என் மலர்tooltip icon

    அறிந்து கொள்ளுங்கள்

    பிளாக்பெரி இயங்குதளத்தின் குறுந்தகவல் செயலியான பிளாக்பெரி மெசஞ்சர் சேவை நிறுத்தப்படுகிறது.



    பிளாக்பெரி நிறுவனத்தின் பி.பி.எம். (பிளாக்பெரி மெசஞ்சர்) சேவை இன்றுடன் (மே 31) நிறுத்தப்படுகிறது. இன்று நள்ளிரவு 11.59 மணிக்கு பின் பிளாக்பெரி மெசஞ்சர் செயலிக்கான வசதி முற்றிலும் நிறுத்தப்பட இருக்கிறது.

    இன்று வரை நாங்கள் உருவாக்கியவைக்காக நாங்கள் பெருமை கொள்கிறோம். தொழில்நுட்ப துறை மிகவும் போட்டி நிறைந்ததாக இருக்கிறது. எங்களின் விடாமுயற்சியிலும் பயனர்கள் மற்ற தளங்கள் வழங்கும் சேவைகளை பயன்படுத்த துவங்கிவிட்டனர். இதன் காரணமாக புதிய வாடிக்கையாளர்களை பெறுவது கடினமான ஒன்றாகிவிட்டது.

    பிளாக்பெரி மெசஞ்சர் சேவைக்கு பிரியாவிடை கொடுப்பது எங்களுக்கு வருத்தமாக இருந்தாலும், இதனை கடந்து முன்னேற வேண்டிய நிலையில் இருக்கிறோம் என பிளாக்பெரி தனது அதிகாரப்பூர்வ வலைதளத்தில் பதிவிட்டுள்ளது.



    பி.பி.எம்.இ. என அழைக்கப்படும் என்டர்பிரைஸ் எடிஷனை பயன்படுத்துவோர் தொடர்ந்து சேவையை இயக்க முடியும். இனியும் பி.பி.எம். சேவையை பயன்படுத்த விரும்புவோர் ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். தளங்களில் இருந்து என்டர்பிரைஸ் எடிஷனை டவுன்லோடு செய்து ஆறு மாதங்களுக்கு 2.50 டாலர்கள் கட்டணம் செலுத்தி பயன்படுத்தலாம்.

    பி.பி.எம்.இ. சேவையிலும் முழுமையான என்க்ரிப்ஷன் வழங்கப்படுகிறது. இத்துடன் குறுந்தகவல்களை எடிட் செய்யும் வசதி, அனுப்பிய குறுந்தகவல்களை திரும்பப்பெறும் வசதி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
    ஏற்கனவே பயன்படுத்திய சாம்சங் லேப்டாப் மாடலை ஒருவர் ரூ.9 கோடி கொடுத்து வாங்கியிருக்கிறார்.



    2008 ஆம் ஆண்டின் சாம்சங் லேப்டாப்பை ஒருவர் ரூ.9 கோடி கொடுத்து வாங்கியிருக்கிறார். இவர் வாங்கியிருக்கும் லேப்டாப்பில் தீங்கு விளைவிக்கும் உலகின் மிக மோசமான மென்பொருள் நிறுவப்பட்டு இருக்கிறது.

    தி பெர்சிஸ்டன்ஸ் ஆஃப் சௌஸ் (The Persistence of Chaos) என அழைக்கப்படும் இந்த மென்பொருளை சீனாவை சேர்ந்த இணைய நிபுணர் குவோ ஒ டாங் என்பவர் உருவாக்கினார். இதற்கு நியூ யார்க்கை சேர்ந்த சைபர் செக்யூரிட்டி நிறுவனமான டீப் இன்ஸ்டின்க்ட் நிதியுதவி வழங்கியிருக்கிறது.

    இந்த நிறுவனம் இணையம் மூலம் நிஜ உலகில் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க குவோவுடன் இணைந்து பணியாற்றியது. இதற்கு அந்நிறுவனம் குவோவிற்கு மால்வேர் சார்ந்த உதவிகளையும் வழங்கியது.

