என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    • ஒன்பிளஸ் ஓபன் ஸ்மார்ட்போன் இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.
    • ஒன்பிளஸ் ஓபன் மாடலில் 6.3 இன்ச் FHD+ OLED ஸ்கிரீன் வழங்கப்பட்டு இருக்கிறது.

    ஒன்பிளஸ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஒன்பிளஸ் ஓபன் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் 7.82 இன்ச் மடிக்கக்கூடிய 2K OLED ஸ்கிரீன், 2800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 6.3 இன்ச் FHD+ OLED ஸ்கிரீன் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்த ஸ்மார்ட்போன் கோபால்ட் மோலிடெனம் அலாய் மற்றும் டைட்டானியம் அலாய் மூலம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதில் உள்ள ஹின்ஜ் சிர்கோனியம் சார்ந்த அமார்ஃபியஸ் அலாய் மூலம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இது ஸ்கிராட்ச் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கிறது.

     

    ஒன்பிளஸ் ஓபன் அம்சங்கள்:

    7.82 இன்ச் 2440x2268 பிக்சல் 2K AMOLED டிஸ்ப்ளே

    6.31 இன்ச் 2484x1116 பிக்சல் FHD+ AMOLED டிஸ்ப்ளே

    ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர்

    அட்ரினோ 740 GPU

    16 ஜி.பி. LPDDR5X ரேம், 512 ஜி.பி. UFS 4.0 மெமரி

    ஆண்ட்ராய்டு 13 சார்ந்த கலர் ஒ.எஸ். 13.2

    டூயல் சிம் ஸ்லாட்

    48MP பிரைமரி கேமரா, OIS

    48MP அல்ட்ரா வைடு கேமரா

    64MP டெலிஃபோட்டோ கேமரா

    32MP கவர் ஸ்கிரீன் கேமரா

    20MP செல்ஃபி கேமரா

    யு.எஸ்.பி. டைப் சி ஆடியோ

    பக்கவாட்டில் கைரேகை சென்சார்

    ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட்

    5ஜி, 4ஜி எல்.டி.இ., வைபை, ப்ளூடூத் 5.3

    4085 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    67 வாட் சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங்

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    ஒன்பிளஸ் ஓபன் ஸ்மார்ட்போன் எமரால்டு டஸ்க் மற்றும் வாயேஜர் பிளாக் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ. 1 லட்சத்து 39 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    • பிக்சல் பிராண்டிங்கில் முதல் ஸ்மார்ட்போன் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்டது.
    • முதற்கட்டமாக பிக்சல் 8 மாடல் இந்திய சந்தையில் உற்பத்தி செய்யப்பட உள்ளது.

    கூகுள் நிறுவனம் தனது பிக்சல் ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் உற்பத்தி செய்ய இருப்பதாக அறிவித்து இருக்கிறது. அதன்படி பிக்சல் 8 சீரிஸ் மாடல்கள் இந்தியாவில் முதற்கட்டமாக உற்பத்தி செய்யப்பட உள்ளன. இந்தியாவில் உற்பத்தியாகும் பிக்சல் 8 யூனிட்கள் அடுத்த ஆண்டு விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது.

    இம்மாத துவக்கத்தில் கூகுள் நிறுவனம் பிக்சல் 8 சீரிஸ் மாடல்கள் இந்தியா உள்பட சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய பிக்சல் 8 சீரிஸ் மாடல்களில் கூகுள் நிறுவனத்தின் டென்சார் G3 சிப் மற்றும் டைட்டன் M2 செக்யுரிட்டி சிப் வழங்கப்படுகிறது. இத்துடன் இரட்டை பிரைமரி கேமரா சென்சார்கள் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன்கள் 72 மணி நேரத்திற்கான பேட்டரி பேக்கப் வழங்குகின்றன.

    பிக்சல் பிராண்டிங்கில் முதல் ஸ்மார்ட்போன் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில், கூகுள் ஃபார் இந்தியா 2023 நிகழ்வில் கூகுள் நிறுவனம் இந்தியாவில் பிக்சல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்து இருக்கிறது. முதற்கட்டமாக பிக்சல் 8 மாடல் இந்திய சந்தையில் உற்பத்தி செய்யப்பட உள்ளது.

    ஏற்கனவே சாம்சங் மற்றும் ஆப்பிள் போன்ற நிறுவனங்கள் இந்தியாவில் தங்களின் ஸ்மார்ட்போன் யூனிட்களை உற்பத்தி செய்து வரும் நிலையில், கூகுள் நிறுவனம் இந்தியாவில் ஸ்மார்ட்போன் உற்பத்தி செய்யும் புதிய நிறுவனமாக இணைய இருக்கிறது.

