என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    • வழிமுறையை மாற்றுவது குறித்து ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.
    • பன்ச் ஹோல் ரக டிசைனை ஆப்பிள் பரிசோதனை செய்து வருகிறது.

    ஆப்பிள் நிறுவனம் கடந்த செப்டம்பர் மாதத்தில் அறிமுகம் செய்த ஐபோன் 15 சீரிஸ் வரை தனது டிஸ்ப்ளேக்களில் நாட்ச் ரக டிசைனை வழங்குவதில் மிகவும் கவனமாக இருந்துள்ளது. எனினும், ஏற்கனவே உள்ள டிசைனில் மென்பொருள் மாற்றங்களை செய்து 'டைனமிக் ஐலேண்ட்' எனும் அம்சத்தினை அறிமுகம் செய்தது. இந்த அம்சம் ஸ்கிரீனில் அதிக இடவசதியை வழங்கியதோடு, சிறப்பான அனுபவத்தை வழங்கியது.

    இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் ஐபோன் 16 ப்ரோ மாடலில் தற்போதைய வழிமுறையை மாற்றுவது குறித்து ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. ஐபோன் 16 ப்ரோ மாடலில் பன்ச்-ஹோல் டிஸ்ப்ளே வழங்க ஆப்பிள் திட்டமிடுவதாக தெரிகிறது.

    டிப்ஸ்டரான மஜின் பு வெளியிட்டு இருக்கும் தகவல்களில் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 16 ப்ரோ மாடலின் பன்ச் ஹோல் டிஸ்ப்ளே கொண்ட வெர்ஷனை உருவாக்கி வருவதாக தெரிவித்து இருக்கிறார். பன்ச் ஹோல் ரக டிசைனை ஆப்பிள் பரிசோதனை செய்து வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

    அந்த வகையில், இந்த டிசைன் கொண்ட மாடல் விற்பனைக்கும் அறிமுகம் செய்யப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இது பற்றிய தகவல்கள் அடுத்த ஆண்டு மார்ச் மாத வாக்கில் வெளியாகும் என்று அவர் தெரிவித்துள்ளார். ஐபோன் 16 ப்ரோ மற்றும் 16 ப்ரோ மேக்ஸ் மாடல்களில் தற்போதைய ஐபோன் 15 ப்ரோ மாடல்களில் இருப்பதை விட அளவில் பெரிய டிஸ்ப்ளேக்கள் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

    அடுத்த தலைமுறை ஐபோன் மாடல்கள் பற்றிய தகவல்கள் ஏற்கனவே பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. எனினும், இவற்றில் பெரும்பாலானவை உறுதிப்படுத்த முடியாத நிலையிலேயே உள்ளது. அடுத்த ஆண்டும் ஆப்பிள் நிறுவனம்- ஐபோன் 16, ஐபோன் 16 பிளஸ், ஐபோன் 16 ப்ரோ மற்றும் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் என நான்கு மாடல்களை அறிமுகம் செய்யலாம்.

    • ஐகூ 12 ஸ்மார்ட்போன் பி.எம்.டபிள்யூ. எடிஷனில் கிடைக்கும் என தெரியவந்துள்ளது.
    • ஐகூ 12 ஸ்மார்ட்போன் அமேசான் வலைதளத்தில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட இருக்கிறது.

    ஐகூ பிராண்டு தனது ஐகூ 12 ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்பதை ஏற்கனவே அறிவித்துவிட்டது. எனினும், இதன் சரியான வெளியீட்டு தேதி ரகசியமாகவே வைக்கப்பட்டு இருந்தது. தற்போது ஐகூ வெளியிட்டு இருக்கும் புதிய அறிவிப்பில் ஐகூ 12 ஸ்மார்ட்போன் இந்தியாவில் டிசம்பர் 12-ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    இந்திய சந்தையில் புதிய ஐகூ 12 ஸ்மார்ட்போன் அமேசான் வலைதளத்தில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட இருக்கிறது. ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 பிராசஸர் கொண்டு இந்தியாவில் அறிமுகமாகும் முதல் ஸ்மார்ட்போன் என்ற பெருமையை ஐகூ 12 பெறும் என்று ஐகூ தெரிவித்து இருக்கிறது. இதுகுறித்த டீசரில் ஐகூ 12 ஸ்மார்ட்போன் பி.எம்.டபிள்யூ. எடிஷனில் கிடைக்கும் என தெரியவந்துள்ளது. இதுதவிர பிளாக் நிறத்திலும் கிடைக்கலாம்.

