என் மலர்
தொழில்நுட்பம்
- ஆப்பிள் வாட்ச் மாடல்களுக்கும் சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
- ஐபோன் 14 மாடலின் 128 ஜி.பி. வேரியண்டிற்கானது ஆகும்.
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 15 சீரிஸ் மாடல்களுக்கு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. அதன்படி ஐபோன் 15 மாடலுக்கு ரூ. 8 ஆயிரம் வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஐபோன் 15 தவிர ஐபோன் 14 மற்றும் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9 மாடல்களுக்கும் சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
பிளாக் ஃபிரைடே சேல் பெயரில் ஆப்பிள் அதிகாரப்பூர்வ விற்பனையாளரான இன்வென்ட் ஸ்டோர் ஐபோன் 15 மாடலுக்கு ரூ. 3 ஆயிரம் வரை உடனடி தள்ளுபடி வழங்குகிறது. இத்துடன் ரூ. 5 ஆயிரம் ரையிலான கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இதை சேர்க்கும் போது ஐபோன் 15 மாடலின் விலை ரூ. 8 ஆயிரம் வரை குறைந்துவிடும்.

அந்த வகையில், ஐபோன் 15 விலை ரூ. 79 ஆயிரத்து 900-இல் இருந்து ரூ. 71 ஆயிரத்து 900 ஆக குறைந்துவிடும். ஐபோன் 14 மாடலுக்கு ரூ. 9 ஆயிரம் வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதில் ரூ. 5 ஆயிரம் உடனடி தள்ளுபடியாகவும், ரூ. 4 ஆயிரம் கேஷ்பேக் வடிவிலும் வழங்கப்படுகிறது. இது ஐபோன் 14 மாடலின் 128 ஜி.பி. வேரியண்டிற்கானது ஆகும்.
அந்த வகையில், ஐபோன் 14 மாடலின் விலை ரூ. 69 ஆயிரத்து 900-இல் இருந்து ரூ. 60 ஆயிரத்து 900 என குறைந்து இருக்கிறது. ஐபோன் 14 ஸ்மார்ட்போன் 256 ஜி.பி. மற்றும் 512 ஜி.பி. என மொத்தம் மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9 மாடலுக்கு ரூ. 2 ஆயிரத்து 500 வரை உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது.

அதன்படி ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9 விலை ரூ. 39 ஆயிரத்து 400-க்கே கிடைக்கிறது. இதன் உண்மையான விலை ரூ. 41 ஆயிரத்து 900 ஆகும். ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9 மாடல் ஜி.பி.எஸ். மற்றும் செல்லுலார் வேரியண்ட்களில் கிடைக்கிறது. இத்துடன் அலுமினியம் மற்றும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் என இருவித ஃபினிஷ்களில் கிடைக்கிறது.
- இரு மாடல்களிலும் ஸ்னாப்டிராகன் 8 ஜென் பிளஸ் 3 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது.
- ரெட்மேஜிக் 9 ப்ரோ மாடலில் 6500 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 80 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.
ரெட்மேஜிக் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ரெட்மேஜிக் 9 ப்ரோ மற்றும் ரெட்மேஜிக் 9 ப்ரோ பிளஸ் மாடல்கள் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டன. இவை ரெட்மேஜிக் நிறுவனத்தின் முற்றிலும் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள் ஆகும். இரு மாடல்களிலும் அதிநவீன ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 பிராசஸர் வழங்கப்பட்டு உள்ளன.
இத்துடன் அதிகபட்சம் 24 ஜி.பி. ரேம், 1 டி.பி. வரையிலான மெமரி வழங்கப்படுகிறது. இவற்றில் 6.8 இன்ச் OLED BOE Q9+ ஸ்கிரீன், அதிகபட்சம் 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், 1600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வழங்கப்படுகிறது. புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 50MP அல்ட்ரா வைடு கேமரா, 16MP அன்டர் ஸ்கிரீன் செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது.
ரெட்மேஜிக் 9 ப்ரோ மாடலில் 6500 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 80 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. ரெட்மேஜிக் 9 ப்ரோ பிளஸ் மாடலில் 5500 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் 165 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது. இது ஸ்மார்ட்போனினை 16 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்துவிடும்.

