என் மலர்
தொழில்நுட்பம்
- புதிய நத்திங் ஸ்மார்ட்போன் இந்த பெயரில் அறிமுகமாகலாம்.
- இந்த ஸ்மார்ட்போன் இதுபோன்ற தோற்றம் கொண்டிருக்கலாம்.
நத்திங் நிறுவனத்தின் முதல் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் கடந்த ஜூலை மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. நத்திங் போன் 2 என்ற பெயரில் இந்த மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது நத்திங் நிறுவனம் மற்றொரு புதிய ஸ்மார்ட்போனை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், இந்த ஸ்மார்ட்போன் நத்திங் போன் 1 தோற்றம் கொண்டிருக்கும் என்றும் இதன் விலை சற்று குறைவாகவே இருக்கும் என்று தெரிகிறது. இந்த ஸ்மார்ட்போன் பற்றி நத்திங் சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை. எனினும், இந்த ஸ்மார்ட்போன் நத்திங் போன் 3 என்ற பெயரில் அறிமுகம் செய்யப்படாது என டிப்ஸ்டர் ஒருவர் தெரிவித்து உள்ளார்.

நத்திங் உருவாக்கி வரும் புதிய ஸ்மார்ட்போன் நத்திங் போன் 2a என்ற பெயரில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது. இந்த ஸ்மார்ட்போனின் மாடல் நம்பர் AIN142 ஆக இருக்கிறது. இதுவே இந்த ஸ்மார்ட்போன் நத்திங் போன் 2a பெயரில் அறிமுகமாகும் என்பதை உணர்த்துகிறது. இந்த ஸ்மார்ட்போனின் பேக் பேனல் மற்றும் க்ளிம்ஃப் இண்டர்ஃபேஸ் நத்திங் போன் 1 மாடலில் இருப்பதை போன்றே காட்சியளிக்கிறது.
எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:
இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி நத்திங் போன் 2a மாடலில் 6.7 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, மத்தியில் பன்ச் ஹோல் கட்-அவுட்டில் செல்ஃபி கேமரா போன்ற அம்சங்கள் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த தகவல்கள் அனைத்தும் இதுவரை வெளியான ரெண்டர்களின் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
- சிம் வாங்கும் வாடிக்கையாளர் பற்றி அதிக விவரங்கள் சேகரிக்கப்படும்.
- ஏற்க மறுத்தால் ரூ. 10 லட்சம் வரை அபராதம்.
இந்தியாவில் நாளை (டிசம்பர் 1) முதல் சிம் கார்டு வாங்குவதற்கான விதிமுறைகளில் புதிய மாற்றங்கள் அமலுக்கு வருகின்றன. இந்த மாற்றங்கள் அக்டோபர் 1-ம் தேதியில் இருந்து அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டு, பிறகு டிசம்பர் 1-ம் தேதியில் இருந்து அமலுக்கு வரும் என மாற்றப்பட்டது.
புதிய விதிமுறைகள் இந்தியாவில் நடைபெற்று வரும் சைபர் குற்றங்களை பெருமளவுக்கு குறைக்கவோ அல்லது குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது. புதிய விதிமுறைகள் குடிமக்கள் பாதுகாப்பு கருதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி சிம் கார்டுகளை அதிகளவில் விற்பனை செய்வது, யார் விற்பனை செய்ய முடியும் என்பது தொடர்பான விதிமுறைகள் மாற்றப்பட்டு உள்ளன.

