என் மலர்tooltip icon

    செய்திகள்

    • பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் அபிஷேக் ஷர்மா தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.
    • பந்துவீச்சாளர் தரவரிசையில் வருண் சக்கரவர்த்தி முதல் இடத்தைத் தக்கவைத்துக் கொண்டார்.

    துபாய்:

    தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடருக்குப் பிறகு ஐசிசி டி20 தரவரிசையில் இந்திய வீரர்களின் நிலைகளில் மாற்றங்கள் ஏற்பட்டன.

    பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் திலக் வர்மா தென் ஆப்பிரிக்கா தொடரில் 187 ரன்கள் குவித்து ஒரு இடம் முன்னேறி மூன்றாவது இடம் பிடித்துள்ளார்.

    இளம் தொடக்க வீரர் அபிஷேக் ஷர்மா பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.

    பந்துவீச்சாளர் தரவரிசையில் இந்தியாவின் வருண் சக்கரவர்த்தி தென் ஆப்பிரிக்கா தொடரில் சிறப்பாக செயல்பட்டு முதல் இடத்தைத் தக்கவைத்துக் கொண்டார். இந்த தொடரில் 10 விக்கெட் வீழ்த்தியுள்ளார். வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 10 இடங்கள் முன்னேறி 18வது இடத்தைப் பிடித்தார். அவர் மூன்று போட்டிகளில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    ஆல் ரவுண்டர் தரவரிசையில் ஹர்திக் பாண்ட்யா நான்காவது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டார். அக்சர் படேல் ஒரு இடம் சரிந்து 10வது இடத்திற்குச் சென்றார்.

    • கடந்த மே மாதம் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியா அதிரடி தாக்குதல் நடத்தியது.
    • இந்த தாக்குதலில் பாகிஸ்தான் எல்லையில் செயல்பட்ட பயங்கரவாத முகாம்கள் குறிவைத்து அழிக்கப்பட்டன.

    புதுடெல்லி:

    பாரி என்றால் கொட்டு முழக்கத்துடன் செய்யும் இரவுக் காவலைக் குறிக்கும். காட்டு விலங்குகளின் தொல்லைகளில் இருந்து பயிர்களைப் பாதுகாப்பதற்காக இரவில் காவல் இருக்கும் பண்டைய பழக்கமே பாரி வேட்டையாக நிலவுகிறது. பாரி வேட்டை தற்போது தமிழகத்தின் சிவகங்கை மாவட்டம் பிரான்மலையில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு விழாவாக நடைபெறுகிறது. மாசி மாதத்தில் சிவராத்திரிக்கு மறுநாள் பாரி வேட்டைக்குச் செல்வது வழக்கம்.

    இந்தப் பாரி வேட்டையை நினைவுபடுத்துவதுபோல் பஹல்காமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுக்கு இந்திய ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்த அதிரடி நடவடிக்கைக்கு ஆபரேஷன் சிந்தூர் என பெயரிடப்பட்டது.

    ஆபரேஷன் சிந்தூர் ஏன் நடத்தப்பட்டது என்பது குறித்து இந்திய வரலாற்றில் முதன்முறையாக, மிகப்பெரிய ராணுவ நடவடிக்கை குறித்து இரண்டு பெண் அதிகாரிகள் விளக்கமளித்தனர்.


    பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மீது கடந்த மே மாதம் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியா அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் பயங்கரவாத முகாம்கள் குறிவைக்கப்பட்டு அழிக்கப்பட்டன.

    இதுதொடர்பாக இந்திய அரசு சார்பில் வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி பாகிஸ்தான்மீது தாக்குதல் நடத்தியது குறித்து விவரித்தார்.

    அதன்பின், அவரைத் தொடர்ந்து இந்திய ராணுவத்தைச் சேர்ந்த கர்னல் சோபியா குரேஷி, இந்திய விமானப் படையைச் சேர்ந்த விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகிய இரு பெண் அதிகாரிகள் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் எப்படி நடத்தப்பட்டது, முதலில் எந்த பயங்கரவாத முகாம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது, என்ன நடந்தது, ராணுவம் என்ன செய்தது, விமானப்படை என்ன செய்தது என விரிவாக வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்தனர்.