ரெட்மேஜிக் 9 ப்ரோ மற்றும் 9 ப்ரோ பிளஸ் அம்சங்கள்:
6.8 இன்ச் 2480x1116 பிக்சல் Full HD+ OLED டிஸ்ப்ளே
ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 பிராசஸர்
அட்ரினோ 750 GPU
8 ஜி.பி., 12 ஜி.பி., 16 ஜி.பி., 24 ஜி.பி. ரேம்
256 ஜி.பி., 512 ஜி.பி., 1 டி.பி. மெமரி
ஆண்ட்ராய்டு 14 சார்ந்த ரெட்மேஜிக் ஒ.எஸ். 9
டூயல் சிம் ஸ்லாட்
50MP பிரைமரி கேமரா
50MP அல்ட்ரா வைடு லென்ஸ்
16MP அன்டர் டிஸ்ப்ளே செல்ஃபி கேமரா
3.5mm ஆடியோ ஜாக், டூயல் ஸ்பீக்கர்கள்
5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
யு.எஸ்.பி. டைப் சி
9 ப்ரோ - 6500 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 80 வாட் சார்ஜிங்
9 ப்ரோ பிளஸ் - 5500 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 165 வாட் சார்ஜிங்
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
ரெட்மேஜிக் 9 ப்ரோ மாடல் விலை 4399 யுவான்கள், இந்திய மதிப்பில் ரூ. 52 ஆயிரத்து 270 என்று துவங்குகின்றன. ரெட்மேஜிக் 9 ப்ரோ பிளஸ் மாடலின் விலை 5499 யுவான்கள், இந்திய மதிப்பில் ரூ. 65 ஆயிரத்து 341 என்று துவங்குகின்றன. சீனாவில் இவற்றின் விற்பனை நவம்பர் 28-ம் தேதி துவங்க உள்ளன.
- மூன்றாம் தரப்பு செயலிகளை பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.
- டவுன்லோட் செய்யப்படுவதை தடுக்கும் வசதியும் உள்ளது.
இன்ஸ்டாகிராம் செயலியில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் புதிய அம்சம் கொண்டு பயனர்கள் ரீல்ஸ்-ஐ நேரடியாக டவுன்லோட் செய்து கொள்ள முடியும். அந்த வகையில், பயனர்கள் இனிமேல் ரீல்ஸ்-ஐ டவுன்லோட் செய்ய மூன்றாம் தரப்பு செயலிகளை பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.
இந்த அம்சம் தற்போதைக்கு பப்ளிக் அக்கவுண்ட்-களுக்கு மட்டுமே பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் பயனர்கள் விரும்பினால் ரீல்ஸ் டவுன்லோட் செய்யப்படுவதை தடுக்கும் வசதியும் வழங்கப்பட்டு உள்ளது.
ரீல்ஸ்-ஐ டவுன்லோட் செய்யும் புதிய அம்சம் குறித்த தகவலை இன்ஸ்டாகிராம் செயலிக்கான தலைவர் ஆடம் மொசெரி தனது சேனலில் தெரிவித்தார். ஏற்கனவே இந்த அம்சம் அமெரிக்க பயனர்களுக்கு மட்டும் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது உலகளவில் பயனர்கள் ரீல்ஸ்-ஐ டவுன்லோட் செய்யும் வசதி வழங்கப்பட்டு வருகிறது.
இந்த அம்சம் பயனர்கள் பப்ளிக் அக்கவுண்ட்களில் இருந்து ரீல்ஸ்-ஐ சேவ் செய்து கொள்ள அனுமதிக்கிறது. இவ்வாறு டவுன்லோட் செய்யப்படும் ரீல்களில், அதனை உருவாக்கிய இன்ஸ்டாகிராம் அக்கவுண்டின் லோகோ வாட்டர்மார்க் (ரீல்ஸ் பின்னணியில் காட்சி குறியீடு) செய்யப்பட்டு இருக்கும்.

இன்ஸ்டா ரீல்ஸ் டவுன்லோட் செய்வது எப்படி?
புதிய அப்டேட் மூலம் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்-ஐ டவுன்லோட் செய்ய, குறிப்பிட்ட ரீல்ஸ்-இல் இருந்த படி ஷேர் செய்யக் கோரும் பேப்பர் ஏர்பிளேன் ஐகானை க்ளிக் செய்ய வேண்டும். இவ்வாறு செய்த பிறகு, டவுன்லோட் செய்வதற்கான ஆப்ஷனை பார்க்க முடியும். அதனை க்ளிக் செய்ததும் ரீல்ஸ் சாதனத்தில் டவுன்லோட் செய்யப்பட்டு விடும்.
- ஒபன்ஏஐ நிறுவனத்தில் நிர்வாக ரீதியிலான மாற்றங்கள் அதிரடியாக மேற்கொள்ளப்படுகின்றன.
