என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    • விதிமுறை தமிழகத்திலும் சமீபத்தில் அமலுக்கு கொண்டுவரப்பட்டது.
    • போக்குவரத்து காவல் துறையினர் சலானை அனுப்பி வருகின்றனர்.

    வாகனங்களில் செல்வோரின் பாதுகாப்பு காரணங்களுக்காக நாடு முழுக்க பல்வேறு மாநிலங்களிலும் வேகக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. அதன்படி வாகனங்கள் குறிப்பிட்ட வேகத்தை மீறி செல்லும் போது அபராதம் செலுத்த வேண்டும். இதே போன்ற விதிமுறை தமிழகத்திலும் சமீபத்தில் அமலுக்கு கொண்டுவரப்பட்டது.

    அதன்படி சென்னையில் வேகமாக செல்லும் வாகனங்களுக்கு போக்குவரத்து காவல் துறையினர் அபராதம் செலுத்துவதற்கான சலானை அனுப்பி வருகின்றனர். அந்த வகையில், பயனர்கள் சலான் செலுத்துவதை தவிர்க்க செய்யும் நோக்கில், கூகுள் நிறுவனம் தனது மேப்ஸ் சேவையில் புதிய வசதியை கொண்டுவந்து இருக்கிறது.

    இதற்காக கூகுள் மேப்ஸ் சேவையில் எந்தெந்த பகுதிகளில் வேகக்கட்டுபாடுகள் விதிக்கப்பட்டு இருக்கின்றன என்ற விவரங்களை உலகளவில் வழங்கிவருகிறது. அதன்படி உள்ளூர் சாலை ஒன்றில் செல்லும் போது வேகக்கட்டுபாடுகளுக்கு ஏற்ப சலான் பெறுவதை தவிர்க்க செய்யும் கூகுள் மேப்ஸ் அம்சத்தை எப்படி செயல்படுத்த வேண்டும் என்பது பற்றி தொடர்ந்து பார்ப்போம்.

    - ஸ்மார்ட்போனில் கூகுள் மேப்ஸ் செயலியை லான்ச் செய்யுங்கள்

    - அக்கவுண்ட் செட்டிங்ஸ் (Account Settings) ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்

    - பிறகு செட்டிங்ஸ் (Settings) ஆப்ஷனில் உள்ள நேவிகேஷன் செட்டிங்ஸ் (Navigation Settings) ஆப்ஷன்களை கிளிக் செய்ய வேண்டும்

    - நேவிகேஷன் செட்டிங்ஸ் (Navigation Settings) ஆப்ஷனில் உள்ள டிரைவிங் ஆப்ஷன்ஸ் (Driving Options) ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்

    - டிரைவிங் ஆப்ஷன்ஸ் (Driving Options) ஆப்ஷனில் உள்ள ஸ்பீடோமீட்டர் (Speedometer) ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

    - ஸ்பீடோமீட்டர் ஆப்ஷனை கிளிக் செய்ததும் கூகுள் மேப்ஸ் கொண்டு நேவிகேட் செய்யும் போது ஜி.பி.எஸ். வேகம் காண்பிக்கப்படும். இந்த அம்சம் வேகம் அதிகரிக்கும் போது நிறம் மாறி எச்சரிக்கை விடுக்கும்.

    ஸ்பீடோமீட்டர் எப்படி வேலை செய்யும் என்பது பற்றி கூகுள் நிறுவனம் விளக்கம் அளித்து இருக்கிறது. அதன்படி ஏ.ஐ. தொழில்நுட்பம், ஸ்டிரீட் வியூ படங்கள் மற்றும் மூன்றாம் தரப்பு படங்களை பயன்படுத்தி கூகுள் மேப்ஸ் வேகக்கட்டுப்பாடு பற்றிய எச்சரிக்கையை கொடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதற்காக உலகம் முழுக்க நூற்றுக்கும் அதிகமான அடையாள குறியீடுகளில் சோதனை செய்யப்பட்டது.

    இவ்வாறு கூகுள் மேப்ஸ்-இல் உள்ள ஏ.ஐ. மாடல் ஒரு எச்சரிக்கை குறியீடை கண்டறிந்தால். உடனே ஜி.பி.எஸ். விவரங்களை கொண்டு அதில் உள்ள ஒற்றுமையை உறுதிப்படுத்தி அதற்கு ஏற்ப வேகக்கட்டுப்பாடு விதிகளை அப்டேட் செய்து கொள்ளும். இதோடு போக்குவரத்து முறைகளை கொண்டு வேகத்தில் மாற்றங்களை மேற்கொள்ளும்.