    இதனால் கர்னல் சோபியா குரேஷி, விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகிய இரு பெண் அதிகாரிகள் மக்களின் கவனத்தை ஈர்த்தனர். இணைய தளங்களிலும் இருவரும் வைரலாகினர்.

    யார் இந்த சோபியா குரேஷி?

    கர்னல் சோபியா குரேஷி குஜராத் மாநிலம் வதோதராவைச் சேர்ந்தவர். இந்திய ராணுவத்தின் சிக்னல்ஸ் படைப்பிரிவு அதிகாரியான கர்னல் சோபியா குரேஷி, வலுவான ராணுவப் பின்னணியை கொண்டவர். ஐ.நா. அமைதிப் பணிக்கான இந்தியப் படைக்கு தலைமையேற்ற முதல் பெண் அதிகாரி என்ற பெருமைக்கு உரியவர். புனேவில் நடந்த பன்னாட்டு ராணுவப் பயிற்சியில் இந்திய ராணுவப் பிரிவை வழிநடத்திய முதல் பெண் அதிகாரி.


    பயோகெமிஸ்ட்ரி முதுகலை பட்டதாரியான இவர் கடந்த 1999-ல் அதிகாரிகள் பயிற்சி அகாடமி மூலம் இந்திய ராணுவத்தில் சேர்ந்தார். படிப்படியாக பதவி உயர்வுகள் பெற்றார்.

    யார் இந்த வியோமிகா சிங்?

    'வியோமிகா' என்ற அவரது பெயரின் அர்த்தம் 'வானத்தில் வசிப்பவள்' என்பது. தனது 6 ஆம் வகுப்பு முதலே விமானப் படையில் சேரும் ஆர்வம் கொண்டவர். விமானப் படையில் எப்படியாவது சேர்ந்துவிட வேண்டும் என்பதில் வியோமிகா தீர்மானமாக இருந்தார்.

    இந்திய விமானப் படையில் கடந்த 2019 டிசம்பர் 18-ம் தேதி விமானியாக சேர்ந்தார். இவர் ஜம்மு காஷ்மீர் மற்றும் வடகிழக்கு பிராந்தியத்தில் உயரமான மற்றும் மிகவும் சவாலான நிலப்பரப்புகளில் சேட்டக், சீட்டா போன்ற ஹெலிகாப்டர்களை இயக்கியுள்ளார். 2500-க்கும் மேற்பட்ட மணி நேரங்களை பறக்கும் அனுபவத்தைக் கொண்டுள்ளார். மேலும் பல்வேறு மீட்புப் பணிகளிலும் இவர் பங்கேற்றுள்ளார்.

    பெண்களை சக்தியாகக் கொண்டாடும் நாடு இந்தியா என்பதை நிரூபிக்கும் வகையில், மகாசக்திகளாக தலைமை தாங்கி விங் கமாண்டர் வியோமிகா சிங், கர்னல் சோபியா குரேஷி ஆகியோர் பாகிஸ்தானில் நடத்திய ஆக்ரோஷ தாக்குதல் உலகையே வியக்க வைத்துள்ளது.

    எனவே தான் சோபியா குரேஷியும் வியோமிகா சிங்கும் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலுக்கு பிறகு அதிகளவு பேசப்பட்டு வருகின்றனர்.

    • மசோதாவை குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு அனுப்பி வைத்தல்.
    • மசோதாவை மறுபரிசீலனை செய்யச் சொல்லி சட்டமன்றத்திற்கே திருப்பி அனுப்புதல்.

    2025-ஆம் ஆண்டு நவம்பர் மாதம், மாநில ஆளுநர்களின் மசோதா அதிகாரம் மற்றும் அவர்கள் முடிவெடுப்பதற்கான காலக்கெடு குறித்து உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு மிக முக்கியமான தீர்ப்பை வழங்கியது.

    உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான அமர்வு வழங்கிய இந்தத் தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் குறித்து இங்கு பார்க்கலாம்.

    இந்த தீர்ப்பில் சட்டப்பிரிவு 200க்கின் கீழ் ஆளுநருக்கான வாய்ப்புகள் குறித்து கூறப்பட்டது. மாநில சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்படும் மசோதாக்கள் மீது ஆளுநருக்கு மூன்று வாய்ப்புகள் மட்டுமே உள்ளன என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.