விதிமுறை விவரங்கள்:
இந்த விதிமுறைகளின் கீழ் புதிய சிம் வாங்கும் வாடிக்கையாளர் பற்றி அதிக விவரங்கள் சேகரிக்கப்படும். இதன் மூலம் தேவைப்பட்டால் சம்பந்தப்பட்ட நபரை எளிதில் தொடர்பு கொள்ள முடியும்.
ஏற்கனவே உள்ள நம்பர்களுக்கு சிம் கார்டுகளை வாங்கும் போது, உங்களின் ஆதார் மற்றும் அடையாள விவரங்களை சமர்பிக்க வேண்டும். இதேபோன்று சிம் கார்டை விற்பனை செய்வோரும் வெரிஃபிகேஷனை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். சிம் டீலர்கள் விற்பனை செய்யும் சிம் கார்டுகளை ரெஜிஸ்டர் செய்வதோடு, அவர்களையும் வெரிஃபை செய்ய வேண்டும்.
புதிய விதிமுறைகளை ஏற்க மறுத்தால், அரசாங்கம் சார்பில் அதிகபட்சம் ரூ. 10 லட்சம் வரையிலான அபராதம் விதிக்கப்படும். ஒரு நபர் அதிக சிம் கார்டுகளை வாங்குவதில் கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது. அதன் படி தனிநபர் பயன்பாட்டுக்கு ஒருவர் தனது அடையாள சான்றினை பயன்படுத்தி அதிகபட்சம் 9 சிம் கார்டுகளை வாங்க முடியும்.
ஒருவரின் சிம் கார்டு செயலிழந்து போனால், அந்த நம்பர் அடுத்த 90 நாட்கள் வரை வேறு யாருக்கும் நிர்ணயம் செய்யப்படாது. இந்த காலக்கட்டத்தில் பயனர்கள் அந்த நம்பருடன் ஒருங்கிணைந்த தகவல்கள் அனைத்தையும் அழித்துவிடலாம். இன்றுக்குள் (நவம்பர் 30) சிம் விற்பனையாளர்கள் பதிவு செய்யாத பட்சத்தில் அவர்களுக்கு ரூ. 10 லட்சம் வரையிலான அபராதம் அல்லது சிறை தண்டனை விதிக்கப்படுகிறது.
- இந்த ஸ்மார்ட்போன் BOE வழங்கிய ஸ்கிரீனை பயன்படுத்துகிறது.
- இதில் உள்ள ஸ்கிரீன் 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்டிருக்கும்.
சீனாவை சேர்ந்த ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 பிராசஸர் கொண்ட ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களை தொடர்ச்சியாக அறிமுகம் செய்து வருகின்றன. அந்த வரிசையில், ரியல்மி GT 5 ப்ரோ மாடல் டிசம்பர் 7-ம் தேதி சீன சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், ரியல்மி GT 5 ப்ரோ மாடலின் பேஸ் வேரியண்ட் அம்சங்கள் மற்றும் டிஸ்ப்ளே பற்றிய விவரங்களை ரியல்மி நிறுவனத்தின் மூத்த விளம்பர அதிகாரியான சு குயி வெளியிட்டு உள்ளார். அதன்படி ரியல்மி GT 5 ப்ரோ பேஸ் வேரியண்டில் அதிகபட்சம் 12 ஜி.பி. வரையிலான ரேம், 256 ஜி.பி. வரையிலான ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது.

முன்னதாக TENAA வலைதளத்தில் வெளியான தகவல்களில் ரியல்மி GT 5 ப்ரோ மாடலில் 6.78 இன்ச் OLED கர்வ்டு-எட்ஜ் டிஸ்ப்ளே, 1.5K ரெசல்யூஷன், 2780x1264 பிக்சல்கள் வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. தற்போது ரியல்மி நிறுவன மூத்த அதிகாரி வெளியிட்டுள்ள போஸ்டரில் GT 5 ப்ரோ ஸ்மார்ட்போன் BOE வழங்கிய ஸ்கிரீனை பயன்படுத்தும் என்று தெரியவந்துள்ளது.

