என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    • புதிய ஸ்மார்ட்போனில் 6 ஜி.பி. வரை விர்ச்சுவல் ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது.
    • புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா சென்சார் வழங்கப்பட்டுள்ளது.

    லாவா நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய 5ஜி ஸ்மார்ட்போனினை மிகக் குறைந்த விலையில் அறிமுகம் செய்து இருக்கிறது. இது அந்நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த லாவா பிளேஸ் 5ஜி மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். லாவா பிளேஸ் 2 5ஜி பெயரில் அறிமுகமாகி இருக்கும் புதிய ஸ்மார்ட்போனில் 6.56 இன்ச் 90Hz ரிப்ரெஷ் ரேட் கொண்ட எல்.சி.டி. ஸ்கிரீன், மீடியாடெக் டிமென்சிட்டி 6020 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜி.பி. ரேம், 6 ஜி.பி. வரை விர்ச்சுவல் ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது.

    புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், 8MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் உள்ள ரிங் லைட் நோட்டிஃபிகேஷன் லைட் போன்று செயல்படுகிறது. பக்கவாட்டில் கைரேகை சென்சார் உள்ளது. 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் லாவா பிளேஸ் 2 5ஜி மாடலில் 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.

     

    லாவா பிளேஸ் 2 5ஜி அம்சங்கள்:

    6.56 இன்ச் 1600x720 பிக்சல் HD+ LCD ஸ்கிரீன், 90Hz ரிப்ரெஷ் ரேட்

    ஆக்டாகோர் மீடியாடெக் டிமென்சிட்டி 6020 பிராசஸர்

    மாலி G57 MC2 GPU

    4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி

    6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி

    மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

    ஆண்ட்ராய்டு 13

    டூயல் சிம் ஸ்லாட்

    50MP பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், ஏ.ஐ. கேமரா

    8MP செல்ஃபி கேமரா

    பக்கவாட்டில் கைரேகை சென்சார்

    3.5mm ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ

    5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை

    ப்ளூடூத் 5.1

    யு.எஸ்.பி. டைப் சி

    5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

    புதிய லாவா பிளேஸ் 2 5ஜி ஸ்மார்ட்போன் கிளாஸ் பிளாக், கிளாஸ் புளூ மற்றும் கிளாஸ் லாவென்டர் என மூன்று நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜி.பி. ரேம் கொண்ட மாடலின் விலை ரூ. 9 ஆயிரத்து 999 என்றும் 6 ஜி.பி. ரேம் கொண்ட மாடலின் விலை ரூ. 10 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை அமேசான் மற்றும் லாவா இந்தியா வலைதளங்கள் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் நவம்பர் 9-ம் தேதி துவங்குகிறது.

    • இந்த அம்சம் குறித்த விவரங்களை WAbetainfo வெளியிட்டு உள்ளது.
    • வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா 2.23.24.6 வெர்ஷனில் வழங்கப்பட்டு இருக்கிறது.

    வாட்ஸ்அப் செயலியில் புதிய அம்சம் வழங்கப்பட்டு வருகிறது. இது பயனர்களுக்கு மிகவும் பயனுள்ள அம்சம் ஆகும். இதை கொண்டு பயனர்கள் வாட்ஸ்அப்-இல் பகிரப்படும் வீடியோக்களை டபுள்டேப் செய்து ஃபார்வேர்டு மற்றும் பேக்வேர்டு என முன்னோக்கியும், பின்னோக்கியும் செல்லலாம். இதன் மூலம் நீண்ட வீடியோக்களை எளிதில் குறிப்பிட்ட இடத்தில் இருந்து பார்க்க முடியும்.

    இந்த அம்சம் குறித்த விவரங்களை WAbetainfo வெளியிட்டு உள்ளது. இதன் மூலம் பயனர்கள் வீடியோக்களை சிறப்பாக கட்டுப்படுத்த முடியும். இந்த அம்சம் பயனர்கள் வழங்கும் பரிந்துரைகள் அடிப்படையில், எதிர்காலத்தில் மேம்படுத்தப்படும் என்று தெரிகிறது.

    புதிய அம்சம் வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா 2.23.24.6 வெர்ஷனில் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த அம்சம் கொண்டு வீடியோக்களை ஃபார்வேர்டு மற்றும் பேக்வேர்டு செய்ய முடியும். இது குறித்த ஸ்கிரீன்ஷாட்களை WAbetainfo வெளியிட்டு உள்ளது.