    • கூகுள் வலைதள பதிவில் இடம்பெற்று இருக்கிறது.
    • விதிகளின் கீழ் வரும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    வாட்ஸ்அப் பேக்கப் செய்வது குறித்து கூகுள் அதிர்ச்சி தகவலை தெரிவித்து இருக்கிறது. அதன்படி வாட்ஸ்அப் சாட் ஹிஸ்டரி பேக்கப் தகவல்கள் அனைத்தும் கூகுள் கிளவுட் ஸ்டோரேஜ் கட்டுப்பாடு விதிகளின் கீழ் வரும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இது தொடர்பான தகவல் கூகுள் வலைதள பதிவில் இடம்பெற்று இருக்கிறது.

    புதிய கட்டுப்பாட்டு விதிகளில் இருந்து தப்பிக்க, பயனர்கள் தங்களின் ஃபைல் சைஸ் அளவை குறைக்கவோ அல்லது கூடுதல் ஸ்டோரேஜை வாங்கிக் கொள்ளலாம் என்று கூகுள் தெரிவித்து உள்ளது. தற்போது வரை கூகுள் கிளவுட் ஸ்டோரேஜ் சேவையில் பயனர்கள் அதிகபட்சம் 15 ஜி.பி. வரையிலான தரவுகளை இலவசமாக வைத்துக் கொள்ள முடியும்.

    பேக்கப்களுக்கு வழங்கப்பட்டு வந்த அன்லிமிடெட் ஸ்டோரேஜை நிறுத்திக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு கூகுள் வந்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளாக ஆண்ட்ராய்டு வாட்ஸ்அப் பேக்கப்களுக்கு அன்லிமிடெட் ஸ்டோரேஜ் வழங்கப்பட்டு வந்த நிலையில், விரைவில் இந்த வழிமுறையில் மாற்றம் செய்யப்பட இருக்கிறது.

    "ஆண்ட்ராய்டில் வாட்ஸ்அப் பேக்கப்களை செயல்படுத்த விரும்பினால், தனிப்பட்ட கூகுள் அக்கவுண்ட்களுடன் 15 ஜி.பி. வரையிலான ஸ்டோரேஜ் எவ்வித கட்டணமும் இன்றி இலவசமாக வழங்கப்படுகிறது. இது கூகுள் டிரைவ், ஜிமெயில் மற்றும் கூகுள் போட்டோஸ் போன்ற மொபைல் தளங்களில் பகிரப்படுவதை விட மும்மடங்கு அதிகம் ஆகும்."

    "பயனரின் தனிப்பட்ட கூகுள் அக்கவுண்ட்-இல் ஸ்டோரேஜ் இருக்கும் வரை ஆண்ட்ராய்டு தளத்தில் வாட்ஸ்அப் பேக்கப்கள் தொடர்ந்து வேலை செய்யும். ஸ்டோரேஜ் அளவை நெருங்கும் பட்சத்தில், தொடர்ந்து பேக்கப் சேவையை பெற ஸ்டோரேஜை அதிகப்படுத்த வேண்டும்," என்று கூகுள் வலைதள பதிவில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    புதிய மாற்றத்தின் படி இந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் இருந்து வாட்ஸ்அப் பீட்டா பயனர்களுக்கு அமலுக்கு கொண்டுவரப்படுகிறது. பிறகு அடுத்தாண்டு துவக்கத்தில் வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பயனர்கள் அனைவருக்கும் இந்த அம்சம் அமலுக்கு வரும் என்று கூகுள் தெரிவித்துள்ளது.

    • ஒன்பிளஸ் பேட் கோ போன்றே காட்சியளிக்கிறது.
    • ஒப்போ ரெனோ 11 சீரிஸ் மாடல்களும் அறிமுகம்.

    ஒப்போ நிறுவனத்தின் புதிய பேட் ஏர் 2 மாடல் அடுத்த வாரம் அறிமுகம் செய்யப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. முதற்கட்டமாக சீன சந்தையில் அறிமுகம் செய்யப்படும் இந்த மாடல் ஏற்கனவே விற்பனை செய்யப்படும் ஒப்போ பேட் ஏர் மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். புதிய டேப்லெட் வெளியீட்டை ஒட்டி, இதன் சிறப்பம்சங்கள் மற்றும் டிசைன் சார்ந்த விவரங்கள் டீசர்களாக வெளியாகி உள்ளன.