    இந்திய உற்பத்தி காரணமாக பிக்சல் ஸ்மார்ட்போன் விலை இந்திய சந்தையில் குறைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. எனினும், இது பற்றி தற்போதைக்கு எந்த தகவலும் வெளியாகவில்லை.

    • ஒப்போ ஃபைண்ட் N3 மாடல் இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.
    • இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 13 சார்ந்த கலர் ஒ.எஸ். 13.2 கொண்டிருக்கிறது.

    ஒப்போ நிறுவனம் தனது புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்- ஃபைண்ட் N3 மாடலை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்தது. இந்த மாடலில் 7.82 இன்ச் மடிக்கக்கூடிய 2K OLED ஸ்கிரீன், 2800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 6.3 இன்ச் FHD+ OLED ஸ்கிரீன் வழங்கப்பட்டு இருக்கிறது.

    புதிய ஃபைண்ட் N3 மாடலில் உள்ள ஹின்ஜ் பகுதியில் மூன்றில் ஒரு பங்கு பாகங்கள் குறைக்கப்பட்டு உள்ளது. இதற்கு மாற்றாக அதிக உறுதியான ஸ்டீல் மற்றும் இண்டகிரேட் செய்யப்பட்ட சிர்கோனியம் அலாய் லிக்விட் மெட்டல் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இது ஹின்ஜ் எடையை பெருமளவு குறைத்து, அதிக உறுதியாக இருக்கிறது.

    இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 13 சார்ந்த கலர் ஒ.எஸ். 13.2 கொண்டிருக்கிறது. இத்துடன் மூன்று தலைமுறை ஆண்ட்ராய்டு ஒ.எஸ். அப்கிரேடுகளும், நான்கு ஆண்டுகளுக்கு செக்யூரிட்டி அப்டேட்களும் வழங்கப்படும் என்று ஒப்போ நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. இதில் உள்ள ஆப்டிமைஸ் செய்யப்பட்ட கலர் ஒ.எஸ். குளோபல் டாஸ்க்பார் கொண்டிருக்கிறது.

     

    ஒப்போ ஃபைண்ட் N3 அம்சங்கள்:

    7.82 இன்ச் 2440x2268 பிக்சல் 2K AMOLED டிஸ்ப்ளே

    6.31 இன்ச் 2484x1116 பிக்சல் FHD+ AMOLED டிஸ்ப்ளே

    ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர்

    அட்ரினோ 740 GPU

    16 ஜி.பி. LPDDR5X ரேம், 512 ஜி.பி. UFS 4.0 மெமரி

    ஆண்ட்ராய்டு 13 சார்ந்த கலர் ஒ.எஸ். 13.2

    டூயல் சிம் ஸ்லாட்

    48MP பிரைமரி கேமரா, OIS

    48MP அல்ட்ரா வைடு கேமரா

    64MP டெலிஃபோட்டோ கேமரா

    32MP கவர் ஸ்கிரீன் கேமரா

    20MP செல்ஃபி கேமரா

    யு.எஸ்.பி. டைப் சி ஆடியோ

    பக்கவாட்டில் கைரேகை சென்சார்

    5ஜி, 4ஜி, வைபை, ப்ளூடூத் 5.3

    4085 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    67 வாட் சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங்

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    ஒப்போ ஃபைண்ட் N3 மாடல் கிளாசிக் பிளாக் மற்றும் ஷேம்பெயின் கோல்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 2 ஆயிரத்து 399 SGD, இந்திய மதிப்பில் ரூ. 1 லட்சத்து 45 ஆயிரத்து 395 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    • புதிய சந்தா முறை விரைவில் நியூசிலாந்து மற்றும் பிலிப்பைன்ஸ்-இல் துவங்கப்பட இருக்கிறது.
    • எக்ஸ் அக்கவுண்ட் செட்டப் செய்வதற்கு மொபைல் போன் வெரிஃபிகேஷன் செய்ய வேண்டும்.

    எக்ஸ் வலைதளத்தில் இருந்துவரும் பாட்/ஸ்பேம் (Bot/Spam) பிரச்சினையை எதிர்கொள்ள புதிதாக சந்தா முறை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. புதிய சந்தா முறை நாட்-எ-பாட் (Not-A-Bot) என்று அழைக்கப்படுகிறது. புதிய சந்தா திட்டத்தின் கீழ் பயனர்கள் வருடத்திற்கு ஒரு முறை 1 டாலர் கட்டணம் செலுத்த வேண்டியது அவசியம் ஆகும்.