- முன்னதாக ஒபன்ஏஐ சி.இ.ஒ.-வாக ட்விட்ச் நிறுவனர் நியமிக்கப்பட்டு இருந்தார்.
ஒபன்ஏஐ நிறுவனத்தில் கடந்த வெள்ளிக் கிழமை முதல் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள், வெளியாகும் அறிவிப்புகள் டெக் உலகில் தொடர்ந்து சலசலப்பை ஏற்படுத்தி வருகின்றன. அந்த வரிசையில், கடந்த ஐந்து நாட்களில் ஒபன்ஏஐ தலைமை செயல் அதிகாரியாக பணிநீக்கம் செய்யப்பட்ட சாம் ஆல்ட்மேன் இன்று (நவம்பர் 22) மீண்டும் அந்நிறுவனத்தின் சி.இ.ஒ.-வாக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.
மீண்டும் ஒபன்ஏஐ நிறுவனத்தின் தலைமை பொறுப்பை ஏற்றது குறித்து அந்நிறுவனம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டு இருந்தது. மேலும் சாம் ஆல்ட்மேனும் மீண்டும் தலைமை பொறுப்பை ஏற்பது குறித்து கருத்து பதிவிட்டு இருந்தார். முன்னதாக இந்த விவகாரம் தொடர்பாக மைக்ரோசாப்ட் தலைமை செயல் அதிகாரி சத்ய நாதெல்லாவும் கருத்து தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில், சாம் ஆல்ட்மேன் மீண்டும் ஒபன்ஏஐ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டு இருப்பது குறித்து சத்ய நாதெல்லா தனது எக்ஸ் தளத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.
அதில், "ஒபன்ஏஐ நிர்வாக குழுவில் மேற்கொள்ளப்பட்டு இருக்கும் மாற்றங்களை வரவேற்கிறோம். நிலையான, நன்கு விவரம் அறிந்த மற்றும் சிறப்பான நிர்வாகத்திற்கு இது முதல்படி என்பதை நாங்கள் நம்புகிறோம். ஒபன்ஏஐ தலைமை பொறுப்பை ஏற்று, அதன் குறிக்கோளை அடைவதற்கு தலைமை பொறுப்பில் இருந்து முக்கிய பங்காற்றுவது குறித்து சாம், கிரெக் மற்றும் நானும் பேச்சுவார்த்தை நடத்தினோம்."
"உறுதியான கூட்டணியை உருவாக்கி, அடுத்த தலைமுறை ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் மதிப்புகளை எங்களின் வாடிக்கையாளர்கள் மற்றும் கூட்டாளிகளுக்கு வழங்க விரும்புகிறோம்," என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
- விவோ V30 ஸ்மார்ட்போனுடன் விவோ V30 லைட் மாடலும் அறிமுகம்.
- V29e ஸ்மார்ட்போனை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கும் என தகவல்.
விவோ நிறுவனம் தனது அடுத்த தலைமுறை V சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. சமீபத்தில் தான் விவோ V30 ஸ்மார்ட்போனின் விவரங்கள் கீக்பென்ச் வலைதளத்தில் லீக் ஆகி இருந்தது. தற்போது வெளியாகி இருக்கும் புதிய தகவல்களில் விவோ V30 ஸ்மார்ட்போனுடன் விவோ V30 லைட் மாடலும் அறிமுகம் செய்யப்படலாம் என்று தெரியவந்துள்ளது.
இதில் ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்களும் இடம்பெற்று இருக்கிறது. அதன்படி விவோ V30 லைட் மாடலில் ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ஒ.எஸ்., 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மற்றும் 12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கும் என்று தெரிகிறது. இத்துடன் 4700 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 44 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது.
கனெக்டிவிட்டிக்கு டூயல் பேண்ட் வைபை, என்.எஃப்.சி., ப்ளூடூத் மற்றும் யு.எஸ்.பி. டைப் சி போர்ட் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. விவோ V30 லைட் மாடல் V29e ஸ்மார்ட்போனை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கும் என்று தெரிகிறது. எனினும், இதன் ஹார்டுவேரில் சிறு மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கலாம்.
சர்வதேச சந்தையில் விவோ V29e மாடல் கடந்த அக்டோபர் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், புதிய விவோ V30 மற்றும் விவோ V30 லைட் மாடல்கள் எப்போது அறிமுகம் செய்யப்படும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
- டெக் உலக முன்னணி தலைவர்கள் கருத்து தெரிவித்தனர்.
