என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    • சேவைகளை அவசர அவசரமாக தயார் செய்து வெளியிட்டன.
    • தலைமை செயல் அதிகாரி பொறுப்பில் இருந்து சாம் ஆல்ட்மேன் விடுவிப்பு.

    தொழில்நுட்ப உலகில் அனைவரையும் திரும்பி பார்க்க செய்த செயற்கை நுண்ணறிவு நிறுவனம் ஒபன்ஏஐ. இந்த நிறுவனம் அறிமுகப்படுத்திய சாட்ஜிபிடி (ChatGPT) என்ற சேவை டெக் உலகில் பெரும் புரட்சியை ஏற்படுத்தியது. மேலும், சாட்ஜிபிடி-க்கு போட்டியாக புதிய சேவையை உருவாக்குவதில் பல நிறுவனங்களும் ஈடுபட துவங்கின. முன்னணி டெக் பிராண்டுகள் ஏற்கனவே உருவாக்கி வந்த சேவைகளை அவசர அவசரமாகவும் தயார் செய்து வெளியிட்டன.

    இந்த நிலையில், தொழில்நுட்ப உலகையே அதிரச் செய்யும் அறிவிப்பு ஒன்றை ஒபன்ஏஐ நிறுவனம் வெளியிட்டது. அந்த அறிவிப்பில், ஒபன்ஏஐ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பொறுப்பில் இருந்து சாம் ஆல்ட்மேன் விடுவிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் திடீரென இந்த முடிவை எடுத்ததற்கான காரணத்தையும் ஒபன்ஏஐ தனது அதிகாரப்பூர்வ வலைதளத்தில் வெளியிட்டு உள்ளது. இதோடு ஒபன்ஏஐ நிறுவனத்தின் இடைக்கால தலைமை செயல் அதிகாரியாக மிரா முராடி செயல்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    "ஆல்ட்மேனை பதவியில் இருந்து விடுவிப்பது என்ற முடிவை நிர்வாக குழு பெரும் ஆலோசனைக்கு பிறகே எடுத்தது. ஆலோசனையின் போது, ஆல்ட்மேன் நிர்வாக குழுவுடனான தகவல் தொடர்புகளில் தெளிவற்ற நிலையில் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதனால் நிர்வாக குழுவின் பணிகளில் இடர்பாடு ஏற்படலாம். இதன் காரணமாக ஒபன்ஏஐ நிறுவனத்தை அவர் தொடர்ந்து சிறப்பாக வழிநடத்துவார் என்ற நம்பிக்கையை நிர்வாக குழு இழந்துவிட்டது," என ஒபன்ஏஐ வலைதளத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    உலகளவில் முன்னணி நிறுவனங்களில் ஒன்று, அதன் தலைமை செயல் அதிகாரி குறித்து இத்தகைய கருத்துக்களை தெரிவிப்பதும், திடீரென பதவியில் இருந்து விடுவிப்பதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், ஆல்ட்மேன் தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து விடுவிக்கப்பட உண்மையான காரணம் என்னவாக இருக்கும் என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறது.

    இது தொடர்பாக வெளியாகி இருக்கும் தகவல்களில் ஒபன்ஏஐ நிர்வாக குழு ஏற்றுக் கொள்ள முடியாத விஷயத்தை ஆல்ட்மேன் செய்திருக்க வேண்டும், அல்லது ஆல்ட்மேன் மற்றும் நிர்வாக குழு இடையே கருத்து மோதல் ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. தலைமை செயல் அதிகாரி பதவியில் இருந்து சாம் ஆல்ட்மேன் விடுவிக்கப்பட்டதும், ஒபன்ஏஐ நிறுவனத்தின் இணை நிறுவனர் கிரெக் பிராக்மேன் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்து இருக்கிறார். 

    • ஏர்டெல் மொபைல் ரிசார்ஜ் செய்யும் போது தள்ளுபடி.
    • ஏர்டெல் தேங்ஸ் செயலியில் இடம்பெற்று இருக்கும்.

    ஆப்பிள் ஐபோன் 15 வாங்க நினைக்கும் ஏர்டெல் வாடிக்கையாளரா நீங்கள்? அப்படியெனில் இந்த வாய்ப்பை தவற விடாதீர்கள். ஐபோன் 15 வாங்கும் ஏர்டெல் பயனர்களுக்கு சிறப்பு சலுகை மற்றும் வங்கி சார்ந்த தள்ளுபடி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஏர்டெல் மொபைல் ரிசார்ஜ் செய்யும் போது தள்ளுபடி மற்றும் கேஷ்பேக் வழங்கப்படுகிறது.