    புதிய சந்தா முறை விரைவில் நியூசிலாந்து மற்றும் பிலிப்பைன்ஸ்-இல் துவங்கப்பட இருக்கிறது. இதைத் தொடர்ந்து மற்ற பகுதிகளிலும் இந்த சந்தா முறை கொண்டுவரப்பட இருக்கிறது. புதிய சந்தா திட்டம், ஏற்கனவே உள்ள எக்ஸ் பயனர்களை எந்த விதத்திலும் பாதிக்காது.

    அதன்படி புதிதாக எக்ஸ் அக்கவுண்ட் செட்டப் செய்வதற்கு மொபைல் போன் வெரிஃபிகேஷன் செய்ய வேண்டியது அவசியம் ஆகும். இதைத் தொடர்ந்து சந்தா திட்டத்திற்கு கட்டணம் செலுத்த வேண்டும். வெப் வெர்ஷனில் பயனர்கள் பதிவுகளை மேற்கொள்ளவும், பதில் அளிப்பது, புக்மார்க் உள்ளிட்டவைகளை மேற்கொள்ளலாம்.

    • ஐபேட் உடன் இணைத்ததும் ஆப்பிள் பென்சில் ஸ்லீப் நிலைக்கு சென்றுவிடும்.
    • புதிய ஆப்பிள் பென்சில் ஐபேட் ஓ.எஸ். அம்சங்கள் அனைத்திற்கும் சப்போர்ட் செய்கிறது.

    ஐபேட் பயனர்களுக்கு அதிக விருப்பங்களை வழங்கும் நோக்கில் ஆப்பிள் நிறுவனம் முற்றிலும் புதிய மற்றும் சற்றே குறைந்த விலை ஆப்பிள் பென்சில் (யு.எஸ்.பி. சி) மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த ஸ்டைலஸ்-இல் பிக்சல் பெர்ஃபெக்ட் அக்யூரசி, லோ லேடன்சி மற்றும் டில்ட் சென்சிடிவிட்டி போன்ற வசதிகள் உள்ளன.

    புதிய ஆப்பிள் பென்சில் மாடலில் மிக மெல்லிய வடிவமைப்பு, மேட் ஃபினிஷ் மற்றும் மேக்னடிக் ஃபிளாட் சைட் உள்ளது. இதை கொண்டு பென்சிலை ஐபேட்-இன் பக்கவாட்டில் கச்சிதமாக வைத்துக் கொள்ள முடியும். இதில் உள்ள யு.எஸ்.பி. சி போர்ட் ஐபேட் உடன் இணைந்து கொண்டு யு.எஸ்.பி. சி கேபிள் மூலம் சார்ஜ் ஆகும்.

     

    பேட்டரியை சேமிக்கும் நோக்கில், இதனை ஐபேட் உடன் இணைத்ததும் ஆப்பிள் பென்சில் ஸ்லீப் நிலைக்கு சென்றுவிடும். இந்த மாடலில் பிரெஷர் சென்சிடிவிட்டி அம்சம் வழங்கப்படவில்லை. புதிய ஆப்பிள் பென்சில் ஐபேட் ஓ.எஸ். அம்சங்கள் அனைத்திற்கும் முழுமையாக சப்போர்ட் செய்கிறது. இந்த மாடல் யு.எஸ்.பி. சி போர்ட் கொண்ட ஐபேட் மாடல்கள் அனைத்திலும் பயன்படுத்த முடியும்.

    இந்திய சந்தையில் புதிய ஆப்பிள் பென்சில் யு.எஸ்.பி. சி மாடலின் விலை ரூ. 7 ஆயிரத்து 900 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை அடுத்த மாத துவக்கத்தில் துவங்கும் என்று தெரிகிறது. கல்லூரி மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள் இந்த மாடலை ரூ. 6 ஆயிரத்து 900 விலையிலேயே வாங்கிட முடியும்.

    • புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனில் செயலிகள் பிரீ-இன்ஸ்டால் செய்யப்படுகிறது.
    • இதன் ரேம் மற்றும் ஸ்டோரேஜ் விவரங்களை டிப்ஸ்டர் வெளியிட்டுள்ளார்.