    • ஐபோன் 14 சீரிஸ் மாடல்கள் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டன.
    • ப்ளிப்கார்ட் வலைதளத்தில் தீபாவளி சிறப்பு விற்பனை நடைபெறுகிறது.

    ப்ளிப்கார்ட் வலைதளத்தில் பண்டிகை காலத்தை ஒட்டி மொபைல் போன் மாடல்களுக்கு பல்வேறு சலுகைகள் மற்றும் தள்ளுபடி உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், நாளை (நவம்பர் 2) துவங்க இருக்கும் பிக் தீபாவளி சேல்-இல் ஐபோன் மாடல்களுக்கு விசேஷ சலுகைகளை வழங்குகிறது.

    அதன்படி ஐபோன் 14 மாடல் ரூ. 49 ஆயிரத்து 999 விலையில் விற்பனைக்கு வரும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதில் வங்கி சலுகைகள் மற்றும் இதர தள்ளுபடி உள்ளிட்டவை அடங்கும். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற ஃபார் அவுட் நிகழ்வில் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 14 சீரிஸ் மாடல்களை அறிமுகம் செய்தது. இதில் ஐபோன் 14 பேஸ் வேரியண்ட் விலை ரூ. 79 ஆயிரத்து 900 என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.

    ப்ளிப்கார்ட் சலுகை விவரம்:

    தீபாவளி விற்பனையை ஒட்டி ப்ளிப்கார்ட் வலைதளத்தில் இடம்பெற்று இருந்த டீசர் வலைபக்கத்தில் ஐபோன் 14 (128 ஜி.பி.) மாடல் ரூ. 50 ஆயிரத்திற்கும் குறைவாக கிடைக்கும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இதில் ஐபோன் 14 குறைந்தபட்ச சலுகை விலை ரூ. 54 ஆயிரத்து 999 ஆகும். இத்துடன் வங்கி சலுகையாக ரூ. 4 ஆயிரமும், எக்சேன்ஜ் செய்யும் போது ரூ. 1000 தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. இவற்றை சேர்த்தால், ஐபோன் 14 (128 ஜி.பி.) மாடல் ரூ. 49 ஆயிரத்து 999 விலையிலேயே கிடைக்கும்.

    மாத தவணையில் வாங்க விரும்பும் பயனர்கள் முதலில் ரூ. 19 ஆயிரத்து 999 மட்டும் செலுத்தி, மீதமுள்ள ரூ. 35 ஆயிரத்தை வட்டியில்லா மாத தவணை முறையில் திருப்பி செலுத்திக் கொள்ளலாம். இந்த சிறப்பு தள்ளுபடி விலை நவம்பர் 2-ம் தேதி அமலுக்கு வருகிறது. ப்ளிப்கார்ட் வலைதளத்தில் சிறப்பு விற்பனை நவம்பர் 11-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது.

    • இந்த மாடல் அமேசான் வலைதளத்தில் விற்பனை செய்யப்படுகிறது.
    • ஐகூ 12 ப்ரோ மாடல் சீன சந்தையில் மட்டும் பிரத்யேகமாக இருக்கும்.

    ஐகூ இந்தியா தலைமை செயல் அதிகாரி இந்திய சந்தையில் ஐகூ 12 ஸ்மார்ட்போன் டிசம்பர் 12-ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறார். இந்திய சந்தையில் முற்றிலும் புதிய ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 பிராசஸர் கொண்ட முதல் ஸ்மார்ட்போன் என்ற பெருமையை ஐகூ 12 பெறும் என்று கூறப்படுகிறது.

    புதிய ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதியுடன் இந்த மாடல் அமேசான் வலைதளத்தில் விற்பனை செய்யப்படும் என்று ஐகூ வெளியிட்டு இருக்கும் அதிகாரப்பூர்வ போஸ்டரில் தெரியவந்துள்ளது. இத்துடன் புதிய ஸ்மார்ட்போனிற்காக ஐகூ நிறுவனம் பி.எம்.டபிள்யூ. M மோட்டார்ஸ்போர்ட் உடன் கூட்டணி அமைத்து இருக்கிறது.