    புதிய ஐபோன் 15 வாங்கிய 60 நாட்களுக்குள் ஏர்டெல் போஸ்ட்பெயிட் சிம் ஆக்டிவேட் செய்தால் ரூ. 2 ஆயிரம் மதிப்புள்ள தள்ளுபடி கூப்பன்கள் வழங்கப்படுகிறது. இந்த சலுகை நவம்பர் 10-ம் தேதி துவங்கி டிசம்பர் 30-ம் தேதி வரை மட்டுமே வழங்கப்படுகிறது. பயனர் ஐபோனினை அமேசான் வலைதளத்தில் இருந்து வாங்கி இருந்தால், இந்த சலுகை நீட்டிக்கப்படும்.

    அதன்படி ஏர்டெல் போஸ்ட்பெயிட் சிம் கார்டை ஆக்டிவேட் செய்ததும், ஏதேனும் ஒரு போஸ்ட்பெயிட் திட்டத்தில் ரிசார்ஜ் செய்ய வேண்டும். பிறகு ரூ. 200 மதிப்புள்ள பத்து கூப்பன்கள் பயனர்களுக்கு வழங்கப்படும். இதற்கான தகவல் ஏர்டெல் தேங்ஸ் செயலியில் இடம்பெற்று இருக்கும். இந்த சலுகை ஏர்டெல் கார்ப்பரேட் சிம் கார்டுகளுக்கு பொருந்தாதது.

    ஆனால், ஏர்டெல் போஸ்ட்பெயிட் சிம் 60 நாட்களுக்குள் ஆக்டிவேட் செய்ய வேண்டியது அவசியம் ஆகும். இவ்வாறு செய்யும் போது பயனர் மேற்கொள்ளும் ரிசார்ஜ் ஒன்றுக்கு ஒரு கூப்பன் வரை பயன்படுத்த முடியும். இதுதவிர பயனர்கள் விதிகளை பின்பற்றும் போது ரூ. 5 ஆயிரம் வரையிலான கேஷ்பேக்-ஐ அமேசானிடம் இருந்து பெற முடியும். 

    • அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தி இருக்கிறது.
    • சிறப்பான அனுபவத்தை வழங்கும் என ஆப்பிள் நம்பிக்கை.

    ஆப்பிள் நிறுவனம் மிக முக்கிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் அறிமுகமான ஐபோன் 15 சீரிசில் யு.எஸ்.பி. டைப் சி வழங்கிய ஆப்பிள் நிறுவனம் தற்போது ரிச் கம்யூனிகேஷன் சர்வீசஸ் (ஆர்.சி.எஸ்.) ரக மெசேஜிங் வசதியை வழங்க இருக்கிறது. இது தொடர்பான தகவலை அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தி இருக்கிறது.

    அதன்படி அடுத்த ஆண்டு முதல் ஐபோன்களில் ஆர்.சி.எஸ். வசதி வழங்கப்படும் என்று ஆப்பிள் செய்தி தொடர்பாளர் தனியார் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார். சர்வதேச சந்தையில் ஆர்.சி.எஸ். வழிமுறை வழக்கமான எஸ்.எம்.எஸ். மற்றும் எம்.எம்.எஸ்.-களுடன் ஒப்பிடும் போது சிறப்பான அனுபவத்தை வழங்கும் என்று ஆப்பிள் நம்புவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

    ஐபோன்களில் ஆர்.சி.எஸ். ஐமெசேஜ் உடன் வழங்கப்பட இருக்கிறது. இது ஆப்பிள் பயனர்களுக்கு சிறப்பான மற்றும் பாதுகாப்பான மெசேஜிங் அனுபவத்தை வழங்கும் என்று ஆப்பிள் செய்தி தொடர்பாளர் தெரிவித்து இருக்கிறார். கூகுள் மற்றும் சாம்சங் நிறுவனங்களின் அழுத்தம் காரணமாக ஆப்பிள் நிறுவனம் ஆர்.சி.எஸ். மெசேஜிங்கை வழங்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

    ஆப்பிள் நிறுவனம் ஐபோன்களில் ஏற்கனவே உள்ள ஐமெசேஜ் சேவையை நீக்காமல், கூடுதலாக ஆர்.சி.எஸ். சேவையை வழங்க இருக்கிறது. ஐபோன் பயனர்களிடையே தகவல் பரிமாற்றத்திற்கு ஐமெசேஜ் சேவையை தொடர்ந்து பயன்படுத்த முடியும். ஆர்.சி.எஸ். அறிமுகம் செய்யப்பட்டாலும் எஸ்.எம்.எஸ். மற்றும் எம்.எம்.எஸ். சேவைகள் தொடர்ந்து வழங்கப்படும். 

