நாம் எப்படி பார்க்க வேண்டும்? என்கிற மூன்று நிலைகளில் யோவான் நற்செய்தி 2-வது அதிகாரம் 13 முதல் 22 வரை உள்ள இறைவார்த்தை பகுதியை தியானித்து பார்ப்போம்...! அந்த பகுதி பின்வருமாறு:
யூதர்களுடைய பாஸ்கா விழா விரைவில் வரவிருந்ததால் இயேசு எருசலேமுக்குச் சென்றார். கோவிலில் ஆடு, மாடு, புறா விற்போரையும், அங்கே உட்கார்ந்து இருந்து நாணயம் மாற்றுவோரையும் கண்டார். அப்போது கயிறுகளால் ஒரு சாட்டை பின்னி அவர்கள் எல்லோரையும் கோவிலில் இருந்து துரத்தினார். ஆடு, மாடுகளையும் விரட்டினார். நாணயம் மாற்றுவோரின் சில்லரைக் காசுகளையும் அவை இருந்த மேசைகளையும் கவிழ்த்து போட்டார். அவர் புறா விற்பவர்களிடம், இவற்றை இங்கிருந்து எடுத்துச்செல்லுங்கள். என் தந்தையின் இல்லத்தை சந்தை ஆக்காதீர்கள்' என்று கூறினார்.
யூதர்கள் அவரைப் பார்த்து, இவற்றை எல்லாம் செய்வதற்கு உமக்கு உரிமை உண்டு என்பதற்கு நீர் காட்டும் அடையாளம் என்ன? என்று கேட்டார்கள். அதற்கு இயேசு மறுமொழியாக, `இக்கோவிலை இடித்து விடுங்கள் நான் மூன்று நாளில் கட்டிவிடுவேன்' என்றார்.
அப்போது யூதர்கள், `இந்த கோவிலை கட்ட நாற்பத்தாறு ஆண்டுகள் ஆயிற்றே நீர் இதை மூன்றே நாளில் எழுப்பிவிடுவீரோ' என்று கேட்டார்கள். ஆனால் அவர் தம் உடலாகிய கோவிலை பற்றியே பேசினார் என்பது அவர்களுக்கு புரியவில்லை. (யோவான் 2:13-22)
மேலே பார்த்த நற்செய்தி பகுதியில், இயேசு கோபப்படுவதை பார்க்கிறோம். அமைதியையும், கனிவையும், தனது வாழ்நாள் முழுவதும் வெளிப்படுத்திய இயேசு கோபப்படுகிறாறே அது நியாயமா என்ற கேள்வி நம்மில் பலருக்கு தோன்றலாம். ஆனால் இயேசு எதற்காக கோபப்பட்டார் என்பதை சிந்தித்து பார்க்கும் போது நமக்கு புரியும்.
இயேசு ஆலயத்தை தன் தந்தையின் இல்லமாக பார்த்தார். எனவே தான் அதனை வியாபாரக்கூடமாக பார்த்த யூதர்கள் மீது கோபம் கொண்டார். அதனால் தான் அவரது கோபம் சாதாரணமாய் இல்லை. கடுமையாக இருந்தது. சாட்டையால் அவர்களை அடித்து விரட்டினார். அவர்களின் பொருட்களை கவிழ்த்துப் போடுகிறார்.
இதன் மூலம் இயேசு தன் தந்தையின் இல்லமாகிய தேவாலயத்திற்கு எத்தகைய முக்கியத்துவம் கொடுக்கிறார் என்பது தெரிகிறது. இதுமட்டுமன்று நம் கண் எதிரே நடக்கும் அநீதியை கண்டு அமைதியாக இருக்காமல் குரல் கொடுக்க வேண்டும் என்கிற செய்தியையும் இயேசு நமக்கு தருகிறார். இயேசுவின் சாட்டையடி யூதர்களுக்கு மட்டுமல்ல மக்களின் நம்பிக்கையை பயன்படுத்தி, ஆலயங்களை வியாபாரக்கூடமாய் மாற்றும் ஒவ்வொருவருக்குமே பொருந்தும்.
இரண்டாவதாக இந்த பகுதியில் நாம் கவனிக்க வேண்டியது யோவான்: 2:22. இதில் இயேசு, 'இந்தக் கோவிலை இடித்து விடுங்கள், நான் மூன்று நாளில் கட்டிவிடுவேன்' என்று கூறுகிறார். இதில் அவர் கோவிலாகிய கட்டிடத்தை குறிப்பிடவில்லை. மாறாக தம் உடலாகிய கோவில் பற்றியே குறிப்பிடுகிறார். இதன் வழியாக அவர் இறந்து மூன்றாம் நாள் உயிர்தெழுவதையே, `மூன்று நாளில் கட்டி விடுவேன்' என்று குறிப்பிடுகிறார்.