    "கம்ப்யூட்டர்கள் உண்மையில் நம்மை பாதிக்காது என்ற மாயை நம்மிடம் இருக்கிறது. ஆனால் இது முற்றிலும் முரணான ஒன்றாகும். ஆயுதப்படுத்தப்பட்ட வைரஸ்கள் மின் இணைப்புகளை தாக்கி நேரடியாக பாதிப்பை ஏற்படுத்தும் தன்மை கொண்டவை," என குவோ தெரிவித்தார்.



    இந்த வைரஸ்களின் பெயர்கள் பெரும்பாலும் பாப் பாடல்களின் தலைப்புகளாகவே கருதப்படுகின்றன. இதுவரை சுமார் 9500 கோடி டாலர்கள் அளவு பொருளாதார இழப்பை இவை ஏற்படுத்தி இருக்கின்றன. 2017 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ரேன்சம்வேர் தாக்குதல் 150 நாடுகளில் சுமார் இரண்டு லட்சத்திற்கும் அதிக கம்ப்யூட்டர்களில் பாதிப்பை ஏற்படுத்தியது.

    மால்வேர் அதிக பாதிப்பை ஏற்படுத்தாமல் இருக்க தேவையான வழிமுறைகளை பின்பற்றியதாக குவோ மற்றும் டீப் இன்ஸ்டின்க்ட் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த லேப்டாப் மற்ற நெட்வொர்க்களுடன் இணையாமல் இருக்க ஏர்-கேப் செய்யப்பட்டுள்ளது. இதனால் வைரஸ்கள் மற்ற கம்ப்யூட்டர்களை பாதிக்காமல் இருக்கும். இதனை வாங்கியவருக்கு அனுப்பும் போது இதன் இணைய வசதிகள் முற்றிலும் நிறுத்தப்பட்டு விடும்.

    இந்த மால்வேரில் வைரஸ்கள், வொர்ம்கள், ஸ்பைவேர், ரேன்சம்வேர் மற்றும் பல்வேறு இதர தீங்கிழைக்கும் குறியீடுகள் (தனிப்பட்ட விவரங்களை சேகரிக்கும் வகையில் உருவாக்கப்படுவது) உள்ளிட்டவை நிறைந்திருக்கிறது.
    ஃபேஸ்புக் நிறுவனம் சொந்தமாக உருவாக்கி வரும் க்ரிப்டோகரென்சியின் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



    ஃபேஸ்புக் நிறுவனம் அடுத்த ஆண்டு வாக்கில் உலகின் 12 நாடுகளில் சொந்தமாக க்ரிப்டோகரென்சிக்களை உருவாக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஃபேஸ்புக்கின் க்ரிப்டோகரென்சி குளோபல் காயின் என்ற பெயரில் அழைக்கப்படும் என தெரிகிறது. இந்த ஆண்டு இறுதியில் இந்த க்ரிப்டோகரென்சிக்கான சோதனை துவங்கும் என கூறப்படுகிறது.

    2020 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் டிஜிட்டல் பேமண்ட்ஸ் சிஸ்டம் ஒன்றை துவங்க ஃபேஸ்புக் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குளோபல் காயின் மூலம் மக்கள் குறைந்த கட்டணத்தில் பாதுகாப்பாக பணப்பரிமாற்றங்களை மேற்கொள்ள வழி செய்வதாக இருக்கும் என கூறப்படுகிறது.

    இதனை சாத்தியப்படுத்த ஃபேஸ்புக் நிறுவனம் வெஸ்டன் யூனியன் போன்ற பணப்பரிமாற்ற நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. இதன் மூலம் பணப்பரிமாற்றங்களை மிக எளிமையாக்க முடியும் என கூறப்படுகிறது. இதுதவிர ஃபேஸ்புக் நிறுவனம் வங்கிகள் மற்றும் புரோக்கர்களுடன் இணைய இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.



    குளோபல் காயின் க்ரிப்டோகரென்சியை அடுத்த ஆண்டு வணிக ரீதியில் வெளியிட ஃபேஸ்புக் நிறுவனம் ஒழுங்குமுறை மற்றும் தொழில்நுட்ப இடையூறுகளை களைய வேண்டும். ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சூக்கர்பர்க் க்ரிப்டோகரென்சியில் இருக்கும் வாய்ப்புகள் மற்றும் சவால்கள் பற்றி விவாதிக்க பேங்க் ஆஃப் இங்கிலாந்தின் ஆளுநரை சமீபத்தில் சந்தித்து பேசினார்.