    • விதிமுறை தமிழகத்திலும் சமீபத்தில் அமலுக்கு கொண்டுவரப்பட்டது.
    • போக்குவரத்து காவல் துறையினர் சலானை அனுப்பி வருகின்றனர்.

    வாகனங்களில் செல்வோரின் பாதுகாப்பு காரணங்களுக்காக நாடு முழுக்க பல்வேறு மாநிலங்களிலும் வேகக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. அதன்படி வாகனங்கள் குறிப்பிட்ட வேகத்தை மீறி செல்லும் போது அபராதம் செலுத்த வேண்டும். இதே போன்ற விதிமுறை தமிழகத்திலும் சமீபத்தில் அமலுக்கு கொண்டுவரப்பட்டது.

    அதன்படி சென்னையில் வேகமாக செல்லும் வாகனங்களுக்கு போக்குவரத்து காவல் துறையினர் அபராதம் செலுத்துவதற்கான சலானை அனுப்பி வருகின்றனர். அந்த வகையில், பயனர்கள் சலான் செலுத்துவதை தவிர்க்க செய்யும் நோக்கில், கூகுள் நிறுவனம் தனது மேப்ஸ் சேவையில் புதிய வசதியை கொண்டுவந்து இருக்கிறது.

    இதற்காக கூகுள் மேப்ஸ் சேவையில் எந்தெந்த பகுதிகளில் வேகக்கட்டுபாடுகள் விதிக்கப்பட்டு இருக்கின்றன என்ற விவரங்களை உலகளவில் வழங்கிவருகிறது. அதன்படி உள்ளூர் சாலை ஒன்றில் செல்லும் போது வேகக்கட்டுபாடுகளுக்கு ஏற்ப சலான் பெறுவதை தவிர்க்க செய்யும் கூகுள் மேப்ஸ் அம்சத்தை எப்படி செயல்படுத்த வேண்டும் என்பது பற்றி தொடர்ந்து பார்ப்போம்.

    - ஸ்மார்ட்போனில் கூகுள் மேப்ஸ் செயலியை லான்ச் செய்யுங்கள்

    - அக்கவுண்ட் செட்டிங்ஸ் (Account Settings) ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்

    - பிறகு செட்டிங்ஸ் (Settings) ஆப்ஷனில் உள்ள நேவிகேஷன் செட்டிங்ஸ் (Navigation Settings) ஆப்ஷன்களை கிளிக் செய்ய வேண்டும்

    - நேவிகேஷன் செட்டிங்ஸ் (Navigation Settings) ஆப்ஷனில் உள்ள டிரைவிங் ஆப்ஷன்ஸ் (Driving Options) ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்

    - டிரைவிங் ஆப்ஷன்ஸ் (Driving Options) ஆப்ஷனில் உள்ள ஸ்பீடோமீட்டர் (Speedometer) ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

    - ஸ்பீடோமீட்டர் ஆப்ஷனை கிளிக் செய்ததும் கூகுள் மேப்ஸ் கொண்டு நேவிகேட் செய்யும் போது ஜி.பி.எஸ். வேகம் காண்பிக்கப்படும். இந்த அம்சம் வேகம் அதிகரிக்கும் போது நிறம் மாறி எச்சரிக்கை விடுக்கும்.

    ஸ்பீடோமீட்டர் எப்படி வேலை செய்யும் என்பது பற்றி கூகுள் நிறுவனம் விளக்கம் அளித்து இருக்கிறது. அதன்படி ஏ.ஐ. தொழில்நுட்பம், ஸ்டிரீட் வியூ படங்கள் மற்றும் மூன்றாம் தரப்பு படங்களை பயன்படுத்தி கூகுள் மேப்ஸ் வேகக்கட்டுப்பாடு பற்றிய எச்சரிக்கையை கொடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதற்காக உலகம் முழுக்க நூற்றுக்கும் அதிகமான அடையாள குறியீடுகளில் சோதனை செய்யப்பட்டது.

