என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    • புதிய மாடலில் பிளாக் செராமிக் பேக் பேனல் வழங்கப்படுகிறது.
    • ஆக்ஷன் பட்டன் பிளாஸ்டிக் மூலம் உருவாக்கப்படுகிறது.

    ஆப்பிள் நிறுவனம் தனது ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா மாடலின் புது வெர்ஷனை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆப்பிள் வாட்ச் அல்ட்ராவின் ரிடிசைன் செய்யப்பட்ட மாடல் ரெண்டர்கள் எஃப்.சி.சி. தளத்தில் வெளியானதை தொடர்ந்து இந்த தகவல் வெளியாகி இருக்கிறது.

    புதிய தகவல்களின் படி புதிய ஆப்பிள் வாட்ச் மாடல் ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 2 மாடலில் இருப்பதை போன்ற ரக்கட் தோற்றம், வழக்கமான டிஜிட்டல் கிரவுன், ஆக்ஷன் பட்டன், ஸ்பீக்கர் கிரில், மைக்ரோபோன் உள்ளிட்டவைகளை கொண்டிருக்கிறது. இதன் பின்புறம் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9 மற்றும் பழைய மாடல்களில் இருப்பதை போன்ற பிளாக் செராமிக் பேக் பேனல் வழங்கப்பட்டு இருக்கிறது.

    மேலும் இதில் உள்ள ஆக்ஷன் பட்டன் ரிடிசைன் செய்யப்பட்டு, பிளாஸ்டிக் மூலம் உருவாக்கப்பட்டு இருக்கும் என்று தெரிகிறது. உண்மையில் இந்த வாட்ச் விற்பனைக்கு வரும் பட்சத்தில், இந்த மாடல் அல்ட்ரா பிராண்டிங் இன்றி அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. எனினும், இந்த ஆப்பிள் வாட்ச் விலை தற்போதைய மாடல்களை விட குறைந்த விலையில் கிடைக்கும் என்று தெரிகிறது.

    செப்டம்பர் 2022 ஆண்டில் ஆப்பிள் நிறுவனம் தனது ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா மாடலையும், அதன்பிறகு கடந்த செப்டம்பரில் ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 2 மாடலையும் அறிமுகம் செய்தது. இந்திய சந்தையில் ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 2 மாடலின் விலை ரூ. 89 ஆயிரத்து 990 என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.

    ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா மற்றும் ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 2 என இரு மாடல்களிலும் ஏரோஸ்பேஸ் ரக அலுமினிம்-தர டைட்டானியம் கேஸ், மெட்டல் ஆக்ஷன் பட்டன், சஃபயர் க்ரிஸ்டல் பிளாக் பேனல் வழங்கப்பட்டு உள்ளது.

    • பில்ட்-இன் மைக்ரோபோன் மற்றும் ஸ்பீக்கர் வழங்கப்பட்டு இருக்கிறது.
    • லுமோஸ் ஸ்மார்ட்வாட்ச்-இல் ஃபயர் போல்ட் ஹெல்த் சூட் உள்ளது.

    ஃபயர் போல்ட் நிறுவனத்தின் முற்றிலும் புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடல் "லுமோஸ்" (Lumos) என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய மாடல் அந்நிறுவனம் ஏற்கனவே அறிமுகம் செய்த சொலரிஸ் மற்றும் சொலெஸ் மாடல்களுடன் இணைகிறது. புதிய ஃபயர் போல்ட் லுமோஸ் மாடலில் 1.91 இன்ச் டிஸ்ப்ளே, ப்ளூடூத் காலிங், உடல்நல அம்சங்கள் மற்றும் பல்வேறு வசதிகள் உள்ளன.

    இந்த ஸ்மார்ட்வாட்ச்-இல் உள்ள டிஸ்ப்ளே HD ஸ்கிரீன், 240x280 பிக்சல் ரெசல்யூஷன் கொண்டிருக்கிறது. இத்துடன் 100-க்கும் அதிகமான கிளவுட் சார்ந்த வாட்ச் ஃபேஸ்கள் உள்ளன. இத்துடன் பில்ட்-இன் மைக்ரோபோன் மற்றும் ஸ்பீக்கர் வழங்கப்பட்டு இருக்கிறது. இதை கொண்டு ப்ளூடூத் காலிங் மற்றும் வாய்ஸ் அசிஸ்டண்ட் போன்ற அம்சங்களை பயன்படுத்த முடியும்.