    டீசர்களின் படி இந்த டேப்லெட் தடிமனான டிஸ்ப்ளே, வளைந்த கார்னர்கள் மற்றும் இருவித நிறங்களை கொண்டிருக்கும் என்று தெரியவந்துள்ளது. இதன் டிசைனை பார்க்க ஒப்போ பேட் ஏர் மற்றும் ஒன்பிளஸ் பேட் கோ போன்றே காட்சியளிக்கிறது. நவம்பர் 23-ம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கும் ஒப்போ பேட் ஏர் 2 மாடலுடன் ஒப்போ ரெனோ 11 மற்றும் ரெனோ 11 ப்ரோ ஸ்மார்ட்போன்களும் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது.

    புதிய ஒப்போ பேட் ஏர் 2 டேப்லெட் ஒன்பிளஸ் பேட் கோ மாடலின் ரி-பிராண்டு செய்யப்பட்ட வெர்ஷனாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இது குறித்து டிப்ஸ்டரான டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் வெளியிட்டு இருக்கும் தகவல்களில் புதிய ஒப்போ பேட் ஏர் 2 விலை CNY1000 இந்திய மதிப்பில் ரூ. 11 ஆயிரத்து 500 வரை நிர்ணயம் செய்யப்படும் என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    அம்சங்களை பொருத்தவரை ஒன்பிளஸ் பேட் கோ மாடலில் 11.35 இன்ச் 2.4K 1720x2408 பிக்சல் LCD டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட், மீடியாடெக் ஹீலியோ ஜி99 பிராசஸர், 8 ஜி.பி. ரேம், அதிகபட்சம் 256 ஜி.பி. மெமரி, 8MP பிரைமரி கேமரா, EIS, 8MP செல்ஃபி கேமரா, 8000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் 33 வாட் சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது.

    • ரெட்மி நோட் 13 சீரிஸ் மாடல்கள் சீனாவில் விற்பனை செய்யப்படுகின்றன.
    • புதிய ரெட்மி நோட் சீரிஸ் விவரங்கள் லீக் ஆகி இருக்கிறது.

    சியோமி நிறுவனம் தனது ரெட்மி நோட் 13 5ஜி ஸ்மார்ட்போனினை கடந்த செப்டம்பர் மாதம் சீன சந்தையில் அறிமுகம் செய்தது. இத்துடன் ரெட்மி நோட் 13 ப்ரோ சீரிஸ் மாடல்களும் அறிமுகம் செய்யப்பட்டன. இந்த நிலையில், ரெட்மி நோட் 13 ப்ரோ சீரிசின் புதிய ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.

    புதிய ஸ்மார்ட்போன் ரெட்மி நோட் 13R ப்ரோ எனும் பெயரில் அறிமுகம் செய்யப்படும் என்று சீன டெலிகாம் வலைதளத்தின் மூலம் தெரியவந்துள்ளது. இத்துடன் ரெட்மி நோட் 13R ப்ரோ மாடலின் டிசைன் மற்றும் அம்சங்கள் பற்றிய தகவல்களும் வெளியாகி உள்ளன. அதன்படி இந்த மாடலில் 6.67 இன்ச் FHD+ ஸ்கிரீன் MT6833 பிராசஸர் வழங்கப்படும் என தகவல்.

    ரெட்மி நோட் 13R ப்ரோ அம்சங்கள்:

    6.67 இன்ச் FHD+ 1080x2400 பிக்சல் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே

    கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு

    ஆக்டா கோர் மீடியாடெக் 6080 பிராசஸர்

    மாலி G57 MC2 GPU

    12 ஜி.பி. ரேம்

    256 ஜி.பி. மெமரி

    ஆண்ட்ராய்டு 13 சார்ந்த MIUI14

    டூயல் சிம் ஸ்லாட்

    108MP பிரைமரி கேமரா

    2MP டெப்த் கேமரா

    16MP செல்ஃபி கேமரா

    பக்கவாட்டில் கைரேகை சென்சார்

    3.5mm ஆடியோ ஜாக்

    5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.3

    யு.எஸ்.பி. டைப் சி

    5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

    ரெட்மி நோட் 13R ப்ரோ 5ஜி மாடல் மிட்நைட் பிளாக், டைம் புளூ மற்றும் டான் கோல்டு போன்ற நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 1999 யுவான்கள் இந்திய மதிப்பில் ரூ. 23 ஆயிரத்து 525 என்று நிர்ணயம் செய்யப்படலாம். இந்த ஸ்மார்ட்போன் நவம்பர் 20-ம் தேதி அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

    • புதிய வகை பொருட்களை கொண்டு OLED பேனல்களை உற்பத்தி செய்வதாக தகவல்.
    • இவ்வாறு செய்யும் போது, OLED பேனல்களின் திறன் மற்றும் பிரைட்னஸ் அதிகரிக்கும்.