    மசோதாவிற்கு உடனடியாக ஒப்புதல் அளித்தல். இதில், மசோதாவை குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு அனுப்பி வைத்தல். மசோதாவை மறுபரிசீலனை செய்யச் சொல்லி சட்டமன்றத்திற்கே திருப்பி அனுப்புதல் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

    மசோதாக்கள் மீது எந்த முடிவும் எடுக்காமல் அவற்றை நீண்ட காலம் கிடப்பில் போடுவது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என்று நீதிமன்றம் கண்டித்துள்ளது.

    ஒரு மாநிலத்தில் ஆளுநர் மற்றும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு என இரண்டு தனித்தனி அதிகார மையங்கள் இருக்க முடியாது என்றும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே இறுதி அதிகாரம் உள்ளது என்றும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.

    குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர் மசோதாக்கள் மீது முடிவெடுக்க நிச்சயமான காலக்கெடுவை நீதிமன்றம் விதிக்க முடியாது என்று தீர்ப்பளிக்கப்பட்டது. அவ்வாறு காலக்கெடு நிர்ணயிப்பது ஜனநாயகம் மற்றும் அரசியல் சாசனக் கோட்பாடுகளுக்கு எதிரானது என நீதிபதிகள் தெரிவித்தனர். 

    ஆளுநர் ஒரு மசோதா மீது எந்தக் காரணமும் இன்றி நீண்ட காலம் முடிவெடுக்காமல் தாமதப்படுத்தினால், சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் உச்ச நீதிமன்றத்தை நாடலாம் என்று இந்தத் தீர்ப்பு அனுமதி அளித்துள்ளது.

    ஆளுநரின் கையொப்பம் அல்லது ஒப்புதல் இல்லாமல், மாநில சட்டமன்றம் நிறைவேற்றிய ஒரு மசோதா நடைமுறைக்கு வந்த சட்டமாகக் கருதப்படாது என்பதையும் நீதிமன்றம் மீண்டும் உறுதிப்படுத்தியது.

    இந்தத் தீர்ப்பு, மாநில அரசுகளுக்கும் ஆளுநர்களுக்கும் இடையே மசோதாக்கள் தொடர்பாக நிலவி வந்த நீண்ட கால மோதல்களுக்கு ஒரு சட்டரீதியான தீர்வை வழங்கியுள்ளது.

    • 2029 தேர்தலில் காங்கிரஸ் கட்சி மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்.
    • இதுதான் எனது சவால். உங்களால் முடிந்தால் இதை எதிர்கொள்ளுங்கள்.

    தெலுங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி அவருடைய கோடங்கல் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    2029 தெலுங்கானா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். இதுதான் எனது சவால். உங்களால் முடிந்தால் இதை எதிர்கொள்ளுங்கள்.

    உங்கள் அரசியல் என்னவென்று நான் பார்க்கிறேன். நான் அரசியலில் இருக்கும் வரை, விஷம் போன்ற கே.சி.ஆர். குடும்பத்தை ஆட்சிக்கு வர அனுமதிக்க மாட்டேன். இது எனது சபதம். கோடங்கல் மண்ணின் மைந்தனாக இந்த மண்ணில் இருந்து இந்த சபதத்தை நான் ஏற்கிறேன்.

    நான் அரசியலில் இருக்கும் வரை, கே.சி.ஆருக்கு அதிகாரம் என்பது ஒரு பகற்கனவாகவே இருக்கும்.

    இவ்வாறு ரேவந்த் ரெட்டி தெரிவித்தார்.

    முன்னதாக தெலுங்கானா முன்னாள் முதல்வர் கே. சந்திரசேகர ராவ், காங்கிரஸ் ஆட்சியை கடுமையாக விமர்சனம் செய்ததுடன், அது பயனற்ற ஆட்சி எனக் குறிப்பிட்டிருந்தார்.

    • அரசு பேருந்தின் டயர் வெடித்ததில் கட்டுப்பாட்டை இழந்து 2 கார்கள் மீது மோதியது.
    • 2 கார்களில் பயணித்த 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே எழுத்தூரில் அரசு பேருந்து 2 கார்கள் மீது மோதியதில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

    அரசு பேருந்தின் முன்பக்க டயர் வெடித்து மோதியதில் 2 கார்களில் பயணித்த 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

    திருச்சியில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற அரசு பேருந்தின் டயர் வெடித்ததில் கட்டுப்பாட்டை இழந்து 2 கார்கள் மீது மோதியது.

