search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேட்பாளர்கள் அறிவிப்பு"

    தமிழ்நாடு சட்டசபையில் காலியாக உள்ள 4 தொகுதிகளுக்கு மே மாதம் 19-ம் தேதி நடைபெறும் இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்கள் பட்டியலை மக்கள் நீதி மய்யம் கட்சி வெளியிட்டது. #MakkalNeedhiMaiam #MNMCandidates
    சென்னை:

    தமிழ்நாடு சட்டசபையில் காலியாக சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் ஆகிய 4 தொகுதிகளுக்கும் மே மாதம் 19-ந் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.

    இந்த 4 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வேட்புமனு தாக்கல் கடந்த 22-ந்தேதி தொடங்கி நாளையுடன் முடிவடைகிறது. இந்நிலையில், மேற்கண்ட தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் இன்று மாலை வெளியிட்டது.



    திருப்பரங்குன்றம் தொகுதியில் சக்திவேல், சூலூரில் மயில்சாமி, அரவக்குறிச்சியில் மோகன் ராஜ், ஒட்டபிடாரத்தில் காந்தி ஆகியோர் போட்டியிடுவதாக மக்கள் நீதி மய்யம் இன்று மாலை வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #MakkalNeedhiMaiam #MNMCandidates
    உத்தரப்பிரதேசம், மேற்கு வங்காளத்தில் போட்டியிட உள்ள ஜெயப்பிரதா, மேனகா காந்தி உள்ளிட்ட வேட்பாளர்களை பாஜக இன்று அறிவித்துள்ளது. #LSpolls #BJP #JayaPrada #ManekaGandhi
    புதுடெல்லி:

    பிரபல நடிகை ஜெயப்பிரதா கடந்த 1994-ம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சியில் சேர்ந்து அரசியலில் ஈடுபட்டார். சந்திரபாபு நாயுடுவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் 2004-ம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து விலகி முலாயம்சிங் யாதவின் சமாஜ்வாடி கட்சியில் சேர்ந்தார். அந்த கட்சி சார்பில் உத்தரபிரதேசத்தில் போட்டியிட்டு எம்.பி. ஆனார்.

    கடந்த 2014-ம் ஆண்டு சமாஜ்வாடி கட்சி தலைவர்களுக்கும் அவருக்கும் பிரச்சனை ஏற்பட்டது. இதனால் ஜெயப்பிரதா சமாஜ்வாடி கட்சியில் இருந்து விலகி ராஷ்ட்ரீய லோக்தளம் கட்சியில் சேர்ந்தார்.

    இதற்கிடையே, இன்று காலை ஜெயப்பிரதா திடீரென அந்த கட்சியில் இருந்து விலகி பா.ஜனதாவில் இணைந்தார்.



    இந்நிலையில், உத்தரப்பிரதேசம் மற்றும் மேற்கு வங்காளத்தில் போட்டியிட உள்ள 39 வேட்பாளர்களை பாஜக இன்று அறிவித்துள்ளது.

    இதுதொடர்பாக பாஜக தலைவர் அருண் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில், உத்தரபிரதேசத்தின் ராம்பூர் தொகுதியில் பா.ஜ.க. சார்பில் ஜெயப்பிரதா போட்டியிடுகிறார்.

    மேனகா காந்தி சுல்தான்பூரிலும், வருண் காந்தி பிலிபித் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். மேற்கு வங்காளத்தின் அல்பேரியா தொகுதியில் நடிகர் ஜாய் பானர்ஜி போட்டியிடுகிறார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. #LSpolls #BJP #JayaPrada #ManekaGandhi
    மேற்கு வங்காளம் மாநிலத்தில் மொத்தமுள்ள 42 தொகுதிகளுக்கு 38 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இன்று அறிவித்துள்ளது. #LSpolls #CPI(M) #CPI(M)candidates
    கொல்கத்தா:

    பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் 11ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதையடுத்து, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தொகுதி பங்கீடுகளை முடித்து வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன.

