search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "diwali offer"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பி.எஸ்.என்.எல். பிரீபெயிட் பயனர்களுக்கு கூடுதல் டேட்டா அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
    • தேர்வு செய்யப்பட்ட ரிசார்ஜ் சலுகைகளில் மட்டும் கூடுதல் டேட்டா வழங்கப்படுகிறது.

    பி.எஸ்.என்.எல். நிறுவனம் தீபாவளியை கொண்டாடும் வகையில், பயனர்களுக்கு சிறப்பு டேட்டா சலுகை வழங்கப்படுகிறது. அதன்படி ரூ. 251 ரிசார்ஜ் வவுச்சரில் பி.எஸ்.என்.எல். கூடுதல் டேட்டா வழங்குகிறது. இதுதவிர மற்ற ரிசார்ஜ் சலுகைகளிலும் கூடுதல் டேட்டா வழங்குகிறது.

    தீபாவளி பண்டிகையை ஒட்டி பயனர்கள் தங்களின் அன்புக்குரியவர்களுடன் இணைப்பில் இருக்கும் வகையில் பி.எஸ்.என்.எல். இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. புதிய அறிவிப்பின் படி பி.எஸ்.என்.எல். ரூ. 251, ரூ. 299 மற்றும் ரூ. 398 போன்ற ரிசார்ஜ் சலுகைகளில் பயனர்களுக்கு கூடுதல் டேட்டா வழங்கப்படுகிறது. இது தொடர்பான அறிவிப்பை பி.எஸ்.என்.எல். தனது எக்ஸ் பதிவில் வெளியிட்டு உள்ளது.

     

    பி.எஸ்.என்.எல். ரூ. 251 ரிசார்ஜ் செய்யும் போது கூடுதலாக 3 ஜி.பி. வரையிலான டேட்டா வழங்கப்படுகிறது. இது ஏற்கனவே உள்ள 70 ஜி.பி. டேட்டா தீர்ந்த பிறகு பயன்படுத்திக் கொள்ளும் வகையில் வழங்கப்படும். இந்த சலுகையின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். வேலிடிட்டி முடிந்த பிறகு, கூடுதல் டேட்டா காலாவதியாகிவிடும். ரூ. 299 ரிசார்ஜ் செய்வோருக்கும் 3 ஜி.பி. வரை கூடுதல் டேட்டா வழங்கப்படுகிறது.

     

    இதனை பி.எஸ்.என்.எல். செல்ஃப்-கேர் செயலி மூலம் அன்லாக் செய்துகொள்ளலாம். பி.எஸ்.என்.எல். ரூ. 299 சலுகையில் தினமும் 3 ஜி.பி. டேட்டா, தினமும் 100 எஸ்.எம்.எஸ். மற்றும் அன்லிமிடெட் அழைப்புகள் வழங்கப்படுகிறது. இந்த சலுகையின் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும். இதேபோன்று பி.எஸ்.என்.எல். ரூ. 398 வவுச்சரிலும் கூடுதலாக 3 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது.

    இந்த சலுகையில் அன்லிமிடெட் அழைப்புகள், வேலிடிட்டி முடியும் வரை 120 ஜி.பி. டேட்டா, தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்ட பலன்கள் வழங்கப்படுகிறது. இந்த சலுகையின் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும். பி.எஸ்.என்.எல். செல்ஃப்-கேர் செயலி ஆப் ஸ்டோர் மற்றும் பிளே ஸ்டோரில் டவுன்லோட் செய்ய கிடைக்கிறது.

    • பயனர்களுக்கு ரூ. 10 ஆயிரம் வரையிலான கேஷ்பேக் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
    • ஆப்பிள் ஆன்லைன் ஸ்டோரில் தீபாவளி சலுகை வழங்கப்படுகிறது.

    ஆப்பிள் நிறுவனத்தின் சிறப்பு தீபாவளி விற்பனையின் கீழ் ஐபோன் 14, ஐபோன் 15, மேக்புக் ஏர் மற்றும் ஐபேட் மாடல்களுக்கு உடனடி கேஷ்பேக் வழங்கப்படுகிறது. ஐபோன், ஐபேட், மேக்புக் மற்றும் பல்வேறு சாதனங்களுக்கு ஆப்பிள் நிறுவனம் தீபாவளி சலுகையை அறிவித்து இருக்கிறது. புதிய சலுகைகள் ஹெச்.டி.எஃப்.சி. வங்கி கிரெடிட் கார்டு வைத்திருக்கும் பயனர்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது.

