என் மலர்
தொழில்நுட்பச் செய்திகள்
இன்ஸ்டாகிராம் செயலியில் உருவாக்கப்பட்டு வரும் புது அம்சம் குறித்த தகவல்கள் ட்விட்டர் தளத்தில் வெளியாகி உள்ளது.
இன்ஸ்டாகிராம் செயலியின் ஸ்டோரிக்களுக்கு லைக் கொடுக்கும் அம்சம் உருவாக்கப்பட்டு வருகிறது. இதுவரை இதுபோன்ற அம்சம் செயலியில் வழங்கப்படாமல் இருந்தது. இன்ஸ்டாகிராமின் டைரெக்ட் மெசேஜ்களுக்கு வரும் ஸ்டோரிக்களுக்கு மட்டும் ரியாக்ட் செய்யும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.
விரைவில் இந்த நிலை மாறி, ஸ்டோரிஸ் பக்கத்திலேயே லைக் பட்டன் வழங்கப்பட இருக்கிறது. தற்போதைய தகவல்களில் ஒரே பயனர் ஒரு இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பல்வேறு லைக்குகளை பதிவிட முடியும் என கூறப்படுகிறது.

தற்போது முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும், இந்த அம்சம் எப்போது வழங்கப்படும் என்பதும் கேள்விக்குறியாக உள்ளது. இந்த அம்சம் எவ்வாறு செயல்படும் என்பதை விளக்கும் ஸ்கிரீன்ஷாட் ட்விட்டர் தளத்தில் வெளியாகி இருக்கிறது. அதில் ஒருவர் ஒரு ஸ்டோரியை பலமுறை லைக் செய்வது தெளிவாக தெரிகிறது.
முன்னதாக வெளியான தகவல்களில் இன்ஸ்டாகிராமில் உள்ள ஸ்வைப்-அப் ஜெஸ்ட்யூர்களில் லின்க் கொடுக்கும் அம்சம் நீக்கப்பட இருப்பதாக கூறப்பட்டது. பலர் இதற்கான நோட்டிபிகேஷன் தங்களுக்கு வந்ததாகவும் சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.
இந்தியாவில் கொரோனாவைரஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கான முன்பதிவு வாட்ஸ்அப் செயலியிலும் மேற்கொள்ளலாம்.
மத்திய ஆரோக்கியம் மற்றும் குடும்பநல அமைச்சகம் வாட்ஸ்அப் மூலம் தடுப்பூசி முன்பதிவு செய்யும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. வாட்ஸ்அப் செயலியில் உள்ள mygov corona helpdesk மூலம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்பதிவு செய்யலாம்.
முன்னதாக வாட்ஸ்அப் செயலி மூலம் கொரோனாவைரஸ் சார்ந்த விவரங்களை வழங்க mygov corona helpdesk பெயரில் பாட் ஒன்று உருவாக்கப்பட்டது. இந்த பாட்-ஐ பயன்படுத்த பயனர்கள் முதலில் 9013151515 எனும் மொபைல் நம்பரை சேமிக்க வேண்டும்.

வாட்ஸ்அப் மூலம் தடுப்பூசி முன்பதிவு செய்வது எப்படி?
- ஏற்கனவே செய்யவில்லை எனில், 9013151515 எனும் மொபைல் நம்பரை போனில் சேமிக்க வேண்டும்.
- வாட்ஸ்அப் செயலியில் mygov corona helpdesk என தேட வேண்டும்.
- பின் 'Book Slot' என குறுந்தகவல் அனுப்ப வேண்டும்.
- இனி மொபைல் எண்ணிற்கு ஆறு இலக்க ஒ.டி.பி. அனுப்பப்படும். இந்த ஒ.டி.பி.-யை சாட்டில் அனுப்ப வேண்டும்.
- உங்கள் மொபைல் நம்பரில் பலருக்கு ஏற்கனவே முன்பதிவு செய்து இருந்தால், யாருக்கு முன்பதிவு செய்ய வேண்டும் என பெயரை தேர்வு செய்யவும்.
- உங்களுக்கு தேவையான தேதி, நேரம், இடம் மற்றும் தடுப்பூசி விவரங்களை தேர்வு செய்ய வேண்டும்.
- முன்பதிவை சாட் பாட் உறுதிப்படுத்தும்.
ஒப்போ நிறுவனம் தனது எப் சீரிஸ் ஸ்மார்ட்போனின் ஸ்பெஷல் எடிஷன் மாடலை உருவாக்கி வருகிறது.
ஒப்போ நிறுவனம் எப்19 ஸ்மார்ட்போனின் ஸ்பெஷல் எடிஷன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஏற்கனவே அறிமுகமான ஒப்போ எப்19, எப்19 ப்ரோ மற்றும் எப்19 ப்ரோ பிளஸ் மாடல்களுடன் விற்பனை செய்யப்பட இருக்கிறது.
புதிய எப்19எஸ் ஸ்பெஷல் எடிஷன் இந்திய வெளியீடு பற்றி அந்நிறுவனம் இதுவரை எந்த தகவலையும் வழங்கவில்லை. தற்போதைய தகவல்களின்படி ஒப்போ எப்19எஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் பண்டிகை காலக்கட்டத்தில் விற்பனைக்கு வரும் என கூறப்படுகிறது.

