search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    4 தொகுதி சட்டசபை இடைத்தேர்தல் - மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள் அறிவிப்பு
    X

    4 தொகுதி சட்டசபை இடைத்தேர்தல் - மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள் அறிவிப்பு

    தமிழ்நாடு சட்டசபையில் காலியாக உள்ள 4 தொகுதிகளுக்கு மே மாதம் 19-ம் தேதி நடைபெறும் இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்கள் பட்டியலை மக்கள் நீதி மய்யம் கட்சி வெளியிட்டது. #MakkalNeedhiMaiam #MNMCandidates
    சென்னை:

    தமிழ்நாடு சட்டசபையில் காலியாக சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் ஆகிய 4 தொகுதிகளுக்கும் மே மாதம் 19-ந் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.

    இந்த 4 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வேட்புமனு தாக்கல் கடந்த 22-ந்தேதி தொடங்கி நாளையுடன் முடிவடைகிறது. இந்நிலையில், மேற்கண்ட தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் இன்று மாலை வெளியிட்டது.



    திருப்பரங்குன்றம் தொகுதியில் சக்திவேல், சூலூரில் மயில்சாமி, அரவக்குறிச்சியில் மோகன் ராஜ், ஒட்டபிடாரத்தில் காந்தி ஆகியோர் போட்டியிடுவதாக மக்கள் நீதி மய்யம் இன்று மாலை வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #MakkalNeedhiMaiam #MNMCandidates
    Next Story
    ×