    கட்டுப்பாட்டை இழந்த அரசு விரைவு பேருந்து சாலை தடுப்பை தாண்டி எதிர்திசையில் வந்த 2 கார்கள் மீது மோதியது.

    விபத்தை தொடர்ந்து சம்பவம் இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த கோர விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    • திமுகவின் கொள்கைகளை மேடைதோறும் கொண்டு சேர்த்தவர் நாகூர் ஹனீபா.
    • திமுக கொண்ட கொள்கைக்காக சிறைக்கு செல்லவும் தயங்காதவர் நாகூர் ஹனீபா.

    சென்னை சேப்பாக்கம் கலைவாணர் அரங்கில் நாகூர் ஹனீபா நூற்றாண்டு விழா மலர் வெளியீட்டு விழா நடைபெற்றது.

    இதில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    மரியாதையின் அடையாளம் நாகூர் ஹனீபா. உடலால் மறைந்தாலும் அவர் குரல் நம் உள்ளத்தில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.

    கலைஞரும் நாகூர் ஹனீபாவும் நகமும் சதையும் போல் நட்புடன் பழகி வந்தனர்.

    கல்லக்குடி கொண்ட கருணாநிதி பாடலை பட்டித்தொட்டி எல்லாம் கொண்டு சேர்த்தவர் நாகூர் ஹனீபா.

    கட்சியின் மீது ஒருவரால் இறுதிவரை இத்தனை ஈடுபாட்டுடன் இருக்க முடியும் என்பதற்கு நாகூர் ஹனீபா ஒரு உதாரணம்.

    திமுகவின் கொள்கைகளை மேடைதோறும் கொண்டு சேர்த்தவர் நாகூர் ஹனீபா.

    தனது இறுதி மூச்சுவரை மக்கள் பாடகராக வாழ்ந்தவர் நாகூர் ஹனீபா, திமுகவின் வளர்ச்சிக்கு அவர் குரல் துணை நின்றது.

    இதை கற்கவில்லை என்றாலும், ஆயிரக்கணக்கான மேடைகளில் கோடிக்கணக்கான மக்களை தன் வசப்படுத்தியவர் நாகூர் ஹனீபா.

    திமுக கொண்ட கொள்கைக்காக சிறைக்கு செல்லவும் தயங்காதவர் நாகூர் ஹனீபா.

    13 வயது சிறுவனாக இருக்கும்போதே ராஜாஜிக்கு எதிராக கருப்புக்கொடி காட்சி சிறை சென்றவர் நாகூர் ஹனீபா.

    1957 தேர்தலில் நாகூர் ஹனீபா வெற்றி வாய்ப்பை இழந்தாலும் அதன் பின்னர் மேலவை உறுப்பினராக்கப்பட்டார்.

    நாகூர் ஹனீபா போல் திமுகவை வளர்த்தெடுக்கும் நபர்கள் வரவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்தியா- சீனா இடையே எல்லை பிரச்சினை இருந்து வருகிறது.
    • தைவான் தங்களுடைய பகுதிய என தொடர்ந்து சொந்தம் கொண்டாடி வருகிறது.

    பென்டகன் அளித்த அறிக்கை அமெரிக்க பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் அருணாச்சலம் பிரதேசம் சீனாவின் முக்கிய நலன். அருணாச்சல பிரதேசம் நலனில் பேச்சுவார்த்தை அல்லது சமரசத்திற்கு சீனா தயாராக இல்லை என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    சீனாவின் தலைமை தனது 'முக்கிய நலன்களின்' வரம்பை விரிவுபடுத்தி அதில் தைவான், தென் சீனக் கடலில் உள்ள இறையாண்மை கோரிக்கைகள் மற்றும் கடல்சார் பிரச்சினைகள், சென்காகு தீவுகள் மற்றும் வடகிழக்கு இந்திய மாநிலமான அருணாச்சலப் பிரதேசம் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது என்று அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

    இந்தியா- சீனா இடையே எல்லை பிரச்சினை நீணட காலமாக இருந்து வருகிறது. அருணாச்சல பிரதேசத்தின் பெரும் பகுதியை தங்களுடையது எனக் கூறி வருகிறது. மேலும், அருணாச்சல மாநில எல்லை அருகே குடியிறுப்புகளை கட்டி வருகிறது. கட்டமைப்புகளையும் விரிவுப்படுத்தி வருகிறது.