    மேற்கு வங்காளம் மாநிலத்தில் மொத்தம் 42 பாராளுமன்றத் தொகுதிகள் உள்ளன. இங்கு ஏப்ரல் 11 முதல் மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது.

    மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை போல் வலிமையான கட்சியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும் விளங்குகிறது. இங்கு திரிணாமுல் காங்கிரஸ் அனைத்து தொகுதிகளிலும் வெற்றிபெற முயற்சி மேற்கொண்டுள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடன் கைகோர்க்க காங்கிரஸ் கட்சி விரும்பியது. ஆனால் மாநில தலைமை அதனை விரும்பவில்லை. திரிணாமுல் இங்கு தனியாகவே களமிறங்குகிறது.

    இதற்கிடையே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல் வெளியானது.



    இந்நிலையில், மேற்கு வங்காளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 38 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை இன்று அறிவித்துள்ளது. இன்னும் 4 தொகுதிகள் மட்டுமே மீதமுள்ளது. 

    இதுதொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைவர் பிமன் போஸ் கூறுகையில், முதல் கட்டமாக 38 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்துள்ளோம். காங்கிரசுடன் கூட்டணிக்கான பேச்சுவார்த்தைக்கு தயாராகவே உள்ளோம். கூட்டணி இல்லையென்றால் மீதமுள்ள 4 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை விரைவில் அறிவிப்போம் என தெரிவித்துள்ளார். #LSpolls #CPI(M) #CPI(M)candidates
    சட்டசபை இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரங்களை அக்கட்சி இன்று இரவு அறிவித்துள்ளது. #ByPoll #ADMK
    சென்னை:

    அதிமுக சார்பில் 18 தொகுதி சட்டசபை இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரங்கள் வெளியிடப்பட்டு உள்ளன.

    பூந்தமல்லியில் ஜி வைத்தியநாதனும், பெரம்பூரில் ஆர்.எஸ்.ராஜேஷும், திருப்போரூரில் எஸ்.ஆறுமுகம், சோளிங்கரில் ஜி சம்பத்தும், குடியாத்தத்தில் கஸ்பா ஆர்.மூர்த்தியும், ஆம்பூரில் ஜே.ஜோதிராமலிங்கராஜாவும், ஓசூரில் சத்யாவும், பாப்பிரெட்டிப்பட்டியில் கோவிந்தசாமியும், 

    அரூரில் சம்பத்குமாரும், நிலக்கோட்டையில் தேன்மொழியும், திருவாரூரில் ஜீவானந்தமும்,  தஞ்சாவூரில் ஆர்.காந்தியும், மானாமதுரையில் நாகராஜனும், ஆண்டிப்பட்டியில் லோகிராஜனும், பெரிய குளத்தில் முருகனும், சாத்தூரில் ராஜவர்மனும், பரமக்குடியில் சதன் பிரபாகரும், விளாத்திகுளத்தில் சின்னப்பனும்  போட்டியிடுகின்றனர். #ByPoll #ADMK
    பாராளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரங்களை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் இன்று இரவு அறிவித்துள்ளார். #LSPolls #ADMK
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் மொத்தம் 8 கட்சிகள் இடம் பெற்றுள்ளன. மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் அதிமுக 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. மீதமுள்ள 20 தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜக-வுக்கு 5, தேமுதிக-வுக்கு 4 தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளன.

    தமாகா, புதிய தமிழகம், புதிய நீதி கட்சி, என்ஆர் காங்கிரஸ் ஆகிய 4 கட்சிகளுக்கும் தலா ஒரு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
     
    இதற்கிடையே, அதிமுக தலைமை அலுவலகத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.

    இதையடுத்து, அதிமுக சார்பில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிக்கப்பட்டது.