     

    கூட்டணியின் அங்கமாக ஐகூ 12 ஸ்மார்ட்போன் மூன்று நிறங்கள் அடங்கிய ஸ்டிரைப் டிசைனில் அறிமுகம் செய்யப்படுகிறது. இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் முன்பாக ஐகூ 12 மற்றும் ஐகூ 12 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் நவம்பர் 7-ம் தேதி சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதில் ஐகூ 12 ப்ரோ மாடல் சீன சந்தையில் மட்டும் பிரத்யேகமாக இருக்கும் என்று தெரிகிறது.

    இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ஐகூ 12 மாடலில் 6.78 இன்ச் ஃபிளாட் OLED பேனல், 1.5K ரெசல்யூஷன், 144Hz ரிப்ரெஷ் ரேட், அதிகபட்சம் 3000 நிட்ஸ் பிரைட்னஸ், ஆப்டிக்கல் இன்-ஸ்கிரீன் கைரேகை சென்சார் வழங்கப்படுகிறது. இதன் சீன வெர்ஷனில் ஒரிஜின் ஒ.எஸ். 4, இந்திய வெர்ஷனில் ஆண்ட்ராய்டு 14 சார்ந்த ஃபன்டச் ஒ.எஸ். 14 வழங்கப்படுகிறது.

    ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 பிராசஸர் கொண்டிருக்கும் ஐகூ 12 ஸ்மார்ட்போனில் அதிகபட்சம் 16 ஜி.பி. வரையிலான ரேம், 1 டி.பி. வரையிலான ஸ்டோரேஜ், 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 120 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது. இதன் முன்புறம் 16MP செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது. இத்துடன் 50MP பிரைமரி கேமரா, 50MP சென்சார், 64MP லென்ஸ் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

    • ஆப்பிள் M3 சீரிஸ் சிப்செட் மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது.
    • 24 இன்ச் ஐமேக் மாடலில் 4.5K ரெட்டினா டிஸ்ப்ளே உள்ளது.

    ஆப்பிள் நிறுவனம் மேக்புக் ப்ரோ மாடல்களை M3 சிப்செட் மூலம் அப்டேட் செய்த கையோடு 24 இன்ச் ஐமேக் மாடலை முற்றிலும் புதிய M3 சிப் உடன் அறிமுகம் செய்து இருக்கிறது. 2021 மாடலில் M1 சிப் வழங்கப்பட்ட நிலையில், ஐமேக் மாடலுக்கு மிகப் பெரிய அப்டேட் வழங்கப்பட்டுள்ளது. M3 சிப்செட் கொண்ட புதிய ஐமேக் மாடல் அதன் முந்தைய வெர்ஷனை விட இருமடங்கு வேகமானது ஆகும்.

    புதிய மாடலிலும் 4.5K ரெட்டினா டிஸ்ப்ளே, அதிவேக வைபை 6E வயர்லெஸ் கனெக்டிவிட்டி, அதிகபட்சம் 24 ஜி.பி. யுனிஃபைடு மெமரி, அடுத்த தலைமுறை GPU வழங்கப்பட்டு இருக்கிறது. இது ஹார்டுவேர் அக்செல்லரேடெட் மெஷ் ஷேடிங் மற்றும் ரே டிரேசிங் போன்ற வசதிகளை வழங்குகிறது.

     

    ஆப்பிள் ஐமேக் 24 இன்ச் 2023 அம்சங்கள்:

    24 இன்ச் 4480x2520 பிக்சல் 4.5K ரெட்டினா XDR டிஸ்ப்ளே

    ஆப்பிள் M3 சிப்

    8 ஜி.பி. யுனிஃபைடு மெமரி

    256 ஜி.பி. / 512 ஜி.பி. மெமரி

    மேக் ஒ.எஸ். சொனோமா

    பேக்லிட் மேஜிக் கீபோர்டு

    மேஜிக் கீபோர்டு மற்றும் டச் ஐ.டி.

