என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஸ்மிருதி மந்தனா"

    • ஐபிஎல் தொடரில் அதிக ரன் எடுத்ததற்கான ஆரஞ்சு தொப்பி ஸ்மிருதி மந்தனாவிற்கு அளிக்கப்பட்டது.
    • அதிக விக்கெட் எடுத்த சோபியா டிவைனுக்கு பர்பிள் தொப்பியும் வழங்கப்பட்டது.

    வதோதரா:

    மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டி வதோதராவில் நடந்தது. இதில் டெல்லி கேப்பிடல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின.

    முதலில் பேட் செய்த டெல்லி கேப்பிடல்ஸ் அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 203 ரன் குவித்தது. கேப்டன் ஜெமிமா ரோட்ரிக்ஸ் 57 ரன் எடுத்தார்.

    அடுத்து, களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 19.4 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 204 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

    அத்துடன் 2வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. கேப்டன் ஸ்மிருதி மந்தனா 87 ரன்னிலும், ஜார்ஜியா வோல் 79 ரன்னிலும் அவுட்டாகினர்.

    இந்நிலையில், ஆட்ட நாயகி விருது ஸ்மிருதி மந்தனாவுக்கும், தொடர் நாயகி விருது சோபி டிவைனுக்கும் அளிக்கப்பட்டது.

    நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் எடுத்ததற்கான ஆரஞ்சு தொப்பி ஸ்மிருதி மந்தனாவிற்கும், அதிக விக்கெட் எடுத்த சோபியா டிவைனுக்கு பர்பிள் தொப்பியும் வழங்கப்பட்டது. வளர்ந்து வரும் வீராங்கனைக்கான விருது நந்தினி ஷர்மாவுக்கு அளிக்கப்பட்டது.

    • 18-வது சீசனில் ஆர்சிபி கோப்பையை வெல்ல வேண்டும் என்பது விதியால் நிர்ணயிக்கப்பட்ட ஒன்று என்று நான் நினைக்கிறேன்.
    • அந்த அணிக்காக நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

    மகளிர் பிரீமியர் லீக் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரில் முதல் அணியாக ஆர்சிபி அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இதனையடுத்து 2-வது இடத்தில் குஜராத் அணியும் 3-வது இடத்தில் டெல்லியும் அணியும் இடம் பிடித்தது.

    இதனையடுத்து இறுதிப்போட்டியில் ஆர்சிபி அணியுடன் மோதும் அணி யார் என்பது நாளை தெரியும். எலிமினேட்டர் சுற்றில் குஜராத்- டெல்லி அணிகள் மோதுகிறது. இதில் வெற்றி பெறும் அணி 5-ந் தேதி ஆர்சிபி அணியுடன் மோதும்.

    முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறிய ஆர்சிபி அணி 2-வது முறையாக பட்டம் வெல்ல ஆவலுடன் உள்ளது. 3 சீசன்களில் ஆர்சிபி அணி ஒரு முறை சாம்பியன் பட்டத்தை வென்றது.

    ஆனால் ஆடவர் ஆர்சிபி அணி 18 சீசனில் தனது முதல் பட்டத்தை வென்றது அற்புதமான உணர்வு என மகளிர் ஆர்சிபி அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    18-வது சீசனில் ஆர்சிபி கோப்பையை வெல்ல வேண்டும் என்பது விதியால் நிர்ணயிக்கப்பட்ட ஒன்று என்று நான் நினைக்கிறேன். நான் இறுதிப் போட்டியில் அங்கிருந்தேன். அனைவரும் கொண்டாடியதைப் பார்ப்பது அற்புதமாக இருந்தது.