    இவ்வாறு கூகுள் மேப்ஸ்-இல் உள்ள ஏ.ஐ. மாடல் ஒரு எச்சரிக்கை குறியீடை கண்டறிந்தால். உடனே ஜி.பி.எஸ். விவரங்களை கொண்டு அதில் உள்ள ஒற்றுமையை உறுதிப்படுத்தி அதற்கு ஏற்ப வேகக்கட்டுப்பாடு விதிகளை அப்டேட் செய்து கொள்ளும். இதோடு போக்குவரத்து முறைகளை கொண்டு வேகத்தில் மாற்றங்களை மேற்கொள்ளும்.

    • கூகுள் வலைதள பதிவில் இடம்பெற்று இருக்கிறது.
    • விதிகளின் கீழ் வரும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    வாட்ஸ்அப் பேக்கப் செய்வது குறித்து கூகுள் அதிர்ச்சி தகவலை தெரிவித்து இருக்கிறது. அதன்படி வாட்ஸ்அப் சாட் ஹிஸ்டரி பேக்கப் தகவல்கள் அனைத்தும் கூகுள் கிளவுட் ஸ்டோரேஜ் கட்டுப்பாடு விதிகளின் கீழ் வரும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இது தொடர்பான தகவல் கூகுள் வலைதள பதிவில் இடம்பெற்று இருக்கிறது.

    புதிய கட்டுப்பாட்டு விதிகளில் இருந்து தப்பிக்க, பயனர்கள் தங்களின் ஃபைல் சைஸ் அளவை குறைக்கவோ அல்லது கூடுதல் ஸ்டோரேஜை வாங்கிக் கொள்ளலாம் என்று கூகுள் தெரிவித்து உள்ளது. தற்போது வரை கூகுள் கிளவுட் ஸ்டோரேஜ் சேவையில் பயனர்கள் அதிகபட்சம் 15 ஜி.பி. வரையிலான தரவுகளை இலவசமாக வைத்துக் கொள்ள முடியும்.

    பேக்கப்களுக்கு வழங்கப்பட்டு வந்த அன்லிமிடெட் ஸ்டோரேஜை நிறுத்திக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு கூகுள் வந்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளாக ஆண்ட்ராய்டு வாட்ஸ்அப் பேக்கப்களுக்கு அன்லிமிடெட் ஸ்டோரேஜ் வழங்கப்பட்டு வந்த நிலையில், விரைவில் இந்த வழிமுறையில் மாற்றம் செய்யப்பட இருக்கிறது.

    "ஆண்ட்ராய்டில் வாட்ஸ்அப் பேக்கப்களை செயல்படுத்த விரும்பினால், தனிப்பட்ட கூகுள் அக்கவுண்ட்களுடன் 15 ஜி.பி. வரையிலான ஸ்டோரேஜ் எவ்வித கட்டணமும் இன்றி இலவசமாக வழங்கப்படுகிறது. இது கூகுள் டிரைவ், ஜிமெயில் மற்றும் கூகுள் போட்டோஸ் போன்ற மொபைல் தளங்களில் பகிரப்படுவதை விட மும்மடங்கு அதிகம் ஆகும்."

    "பயனரின் தனிப்பட்ட கூகுள் அக்கவுண்ட்-இல் ஸ்டோரேஜ் இருக்கும் வரை ஆண்ட்ராய்டு தளத்தில் வாட்ஸ்அப் பேக்கப்கள் தொடர்ந்து வேலை செய்யும். ஸ்டோரேஜ் அளவை நெருங்கும் பட்சத்தில், தொடர்ந்து பேக்கப் சேவையை பெற ஸ்டோரேஜை அதிகப்படுத்த வேண்டும்," என்று கூகுள் வலைதள பதிவில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    புதிய மாற்றத்தின் படி இந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் இருந்து வாட்ஸ்அப் பீட்டா பயனர்களுக்கு அமலுக்கு கொண்டுவரப்படுகிறது. பிறகு அடுத்தாண்டு துவக்கத்தில் வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பயனர்கள் அனைவருக்கும் இந்த அம்சம் அமலுக்கு வரும் என்று கூகுள் தெரிவித்துள்ளது.

    • ஒன்பிளஸ் பேட் கோ போன்றே காட்சியளிக்கிறது.
    • ஒப்போ ரெனோ 11 சீரிஸ் மாடல்களும் அறிமுகம்.

    ஒப்போ நிறுவனத்தின் புதிய பேட் ஏர் 2 மாடல் அடுத்த வாரம் அறிமுகம் செய்யப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. முதற்கட்டமாக சீன சந்தையில் அறிமுகம் செய்யப்படும் இந்த மாடல் ஏற்கனவே விற்பனை செய்யப்படும் ஒப்போ பேட் ஏர் மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். புதிய டேப்லெட் வெளியீட்டை ஒட்டி, இதன் சிறப்பம்சங்கள் மற்றும் டிசைன் சார்ந்த விவரங்கள் டீசர்களாக வெளியாகி உள்ளன.