    ஆப்பிள் நிறுவனத்தின் எதிர்கால ஐபோன் மாடல்களில் நீண்ட நேர பேட்டரி பேக்கப் கிடைக்கும் என புதிய தகவல் வெளியாகி உள்ளது. மேலும், ஐபோன்களின் பேட்டரி பேக்கப் அதிகரிக்க சாம்சங் முக்கிய காரணமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. ஆப்பிள் ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தப்படும் OLED பேனல்களை சாம்சங் நிறுவனமும் உற்பத்தி செய்து வருவது அனைவரும் அறிந்ததே.

    அதன்படி OLED உற்பத்தியில் சாம்சங் மேற்கொள்ள இருக்கும் அதிரடி மாற்றம் காரணமாக ஐபோன்களின் பேட்டரி நீண்ட நேரத்திற்கு பேக்கப் வழங்கும் என்று கூறப்படுகிறது. இதற்காக சாம்சங் நிறுவனம் புதிய வகை பொருட்களை கொண்டு OLED பேனல்களை உற்பத்தி செய்ய திட்டமிடுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த புதிய வகை பொருட்கள் குறைந்த அளவு மின்திறனை எடுத்துக் கொள்ளும் என்று தெரிகிறது.

    சாம்சங் டிஸ்ப்ளே நிறுவனம் இது தொடர்பான ஆய்வுகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. ஆய்வில் உருவாக்கப்படும் புதிய வகை பாகங்கள், ஏற்கனவே உள்ள OLED பாகங்களுடன் ஒருங்கிணைக்கப்படும். இவ்வாறு செய்யும் போது, OLED பேனல்களின் திறன் மற்றும் பிரைட்னஸ் அதிகரிக்கும் என்று தெரிகிறது.

    2026 ஆண்டு வாக்கில் சாம்சங்கின் புதிய வகை தொழில்நுட்பம் தயார் நிலைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் சாம்சங் உருவாக்கி வரும் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் முதல் ஐபோன் என்ற பெருமையை ஐபோன் 18 பெறும் என்று எதிர்பார்க்கலாம்.

    • ரெட் மேஜிக் 9 ப்ரோ ஸ்மார்ட்போன் மூன்று நிறங்களில் கிடைக்கிறது.
    • இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 பிராசஸர் வழங்கப்படும் என தகவல்.

    நுபியா நிறுவனம் தனது அடுத்த தலைமுறை ஃபிளாக்ஷிப் ரெட் மேஜிக் 9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை விரைவில் அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், புதிய ரெட் மேஜிக் 9 ப்ரோ ஸ்மார்ட்போனிற்கான அதிகாரப்பூர்வ ரெண்டர்களை நுபியா வெளியிட்டு உள்ளது.

    புதிய ரெட் மேஜிக் 9 சீரிஸ் மாடல்கள் நவம்பர் 23-ம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. தற்போதைய ரெண்டர்களின் படி ரெட் மேஜிக் 9 ப்ரோ மாடல் டுயெடெரியம் டிரான்ஸ்பேரண்ட் சில்வர் விங்ஸ், டுயெடெரியம் டிரான்ஸ்பேரண்ட் டார்க் நைட் மற்றும் டார்க் நைட் வேரியண்ட் என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கும் என்று தெரியவந்துள்ளது.

    பெயருக்கு ஏற்றார்போல் இந்த ஸ்மார்ட்போனின் டிரான்ஸ்பேரண்ட் நிற ஆப்ஷன்களில் போனின் பாகங்கள் தெரியும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனிற்கான டீசர்களின் படி இதன் பின்புற பேக் பேனலில் கேமரா பம்ப் எதுவும் இடம்பெறவில்லை. மேலும் ஃபுல் ஸ்கிரீன் அனுபவத்தை வழங்குவதற்காக இந்த மாடலில் அன்டர் ஸ்கிரீன் செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது.

    ரெட் மேஜிக் 9 ப்ரோ மாடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 பிராசஸர் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, OIS, 50MP அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ் வழங்கப்படுகிறது.

    • என்ட்ரி லெவல் ஃபோல்டபில் ஸ்மார்ட்போன்கள் சந்தையில் களமிறங்க இருப்பதாக தகவல்.
    • மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை அதிக வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்க்க முடியும்.