     

    ஐகூ 12 எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:

    6.78 இன்ச் 2800x1260 பிக்சல் 1.5K LTPO AMOLED, 144Hz வேரியபில் ரிப்ரெஷ் ரேட்

    ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 பிராசஸர்

    அட்ரினோ 750 GPU

    12 ஜி.பி., 16 ஜி.பி. ரேம்

    256 ஜி.பி., 512 ஜி.பி. மெமரி

    ஆண்ட்ராய்டு 14 சார்ந்த ஃபன்டச் ஒ.எஸ். 14

    டூயல் சிம் ஸ்லாட்

    50MP பிரைமரி கேமரா, ஆம்னிவிஷன், OIS

    50MP அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா

    64MP டெலிபோட்டோ கேமரா

    16MP செல்ஃபி கேமரா

    இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்

    யு.எஸ்.பி. டைப் சி ஆடியோ

    ஸ்டீரியோ ஸ்பீக்கர், ஹை-ஃபை ஆடியோ

    5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, ப்ளூடூத் 5.4

    5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    120 வாட் அல்ட்ரா ஃபாஸ்ட் ஃபிளாஷ் சார்ஜிங்

    50 வாட் வயர்லெஸ் சார்ஜிங், ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங்

    • கூகுள் அக்கவுண்ட் மற்றும் அதன் தரவுகள் உள்ளிட்டவை அழிக்கப்பட்டு விடும்.
    • இந்த அக்கவுண்ட்கள் எளிதில் ஹேக் செய்யப்படலாம்.

    ஜிமெயில் சேவையை நீண்ட காலமாக பயன்படுத்தாமல் இருப்பவர்கள் தங்களின், அக்கவுண்ட்-ஐ இழக்கும் வாய்ப்புகள் அதிகரித்து இருக்கிறது. குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகளாக பயன்படுத்தாமல் இருக்கும் அக்கவுண்ட்களை செயலிழக்க செய்யும் நடவடிக்கையாக, டிசம்பர் 2023 மாதத்தில் லட்சக்கணக்கான ஜிமெயில் அக்கவுண்ட்கள் அழிக்கப்படும் அபாயம் எழுந்துள்ளது.

    இரண்டு ஆண்டுகள் வரை பயன்படுத்தாமல் இருக்கும் கூகுள் அக்கவுண்ட்களை, டிசம்பர் மாதத்தில் இருந்து அழிக்கும் வகையில், நடைமுறை மாற்றங்களை கூகுள் மேற்கொண்டு வருகிறது. அதன்படி பயன்படுத்தாமல் இருக்கும் கூகுள் அக்கவுண்ட், அதன் தரவுகள் கூகுள் வொர்க்ஸ்பேஸ்-இன் கீழ் உள்ள ஜிமெயில், டாக்ஸ், டிரைவ், மீட், காலண்டர் உள்ளிட்டவைகளும், கூகுள் போட்டோஸ் உள்ளிட்டவை அழிக்கப்பட்டு விடும் என்று கூகுள் நிறுவனத்தின் பிராடக்ட் மேனேஜ்மெண்ட் பிரிவு துணை தலைவர் ரூத் ரிச்செலி தெரிவித்துள்ளார்.

    "எங்களது மதிப்பீடுகளின் படி, தொடர்ந்து பயன்படுத்தும் அக்கவுண்ட்களுடன் ஒப்பிடும் போது பயன்படுத்தாமல் இருக்கும் அக்கவுண்ட்களில் டூ-ஸ்டெப் வெரிஃபிகேஷன் செயல்படுத்தப்பட்டு இருப்பதற்கான வாய்ப்புகள் 10 சதவீதத்திற்கும் குறைவு என தெரியவந்துள்ளது. இந்த அக்கவுண்ட்கள் எளிதில் ஹேக் செய்யப்படலாம். அதன்பிறகு, இதனை எந்த விதமான தீய செயல்களுக்கும் எளிதில் பயன்படுத்த முடியும்," என்று இது தொடர்பான வலைதள பதிவில் ரூத் ரிச்செலி குறிப்பிட்டுள்ளார்.

    இந்த நடவடிக்கையின் கீழ் ஜிமெயில் அக்கவுண்ட்-ஐ இரண்டு ஆண்டுகள் வரை திறக்காமல் இருக்கும் தனிப்பட்ட கூகுள் அக்கவுண்ட்கள் மட்டுமே பாதிக்கப்படும். இதன் காரணமாக நிர்வாகங்களான பள்ளி மற்றும் வியாபாரங்கள் பயன்படுத்தும் அக்கவுண்ட்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.