ஆக, தனது உடலை இயேசு கோவிலாகவே பார்த்தார். தன்னில் இருக்கும் இறைவனை நற்செயல்களால் வெளிப்படுத்தி நடமாடும் ஆலயமாகவே வாழ்ந்தார். அவ்வாறு வாழ நமக்கும் அழைப்பு விடுக்கிறார். இதனையே திருத்தூதர் பவுல் கொரிந்திய மக்களுக்கு எழுதிய கடிதத்தில், நீங்கள் கடவுளுடைய கோவிலென்றும், கடவுளின் ஆவியார் உங்களுள் குடியிருக்கிறார் என்றும் உங்களுக்கு தெரியாதா? ஒருவர் கடவுளின் கோவிலை அழித்தால் கடவுள் அவரை அழித்துவிடுவார். ஏனெனில் கடவுளின் கோவில் தூயது. நீங்களே அக்கோவில், என்று கூறுகிறார் (1 கொரிந்தியர் 3:16).
இதன் மூலம் நமது உடல் இறைவனின் ஆலயம் என்பது தெளிவாக தெரிகிறது. அந்த உடலை நாம் எப்படி பார்க்க வேண்டும் என்பதும் புரிகிறது. ஆகவே நாம் நமது உடலில் இறைவன் தங்கியிருக்கிறார் என்பதை நம்புகிறோமா? அப்படி நம்பினால், நம்மில் இருக்கும் இறைவனை நமது நல்ல செயல்களால் நமக்கு அடுத்து இருப்பவருக்கு வெளிப்படுத்தி இருக்கிறோமா? சிந்திப்போம்.
அன்பு, அமைதி, இரக்கம், மன்னிப்பு, சமத்துவம் ஆகிய இறைத்தன்மைகளை அனைவருக்கும் வெளிப்படுத்துவோம். நடமாடும் ஆலயங்களாக வாழ்வோம்.
- போனிகபூர் தனது மகள் ஜான்வி கபூர் - ஷிகர் பஹாரியா காதலை ஏற்றுக்கொண்டு அதனை அங்கீகரித்து உள்ளார்
- 'மகள் ஜான்வி- ஷிகர் காதலை மனமார வரவேற்கிறேன். விரைவில் திருமண ஏற்பாடுகள் நடைபெறும் " என தெரிவித்தார்.
பிரபல இந்தி திரைப்பட தயாரிப்பாளர் போனி கபூர் - மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவி தம்பதிகளின் மூத்த மகள் ஜான்வி கபூர்.பல்வேறு இந்தி, தெலுங்கு படத்தில் நடித்ததன் மூலம் பிரபல நடிகையாக ஜான்விகபூர் திகழ்ந்து வருகிறார்.
இந்நிலையில் ஜான்விகபூர் -ஷிகர் பஹாரியா என்பவரை காதலித்து வருகிறார்.இவர் மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் சுஷில்குமார் ஷிண்டேவின் பேரன் ஆவார். இருவரும் பல்வேறு இடங்களில் சுற்றி பல ஆண்டுகளாக காதலை வளர்த்து வந்தனர். ஜான்விகபூர் - ஷிகர் பஹாரியா அடிக்கடி உணவகங்கள், பப்களில் ஜோடியாக காணப்பட்டு வந்தனர்.
சமீபத்தில் ஜான்வி கபூரின் 27- வது பிறந்தநாளை யொட்டி காதலன் ஷிகர் பஹாரியாவுடன் திருப்பதி கோவிலுக்கு ஜோடியாக சென்று சாமி கும்பிட்டனர்.இந்த காதல் ஜோடிகளின் புகைப்படங்கள் வைரலாக பரவியது.
இந்நிலையில் போனிகபூர் தனது மகள் ஜான்வி கபூர் - ஷிகர் பஹாரியா காதலை ஏற்றுக்கொண்டு அதனை அங்கீகரித்து உள்ளார். அதுகுறித்து போனிகபூர் மனம் திறந்து பேசி உள்ளார்.
அப்போது 'மகள் ஜான்வி- ஷிகர் காதலை மனமார வரவேற்கிறேன். விரைவில் பெற்றோர்களிடம் உரிய முறையில் பேசி திருமண ஏற்பாடுகள் நடைபெறும் " என தெரிவித்தார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் வெளிவர இருக்கும் ஹீராமந்தி வெப் சீரிசில் அதிதி ராவ் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
- ஸ்ரீ ரங்கனாயக்க சுவாமி கோவிலில் ரகசிய திருமணம் செய்து கொண்டதாக வதந்திகள் பரவி வந்தது.