பெயருக்கு ஏற்றார்போல் புதிய ஒப்போ எப்19எஸ் ஸ்பெஷல் எடிஷன் அம்சங்கள் ஒப்போ எப்19 மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்படலாம். ஒப்போ எப்19 மாடலில் 6.43 இன்ச் புல் ஹெச்.டி. பிளஸ் டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 662 பிராசஸர், 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி வழங்கப்பட்டுள்ளது.
போல்ட் ஆடியோ நிறுவனத்தின் புதிய நெக்பேண்ட் இயர்போன் முழு சார்ஜ் செய்தால் 24 மணி நேர பேக்கப் வழங்குகிறது.
போல்ட் ஆடியோ நிறுவனம் இந்திய சந்தையில் ப்ரோபேஸ் கியூசார்ஜ் நெக்பேண்ட் இயர்போன் மாடலை அறிமுகம் செய்தது. இந்த நெக்பேண்ட் இயர்போன் 24 மணி நேர பேட்டரி பேக்கப், பாஸ்ட் சார்ஜிங் வசதி, IPX5 வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கிறது.
குறைந்த எடையில் உருவாகி இருக்கும் போல்ட் ப்ரோபேஸ் கியூசார்ஜ் மென்மையான சிலிகான் இயர் டிப்களை கொண்டிருக்கிறது. இந்த இயர்போனில் அலுமினியம் அலாய் என்கேஸ்டு மைக்ரோ வூபர்கள் உள்ளன. இவை சிறப்பான ஆடியோ அனுபவத்தை வழங்குகின்றன.

இந்த இயர்போன்களில் உள்ள காந்தம் வயர்கள் சிக்கிக் கொள்ளாமல் பார்த்துக் கொள்கின்றன. இதில் இன்-லைன் கண்ட்ரோல்கள், கூகுள் அசிஸ்டண்ட் மற்றும் சிரி வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டு இருக்கின்றன. இந்த நெக்பேண்ட் இயர்போன் முழு சார்ஜ் செய்தால் 24 மணி நேர பேக்கப் வழங்குகிறது.
இந்தியாவில் போல்ட் ஆடியோ ப்ரோபேஸ் கியூசார்ஜ் இயர்போன்கள் பிளாக், புளூ மற்றும் கிரீன் நிறங்களில் கிடைக்கிறது. இந்த நெக்பேண்ட் இயர்போன் முதற்கட்டமாக ரூ. 1,199 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
விவோ நிறுவனத்தின் புதிய வை சீரிஸ் ஸ்மார்ட்போன் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரியுடன் விற்பனைக்கு வந்தது.
விவோ நிறுவனம் இந்திய சந்தையில் மற்றொரு வை சீரிஸ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. புதிய விவோ வை33எஸ் ஸ்மார்ட்போனில் 6.58 இன்ச் எப்.ஹெச்.டி. பிளஸ் ஹாலோ புல்வியூ ஸ்கிரீன், மீடியாடெக் ஹீலியோ ஜி80 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது.
இத்துடன் 50 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி டெப்த் கேமரா, 2 எம்பி மேக்ரோ லென்ஸ், 16 எம்பி செல்பி கேமரா, பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது. ஆண்ட்ராய்டு 11 மற்றும் பன்டச் ஓ.எஸ். 11 கொண்டிருக்கும் விவோ வை33எஸ் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.