    கூகுள் அக்கவுண்ட்-ஐ பாதுகாப்பது எப்படி?

    கூகுள் அக்கவுண்ட் அழிக்கப்படுவதை தவிர்க்க, குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறையேனும் அதனை சைன்-இன் செய்ய வேண்டும். சமீபத்தில் ஏதேனும் கூகுள் சேவையை பயன்படுத்துவதற்கு கூகுள் அக்கவுண்ட்-ஐ பயன்படுத்தி இருந்தாலும், அக்கவுண்ட் ஆக்டிவ் நிலையில் இருப்பதாக கருத்தில் கொள்ளப்படும்.

    • இந்த மாடலில் மேம்பட்ட லுக், பெரிய ஸ்கிரீன் வழங்கப்படலாம்.
    • ஐபோன் SE 4 எடை 6 கிராம்கள் வரை குறைவாக இருக்கும்.

    ஆப்பிள் நிறுவனம் 2020 ஆண்டில் தனது ஐபோன் SE சீரிசை அறிமுகம் செய்தது. பிறகு இதன் மேம்பட்ட வெர்ஷனாக ஐபோன் SE 3 கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், இந்த ஆண்டு ஐபோன் SE மாடல் எதுவும் அறிமுகம் செய்யப்படவில்லை. எனினும், புதிய ஐபோன் SE மாடல் பற்றிய தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.

    அந்த வகையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் ஐபோன் SE 4 டிசைன் ஐபோன் 14-ஐ தழுவி உருவாக்கப்பட்டு இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும், புதிய ஐபோன் SE 4 அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த மாடலாக அமையும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. ஐபோன் 14 சார்ந்த டிசைன் கொண்டிருக்கும் பட்சத்தில் இந்த மாடலில் மேம்பட்ட லுக், பெரிய ஸ்கிரீன் வழங்கப்படலாம்.

    கோப்புப் படம் 

    கோப்புப் படம் 

    அதன்படி ஐபோன் SE 4 மாடலில் ஃபிளாட் எட்ஜ் இன்றி, ஐபோன் 14-ஐ விட அளவில் சற்றே குறைந்திருக்கும் என்று தெரிகிறது. இத்துடன் டச் ஐ.டி. பட்டன் ஒன்றும் ஐபோன் SE 4 மாடலில் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இதுதவிர யு.எஸ்.பி. சி போர்ட் மற்றும் ஆக்ஷன் பட்டன் வழங்கப்படுகிறது. இவை இரண்டும் ஐபோன் 15 ப்ரோ மாடல்களில் அறிமுகம் செய்யப்பட்டவை ஆகும்.

    ஐபோன் 14-ஐ விட ஐபோன் SE 4 எடை 6 கிராம்கள் வரை குறைவாக இருக்கும் என்று தெரிகிறது. ஐபோன் SE 4 எடை 172 கிராம்களாக இருக்கும் என்று கூறப்படுகிறது. ஐபோன் SE 4 மாடலில் ஒற்றை கேமரா செட்டப் வழங்கப்படுவதே இதற்கு காரணம் என்று தெரிகிறது. ஐபோன் 14 மாடலில் டூயல் கேமரா சென்சார்கள் வழங்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் சந்தையில் சாம்சங் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
    • மடிக்கக்கூடிய சாதனங்களின் விலை அதிகமாகவே நிர்ணயம் செய்யப்பட்டு வருகின்றன.

    மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் சந்தையில் களமிறங்கிய முதல் முன்னணி நிறுவனங்களில் ஒன்று சாம்சங். தென் கொரியாவை சேர்ந்த சாம்சங் நிறுவனம் இதுவரை ஐந்து தலைமுறை கேலக்ஸி Z ஃபோல்டு ஃபிளாக்ஷிப் மாடல்களை அறிமுகம் செய்து இருக்கிறது. அந்த வகையில் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் சந்தையில் சாம்சங் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

    இதுவரை சாம்சங் அறிமுகம் செய்திருக்கும் மடிக்கக்கூடிய சாதனங்களின் விலை அதிகமாகவே நிர்ணயம் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில், அடுத்த ஆண்டு முதல் சாம்சங் நிறுவனம் சற்றே குறைந்த விலையில் மடிக்கக்கூடிய சாதனங்களை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