    எனக்கு ஆர்சிபி நிர்வாகத்தினரை நன்றாகத் தெரியும். அவர்களின் கண்களில் கண்ணீரைக் கண்டேன். பதினெட்டு ஆண்டுகள் என்பது ஒரு நீண்ட காத்திருப்பு. ஆனால் அது என் கண் முன்னே நடந்ததைப் பார்ப்பது ஒரு அற்புதமான உணர்வு. அந்த அணிக்காக நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் என மந்தனா கூறினார்.

    • திருமணச் சடங்குகளின் போது நான் அங்கு தான் இருந்தேன்.
    • அவரின் மொத்த குடும்பமும் ஏமாற்றுக்காரர்கள் தான்.

    இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவுக்கும், அவரது காதலர், இசையமைப்பாளர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளரான பலாஷ் முச்சலுக்கும் கடந்த நவ.23 திருமணம் நடைபெறவிருந்தது.

    ஆனால் ஸ்மிருதியின் தந்தைக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவு காரணமாக இந்த திருமணம் ஒத்தி வைக்கப்பட்டது. இறுதியில் திருமணம் கைவிடப்பட்டதாக மந்தனா அறிவித்தார்.

    பலாஷ் முச்சல்க்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பிருந்ததே திருமணம் கைவிடப்பட காரணம் என ஊகங்கள் எழுந்தன.

    இந்நிலையில் ஸ்மிருதியின் சிறுவயது நண்பரும் திரைப்பட தயாரிப்பாளருமான விக்ஞான் மானே தேசிய ஊடகம் ஒன்றுக்கு அண்மையில் பேட்டி அளித்தார்.

    அதில் பேசிய அவர், 2025 நவம்பரில் நடந்த திருமணச் சடங்குகளின் போது நான் அங்கு தான் இருந்தேன். பலாஷ் முச்சல் வேறொரு பெண்ணுடன் ஒரு அறையில் அந்தரங்கமாக இருந்தபோது பிடிபட்டார்.

    பலாஷின் இந்தச் செயலால் ஆத்திரமடைந்த அங்கிருந்த இந்திய மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகள் அவரை தாக்கினர். அவரின் மொத்த குடும்பமும் ஏமாற்றுக்காரர்கள் தான்.

    படம் எடுக்க போவதாக பலாஷ் என்னிடம் ரூ.40 லட்சம் வாங்கினார். ஆனால் திருமண முறிவிற்குப் பிறகு பலாஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் அந்தப் பணத்தைத் தராமல் என்னை ஏமாற்றினர்" என்று தெரிவித்துள்ளார்.

    இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள பலாஷ் முச்சல், "என் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்க வேண்டும் என்ற தீய நோக்கத்தில் இந்தக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன. இதனை நான் சட்டரீதியாகச் சந்திப்பேன்" என்று இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். 

    • முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 6 விக்கெட் இழப்பிக்கிற 178 ரன்கள் குவித்தது.
    • குஜராத் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 117 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.

    5 அணிகள் பங்கேற்றுள்ள 4-வது பெண்கள் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட்டின் முதற்கட்ட ஆட்டங்கள் நவிமும்பையில் நடந்தன.

    இதனையடுத்து எஞ்சிய ஆட்டங்கள் அனைத்தும் குஜராத் மாநிலம் வதோதராவில் நடைபெற்று வருகிறது.

    நேற்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் 12-வது லீக் போட்டியில் ஸ்மிருதி மந்தனா தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, ஆஷ்லி கார்ட்னெர் தலைமையிலான குஜராத் ஜெயன்ட்சுடன் மோதியது.

    இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 6 விக்கெட் இழப்பிக்கிற 178 ரன்கள் குவித்தது. இதையடுத்து களமிறங்கிய குஜராத் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 117 ரன்கள் மட்டுமே எடுத்து 61 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

    இந்த வெற்றியின் மூலம் மகளிர் ப்ரீமியர் லீக்: நடப்பு சீசனில் முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு தகுதி பெற்றுள்ளது.