சமீப காலமாக நடிகர் சித்தார்த்தும் நடிகை அதிதி ராவும் காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டு வந்தது. இரு தரப்பிலும் இதை மறுக்கவோ, ஏற்கவோ இல்லை. மேலும், இருவரும் பொது நிகழ்ச்சிகளிலும் ஒன்றாகவே பங்கேற்றனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலானது.
நேற்று அவர்கள் இருவரும் தெலுங்கானாவில் உள்ள ஸ்ரீ ரங்கனாயக்க சுவாமி கோவிலில் ரகசிய திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் பரவியது.
சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் வெளிவர இருக்கும் ஹீராமந்தி வெப் சீரிசில் அதிதி ராவ் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். நேற்று இப்படத்தின் வெளியீடும் தேதி அறிவிக்கப்படும் விழாவில் அதிதி ராவ் கலந்துக் கொள்ளவில்லை. அவர் திருமணம் நடப்பதால் அவரால் வர இயலவில்லை என கூறினர், அதனால் தகவல்கள் காட்டு தீப் போல் பரவியது.
இந்நிலையில் இந்த வதந்திகளுக்கு முற்று புள்ளி வைக்கும் விதமாக அதிதி ராவ் மற்றும் சித்தார்த் இன்ஸ்டாகிராமில் தங்களுக்கு தற்பொழுது திருமணம் நடக்கவில்லை, நிச்சயதார்த்தம் முடிவடைந்துள்ளது என பதிவை பதிவிட்டுள்ளனர். அதில் " ஹீ செட் எஸ் - எங்கேஞ்டு" என்ற தலைப்பில் இருவரும் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பதிவிட்டுள்ளனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- மாணவியும், முத்தாலியை சேர்ந்த சிவா (25) என்ற வாலிபரும் காதலித்து வந்துள்ளனர். இது மாணவியின் பெற்றோருக்கு பிடிக்கவில்லை
- சிறுமி காணாமல் போன நிலையில் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை காவல்துறையினர் ஆய்வு செய்தனர்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே பாகலூர் பக்கமுள்ள பட்வாரப்பள்ளி கிராமத்தை சேர்ந்த பிரகாஷ் காமாட்சி தம்பதியின் மகளான ஸ்பூர்த்தி (வயது 16) பாகலூரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 14-ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற மாணவி வீடு திரும்பவில்லை. இதனையடுத்து அவர்களது குடும்பத்தினர் அக்கம் பக்கத்தில் தேடியுள்ளனர். இந்நிலையில் 15-ம் தேதி பட்டவாரப்பள்ளி பகுதியில் உள்ள ஏரியில் சிறுமி சடலமாக மிதந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சிறுமியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது மாணவியும், முத்தாலியை சேர்ந்த சிவா (25) காதலித்து வந்துள்ளனர். கடந்த 2 வருடங்களுக்கு முன்பு சிறுமி அந்த வாலிபருடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். அவரது பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் மாணவியை மீட்டு மீண்டும் குடும்பத்தினருடன் அனுப்பி வைத்தனர். அந்த இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சிறுமி காணாமல் போன நிலையில் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை காவல்துறையினர் ஆய்வு செய்தனர். அப்போது சிறுமி வீட்டின் அருகில் இருந்த சிசிடிவி கேமராவை யாரோ துண்டை போட்டு மூடியுள்ளனர். இதனையடுத்து நடந்த விசாரணையில் அந்த சிறுமியின் பெற்றோரே அவரை கொலை செய்தது தெரியவந்தது.
மாணவியும், முத்தாலியை சேர்ந்த சிவா (25) என்ற வாலிபரும் காதலித்து வந்துள்ளனர். இது மாணவியின் பெற்றோருக்கு பிடிக்கவில்லை. இதனால் அவர்கள் மகளை கண்டித்துள்ளனர். ஆனால் மாணவி காதலை கைவிட மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் மகளை தாக்கி, ஏரியில் மூழ்கடித்து கொலை செய்துவிட்டு காணாமல் போனதாக நாடகமாடியது தெரிய வந்துள்ளது.
தொடர்ந்து மாணவியின் தந்தை பிரகாஷ், தாயார் காமாட்சி மற்றும் இவர்களுக்கு உடந்தையாக இருந்த ஸ்பூர்த்தியின் பெரியம்மா மீனாட்சி ஆகியோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காதல் விவகாரத்தில் மகளை பெற்றோரே கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- தனபால் தனது காதலி பவானியுடன் கரூர் மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார்.