    இதேபோன்று சாம்சங் மட்டுமின்றி ஹூவாய் நிறுவனமும் குறைந்த விலையில் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. டிரென்ட்ஃபோர்ஸ் வெளியிட்டு இருக்கும் தகவல்களின் படி சாம்சங் மற்றும் ஹூவாய் நிறுவனங்கள் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை மிட்-ரேன்ஜ் பிரிவில் அறிமுகம் செய்யலாம் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    முன்னதாக வெளியான தகவல்களில் சாம்சங் நிறுவனம் தனது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களின் ஃபேன் எடிஷனை அறிமுகம் செய்ய திட்டமிடுவதாக கூறப்பட்டது. கேலக்ஸி Z ஃபோல்டு 6 மற்றும் கேலக்ஸி Z ஃப்ளிப் 6 மாடல்களின் ஃபேன் எடிஷன் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது.

    • ஐபோன் 14 மாடலில் 6.1 இன்ச் சூப்பர் ரெட்டினா XDR டிஸ்ப்ளே உள்ளது.
    • ஐபோன் 14 ஏ15 பயோனிக் சிப்செட், 5-கோர் ஜி.பி.யு. கொண்டுள்ளது.

    ஆப்பிள் நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த ஐபோன் 14 மாடலின் அம்சங்கள், ஐபோன் 13-க்கு இணையாகவே இருந்ததால் அதிக கவனம் பெறவில்லை. பலரும் இரு மாடல்களிலும் ஒரே மாதிரியான அம்சங்கள் இருப்பதால், வாங்க வேண்டுமா என்ற நிலையில் இருந்தனர். தற்போது ஐபோன் 14 மாடலுக்கு அச்த்தலான தீபாவளி சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    ப்ளிப்கார்ட் தீபாவளி விற்பனையின் அங்கமாக ஐபோன் 14 மாடலுக்கு அதிகபட்சம் ரூ. 43 ஆயிரத்து 500 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஆப்பிள் வலைதளத்தில் ஐபோன் 14 விலை தற்போது ரூ. 69 ஆயிரத்து 900 என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. ஆனாலும், ப்ளிப்கார்ட் தளத்தில் இதன் விலை ரூ. 57 ஆயிரத்து 999 என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    இது ஆப்பிள் வலைதள விலையை விட ரூ. 11 ஆயிரத்து 901 வரை குறைவு ஆகும். இதுதவிர எஸ்.பி.ஐ. வங்கி கிரெடிட் கார்டு பயன்படுத்தும் போது ரூ. 1500 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இத்துடன் பழைய ஸ்மார்ட்போன் எக்சேன்ஜ் செய்யும் போது ரூ. 42 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதன்படி அனைத்து சலுகைகளையும் முழுமையாக பெறும் போது ஐபோன் 14-ஐ ரூ. 14 ஆயிரத்து 499-க்கு விலையில் வாங்கிட முடியும்.

    அம்சங்களை பொருத்தவரை ஐபோன் 14 மாடலில் 6.1 இன்ச் சூப்பர் ரெட்டினா XDR டிஸ்ப்ளே, ஏ15 பயோனிக் சிப்செட், 5-கோர் ஜி.பி.யு., ஃபேஸ் ஐ.டி. 12MP டூயல் பிரைமரி கேமரா, 12MP செல்ஃபி கேமரா சென்சார்கள் வழங்கப்படுகிறது. ஐபோன் 13 மாடலிலும் இதேபோன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • புதிய மாடல் ரெட்மி 12C ஸ்மார்ட்போனின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும்.
    • புதிய ரெட்மி ஸ்மார்ட்போன் அமேசானில் பட்டியலிடப்பட்டு இருக்கிறது.

    சியோமி நிறுவனத்தின் முற்றிலும் புதிய ரெட்மி 13C 4ஜி ஸ்மார்ட்போன் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. சமீபத்தில் தான் இந்த ஸ்மார்ட்போனின் வெளியீட்டை அந்நிறுவனம் உறுதிப்படுத்தியது. மேலும் இதன் டிசைன் மற்றும் எந்தெந்த நிறங்களில் கிடைக்கும் என்ற தகவல்களும் வெளியாகி இருந்தது.

    கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி 12C ஸ்மார்ட்போனின் மேம்பட்ட வெர்ஷனாக புதிய ரெட்மி ஸ்மார்ட்போன் அறிமுகமாகிறது. மேலும் இதன் அம்சங்கள் முந்தைய வெர்ஷனில் இருந்ததை விட மேம்பட்டு இருக்கும் என்று தெரிகிறது. ரெட்மி 13C வெளியீட்டு தேதி குறித்து சியோமி நிறுவனம் இதுவரை எந்த தகவலும் வழங்கவில்லை.