    சாம்சங் நிறுவனம் குறைந்த விலையில் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருப்பதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகின. சாம்சங் நிறுவனத்தின் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் மிட் ரேன்ஜ் பிரிவில் நிர்ணயம் செய்யப்படும் என்று கூறப்பட்டது. இந்த நிலையில், சாம்சங் சார்பில் இந்த தகவலுக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது.

    கேலக்ஸி ஃபோல்டு சீரிஸ் மூலம் சாம்சங் நிறுவனம் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் பிரிவில் களமிறங்கியது. பிறகு கேலக்ஸி Z ஃபோல்டு மற்றும் Z ஃப்ளிப் சீரிஸ் வரை தொடர்ந்து புதிய மாடல்களை அறிமுகம் செய்தது. முதல் தலைமுறை கேலக்ஸி ஃபோல்டு மாடலின் விலை 1980 டாலர்கள் என்று நிர்ணயம் செய்யப்பட்டது.

    பிறகு, இதன் தொடர்ச்சியாக அறிமுகம் செய்யப்பட்ட கேலக்ஸி Z ஃபோல்டு 3 விலை சற்றே குறைக்கப்பட்டு 1799 டாலர்கள் என்றும் கேலக்ஸி Z ஃப்ளிப் 3 விலை 999 டாலர்கள் என்றும் நிர்ணயம் செய்யப்பட்டது. சமீபத்திய கேலக்ஸி Z ஃபோல்டு 5 மற்றும் கேலக்ஸி Z ஃப்ளிப் 5 மாடல்களின் விலை அதன் முந்தைய வெர்ஷனை போன்றே நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.

    2024 ஆண்டு துவக்கத்தில் சாம்சங் நிறுவனம் என்ட்ரி லெவல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் சந்தையில் களமிறங்க இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. மேலும் இதன் விலை 800 டாலர்கள் வரை நிர்ணயம் செய்யப்படும் என்றும் கூறப்பட்டது. இதன் மூலம் சாம்சங் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை அதிக வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்க்க முடியும் என்று கூறப்பட்டது.

    எனினும், சாம்சங் எலெக்டிரானிக்ஸ் நிறுவன செய்தி தொடர்பாளர் குறைந்த விலை மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் குறித்து விளக்கம் அளித்து இருக்கிறார். "மிட் ரேன்ஜ் பிரிவில் நிலை நிறுத்தக்கூடிய அளவுக்கு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை உற்பத்தி செய்வது தொடர்பாக எந்த திட்டமும் இல்லை, சமீபத்திய தகவல்களில் எவ்வித அடிப்படை ஆதாரமும் இல்லை," என்று அவர் தெரிவித்தார்.

    • லாக்டு சாட்களை மறைத்து வைத்துக் கொள்ளும் வசதியை வழங்குகிறது.
    • பிரைவசி செட்டிங்களில் இருந்து லாக்டு சாட்களை அழிக்க முடியும்.

    வாட்ஸ்அப் செயலியில் சமீபத்தில் தான் "சாட் லாக்" (Chat Lock) என்ற பெயரில் புதிய அம்சம் அறிமுகம் செய்யப்பட்டது. இது பயனரின் தனியுரிமையை பாதுகாக்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. தற்போது பயனர் தனியுரிமையை பாதுகாக்கும் கூடுதல் அம்சத்தினை வாட்ஸ்அப் அறிமுகம் செய்து இருக்கிறது.

    "சீக்ரெட் கோட்" (Secret Code) என்று அழைக்கப்படும் புதிய அம்சம் வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷனில் வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய சீக்ரெட் கோட் அம்சம் கொண்டு பயனர்கள் லாக்டு சாட்களை மறைத்து வைத்துக் கொள்ளும் வசதியை வழங்குகிறது.

    வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா 2.23.24.20 வெர்ஷனை அப்டேட் செய்த பிறகு, பயனர்கள் லாக்டு சாட்களில் புதிதாக செட்டிங்ஸ் ஆப்ஷனை பார்க்க முடியும். இந்த பகுதியில் லாக்டு சாட்களை இயக்க அனுமதிக்கும் என்ட்ரி பாயின்ட்-ஐ மறைத்து வைத்துக் கொள்ளும் வசதி வழங்கப்படுகிறது. சீக்ரெட் கோட் செட்டப் செய்து முடித்ததும், லாக்டு சாட்-இல் என்ட்ரி பாயின்ட் சாட் லிஸ்ட்-இல் இடம்பெற்று இருக்காது.