    ஒன்பிளஸ் நிறுவனத்தின் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் ஒன்பிளஸ் ஓபன் எனும் பெயரில் நாளை (அக்டோபர் 19) நடைபெற இருக்கும் நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் ஹார்டுவேர் அம்சங்கள் கிட்டத்தட்ட ஒப்போ ஃபைண்ட் N3 மாடலில் இருப்பதை போன்றே வழங்கப்படும் என்று தெரிகிறது. இந்த ஸ்மார்ட்போனும் அக்டோபர் 19-ம் தேதியே அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

    புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனில் செயலிகள் பிரீ-இன்ஸ்டால் செய்யப்பட்டு இருக்கும் என்றும் ஒன்பிளஸ் நிறுவனம் ஏற்கனவே அறிவித்து இருந்தது. இந்த நிலையில், இந்த மடிக்கக்கூடிய சாதனத்தின் ரேம் மற்றும் ஸ்டோரேஜ் விவரங்களை டிப்ஸ்டர் ஒருவர் வெளியிட்டு இருக்கிறார். அதன்படி டிப்ஸ்டர் முகுல் ஷர்மா வெளியிட்டுள்ள தகவல்களின் படி ஒன்பிளஸ் ஓபன் மாடலில் 16 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

     

    முன்னதாக வெளியான தகவல்களில் ஒன்பிளஸ் ஓபன் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனில் அதிகபட்சம் 1 டி.பி. வரையிலான ஸ்டோரேஜ் வழங்கப்படும் என்று கூறப்பட்டது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் கிரீன் நிறத்தில் கிடைக்கும் என்றும் இது எமரால்டு டஸ்க் என்று அழைக்கப்படும் என்று கூறப்படுகிறது.

    எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:

    ஒன்பிளஸ் ஓபன் மாடலில் 7.8 இன்ச் மடிக்கக்கூடிய OLED டிஸ்ப்ளே, 6.31 இன்ச் வெளிப்புற OLED டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர், 16 ஜி.பி. வரையிலான ரேம், 256 ஜி.பி. மெமரி வழங்கப்படுகிறது. புகைப்படங்களை எடுக்க 48MP பிரைமரி கேமரா, 48MP அல்ட்ரா வைடு கேமரா, 64MP டெலிஃபோட்டோ கேமரா, ஹேசில்பிலாட் பிராண்டிங் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

    இதன் முன்புறத்தில் 32MP மற்றும் 20MP செல்ஃபி கேமரா சென்சார்கள் வழங்கப்படும் என்று தெரிகிறது. இத்துடன் ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ஆக்சிஜன் ஓ.எஸ். 13.1 வழங்கப்படுகிறது. ஒன்பிளஸ் ஓபன் மாடல் 4805 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் என்றும் 100 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

    இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ஒன்பிளஸ் ஓபன் மாடல் அக்டோபர் 19-ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது. இதன் விலை 1699 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 1 லட்சத்து 41 ஆயிரத்து 405 வரை நிர்ணயம் செய்யப்படலாம். இது சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி Z ஃபோல்டு 5 மாடலை விட சற்றே குறைந்த விலையில் கிடைக்கும் என்று தெரிகிறது.

    • குறைந்த விலை ஹெட்செட்-இல் விஷன் ப்ரோ மாடலின் விசேஷ அம்சம் நீக்கப்படலாம்.
    • ஐசைட் அம்சம் அணிந்திருப்பவருக்கு எந்த வகையிலும் பலன் அளிப்பதில்லை.

    ஆப்பிள் நிறுவனம் தனது விஷன் ப்ரோ மிக்சட் ரியாலிட்டி ஹெட்செட்-இன் குறைந்த விலை மாடலை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆப்பிள் வல்லுனரான மார்க் குர்மேன் வெளியிட்டு இருக்கும் தகவல்களில் புதிய ஹெட்செட் விலை 1500-இல் துவங்கி அதிகபட்சம் 2500 டாலர்களுக்குள் நிர்ணயம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    இத்தகைய குறைந்த விலையில், புதிய ஹெட்செட் உருவாக்கும் போது ஆப்பிள் நிறுவனம் ஹார்டுவேர் ரீதியில் சில அம்சங்களை வழங்காது என்று கூறப்படுகிறது. அதன்படி புதிய குறைந்த விலை ஹெட்செட்-இல் விஷன் ப்ரோ மாடலின் விசேஷமான ஐசைட் (EyeSight) எனும் அம்சம் நீக்கப்படும் என்று கூறப்படுகிறது.