    இந்த நிலையில், ரெட்மி 13C ஸ்மார்ட்போன் அமேசான் வலைதளத்தில் பட்டியலிடப்பட்டு இருக்கிறது. மேலும் ஸ்மார்ட்போனின் முழு சிறப்பம்சங்கள் மற்றும் விலை என அனைத்து விவரங்களும் இடம்பெற்று இருக்கிறது. அமேசான் வலைதள விவரங்களின் படி ரெட்மி 13C 4ஜி ஸ்மார்ட்போன் பிளாக் நிறத்தில் பட்டியலிடப்பட்டு உள்ளது.

    அம்சங்களை பொருத்தவரை இந்த மாடலில் 6.74 இன்ச் HD+ டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ ஜி99 பிராசஸர், ஆண்ட்ராய்டு 13 சார்ந்த MIUI 14, 4ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்படுகிறது. இத்துடன் 50MP பிரைமரி கேமரா, 2MP டெப்த் கேமரா, 5MP செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது.

    5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் ரெட்மி 13C 16 வாட் வயர்டு சார்ஜிங் வசதி, யு.எஸ்.பி. டைப் சி போர்ட் வழங்கப்படுகிறது. இத்துடன் 3.5mm ஆடியோ ஜாக், கைரேகை சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது. விலையை பொருத்தவரை ரெட்மி 13C மாடலின் 4 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை 140.54 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 11 ஆயிரத்து 700 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    • ஜி.டி.ஏ. 6 வெளியீடு பற்றிய தகவல்கள் இணையத்தில் லீக் ஆகி வந்தது.
    • ராக்ஸ்டார்-இன் 25-வது ஆண்டு விழா கொண்டாட்டம் அடுத்த மாதம் நடைபெறகிறது.

    ராக்ஸ்டார் கேம்ஸ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்டு வரும் ஜி.டி.ஏ. 6 (GTA 6) கேமின் டிரைலர் டிசம்பர் மாத துவக்கத்தில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. முன்னதாக இந்த கேம் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகி வந்தது குறிப்பிடத்தக்கது.

    இந்த தகவல்களை உண்மையாக்கும் வகையில், ராக்ஸ்டார் கேம்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் சாம் ஹௌசர், ராக்ஸ்டார்-இன் 25-வது ஆண்டு விழா கொண்டாட்டம் அடுத்த மாதம் நடைபெற இருப்பதாக தெரிவித்தார். மேலும் இத்தனை ஆண்டுகளாக ரசிகர்கள் வழங்கி வரும் தொடர்ச்சியான ஆதரவுக்கு அவர் தனது நன்றியை தெரிவித்தார்.

     

    கோப்புப் படம் 

    கோப்புப் படம் 

    2013-ம் ஆண்டு ஜி.டி.ஏ. 5 வெளியிடப்பட்டது. இதுவரை ஜி.டி.ஏ. 5 கேம் 190 மில்லியன் யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளன. இதில் 5 மில்லியன் யூனிட்கள் 2023 ஆண்டின் நான்காவது காலாண்டில் விற்பனையாகி இருக்கிறது. அடுத்தடுத்த தலைமுறைக்கு ஏற்ப தொடர்ச்சியான அப்டேட்கள் வழங்கியதே இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. மேலும் ஜி.டி.ஏ. கேமின் ஆன்லைன் பிரிவுக்கு இன்றும் நல்ல வரவேற்பு உள்ளது.

    "டிசம்பர் மாத துவக்கத்தில், நாங்கள் அடுத்த கிராண்ட் தெஃப்ட் ஆட்டோ கேமிற்கான முதல் டிரைலரை வெளியிட இருப்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இதுபோன்ற அனுபவத்தை பல ஆண்டுகளாக உங்களுடன் பகிர்ந்து கொள்ள நாங்கள் விரும்புகிறோம்," என்று சாம் ஹௌசர் தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

    கடந்த சில ஆண்டுகளாக ஜி.டி.ஏ. 6 வெளியீடு பற்றிய தகவல்கள் இணையத்தில் லீக் ஆகி வந்தது. மேலும் இந்த கேம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பில் கேமிங் ரசிகர்களும் ஆவலோடு காத்திருக்கின்றனர். அந்த வரிசையில், இந்த கேமிற்கான டிரைலர் வெளியீட்டு தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருப்பது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

    • இந்திய சந்தையில் இத்தகைய வசதி கொண்ட முதல் ஸ்மார்ட் ரிங் இது ஆகும்.
    • புதிய ஸ்மார்ட் ரிங் ப்ளூடூத் தொழில்நுட்பம் இன்றி செயல்படுகிறது.