- கடந்த சில நாட்களாக தீவிர ஆலோசனை நடைபெற்றதாக தகவல்.
உலகின் முன்னணி செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) நிறுவனமான ஒபன்ஏஐ, கடந்த வெள்ளிக் கிழமை (நவம்பர் 17) அதன் தலைமை செயல் அதிகாரி சாம் ஆல்ட்மேனை பணிநீக்கம் செய்வதாக அறிவித்தது. ஒபன்ஏஐ நிர்வாக குழுவின் இந்த முடிவு டெக் உலகையே அதிர்ச்சி அடைய செய்தது.
ஒபன்ஏஐ நிறுவனத்தின் பணிநீக்க அறிவிப்புக்கு டெக் உலக முன்னணி தலைவர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். இதனிடையே பணிநீக்க நடவடிக்கை குறித்து கடந்த சில நாட்களாக தீவிர ஆலோசனை நடைபெற்று வந்துள்ளதாக தெரிகிறது.
அந்த வகையில், கடந்த ஞாயிற்று கிழமை வரையிலும் நிர்வாக குழு ஆல்ட்மேனை பணிநீக்கம் செய்த நடவடிக்கையில் உறுதியாகவே இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக மைக்ரோசாஃப்ட் நிறுவன தலைமை செயல் அதிகாரி சத்ய நாதெல்லா, சாம் ஆல்ட்மேனை தனது நிறுவனத்திற்கு வரவேற்க தயாராக இருப்பதாக கருத்து தெரிவித்து இருந்தார்.
இதுதவிர ஒபன்ஏஐ நிறுவனத்தின் ஊழியர்கள் மற்றும் சாம் ஆல்ட்மேனுக்கு நெருங்கிய உயர் அதிகாரிகள் மற்றும் முதலீட்டாளர்கள் என சுமார் 700-க்கும் மேற்பட்டோர் நிர்வாக குழுவின் பணிநீக்க நடவடிக்கையை எதிர்த்து கடிதம் ஒன்றை எழுதியிருந்தனர்.
அதில், சாம் ஆல்ட்மேனின் பணிநீக்க நடவடிக்கையை திரும்ப பெறாவிட்டால், அனைவரும் சாம் ஆல்ட்மேனுடன் வெளியேற தயாராக இருப்பதாக தெரிவித்து கையொப்பமிட்டதாக தெரிகிறது. இந்த நிலையில், சாம் ஆல்ட்மேனை மீண்டும் ஒபன்ஏஐ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக நியமிக்க நிர்வாக குழு ஒப்புக்கொள்வதாக நேற்று (நவம்பர் 21) தகவல்கள் வெளியாகின.
"பிரெட் டெய்லர், லேரி சம்மர்ஸ் மற்றும் ஆடம் டி ஏஞ்சலோ ஆகியோர் அடங்கிய நிர்வாக குழு ஒபன்ஏஐ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக திரும்புவதற்கான ஒப்பந்தத்தை எட்டியிருக்கிறோம். இது தொடர்பான விவரங்களை சேகரிக்க இருக்கிறோம். இந்த விவகாரத்தில் இதுவரை அமைதி காத்தமைக்கு நன்றிகள்," என ஒபன்ஏஐ நிறுவனம் தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளது.
"நான் ஒபன்ஏஐ-ஐ விரும்புகிறேன். இந்த குழு மற்றும் அதன் குறிக்கோளை ஒன்றாக வைத்துக் கொள்ள கடந்த சில நாட்களில் அனைத்தையும் செய்தேன். புதிய நிர்வாக குழு மற்றும் சத்யாவின் ஆதரவுடன், நான் ஒபன்ஏஐ-க்கு திரும்புவதில் ஆவலாக இருக்கிறேன். இத்துடன் மைக்ரோசாப்ட் உடன் பலமான கூட்டணியை உருவாக்க விரும்புகிறேன்," என்று சாம் ஆல்ட்மேன் தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
ஒபன்ஏஐ தலைமை செயல் அதிகாரியாக சாம் ஆல்ட்மேன் நீக்கப்பட்டதும், அதன் புதிய தலைமை செயல் அதிகாரியாக ட்விட்ச் நிறுவனர் எம்மெட் ஷியர் நியமிக்கப்பட்டார். தற்போது, ஒபன்ஏஐ தனது பழைய தலைமை செயல் அதிகாரியை மீண்டும் அழைத்துக் கொண்டிருப்பதால், எம்மெட் ஷியர் நியமிக்கப்பட்டது குறித்து ஒபன்ஏஐ சார்பில் இதுவரை விளக்கம் அளிக்கப்படவில்லை.