    வை-பை 6E

    ப்ளூடூத் 5.3

    1080 பிக்சல் ஃபேஸ் டைம் ஹெச்.டி. கேமரா

    ஸ்பேஷியல் ஆடியோ

    டிஸ்ப்ளே போர்ட், தண்டர்போல்ட் 3

    யு.எஸ்.பி. 4, யு.எஸ்.பி. 3.1 ஜென் 2

    இந்திய சந்தையில் 24 இன்ச் ஐமேக் M3 (8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. யுனிஃபைடு மெமரி) மாடல் விலை ரூ. 1 லட்சத்து 34 ஆயிரத்து 900 என்று துவங்கிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 1 லட்சத்து 74 ஆயிரத்து 900 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    • ஆப்பிள் நிறுவனத்தின் M3 சீரிஸ் பிராசஸர்கள் 3 நானோமீட்டர் முறையில் உருவாக்கப்பட்டு இருக்கின்றன.
    • புதிய பிராசஸர்கள் முந்தைய வெர்ஷனை விட அதிவேகமானது.

    ஆப்பிள் நிறுவனம் தனது மேக்புக் ப்ரோ லேப்டாப் மாடல்களை முற்றிலும் புதிய M3, M3 ப்ரோ மற்றும் M3 மேக்ஸ் பிராசஸர்களை கொண்டு அப்டேட் செய்திருக்கிறது. இந்திய நேரப்படி இன்று (அக்டோபர் 31) அதிகாலை நடைபெற்ற ஸ்கேரி ஃபாஸ்ட் நிகழ்வில் ஆப்பிள் நிறுவனம் தனது M3 சீரிஸ் சிப்செட்களை அறிமுகம் செய்தது.

    இதில் M3, M3 ப்ரோ மற்றும் M3 மேக்ஸ் என மூன்று வகையான வேரியண்ட்கள் உள்ளன. புதிய M3 சீரிஸ் மாடல்கள் 3 நானோமீட்டர் முறையில் உருவாக்கப்பட்டு இருக்கின்றன. M3 சீரிஸ் பிராசஸர்கள் முந்தைய வெர்ஷனை விட அதிவேகமானது என ஆப்பிள் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. புதிய பிராசஸர்களை அறிவித்ததும், மேக்புக் ப்ரோ மற்றும் 24 இன்ச் ஐமேக் உள்ளிட்ட சாதனங்களை M3 சிப்செட்களுடன் ஆப்பிள் நிறுவனம் அறிவித்து விட்டது.

     

    அதன்படி புதிய M3 சிப்செட் கொண்ட 14 இன்ச் மேக்புக் ப்ரோ, M1 சிப்செட் கொண்ட 13-இன்ச் மேக்புக் மாடலை விட 60 சதவீதம் வேகமானது ஆகும். இதேபோன்று M3 ப்ரோ சிப்செட் கொண்ட 14 மற்றும் 16 இன்ச் மேக்புக் ப்ரோ மாடல்கள், M1 ப்ரோ சிப்செட் கொண்ட 16 இன்ச் மேக்புக் ப்ரோ-வை விட 40 சதவீதம் வேகமானது.

    புதிய மேக்புக் ப்ரோ மாடல்கள் அனைத்திலும் லிக்விட் ரெட்டினா XDR டிஸ்ப்ளே, 20 சதவீதம் அதிக பிரகாசமான SDR தரவுகளை, 600 நிட்ஸ், 1000 நிட்ஸ் பிரைட்னசில் காண்பிக்கிறது. இத்துடன் வைபை 6E, ப்ளூடூத் 5.3, அதிகபட்சம் 4 எக்ஸ்டர்னல் டிஸ்ப்ளேக்களை சப்போர்ட் செய்யும் வசதி கொண்டிருக்கிறது.

    இந்திய சந்தையில் M3 சீரிஸ் பிராசஸர் கொண்ட மேக்புக் ப்ரோ விலை ரூ. 1 லட்சத்து 69 ஆயிரத்து 900 என்று துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் M3 மேக்ஸ் பிராசஸர் கொண்ட 16 இன்ச் மேக்புக் ப்ரோ விலை ரூ. 3 லட்சத்து 99 ஆயிரத்து 900 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    புதிய மேக்புக் ப்ரோ மாடல்கள் அனைத்தும் சில்வர், ஸ்பேஸ் கிரே மற்றும் புதிய ஸ்பேஸ் பிளாக் என மூன்று விதமான நிறங்களில் கிடைக்கின்றன.

    • ஜியோவின் முற்றிலும் புதிய ஃபீச்சர் போன் அழகிய தோற்றம் கொண்டிருக்கிறது.
    • ஜியோபோன் பிரைமா மாடலில் 4ஜி கனெக்டிவிட்டி வழங்கப்பட்டு இருக்கிறது.

    ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ பிராண்டு இந்திய சந்தையில் புதிய ஜியோபோன் பிரைமா 4ஜி மாடலை அறிமுகம் செய்தது. இது ஃபீச்சர் போன் என்ற நிலையிலும், இதில் யூடியூப் மற்றும் வாட்ஸ்அப் போன்ற செயலிகள் பிரீ-இன்ஸ்டால் செய்யப்பட்டு உள்ளன. இத்துடன் 4ஜி எல்.டி.இ. கனெக்டிவிட்டி மற்றும் 23 மொழிகளில் பயன்படுத்தும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

    ஜியோபோன் பிரைமா 4ஜி அம்சங்கள்:

    2.4 இன்ச் டி.எஃப்.டி. 320x240 பிக்சல் டிஸ்ப்ளே

    ARM கார்டெக்ஸ் A53 பிராசஸர்

    512 எம்.பி. ரேம்

    மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

    23 மொழிகளில் இயக்கும் வசதி

    கை ஒ.எஸ்.

    1200-க்கும் அதிக செயலிகளை பயன்படுத்தும் வசதி

    எஃப்.எம். ரேடியோ

    சிங்கில் சிம் ஸ்லாட்

    3.5 எம்.எம். ஆடியோ ஜாக்

    ப்ளூடூத் 5.0

    1800 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    கேமரா சென்சார், எல்.இ.டி. ஃபிளாஷ்

    ஜியோபோன் பிரைமா 4ஜி மாடல் புளூ மற்றும் எல்லோ என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 2 ஆயிரத்து 599 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை ஜியோமார்ட் மூலம் நடைபெறுகிறது.

    • பல்வேறு சாதனங்களில் ஹைப்பர் ஒ.எஸ். பிரீ-இன்ஸ்டால் செய்யப்படுகிறது.
    • ஹைப்பர் கனெக்ட் மூலம் கனெக்டெட் சாதனங்கள் அனைத்தையும் கட்டுப்படுத்த முடியும்.

    சியோமி நிறுவனம் தனது பத்து ஆண்டுகள் பழைய எம்.ஐ.யு.ஐ.-க்கு மாற்றாக ஹைப்பர் ஒ.எஸ்.-ஐ அறிமுகம் செய்திருக்கிறது. இந்த ஒ.எஸ்.-ஐ சியோமி நிறுவனம் "ஹியுமன்-சென்ட்ரிக்" ஒ.எஸ். என்று குறிப்பிட்டு உள்ளது. புதிய ஹைப்பர் ஒ.எஸ். சியோமி நிறுவன ஸ்மார்ட்போன், கார் மற்றும் வீட்டுசாதன பொருட்களில் இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    கடந்த 13 ஆண்டுகளில் சியோமி நிறுவனம் உலகளவில் 1.175 பில்லியன் பயனர்களை கடந்து, கிட்டத்தட்ட 200 பிரிவுகளில் சாதனங்களை விற்பனை செய்து வருவதாக தெரிவித்துள்ளது. எனினும், பல்வேறு சாதனங்களுக்கான ஒ.எஸ்.-களில் ஏராளமான பிரச்சினைகள் மற்றும் செயலாக்க இடர்பாடுகளை சந்தித்து வருவதாக தெரிவித்து இருக்கிறது.

    இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் தான் 2017-ம் ஆண்டு சியோமி நிறுவனம் தனது சாதனங்கள் அனைத்தையும் ஒருங்கிணைந்த சிஸ்டம் ஒன்றில் உள்ளடக்க திட்டமிட்டு ஹைப்பர் ஒ.எஸ்.-ஐ உருவாக்கி இருக்கிறது.

    சியோமி 14 சீரிஸ், சியோமி வாட்ச் S3, சியோமி டி.வி. S ப்ரோ 85 இன்ச் மினி எல்.இ.டி. உள்ளிட்டவைகளில் ஹைப்பர் ஒ.எஸ். பிரீ-இன்ஸ்டால் செய்யப்படுகிறது. இது முற்றிலும் புதிய யூசர் இன்டர்ஃபேஸ் அனுபவத்தை வழங்கும் என்று சியோமி நிறுவனம் தெரிவித்துள்ளது. நான்கு மிகமுக்கிய இலக்குகளை குறிவைத்து ஹைப்பர் ஒ.எஸ். உருவாக்கப்பட்டு இருப்பதாக அந்நிறுவனம் மேலும் தெரிவித்து இருக்கிறது.