    போட் மற்றும் நாய்ஸ் பிரான்டுகளை தொடர்ந்து செவன் எனும் நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட் ரிங் சாதனத்தை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ஸ்மார்ட் ரிங் கான்டாக்ட்லெஸ் பேமன்ட் செய்யும் வசதியை வழங்குகிறது.

    செவன் நிறுவனத்தின் புதிய 7 ரிங்-ஐ மெல்ல தட்டினாலே பேமண்ட் செய்ய முடியும். இந்த ஸ்மார்ட் ரிங் அதிநவீன என்.எஃப்.சி. (NFC) தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது. மேலும் இதில் டஸ்ட் மற்றும் வாட்டர் ப்ரூஃப் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. அனைவருக்கும் கச்சிதமாக பொருந்தும் வகையில், இந்த ஸ்மார்ட் ரிங் ஏழுவித அளவுகளில் கிடைக்கிறது.

    ஸ்மார்ட் ரிங் சார்ந்த அம்சங்களை இயக்குவதற்காக பிரத்யேக செயலி (ஆப்) ஒன்றும் வழங்கப்படுகிறது. இது பரிமாற்றங்களை பாதுகாப்பாகவும், மிகவும் எளிமையாகவும் மாற்றுகிறது.

     

    பயன்படுத்துவது எப்படி?

    புதிய 7 ரிங் என்.எஃப்.சி. தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சர்வதேச பேமன்ட் வழிமுறைகளில் பணப்பரிமாற்றம் செய்கிறது. இதற்காக முதலில் ஸ்மார்ட் ரிங்-ஐ செட்டப் செய்ய வேண்டும். பிறகு அதை பயன்படுத்த, பயனரின் வங்கி கணக்கில் இருந்து கணிசமான தொகையை அதில் பரிமாற்றம் செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு பிரீபெயிட் வாலெட்டில் சேர்க்கப்பட்ட தொகையை, முதற்கட்ட வெரிஃபிகேஷன் நிறைவுற்ற பிறகு செலவு செய்ய முடியும். ஆனாலும், இதற்கான வரம்பு மாதத்திற்கு ரூ. 10 ஆயிரம் என்று நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

    வீடியோ கே.ஒய்.சி. (KYC) வழிமுறையை நிறைவு செய்த பிறகு அதிகபட்சம் ரூ. 2 லட்சம் வரையிலான தொகையை ஸ்மார்ட் ரிங் வாலெட்டில் சேமித்துக் கொள்ளலாம். இத்துடன் வழங்கப்படும் செயலியை கொண்டு பரிமாற்றங்களை சரிபார்க்கவும், எவ்வளவு செலவு செய்ய வேண்டும் என்பதை கட்டுப்படுத்தவும், தொலைந்து போன ரிங்-ஐ பிளாக் செய்யவும் முடியும்.

     

    ஸ்மார்ட் ரிங் மூலம் பணம் செலுத்துவதற்கு பேமன்ட் இயந்திரத்தின் அருகில் ரிங் அணிந்திருக்கும் கையை கொண்டுவர வேண்டும். இவ்வாறு செய்யும் போது பாதுகாப்பிற்காக கைவிரல்களை மூடியிருக்க வேண்டும். கைவிரல் நீண்டிருந்தால், பணம் அனுப்ப முடியாது. பேமன்ட் இயந்திரம் ரிங்-க்கு சக்தியூட்டும். இதனால் அதனை சார்ஜ் செய்ய வேண்டாம். மேலும் இது ப்ளூடூத் தொழில்நுட்பத்தை பயன்படுத்தவில்லை.

    இந்த ஸ்மார்ட் ரிங் கொண்டு இந்தியாவில் உள்ள யு.பி.ஐ. (UPI) மூலம் பணப்பரிமாற்றங்களை மேற்கொள்ள முடியும். இது ஆன்லைன் பேமன்ட் மற்றும் இந்தியாவுக்கு வெளியில் பேமன்ட் சேவைகளை சப்போர்ட் செய்யாது.