- கூகுள் மெசேஜஸ் செயலியில் புதிய அம்சம்.
- புதிய அம்சம் பீட்டா வெர்ஷனில் வழங்கப்பட்டுள்ளது.
கூகுள் நிறுவனம் தனது மெசேஜஸ் ஆப்-ஐ வாட்ஸ்அப், சிக்னல் போன்ற குறுந்தகவல் செயலிகளுக்கு போட்டியாக மாற்றும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. கூகுளின் மெசேஜஸ் செயலியில் ஆர்.சி.எஸ். எனப்படும் ரிச் கம்யூனிகேஷன் சர்வீசஸ் வசதி உள்ளது. மற்ற குறுந்தகவல் செயலிகளுடனான போட்டியை வலுப்படுத்தும் நோக்கில் கூகுள் நிறுவனம் மெசேஜஸ் செயலியில் புதிய வசதியை வழங்கி உள்ளது.
மெசேஜஸ் செயலியில் எமோஜி ரியாக்ஷன்ஸ் அம்சம், யூடியூப் வீடியோக்களை மெசேஜஸ் செயலியில் இருந்தபடி பார்க்கும் வசதி என ஏராளமான அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன. இந்த வரிசையில் மெசேஜஸ் செயலியில் ஏற்கனவே வழங்கப்பட்டு இருக்கும் "வாய்ஸ் நோட்ஸ்" (Voice Notes) அம்சத்தில் புதிய வசதி சேர்க்கப்பட்டு இருக்கிறது.

கோப்புப்படம்
இந்த அம்சம் கொண்டு பயனர்கள் சிறிய வாய்ஸ் நோட்-ஐ ரெக்கார்டு செய்து அதனை மெசேஜஸ் ஆப் மூலம் மற்றவர்களுக்கு அனுப்ப முடியும். தற்போது வெளியாகி இருக்கும் புதிய அம்சம் கொண்டு பயனர்கள் வாய்ஸ் நோட் ரெக்கார்டு செய்யும் போது வெளிப்புற சத்தத்தை தவிர்க்க முடியும் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
அதன்படி கூகுள் மெசேஜஸ் செயலியின் வாய்ஸ் நோட் அம்சத்தில் நாய்ஸ் கேன்சலேஷன் (Noise Cancellation) வசதி சேர்க்கப்படுகிறது. முதற்கட்டமாக இந்த வசதி கூகுள் மெசேஜஸ் செயலியின் பீட்டா வெர்ஷனில் வழங்கப்பட்டு இருக்கிறது. இதற்காக செயலியில் நாய்ஸ் கேன்சலேஷன் பெயரில் பிரத்யேக பட்டன் வழங்கப்பட்டுள்ளது.
இதை பயன்படுத்தும் போது வாய்ஸ் நோட்-களில் வெளிப்புற சத்தம் எதுவும் பதிவாகாது. வாய்ஸ் நோட்-இல் வழங்கப்படும் புதிய நாய்ஸ் கேன்சலேஷன் அம்சம் தற்போது டெஸ்டிங் கட்டத்திலேயே உள்ளது. அந்த வகையில், இந்த அம்சம் செயலியின் எதிர்கால அப்டேட்களில் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கலாம்.
- மைக்ரோசஃப்ட் நிறுவனத்தில் சாம் ஆல்ட்மேனை வரவேற்க விரும்புகிறோம்.
- ஒபன்ஏஐ நிறுவனத்தின் நிர்வாக குழுவுடன் கருத்து மோதல்.
ஒபன்ஏஐ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பதவியில் இருந்து சாம் ஆல்ட்மேன் நீக்கப்பட்டு ஒருவாரம் ஆகிவிட்டது. இவர் ஒபன்ஏஐ நிறுவனத்தில் இருந்து விடுவிக்கப்பட்டதில் இருந்து, தற்போதுவரை இந்த விவகாரம் தொடர்பாக பல்வேறு தகவல்கள் தினமும் வெளியாகி கொண்டே வருகிறது. இவரை ஒபன்ஏஐ நிறுவனம் எதற்காக திடீரென பணிநீக்கம் செய்தது என்ற காரணம் தொர்ந்து மர்மமாகவே உள்ளது.