    தீபாவளி சலுகையின் கீழ் பயனர்களுக்கு ரூ. 10 ஆயிரம் வரையிலான கேஷ்பேக் தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஆப்பிள் பி.கே.சி. மற்றும் ஆப்பிள் சகெட் ரிடெயில் ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆன்லைன் ஸ்டோரில் தீபாவளி சலுகை வழங்கப்படுகிறது.

     

    ஆப்பிள் தீபாவளி சலுகைகள்:

    ஹெச்.டி.எஃப்.சி. வங்கி கிரெடிட் கார்டு கொண்டு தேர்வு செய்யப்பட்ட ஆப்பிள் சாதனங்களை வாங்கும் போது ரூ. 10 ஆயிரம் வரை உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. தேர்வு செய்யப்பட்ட வங்கிகளில், மூன்று அல்லது ஆறு மாதங்களுக்கு வட்டியில்லா மாத தவணை முறை வசதி வழங்கப்படுகிறது.

    அக்டோபர் 15-ம் தேதி துவங்கி நவம்பர் 14-ம் தேதி வரை ஆப்பிள் தீபாவளி சலுகை வழங்கப்படுகிறது. ஐபோன் 14, ஐபோன் 14 பிளஸ், ஏர்பாட்ஸ் ப்ரோ (2nd Gen) உள்ளிட்ட சாதனங்களுக்கு மட்டும் நவம்பர் 7-ம் தேதி வரை மட்டுமே தீபாவளி சலுகை வழங்கப்படுகிறது.

    ஐபோன் 15 ப்ரோ மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் மாடல்களுக்கு ரூ. 6 ஆயிரம் வரை உடனடி கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இதன் மூலம் ஐபோன் 15 ப்ரோ மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 34 ஆயிரத்து 900 என்று துவங்குகிறது. ஐபோன் 15 மற்றும் ஐபோன் 15 பிளஸ் மாடல்களுக்கு ரூ. 5 ஆயிரம் கேஷ்பேக் வழங்கப்படுகிறது. ஐபோன் 15 மாடலின் விலை ரூ. 79 ஆயிரத்து 900 என்று துவங்குகிறது.

    ஐபோன் 14 மற்றும் ஐபோன் 14 பிளஸ் மாடல்களுக்கு ரூ. 4 ஆயிரம் வரை உடனடி கேஷ்பேக் வழங்கப்படுகிறது. சமீபத்தில் தான் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 14 சீரிஸ் விலையை குறைத்தது. அதன்படி இந்த மாடலின் விலை ரூ. 69 ஆயிரத்து 900 என்று துவங்குகிறது.

    ஐபோன் 13 மற்றும் ஐபோன் SE மாடல்களுக்கு முறையே ரூ. 3 ஆயிரம் மற்றும் ரூ. 2 ஆயிரம் வரையிலான கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இதன் மூலம் ஐபோன் 13 விலை ரூ. 56 ஆயிரத்து 900 என்று துவங்குகிறது.

    மேக்புக்:

    மேக்புக் ஏர் (M2) மாடலுக்கு ரூ. 10 ஆயிரம் வரையிலான கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இது 13-இன்ச் மற்றும் 15-இன்ச் மாடல்களுக்கு வழங்கப்படுகிறது. 13-இன்ச் மேக்புக் ஏர் (M2) மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 14 ஆயிரத்து 900 என்று துவங்குகிறது.

    மேக்புக் ஏர் (M1) மாடலுக்கு ரூ. 8 ஆயிரம் வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இதனால், இதன் விலை ரூ. 99 ஆயிரத்து 900 என்று துவங்குகிறது. இதே போன்று மேக் ஸ்டூடியோ மாடலுக்கு ரூ. 10 ஆயரமும், 24-இன்ச் ஐமேக் மற்றும் மேக் மினி மாடலுக்கு ரூ. 5 ஆயிரம் உடனடி கேஷ்பேக் வழங்கப்படுகிறது.

    ஐபேட்:

    11-இன்ச் ஐபேட் மற்றும் 12.9 இன்ச் ஐபேட் ப்ரோ மற்றும் ஐபேட் ஏர் மாடல்களுக்கு ரூ. 5 ஆயிரம் வரை உடனடி கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இதே போன்று 10th Gen மற்றும் 9th Gen ஐபேட் மாடல்களுக்கு முறையே ரூ. 4 ஆயிரம் மற்றும் ரூ. 3 ஆயிரம் கேஷ்பேக் வழங்கப்படுகிறது. ஐபேட் மினி மாடலுக்கு ரூ. 3 ஆயிரம் உடனடி கேஷ்பேக் வழங்கப்படுகிறது.

    ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 2 மாடலுக்கு ரூ. 5 ஆயிரம் உடனடி கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இதனால் இதன் விலை ரூ. 89 ஆயிரத்து 900 என்று துவங்குகிறது. ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9 மாடலுக்கு ரூ. 5 ஆயிரம் உடனடி கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இதன் விலை ரூ. 37 ஆயிரத்து 900 என்று துவங்குகிறது.

    ஆப்பிள் வாட்ச் SE மாடலுக்கு ரூ. 2 ஆயிரம் உடனடி கேஷ்பேக் வழங்கப்படுகிறது. ஆப்பிள் ஹோம்பாட் மற்றும் ஏர்பாட்ஸ் ப்ரோ மாடலுக்கு ரூ. 2 ஆயிரம் உடனடி கேஷ்பேக் வழங்கப்படுகிறது.

    சென்னை திருவல்லிக்கேணியில் ஆயிரம் ரூபாய்க்கு மது குடித்தால் டி.வி., வாஷிங்மெஷின் இலவசம் என மதுபிரியர்களுக்கு தீபாவளி சலுகை அறிவித்த அ.தி.மு.க. பிரமுகர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
    சென்னை:

    தீபாவளி பண்டிகையையொட்டி வியாபாரிகள் தங்கள் பொருட்களின் விற்பனையை அதிகரிக்க பல்வேறு சலுகைகளை அறிவித்து இருக்கிறார்கள்.

    அதிக தொகைக்கு பொருட்களை வாங்கினால் பரிசு என்ற அறிவிப்பு வாடிக்கையாளர்களை மிகவும் கவர்கிறது. இதனால் துணி, நகை, வீட்டு உபயோகப்பொருட்கள், பட்டாசு விற்பனை சூடு பிடித்துள்ளது.

    இந்த பொருட்களை வாங்குவதற்காக மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. பண்டிகை காலங்களில் மது விற்பனையும் அதிகரிக்கும். இந்த ஆண்டு தீபாவளிக்கு ரூ.320 கோடிக்கு மது விற்பனை செய்ய டாஸ்மாக் இலக்கு நிர்ணயித்துள்ளது.

    இந்தநிலையில் ஆயிரம் ரூபாய்க்கு மது அருந்தினால் பரிசு பொருட்கள் வழங்கப்படும் என்ற அறிவிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருவல்லிக்கேணியில் உள்ள ஒரு ஓட்டல், பார் ஆகியவற்றில் மது அருந்துபவர்களுக்கு குலுக்கல் முறையில் 32 அங்குல கலர்டிவி, குளிர் சாதனப்பெட்டி, வாஷிங் மிஷின் ஆகியவை வழங்கப்படும் என்று விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டன.

    இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் என்ற வசனத்துடன் திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, வல்லபா அக்ரஹாரம் ஆகிய இடங்களில் பிரம்மாண்ட பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. இதில் ஆயிரம் ரூபாய்க்கு மது குடிப்பவர்களுக்கு வழங்கப்படும் பரிசு பொருட்களின் படங்கள் மற்றும் ஓட்டல் பெயருடன் கூடிய வாசகங்கள் இடம்பெற்றிருந்தன. துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து போலீசில் பொதுமக்கள் சார்பில் புகார் செய்யப்பட்டது.

    இதையடுத்து, விளம்பர பேனர் வைத்திருந்த பார் மானேஜர் வின்சென்ட் ராஜ் (25), பார் அதிபரின் உதவியாளர் ரியாஸ் அகமது (41) ஆகியோரை ஜாம்பஜார் போலீசார் கைது செய்தனர்.

    பார் உரிமையாளர் முகமது அலிஜின்னா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னாள் அ.தி.மு.க. கவுன்சிலரான இவர் தற்போது சேப்பாக்கம் சிறுபான்மை பிரிவு அ.தி.மு.க. மாவட்ட செயலாளராக இருக்கிறார்.

    மதுஅருந்துவோருக்கு குலுக்கல் முறையில் கொடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்த எல்.இ.டி. டி.வி, வாஷிங்மெஷின், குளிர்சாதனபெட்டி, பரிசு குலுக்கலுக்காக வைக்கப்பட்டிருந்த பெட்டி ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் விசாரணை நடந்து வருகிறது.
    ×