ரியல்மி GT 5 ப்ரோ மாடலில் உள்ள TUV சான்று பெற்ற டிஸ்ப்ளேவில் 8T LTPO தொழில்நுட்பம், 0.5Hz முதல் 144Hz வரையிலான அடாப்டிவ் ரிப்ரெஷ் ரேட், ப்ரோ XDR HDR தொழில்நுட்பம், அதிகபட்சம் 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்டிருக்கும். இத்துடன் 2160Hz PWM டிம்மிங், 2160Hz டச் சாம்ப்ளிங் ரேட், டி.சி. டிம்மிங் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்படுகிறது. இவை தலைசிறந்த டிஸ்ப்ளே அனுபவத்தை வழங்கும்.
புதிய GT 5 ப்ரோ மாடலில் அதிகபட்சம் 24 ஜி.பி. வரையிலான LPDDR5x ரேம், 1 டி.பி. வரையிலான UFS 4.0 ஸ்டோரேஜ், 5400 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 100 வாட் வயர்டு, 50 வாட் வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 32MP செல்ஃபி கேமரா, 50MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு லென்ஸ், 50MP பெரிஸ்கோப் சென்சார் வழங்கப்படுகிறது.
- டாடா நிறுவனம் ஆப்பிள் நிறுவனத்திற்கு உதிரிபாகங்களை உற்பத்தி செய்தது.
- ஓசூரில் உள்ள உற்பத்தி ஆலை 500 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது.
விஸ்ட்ரன் ஐபோன் உற்பத்தி ஆலையை டாடா குழுமம் முழுமையாக கையகப்படுத்தி, ஐபோன்களை உற்பத்தி செய்யும் முதல் இந்திய நிறுவனம் என்ற பெருமையை பெற்றது. முன்னதாக டாடா நிறுவனம் ஆப்பிள் நிறுவனத்திற்கு உதிரிபாகங்களை உற்பத்தி செய்து கொடுத்தது.
தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களின் படி டாடா நிறுவனம் ஓசூரில் உள்ள ஆலையில் உற்பத்தியை இருமடங்கு அதிகப்படுத்த இருப்பதாக கூறப்படுகிறது. இந்தியாவில் ஐபோன் உற்பத்திக்காக ஆப்பிள் நிறுவனம் டாடா குழுமத்தை அதிகளவு நம்புவதாக தெரிகிறது.

இங்கு உற்பத்தி செய்யப்படும் யூனிட்கள் சர்வதேச சந்தையிலும் ஏற்றுமதி செய்யப்படும் என்று கூறப்படுகிறது. தற்போது ஓசூரில் உள்ள உற்பத்தி ஆலை 500 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டு, அதில் 15 ஆயிரம் பேர் வரை பணியாற்றி வருகின்றனர்.
முதற்கட்டமாக ஐபோன்களின் குறிப்பிட்ட சில பாகங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த பாகங்கள் ஃபாக்ஸ்கான் மற்றும் விஸ்ட்ரன் ஆலைகளுக்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து வினியோகம் செய்யப்பட உள்ளன. அடுத்த 12 முதல் 18 மாதங்களில் ஓசூர் ஆலை விரிவாக்கம் செய்யப்பட்டு, உற்பத்தி தற்போது இருப்பதை விட இருமடங்கு அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.

இதன் மூலம் விரிவாக்கம் செய்யப்பட்ட ஆலையில் 28 ஆயிரம் பேர் வரை பணியாற்ற முடியும். இந்தியாவில் ஐபோன் உற்பத்தியை அதிகப்படுத்துவது தொடர்பாக ஆப்பிள் நிறுவனம் டாடா குழுமத்திற்கு இலக்கு நிர்ணயித்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
- அமேசான் வலைதளத்தில் மைக்ரோசைட் இடம்பெற்று இருக்கிறது.
- முதல் ரெட்மி C சீரிஸ் ஸ்மார்ட்போன் இது ஆகும்.
சியோமி நிறுவனத்தின் ரெட்மி 12C மாடலின் மேம்பட்ட வெர்ஷனாக ரெட்மி 13C ஸ்மார்ட்போன் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்திய சந்தையில் டிசம்பர் 6-ம் தேதி அறிமுகமாக இருக்கும் ரெட்மி 13C அமேசான் வலைதளத்தில் விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதற்காக அமேசான் வலைதளத்தில் இடம்பெற்று இருக்கும் மைக்ரோசைட்டில் ஸ்மார்ட்போனின் விவரங்களும் தெரியவந்துள்ளது.
அதன்படி ரெட்மி 13C ஸ்மார்ட்போனுடன் அதன் 5ஜி வெர்ஷனும் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில், 5ஜி கனெக்விட்டியுடன் அறிமுகமாகும் முதல் ரெட்மி C சீரிஸ் ஸ்மார்ட்போனாக இது இருக்கும் என்று தெரிகிறது.