    அதன்படி லோ-லெவல் ரி-ஃபேக்டரிங், கிராஸ்-எண்ட் இன்டெலிஜண்ட் கனெக்டிவிட்டி, ப்ரோ-ஆக்டிவ் இன்டெலிஜன்ஸ் மற்றும் என்ட்-டு-என்ட் செக்யுரிட்டி உள்ளிட்ட பிரிவுகளில் ஹைப்பர் ஒ.எஸ். பிரதானமாக கவனம் செலுத்துகிறது.

    ஸ்மார்ட்போன்களில் ஹைப்பர் ஒ.எஸ். ஆண்ட்ராய்டு ஓபன் சோர்ஸ் பிராஜக்ட் (AOSP) சார்ந்து உருவாக்கப்பட்டு இருக்கிறது. இது ஆண்ட்ராய்டு 14 முதல் வழங்கப்படுகிறது. ஸ்மார்ட் சாதனங்களுக்கான ஹைப்பர் ஒ.எஸ். சியோமி வெலா ஓபன்-சோர்ஸ் சிஸ்டத்தின் மீது உருவாக்கப்பட்டு இருக்கிறது. ஹைப்பர் ஒ.எஸ்.-இல் உள்ள ஹைப்பர் கனெக்ட் மூலம் கனெக்டெட் சாதனங்கள் அனைத்தையும் கட்டுப்படுத்த முடியும்.

    டி.இ.இ. ஹார்டுவேர் மற்றும் என்ட்-டு-என்ட் என்க்ரிப்ஷன் மூலம் ஹைப்பர் ஒ.எஸ். பயனரின் தகவல்களுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்துகிறது.

    வெளியீடு எப்போ தெரியுமா?

    சியோமியின் புதிய ஹைப்பர் ஒ.எஸ். சியோமி 14, சியோமி 14 ப்ரோ, சியோமி டி.வி. S ப்ரோ 85 இன்ச் மினி எல்.இ.டி. மற்றும் சியோமி வாட்ச் S3 போன்ற சாதனங்களில் பிரீ-இன்ஸ்டால் செய்யப்பட்டே வழங்கப்படுகிறது.

    இதைத் தொடர்ந்து ஓவர்-தி-ஏர் முறையில் ஹைப்பர் ஒ.எஸ். அப்டேட் டிசம்பர் மாதத்தில் இருந்து வழங்கப்படுகிறது. முதற்கட்டமாக ரெட்மி K60 அல்ட்ரா, சியோமி பேட் 6 மேக்ஸ் 14 இன்ச், சியோமி டி.வி. S ப்ரோ 65 இன்ச், சியோமி டி.வி. S ப்ரோ 75 இன்ச், சியோமி சவுண்ட் ஸ்பீக்கர், சியோமி ஸ்மார்ட் கேமரா 3 ப்ரோ உள்ளிட்ட சாதனங்களுக்கு வழங்கப்படுகிறது.

    சீன சந்தையில் ஹைப்பர் ஒ.எஸ். வெளியீட்டுக்கான முன்பதிவுகள் ஏற்கனவே துவங்கிவிட்டது. சர்வதேச சந்தையில் ஹைப்பர் ஒ.எஸ். அடுத்த ஆண்டின் முதலாவது காலாண்டு வாக்கில் வெளியிடப்பட இருக்கிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பிரீமியம் பிளஸ், பேசிக் ஆகிய இரண்டும் வலைதள பதிப்பில் வாங்கிக் கொள்ள முடியும்.
    • மூன்று விதமான சந்தா முறைகளில் ஒன்றை தேர்வு செய்து கொள்ளலாம்.

    எக்ஸ் வலைதளத்தில் பிரீமியம் பிளஸ் மற்றும் பேசிக் என இரண்டு புதிய சந்தா முறைகள் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன. இதில் பிரீமியம் பிளஸ் சந்தாவில் விளம்பரங்கள் எதுவும் இடம்பெறாது என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    இந்த அறிவிப்பின் மூலம் எக்ஸ் தளத்தில் பயனர்கள் தற்போது மூன்று விதமான சந்தா முறைகளில் ஒன்றை தேர்வு செய்து கொள்ளலாம். புதிய எக்ஸ் பேசிக் சந்தாவின் விலை மாதம் ரூ. 243 (வலைதள பதிப்பு) என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த சந்தாவில் விளம்பரங்கள் இடம்பெற்று இருக்கும்.