     

    இந்த அம்சம் பயனர்கள் ஹெட்செட் அணிந்திருக்கும் போது, மற்றவர்களால் பயனரின் கண்களை பார்க்க செய்யும். ஐசைட் அம்சம் அணிந்திருப்பவருக்கு எந்த வகையிலும் பலன் அளிப்பதில்லை என்பதால், இதனை நீக்குவது சாதனத்தின் விலையை குறைக்க நல்ல வாய்ப்பாக இருக்கும்.

    முன்னதாக வெளியான தகவல்களில் விஷன் ப்ரோ மாடலில் வழங்கப்பட்டு இருந்த மேக் தர ஆப்பிள் சிலிகான் சிப்-க்கு மாற்றாக ஐபோன் சிப்செட் வழங்கப்படலாம் என்று கூறப்பட்டது. மேலும் பிரைமரி ஸ்கிரீனின் ரெசல்யூஷன் குறைக்கப்படலாம் என்று கூறப்பட்டது. அமெரிக்க சந்தையில் ஆப்பிள் விஷன் ப்ரோ விலை 3 ஆயிரத்து 500 டாலர்கள் வரை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    • இதன் டாப் எண்ட் 8 ஜி.பி. ரேம், 512 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 1 லட்சத்து 09 ஆயிரத்து 999 ஆகும்.
    • இந்த ஸ்மார்ட்போனினை மாத தவணை முறையிலும் வாங்கிட முடியும்.

    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி Z ஃப்ளிப் 5 மாடலின் புதிய நிற வேரியண்ட் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய நிறம் மஞ்சள் நிறத்தில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. முன்னதாக நடைபெற்ற கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வில் சாம்சங் தனது கிளாம்ஷெல் ரக ஃப்ளிப் போன் மாடலினை கிரீம், கிராஃபைட், மிண்ட் மற்றும் லாவெண்டர் என நான்கு நிறங்களில் அறிமுகம் செய்து இருந்தது.

    கேலக்ஸி Z ஃப்ளிப் 5 மாடலில் குவால்காம் நிறுவனத்தின் பிரத்யேக ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 ஃபார் கேலக்ஸி பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 3.4 இன்ச் சூப்பர் AMOLED கவர் டிஸ்ப்ளே, வாட்டர் ரெசிஸ்டண்ட் IPX8 சான்று, 3700 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.

     

    சாம்சங் கேலக்ஸி Z ஃப்ளிப் 5 மாடலின் எல்லோ நிற வேரியண்ட் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 99 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் டாப் எண்ட் மாடல் 8 ஜி.பி. ரேம், 512 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 1 லட்சத்து 09 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.

    இத்துடன் வங்கி சலுகைகளின் கீழ் ரூ. 7 ஆயிரம் வரை தள்ளுபடியும், ரூ. 7 ஆயிரம் வரை அப்கிரேடு போனஸ் வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனினை மாதம் ரூ. 3 ஆயிரத்து 379 என்ற மாத கட்டணத்தில் மாத தவணை முறையிலும் வாங்கிட முடியும்.

    • பயனர்களுக்கு ரூ. 10 ஆயிரம் வரையிலான கேஷ்பேக் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
    • ஆப்பிள் ஆன்லைன் ஸ்டோரில் தீபாவளி சலுகை வழங்கப்படுகிறது.

    ஆப்பிள் நிறுவனத்தின் சிறப்பு தீபாவளி விற்பனையின் கீழ் ஐபோன் 14, ஐபோன் 15, மேக்புக் ஏர் மற்றும் ஐபேட் மாடல்களுக்கு உடனடி கேஷ்பேக் வழங்கப்படுகிறது. ஐபோன், ஐபேட், மேக்புக் மற்றும் பல்வேறு சாதனங்களுக்கு ஆப்பிள் நிறுவனம் தீபாவளி சலுகையை அறிவித்து இருக்கிறது. புதிய சலுகைகள் ஹெச்.டி.எஃப்.சி. வங்கி கிரெடிட் கார்டு வைத்திருக்கும் பயனர்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது.

    தீபாவளி சலுகையின் கீழ் பயனர்களுக்கு ரூ. 10 ஆயிரம் வரையிலான கேஷ்பேக் தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஆப்பிள் பி.கே.சி. மற்றும் ஆப்பிள் சகெட் ரிடெயில் ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆன்லைன் ஸ்டோரில் தீபாவளி சலுகை வழங்கப்படுகிறது.