    புதிய லுமோஸ் ஸ்மார்ட்வாட்ச்-இல் ஃபயர் போல்ட் ஹெல்த் சூட் உள்ளது. இதில் ஹார்ட் ரேட் டிராக்கிங், SpO2 டிராக்கிங் மற்றும் ஸ்லீப் டிராக்கிங் போன்ற வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் 100-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. கூடுதல் அம்சங்களாக ஸ்மார்ட் நோட்டிஃபிகேஷன், பில்ட்-இன் கேம்ஸ் உள்ளன.

    இவைதவிர வானிலை அப்டேட்கள், கால்குலேட்டர், மியூசிக், கேமரா கண்ட்ரோல் உள்ளிட்ட வசதிகளும் உள்ளன. புதிய ஃபயர் போல்ட் லுமோஸ் ஸ்மார்ட்வாட்ச் ரோஸ் கோல்டு, சில்வர், புளூ, பிளாக் மற்றும் கோல்டு என ஐந்துவிதமான நிறங்களில் கிடைக்கின்றன. இதன் விற்பனை அமேசான் மற்றும் ஃபயர் போல்ட் வலைத்தளங்களில் நவம்பர் 30-ம் தேதி துவங்குகிறது.

    இந்திய சந்தையில் புதிய ஃபயர் போல்ட் லுமோஸ் ஸ்மார்ட்வாட்ச் ரூ. 1499 எனும் விலையில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. இது அறிமுக விலை என்பதால், எப்போது வேண்டுமானாலும் மாற்றப்படலாம் என்று தெரிகிறது.

    • ரியல்மி GT 5 மாடலில் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர் வழங்கப்பட்டது.
    • டெலிபோட்டோ கேமரா சென்சார் கொண்டிருக்கும் என்று தகவல்.

    ரியல்மி நிறுவனத்தின் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் GT 5 ப்ரோ வெளியீட்டு தேதி ஒருவழியாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இது அந்நிறுவனம் கடந்த ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட ரியல்மி GT 5 சீரிசில் இணையும் என்று தெரிகிறது. ரியல்மி GT 5 மாடலில் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர் வழங்கப்பட்ட நிலையில், புதிய மாடலில் மேம்பட்ட பிராசஸர் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

    புதிய GT ஸ்மார்ட்போனிற்காக பல்வேறு டீசர்களை ரியல்மி நிறுவனம் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஸ்மார்ட்போனின் ஏராளமான அம்சங்கள் ஏற்கனவே அறிந்ததே. தற்போது வெளியிடப்பட்டு இருக்கும் டீசர்களில் புதிய ரியல்மி GT 5 ப்ரோ ஸ்மாரட்போன் டிசம்பர் 7-ம் தேதி சீன சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. முதற்கட்டமாக இந்த மாடல் சீன சந்தையில் மட்டும் அறிமுகம் செய்யப்படுகிறது.

    கோப்புப்படம் 

    கோப்புப்படம் 

    இத்துடன் வெளியான மற்றொரு டீசரில், புதிய ரியல்மி GT 5 ப்ரோ ஸ்மார்ட்போன் டெலிபோட்டோ கேமரா சென்சார் கொண்டிருக்கும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. முன்னதாக வெளியான தகவல்களில் ரியல்மி GT 5 ப்ரோ ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 பிராசஸர் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. இத்துடன் 50MP பிரைமரி கேமரா, OIS, EIS வசதிகள் வழங்கப்படலாம்.

    மற்ற அம்சங்களை பொருத்தவரை ரியல்மி GT 5 ப்ரோ மாடலில் 6.78 இன்ச் 1264x2780 பிக்சல் AMOLED டிஸ்ப்ளே, மூன்று சென்சார்கள் கொண்ட கேமரா யூனிட், 32MP செல்ஃபி கேமரா வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இத்துடன் 5400 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 100 வாட் வயர்டு, 50 வாட் வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என்று தெரிகிறது.

    முன்னதாக அறிமுகம் செய்யப்பட்ட ரியல்மி GT 5 மாடலில் 150 வாட் மற்றும் 240 வாட் வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது. இவற்றில் முறையே 5240 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் 4600 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. 

    • ஆப்பிள் வாட்ச் மாடல்களுக்கும் சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
    • ஐபோன் 14 மாடலின் 128 ஜி.பி. வேரியண்டிற்கானது ஆகும்.

    ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 15 சீரிஸ் மாடல்களுக்கு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. அதன்படி ஐபோன் 15 மாடலுக்கு ரூ. 8 ஆயிரம் வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஐபோன் 15 தவிர ஐபோன் 14 மற்றும் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9 மாடல்களுக்கும் சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

    பிளாக் ஃபிரைடே சேல் பெயரில் ஆப்பிள் அதிகாரப்பூர்வ விற்பனையாளரான இன்வென்ட் ஸ்டோர் ஐபோன் 15 மாடலுக்கு ரூ. 3 ஆயிரம் வரை உடனடி தள்ளுபடி வழங்குகிறது. இத்துடன் ரூ. 5 ஆயிரம் ரையிலான கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இதை சேர்க்கும் போது ஐபோன் 15 மாடலின் விலை ரூ. 8 ஆயிரம் வரை குறைந்துவிடும்.

    அந்த வகையில், ஐபோன் 15 விலை ரூ. 79 ஆயிரத்து 900-இல் இருந்து ரூ. 71 ஆயிரத்து 900 ஆக குறைந்துவிடும். ஐபோன் 14 மாடலுக்கு ரூ. 9 ஆயிரம் வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதில் ரூ. 5 ஆயிரம் உடனடி தள்ளுபடியாகவும், ரூ. 4 ஆயிரம் கேஷ்பேக் வடிவிலும் வழங்கப்படுகிறது. இது ஐபோன் 14 மாடலின் 128 ஜி.பி. வேரியண்டிற்கானது ஆகும்.

    அந்த வகையில், ஐபோன் 14 மாடலின் விலை ரூ. 69 ஆயிரத்து 900-இல் இருந்து ரூ. 60 ஆயிரத்து 900 என குறைந்து இருக்கிறது. ஐபோன் 14 ஸ்மார்ட்போன் 256 ஜி.பி. மற்றும் 512 ஜி.பி. என மொத்தம் மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9 மாடலுக்கு ரூ. 2 ஆயிரத்து 500 வரை உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    அதன்படி ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9 விலை ரூ. 39 ஆயிரத்து 400-க்கே கிடைக்கிறது. இதன் உண்மையான விலை ரூ. 41 ஆயிரத்து 900 ஆகும். ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9 மாடல் ஜி.பி.எஸ். மற்றும் செல்லுலார் வேரியண்ட்களில் கிடைக்கிறது. இத்துடன் அலுமினியம் மற்றும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் என இருவித ஃபினிஷ்களில் கிடைக்கிறது.

    • இரு மாடல்களிலும் ஸ்னாப்டிராகன் 8 ஜென் பிளஸ் 3 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது.
    • ரெட்மேஜிக் 9 ப்ரோ மாடலில் 6500 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 80 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.

    ரெட்மேஜிக் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ரெட்மேஜிக் 9 ப்ரோ மற்றும் ரெட்மேஜிக் 9 ப்ரோ பிளஸ் மாடல்கள் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டன. இவை ரெட்மேஜிக் நிறுவனத்தின் முற்றிலும் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள் ஆகும். இரு மாடல்களிலும் அதிநவீன ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 பிராசஸர் வழங்கப்பட்டு உள்ளன.

    இத்துடன் அதிகபட்சம் 24 ஜி.பி. ரேம், 1 டி.பி. வரையிலான மெமரி வழங்கப்படுகிறது. இவற்றில் 6.8 இன்ச் OLED BOE Q9+ ஸ்கிரீன், அதிகபட்சம் 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், 1600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வழங்கப்படுகிறது. புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 50MP அல்ட்ரா வைடு கேமரா, 16MP அன்டர் ஸ்கிரீன் செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது.

    ரெட்மேஜிக் 9 ப்ரோ மாடலில் 6500 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 80 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. ரெட்மேஜிக் 9 ப்ரோ பிளஸ் மாடலில் 5500 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் 165 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது. இது ஸ்மார்ட்போனினை 16 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்துவிடும்.