பணிநீக்கம் செய்யப்பட்டதும் மைக்ரோசஃப்ட் நிறுவனத்தில் சாம் ஆல்ட்மேனை வரவேற்க விரும்புகிறோம் என்று மைக்ரோசாஃப்ட் தலைமை செயல் அதிகாரி சத்ய நாதெல்லா கருத்து தெரிவித்து இருந்தார். இவர் மட்டுமின்றி டெக் உலகின் முன்னணி தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் பலரும் சாம் ஆல்ட்மேன் நீக்கம் குறித்து கருத்து தெரிவித்தனர்.
இந்த நிலையில், உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், "மேம்பட்ட, அதிநவீன ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் திறன் மற்றும் ரிஸ்க் உள்ளிட்டவைகளை கருத்தில் கொண்டு நிர்வாக குழு இத்தகைய முடிவை எடுப்பதற்கான காரணத்தை பொது மக்கள் அறிந்து கொள்ள வேண்டும்," என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
ஒபன்ஏஐ நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவராக எலான் மஸ்க் இருந்தார். எனினும் ஒபன்ஏஐ நிறுவனத்தின் நிர்வாக குழுவுடன் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக எலான் மஸ்க் கடந்த 2018 ஆண்டு அந்த நிறுவனத்தில் இருந்து வெளியேறினார். மேலும் நிறுவனத்தில் தனது பங்குகள் அனைத்தையும் கொடுத்துவிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
- ஒன்பிளஸ் ஏஸ் 3 ஸ்மார்ட்போனும் அறிமுகமாகும் என தகவல்.
- ஒன்பிளஸ் நிறுவனம் அபார வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
ஒன்பிளஸ் நிறுவனம் தனது 10-வது ஆண்டு விழா கொண்டாட்ட நிகழ்வு டிசம்பர் 4-ம் தேதி நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. மேலும் இதே நாளில் ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனும் அறிமுகம் செய்யப்படுகிறது. ஒன்பிளஸ் 12 தவிர ஒன்பிளஸ் ஏஸ் 3 ஸ்மார்ட்போனும் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஸ்மார்ட்போன் ஒன்பிளஸ் 12R என்ற பெயரில் இந்தியா மற்றும் சர்வதேச சந்தைகளில் அறிமுகம் செய்யப்படலாம். ஒன்பிளஸ் நிறுவனத்தை பீட் லௌ மற்றும் கார்ல் பெய் இணைந்து டிசம்பர் 16, 2013-ம் ஆண்டு துவங்கினர். கடந்த ஆண்டுகளில் ஒன்பிளஸ் நிறுவனம் அபார வளர்ச்சியை பதிவு செய்து, சந்தையில் தனக்கென தனி அங்கீகாரத்தை பெற்று இருக்கிறது.

அந்த வகையில் ஒன்பிளஸ் நிறுவனம் ஸ்மார்ட்போன் சந்தையில் பத்து ஆண்டுகளை கொண்டாட இருக்கிறது. இது தொடர்பான அறிவிப்பை ஒன்பிளஸ் நிறுவனம் தனது வெய்போ அக்கவுண்டில் வெளியிட்டு உள்ளது. அதன்படி கொண்டாட்ட நிகழ்வு இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு துவங்க இருக்கிறது.
ஒன்பிளஸ் 12 எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:
அம்சங்களை பொருத்தவரை ஒன்பிளஸ் 12 மாடலில் 6.82 இன்ச் LTPO AMOLED பேனல், 2K ப்ரோ எக்ஸ்.டி.ஆர். ரெசல்யூஷன், பன்ச் ஹோல் கட்-அவுட், குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 பிராசஸர், அட்ரினோ GPU வழங்கப்படும் என்று தெரிகிறது. இத்துடன் அதிகபட்சம் 24 ஜி.பி. ரேம், 1 டி.பி. வரையிலான ஸ்டோரேஜ், 5400 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 100 வாட் வயர்டு சார்ஜிங், 50 வாட் வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்படலாம்.
புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 14 சார்ந்த ஆக்சிஜன் ஒ.எஸ். வழங்கப்படுகிறது. புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, OIS, 50MP அல்ட்ரா வைடு சென்சார், 64MP 3x டெலிஃபோட்டோ ஜூம், OIS வழங்கப்படும் என்று தெரிகிறது.
- சேவைகளை அவசர அவசரமாக தயார் செய்து வெளியிட்டன.
- தலைமை செயல் அதிகாரி பொறுப்பில் இருந்து சாம் ஆல்ட்மேன் விடுவிப்பு.