     

    ஆப்பிள் தீபாவளி சலுகைகள்:

    ஹெச்.டி.எஃப்.சி. வங்கி கிரெடிட் கார்டு கொண்டு தேர்வு செய்யப்பட்ட ஆப்பிள் சாதனங்களை வாங்கும் போது ரூ. 10 ஆயிரம் வரை உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. தேர்வு செய்யப்பட்ட வங்கிகளில், மூன்று அல்லது ஆறு மாதங்களுக்கு வட்டியில்லா மாத தவணை முறை வசதி வழங்கப்படுகிறது.

    அக்டோபர் 15-ம் தேதி துவங்கி நவம்பர் 14-ம் தேதி வரை ஆப்பிள் தீபாவளி சலுகை வழங்கப்படுகிறது. ஐபோன் 14, ஐபோன் 14 பிளஸ், ஏர்பாட்ஸ் ப்ரோ (2nd Gen) உள்ளிட்ட சாதனங்களுக்கு மட்டும் நவம்பர் 7-ம் தேதி வரை மட்டுமே தீபாவளி சலுகை வழங்கப்படுகிறது.

    ஐபோன் 15 ப்ரோ மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் மாடல்களுக்கு ரூ. 6 ஆயிரம் வரை உடனடி கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இதன் மூலம் ஐபோன் 15 ப்ரோ மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 34 ஆயிரத்து 900 என்று துவங்குகிறது. ஐபோன் 15 மற்றும் ஐபோன் 15 பிளஸ் மாடல்களுக்கு ரூ. 5 ஆயிரம் கேஷ்பேக் வழங்கப்படுகிறது. ஐபோன் 15 மாடலின் விலை ரூ. 79 ஆயிரத்து 900 என்று துவங்குகிறது.

    ஐபோன் 14 மற்றும் ஐபோன் 14 பிளஸ் மாடல்களுக்கு ரூ. 4 ஆயிரம் வரை உடனடி கேஷ்பேக் வழங்கப்படுகிறது. சமீபத்தில் தான் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 14 சீரிஸ் விலையை குறைத்தது. அதன்படி இந்த மாடலின் விலை ரூ. 69 ஆயிரத்து 900 என்று துவங்குகிறது.

    ஐபோன் 13 மற்றும் ஐபோன் SE மாடல்களுக்கு முறையே ரூ. 3 ஆயிரம் மற்றும் ரூ. 2 ஆயிரம் வரையிலான கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இதன் மூலம் ஐபோன் 13 விலை ரூ. 56 ஆயிரத்து 900 என்று துவங்குகிறது.

    மேக்புக்:

    மேக்புக் ஏர் (M2) மாடலுக்கு ரூ. 10 ஆயிரம் வரையிலான கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இது 13-இன்ச் மற்றும் 15-இன்ச் மாடல்களுக்கு வழங்கப்படுகிறது. 13-இன்ச் மேக்புக் ஏர் (M2) மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 14 ஆயிரத்து 900 என்று துவங்குகிறது.

    மேக்புக் ஏர் (M1) மாடலுக்கு ரூ. 8 ஆயிரம் வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இதனால், இதன் விலை ரூ. 99 ஆயிரத்து 900 என்று துவங்குகிறது. இதே போன்று மேக் ஸ்டூடியோ மாடலுக்கு ரூ. 10 ஆயரமும், 24-இன்ச் ஐமேக் மற்றும் மேக் மினி மாடலுக்கு ரூ. 5 ஆயிரம் உடனடி கேஷ்பேக் வழங்கப்படுகிறது.

    ஐபேட்:

    11-இன்ச் ஐபேட் மற்றும் 12.9 இன்ச் ஐபேட் ப்ரோ மற்றும் ஐபேட் ஏர் மாடல்களுக்கு ரூ. 5 ஆயிரம் வரை உடனடி கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இதே போன்று 10th Gen மற்றும் 9th Gen ஐபேட் மாடல்களுக்கு முறையே ரூ. 4 ஆயிரம் மற்றும் ரூ. 3 ஆயிரம் கேஷ்பேக் வழங்கப்படுகிறது. ஐபேட் மினி மாடலுக்கு ரூ. 3 ஆயிரம் உடனடி கேஷ்பேக் வழங்கப்படுகிறது.

    ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 2 மாடலுக்கு ரூ. 5 ஆயிரம் உடனடி கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இதனால் இதன் விலை ரூ. 89 ஆயிரத்து 900 என்று துவங்குகிறது. ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9 மாடலுக்கு ரூ. 5 ஆயிரம் உடனடி கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இதன் விலை ரூ. 37 ஆயிரத்து 900 என்று துவங்குகிறது.