    ஃபேஸ்புக்கின் குளோபல் காயின் க்ரிப்டோகரென்சியை இந்தியாவில் பிரபலப்படுத்த அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்தியாவில் இந்த சேவையை துவங்கவும் ஃபேஸ்புக் பல்வேறு இடையூறுகளை கடக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. ஃபேஸ்புக்கின் குளோபல் காயின் அடுத்த ஆண்டு வாக்கில் வர்த்தக ரீதியாக அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
    பிரசார் பாரதி மற்றும் கூகுள் இணைந்து தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிலவரங்களை யூடியூபில் நேரலை செய்ய இருக்கிறது.



    பிரசார் பாரதி மற்றும் கூகுள் இணைந்து 2019 பொது தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிலவரங்களை யூடியூப் தளத்தில் நேரலை செய்ய இருக்கின்றன. நேரலையில் பாராளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தல் முடிவுகளும் நேரலை செய்யப்படுகின்றன.

    கூகுள் மற்றும் பிரசார் பாரதி ஜனநாயகத்தின் மிகப்பெரும் திருவிழாவினை மே 23 ஆம் தேதி கொண்டாட இருக்கின்றன. கொண்டாட்டத்தின் அங்கமாக 2019 பொது தேர்தல் முடிவுகளை யூடியூபில் நேரலை செய்ய இருப்பதாக பிரசார் பாரதி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    இந்தியா முழுக்க யூடியூப் தளத்தை எங்கிருந்து இயக்கினாலும் வலைதள பக்கத்தின் முகப்பு பகுதியில் டி.டி. நியூஸ் வழங்கும் தேர்தல் முடிவுகள் இடம்பெறும். தேர்தல் முடிவுகள் யூடியூப் தளம் மற்றும் மொபைல் செயலி என இரண்டிலும் நேரலை செய்யப்படும் என பிரசார் பாரதியின் சஷி சேகர் வெம்பதி தெரிவித்தார். 



    கூகுள், செயலி மற்றும் வலைதளத்தில் தேர்தல் முடிவுகளை தெரிந்து கொள்வது எப்படி?

    யூடியூப் தளத்தில் முகப்பு பகுதியில் தோன்றும் இணைய ஆப்ஷனை க்ளிக் செய்ததும், டி.டி. நியூஸ் யூடியூப் சேனல் திறக்கும். இதுதவிர டி.டி. சேவை கிடைக்கும் 14 இதர மொழிகளில் நேரலையை பார்க்க முடியும். 

    இவ்வாறு செய்யும் போது வாக்குப்பதிவு எண்ணிக்கை சார்ந்த விவரங்களை வெவ்வேறு மொழிகளில் டிஜிட்டல் முறையில் வழங்க முடியும். இத்துடன் விவரங்கள் அனைத்தும் ஆக்கப்பூர்வமாக இருக்கும். மேலும் கூகுள் மற்றும் பிரசார் பாரதி இணைந்து செயல்பட இருப்பது இதுவே முதல் முறை ஆகும் என சஷி சேகர் வெம்பதி தெரிவித்தார்.
    வாட்ஸ்அப் செயலியில் பகிரப்படும் தகவல்களின் நம்பகத்தன்மை பற்றி மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது.



    வாட்ஸ்அப் செயலியில் ஏராளமான போலி செய்திகள் பரவி வரும் நிலையில் டெல்லியை சேர்ந்த டிஜிட்டல் எம்பவர்மென்ட் பவுண்டெசன் அமைப்பு வாட்ஸ்அப் நிறுவனத்துடன் இணைந்து ஆய்வை நடத்தியது.

    நாட்டின் 11 முக்கிய மாநிலங்களில் உள்ள இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை நகரங்களில் பொதுமக்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. போலி செய்திகளால் ஏற்படும் மோதல்களுக்கு யார் பொறுப்பு? என்ற தலைப்பில் நடந்த இந்த ஆய்வில் 3,138 பேர் கலந்து கொண்டனர்.

    சமூக வலைதளங்களில் வரும் தவறான தகவல்களை சரிபார்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக வாட்ஸ்அப் பயனாளர்களிடம் ஏராளமான கோள்விகள் கேட்கப்பட்டது. இதில் 79 சதவிகிதம் பேர் ஒரு நாளைக்கு 2 மணி நேரம் வரை வாட்ஸ்அப்பில் செலவிடுவதாக கூறி உள்ளனர். 