    மாறாக பயனர்கள் சாட் டேப்-இல் உள்ள சர்ச் பாரில் சீக்ரெட் கோடை பதிவிட்டு, லாக்டு சாட்-ஐ இயக்க முடியும். ஒருவளை சீக்ரெட் கோட்-ஐ பயனர்கள் மறந்து போகும் பட்சத்தில், சில பீட்டா டெஸ்டர்களுக்கு மட்டும் பிரைவசி செட்டிங்களில் இருந்து லாக்டு சாட்களை அழிக்கும் வசதி வழங்கப்படுகிறது. தற்போது பீட்டா வெர்ஷனில் வழங்கப்பட்டு இருக்கும் புதிய அம்சம் விரைவில் அனைவருக்கும் வழங்கப்படலாம்.

    Photo Courtesy: WABetaInfo

    • ஜியோ ஏர் ஃபைபர் சேவை முதற்கட்டமாக குறைந்த நகரங்களில் அறிமுகம் செய்யப்பட்டது.
    • தமிழகத்தின் 21 மாவட்டங்களில் தற்போது ஜியோ ஏர் ஃபைபர் சேவை வழங்கப்படுகிறது.

    ஜியோ நிறுவனத்தின் ஏர் ஃபைபர் சேவை கடந்த செப்டம்பர் மாதம் தேர்வு செய்யப்பட்ட நகரங்களில் அறிமுகம் செய்யப்பட்டது. பிராட்பேண்ட்-போன்ற இணைய சேவையை ஜியோ 5ஜி கனெக்டிவிட்டி மூலம் வழங்குவதே ஜியோ ஏர் ஃபைபர் சேவை ஆகும். முதற்கட்டமாக குறைந்த நகரங்களில் அறிமுகம் செய்யப்பட்ட ஏர் ஃபைபர் சேவை தற்போது நாடு முழுக்க 115 நகரங்களில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

    அதன்படி ஜியோ ஏர் ஃபைபர் சேவை மேற்கு வங்காளம், தமிழ்நாடு, டெல்லி, மகாராஷ்டிரா, கர்நாடகா, தெலுங்கானா, குஜராத் மற்றும் ஆந்திர பிரதேசம் போன்ற மாநிலங்களில் கிடைக்கிறது. இந்த மாநிலங்களில் தேர்வு செய்யப்பட்ட நகரங்களில் மட்டுமே இந்த சேவை வழங்கப்பட்டு இருக்கிறது.

    தமிழ்நாட்டில் சென்னை, திருவள்ளூர், ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ஆம்பூர், மதுரை, கரூர், நாமக்கல், நெய்வேலி, பொள்ளாச்சி, சேலம், கோயம்புத்தூர், ஓசூர், கும்பகோணம், திருச்சி, திருப்பூர், ஸ்ரீரங்கம் மற்றும் வேலூர் போன்ற பகுதிகளில் ஜியோ ஏர் ஃபைபர் சேவை வழங்கப்படுகிறது.

    விலையை பொருத்தவரை ஜியோ ஏர் ஃபபைர் சேவைக்கான கட்டணம் மாதம் ரூ. 599 என துவங்குகிறது. 30 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இந்த சலுகையில் 30Mbps வரையிலான இணைய வேகம், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், ஜீ5, சோனிலிவ் உள்பட 11 ஒ.டி.டி. சேவைக்கான சந்தா, 550 டி.வி. சேனல்கள் வழங்கப்படுகின்றன.

    இதுதவிர ஜியோ ஏர் ஃபைபர் சேவை ரூ. 899, ரூ. 1199, ரூ. 1499, ரூ. 2499 மற்றும் ரூ. 3999 விலைகளில் வழங்கப்படுகின்றன. ரூ. 3999 சலுகை 30 நாட்களுக்கான வேலிடிட்டி கொண்டுள்ளது. இதில் 1Gbps வேகம் கொண்ட இணைய சேவை, அமேசான் பிரைம், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், சோனிலிவ் மற்றும் 13-க்கும் அதிக ஒ.டி.டி. சேவைக்கான சந்தா மற்றும் 550 டி.வி. சேனல்கள் வழங்கப்படுகின்றன.

    • வழிமுறையை மாற்றுவது குறித்து ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.
    • பன்ச் ஹோல் ரக டிசைனை ஆப்பிள் பரிசோதனை செய்து வருகிறது.

    ஆப்பிள் நிறுவனம் கடந்த செப்டம்பர் மாதத்தில் அறிமுகம் செய்த ஐபோன் 15 சீரிஸ் வரை தனது டிஸ்ப்ளேக்களில் நாட்ச் ரக டிசைனை வழங்குவதில் மிகவும் கவனமாக இருந்துள்ளது. எனினும், ஏற்கனவே உள்ள டிசைனில் மென்பொருள் மாற்றங்களை செய்து 'டைனமிக் ஐலேண்ட்' எனும் அம்சத்தினை அறிமுகம் செய்தது. இந்த அம்சம் ஸ்கிரீனில் அதிக இடவசதியை வழங்கியதோடு, சிறப்பான அனுபவத்தை வழங்கியது.

    இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் ஐபோன் 16 ப்ரோ மாடலில் தற்போதைய வழிமுறையை மாற்றுவது குறித்து ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. ஐபோன் 16 ப்ரோ மாடலில் பன்ச்-ஹோல் டிஸ்ப்ளே வழங்க ஆப்பிள் திட்டமிடுவதாக தெரிகிறது.

    டிப்ஸ்டரான மஜின் பு வெளியிட்டு இருக்கும் தகவல்களில் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 16 ப்ரோ மாடலின் பன்ச் ஹோல் டிஸ்ப்ளே கொண்ட வெர்ஷனை உருவாக்கி வருவதாக தெரிவித்து இருக்கிறார். பன்ச் ஹோல் ரக டிசைனை ஆப்பிள் பரிசோதனை செய்து வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

    அந்த வகையில், இந்த டிசைன் கொண்ட மாடல் விற்பனைக்கும் அறிமுகம் செய்யப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இது பற்றிய தகவல்கள் அடுத்த ஆண்டு மார்ச் மாத வாக்கில் வெளியாகும் என்று அவர் தெரிவித்துள்ளார். ஐபோன் 16 ப்ரோ மற்றும் 16 ப்ரோ மேக்ஸ் மாடல்களில் தற்போதைய ஐபோன் 15 ப்ரோ மாடல்களில் இருப்பதை விட அளவில் பெரிய டிஸ்ப்ளேக்கள் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

    அடுத்த தலைமுறை ஐபோன் மாடல்கள் பற்றிய தகவல்கள் ஏற்கனவே பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. எனினும், இவற்றில் பெரும்பாலானவை உறுதிப்படுத்த முடியாத நிலையிலேயே உள்ளது. அடுத்த ஆண்டும் ஆப்பிள் நிறுவனம்- ஐபோன் 16, ஐபோன் 16 பிளஸ், ஐபோன் 16 ப்ரோ மற்றும் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் என நான்கு மாடல்களை அறிமுகம் செய்யலாம்.

    • ஐகூ 12 ஸ்மார்ட்போன் பி.எம்.டபிள்யூ. எடிஷனில் கிடைக்கும் என தெரியவந்துள்ளது.
    • ஐகூ 12 ஸ்மார்ட்போன் அமேசான் வலைதளத்தில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட இருக்கிறது.

    ஐகூ பிராண்டு தனது ஐகூ 12 ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்பதை ஏற்கனவே அறிவித்துவிட்டது. எனினும், இதன் சரியான வெளியீட்டு தேதி ரகசியமாகவே வைக்கப்பட்டு இருந்தது. தற்போது ஐகூ வெளியிட்டு இருக்கும் புதிய அறிவிப்பில் ஐகூ 12 ஸ்மார்ட்போன் இந்தியாவில் டிசம்பர் 12-ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    இந்திய சந்தையில் புதிய ஐகூ 12 ஸ்மார்ட்போன் அமேசான் வலைதளத்தில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட இருக்கிறது. ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 பிராசஸர் கொண்டு இந்தியாவில் அறிமுகமாகும் முதல் ஸ்மார்ட்போன் என்ற பெருமையை ஐகூ 12 பெறும் என்று ஐகூ தெரிவித்து இருக்கிறது. இதுகுறித்த டீசரில் ஐகூ 12 ஸ்மார்ட்போன் பி.எம்.டபிள்யூ. எடிஷனில் கிடைக்கும் என தெரியவந்துள்ளது. இதுதவிர பிளாக் நிறத்திலும் கிடைக்கலாம்.