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    செவன் நிறுவனம் தனது புதிய 7 ஸ்மார்ட் ரிங் விலையை ரூ. 7 ஆயிரம் என்று நிர்ணயம் செய்து இருக்கிறது. அறிமுக சலுகையாக பயனர்கள் இதனை ரூ. 4 ஆயிரத்து 777 விலையிலேயே வாங்கிட முடியும். 7 ரிங் வேலிடிட்டி 55 மாதங்கள் ஆகும். இதற்கான வாரண்டி ஒரு வருடம் ஆகும். ஏற்கனவே 7 ரிங் வைத்திருக்கும் பயனர்கள் வழங்கும் இன்வைட் மூலமாக இதனை வாங்கிட முடியும்.

    • புதிய ரெட்மி ஸ்மார்ட்போன் இருவித மெமரி ஆப்ஷன்களில் உருவாகி இருக்கிறது.
    • ரெட்மி 13C ஸ்மார்ட்போன் நான்கு நிறங்களில் கிடைக்கும் என்று கூறப்பட்டது.

    சியோமி நிறுவனத்தின் புதிய ரெட்மி 13C ஸ்மார்ட்போன் அடுத்த சில நாட்களில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெளியீட்டுக்கு முன் இந்த ஸ்மார்ட்போன் அமேசான் வலைதளத்தில் பட்டியலிடப்பட்டு உள்ளது. இதில் புதிய ஸ்மார்ட்போனின் விலை, ரெண்டர்கள் மற்றும் அம்சங்கள் இடம்பெற்று இருக்கின்றன.

    அமேசான் வலைதள விவரங்களின் படி ரெட்மி 13C ஸ்மார்ட்போன் 4 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி, 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி என இருவித வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவற்றின் விலை 130 யூரோக்கள் மற்றும் 150 யூரோக்கள் என்று நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் மிட்நைட் பிளாக் மற்றும் நேவி புளூ என இரண்டு நிறங்களில் உருவாகி இருக்கிறது.

    சமீபத்தில் வெளியான தகவல்களில் புதிய ரெட்மி 13C ஸ்மார்ட்போன் பிளாக், புளூ, லைட் கிரீன் மற்றும் லைட் புளூ என நான்குவிதமான நிறங்களில் கிடைக்கும் என்று கூறப்பட்டது.

    ரெட்மி 13C எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:

    6.74 இன்ச் LCD ஸ்கிரீன், 720x1600 பிக்சல் HD+ ரெசல்யூஷன், 90Hz ரிப்ரெஷ் ரேட்

    மீடியாடெக் ஹீலியோ G85 பிராசஸர்

    அதிகபட்சம் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி

    பக்கவாட்டில் கைரேகை சென்சார்

    ஆண்ட்ராய்டு 13 சார்ந்த MIUI 14

    50MP பிரைமரி கேமர

    2MP டெப்த் மற்றும் மேக்ரோ லென்ஸ்

    8MP செல்ஃபி கேமரா

    4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1

    யு.எஸ்.பி. சி போர்ட்

    3.5mm ஆடியோ ஜாக்

    புதிய ரெட்மி 13C ஸ்மார்ட்போன் சமீபத்தில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட போக்கோ C65 மாடலின் ரிபிராண்டெட் வெர்ஷன் ஆகும்.

    • ஒப்போ ரெனோ ஸ்மார்ட்போனிற்கு 50 சதவீதம் வரை தள்ளுபடி அறிவிப்பு.
    • தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டு பயன்படுத்தினால் 10 சதவீதம் கூடுதல் தள்ளுபடி.

    ஒப்போ நிறுவனம் பிப்ரவரி மாத வாக்கில் இந்திய சந்தையில் தனது ரெனோ 8T ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. இது 120Hz டிஸ்ப்ளே, 67 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் ஸ்னாப்டிராகன் 695 5ஜி சிப்செட் கொண்ட முதல் ஸ்மார்ட்போன் ஆகும். தற்போது இந்த ஸ்மார்ட்போனிற்கு தற்போது 50 சதவீதம் வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    க்ரோமா வலைதளத்தில் ஒப்போ ரெனோ 8T ஸ்மார்ட்போனிற்கு 67.27 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. ரூ. 38 ஆயிரத்து 999 விலையில் அறிமுகமான ஒப்போ ரெனோ 8T ஸ்மார்ட்போன் ஆன்லைனில் ரூ. 29 ஆயிரத்து 999 விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது இந்த ஸ்மார்ட்போன் ரூ. 12 ஆயிரத்து 765 விலையில் கிடைக்கிறது.