    ரெட்மேஜிக் 9 ப்ரோ மற்றும் 9 ப்ரோ பிளஸ் அம்சங்கள்:

    6.8 இன்ச் 2480x1116 பிக்சல் Full HD+ OLED டிஸ்ப்ளே

    ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 பிராசஸர்

    அட்ரினோ 750 GPU

    8 ஜி.பி., 12 ஜி.பி., 16 ஜி.பி., 24 ஜி.பி. ரேம்

    256 ஜி.பி., 512 ஜி.பி., 1 டி.பி. மெமரி

    ஆண்ட்ராய்டு 14 சார்ந்த ரெட்மேஜிக் ஒ.எஸ். 9

    டூயல் சிம் ஸ்லாட்

    50MP பிரைமரி கேமரா

    50MP அல்ட்ரா வைடு லென்ஸ்

    16MP அன்டர் டிஸ்ப்ளே செல்ஃபி கேமரா

    3.5mm ஆடியோ ஜாக், டூயல் ஸ்பீக்கர்கள்

    5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்

    யு.எஸ்.பி. டைப் சி

    9 ப்ரோ - 6500 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 80 வாட் சார்ஜிங்

    9 ப்ரோ பிளஸ் - 5500 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 165 வாட் சார்ஜிங்

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    ரெட்மேஜிக் 9 ப்ரோ மாடல் விலை 4399 யுவான்கள், இந்திய மதிப்பில் ரூ. 52 ஆயிரத்து 270 என்று துவங்குகின்றன. ரெட்மேஜிக் 9 ப்ரோ பிளஸ் மாடலின் விலை 5499 யுவான்கள், இந்திய மதிப்பில் ரூ. 65 ஆயிரத்து 341 என்று துவங்குகின்றன. சீனாவில் இவற்றின் விற்பனை நவம்பர் 28-ம் தேதி துவங்க உள்ளன.

    • மூன்றாம் தரப்பு செயலிகளை பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.
    • டவுன்லோட் செய்யப்படுவதை தடுக்கும் வசதியும் உள்ளது.

    இன்ஸ்டாகிராம் செயலியில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் புதிய அம்சம் கொண்டு பயனர்கள் ரீல்ஸ்-ஐ நேரடியாக டவுன்லோட் செய்து கொள்ள முடியும். அந்த வகையில், பயனர்கள் இனிமேல் ரீல்ஸ்-ஐ டவுன்லோட் செய்ய மூன்றாம் தரப்பு செயலிகளை பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.

    இந்த அம்சம் தற்போதைக்கு பப்ளிக் அக்கவுண்ட்-களுக்கு மட்டுமே பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் பயனர்கள் விரும்பினால் ரீல்ஸ் டவுன்லோட் செய்யப்படுவதை தடுக்கும் வசதியும் வழங்கப்பட்டு உள்ளது.

    ரீல்ஸ்-ஐ டவுன்லோட் செய்யும் புதிய அம்சம் குறித்த தகவலை இன்ஸ்டாகிராம் செயலிக்கான தலைவர் ஆடம் மொசெரி தனது சேனலில் தெரிவித்தார். ஏற்கனவே இந்த அம்சம் அமெரிக்க பயனர்களுக்கு மட்டும் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது உலகளவில் பயனர்கள் ரீல்ஸ்-ஐ டவுன்லோட் செய்யும் வசதி வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த அம்சம் பயனர்கள் பப்ளிக் அக்கவுண்ட்களில் இருந்து ரீல்ஸ்-ஐ சேவ் செய்து கொள்ள அனுமதிக்கிறது. இவ்வாறு டவுன்லோட் செய்யப்படும் ரீல்களில், அதனை உருவாக்கிய இன்ஸ்டாகிராம் அக்கவுண்டின் லோகோ வாட்டர்மார்க் (ரீல்ஸ் பின்னணியில் காட்சி குறியீடு) செய்யப்பட்டு இருக்கும்.

    இன்ஸ்டா ரீல்ஸ் டவுன்லோட் செய்வது எப்படி?

    புதிய அப்டேட் மூலம் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்-ஐ டவுன்லோட் செய்ய, குறிப்பிட்ட ரீல்ஸ்-இல் இருந்த படி ஷேர் செய்யக் கோரும் பேப்பர் ஏர்பிளேன் ஐகானை க்ளிக் செய்ய வேண்டும். இவ்வாறு செய்த பிறகு, டவுன்லோட் செய்வதற்கான ஆப்ஷனை பார்க்க முடியும். அதனை க்ளிக் செய்ததும் ரீல்ஸ் சாதனத்தில் டவுன்லோட் செய்யப்பட்டு விடும்.

    • ஒபன்ஏஐ நிறுவனத்தில் நிர்வாக ரீதியிலான மாற்றங்கள் அதிரடியாக மேற்கொள்ளப்படுகின்றன.
    • முன்னதாக ஒபன்ஏஐ சி.இ.ஒ.-வாக ட்விட்ச் நிறுவனர் நியமிக்கப்பட்டு இருந்தார்.