அமேசான் வலைதள விவரங்களின் படி ரெட்மி 13C மாடல் ஸ்டார்டஸ்ட் பிளாக் மற்றும் ஸ்டார் ஷைன் கிரீன் என இரண்டு நிறங்களில் கிடைக்கும் என்று தெரியவந்துள்ளது. இத்துடன் ஏ.ஐ. வசதி கொண்ட 50MP பிரைமரி கேமரா வழங்கப்படுகிறது. இதன் தோற்றம் நைஜீரிய மாடலை போன்ற காட்சியளிக்கிறது. அமேசான் தவிர Mi வலைதளம் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களிலும் இந்த ஸ்மார்ட்போன் விற்பனை செய்யப்படலாம்.

ரெட்மி 13C அம்சங்கள்:
6.74 இன்ச் HD+ டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட்
கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு
மீடியாடெக் ஹீலியோ ஜி85 பிராசஸர்
மாலி G52 GPU
4 ஜி.பி., 6 ஜி.பி., 8 ஜி.பி. ரேம்
128 ஜி.பி., 256 ஜி.பி. மெமரி
ஆண்ட்ராய்டு 13 சார்ந்த எம்.ஐ.யு.ஐ. 14
50MP பிரைமரி கேமரா
2MP மேக்ரோ லென்ஸ்
8MP செல்ஃபி கேமரா
4ஜி, டூயல் சிம் ஸ்லாட், வைபை
ப்ளூடூத் 5.3
5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி
- சாம்சங்கின் புதிய A சீரிஸ் ஸ்மார்ட்போன் கடந்த செப்டம்பரில் அறிமுகம் செய்யப்பட்டது.
- சாம்சங் போனிற்கு 4 ஆண்டுகள் அப்டேட் வழங்கப்பட இருக்கிறது.
சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி A05 ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் வெளியிட்டது. கடந்த செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், இந்த மாடல் தற்போது வெளியாகி இருக்கிறது. இதில் 6.7 இன்ச் HD+ ஸ்கிரீன், 8MP செல்ஃபி கேமரா, ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ஒன் யு.ஐ. வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனிற்கு 4 ஆண்டுகள் செக்யுரிட்டி அப்டேட்கள், 2 ஒ.எஸ். அப்கிரேடுகள் வழங்கப்படுகின்றன.
புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 2MP டெப்த் சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் பக்கவாட்டில் கைரேகை சென்சார் உள்ளது. இத்துடன் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனுடன் சார்ஜர் எதுவும் வழங்கப்படவில்லை.

சாம்சங் கேலக்ஸி A05 அம்சங்கள்:
6.7 இன்ச் 720x1600 பிக்சல் HD+ LCD ஸ்கிரீன்
ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ G85 பிராசஸர்
ARM மாலி G52 GPU
4 ஜி.பி., 6 ஜி.பி. ரேம்
64 ஜி.பி., 128 ஜி.பி. மெமரி
மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ஒன்யு.ஐ.
டூயல் சிம்
50MP பிரைமரி கேமரா
2MP டெப்த் சென்சார், எல்.இ.டி. ஃபிளாஷ்
8MP செல்ஃபி கேமரா
பக்கவாட்டில் கைரேகை சென்சார்
3.5mm ஆடியோ ஜாக்
டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
யு.எஸ்.பி. டைப் சி
5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
சாம்சங் கேலக்ஸி A05 ஸ்மார்ட்போன் லைட் கிரீன், சில்வர் மற்றும் பிளாக் என மூன்று நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 9 ஆயிரத்து 999 என்றும் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 12 ஆயிரத்து 499 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
- அமேசான் வலைதளத்தில் லேப்டாப் விலை குறைக்கப்பட்டு உள்ளது.
- மேக்புக் ஏர் M1 மாடல் மூன்று நிறங்களில் கிடைக்கிறது.
ஆப்பிள் நிறுவனம் கடந்த 2020 ஆண்டில் மேக்புக் ஏர் M1 மாடலை அறிமுகம் செய்தது. ரூ. 99 ஆயிரத்து 900 விலையில் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் மேக்புக் ஏர் M1 மாடலுக்கு தற்போது அசத்தல் தள்ளுபடி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி அமேசான் வலைதளத்தில் இந்த லேப்டாப் விலை பெருமளவில் குறைக்கப்பட்டு உள்ளது.
அமேசான் வலைதள விவரங்களின் படி ஆப்பிள் மேக்புக் ஏர் M1 மாடலுக்கு 15 சதவீதம் வரை உடனடி தள்ளுபடி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் மேக்புக் ஏர் M1 விலை ரூ. 99 ஆயிரத்து 900-இல் இருந்து ரூ. 84 ஆயிரத்து 990 என்று மாறி விடும். இத்துடன் ஹெச்.டி.எஃப்.சி. வங்கி கிரெடிட் கார்டு பயன்படுத்தும் போது ரூ. 5 ஆயிரம் வரை கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