    ஸ்மிருதி மந்தனா தலைமையிலான பெங்களூரு அணி இதுவரை விளையாடிய 5 போட்டிகளிலும் வெற்றி பெற்று அசத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • மந்தனாவும் பிரபல இந்தி சினிமா இசையமைப்பாளரான பலாஷ் முச்சலும் நீண்ட காலமாக காதலித்து வந்தனர்.
    • இருவரும் சமீபத்தில் மோதிரம் மாற்றி நிச்சயதார்த்தம் நடந்திருப்பதை உறுதிப்படுத்தினர்.

    இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா. மும்பையை சேர்ந்த 29 வயதாகும் இடது கை பேட்டரான ஸ்மிருதி மந்தனா இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனையாகவும், துணை கேப்டனாகவும் இருந்து வருகிறார். இவருக்கு நாடு முழுவதும் லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.

    மந்தனாவும் பிரபல இந்தி சினிமா இசையமைப்பாளரான பலாஷ் முச்சலும் நீண்ட காலமாக காதலித்து வந்தனர். இருவரும் மோதிரம் மாற்றி நிச்சயதார்த்தம் நடந்திருப்பதை உறுதிப்படுத்தினர்.

    இதனையடுத்து மந்தனா - பலாஷ் முச்சல் ஜோடியின் திருமணம் மகராஷ்டிராவில் உள்ள அவரது சொந்த ஊரான சாங்லியில் (23-ந்தேதி) நடைபெற இருந்தது. இரு வீட்டாரின் சம்மதத்தோடும் இவர்களது திருமணம் நடைபெற இருந்தது. அதில் பல இந்திய வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.


    இந்நிலையில் ஸ்மிருதி மந்தனா - பலாஷ் முச்சலின் திருமணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கூறினர். மந்தனாவின் தந்தைக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதன் காரணமாக இவர்களது திருமணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

    அதனை தொடர்ந்து பலாஷ் முச்சலுடன் நடைபெற இருந்த தன்னுடைய திருமணம் ரத்து செய்யப்பட்டுள்ளது என்று ஸ்மிருதி மந்தனா தெரிவித்துள்ளார்.

    ஆனால் ஸ்மிருதி மந்தனாவின் திருமணம் ஒத்திவைக்கப்பட்டதற்கு தந்தையின் உடல்நலக்குறைவு காரணம் இல்லை என்றும் வேறு காரணம் எனவும் கூறப்பட்டது. அதாவது பலாஷ் முச்சல் வேறு சில பெண்களுடன் பேசிய ஆடியோக்கள், புகைப்படங்கள் வைரலாகின. இதன் காரணமாக திருமணம் ரத்து செய்யப்பட்டதாக கூறப்பட்டது. திருமணம் ஒத்திவைக்கப்பட்ட பிறகு இது தொடர்பாக இருவரும் ஏதும் பேசவில்லை.


    சில நாட்களில் பலாஷ் முச்சலுடன் நடைபெற இருந்த தன்னுடைய திருமணம் ரத்து செய்யப்பட்டுள்ளது என்று ஸ்மிருதி மந்தனா அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

    அதில், இந்த விவகாரம் இத்துடன் முடிவடைய விரும்புகிறேன். இதை மேலும் எடுத்துச் செல்ல வேண்டாம் என உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். இந்த நேரத்தில் இரண்டு குடும்பங்களின் தனியுரிமையை மதிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இந்தச் சூழலைப் புரிந்து கொண்டு எங்கள் வழியில் முன் நகர்ந்து செல்ல அவகாசம் கொடுங்கள் என்று தெரிவித்தார்.