    ஒபன்ஏஐ நிறுவனத்தில் கடந்த வெள்ளிக் கிழமை முதல் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள், வெளியாகும் அறிவிப்புகள் டெக் உலகில் தொடர்ந்து சலசலப்பை ஏற்படுத்தி வருகின்றன. அந்த வரிசையில், கடந்த ஐந்து நாட்களில் ஒபன்ஏஐ தலைமை செயல் அதிகாரியாக பணிநீக்கம் செய்யப்பட்ட சாம் ஆல்ட்மேன் இன்று (நவம்பர் 22) மீண்டும் அந்நிறுவனத்தின் சி.இ.ஒ.-வாக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

    மீண்டும் ஒபன்ஏஐ நிறுவனத்தின் தலைமை பொறுப்பை ஏற்றது குறித்து அந்நிறுவனம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டு இருந்தது. மேலும் சாம் ஆல்ட்மேனும் மீண்டும் தலைமை பொறுப்பை ஏற்பது குறித்து கருத்து பதிவிட்டு இருந்தார். முன்னதாக இந்த விவகாரம் தொடர்பாக மைக்ரோசாப்ட் தலைமை செயல் அதிகாரி சத்ய நாதெல்லாவும் கருத்து தெரிவித்து இருந்தார்.

    இந்த நிலையில், சாம் ஆல்ட்மேன் மீண்டும் ஒபன்ஏஐ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டு இருப்பது குறித்து சத்ய நாதெல்லா தனது எக்ஸ் தளத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.

    அதில், "ஒபன்ஏஐ நிர்வாக குழுவில் மேற்கொள்ளப்பட்டு இருக்கும் மாற்றங்களை வரவேற்கிறோம். நிலையான, நன்கு விவரம் அறிந்த மற்றும் சிறப்பான நிர்வாகத்திற்கு இது முதல்படி என்பதை நாங்கள் நம்புகிறோம். ஒபன்ஏஐ தலைமை பொறுப்பை ஏற்று, அதன் குறிக்கோளை அடைவதற்கு தலைமை பொறுப்பில் இருந்து முக்கிய பங்காற்றுவது குறித்து சாம், கிரெக் மற்றும் நானும் பேச்சுவார்த்தை நடத்தினோம்."

    "உறுதியான கூட்டணியை உருவாக்கி, அடுத்த தலைமுறை ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் மதிப்புகளை எங்களின் வாடிக்கையாளர்கள் மற்றும் கூட்டாளிகளுக்கு வழங்க விரும்புகிறோம்," என்று குறிப்பிட்டு இருக்கிறார். 

    • விவோ V30 ஸ்மார்ட்போனுடன் விவோ V30 லைட் மாடலும் அறிமுகம்.
    • V29e ஸ்மார்ட்போனை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கும் என தகவல்.

    விவோ நிறுவனம் தனது அடுத்த தலைமுறை V சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. சமீபத்தில் தான் விவோ V30 ஸ்மார்ட்போனின் விவரங்கள் கீக்பென்ச் வலைதளத்தில் லீக் ஆகி இருந்தது. தற்போது வெளியாகி இருக்கும் புதிய தகவல்களில் விவோ V30 ஸ்மார்ட்போனுடன் விவோ V30 லைட் மாடலும் அறிமுகம் செய்யப்படலாம் என்று தெரியவந்துள்ளது.

    இதில் ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்களும் இடம்பெற்று இருக்கிறது. அதன்படி விவோ V30 லைட் மாடலில் ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ஒ.எஸ்., 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மற்றும் 12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கும் என்று தெரிகிறது. இத்துடன் 4700 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 44 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது.

    கனெக்டிவிட்டிக்கு டூயல் பேண்ட் வைபை, என்.எஃப்.சி., ப்ளூடூத் மற்றும் யு.எஸ்.பி. டைப் சி போர்ட் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. விவோ V30 லைட் மாடல் V29e ஸ்மார்ட்போனை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கும் என்று தெரிகிறது. எனினும், இதன் ஹார்டுவேரில் சிறு மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கலாம்.

    சர்வதேச சந்தையில் விவோ V29e மாடல் கடந்த அக்டோபர் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், புதிய விவோ V30 மற்றும் விவோ V30 லைட் மாடல்கள் எப்போது அறிமுகம் செய்யப்படும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. 