விவோ வை33எஸ் அம்சங்கள்
- 6.58 இன்ச் 2400x1080 பிக்சல் FHD+ LCD ஸ்கிரீன்
- ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி80 பிராசஸர்
- 950MHz ARM மாலி-G52 2EEMC2 GPU
- 8 ஜிபி LPDDR4x ரேம்
- 128 ஜிபி (eMMC 5.1) மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- டூயல் சிம் ஸ்லாட்
- ஆண்ட்ராய்டு 11 மற்றும் பன்டச் ஓ.எஸ். 11
- 50 எம்பி பிரைமரி கேமரா, எல்.இ.டி. பிளாஷ், f/1.8
- 2 எம்பி டெப்த் சென்சார்
- 2 எம்பி மேக்ரோ லென்ஸ், f/2.4
- 16 எம்பி செல்பி கேமரா, f/2.0
- பக்கவாட்டில் கைரேகை சென்சார்
- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
- யு.எஸ்.பி. டைப் சி
- 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- 18 வாட் பாஸ்ட் சார்ஜிங்
விவோ வை33எஸ் ஸ்மார்ட்போன் மிரர் பிளாக் மற்றும் மிட்-டே டிரீம் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ, 17,990 ஆகும்.
சியோமியின் புதிய ரெட்மி ஸ்மார்ட்போன் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
சியோமியின் ரெட்மி பிராண்டு புதிய ரெட்மி ஸ்மார்ட்போன் வெளியீட்டை உணர்த்தும் டீசர்களை வெளியிட்டு வருகிறது. புது ரெட்மி ஸ்மார்ட்போனிற்கென பிரத்யேக வலைப்பக்கம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி புதிய ஸ்மார்ட்போன் செப்டம்பர் 3 ஆம் தேதி அறிமுகமாகிறது.
புதிய ரெட்மி ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ பிராசஸர், அடாப்டிவ் டிஸ்ப்ளே என பல்வேறு அம்சங்கள் வழங்கப்படுகிறது. தற்போதைய தகவல்களின்படி இந்த ஸ்மார்ட்போன் ரெட்மி 10 பிரைம் பெயர் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. புதிய ஸ்மார்ட்போன் அமேசான் வலைதளம் மற்றும் ஆப்லைன் விற்பனை மையங்களில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட இருக்கிறது.

இந்தியாவில் முன்னதாக ரெட்மி நோட் 10 மாடல் விலை மாற்றப்பட்டது. அதன்படி ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போனின் 4 ஜிபி + 64 ஜிபி மாடல் விலை ரூ. 13,499 என மாறி இருக்கிறது. தற்போதைய தகவல்களின் படி ரெட்மி 10 பிரைம் விலை ரூ. 10 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
ரியல்மி நிறுவனத்தின் புதிய சி சீரிஸ் ஸ்மார்ட்போனில் ரிவர்ஸ் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.
ரியல்மி நிறுவனம் இந்திய சந்தையில் சி21வை ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. முன்னதாக இதே ஸ்மார்ட்போன் வியட்நாமில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ரியல்மி சி21வை மாடலில் யுனிசாக் டி610 பிராசஸர், 6.5 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 1600x720 பிக்சல் டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது.
புகைப்படங்களை எடுக்க 13 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி மேக்ரோ கேமரா, 2 எம்பி லென்ஸ், 5 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் பின்புறம் கைரேகை சென்சார், 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 10 வாட் சார்ஜிங், ரிவர்ஸ் சார்ஜிங் வசதி கொண்டுள்ளது.

ரியல்மி சி21வை ஸ்மார்ட்போன் கிராஸ் பிளாக் மற்றும் கிராஸ் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இதன் 3 ஜிபி + 32 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 8,999 என்றும் 4 ஜிபி + 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 9,999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி டேப் எஸ்7 எப்.இ. வைபை மாடல் அமேசான் தளத்தில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட இருக்கிறது.
சாம்சங் நிறுவனத்தின் மற்றும் ஓர் மிட்-ரேன்ஜ் ஆண்ட்ராய்டு டேப்லெட் இந்தியாவில் அறிமுகமாக இருக்கிறது. புதிய மாடல் வைபை வசதி கொண்ட கேலக்ஸி டேப் எஸ்7 எப்.இ. ஆகும். சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்7 எப்.இ. 4ஜி மாடல் ரூ. 46,999 விலையில் ஏற்கனவே விற்பனை செய்யப்படுகிறது. அந்த வகையில் வைபை மாடல் விலை மேலும் குறைவாக இருக்கும் என்றே தெரிகிறது.
புதிய சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்7 எப்.இ. வைபை மாடல் அமேசான் தளத்தில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட இருக்கிறது. அம்சங்களை பொருத்தவரை கேலக்ஸி டேப் எஸ்7 எப்.இ. மாடலில் 12.4 இன்ச் 2560x1600 பிக்சல் டி.எப்.டி. டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 750ஜி பிராசஸர், 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி வழங்கப்படுகிறது.