    இதனை தொடர்ந்து பலாஷ் முச்சல் கூறியதாவது:-

    வாழ்க்கையில் அடுத்த விஷயங்களை நோக்கி நகர்ந்து தனிப்பட்ட உறவுகளிலிருந்து விலக நிற்க முடிவு செய்துள்ளேன். எனக்கு மிகவும் புனிதமாக இருந்த ஒன்றைப் பற்றி பரவும் ஆதாரமற்ற வதந்திகள் மீது மக்கள் எளிதாக கருத்து தெரிவிப்பது எனக்கு மிகவும் கடினமாக உள்ளது. இது எனது வாழ்க்கையின் கடினமான காலகட்டம். எனது நம்பிக்கைகளின் மீது உறுதியாக நின்று அதனை கையாள்வேன். உறுதிசெய்யப்படாத வதந்திகளை அடிப்படையாக வைத்து ஒருவரை மதிப்பிடுவதற்கு முன்பு ஒரு சமூகமாக நாம் நிறுத்தி, யோசிப்போம் என நம்புகிறேன் என கூறினார்.

    உண்மையில் பலாஷ் தனது காதலி மந்தனாவை ஏமாற்றியதாக சமூக வலைத்தளத்தில் செய்தி பரவியது. திருமண வேலைகளை செய்து கொண்டிருந்த பெண் நடன இயக்குனருடன் பலாஷிற்கு தொடர்பு இருப்பதாக சில பதிவுகள் கூறுகிறது. மேலும் பலாஷ் அப்பெண்ணுடன் சாட்டிங் செய்த விபரமும் சமூக வலைத்தள பக்கத்தில் பரவியது. அவர்கள் எப்போது இது போன்ற சாட்டிங்கில் ஈடுபட்டனர் என்ற தகவல்களும் உறுதி செய்யப்படவில்லை. திருமணத்திற்கு முந்தைய நாள் இந்த சாட்டிங் விபரம் வெளியில் கசிந்தது குறிப்பிடத்தக்கது.

    • முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவரில் 221 ரன்கள் குவித்தது.
    • ஸ்மிருதி மந்தனா 80 ரன்னும், ஷபாலி வர்மா 79 ரன்னும் எடுத்தனர்.

    திருவனந்தபுரம்:

    இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்துமுடிந்த 3 போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை இந்திய அணி கைப்பற்றியது.

    இரு அணிகளுக்கு இடையிலான 4வது டி20 போட்டி திருவனந்தபுரத்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை அணி பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி இந்திய அணி முதலில் களமிறங்கியது. தொடக்கம் முதலே இருவரும் அதிரடியாக விளையாடினர். இந்திய அணி 20 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 221 ரன்கள் குவித்தது. ஸ்மிருதி மந்தனா 80 ரன்னும், ஷபாலி வர்மா 79 ரன்னும் எடுத்தனர். ரிச்சா கோஷ் 40 ரன்கள் எடுத்தார்.

    இந்நிலையில், இந்தப் போட்டியில் 80 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்மிருதி மந்தனா புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.

    சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் அதிவேகமாக 10,000 ரன்களைக் கடந்த வீராங்கனை என்ற சாதனையை படைத்தார் ஸ்மிருதி மந்தனா. மேலும் 10,000 ரன்களைக் கடந்த 2-வது இந்திய வீராங்கனை ஆனார். இந்தப் பட்டியலில் மிதாலி ராஜ் 10868 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார். ஒட்டுமொத்தமாக 10,000 ரன்களைக் கடந்த 4வது வீராங்கனை ஆவார்.

    • டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவரில் 221 ரன்கள் குவித்தது.

    திருவனந்தபுரம்:

    இந்தியா வந்துள்ள இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. மூன்று போட்டிகள் முடிவில் இந்திய அணி வெற்றி பெற்று டி20 தொடரில் 3-0 என கைப்பற்றியது.

    இந்நிலையில், இரு அணிகள் இடையிலான நான்காவது டி20 போட்டி கேரளாவின் திருவனந்தபுரத்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 221 ரன்கள் குவித்தது. தொடக்க வீராங்கனைகள் அதிரடியில் மிரட்டினர். இருவரும் அரை சதம் கடந்தனர்.