தொழில்நுட்ப உலகில் அனைவரையும் திரும்பி பார்க்க செய்த செயற்கை நுண்ணறிவு நிறுவனம் ஒபன்ஏஐ. இந்த நிறுவனம் அறிமுகப்படுத்திய சாட்ஜிபிடி (ChatGPT) என்ற சேவை டெக் உலகில் பெரும் புரட்சியை ஏற்படுத்தியது. மேலும், சாட்ஜிபிடி-க்கு போட்டியாக புதிய சேவையை உருவாக்குவதில் பல நிறுவனங்களும் ஈடுபட துவங்கின. முன்னணி டெக் பிராண்டுகள் ஏற்கனவே உருவாக்கி வந்த சேவைகளை அவசர அவசரமாகவும் தயார் செய்து வெளியிட்டன.
இந்த நிலையில், தொழில்நுட்ப உலகையே அதிரச் செய்யும் அறிவிப்பு ஒன்றை ஒபன்ஏஐ நிறுவனம் வெளியிட்டது. அந்த அறிவிப்பில், ஒபன்ஏஐ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பொறுப்பில் இருந்து சாம் ஆல்ட்மேன் விடுவிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் திடீரென இந்த முடிவை எடுத்ததற்கான காரணத்தையும் ஒபன்ஏஐ தனது அதிகாரப்பூர்வ வலைதளத்தில் வெளியிட்டு உள்ளது. இதோடு ஒபன்ஏஐ நிறுவனத்தின் இடைக்கால தலைமை செயல் அதிகாரியாக மிரா முராடி செயல்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

"ஆல்ட்மேனை பதவியில் இருந்து விடுவிப்பது என்ற முடிவை நிர்வாக குழு பெரும் ஆலோசனைக்கு பிறகே எடுத்தது. ஆலோசனையின் போது, ஆல்ட்மேன் நிர்வாக குழுவுடனான தகவல் தொடர்புகளில் தெளிவற்ற நிலையில் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதனால் நிர்வாக குழுவின் பணிகளில் இடர்பாடு ஏற்படலாம். இதன் காரணமாக ஒபன்ஏஐ நிறுவனத்தை அவர் தொடர்ந்து சிறப்பாக வழிநடத்துவார் என்ற நம்பிக்கையை நிர்வாக குழு இழந்துவிட்டது," என ஒபன்ஏஐ வலைதளத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
உலகளவில் முன்னணி நிறுவனங்களில் ஒன்று, அதன் தலைமை செயல் அதிகாரி குறித்து இத்தகைய கருத்துக்களை தெரிவிப்பதும், திடீரென பதவியில் இருந்து விடுவிப்பதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், ஆல்ட்மேன் தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து விடுவிக்கப்பட உண்மையான காரணம் என்னவாக இருக்கும் என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறது.

இது தொடர்பாக வெளியாகி இருக்கும் தகவல்களில் ஒபன்ஏஐ நிர்வாக குழு ஏற்றுக் கொள்ள முடியாத விஷயத்தை ஆல்ட்மேன் செய்திருக்க வேண்டும், அல்லது ஆல்ட்மேன் மற்றும் நிர்வாக குழு இடையே கருத்து மோதல் ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. தலைமை செயல் அதிகாரி பதவியில் இருந்து சாம் ஆல்ட்மேன் விடுவிக்கப்பட்டதும், ஒபன்ஏஐ நிறுவனத்தின் இணை நிறுவனர் கிரெக் பிராக்மேன் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்து இருக்கிறார்.
- ஏர்டெல் மொபைல் ரிசார்ஜ் செய்யும் போது தள்ளுபடி.
- ஏர்டெல் தேங்ஸ் செயலியில் இடம்பெற்று இருக்கும்.
ஆப்பிள் ஐபோன் 15 வாங்க நினைக்கும் ஏர்டெல் வாடிக்கையாளரா நீங்கள்? அப்படியெனில் இந்த வாய்ப்பை தவற விடாதீர்கள். ஐபோன் 15 வாங்கும் ஏர்டெல் பயனர்களுக்கு சிறப்பு சலுகை மற்றும் வங்கி சார்ந்த தள்ளுபடி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஏர்டெல் மொபைல் ரிசார்ஜ் செய்யும் போது தள்ளுபடி மற்றும் கேஷ்பேக் வழங்கப்படுகிறது.