    • பயிர்களுக்கான நிவாரணத்தொகை விவசாயிகளின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும்.
    • இத்தொகையின் மூலம் 3.60 லட்சம் விவசாயிகள் பயன் பெறுவார்கள்.

    2024-2025ல் பருவம் தவறிய மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்க தமிழ்நாடு அரசு ரூ.289.63 கோடி நிதி ஒதிக்கி உள்ளது.

    பாதிக்கப்பட்ட பயிர்களுக்கான நிவாரணத்தொகை விவசாயிகளின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    பருவம் தவறிய மழையால் பாதிக்கப்பட்ட 5.66 லட்சம் ஏக்கர் பயிர்களுக்கு நிவாரணம் வழங்கப்படுகிறது.

    விவசாயிகளுக்கு நிவாரணத் தொகை வழங்க மாநில பேரிடர் நிதியில் இருந்து ரூ.289.63 கோடி தமிழ்நாடு அரசு ஒதுக்கியது. இத்தொகையின் மூலம் 3.60 லட்சம் விவசாயிகள் பயன் பெறுவார்கள் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

    • பிறந்த நாள் விழா பார்ட்டில் கலந்து கொண்டு வீடு திரும்பியபோது சம்பவம் நடைபெற்றுள்ளது.
    • மயக்க பொருள் கொடுத்து உயர் அதிகாரிகள் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

    ராஜஸ்தான் மாநிலம் உதைப்பூரில் தனியார் ஐ.டி. நிறுவன பெண் மானேஜரை, சக நிறுவன சிஇஓ மற்றும் பெண் அதிகாரியின் கணவர் ஓடும் காரில் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    ராஜஸ்தான் மாநிலம் உதைப்பூரில் தனியார் ஐ.டி. நிறுவனத்தில் இளம்பெண் ஒருவர் மானேஜராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த சனிக்கிழமை பிறந்த நாள் விழா பார்ட்டியில் கலந்து கொண்டுள்ளார்.

    இதே விழாவில் அந்த நிறுவனத்தின் சிஇஓ, பெண் நிர்வாகத் தலைவர் மற்றும் அவரது கணவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    பார்ட்டி முடிந்து ஒவ்வொருவராக அந்த இடத்தில் இருந்து புறப்பட்டு சென்றனர். பெண் மானேஜர் மட்டும் தனியாக இருந்துள்ளார். சிஇஓ, பெண் நிர்வாகத் தலைவர் ஆகியோர் அந்த பெண்ணை தங்கள் காரில் ஏறச் சொல்லியுள்ளனர். அவரும் தன் நிறுவத்தின் உயர் அதிகாரிகள்தானே, என நினைத்து காரில் ஏறியுள்ளார்.

    கார் கொஞ்சம் தூரம் சென்ற பின், ஒரு கடை அருகே நின்றுள்ளது. ஒருவர் காரில் இருந்து இறங்கி சிகரெட் போன்ற ஒன்றை வாங்கி வந்துள்ளார். அதை பயன்படுத்துமாறு பெண் மானேஜரிடம் கொடுத்துள்ளனர். அவரும் பயன்படுத்தியுள்ளனர். உடனே மயக்க நிலைக்கு சென்றுள்ளார். அப்போது காரில் இருந்த சிஇஓ, பெண் நிர்வாகத் தலைவரின் கணவர் ஆகியோர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

    காலையில் மயக்கம் தெளிந்த பின்னர்தான், தனக்கு நடந்த கொடூரத்தை உணர்ந்துள்ளார் பெண் மானேஜர். உடனடியாக காவல் நிலையம் சென்று புகார் அளித்துள்ளார்.

    போலீசார் புகார் அடிப்படையில் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, அவர்களை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பெண் மானேஜரை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அறிக்கை கிடைத்த பின் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.

    • அரசின் முடிவை ஏற்று ஒப்பந்த செவிலியர்கள் போராட்டத்தை முடித்துக்கொண்டதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
    • 2024ம் ஆண்டு மட்டும் 1,693 ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தம் செய்யப்பட்டுள்ளது.