    13 சதவிகிதம் பேர் 3 முதல் 4 மணி நேரம் வரையும், 3 சதவிகிதம் பேர் 7 மணி நேரத்துக்கும் அதிகமாக வாட்ஸ்அப்பில் செலவிடுவதாகவும் தெரிவித்தனர். ஊடகங்களில் வந்த தகவல்கள் என பரவும் செய்திகள் குறித்த கேள்விகளுக்கு 4 சதவிகிதம் பேர் வீடியோக்களுடன் வரும் செய்திகளை மட்டும் நம்புவதாக கூறி உள்ளனர். 15 சதவிகிதம் பேர் புகைப்படங்களை நம்புவதாக தெரிவித்துள்ளனர்.

    வாட்ஸ்அப்பில் வரும் தகவல்களை 45 சதவிகிதம் பேர் நம்பவில்லை என்பது ஆய்வில் தெரிவித்துள்ளது. 13 சதவிகிதம் பேர் எந்த வாட்ஸ்அப் குரூப்பிலும் இல்லை எனவும், 53 சதவிகிதம் பேர் 1 முதல் 5 குரூப்பிலும், 18 சதவிகிதம் பேர் 6 முதல் 10 குரூப்பில் இருப்பதாகவும், 4 சதவிகிதம் பேர் 30க்கும் மேற்பட்ட வாட்ஸ்அப் குரூப்புகளில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
    வாட்ஸ்அப் செயலியில் புதிதாக நூற்றுக்கணக்கான எமோஜி மற்றும் நைட் மோட் வசதிகளை புதிய அப்டேட் மூலம் பெற இருக்கிறது.



    வாட்ஸ்அப் புதிய ஆண்ட்ராய்டு பீட்டா தளத்தில் பல்வேறு புதிய எமோஜிக்கள் மற்றும் நைட் மோட் வழங்கப்பட இருப்பது பற்றிய விவரங்கள் இடம்பெற்றிருக்கிறது.

    வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா 2.19.139 அப்டேட்டில் புதிய வடிவமைப்பு கொண்ட சுமார் 155 எமோஜிக்கள் வழங்கப்பட்டுள்ளன. புதிய எமோஜிக்கள் அடுத்த கூகுள் பிளே ஸ்டேபில் அப்டேட்டில் வழங்கப்படலாம் என தெரிகிறது. முந்தைய அப்டேட்டில் டார்க் மோட் அம்சம் காணப்பட்ட நிலையில், தற்சமயம் இவை நைட் மோட் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


    புகைப்படம் நன்றி: WABetaInfo

    அந்த வகையில் எதிர்காலத்தில் வரும் ஆண்ட்ராய்டு பீட்டா அப்டேட்டில் நைட் மோட் அம்சம் வழங்கப்படலாம். வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா 2.19.139 பதிப்பில் 155 எமோஜிக்கள் புதிய வடிவமைப்பு பெற்றிருக்கின்றன. இவை வாட்ஸ்அப் அடுத்த ஸ்டேபில் அப்டேட்டில் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா 2.19.139 பதிப்பில் நைட் மோட் வழங்கும் பணிகள் நடைபெற்று வருவதை உணர்த்தியிருக்கிறது. தற்சமயம் இந்த அம்சம் எனேபிள் செய்யப்படவில்லை என்ற போதும், அடுத்த பீட்டா அப்டேட்டில் வழங்கப்படலாம் என தெரிகிறது. புதிய அப்டேட் நீண்ட காலமாக சோதனை செய்யப்பட்ட டார்க் மோட் அம்சம் நைட் மோட் என பெயர் மாற்றம் பெறுவதை உறுதி செய்திருக்கிறது.
    உலகம் முழுக்க வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்துவோர் உடனடியாக தங்களது செயலியை அப்டேட் செய்ய அந்நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
     


    வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தும் சுமார் 150 கோடி பேரும் உடனடியாக செயலியை அப்டேட் செய்ய அந்நிறுவனம் வலியுறுத்தி இருக்கிறது. 