     

    இந்த விலை தவிர ஐ.டி.எஃப்.சி. வங்கி கிரெடிட் கார்டு பயன்படுத்தும் போது 10 சதவீதம் வரை கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஒப்போ ரெனோ 8T ஸ்மார்ட்போன் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரியுடன் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் சன்ரைஸ் கோல்டு மற்றும் மிட்நைட் பிளாக் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.

    ஒப்போ ரெனோ 8T அம்சங்கள்:

    6.7 இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட்

    குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 பிராசஸர்

    8 ஜி.பி. ரேம்

    128 ஜி.பி. மெமரி

    108MP பிரைமரி கேமரா

    2MP டெப்த் கேமரா

    2MP ஜூம் கேமரா

    32MP செல்ஃபி கேமரா

    ஆண்ட்ராய்டு 13 சார்ந்த கலர் ஒ.எஸ். 13

    4800 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    67 வாட் சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங்

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பி.எஸ்.என்.எல். பிரீபெயிட் பயனர்களுக்கு கூடுதல் டேட்டா அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
    • தேர்வு செய்யப்பட்ட ரிசார்ஜ் சலுகைகளில் மட்டும் கூடுதல் டேட்டா வழங்கப்படுகிறது.

    பி.எஸ்.என்.எல். நிறுவனம் தீபாவளியை கொண்டாடும் வகையில், பயனர்களுக்கு சிறப்பு டேட்டா சலுகை வழங்கப்படுகிறது. அதன்படி ரூ. 251 ரிசார்ஜ் வவுச்சரில் பி.எஸ்.என்.எல். கூடுதல் டேட்டா வழங்குகிறது. இதுதவிர மற்ற ரிசார்ஜ் சலுகைகளிலும் கூடுதல் டேட்டா வழங்குகிறது.

    தீபாவளி பண்டிகையை ஒட்டி பயனர்கள் தங்களின் அன்புக்குரியவர்களுடன் இணைப்பில் இருக்கும் வகையில் பி.எஸ்.என்.எல். இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. புதிய அறிவிப்பின் படி பி.எஸ்.என்.எல். ரூ. 251, ரூ. 299 மற்றும் ரூ. 398 போன்ற ரிசார்ஜ் சலுகைகளில் பயனர்களுக்கு கூடுதல் டேட்டா வழங்கப்படுகிறது. இது தொடர்பான அறிவிப்பை பி.எஸ்.என்.எல். தனது எக்ஸ் பதிவில் வெளியிட்டு உள்ளது.

     

    பி.எஸ்.என்.எல். ரூ. 251 ரிசார்ஜ் செய்யும் போது கூடுதலாக 3 ஜி.பி. வரையிலான டேட்டா வழங்கப்படுகிறது. இது ஏற்கனவே உள்ள 70 ஜி.பி. டேட்டா தீர்ந்த பிறகு பயன்படுத்திக் கொள்ளும் வகையில் வழங்கப்படும். இந்த சலுகையின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். வேலிடிட்டி முடிந்த பிறகு, கூடுதல் டேட்டா காலாவதியாகிவிடும். ரூ. 299 ரிசார்ஜ் செய்வோருக்கும் 3 ஜி.பி. வரை கூடுதல் டேட்டா வழங்கப்படுகிறது.

     

    இதனை பி.எஸ்.என்.எல். செல்ஃப்-கேர் செயலி மூலம் அன்லாக் செய்துகொள்ளலாம். பி.எஸ்.என்.எல். ரூ. 299 சலுகையில் தினமும் 3 ஜி.பி. டேட்டா, தினமும் 100 எஸ்.எம்.எஸ். மற்றும் அன்லிமிடெட் அழைப்புகள் வழங்கப்படுகிறது. இந்த சலுகையின் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும். இதேபோன்று பி.எஸ்.என்.எல். ரூ. 398 வவுச்சரிலும் கூடுதலாக 3 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது.

    இந்த சலுகையில் அன்லிமிடெட் அழைப்புகள், வேலிடிட்டி முடியும் வரை 120 ஜி.பி. டேட்டா, தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்ட பலன்கள் வழங்கப்படுகிறது. இந்த சலுகையின் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும். பி.எஸ்.என்.எல். செல்ஃப்-கேர் செயலி ஆப் ஸ்டோர் மற்றும் பிளே ஸ்டோரில் டவுன்லோட் செய்ய கிடைக்கிறது.

    ×