    ஸ்மிருதி மந்தனா 48 பந்தில் 80 ரன்னும், ஷபாலி வர்மா 46 பந்தில் 79 ரன்னும் குவித்தனர். ரிச்சா கோஷ்16 பந்தில் 40 ரன்கள் சேர்த்தார்.

    இதையடுத்து, 222 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. கேப்டன் சமாரி அடப்பட்டு 52 ரன்னும், ஹாசினி பெராரா 33 ரன்னும் எடுத்தனர்.

    இறுதியில், இலங்கை பெண்கள் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 191 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 30 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. அத்துடன் டி20 தொடரில் இந்திய அணி 4-0 என கைப்பற்றியது.

    • அயர்லாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை தென் ஆப்பிரிக்கா வென்றது .
    • இந்த தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய லாரா வால்வார்த் தொடர் நாயகி விருதை வென்றார்.

    மகளிர் உலக கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவிடம் தோல்வியடைந்து தென்ஆப்பிரிக்கா சாம்பியன் பட்டத்தை தவறவிட்டது. ஆனால் அந்த அணியின் கேப்டனும், தொடக்க பேட்டருமான லாரா வால்வார்த் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

    அரையிறுதியில் இங்கிலாந்துக்கு எதிராகவும், இறுதிப் போட்டியில் இந்தியாவுக்கு எதிராகவும் சதம் அடித்தார். ஒட்டுமொத்தமாக இந்த தொடரில் 9 இன்னிங்சில் 571 ரன்கள் குவித்தார். 

    இதன்மூலம் மகளிருக்கான ஐசிசி ஒருநாள் பேட்டர்கள் தரவரிசையில் முதல் இடத்தில் முன்னேறினார். ஏற்கனவே முதல் இடம் பிடித்திருந்த ஸ்மிரிதி மந்தனா 2ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டார். இதனையடுத்து மீண்டும் ஸ்மிரிதி மந்தனா முதலிடம் பிடித்தார். லாரா வால்வார்த் 2 ஆம் இடத்துக்கு தள்ளப்பட்டார்.

    இந்நிலையில், அயர்லாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3 -0 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்கா கைப்பற்றியது. இந்த தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய லாரா வால்வார்த் தொடர் நாயகி விருதை வென்றார்.

    இதன்மூலம் மகளிருக்கான ஐசிசி ஒருநாள் பேட்டர்கள் தரவரிசையில் லாரா வால்வார்த் மீண்டும் முதல் இடத்துக்கு முன்னேறினார். ஏற்கனவே முதல் இடம் பிடித்திருந்த ஸ்மிரிதி மந்தனா 2ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டார்.

    • இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.
    • சர்வதேச மகளிர் டி20 கிரிக்கெட்டில் ஸ்மிருதி மந்தனா 4,000 ரன்கள் எடுத்தார்.

    விசாகப்பட்டினம்:

    இந்தியா, இலங்கை பெண்கள் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. இதில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது.

    இந்தப் போட்டியில், இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    இந்நிலையில், சர்வதேச மகளிர் டி20 கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக ஸ்மிருதி மந்தனா 153 போட்டிகளில் விளையாடி 4,000 ரன்கள் எடுத்துள்ளார்.

    இதன்மூலம், சர்வதேச மகளிர் டி20 கிரிக்கெட்டில் 4,000 ரன்கள் குவித்த முதல் இந்திய வீராங்கனை என்ற உலக சாதனையை ஸ்மிருதி மந்தனா படைத்துள்ளார்.

    சர்வதேச அளவில் 2வது வீராங்கனை ஆவார். இதற்கு முன் நியூசிலாந்தைச் சேர்ந்த சுசி பேட்ஸ் மட்டுமே 4000 ரன்களைக் கடந்துள்ளார்.

    மேலும், சர்வதேச மகளிர் டி20 கிரிக்கெட்டில் 4000 ரன்கள் அடித்த முதல் ஆசிய வீராங்கனை என்ற வரலாற்றையும் ஸ்மிருதி மந்தனா படைத்துள்ளார்.