    பணி நிரந்தரம் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்தி வந்த ஒப்பந்த செவிலியர்களின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

    முதற்கட்டமாக 1000 ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என அமைச்சர். மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

    மேலும், மீதமுள்ள ஒப்பந்த செவிலியர்களுக்கும் படிப்படியாக பணி நிரந்தர ஆணைகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    அரசின் முடிவை ஏற்று ஒப்பந்த செவிலியர்கள் போராட்டத்தை முடித்துக்கொண்டதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

    திமுக ஆட்சி பொறுப்பேற்ற நான்கரை ஆண்டுகளில் 4,825 ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர்.2024ம் ஆண்டு மட்டும் 1,693 ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தம் செய்யப்பட்டுள்ளது.

    ஒப்பந்த செவிலியர்களுக்கான ஊதியம் 4 ஆண்டுகளுக்கு முன்பே ரூ.14,000-ல் இருந்து ரூ.18,000 ஆக உயர்த்தப்பட்டுவிட்டது என்று அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.

    • டெல்லியில் காற்று மாசு மிகவும் மோசமான நிலையை எட்டியுள்ளது.
    • காற்று சுத்திகரிப்பான அவசியம் என்ற நிலையில் ஜி.எஸ்.டி. 18 சதவீதம் வசூலிப்பதாக மனு.

    டெல்லியில் காற்று மாசு மிகவும் மோசமாக உள்ளது. இதனால் காற்று சுத்திகரிப்பானை மருத்துவ உபகரணம் கீழ் கொண்டு வந்து, அதற்கான ஜி.எஸ்.டி. வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்க ஜி.எஸ்.டி. கவுன்சிலுக்கு உத்தரவிட வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த மனு தலைமை நீதிபதி தேவேந்திர குமார் உபத்யாயா மற்றும் நீதிபதி துஷார் ராவ் கெடேலா பெஞ்ச் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், அவசரமான சூழ்நிலையில் ஜிஎஸ்டி வரியில் இருந்து காற்று சுத்திகரிப்பானுக்கு விலக்கு அளிக்காதது மகிழ்ச்சி அளிக்கவில்லை என தங்களது வருத்தத்தை தெரிவித்தனர்.

    மேலும், முன்னதாக ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் கூட்டப்பட்டு, ஜிஎஸ்டி வரியை குறைக்க பரிசீலனை செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர். அத்துடன், கூட்டத்தை முன்னதாக கூட்டுவது குறித்து அதிகாரிகள் நீதிமன்றத்திற்கு வருகிற 26-ந்தேதி (நாளை மறுதினம்) தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

    இம்மார்ட்டல் படம் ஒரு மர்மமான திரில்லர் கதைக்களத்தில் உருவாகி இருக்கிறது.

    சில மாதங்களுக்கு முன் வெளியான டிராகன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை கயாடு லோஹர். திரைப்படத்தின் வெற்றியின் மூலம் பல ரசிகர் கூட்டத்தை இவர் உருவாக்கினார். இப்படத்தின் வெற்றியின் மூலம் அடுத்தடுத்து தமிழ் திரைப்படங்களில் கமிட் ஆகியுள்ளார்.

    கயாடு லோஹர் முதன் முதலில் கடந்த 2021 ஆம் ஆண்டு முகில்பெட் என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது கயாடு லோஹர் இதயம் முரளி மற்றும் STR 49 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

    மேலும், நடிகர் ஜிவி பிரகாஷ் நடிக்கும் அடுத்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கவுள்ளார். இப்படத்தை மாரியப்பன் சின்னா இயக்குகிறார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழு தற்பொழுது வெளியிட்டுள்ளது. படத்திற்கு இம்மார்டல் என தலைப்பிடப்பட்டுள்ளது.

    இப்படம் ஒரு மர்மமான திரில்லர் கதைக்களத்தில் உருவாகி இருக்கிறது. படத்தின் இசையில் சாம் சி.எஸ் மேற்கொள்ள அருண்குமார் தனசேகரன் படத்தை தயாரிக்கிறார்.

    ஜிவி பிரகாஷ் அவரது 25-வது படமான கிங்ஸ்டன் திரைப்படத்தை தொடர்ந்து இடிமுழக்கம், 13 மற்றும் பிளாக்மெயில் ஆகிய திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், இம்மார்ட்டல் படத்தின் திகிலூட்டும் டீசர் வெளியானது.

    ×