    • டெக் உலக முன்னணி தலைவர்கள் கருத்து தெரிவித்தனர்.
    • கடந்த சில நாட்களாக தீவிர ஆலோசனை நடைபெற்றதாக தகவல்.

    உலகின் முன்னணி செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) நிறுவனமான ஒபன்ஏஐ, கடந்த வெள்ளிக் கிழமை (நவம்பர் 17) அதன் தலைமை செயல் அதிகாரி சாம் ஆல்ட்மேனை பணிநீக்கம் செய்வதாக அறிவித்தது. ஒபன்ஏஐ நிர்வாக குழுவின் இந்த முடிவு டெக் உலகையே அதிர்ச்சி அடைய செய்தது.

    ஒபன்ஏஐ நிறுவனத்தின் பணிநீக்க அறிவிப்புக்கு டெக் உலக முன்னணி தலைவர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். இதனிடையே பணிநீக்க நடவடிக்கை குறித்து கடந்த சில நாட்களாக தீவிர ஆலோசனை நடைபெற்று வந்துள்ளதாக தெரிகிறது.

    அந்த வகையில், கடந்த ஞாயிற்று கிழமை வரையிலும் நிர்வாக குழு ஆல்ட்மேனை பணிநீக்கம் செய்த நடவடிக்கையில் உறுதியாகவே இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக மைக்ரோசாஃப்ட் நிறுவன தலைமை செயல் அதிகாரி சத்ய நாதெல்லா, சாம் ஆல்ட்மேனை தனது நிறுவனத்திற்கு வரவேற்க தயாராக இருப்பதாக கருத்து தெரிவித்து இருந்தார்.

    இதுதவிர ஒபன்ஏஐ நிறுவனத்தின் ஊழியர்கள் மற்றும் சாம் ஆல்ட்மேனுக்கு நெருங்கிய உயர் அதிகாரிகள் மற்றும் முதலீட்டாளர்கள் என சுமார் 700-க்கும் மேற்பட்டோர் நிர்வாக குழுவின் பணிநீக்க நடவடிக்கையை எதிர்த்து கடிதம் ஒன்றை எழுதியிருந்தனர்.

    அதில், சாம் ஆல்ட்மேனின் பணிநீக்க நடவடிக்கையை திரும்ப பெறாவிட்டால், அனைவரும் சாம் ஆல்ட்மேனுடன் வெளியேற தயாராக இருப்பதாக தெரிவித்து கையொப்பமிட்டதாக தெரிகிறது. இந்த நிலையில், சாம் ஆல்ட்மேனை மீண்டும் ஒபன்ஏஐ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக நியமிக்க நிர்வாக குழு ஒப்புக்கொள்வதாக நேற்று (நவம்பர் 21) தகவல்கள் வெளியாகின.

    "பிரெட் டெய்லர், லேரி சம்மர்ஸ் மற்றும் ஆடம் டி ஏஞ்சலோ ஆகியோர் அடங்கிய நிர்வாக குழு ஒபன்ஏஐ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக திரும்புவதற்கான ஒப்பந்தத்தை எட்டியிருக்கிறோம். இது தொடர்பான விவரங்களை சேகரிக்க இருக்கிறோம். இந்த விவகாரத்தில் இதுவரை அமைதி காத்தமைக்கு நன்றிகள்," என ஒபன்ஏஐ நிறுவனம் தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளது.

    "நான் ஒபன்ஏஐ-ஐ விரும்புகிறேன். இந்த குழு மற்றும் அதன் குறிக்கோளை ஒன்றாக வைத்துக் கொள்ள கடந்த சில நாட்களில் அனைத்தையும் செய்தேன். புதிய நிர்வாக குழு மற்றும் சத்யாவின் ஆதரவுடன், நான் ஒபன்ஏஐ-க்கு திரும்புவதில் ஆவலாக இருக்கிறேன். இத்துடன் மைக்ரோசாப்ட் உடன் பலமான கூட்டணியை உருவாக்க விரும்புகிறேன்," என்று சாம் ஆல்ட்மேன் தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

    ஒபன்ஏஐ தலைமை செயல் அதிகாரியாக சாம் ஆல்ட்மேன் நீக்கப்பட்டதும், அதன் புதிய தலைமை செயல் அதிகாரியாக ட்விட்ச் நிறுவனர் எம்மெட் ஷியர் நியமிக்கப்பட்டார். தற்போது, ஒபன்ஏஐ தனது பழைய தலைமை செயல் அதிகாரியை மீண்டும் அழைத்துக் கொண்டிருப்பதால், எம்மெட் ஷியர் நியமிக்கப்பட்டது குறித்து ஒபன்ஏஐ சார்பில் இதுவரை விளக்கம் அளிக்கப்படவில்லை.