     

    ஐகூ 12 எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:

    6.78 இன்ச் 2800x1260 பிக்சல் 1.5K LTPO AMOLED, 144Hz வேரியபில் ரிப்ரெஷ் ரேட்

    ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 பிராசஸர்

    அட்ரினோ 750 GPU

    12 ஜி.பி., 16 ஜி.பி. ரேம்

    256 ஜி.பி., 512 ஜி.பி. மெமரி

    ஆண்ட்ராய்டு 14 சார்ந்த ஃபன்டச் ஒ.எஸ். 14

    டூயல் சிம் ஸ்லாட்

    50MP பிரைமரி கேமரா, ஆம்னிவிஷன், OIS

    50MP அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா

    64MP டெலிபோட்டோ கேமரா

    16MP செல்ஃபி கேமரா

    இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்

    யு.எஸ்.பி. டைப் சி ஆடியோ

    ஸ்டீரியோ ஸ்பீக்கர், ஹை-ஃபை ஆடியோ

    5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, ப்ளூடூத் 5.4

    5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    120 வாட் அல்ட்ரா ஃபாஸ்ட் ஃபிளாஷ் சார்ஜிங்

    50 வாட் வயர்லெஸ் சார்ஜிங், ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங்

    • கூகுள் அக்கவுண்ட் மற்றும் அதன் தரவுகள் உள்ளிட்டவை அழிக்கப்பட்டு விடும்.
    • இந்த அக்கவுண்ட்கள் எளிதில் ஹேக் செய்யப்படலாம்.

    ஜிமெயில் சேவையை நீண்ட காலமாக பயன்படுத்தாமல் இருப்பவர்கள் தங்களின், அக்கவுண்ட்-ஐ இழக்கும் வாய்ப்புகள் அதிகரித்து இருக்கிறது. குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகளாக பயன்படுத்தாமல் இருக்கும் அக்கவுண்ட்களை செயலிழக்க செய்யும் நடவடிக்கையாக, டிசம்பர் 2023 மாதத்தில் லட்சக்கணக்கான ஜிமெயில் அக்கவுண்ட்கள் அழிக்கப்படும் அபாயம் எழுந்துள்ளது.

    இரண்டு ஆண்டுகள் வரை பயன்படுத்தாமல் இருக்கும் கூகுள் அக்கவுண்ட்களை, டிசம்பர் மாதத்தில் இருந்து அழிக்கும் வகையில், நடைமுறை மாற்றங்களை கூகுள் மேற்கொண்டு வருகிறது. அதன்படி பயன்படுத்தாமல் இருக்கும் கூகுள் அக்கவுண்ட், அதன் தரவுகள் கூகுள் வொர்க்ஸ்பேஸ்-இன் கீழ் உள்ள ஜிமெயில், டாக்ஸ், டிரைவ், மீட், காலண்டர் உள்ளிட்டவைகளும், கூகுள் போட்டோஸ் உள்ளிட்டவை அழிக்கப்பட்டு விடும் என்று கூகுள் நிறுவனத்தின் பிராடக்ட் மேனேஜ்மெண்ட் பிரிவு துணை தலைவர் ரூத் ரிச்செலி தெரிவித்துள்ளார்.

    "எங்களது மதிப்பீடுகளின் படி, தொடர்ந்து பயன்படுத்தும் அக்கவுண்ட்களுடன் ஒப்பிடும் போது பயன்படுத்தாமல் இருக்கும் அக்கவுண்ட்களில் டூ-ஸ்டெப் வெரிஃபிகேஷன் செயல்படுத்தப்பட்டு இருப்பதற்கான வாய்ப்புகள் 10 சதவீதத்திற்கும் குறைவு என தெரியவந்துள்ளது. இந்த அக்கவுண்ட்கள் எளிதில் ஹேக் செய்யப்படலாம். அதன்பிறகு, இதனை எந்த விதமான தீய செயல்களுக்கும் எளிதில் பயன்படுத்த முடியும்," என்று இது தொடர்பான வலைதள பதிவில் ரூத் ரிச்செலி குறிப்பிட்டுள்ளார்.

    இந்த நடவடிக்கையின் கீழ் ஜிமெயில் அக்கவுண்ட்-ஐ இரண்டு ஆண்டுகள் வரை திறக்காமல் இருக்கும் தனிப்பட்ட கூகுள் அக்கவுண்ட்கள் மட்டுமே பாதிக்கப்படும். இதன் காரணமாக நிர்வாகங்களான பள்ளி மற்றும் வியாபாரங்கள் பயன்படுத்தும் அக்கவுண்ட்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.

    கூகுள் அக்கவுண்ட்-ஐ பாதுகாப்பது எப்படி?

    கூகுள் அக்கவுண்ட் அழிக்கப்படுவதை தவிர்க்க, குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறையேனும் அதனை சைன்-இன் செய்ய வேண்டும். சமீபத்தில் ஏதேனும் கூகுள் சேவையை பயன்படுத்துவதற்கு கூகுள் அக்கவுண்ட்-ஐ பயன்படுத்தி இருந்தாலும், அக்கவுண்ட் ஆக்டிவ் நிலையில் இருப்பதாக கருத்தில் கொள்ளப்படும்.

    ×