தள்ளுபடி முழு தொகை செலுத்தி வாங்குவோருக்கும், மாத தவணையில் வாங்குவோருக்கும் பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அந்த வகையில், தள்ளுபடி மற்றும் வங்கி சலுகைகளை சேர்க்கும் போது மேக்புக் ஏர் M1 விலை ரூ. 79 ஆயிரத்து 990 என்று மாறிவிடும். மேக்புக் ஏர் M1 மாடல் ஸ்பேஸ் கிரே, சில்வர் மற்றும் கோல்டு என மூன்று நிறங்களில் கிடைக்கிறது.

மேக்புக் ஏர் M1 அம்சங்கள்:
13.3 இன்ச் எல்.இ.டி. பேக்லிட் டிஸ்ப்ளே, 400 நிட்ஸ் பிரைட்னஸ்
M1 சிப்செட்
8 ஜி.பி. ரேம்
256 ஜி.பி. மெமரி
தண்டர்போல்ட் 3
யு.எஸ்.பி. 4, யு.எஸ்.பி. 3.1, டிஸ்ப்ளே போர்ட்
3.5mm ஹெட்போன் ஜாக்
பேக்லிட் மேஜிக் கீபோர்டு
டச் ஐடி சென்சார்
வைபை, ப்ளூடூத், ஹெச்.டி. கேமரா
ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ்
15 மணி நேர பேக்கப்
30 வாட் யு.எஸ்.பி. சி பவர் அடாப்டர்
- ஃபன்டச் ஒ.எஸ். 14 சிறப்பான அனுபவத்தை வழங்கும்.
- இந்த ஸ்மார்ட்போன் ஏற்கனவே சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
ஐகூ நிறுவனத்தின் அடுத்த ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. ஐகூ 12 பெயரில் அறிமுகமாகும் புதிய ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 பிராசஸர் வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஏற்கனவே சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு விட்டது. இத்துடன் ஐகூ 12 ப்ரோ மாடலும் அறிமுகம் செய்யப்பட்டது.
புதிய ஸ்மார்ட்போன் அடுத்த வாரம் அறிமுகமாகும் நிலையில், இந்த மாடலில் புளோட்வேர் எனப்படும் பிரீ-இன்ஸ்டால் செய்யப்பட்ட செயலிகள் எதுவும் இடம்பெற்றிருக்காது என தெரியவந்துள்ளது. இந்த தகவலை ஐகூ இந்தியா தலைமை செயல் அதிகாரி நிபுன் மர்யா தெரிவித்து இருக்கிறார். இத்துடன் புதிய ஸ்மார்ட்போனில் ஃபன்டச் ஒ.எஸ். 14 சிறப்பான அனுபவத்தை வழங்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதுதவிர புதிய ஐகூ 12 ஸ்மார்ட்போனுக்கு மூன்று ஆண்டுகள் ஆண்ட்ராய்டு அப்டேட்கள், நான்கு ஆண்டுகளுக்கு செக்யுரிட்டி பேட்ச்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. ஆண்ட்ராய்டு 14 ஒ.எஸ். கொண்ட பிக்சல் அல்லாத முதல் ஸ்மார்ட்போன் இது ஆகும். இத்துடன் இந்தியாவில் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 பிராசஸருடன் அறிமுகமாகும் முதல் ஸ்மார்ட்போனும் இது ஆகும்.