    டீசர்களின் படி இந்த டேப்லெட் தடிமனான டிஸ்ப்ளே, வளைந்த கார்னர்கள் மற்றும் இருவித நிறங்களை கொண்டிருக்கும் என்று தெரியவந்துள்ளது. இதன் டிசைனை பார்க்க ஒப்போ பேட் ஏர் மற்றும் ஒன்பிளஸ் பேட் கோ போன்றே காட்சியளிக்கிறது. நவம்பர் 23-ம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கும் ஒப்போ பேட் ஏர் 2 மாடலுடன் ஒப்போ ரெனோ 11 மற்றும் ரெனோ 11 ப்ரோ ஸ்மார்ட்போன்களும் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது.

    புதிய ஒப்போ பேட் ஏர் 2 டேப்லெட் ஒன்பிளஸ் பேட் கோ மாடலின் ரி-பிராண்டு செய்யப்பட்ட வெர்ஷனாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இது குறித்து டிப்ஸ்டரான டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் வெளியிட்டு இருக்கும் தகவல்களில் புதிய ஒப்போ பேட் ஏர் 2 விலை CNY1000 இந்திய மதிப்பில் ரூ. 11 ஆயிரத்து 500 வரை நிர்ணயம் செய்யப்படும் என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    அம்சங்களை பொருத்தவரை ஒன்பிளஸ் பேட் கோ மாடலில் 11.35 இன்ச் 2.4K 1720x2408 பிக்சல் LCD டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட், மீடியாடெக் ஹீலியோ ஜி99 பிராசஸர், 8 ஜி.பி. ரேம், அதிகபட்சம் 256 ஜி.பி. மெமரி, 8MP பிரைமரி கேமரா, EIS, 8MP செல்ஃபி கேமரா, 8000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் 33 வாட் சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது.

    • ரெட்மி நோட் 13 சீரிஸ் மாடல்கள் சீனாவில் விற்பனை செய்யப்படுகின்றன.
    • புதிய ரெட்மி நோட் சீரிஸ் விவரங்கள் லீக் ஆகி இருக்கிறது.

    சியோமி நிறுவனம் தனது ரெட்மி நோட் 13 5ஜி ஸ்மார்ட்போனினை கடந்த செப்டம்பர் மாதம் சீன சந்தையில் அறிமுகம் செய்தது. இத்துடன் ரெட்மி நோட் 13 ப்ரோ சீரிஸ் மாடல்களும் அறிமுகம் செய்யப்பட்டன. இந்த நிலையில், ரெட்மி நோட் 13 ப்ரோ சீரிசின் புதிய ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.

    புதிய ஸ்மார்ட்போன் ரெட்மி நோட் 13R ப்ரோ எனும் பெயரில் அறிமுகம் செய்யப்படும் என்று சீன டெலிகாம் வலைதளத்தின் மூலம் தெரியவந்துள்ளது. இத்துடன் ரெட்மி நோட் 13R ப்ரோ மாடலின் டிசைன் மற்றும் அம்சங்கள் பற்றிய தகவல்களும் வெளியாகி உள்ளன. அதன்படி இந்த மாடலில் 6.67 இன்ச் FHD+ ஸ்கிரீன் MT6833 பிராசஸர் வழங்கப்படும் என தகவல்.

    ரெட்மி நோட் 13R ப்ரோ அம்சங்கள்:

    6.67 இன்ச் FHD+ 1080x2400 பிக்சல் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே

    கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு

    ஆக்டா கோர் மீடியாடெக் 6080 பிராசஸர்

    மாலி G57 MC2 GPU

    12 ஜி.பி. ரேம்

    256 ஜி.பி. மெமரி

    ஆண்ட்ராய்டு 13 சார்ந்த MIUI14

    டூயல் சிம் ஸ்லாட்

    108MP பிரைமரி கேமரா

    2MP டெப்த் கேமரா

    16MP செல்ஃபி கேமரா

    பக்கவாட்டில் கைரேகை சென்சார்

    3.5mm ஆடியோ ஜாக்

    5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.3

    யு.எஸ்.பி. டைப் சி

    5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

    ரெட்மி நோட் 13R ப்ரோ 5ஜி மாடல் மிட்நைட் பிளாக், டைம் புளூ மற்றும் டான் கோல்டு போன்ற நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 1999 யுவான்கள் இந்திய மதிப்பில் ரூ. 23 ஆயிரத்து 525 என்று நிர்ணயம் செய்யப்படலாம். இந்த ஸ்மார்ட்போன் நவம்பர் 20-ம் தேதி அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

    • புதிய வகை பொருட்களை கொண்டு OLED பேனல்களை உற்பத்தி செய்வதாக தகவல்.
    • இவ்வாறு செய்யும் போது, OLED பேனல்களின் திறன் மற்றும் பிரைட்னஸ் அதிகரிக்கும்.