    முன்னதாக ஹேக்கர்கள் கைவரிசை காரணமாக வாட்ஸ்அப் செயலி மூலம் பயனர் ஸ்மார்ட்போன்களில் ஸ்பைவேர் இன்ஸ்டால் ஆகியிருந்தது கண்டறியப்பட்டது. இந்த ஸ்பைவேர் பயனருக்கு தெரியாமல் அவர்களது ஸ்மார்ட்போனின் கேமரா, மைக்ரோபோன் உள்ளிட்டவற்றை ரகசியாக இயக்குவதோடு அவர்களது குறுந்தகவல், லொகேஷன் உள்ளிட்ட விவரங்களை சேகரிக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருந்தது.

    ஸ்பைவேர் இன்ஸ்டால் ஆனது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து வாட்ஸ்அப் நிறுவனம் பிழையை சரி செய்வதற்கான அப்டேட் வழங்குவதாக தெரிவித்துள்ளது. இதன் காரணமாக பயனர்கள் தங்களது செயலியை உடனடியாக அப்டேட் செய்ய அந்நிறுவனம் தனது பயனர்களை வலியுறுத்தி வருகிறது.



    “மொபைல் சாதனங்களில் சேமிக்கப்பட்ட விவரங்களை ஸ்பைவேர் சேகரிக்காமல் இருக்கச் செய்யவே இந்த அப்டேட் வழங்கப்படுகிறது. எங்களது பயனர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய சந்தையில் முன்னணி நிறுவனங்களுடன் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம்,” என வாட்ஸ்அப் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

    இதுவரை கிடைத்திருக்கும் தகவல்களில் ஸ்பைவேரை இஸ்ரேல் நாட்டை சேர்ந்த சைபர் நுண்ணறிவு நிறுவனம் உருவாக்கி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த ஸ்பைவேர் வாட்ஸ்அப் வாய்ஸ் கால் மூலம் பயனர்களின் ஸ்மார்ட்போன்களில் இன்ஸ்டால் ஆகி இருக்கிறது. இது வாட்ஸ்அப் அழைப்பை பயனர் ஏற்றாலும், ஏற்கவில்லை என்றாலும் பயனர் மொபைல்களில் இன்ஸ்டால் ஆகி இருக்கிறது.

    முழுமையாக என்க்ரிப்ட் செய்யப்பட்டு இருக்கும் வாட்ஸ்அப் செயலியில் இந்த ஸ்பைவேர் மூலம் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற விவரம் இதுவரை வழங்கப்படவில்லை. உலகளவில் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்துவோரில் சுமார் 20 கோடி பேர் இந்தியர்கள் ஆவர்.

    ஸ்பைவேர் தாக்குதல் பற்றி விசாரணை துவங்கப்பட்டு இருப்பதாகவும், விசாரணைக்கு உதவ அமெரிக்க சட்ட அமலாக்க நிறுவனங்களுக்கு தேவையான விவரங்களை வழங்கி இருப்பதாக வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது.
    ஆன்லைனில் கேட்பாரற்றுக் கிடந்த பல கோடி இந்தியர்களின் தனிப்பட்ட விவரங்களை ஹேக்கர்கள் குழு திருடியிருக்கிறது.



    ஆன்லைனில் சுமார் 27.5 கோடி இந்தியர்களின் விவரங்கள் கேட்பாரற்றுக் கிடந்ததால் அவற்றை ஹேக்கர்கள் திருடியதாக சைபர் பாதுகாப்பு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

    இந்திய குடிமக்களின் மாங்கோ டி.பி. (MongoDB) டேட்டாபேஸ் அமேசான் AWS ஷோடன் சர்வெர்களில் பொதுப்படையாக இயக்கக்கூடிய வகையில் இருந்ததாக பாப் டியாசென்கோ எனும் பாதுகாப்பு ஆய்வாளர் தெரிவித்தார்.

    பொதுப்படையில் இன்டெக்ஸ் செய்யப்பட்ட மாங்கோ டி.பி. டேட்டாபேசில் சுமார் 27,52,65,298 பேரின் தனிப்பட்ட விவரங்களுடன் மே 1 ஆம் தேதி துவங்கி கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்கு பாதுகாக்கப்படாமல் இருந்தது என பாப் தெரிவித்திருக்கிறார். 