    • கிரிக்கெட்டை விட நான் வேறு எதையும் அதிகமாக நேசிப்பதாக எனக்கு தோன்றவில்லை.
    • ஒரு குழந்தையாக இருந்தபோதிலிருந்தே, பேட்டிங் மீதான அந்த வெறி எப்போதும் இருந்தது.

    இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா. சமீபத்தில் இந்திய அணி மகளிர் உலகக் கோப்பையை வெல்வதில் மந்தனா முக்கிய பங்காற்றினார்.

    இந்த சூழலில் 29 வயதான மந்தனாவும், பிரபல இசையமைப்பாளர் மத்தியபிரதேசத்தை சேர்ந்த பலாஷ் முச்சாலும் நீண்ட காலமாக காதலித்து வந்த நிலையில் சமீபத்தில் மோதிரம் மாற்றி நிச்சயம் செய்து கொண்டனர்.

    இதனையடுத்து இருவரின் திருமணம் கடந்த 23-ம் தேதி நடப்பதாக இருந்த நிலையில் மந்தனாவின் தந்தை ஸ்ரீனிவாசுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டடு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இதனால் திருமணம் காலவரையின்றி தள்ளிவைக்கப்பட்டது.

    இதற்கிடையே மந்தனாவின் வருங்கால கணவர் பலாஷ் முச்சல் வேறு ஒரு பெண்ணுடன் நெருக்கமாகப் பேசியதாகக் கூறப்படும் 'ஸ்கிரீன்ஷாட்கள்' இணையத்தில் வேகமாக பரவின. இதைதொடர்ந்து பலாஸ் உடன் இருக்கும் திருமண புகைப்படங்களை மந்தனா நீக்கினார்.

    அதனை தொடர்ந்து, திருமணம் தள்ளிவைக்கப்பட்ட சில வாரங்களுக்கு பின் ஸ்மிருதி மந்தனா, தனது திருமணம் ரத்து செய்யப்பட்டது என்று இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார்.

    இந்நிலையில் கிரிக்கெட்டை விட நான் வேறு எதையும் அதிகமாக நேசிப்பதாக எனக்கு தோன்றவில்லை என ஸ்மிருதி மந்தனா தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    கிரிக்கெட்டை விட நான் வேறு எதையும் அதிகமாக நேசிப்பதாக எனக்கு தோன்றவில்லை. இந்திய ஜெர்சியை அணிவதுதான் எங்களை இயக்கும் உந்துசக்தி. எல்லாப் பிரச்சனைகளையும் ஒதுக்கி வைத்துவிடும். அந்த ஒரு எண்ணமே வாழ்க்கையில் கவனம் செலுத்த உதவுகிறது. ஒரு குழந்தையாக இருந்தபோதிலிருந்தே, பேட்டிங் மீதான அந்த வெறி எப்போதும் இருந்தது. அதை யாரும் புரிந்துகொள்ளவில்லை. ஆனால் என் மனதில், நான் எப்போதும் ஒரு உலக சாம்பியன் என்று அழைக்கப்பட வேண்டும் என்றே விரும்பினேன்.

    என ஸ்மிருதி மந்தனா கூறினார்.

    • மந்தனாவின் தந்தைக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
    • தனது திருமணம் ரத்து செய்யப்பட்டது என்று இன்ஸ்டாகிராமில் அவர் பதிவிட்டார்.

    இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா. இவர் மராட்டிய மாநிலம் சாங்லியை சேர்ந்தவர். சமீபத்தில் இந்திய அணி மகளிர் உலகக் கோப்பையை வெல்வதில் மந்தனா முக்கிய பங்காற்றினார்.