ஐகூ 12 அம்சங்கள்:
6.78 இன்ச் 1.5K LTPO OLED டிஸ்ப்ளே, 144 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட்
குவால்காம் ஸ்னாப்டராகன் 8 ஜென் 3 பிராசஸர்
அட்ரினோ GPU
அதிகபட்சம் 16 ஜி.பி. ரேம்
1 டி.பி. வரையிலான மெமரி
ஆண்ட்ராய்டு 12 சார்ந்த ஒரிஜின் ஒ.எஸ். 4
இன்-ஸ்கிரீன் செல்ஃபி கேமரா
50MP பிரைமரி கேமரா, OIS
50MP அல்ட்ரா வைடு லென்ஸ்
64MP பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா
16MP செல்ஃபி கேமரா
5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
120வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
- விளம்பரங்கள் இல்லா வீடியோக்களை பார்க்க முடியும்.
- யூடியூப் தளத்திற்குள் நேரடியாக விளையாடலாம்.
வீடியோக்களுக்கான உலகின் முன்னணி வலைதளமாக யூடியூப் செயல்படுகிறது. இணையத்தில் விளம்பரங்களை தடுக்க செய்யும் ஆட் பிளாக்கர் (Ad Blocker) சேவைகளை எதிர்கொள்ளும் நோக்கில் யூடியூப் தனது பிரீமியம் சந்தாவில் (Premium Subscription) சேரும் படி பயனர்களை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
மேலும் பிரீமியம் சந்தாவில் புதிய வசதிகளை செயல்படுத்தும் பணிகளில் யூடியூப் தொடர்ந்து மும்முரம் காட்டி வருகிறது. அந்த வரிசையில், யூடியூப் பிரீமியம் சந்தாவின் கீழ் கேமிங் செய்வதற்கான வசதியை யூடியூப் அறிமுகம் செய்துள்ளது. புதிய அறிவிப்பின் படி பயனர்கள் யூடியூப் பிரீமியம் சந்தா வாங்கும் போது விளம்பரங்கள் இல்லா வீடியோக்களை பார்ப்பதோடு, கேமிங் சேவையை பயன்படுத்த முடியும்.

புதிய கேமிங் சேவை "யூடியூப் பிளேயபில்ஸ்" (Youtube Playables) என்று அழைக்கப்படுகிறது. இதற்காக யூடியூப் டெஸ்க்டாப் மற்றும் மொபைல் தளங்களில் புதிய பிரிவு உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த பிரிவில் பயனர்கள் விளையாடுவதற்காக நிறைய கேம்கள் வழங்கப்பட்டு உள்ளன. இவற்றை பயனர்கள் யூடியூப் தளத்திற்குள்ளேயே நேரடியாக விளையாட முடியும்.
யூடியூப் பிளேயபில்ஸ் சேவை பிரீமியம் சந்தா வைத்திருப்போருக்காக அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இந்த கேம்களை தற்போதைக்கு டெஸ்க்டாப்-இல் இலவசமாக விளையாட முடியும். மொபைல் செயலியிலும் யூடியூப் பிளேயபில்ஸ் கிடைக்கிறது. எனினும், யூடியூப் பிரீமியம் வைத்திருப்போர் கூட இதில் உள்ள கேம்களை விளையாட முடியாது. அந்த வகையில், இந்த சேவை இன்னும் முழுமையாக வெளியாகவில்லை என்றே தெரிகிறது.
புதிய கேமிங் சேவையை பயன்படுத்த விரும்புவோர், யூடியூப் -- எக்ஸ்புளோர் -- யூடியூப் பிளேயபில்ஸ் போன்ற ஆப்ஷன்களில் இயக்க முடியும். இந்த சேவையில் கேம்கள் பல்வேறு பிரிவுகளில் வகைப்படுத்தப்பட்டு இருக்கின்றன. இதில் எளிதான கேம்களும் உள்ளன. கடினமான கேம்களும் உள்ளன. முதற்கட்டமாக பயனர்கள் யூடியூப் பிளேயபில்ஸ்-இல் உள்ள கேம்களை இலவசமாக விளையாட முடியும்.
அடுத்த ஆண்டு மார்ச் 28-ம் தேதிக்கு பிறகு கேம்களை யூடியூப் பிரீமியம் பயனர்களுக்கு தொடர்ந்து வழங்குவது பற்றி யூடியூப் முடிவு செய்ய உள்ளது. தற்போதைக்கு கேம்கள் இலவசமாக வழங்கப்படுவதால், பயனர்கள் யூடியூப் பிரீமியம் சந்தா செலுத்தாமலும் கேம்களை விளையாடி பார்க்க முடியும்.
- புதிய மாடலில் பிளாக் செராமிக் பேக் பேனல் வழங்கப்படுகிறது.
- ஆக்ஷன் பட்டன் பிளாஸ்டிக் மூலம் உருவாக்கப்படுகிறது.
ஆப்பிள் நிறுவனம் தனது ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா மாடலின் புது வெர்ஷனை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆப்பிள் வாட்ச் அல்ட்ராவின் ரிடிசைன் செய்யப்பட்ட மாடல் ரெண்டர்கள் எஃப்.சி.சி. தளத்தில் வெளியானதை தொடர்ந்து இந்த தகவல் வெளியாகி இருக்கிறது.
புதிய தகவல்களின் படி புதிய ஆப்பிள் வாட்ச் மாடல் ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 2 மாடலில் இருப்பதை போன்ற ரக்கட் தோற்றம், வழக்கமான டிஜிட்டல் கிரவுன், ஆக்ஷன் பட்டன், ஸ்பீக்கர் கிரில், மைக்ரோபோன் உள்ளிட்டவைகளை கொண்டிருக்கிறது. இதன் பின்புறம் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9 மற்றும் பழைய மாடல்களில் இருப்பதை போன்ற பிளாக் செராமிக் பேக் பேனல் வழங்கப்பட்டு இருக்கிறது.