    இந்த விவரங்களில் பயனரின் பெயர், மின்னஞ்சல், பாலினம், கல்வி விவரம், பணி விவரங்கள், மொபைல் போன் நம்பர், வேலை செய்யும் இடம், பிறந்த தேதி, வருமானம் உள்ளிட்டவை ஷோடனில் இயக்கக்கூடிய வகையில் கிடந்திருக்கிறது. ஏப்ரல் 23 ஆம் தேதி முதன்முதலில் இன்டெக்ஸ் செய்யப்பட்ட விவரங்களில் அதிகளவு கேச்சி இருந்ததாக அவர் தெரிவித்தார்.

    தகவல்கள் பாதுகாக்கப்படாமல் இருந்ததை உறுதி செய்ததும் பாப், இந்திய செர்ட் குழுவினருக்கு மே 1 ஆம் தேதி தகவல் வழங்கி இருக்கிறார். இது மே 8 ஆம் தேதி வரை அனைவராலும் பார்க்கக்கூடியதாக இருந்தது. பின் யுனிஸ்டெலார் எனும் ஹேக்கர்கள் குழு பயனர் விவரங்களை அபகரித்துக் கொண்டு கோடெட் குறுஞ்செய்தியை விட்டுச் சென்றிருக்கின்றது.

    வெளிப்படையாக கிடைத்த விவரங்களை விட குறைந்தளவு விவரங்கள் மட்டுமே வெளியாகி இருக்கலாம் என்ற போதும், இந்திய பகுதியில் இது மிகப்பெரும் பாதுகாப்பு குறைபாடு என பாப் தெரிவித்தார். முன்னதாக முறையற்ற ஆத்தென்டிகேஷன் மூலம் மாங்கோ டி.பி. சர்வெர்களில் மால்வேர் மற்றும் ரான்சம்வேர் போன்றவை இன்ஸ்டால் ஆகியிருக்கின்றன என அவர் தெரிவித்திருந்தார்.
    இந்தியாவின் பிரீமியம் ஸ்மார்ட்போன் சந்தையில் சீன நிறுவனத்தை பின்தள்ளி சாம்சங் நிறுவனம் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது.



    இந்திய பிரீமியம் ஸ்மார்ட்போன் சந்தையில் சாம்சங் நிறுவனம் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது. கடந்த மூன்று காலாண்டுகளில் சீன ஸ்மார்ட்போன் நிறுவமான ஒன்பிளஸ் முதலிடத்தில் இருந்தது. இந்நிலையில், 2019 ஆண்டின் முதல் காலாண்டில் சாம்சங் நிறுவனம் மீண்டும் முதலிடம் பிடித்திருப்பதாக கவுன்ட்டர்பாயின்ட் ஆய்வு நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்10 சீரிஸ் விற்பனையே சாம்சங் மீண்டும் முதலிடத்தை பிடிக்க காரணமாக அமைந்தது என கவுன்ட்டர்பாயின்ட் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டின் முதல் காலாண்டில் சாம்சங், ஒன்பிளஸ் மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் மட்டும் சுமார் 90 சதவிகித பங்குகளை பெற்றிருக்கின்றன.

    2018 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் இந்நிறுவனங்கள் 95 சதவிகித பங்குகளை பெற்றிருந்தன. முதலிடத்தை இழந்த நிலையிலும், 2019 முதல் காலாண்டில் அதிகம் விற்பனையான பிரீமியம் ஸ்மார்ட்போன் மாடலாக ஒன்பிளஸ் 6டி இருக்கிறது. “கேலக்ஸி எஸ்10 சீரிஸ் மற்றும் ஒன்பிளஸ் 6டி மாடல்களின் வெற்றி இந்திய பிரீமியம் சந்தையின் டிரெண்ட் ஆக பார்க்கப்படுகிறது.” என கவுன்ட்டர்பாயின்ட் நிறுவன ஆய்வாளர் கரன் சவுஹான் தெரிவித்தார். 



    “கேலக்ஸி எஸ்10 சீரிஸ் மூலம் பயனர்களுக்கு புதுவித அனுபவத்தில் அவர்களுக்கு அன்றாடம் தேவைப்படும் அம்சங்களை வழங்கினோம். கேலக்ஸி எஸ்10 மாடலின் பல்வேறு முதல்முறை அம்சங்கள் வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இதன் காரணமாக பிரீமியம் ஸ்மார்ட்போன் பிரிவில் மீண்டும் முதலிடம் பிடித்திருப்பதில் ஆச்சரியம் எதுவும் இல்லை” என சாம்சங் இந்தியா மொபைல் பிரிவு தலைவர் ஆதித்யா பப்பர் தெரிவித்தார். 