    ஆப்பிள் நிறுவனத்தின் எதிர்கால ஐபோன் மாடல்களில் நீண்ட நேர பேட்டரி பேக்கப் கிடைக்கும் என புதிய தகவல் வெளியாகி உள்ளது. மேலும், ஐபோன்களின் பேட்டரி பேக்கப் அதிகரிக்க சாம்சங் முக்கிய காரணமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. ஆப்பிள் ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தப்படும் OLED பேனல்களை சாம்சங் நிறுவனமும் உற்பத்தி செய்து வருவது அனைவரும் அறிந்ததே.

    அதன்படி OLED உற்பத்தியில் சாம்சங் மேற்கொள்ள இருக்கும் அதிரடி மாற்றம் காரணமாக ஐபோன்களின் பேட்டரி நீண்ட நேரத்திற்கு பேக்கப் வழங்கும் என்று கூறப்படுகிறது. இதற்காக சாம்சங் நிறுவனம் புதிய வகை பொருட்களை கொண்டு OLED பேனல்களை உற்பத்தி செய்ய திட்டமிடுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த புதிய வகை பொருட்கள் குறைந்த அளவு மின்திறனை எடுத்துக் கொள்ளும் என்று தெரிகிறது.

    சாம்சங் டிஸ்ப்ளே நிறுவனம் இது தொடர்பான ஆய்வுகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. ஆய்வில் உருவாக்கப்படும் புதிய வகை பாகங்கள், ஏற்கனவே உள்ள OLED பாகங்களுடன் ஒருங்கிணைக்கப்படும். இவ்வாறு செய்யும் போது, OLED பேனல்களின் திறன் மற்றும் பிரைட்னஸ் அதிகரிக்கும் என்று தெரிகிறது.

    2026 ஆண்டு வாக்கில் சாம்சங்கின் புதிய வகை தொழில்நுட்பம் தயார் நிலைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் சாம்சங் உருவாக்கி வரும் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் முதல் ஐபோன் என்ற பெருமையை ஐபோன் 18 பெறும் என்று எதிர்பார்க்கலாம்.

    • ரெட் மேஜிக் 9 ப்ரோ ஸ்மார்ட்போன் மூன்று நிறங்களில் கிடைக்கிறது.
    • இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 பிராசஸர் வழங்கப்படும் என தகவல்.

    நுபியா நிறுவனம் தனது அடுத்த தலைமுறை ஃபிளாக்ஷிப் ரெட் மேஜிக் 9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை விரைவில் அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், புதிய ரெட் மேஜிக் 9 ப்ரோ ஸ்மார்ட்போனிற்கான அதிகாரப்பூர்வ ரெண்டர்களை நுபியா வெளியிட்டு உள்ளது.

    புதிய ரெட் மேஜிக் 9 சீரிஸ் மாடல்கள் நவம்பர் 23-ம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. தற்போதைய ரெண்டர்களின் படி ரெட் மேஜிக் 9 ப்ரோ மாடல் டுயெடெரியம் டிரான்ஸ்பேரண்ட் சில்வர் விங்ஸ், டுயெடெரியம் டிரான்ஸ்பேரண்ட் டார்க் நைட் மற்றும் டார்க் நைட் வேரியண்ட் என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கும் என்று தெரியவந்துள்ளது.

    பெயருக்கு ஏற்றார்போல் இந்த ஸ்மார்ட்போனின் டிரான்ஸ்பேரண்ட் நிற ஆப்ஷன்களில் போனின் பாகங்கள் தெரியும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனிற்கான டீசர்களின் படி இதன் பின்புற பேக் பேனலில் கேமரா பம்ப் எதுவும் இடம்பெறவில்லை. மேலும் ஃபுல் ஸ்கிரீன் அனுபவத்தை வழங்குவதற்காக இந்த மாடலில் அன்டர் ஸ்கிரீன் செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது.