மேலும் இதில் உள்ள ஆக்ஷன் பட்டன் ரிடிசைன் செய்யப்பட்டு, பிளாஸ்டிக் மூலம் உருவாக்கப்பட்டு இருக்கும் என்று தெரிகிறது. உண்மையில் இந்த வாட்ச் விற்பனைக்கு வரும் பட்சத்தில், இந்த மாடல் அல்ட்ரா பிராண்டிங் இன்றி அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. எனினும், இந்த ஆப்பிள் வாட்ச் விலை தற்போதைய மாடல்களை விட குறைந்த விலையில் கிடைக்கும் என்று தெரிகிறது.
செப்டம்பர் 2022 ஆண்டில் ஆப்பிள் நிறுவனம் தனது ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா மாடலையும், அதன்பிறகு கடந்த செப்டம்பரில் ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 2 மாடலையும் அறிமுகம் செய்தது. இந்திய சந்தையில் ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 2 மாடலின் விலை ரூ. 89 ஆயிரத்து 990 என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.
ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா மற்றும் ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 2 என இரு மாடல்களிலும் ஏரோஸ்பேஸ் ரக அலுமினிம்-தர டைட்டானியம் கேஸ், மெட்டல் ஆக்ஷன் பட்டன், சஃபயர் க்ரிஸ்டல் பிளாக் பேனல் வழங்கப்பட்டு உள்ளது.
- பில்ட்-இன் மைக்ரோபோன் மற்றும் ஸ்பீக்கர் வழங்கப்பட்டு இருக்கிறது.
- லுமோஸ் ஸ்மார்ட்வாட்ச்-இல் ஃபயர் போல்ட் ஹெல்த் சூட் உள்ளது.
ஃபயர் போல்ட் நிறுவனத்தின் முற்றிலும் புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடல் "லுமோஸ்" (Lumos) என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய மாடல் அந்நிறுவனம் ஏற்கனவே அறிமுகம் செய்த சொலரிஸ் மற்றும் சொலெஸ் மாடல்களுடன் இணைகிறது. புதிய ஃபயர் போல்ட் லுமோஸ் மாடலில் 1.91 இன்ச் டிஸ்ப்ளே, ப்ளூடூத் காலிங், உடல்நல அம்சங்கள் மற்றும் பல்வேறு வசதிகள் உள்ளன.
இந்த ஸ்மார்ட்வாட்ச்-இல் உள்ள டிஸ்ப்ளே HD ஸ்கிரீன், 240x280 பிக்சல் ரெசல்யூஷன் கொண்டிருக்கிறது. இத்துடன் 100-க்கும் அதிகமான கிளவுட் சார்ந்த வாட்ச் ஃபேஸ்கள் உள்ளன. இத்துடன் பில்ட்-இன் மைக்ரோபோன் மற்றும் ஸ்பீக்கர் வழங்கப்பட்டு இருக்கிறது. இதை கொண்டு ப்ளூடூத் காலிங் மற்றும் வாய்ஸ் அசிஸ்டண்ட் போன்ற அம்சங்களை பயன்படுத்த முடியும்.