    மற்ற ஸ்மார்ட்போன் பிராண்டுகளான ஹூவாய் பத்து சதவிகித பங்குகளை பகிர்ந்து கொண்டிருக்கின்றன. ஹூவாயின் மேட் மற்றும் பி சீரிஸ் மாடல்கள் இந்திய சந்தையில் சமீபத்தில் களமிறங்கியிருக்கின்றன. இவை இதுவரை நல்ல வரவேற்பை பெற்றிருக்கின்றன. ஆப்பிள் நிறுவனம் அதிக விலை காரணமாக சரிவை சமாளிக்க தொடர்ந்து போராடி வருகிறது.
    கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை ஆப்பிள் நிறுவனத்தை சீண்டும் வகையில் தனியுரிமை பற்றி தகவல் தெரிவித்திருக்கிறார். #Google



    தனியுரிமை என்பது விலை உயர்ந்த பொருட்கள் மற்றும் சேவைகளை வாங்கக் கூடியவர்களுக்கு மட்டுமே கிடைக்கக்கூடியதாக இருக்கக் கூடாது கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்திருக்கிறார். இது விலை உயர்ந்த சேவைகளை வழங்கும் ஆப்பிள் நிறுவனத்தை சீண்டும் வகையில் இருப்பதாக பார்க்கப்படுகிறது.

    அமெரிக்காவில் கிடைக்கும் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் எழுதியிருக்கும் அறிக்கையில், பயனர் விவரம் மற்றும் தனியுரிமை விவகாரத்தில் கூகுள் நிறுவனத்தின் நிலைப்பாடு பற்றி விளக்கமளித்து இருக்கிறார். 

    "தனியுரிமை உலகவாசிகள் அனைவருக்கும் பொதுவான ஒன்றாக கிடைக்க வேண்டும். கூகுளின் நிலைப்பாடு தனியுரிமையை அனைவருக்கும் சமமானதாக மாற்றுவது தான். மக்கள் தங்களது தகவல்கள் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது, அவை எவ்வாறு பகிர்ந்து கொள்ளப்படுகிறது என்பது பற்றி வருத்தம் தெரிவிக்கின்றனர். உலகம் முழுக்க நான் சந்திப்பவர்கள் இதுபற்றி என்னிடம் கேட்கின்றனர்.



    "தனியுரிமை தனித்துவமானது. இதனால் நிறுவனங்கள் மக்களுக்கு அவர்களின் தகவல்கள் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பது பற்றி தனிப்பட்ட விருப்பங்களை வழங்க வேண்டும். கூகுள் நிறுவனத்தை பொருத்தவரை அனைவருக்குமான சேவைகளை உருவாக்குவதே எங்களின் முக்கிய குறிக்கோள் ஆகும்.

    இதன் காரணமாகவே கூகுள் பதில்கள் உலகம் முழுக்க சமமாக ஒரே மாதிரி வழங்கப்படுகிறது. கூகுள் தேடல்களில் அனைவரும் சமமாக பயன்படுத்தக் கூடியதாக இருக்கிறது." இவ்வாறு சுந்தர் தெரிவித்திருக்கிறார்.

    முன்னதாக கூகுள் நிறுவனம் தனது IO2019 டெவலப்பர்கள் நிகழ்வில் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு சார்ந்த பல்வேறு சேவைகள் மற்றும் புதிய அம்சங்களை அறிமுகம் செய்தது.
    இந்தியாவில் தடை செய்யப்பட்டு பின் மீண்டும் களமிறங்கிய இருக்கும் டிக்டாக் செயலி முதலிடம் பிடித்து அசத்தி இருக்கிறது. #TikTok



    இந்தியாவில் கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப் ஸ்டோரில் டிக்டாக் ஆப் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது. முன்னதாக இந்த செயலியை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஸ்டோர்களில் இருந்து நீக்கப்பட்டிருந்தது.