4ஜி மாடலில் உள்ளதை போன்றே வைபை மாடலிலும் 8 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி செல்பி கேமரா, டூயல் பேண்ட் வைபை, ப்ளூடூத் 5, மற்றும் 10,090 எம்.ஏ.ஹெச். பேட்டரி, அதிகபட்சம் 45 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என தெரிகிறது.
மோட்டோரோலா நிறுவனம் இந்திய சந்தையில் எட்ஜ் 20 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்கிறது.
மோட்டோரோலா நிறுவனத்தின் எட்ஜ் 20 மற்றும் எட்ஜ் 20 பியூஷன் ஸ்மார்ட்போன்கள் சில நாட்களுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ஸ்மார்ட்போன்கள் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்படுகிறது. முதற்கட்டமாக மோட்டோரோலா எட்ஜ் 20 பியூஷன் மாடல் ஆகஸ்ட் 17 ஆம் தேதி விற்பனை செய்யப்பட்டது.

அறிமுக நிகழ்விலேயே மோட்டோரோலா எட்ஜ் 20 மாடல் ஆகஸ்ட் 24 ஆம் தேதி விற்பனைக்கு வரும் என அந்நிறுவனம் அறிவித்தது. எனினும், இதன் விற்பனை திட்டமிட்டப்படி துவங்காது என மோட்டோரோலா தெரிவித்து இருக்கிறது.
எதிர்பாராத காரணங்களால் மோட்டோரோலா எட்ஜ் 20 விற்பனை திட்டமிட்டப்படி துவங்காது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. விற்பனை தாமதமாக சரியான காரணம் அறிவிக்கப்படவில்லை. சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள சிப்செட் தட்டுப்பாடு காரணமாக விற்பனை தாமதமாகி இருக்கலாம் என கூறப்படுகிறது. எட்ஜ் 20 மாடலின் புதிய விற்பனை தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை.
ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் ஐபோனின் குறைந்த விலை மாடலை வெளியிட திட்டமிட்டு இருந்தார்.
ஆப்பிள் நிறுவனம் மற்றும் எபிக் கேம்ஸ் நிறுவனங்கள் இடையிலான சட்ட போராட்டம் காரணமாக ஆப்பிள் நிறுவனத்தின் வரலாற்று விவரங்கள் இதுவரை இல்லாத வகையில், அதிகளவு வெளி உலகிற்கு அம்பலமாகி வருகிறது.
முன்னதாக ஆப்பிள் நிறுவனத்தின் விளம்பர பிரிவு தலைவர் பில் ஸ்கில்லர் ஆப் ஸ்டோர் கமிஷனை குறைக்க திட்டமிட்ட விவகாரம் அம்பலமானது. இந்த விவகாரம் எபிக் கேம்ஸ் நிறுவனம் நீதிமன்றத்தில் சமர்பித்த சுமார் பத்து ஆண்டுகள் பழைய மின்னஞ்சல் மூலம் வெளியாகி இருந்தது.

அந்த வரிசையில் தற்போது, ஆப்பிள் நிறுவனம் குறைந்த விலையில் ஐபோன் நானோ எனும் ஸ்மார்ட்போனை வெளியிட திட்டமிட்டு இருந்தது அம்பலமாகி இருக்கிறது. ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ், ஐபோன் 4 ஸ்மார்ட்போனின் குறைந்த விலை மற்றும் அளவில் சிறிய ஐபோனினை 2010 ஆம் ஆண்டு வெளியிட திட்டமிட்டு இருந்தார்.
ஐபோன் நானோ பற்றிய முழு விவரங்கள் வெளியாகவில்லை. எனினும், ஐபாட் டச் மாடலை சார்ந்து குறைந்த விலை ஐபோனினை உருவாக்க திட்டமிடப்பட்டு இருந்தது.
முன்னதாக ஆப்பிள் நிறுவனத்தின் விளம்பர பிரிவு தலைவர் பில் ஸ்கில்லர் ஆப் ஸ்டோர் கமிஷனை குறைக்க திட்டமிட்ட விவகாரம் அம்பலமானது. இந்த விவகாரம் எபிக் கேம்ஸ் நிறுவனம் நீதிமன்றத்தில் சமர்பித்த சுமார் பத்து ஆண்டுகள் பழைய மின்னஞ்சல் மூலம் வெளியாகி இருந்தது.