புதிய லுமோஸ் ஸ்மார்ட்வாட்ச்-இல் ஃபயர் போல்ட் ஹெல்த் சூட் உள்ளது. இதில் ஹார்ட் ரேட் டிராக்கிங், SpO2 டிராக்கிங் மற்றும் ஸ்லீப் டிராக்கிங் போன்ற வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் 100-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. கூடுதல் அம்சங்களாக ஸ்மார்ட் நோட்டிஃபிகேஷன், பில்ட்-இன் கேம்ஸ் உள்ளன.
இவைதவிர வானிலை அப்டேட்கள், கால்குலேட்டர், மியூசிக், கேமரா கண்ட்ரோல் உள்ளிட்ட வசதிகளும் உள்ளன. புதிய ஃபயர் போல்ட் லுமோஸ் ஸ்மார்ட்வாட்ச் ரோஸ் கோல்டு, சில்வர், புளூ, பிளாக் மற்றும் கோல்டு என ஐந்துவிதமான நிறங்களில் கிடைக்கின்றன. இதன் விற்பனை அமேசான் மற்றும் ஃபயர் போல்ட் வலைத்தளங்களில் நவம்பர் 30-ம் தேதி துவங்குகிறது.
இந்திய சந்தையில் புதிய ஃபயர் போல்ட் லுமோஸ் ஸ்மார்ட்வாட்ச் ரூ. 1499 எனும் விலையில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. இது அறிமுக விலை என்பதால், எப்போது வேண்டுமானாலும் மாற்றப்படலாம் என்று தெரிகிறது.
- ரியல்மி GT 5 மாடலில் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர் வழங்கப்பட்டது.
- டெலிபோட்டோ கேமரா சென்சார் கொண்டிருக்கும் என்று தகவல்.
ரியல்மி நிறுவனத்தின் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் GT 5 ப்ரோ வெளியீட்டு தேதி ஒருவழியாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இது அந்நிறுவனம் கடந்த ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட ரியல்மி GT 5 சீரிசில் இணையும் என்று தெரிகிறது. ரியல்மி GT 5 மாடலில் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர் வழங்கப்பட்ட நிலையில், புதிய மாடலில் மேம்பட்ட பிராசஸர் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.
புதிய GT ஸ்மார்ட்போனிற்காக பல்வேறு டீசர்களை ரியல்மி நிறுவனம் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஸ்மார்ட்போனின் ஏராளமான அம்சங்கள் ஏற்கனவே அறிந்ததே. தற்போது வெளியிடப்பட்டு இருக்கும் டீசர்களில் புதிய ரியல்மி GT 5 ப்ரோ ஸ்மாரட்போன் டிசம்பர் 7-ம் தேதி சீன சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. முதற்கட்டமாக இந்த மாடல் சீன சந்தையில் மட்டும் அறிமுகம் செய்யப்படுகிறது.

கோப்புப்படம்
இத்துடன் வெளியான மற்றொரு டீசரில், புதிய ரியல்மி GT 5 ப்ரோ ஸ்மார்ட்போன் டெலிபோட்டோ கேமரா சென்சார் கொண்டிருக்கும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. முன்னதாக வெளியான தகவல்களில் ரியல்மி GT 5 ப்ரோ ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 பிராசஸர் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. இத்துடன் 50MP பிரைமரி கேமரா, OIS, EIS வசதிகள் வழங்கப்படலாம்.
மற்ற அம்சங்களை பொருத்தவரை ரியல்மி GT 5 ப்ரோ மாடலில் 6.78 இன்ச் 1264x2780 பிக்சல் AMOLED டிஸ்ப்ளே, மூன்று சென்சார்கள் கொண்ட கேமரா யூனிட், 32MP செல்ஃபி கேமரா வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இத்துடன் 5400 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 100 வாட் வயர்டு, 50 வாட் வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என்று தெரிகிறது.
முன்னதாக அறிமுகம் செய்யப்பட்ட ரியல்மி GT 5 மாடலில் 150 வாட் மற்றும் 240 வாட் வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது. இவற்றில் முறையே 5240 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் 4600 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.