    இத்துடன் பதிவுகளை எடிட் செய்வது, மாற்றிக் கொள்வது, எஸ்.எம்.எஸ்., கஸ்டமமைசேஷன் அம்சங்கள் வழங்கப்படுகிறது. இதில் கிரியேட்டர் அம்சங்கள் மற்றும் டிக் மார்க் உள்ளிட்டவை வழங்கப்படாது. ஏற்கனவே உள்ள பிரீமியம் சந்தா விலை மாதம் ரூ. 650 (வலைதள பதிப்பு) ஆகும். இதில் அனைத்து விதமான பிரீமியம் மற்றும் கிரியேட்டர் அம்சங்கள், குறைந்த விளம்பரங்கள் வழங்கப்படும்.

    விளம்பரங்கள் தேவையில்லை எனில், மாதம் ரூ. 1300 (வலைதள பதிப்பு) செலுத்தி பிரீமியம் பிளஸ் சந்தாவை பெற்றுக் கொள்ளலாம். புதுவித சந்தா முறைகளில் பிரீமியம் பிளஸ் மற்றும் பேசிக் ஆகிய இரண்டும் வலைதள பதிப்பில் மட்டுமே வாங்கிக் கொள்ள முடியும்.

    • பல்வேறு பொருட்களுக்கு தள்ளுபடி மற்றும் சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகின்றன.
    • அதிகபட்சம் 18 சதவீதம் வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    ப்ளிப்கார்ட் வலைதளத்தில் பல்வேறு பொருட்களுக்கும் அதிக சலுகைகள் வழங்கிய "பிக் பில்லியன் டேஸ்" சிறப்பு விற்பனை சமீபத்தில் தான் நடைபெற்று முடிந்தது. இந்த நிலையில், "பிக் தசரா சேல்" என்ற பெயரில் மற்றொரு சிறப்பு விற்பனையை ப்ளிப்கார்ட் அறிவித்து இருக்கிறது. இதிலும் பல்வேறு பொருட்களுக்கு தள்ளுபடி மற்றும் சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகின்றன.

    அதன்படி ஐபோன் 14 மாடலின் 128 ஜி.பி. தற்போது ரூ. 56 ஆயிரத்து 999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அந்த வகையில், தற்போதைய விற்பனையில் ஐபோன் 14 மாடலுக்கு அதிகபட்சம் 18 சதவீதம் வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது. இது ஐபோன் 14 மாடலின் முந்தைய விலையை விட ரூ. 12 ஆயிரத்து 901 வரை குறைவு ஆகும்.

     

    தள்ளுபடி மட்டுமின்றி கோடக் வங்கி மற்றும் எஸ்.பி.ஐ. கிரெடிட் கார்டு பயன்படுத்துவோருக்கு 10 சதவீதம் வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது. இத்துடன் பழைய சாதனத்தை எக்சேன்ஜ் செய்யும் போது ரூ. 31 ஆயிரத்து 150 வரை தள்ளுபடி பெற முடியும். ஐபோன் 14 மாடலின் 256 ஜி.பி. மற்றும் 512 ஜி.பி. மாடல்கள் முறையே ரூ. 66 ஆயிரத்து 999 மற்றும் 86 ஆயிரத்து 999 விலைகளில் விற்பனை செய்யப்படுகின்றன.

    இவற்றின் முந்தைய விலை முறையே ரூ. 79 ஆயிரத்து 900 மற்றும் ரூ. 99 ஆயிரத்து 900 என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய சந்தையில் ஐபோன் 14 மாடல் பிராடக்ட் ரெட், புளூ, மிட்நைட், பர்பில் மற்றும் ஸ்டார்லைட் என ஐந்துவிதமான நிறங்களில் கிடைக்கிறது.

    • சர்வதேச சந்தைக்கான ஐபோன்களை டாடா குழுமம் இந்தியாவில் உற்பத்தி செய்ய இருக்கிறது.
    • விஸ்ட்ரன் நிறுவனத்தை கைப்பற்றியதற்கு டாடா குழுமத்திற்கு வாழ்த்துக்கள்.