    • கூகுள் மெசேஜஸ் செயலியில் புதிய அம்சம்.
    • புதிய அம்சம் பீட்டா வெர்ஷனில் வழங்கப்பட்டுள்ளது.

    கூகுள் நிறுவனம் தனது மெசேஜஸ் ஆப்-ஐ வாட்ஸ்அப், சிக்னல் போன்ற குறுந்தகவல் செயலிகளுக்கு போட்டியாக மாற்றும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. கூகுளின் மெசேஜஸ் செயலியில் ஆர்.சி.எஸ். எனப்படும் ரிச் கம்யூனிகேஷன் சர்வீசஸ் வசதி உள்ளது. மற்ற குறுந்தகவல் செயலிகளுடனான போட்டியை வலுப்படுத்தும் நோக்கில் கூகுள் நிறுவனம் மெசேஜஸ் செயலியில் புதிய வசதியை வழங்கி உள்ளது.

    மெசேஜஸ் செயலியில் எமோஜி ரியாக்ஷன்ஸ் அம்சம், யூடியூப் வீடியோக்களை மெசேஜஸ் செயலியில் இருந்தபடி பார்க்கும் வசதி என ஏராளமான அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன. இந்த வரிசையில் மெசேஜஸ் செயலியில் ஏற்கனவே வழங்கப்பட்டு இருக்கும் "வாய்ஸ் நோட்ஸ்" (Voice Notes) அம்சத்தில் புதிய வசதி சேர்க்கப்பட்டு இருக்கிறது.

    கோப்புப்படம்

    கோப்புப்படம்

    இந்த அம்சம் கொண்டு பயனர்கள் சிறிய வாய்ஸ் நோட்-ஐ ரெக்கார்டு செய்து அதனை மெசேஜஸ் ஆப் மூலம் மற்றவர்களுக்கு அனுப்ப முடியும். தற்போது வெளியாகி இருக்கும் புதிய அம்சம் கொண்டு பயனர்கள் வாய்ஸ் நோட் ரெக்கார்டு செய்யும் போது வெளிப்புற சத்தத்தை தவிர்க்க முடியும் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    அதன்படி கூகுள் மெசேஜஸ் செயலியின் வாய்ஸ் நோட் அம்சத்தில் நாய்ஸ் கேன்சலேஷன் (Noise Cancellation) வசதி சேர்க்கப்படுகிறது. முதற்கட்டமாக இந்த வசதி கூகுள் மெசேஜஸ் செயலியின் பீட்டா வெர்ஷனில் வழங்கப்பட்டு இருக்கிறது. இதற்காக செயலியில் நாய்ஸ் கேன்சலேஷன் பெயரில் பிரத்யேக பட்டன் வழங்கப்பட்டுள்ளது.

    இதை பயன்படுத்தும் போது வாய்ஸ் நோட்-களில் வெளிப்புற சத்தம் எதுவும் பதிவாகாது. வாய்ஸ் நோட்-இல் வழங்கப்படும் புதிய நாய்ஸ் கேன்சலேஷன் அம்சம் தற்போது டெஸ்டிங் கட்டத்திலேயே உள்ளது. அந்த வகையில், இந்த அம்சம் செயலியின் எதிர்கால அப்டேட்களில் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கலாம்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மைக்ரோசஃப்ட் நிறுவனத்தில் சாம் ஆல்ட்மேனை வரவேற்க விரும்புகிறோம்.
    • ஒபன்ஏஐ நிறுவனத்தின் நிர்வாக குழுவுடன் கருத்து மோதல்.

    ஒபன்ஏஐ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பதவியில் இருந்து சாம் ஆல்ட்மேன் நீக்கப்பட்டு ஒருவாரம் ஆகிவிட்டது. இவர் ஒபன்ஏஐ நிறுவனத்தில் இருந்து விடுவிக்கப்பட்டதில் இருந்து, தற்போதுவரை இந்த விவகாரம் தொடர்பாக பல்வேறு தகவல்கள் தினமும் வெளியாகி கொண்டே வருகிறது. இவரை ஒபன்ஏஐ நிறுவனம் எதற்காக திடீரென பணிநீக்கம் செய்தது என்ற காரணம் தொர்ந்து மர்மமாகவே உள்ளது.