- போலீஸ் நிலைய வளாகத்தில் அமைந்துள்ள விநாயகர் கோவிலில் கரூர் கவுன்சிலர் வசுமதி பிரபு மற்றும் உறவினர்கள் தலைமையில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
கரூர்:
கரூர் மாவட்டம், சோமூர் பகுதியை சேர்ந்தவர் தனபால் (வயது 25). என்ஜினீயரிங் பட்டதாரியான இவர் அரசு தேர்வுகளுக்கு படித்து வருகிறார். அதே ஊரை சேர்ந்தவர் பவானி (வயது 19). இவர் தாந்தோணிமலையில் அமைந்துள்ள அரசு கலைக் கல்லூரியில் பி.ஏ. வரலாறு இரண்டாமாண்டு படித்து வருகிறார்.
பவானியின் தாய், தந்தையர் கடந்த ஓரிரு வருடங்களுக்கு முன்பு உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டனர். இதனால் பவானி பெரியப்பா, பெரியசாமி மற்றும் உறவினர்கள் ஆதரவில் இருக்கிறார்.
இந்த நிலையில் பவானி மற்றும் தனபால் ஆகிய இருவரும் காதலித்து வந்தனர். இந்த விவரம் தனபால் வீட்டுக்கு தெரிந்து, அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து தனபால் தனது காதலி பவானியுடன் கரூர் மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார்.
ஆதரவற்ற பெண்ணை தனபால் கரம்பிடிப்பதை அறிந்த அவரது நண்பர்கள் அங்கு வந்தனர். இதை தொடர்ந்து போலீஸ் நிலைய வளாகத்தில் அமைந்துள்ள விநாயகர் கோவிலில் கரூர் கவுன்சிலர் வசுமதி பிரபு மற்றும் உறவினர்கள் தலைமையில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
திருமணம் செய்து கொண்ட ஜோடிக்கு அந்த பகுதியில் நின்ற அனைவரும் வாழ்த்துகளை தெரிவித்தனர். தாய், தந்தையை இழந்து உறவினர்கள் ஆதரவில் வளர்ந்து வந்த பவானிக்கு கவுன்சிலர் வசுமதி பிரபு படிப்பு உதவி அளித்து வந்த நிலையில். தற்போது திருமணத்திற்கு தேவையான மாங்கல்யம் உள்ளிட்ட செலவுகளையும் ஏற்று உதவி செய்தார் .
- வடகிழக்கு டெல்லியில் உள்ள பாகீரதி விகாருக்கு வருமாறும் கூறினார்.
- பைசல் மற்றும் சமீர் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுடெல்லி:
டெல்லியில் உள்ள ஒரு பிளக்ஸ் தயாரிப்பு கடையில் வேலை பார்த்து வந்தவர் மாஹிர் என்கிற இம்ரான் ( வயது 18) இவருக்கும் 21 வயது பெண் ஒருவருக்கும் இடையே இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. இருவரும் ஒருவரையொருவர் விரும்பினார்கள்.
இந்த சூழ்நிலையில் அந்த பெண்ணுக்கு அர்மான் கான் (20) என்பவருடன் இன்ஸ்டாகிராம் வழியாக நட்பு உருவானது. சம்பவத்தன்று இருவரும் நேரில் சந்தித்தனர். அந்த சமயம் அப்பெண் வீடியோ காலில் மாஹிருடன் நீண்ட நேரம் பேசிக்கொண்டு இருந்ததை அம்ரான்கான் பார்த்தார். இது தொடர்பாக அவர் அந்த பெண்ணிடம் கேட்டார். அதற்கு அவர் தான் மாஹிரை விரும்புவதாக தெரிவித்தார். இது அம்ரான்கானுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. உடனே அந்த பெண்ணிடம் இருந்து செல்போனை பறித்த அம்ரான்கான் அங்கிருந்து சென்றுவிட்டார்.
நேற்று அவர் மாஹிரை தொடர்பு கொண்டு காதலியின் செல்போனை திருப்பி தருகிறேன் என்றும் அதனால் வடகிழக்கு டெல்லியில் உள்ள பாகீரதி விகாருக்கு வருமாறும் கூறினார்.
இதையடுத்து மாஹிர் அந்த இடத்துக்கு சென்றார். அப்போது அங்குள்ள ஒரு குறுகிய சந்தில் தனது நண்பர்களுடன் நின்று கொண்டிருந்த அர்மான்கான் மாஹிரை சரமாரியாக கத்தியால் குத்தினார். 3 பேரும் சேர்ந்து அவரை 50 தடவை கத்தியால் குத்தினார்கள். இதனால் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த மாஹிர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது பற்றி தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். மேலும் இக்கொலை தொடர்பாக அர்மான்கான் மற்றும் அவரது நண்பர்கள் பைசல் மற்றும் சமீர் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்