    இந்த சூழலில் 29 வயதான மந்தனாவும், பிரபல இசையமைப்பாளர் மத்தியபிரதேசத்தை சேர்ந்த பலாஷ் முச்சாலும் நீண்ட காலமாக காதலித்து வந்தனர்.

    மோதிரம் மாற்றி நிச்சயம் செய்து கொண்டனர். இதனையடுத்து இருவரின் திருமணம் கடந்த 23-ம் தேதி சாங்லியில் உள்ள அவரது பண்ணை வீட்டில் நடப்பதாக இருந்த நிலையில் மந்தனாவின் தந்தை ஸ்ரீனிவாசுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டடு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

    திருமணம் காலவரையின்றி தள்ளிவைக்கப்பட்டது. இதற்கிடையே மந்தனாவின் வருங்கால கணவர் பலாஷ் முச்சல் வேறு ஒரு பெண்ணுடன் நெருக்கமாகப் பேசியதாகக் கூறப்படும் 'ஸ்கிரீன்ஷாட்கள்' இணையத்தில் வேகமாக பரவின. இதைதொடர்ந்து பலாஸ் உடன் இருக்கும் திருமண புகைப்படங்களை மந்தனா நீக்கினார்.

    தொடர்ந்து, திருமணம் தள்ளிவைக்கப்பட்ட சில வாரங்களுக்கு பின் ஸ்மிருதி மந்தனா, தனது திருமணம் ரத்து செய்யப்பட்டது என்று இன்ஸ்டாகிராமில் அவர் பதிவிட்டார். இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்ட கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா காதல் குறித்து மனம் திறந்துள்ளார்.

    அப்போது அவர் கூறுகையில்," என் வாழ்க்கையில் கிரிக்கெட்டை தவிர வேறு எதையும் அதிகம் காதலிக்கவில்லை. இந்திய ஜெர்ஸியை அணிந்து நாட்டுக்காக விளையாடும்போது, எல்லா கஷ்டங்களும் மறந்துவிடும்!" என்றார்.

    • இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் துபாயைச் சேர்ந்த கேரள தொழிலதிபர் ராஜ் ஹீத் இப்ரானுடன் அவருக்கு நிச்சயதார்த்தம் நடந்தது.
    • அண்மையில் இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஸ்ம்ரிதி மந்தனாவின் திருமணம் நின்றது.

    விஜய் ஆண்டனியின் திமிரு புடுச்சவன், உதயநிதியின் பொதுவாக எம் மனசு தங்கம், ஜெயம் ரவியின் டிக் டிக் டிக்  உள்ளிட்ட படங்கள் மூலம் பிரபலமடைந்தவர் நடிகை நிவேதா பெத்துராஜ்.

    இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் துபாயைச் சேர்ந்த கேரள தொழிலதிபர் ராஜ் ஹீத் இப்ரானுடன் அவருக்கு நிச்சயதார்த்தம் நடந்தது.

    இந்த விஷயம் முதலில் ரகசியமாக வைக்கப்பட்டு, பின்னர் சமூக ஊடகங்கள் மூலம் இருவரும் புகைப்படங்களை பகிர்ந்து நிச்சயதார்த்தம் முடிந்ததை உறுதி செய்தனர். இந்த ஆண்டு இறுதியில் திருமணம் நடைபெறும் என்று கூறப்பட்டது.

    இந்நிலையில் நிவேதா மற்றும் ராஜ் ஹீத் இருவரும் தங்கள் சமூக ஊடக கணக்குகளில் இருந்து அந்த புகைப்படங்களை தற்போது நீக்கியுள்ளனர். மேலும் இருவரும் ஒருவரை ஒருவர் unfollow செய்துள்ளனர். இதனால் திருமணம் நின்றுபோனதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

    அண்மையில் இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஸ்ம்ரிதி மந்தனாவின் திருமணம் நின்ற நிலையில் அதே பாணியில் நிவேதா திருமணமும் நின்றதாக பலர் புறணி பேசி வருகின்றனர்.  

    ×