    பணிநீக்கம் செய்யப்பட்டதும் மைக்ரோசஃப்ட் நிறுவனத்தில் சாம் ஆல்ட்மேனை வரவேற்க விரும்புகிறோம் என்று மைக்ரோசாஃப்ட் தலைமை செயல் அதிகாரி சத்ய நாதெல்லா கருத்து தெரிவித்து இருந்தார். இவர் மட்டுமின்றி டெக் உலகின் முன்னணி தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் பலரும் சாம் ஆல்ட்மேன் நீக்கம் குறித்து கருத்து தெரிவித்தனர்.

    இந்த நிலையில், உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், "மேம்பட்ட, அதிநவீன ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் திறன் மற்றும் ரிஸ்க் உள்ளிட்டவைகளை கருத்தில் கொண்டு நிர்வாக குழு இத்தகைய முடிவை எடுப்பதற்கான காரணத்தை பொது மக்கள் அறிந்து கொள்ள வேண்டும்," என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    ஒபன்ஏஐ நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவராக எலான் மஸ்க் இருந்தார். எனினும் ஒபன்ஏஐ நிறுவனத்தின் நிர்வாக குழுவுடன் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக எலான் மஸ்க் கடந்த 2018 ஆண்டு அந்த நிறுவனத்தில் இருந்து வெளியேறினார். மேலும் நிறுவனத்தில் தனது பங்குகள் அனைத்தையும் கொடுத்துவிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    • ஒன்பிளஸ் ஏஸ் 3 ஸ்மார்ட்போனும் அறிமுகமாகும் என தகவல்.
    • ஒன்பிளஸ் நிறுவனம் அபார வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

    ஒன்பிளஸ் நிறுவனம் தனது 10-வது ஆண்டு விழா கொண்டாட்ட நிகழ்வு டிசம்பர் 4-ம் தேதி நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. மேலும் இதே நாளில் ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனும் அறிமுகம் செய்யப்படுகிறது. ஒன்பிளஸ் 12 தவிர ஒன்பிளஸ் ஏஸ் 3 ஸ்மார்ட்போனும் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த ஸ்மார்ட்போன் ஒன்பிளஸ் 12R என்ற பெயரில் இந்தியா மற்றும் சர்வதேச சந்தைகளில் அறிமுகம் செய்யப்படலாம். ஒன்பிளஸ் நிறுவனத்தை பீட் லௌ மற்றும் கார்ல் பெய் இணைந்து டிசம்பர் 16, 2013-ம் ஆண்டு துவங்கினர். கடந்த ஆண்டுகளில் ஒன்பிளஸ் நிறுவனம் அபார வளர்ச்சியை பதிவு செய்து, சந்தையில் தனக்கென தனி அங்கீகாரத்தை பெற்று இருக்கிறது.

    அந்த வகையில் ஒன்பிளஸ் நிறுவனம் ஸ்மார்ட்போன் சந்தையில் பத்து ஆண்டுகளை கொண்டாட இருக்கிறது. இது தொடர்பான அறிவிப்பை ஒன்பிளஸ் நிறுவனம் தனது வெய்போ அக்கவுண்டில் வெளியிட்டு உள்ளது. அதன்படி கொண்டாட்ட நிகழ்வு இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு துவங்க இருக்கிறது.

    ஒன்பிளஸ் 12 எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:

    அம்சங்களை பொருத்தவரை ஒன்பிளஸ் 12 மாடலில் 6.82 இன்ச் LTPO AMOLED பேனல், 2K ப்ரோ எக்ஸ்.டி.ஆர். ரெசல்யூஷன், பன்ச் ஹோல் கட்-அவுட், குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 பிராசஸர், அட்ரினோ GPU வழங்கப்படும் என்று தெரிகிறது. இத்துடன் அதிகபட்சம் 24 ஜி.பி. ரேம், 1 டி.பி. வரையிலான ஸ்டோரேஜ், 5400 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 100 வாட் வயர்டு சார்ஜிங், 50 வாட் வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்படலாம்.

    புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 14 சார்ந்த ஆக்சிஜன் ஒ.எஸ். வழங்கப்படுகிறது. புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, OIS, 50MP அல்ட்ரா வைடு சென்சார், 64MP 3x டெலிஃபோட்டோ ஜூம், OIS வழங்கப்படும் என்று தெரிகிறது. 

    ×