    ஆப்பிள் வாட்ச் SE மாடலுக்கு ரூ. 2 ஆயிரம் உடனடி கேஷ்பேக் வழங்கப்படுகிறது. ஆப்பிள் ஹோம்பாட் மற்றும் ஏர்பாட்ஸ் ப்ரோ மாடலுக்கு ரூ. 2 ஆயிரம் உடனடி கேஷ்பேக் வழங்கப்படுகிறது.

    • ஐடெல் நிறுவனத்தின் புதிய இயர்பட்ஸ் 35 மணி நேரத்திற்கு பேட்டரி பேக்கப் வழங்குகிறது.
    • ஐடெல் இயர்பட்ஸ் IPX5 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கிறது.

    ஐடெல் நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் - T1 ப்ரோ மாடலை அறிமுகம் செய்தது. மிக குறைந்த எடை, அழகிய தோற்றம் கொண்டிருக்கும் புதிய ஐடெல் T1 ப்ரோ இயர்பட்ஸ் 10mm டிரைவர்களை கொண்டிருக்கிறது. இவை தலைசிறந்த ஆடியோ அனுபவம் மற்றும் மேம்பட்ட பேஸ் வழங்குகிறது.

    மேலும் IPX5 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி, ஏ.ஐ. மூலம் இயங்கும் என்விரான்மென்டல் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி (ENC) வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் உள்ள ஸ்மார்ட் டச் கண்ட்ரோல் மூலம் ஆடியோ அனுபவத்தை எளிதில் கட்டுப்படுத்த முடியும். இத்துடன் ப்ளூடூத் 5.3 மூலம் கனெக்டிவிட்டி வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

     

    இதன் இயர்பட் ஒவ்வொன்றிலும் 30 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் வழங்கப்படும் சார்ஜிங் கேஸ் கொண்டு இயர்பட்களை அதிகபட்சம் ஆறு முறை சார்ஜ் செய்ய முடியம். இத்துடன் முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 35 மணி நேரத்திற்கு பயன்படுத்தும் வசதி உள்ளது. இந்த இயர்பட்ஸ்-ஐ யு.எஸ்.பி. டைப்-சி மூலம் சார்ஜிங் செய்ய முடியும்.

    இந்திய சந்தையில் புதிய ஐடெல் T1 ப்ரோ இயர்பட்ஸ் விலை ரூ. 849 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த இயர்பட்ஸ் டீப் புளூ மற்றும் கிரே என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் விற்பனை ஐடெல் அதிகாரப்பூர்வ வலைதளம் மற்றும் இதர சில்லறை விற்பனை மையங்களில் ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது.

    • மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் பற்றிய தகவல்கள் இணையத்தில் வெளியாகி வந்தது.
    • ஓபன் என்ற வார்த்தை புதிய மடிக்கக்கூடிய வடிவமைப்பை உணர்த்துகிறது.

    ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஒன்பிளஸ் ஓபன் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அக்டோபர் 19-ம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதற்கான அறிமுக நிகழ்வு மும்பையில் நடைபெற இருக்கிறது. முன்னதாக ஒன்பிளஸ் நிறுவனத்தின் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் பற்றிய தகவல்கள் இணையத்தில் வெளியாகி வந்த நிலையில், தற்போது இதற்கான அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கிறது.

    புதிய ஸ்மார்ட்போனின் பெயரில் ஓபன் என்ற வார்த்தை புதிய மடிக்கக்கூடிய வடிவமைப்பை உணர்த்துவதோடு, ஒன்பிளஸ் நிறுவனம் புதிய முயற்சிகளை மேற்கொள்வதில் கொண்டிருக்கும் விருப்பத்தை குறிக்கும் வகையில் அமைந்து இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்து உள்ளது.

     

    இதற்காக ஒன்பிளஸ் சூட்டி இருக்கும், "Open for Everything" என்ற வாக்கியத்தின் மூலம் ஒன்பிளஸ் நிறுவனம் புதிய சாத்தியக்கூறுகள் அனைத்தையும் முயற்சிக்க இருப்பதாக தெரிவித்து உள்ளது.

    ஒன்பிளஸ் ஓபன் மாடலில் 31 பாகங்கள் குறைவாக இருப்பதால், இதன் எடை குறைவாக இருக்கும் என்றும் இது ஒப்போ ஃபைண்ட் N2 மாடலை விட 37 சதவீம் சிறியதாக இருக்கும் என்று ஒன்பிளஸ் நிறுவனர் ஏற்கனவே தெரிவித்து விட்டார். மேலும் ஒப்போ ஃபைண்ட் N3 மற்றும் ஒன்பிளஸ் ஓபன் மாடல்கள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான டிசைன் கொண்டிருக்கும் என்றும் அவர் தெரிவித்து இருக்கிறார்.