    ரெட் மேஜிக் 9 ப்ரோ மாடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 பிராசஸர் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, OIS, 50MP அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ் வழங்கப்படுகிறது.

    • என்ட்ரி லெவல் ஃபோல்டபில் ஸ்மார்ட்போன்கள் சந்தையில் களமிறங்க இருப்பதாக தகவல்.
    • மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை அதிக வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்க்க முடியும்.

    சாம்சங் நிறுவனம் குறைந்த விலையில் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருப்பதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகின. சாம்சங் நிறுவனத்தின் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் மிட் ரேன்ஜ் பிரிவில் நிர்ணயம் செய்யப்படும் என்று கூறப்பட்டது. இந்த நிலையில், சாம்சங் சார்பில் இந்த தகவலுக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது.

    கேலக்ஸி ஃபோல்டு சீரிஸ் மூலம் சாம்சங் நிறுவனம் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் பிரிவில் களமிறங்கியது. பிறகு கேலக்ஸி Z ஃபோல்டு மற்றும் Z ஃப்ளிப் சீரிஸ் வரை தொடர்ந்து புதிய மாடல்களை அறிமுகம் செய்தது. முதல் தலைமுறை கேலக்ஸி ஃபோல்டு மாடலின் விலை 1980 டாலர்கள் என்று நிர்ணயம் செய்யப்பட்டது.

    பிறகு, இதன் தொடர்ச்சியாக அறிமுகம் செய்யப்பட்ட கேலக்ஸி Z ஃபோல்டு 3 விலை சற்றே குறைக்கப்பட்டு 1799 டாலர்கள் என்றும் கேலக்ஸி Z ஃப்ளிப் 3 விலை 999 டாலர்கள் என்றும் நிர்ணயம் செய்யப்பட்டது. சமீபத்திய கேலக்ஸி Z ஃபோல்டு 5 மற்றும் கேலக்ஸி Z ஃப்ளிப் 5 மாடல்களின் விலை அதன் முந்தைய வெர்ஷனை போன்றே நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.

    2024 ஆண்டு துவக்கத்தில் சாம்சங் நிறுவனம் என்ட்ரி லெவல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் சந்தையில் களமிறங்க இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. மேலும் இதன் விலை 800 டாலர்கள் வரை நிர்ணயம் செய்யப்படும் என்றும் கூறப்பட்டது. இதன் மூலம் சாம்சங் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை அதிக வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்க்க முடியும் என்று கூறப்பட்டது.

    எனினும், சாம்சங் எலெக்டிரானிக்ஸ் நிறுவன செய்தி தொடர்பாளர் குறைந்த விலை மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் குறித்து விளக்கம் அளித்து இருக்கிறார். "மிட் ரேன்ஜ் பிரிவில் நிலை நிறுத்தக்கூடிய அளவுக்கு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை உற்பத்தி செய்வது தொடர்பாக எந்த திட்டமும் இல்லை, சமீபத்திய தகவல்களில் எவ்வித அடிப்படை ஆதாரமும் இல்லை," என்று அவர் தெரிவித்தார்.

    • லாக்டு சாட்களை மறைத்து வைத்துக் கொள்ளும் வசதியை வழங்குகிறது.
    • பிரைவசி செட்டிங்களில் இருந்து லாக்டு சாட்களை அழிக்க முடியும்.

    வாட்ஸ்அப் செயலியில் சமீபத்தில் தான் "சாட் லாக்" (Chat Lock) என்ற பெயரில் புதிய அம்சம் அறிமுகம் செய்யப்பட்டது. இது பயனரின் தனியுரிமையை பாதுகாக்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. தற்போது பயனர் தனியுரிமையை பாதுகாக்கும் கூடுதல் அம்சத்தினை வாட்ஸ்அப் அறிமுகம் செய்து இருக்கிறது.

    "சீக்ரெட் கோட்" (Secret Code) என்று அழைக்கப்படும் புதிய அம்சம் வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷனில் வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய சீக்ரெட் கோட் அம்சம் கொண்டு பயனர்கள் லாக்டு சாட்களை மறைத்து வைத்துக் கொள்ளும் வசதியை வழங்குகிறது.

    வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா 2.23.24.20 வெர்ஷனை அப்டேட் செய்த பிறகு, பயனர்கள் லாக்டு சாட்களில் புதிதாக செட்டிங்ஸ் ஆப்ஷனை பார்க்க முடியும். இந்த பகுதியில் லாக்டு சாட்களை இயக்க அனுமதிக்கும் என்ட்ரி பாயின்ட்-ஐ மறைத்து வைத்துக் கொள்ளும் வசதி வழங்கப்படுகிறது. சீக்ரெட் கோட் செட்டப் செய்து முடித்ததும், லாக்டு சாட்-இல் என்ட்ரி பாயின்ட் சாட் லிஸ்ட்-இல் இடம்பெற்று இருக்காது.