    டாடா குழுமம் உள்நாடு மற்றும் சர்வதேச சந்தைகளுக்கான ஐபோன்களை இந்தியாவில் வைத்து உற்பத்தி செய்ய இருக்கிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை மத்திய மின்னணு மற்றும் தொழில்நுட்ப துறை மந்திரி ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்து உள்ளார். மேலும் இதே தகவலை தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்திலும் வெளியிட்டு உள்ளார்.

    அந்த பதிவில், "பிரதமர் நரேந்திர மோடியின் PLI திட்டம் மூலம் இந்தியா ஸ்மார்ட்போன் உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக்கு நம்பத்தகுந்த மற்றும் மிகமுக்கிய தளமாக உருவெடுத்து இருக்கிறது. இன்னும் கிட்டத்தட்ட இரண்டறை ஆண்டுகளில், உள்நாடு மற்றும் சர்வதேச சந்தைக்கான ஐபோன்களை டாடா குழுமம் இந்தியாவில் வைத்து உற்பத்தி செய்ய இருக்கிறது."

    "விஸ்ட்ரன் நிறுவனத்தை கைப்பற்றியதற்கு டாடா குழுமத்திற்கு வாழ்த்துகள். இதுவரை வழங்கிய பங்களிப்புகள் அனைத்திற்கு விஸ்ட்ரன் நிறுவனத்திற்கும் நன்றி. இந்தியாவில் இருந்து இந்திய நிறுவனங்களை வைத்து சர்வதேச விநியோகத்தை விரிவுப்படுத்த இருக்கும் ஆப்பிள் சரியான முடிவை எடுத்து இருக்கிறது."

    "இந்தியாவை சக்திவாய்ந்த மின்னணு தளமாக உருவாக்க நினைக்கும் பிரதமர் மோடியின் இலக்கை அடைய உதவுவதற்கும், இந்தியாவில் தங்களது சாதனங்களை நம்பிக்கையாக உற்பத்தி செய்ய முன்வரும் சர்வதேச மின்னணு நிறுவனங்களுக்கு ஆதரவளிக்கும் சர்வதேச இந்திய மின்னணு நிறுவனங்களுக்கு மத்திய மின்னணு மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் முழுமையான ஆதரவை வழங்கும்," என்று தெரிவித்து இருக்கிறார்.

    • ஆப்பிள் நிறுவனம் M3 சிப்செட் கொண்ட மேக்புக் மாடல்களை அறிமுகம் செய்கிறது.
    • குறைந்த விலை மேக்புக் மாடல்கள் அறிமுகம் செய்யப்படலாம்.

    ஆப்பிள் நிறுவனம் குறைந்த விலை மேக்புக் மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அடுத்த ஆண்டின் இரண்டாவது அரையாண்டு வாக்கில் இந்த லேப்டாப் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

    இது குறித்து ஆப்பிள் வல்லுனரான மிங் சி கியோ வெளியிட்டு இருக்கும் தகவல்களில் M2 சிப்செட் குறைபாடு காரணமாக இந்த ஆண்டு மேக்புக் மாடல்களின் வினியோகம் சரிவை சந்தித்து வருகிறது. இதன் காரணமாக ஆப்பிள் நிறுவனம் M3 சிப்செட் கொண்ட மேக்புக் மாடல்களை அறிமுகம் செய்து M2 பிராசஸர் கொண்ட மேக்புக் மாடல்களையும் தொடர்ந்து விற்பனை செய்ய இருப்பதாக தெரிவித்து உள்ளார்.

     

    இவ்வாறு செய்வதன் மூலம் மேக்புக் மாடல்கள் விற்பனை அதிகரிக்கலாம். ஒருவேளை இது பலனளிக்கவில்லை எனில், 2025 ஆண்டு ஆப்பிள் நிறுவனம் ரிடிசைன் செய்யப்பட்ட மேக்புக் ப்ரோ மாடலை அறிமுகம் செய்யும் என்று தெரிகிறது. இதற்காகவே ஆப்பிள் நிறுவனம் குறைந்த விலை மேக்புக் மாடல்களை அறிமுகம் செய்யலாம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

    குறைந்தவிலை மேக்புக் மாடல்களை கொண்டு ஆப்பிள் நிறுவனம் ஆண்டிற்கு 8 முதல் 10 மில்லியன் யூனிட்களை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கும் என்று தெரிகிறது. குறைந்த விலை மேக்புக் பற்றி இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

    ×