புதிய ஐபோன் 15 வாங்கிய 60 நாட்களுக்குள் ஏர்டெல் போஸ்ட்பெயிட் சிம் ஆக்டிவேட் செய்தால் ரூ. 2 ஆயிரம் மதிப்புள்ள தள்ளுபடி கூப்பன்கள் வழங்கப்படுகிறது. இந்த சலுகை நவம்பர் 10-ம் தேதி துவங்கி டிசம்பர் 30-ம் தேதி வரை மட்டுமே வழங்கப்படுகிறது. பயனர் ஐபோனினை அமேசான் வலைதளத்தில் இருந்து வாங்கி இருந்தால், இந்த சலுகை நீட்டிக்கப்படும்.
அதன்படி ஏர்டெல் போஸ்ட்பெயிட் சிம் கார்டை ஆக்டிவேட் செய்ததும், ஏதேனும் ஒரு போஸ்ட்பெயிட் திட்டத்தில் ரிசார்ஜ் செய்ய வேண்டும். பிறகு ரூ. 200 மதிப்புள்ள பத்து கூப்பன்கள் பயனர்களுக்கு வழங்கப்படும். இதற்கான தகவல் ஏர்டெல் தேங்ஸ் செயலியில் இடம்பெற்று இருக்கும். இந்த சலுகை ஏர்டெல் கார்ப்பரேட் சிம் கார்டுகளுக்கு பொருந்தாதது.
ஆனால், ஏர்டெல் போஸ்ட்பெயிட் சிம் 60 நாட்களுக்குள் ஆக்டிவேட் செய்ய வேண்டியது அவசியம் ஆகும். இவ்வாறு செய்யும் போது பயனர் மேற்கொள்ளும் ரிசார்ஜ் ஒன்றுக்கு ஒரு கூப்பன் வரை பயன்படுத்த முடியும். இதுதவிர பயனர்கள் விதிகளை பின்பற்றும் போது ரூ. 5 ஆயிரம் வரையிலான கேஷ்பேக்-ஐ அமேசானிடம் இருந்து பெற முடியும்.
- அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தி இருக்கிறது.
- சிறப்பான அனுபவத்தை வழங்கும் என ஆப்பிள் நம்பிக்கை.
ஆப்பிள் நிறுவனம் மிக முக்கிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் அறிமுகமான ஐபோன் 15 சீரிசில் யு.எஸ்.பி. டைப் சி வழங்கிய ஆப்பிள் நிறுவனம் தற்போது ரிச் கம்யூனிகேஷன் சர்வீசஸ் (ஆர்.சி.எஸ்.) ரக மெசேஜிங் வசதியை வழங்க இருக்கிறது. இது தொடர்பான தகவலை அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தி இருக்கிறது.
அதன்படி அடுத்த ஆண்டு முதல் ஐபோன்களில் ஆர்.சி.எஸ். வசதி வழங்கப்படும் என்று ஆப்பிள் செய்தி தொடர்பாளர் தனியார் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார். சர்வதேச சந்தையில் ஆர்.சி.எஸ். வழிமுறை வழக்கமான எஸ்.எம்.எஸ். மற்றும் எம்.எம்.எஸ்.-களுடன் ஒப்பிடும் போது சிறப்பான அனுபவத்தை வழங்கும் என்று ஆப்பிள் நம்புவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
ஐபோன்களில் ஆர்.சி.எஸ். ஐமெசேஜ் உடன் வழங்கப்பட இருக்கிறது. இது ஆப்பிள் பயனர்களுக்கு சிறப்பான மற்றும் பாதுகாப்பான மெசேஜிங் அனுபவத்தை வழங்கும் என்று ஆப்பிள் செய்தி தொடர்பாளர் தெரிவித்து இருக்கிறார். கூகுள் மற்றும் சாம்சங் நிறுவனங்களின் அழுத்தம் காரணமாக ஆப்பிள் நிறுவனம் ஆர்.சி.எஸ். மெசேஜிங்கை வழங்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
ஆப்பிள் நிறுவனம் ஐபோன்களில் ஏற்கனவே உள்ள ஐமெசேஜ் சேவையை நீக்காமல், கூடுதலாக ஆர்.சி.எஸ். சேவையை வழங்க இருக்கிறது. ஐபோன் பயனர்களிடையே தகவல் பரிமாற்றத்திற்கு ஐமெசேஜ் சேவையை தொடர்ந்து பயன்படுத்த முடியும். ஆர்.சி.எஸ். அறிமுகம் செய்யப்பட்டாலும் எஸ்.எம்.எஸ். மற்றும் எம்.எம்.எஸ். சேவைகள் தொடர்ந்து வழங்கப்படும்.