    மாறாக பயனர்கள் சாட் டேப்-இல் உள்ள சர்ச் பாரில் சீக்ரெட் கோடை பதிவிட்டு, லாக்டு சாட்-ஐ இயக்க முடியும். ஒருவளை சீக்ரெட் கோட்-ஐ பயனர்கள் மறந்து போகும் பட்சத்தில், சில பீட்டா டெஸ்டர்களுக்கு மட்டும் பிரைவசி செட்டிங்களில் இருந்து லாக்டு சாட்களை அழிக்கும் வசதி வழங்கப்படுகிறது. தற்போது பீட்டா வெர்ஷனில் வழங்கப்பட்டு இருக்கும் புதிய அம்சம் விரைவில் அனைவருக்கும் வழங்கப்படலாம்.

    Photo Courtesy: WABetaInfo

    • ஜியோ ஏர் ஃபைபர் சேவை முதற்கட்டமாக குறைந்த நகரங்களில் அறிமுகம் செய்யப்பட்டது.
    • தமிழகத்தின் 21 மாவட்டங்களில் தற்போது ஜியோ ஏர் ஃபைபர் சேவை வழங்கப்படுகிறது.

    ஜியோ நிறுவனத்தின் ஏர் ஃபைபர் சேவை கடந்த செப்டம்பர் மாதம் தேர்வு செய்யப்பட்ட நகரங்களில் அறிமுகம் செய்யப்பட்டது. பிராட்பேண்ட்-போன்ற இணைய சேவையை ஜியோ 5ஜி கனெக்டிவிட்டி மூலம் வழங்குவதே ஜியோ ஏர் ஃபைபர் சேவை ஆகும். முதற்கட்டமாக குறைந்த நகரங்களில் அறிமுகம் செய்யப்பட்ட ஏர் ஃபைபர் சேவை தற்போது நாடு முழுக்க 115 நகரங்களில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

    அதன்படி ஜியோ ஏர் ஃபைபர் சேவை மேற்கு வங்காளம், தமிழ்நாடு, டெல்லி, மகாராஷ்டிரா, கர்நாடகா, தெலுங்கானா, குஜராத் மற்றும் ஆந்திர பிரதேசம் போன்ற மாநிலங்களில் கிடைக்கிறது. இந்த மாநிலங்களில் தேர்வு செய்யப்பட்ட நகரங்களில் மட்டுமே இந்த சேவை வழங்கப்பட்டு இருக்கிறது.

    தமிழ்நாட்டில் சென்னை, திருவள்ளூர், ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ஆம்பூர், மதுரை, கரூர், நாமக்கல், நெய்வேலி, பொள்ளாச்சி, சேலம், கோயம்புத்தூர், ஓசூர், கும்பகோணம், திருச்சி, திருப்பூர், ஸ்ரீரங்கம் மற்றும் வேலூர் போன்ற பகுதிகளில் ஜியோ ஏர் ஃபைபர் சேவை வழங்கப்படுகிறது.

    விலையை பொருத்தவரை ஜியோ ஏர் ஃபபைர் சேவைக்கான கட்டணம் மாதம் ரூ. 599 என துவங்குகிறது. 30 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இந்த சலுகையில் 30Mbps வரையிலான இணைய வேகம், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், ஜீ5, சோனிலிவ் உள்பட 11 ஒ.டி.டி. சேவைக்கான சந்தா, 550 டி.வி. சேனல்கள் வழங்கப்படுகின்றன.

    இதுதவிர ஜியோ ஏர் ஃபைபர் சேவை ரூ. 899, ரூ. 1199, ரூ. 1499, ரூ. 2499 மற்றும் ரூ. 3999 விலைகளில் வழங்கப்படுகின்றன. ரூ. 3999 சலுகை 30 நாட்களுக்கான வேலிடிட்டி கொண்டுள்ளது. இதில் 1Gbps வேகம் கொண்ட இணைய சேவை, அமேசான் பிரைம், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், சோனிலிவ் மற்றும் 13-க்கும் அதிக ஒ.டி.டி. சேவைக்கான சந்தா மற்றும் 550 டி.வி. சேனல்கள் வழங்கப்படுகின்றன.

    ×