    அதன்படி, திருவள்ளூரில் டாக்டர் வேணுகோபாலும், தென் சென்னையில் ஜெயவர்தனும், காஞ்சிபுரத்தில் மரகதம் குமரவேலும், கிருஷ்ணகிரியில் கே.பி.முனுசாமியும், திருவண்ணாமலையில் அக்ரி கிருஷ்ணமூர்த்தியும், ஆரணியில் ஏழுமலையும், சேலத்தில் கே.ஆர்.எஸ்.சரவணனும், நாமக்கல்லில் காளியப்பனும், ஈரோட்டில் வெங்கு என்ற ஜி.மணிமாறன், திருப்பூரில் எம்.எஸ்.எம்.ஆனந்தனும், நீலகிரி தியாகராஜன், பொள்ளாச்சி சி.மகேந்திரன், கரூரில்  தம்பிதுரையும், பெரம்பலூரில் என்.ஆர்.சிவபதியும், சிதம்பரத்தில் பொ.சந்திரசேகர், மயிலாடுதுறையில் எஸ். ஆசைமணியும், நாகப்பட்டினம் ம.சரவணனும், மதுரையில் விவிஆர் ராஜனும், தேனியில் ரவீந்திரநாத் குமாரும், திருநெல்வேலியில் மனோஜ் பாண்டியனும் போட்டியிடுகின்றனர். #LSPolls #ADMK
    பாராளுமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரங்களை கட்சி தலைவர் முக ஸ்டாலின் இன்று மாலை அறிவித்துள்ளார். #LSPolls #DMK #MKStalin
    சென்னை:

    தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயக கட்சி ஆகியவை உள்ளன. தொகுதி பங்கீடு முடிந்து வேட்பாளர் பட்டியல் வெளியாகி வருகிறது.

    தி.மு.க. கூட்டணி கட்சிகளான ம.தி.மு.க., கம்யூனிஸ்டு, முஸ்லிம் லீக், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயக கட்சி ஆகியவை ஏற்கனவே வேட்பாளர்களை அறிவித்து விட்டன. விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர்களை திருமாவளவன் இன்று அறிவித்தார்.

    தி.மு.க. கூட்டணியில் உள்ள கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, விடுதலை சிறுத்தைகள் சார்பில் ஒரு தொகுதி வேட்பாளர்கள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார்கள்.

    இதற்கிடையே, தி.மு.க. சார்பில் 20 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் இன்று மாலை வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

    இந்நிலையில், மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்துக்கு சென்ற திமுக தலைவர் முக ஸ்டாலின், வேட்பாளர்கள் பெயர்கள் அடங்கிய பட்டியலை அங்கு வைத்து மரியாதை செலுத்தினார். மேலும், அண்ணாநகரில் உள்ள தி.மு.க. பொதுச் செயலாளர் அன்பழகனையும் சென்று சந்தித்தார். அப்போது பொருளாளர் துரைமுருகன் மற்றும் உதயநிதி ஸ்டாலினும் உடனிருந்தனர்.

    இதைத்தொடர்ந்து, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வேட்பாளர்கள் பட்டியலை இன்று மாலை வெளியிட்டார்.


    அதன்படி, சென்னை வடக்கு - டாக்டர் கலாநிதி, சென்னை தெற்கு - தமிழச்சி தங்க பாண்டியன், மத்திய சென்னை - தயாநிதி மாறன், ஸ்ரீபெரும்புதூர் - டி.ஆர்.பாலு, காஞ்சிபுரம் (தனி) - ஜி.செல்வம், அரக்கோணம் - எஸ்.ஜெகத்ரட்சகன், வேலூர் - கதிர் ஆனந்த், தர்மபுரி - டாக்டர் செந்தில்குமார், திருவண்ணாமலை - சி.என்.அண்ணாதுரை, கள்ளக்குறிச்சி - கவுதம் சிகாமணி, சேலம் - எஸ்.ஆர்.பார்த்திபன், நீலகிரி (தனி) - ஆ.ராசா, பொள்ளாச்சி - சண்முகசுந்தரம், திண்டுக்கல் - வேலுசாமி, கடலூர் - பண்ருட்டி ரமேஷ், மயிலாடுதுறை - சே.ராமலிங்கம், தஞ்சாவூர் - எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், தூத்துக்குடி - கனிமொழி, தென்காசி (தனி) - தனுஷ்குமார், திருநெல்வேலி - திரவியம் குமார் ஆகியோர் போட்டியிடுகின்றனர். #LSPolls #DMK #MKStalin
    பாராளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் 2 தொகுதிகளின் வேட்பாளர்களும் இன்று அறிவிக்கப்பட்டனர். #LSPolls #CPI #DMK
    சென்னை:

    தமிழகம் மற்றும் புதுவையில் பாராளுமன்றத் தேர்தலுக்கான திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகளும், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மற்றும் இந்திய ஜனநாயக கட்சிக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டது. மீதமுள்ள 20 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது. 
     
    இதற்கிடையே, திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் பட்டியலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று மதியம் வெளியிட்டார். அப்போது, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். ராமநாதபுரம் தொகுதியில் நவாஸ் கனி போட்டியிடுவார் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அறிவித்துள்ளது. 

    இதேபோல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறுகையில், திமுக கூட்டணியில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கோவை தொகுதியில் பி.ஆர்.நடராஜன் மற்றும் மதுரையில் எழுத்தாளர் சு.வெங்கடேசன் போட்டியிடுவார் என அறிவித்தார்.



    இந்நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், திமுக கூட்டணியில் தங்களுக்கு ஒதுக்கப்பட்டு உள்ள திருப்பூர் தொகுதியில் சுப்பராயனும், நாகை தொகுதியில் செல்வராஜும் போட்டியிடுவார்கள் என அறிவித்தார். #LSPolls #CPI #DMK
    தெலுங்கானா மாநில சட்டசபை கலைக்கப்பட்டுள்ள நிலையில், 105 தொகுதிகளுக்கான தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் வேட்பாளர்களை முதல்வர் சந்திரசேகர ராவ் இன்று அறிவித்தார். #Telangana #ChandrashekarRao #TRSCandidates
    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநிலத்தில் சந்திரசேகரராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி ஆட்சி நடந்து வருகிறது. அவரது ஆட்சி காலம் முடிய இன்னும் 9 மாதங்கள் உள்ள நிலையில், ஆட்சியை கலைத்து விட்டு முன்கூட்டியே சட்டசபை தேர்தலை சந்திக்க சந்திரசேகரராவ் முடிவு செய்தார். அதன்படி இன்று அமைச்சரவையை கூட்டி சட்டசபை கலைக்க முடிவு செய்யப்பட்டது.



    இதையடுத்து ஆளுநர் நரசிம்மனை சந்தித்த சந்திரசேகர ராவ், சட்டசபையை கலைப்பது தொடர்பான பரிந்துரை கடிதத்தை வழங்கினார். இந்த பரிந்துரையை ஆளுநர் நரசிம்மன் ஏற்றுக்கொண்டார். அதேசமயம், புதிய அரசு அமையும் வரை ஆட்சியை தொடருமாறு முதல்வர் சந்திரசேகராவிடம் கேட்டுக்கொண்டார். ஆளுநர் விடுத்த கோரிக்கையை சந்திரசேகர ராவ் ஏற்றுக்கொண்டார்.

    இதற்கிடையே சட்டசபைத் தேர்தல் தொடர்பாக தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய சந்திரசேகர ராவ், முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று  வெளியிட்டுள்ளார். மொத்தம் உள்ள 119 தொகுதிகளில், இன்று வெளியிட்டுள்ள பட்டியலில் 105 பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. மீதமுள்ள தொகுதிகளுக்கு விரைவில் வேட்பாளர்களை அறிவிக்க முடிவு செய்துள்ளார்.

    புதிதாக உதயமான தெலுங்கானாவில் 2014-ம் ஆண்டு நடந்த முதல் சட்டசபை தேர்தலில மொத்தம் உள்ள 119 இடங்களில் சந்திரசேகரராவின் கட்சி 90 தொகுதிகளை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது குறிப்பிடத்தக்கது. #Telangana #ChandrashekarRao #TRSCandidates
    ×