    இந்த ஸ்மார்ட்போனில் 48MP பிரைமரி கேமரா, 48MP அல்ட்ரா வைடு கேமரா, 64MP டெலிஃபோட்டோ கேமரா, ஹேசில்பிலாட் பிராண்டிங் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இத்துடன் 7.8 இன்ச் மடிக்கக்கூடிய OLED டிஸ்ப்ளே, 6.31 இன்ச் வெளிப்புற OLED டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர், 16 ஜி.பி. வரையிலான ரேம், 256 ஜி.பி. மெமரி வழங்கப்படுகிறது.

    • இதற்கான அம்சம் பீட்டா வெர்ஷனில் டெஸ்டிங் செய்யப்பட்டு வந்தது.
    • இது வாட்ஸ்அப் பயனர்களின் சாட் அனுபவத்தை மேம்படுத்தும்.

    பயனர் அனுபவத்தை மேம்படுத்தும் நோக்கில் மெட்டா நிறுவனம் சமீபத்தில் புதிய ஏ.ஐ. அம்சங்களை அறிமுகம் செய்தது. இதில் வாட்ஸ்அப் செயலிக்கான ஏ.ஐ. ஸ்டிக்கர்களை கஸ்டமைஸ் செய்து கொள்ளும் வசதியும் இடம்பெற்றுள்ளது. இதற்கான அம்சம் பீட்டா வெர்ஷனில் டெஸ்டிங் செய்யப்பட்டு வந்து நிலையில், தற்போது தேர்வு செய்யப்பட்ட பகுதிகளில் இந்த அம்சம் வழங்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இது குறித்த வலைத்தள பதிவில், ஏ.ஐ. ஸ்டிக்கர் அம்சம் வாட்ஸ்அப் பயனர்களின் சாட் அனுபவத்தை மேம்படுத்தும் என்று அந்நிறுவனம் தெரிவித்து உள்ளது. Llama 2 மற்றும் Emu போன்ற தொழில்நுட்பங்களை கொண்டு மெட்டா நிறுவனத்தின் ஏ.ஐ. டூல் எழுத்துக்களை அதிக தரமுள்ள ஸ்டிக்கர்களாக உருவாக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

     

    வாட்ஸ்அப் செயலியில் ஏ.ஐ. ஸ்டிக்கர் அம்சம் ஆங்கில மொழியில் மட்டும் இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி ஏ.ஐ. ஸ்டிக்கர்களை உருவாக்க ஆங்கில மொழியில் வாக்கியங்களை வழங்க வேண்டியது அவசியம் ஆகும். இந்த புதிய அம்சம் மெசஞ்சர், இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் ஸ்டோரி உள்ளிட்டவைகளில் வழங்கப்பட்டு இருக்கிறது.

    வாட்ஸ்அப்-இல் ஏ.ஐ. ஸ்டிக்கர்களை உருவாக்குவது எப்படி?

    மொபைலில் வாட்ஸ்அப் செயலியை லான்ச் செய்ய வேண்டும்.

    வாட்ஸ்அப் சாட்-ஐ இயக்க வேண்டும்.

    செயலியில் உள்ள "More" ஐகானை க்ளிக் செய்ய வேண்டும்.

    இனி "Create" மற்றும் "Continue" ஆப்ஷன்களை க்ளிக் செய்ய வேண்டும்.

    நீங்கள் உருவாக்க நினைக்கும் ஸ்டிக்கருக்கான விவரங்களை குறிப்பிட வேண்டும்.

    இனி நான்கு ஸ்டிக்கர்கள் உருவாக்கப்பட்டு இருப்பதை பார்க்க முடியும்.

    உங்களுக்கு தேவையெனில், அதில் மாற்ங்களை மேற்கொள்ளலாம்.

    ஸ்டிக்கரில் க்ளிக் செய்து அதனை மற்றவர்களுக்கு அனுப்ப துவங்கலாம்.

    தேவையற்ற ஸ்டிக்கர்கள் குறித்து புகார் அளிக்கும் வசதியை வாட்ஸ்அப் வழங்குகிறது. இதற்கு குறிப்பிட்ட ஸ்டிக்கரை அழுத்தி பிடித்து ">" ஐகானை க்ளிக் செய்து "Report," பிறகு மீண்டும் "Report" ஆப்ஷன்களை க்ளிக் செய்ய வேண்டும்.

    ×