    பின் சென்னை உயர்நீதிமன்றம் செயலிகளில் மாற்றம் செய்ய உத்தரவிட்டு செயலிக்கு விதித்த தடையை நீக்கியது. இதன் தொடர்ச்சியாக பிளே ஸ்டோர்களில் இடம்பிடித்த டிக்டாக் தற்சயம் முதலிடம் பிடித்திருக்கிறது. தற்சமயம் ஐ.ஓ.எஸ். மற்றும் கூகுள் பிளே ஸ்டோரில் இலவச செயலிகளுக்கான சோஷியல் பிரிவில் டிக்டாக் செயலி முதலிடத்தில் இருக்கிறது.

    பைட் டேன்ஸ் நிறுவனத்தின் டிக்டாக் #ReturnOfTikTok என்ற தலைப்பில் புதிய திட்டத்தை துவங்கி அதன் மூலம் செயலியை வாடிக்கையாளர்கள் தொடர்ந்து பயன்படுத்தும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. #ReturnOfTikTok திட்டத்திற்கு டிக்டாக் பயனர்கள் தங்களின் மகிழ்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.



    இதையொட்டி பயனர்கள் சிறு வீடியோக்களை உருவாக்கி #shareandwin ஹேஷ்டேக்கில் பகிர்ந்து வருகின்றனர். இதுவரை டிக்டாக்கின் #ReturnOfTikTok திட்டத்தை சுமார் 504 கோடிக்கும் அதிகமானோர் பார்வையிட்டிருக்கின்றனர். இந்த போட்டியில் வெற்றி பெறுவோருக்கு தினந்தோரும் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தியாவில் டிக்டாக் செயலி தடை செய்யப்பட்டிருந்த காலக்கட்டத்தில் மட்டும் பைட் டேன்ஸ் நிறுவனம் ஒவ்வொரு நாளும் சுமார் ரூ.3,49,63,000 வரை நட்டத்தை சந்தித்ததாக ராய்ட்டர்ஸ் வெளியிட்டிருக்கும் தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி தடை காரணமாக சுமார் 250 பேருக்கு வேலை பறிபோகும் நிலை உருவானதாக கூறப்படுகிறது.
    ட்விட்டர் சமூக வலைதளத்தில் ரீட்வீட் செய்யும் போது இனி ஜிஃப், புகைப்படம் மற்றும் வீடியோக்களை பயன்படுத்தலாம். #Twitter



    ட்விட்டர் சமூக வலைதளத்தில் சமீப காலங்களில் பல்வேறு புதிய அம்சங்கள் சேர்க்கப்படுகின்றன. முன்னதாக ரிபோர்ட், ஹைட் ரிப்லைஸ் போன்ற அம்சங்கள் சேர்க்கப்பட்டன. 

    அந்த வகையில் ரீட்வீட் செய்ய ஜிஃப், புகைப்படங்கள் மற்றும் வீடியோ உள்ளிட்டவற்றை பயன்படுத்தும் வசதி தற்சமயம் வழங்கப்படுகிறது. ஏற்கனவே ரீட்வீட் செய்யும் போது கமெண்ட் மட்டும் செய்ய முடியும். ரீட்வீட் செய்யும் போது அதில் மீடியா எதையும் சேர்க்க முடியாது. 



    புதிய அப்டேட் மூலம் ட்விட்டரில் ரீட்வீட் செய்யும் போது ஜிஃப், புகைப்படம் மற்றும் வீடியோ உள்ளிட்டவற்றை சேர்க்க முடிகிறது. இந்த அம்சம் பயன்படுத்தும் போது ஜிஃப், வீடியோ மற்றும் புகைப்படங்கள் உள்ளிட்டவற்றால் தகவலின் அளவு அதிகரிக்கும்.

    புதிய அம்சம் வழங்குவதற்கென ட்விட்டர் டைம்லைன், ட்வீட் டீடெயில் பக்கம் மற்றும் பல்வேறு இதர அம்சங்களில் மாற்றம் செய்ய வேண்டி இருந்ததாக ட்விட்டர் தெரிவித்திருக்கிறது. 

    புதிய ரீட்வீட் அம்சம் ஆண்ட்ராய்டு, ஐ.ஓ.எஸ். இயங்குதளம் மற்றும் மொபைல் வலைதளம் உள்ளிட்டவற்றில் ஏற்கனவே கிடைக்கிறது. எனினும், வலைதள பதிப்பில் இதுவரை இதற்கான அப்டேட் வழங்கப்படவில்லை.
    ×