அந்த வரிசையில் தற்போது, ஆப்பிள் நிறுவனம் குறைந்த விலையில் ஐபோன் நானோ எனும் ஸ்மார்ட்போனை வெளியிட திட்டமிட்டு இருந்தது அம்பலமாகி இருக்கிறது. ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ், ஐபோன் 4 ஸ்மார்ட்போனின் குறைந்த விலை மற்றும் அளவில் சிறிய ஐபோனினை 2010 ஆம் ஆண்டு வெளியிட திட்டமிட்டு இருந்தார்.
ஐபோன் நானோ பற்றிய முழு விவரங்கள் வெளியாகவில்லை. எனினும், ஐபாட் டச் மாடலை சார்ந்து குறைந்த விலை ஐபோனினை உருவாக்க திட்டமிடப்பட்டு இருந்தது.
மைக்ரோமேக்ஸ் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த இன் 2பி ஸ்மார்ட்போன் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டிருக்கிறது.
இந்திய ஸ்மார்ட்போன் உற்பத்தியாளரான மைக்ரோமேக்ஸ் தனது மைக்ரோமேக்ஸ் இன் 2பி ஸ்மார்ட்போனின் விலையை உயர்த்தி இருக்கிறது. ஜூலை மாத வாக்கில் ரூ. 7,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்ட மைக்ரோமேக்ஸ் இன் 2பி ஸ்மார்ட்போன் இரண்டு வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது.
விலை உயர்வு குறித்து மைக்ரோமேக்ஸ் இதுவரை எந்த தகவலையும் வழங்கவில்லை. எனினும், இன் 2பி ஸ்மார்ட்போன்களின் புதிய விலை ப்ளிப்கார்ட் தளத்தில் மாற்றப்பட்டு இருக்கின்றன. புதிய விலை மைக்ரோமேக்ஸ் அதிகாரப்பூர்வ வலைதளத்திலும் மாற்றப்பட்டுவிட்டது.

மைக்ரோமேக்ஸ் இன் 2பி புதிய விலை விவரம்
விலை உயர்வை தொடர்ந்து மைக்ரோமேக்ஸ் இன் 2பி ஸ்மார்ட்போனின் 4 ஜிபி மாடல் விலை ரூ. 8,499 என மாறி இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் முன்னதாக ரூ. 7,999 விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
மைக்ரோமேக்ஸ் இன் 2பி 6 ஜிபி மாடல் விலை ரூ. 8,999-இல் இருந்து தற்போது ரூ. 9,449 என மாறி இருக்கிறது. இரு மாடல்களின் விலையும் தற்போது ரூ. 500 உயர்த்தப்பட்டு இருக்கிறது.
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 13 மினி மாடல் செப்டம்பர் மாத வாக்கில் அறிமுகமாகும் என தெரிகிறது.
ஆப்பிள் நிறுவனம் தனது புதிய தலைமுறை ஐபோன் மாடல்களின் வெளியீடு குறித்து இதுவரை எந்த தகவலையும் வழங்கவில்லை. எனினும், முந்தைய வழக்கப்படி ஆப்பிள் தனது புதிய ஐபோன்களை செப்டம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யும் என தெரிகிறது.
ஐபோன் 13 மினி உள்பட புது ஐபோன் மாடல்கள் செப்டம்பர் மாதத்தின் மூன்றாவது வாரத்தில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. தற்போதைய ரென்டர்களின் படி ஐபோன் 13 மினி தோற்றத்தில் அதிக மாற்றங்கள் இன்றி ஐபோன் 12 மினி போன்றே காட்சியளிக்கிறது. புதிய ஐபோனில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சாருடன் புதிய கனெக்டர் பின் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

அம்சங்களை பொருத்தவரை ஐபோன் 13 மினி மாடலில் 5.4 இன்ச் எல்.டி.பி.ஓ. டிஸ்ப்ளே, இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், புதிய ஏ15 பயோனிக் சிப்செட், 2406 எம்.ஏ.ஹெச். பேட்டரி, அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், லிடார் சென்சார்கள் வழங்கப்படும் என தெரிகிறது.
புதிய ஐபோன் 13 மினி துவக்க விலை 699 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 52,042 என நிர்ணயம் செய்யப்படலாம். முந்தைய ஐபோன் 12 மினி மாடலும் இதேபோன்ற விலையிலேயே விற்பனைக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.






