search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வீட்டுப்பாடம்"

    • வீட்டுப்பாடம் என்பது குழந்தைகளுக்கு புதியதொரு விசயத்தை கற்றுக்கொடுக்க உதவுகிறது.
    • வீட்டுப்பாடம் செய்யும்போது குழந்தைகளுக்கு சிறிதுநேரம் இடைவெளி கொடுங்கள்.

    பல வீடுகளில் குழந்தைகளின் வீட்டு பாடங்களை பெற்றோர்கள் தான் செய்து கொடுக்கின்றனர். கல்வி நிலையங்களில் குழந்தைகளுக்கு வீட்டுப்பாடம் செய்ய கொடுப்பது அவர்களை செம்மைப்படுத்தவும், ஒழக்கத்தை கற்பிக்கவும் தான். இது நம்முடைய கல்வி கட்டமைப்பில் உள்ள முக்கியமான அம்சமாகும். வீட்டுப்பாடங்களை பெற்றேனின் உதவியுடன் குழந்தை செய்யமே தவிர, பெற்றோரே அதை முழுமையாக செய்து கொடுக்கக்கூடாது.

    ஒரு விளையாட்டு வீரனுக்கு, எவ்வாறு பயிற்சியாளர் எப்போதும் தேவைப்படுகிறாரோ, அதுபோலத்தான் பெற்றோரும் குழந்தையின் வாழ்க்கைக்கு தேவைப்படுவார்கள். விளையாட்டு வீரனுக்கு பதிலாக பயிற்சியாளர் ஓடவோ, உடற்பயிற்சி செய்யவோ மாட்டார். மாறாக, சிறந்த முறையில் வழிநடத்துவார். அதையே பெற்றோரும் பிள்ளைகளிடத்தில் பிள்பற்ற வேண்டும்.

    தொழில்நுட்பத்தின் அதிதீவிர வளர்ச்சியால், இந்த தலைமுறையை சேர்ந்த பெற்றோருக்கும், குழந்தைகளுக்கும் அதிகப்படியான மன அழுத்தம் ஏற்படுகிறது. இதனால் குழந்தைகளின் கற்பனைத்திறன் முடங்கிவிடுகிறது.

    இத்தகைய சூழ்நிலையில் வீட்டுப்பாடம், செயல்முறை வகுப்புகள் போன்றவைதான் குழந்தைகளின் கற்பனைத்திறனை வார்க்கும். குழந்தைகளின் வீட்டுப்பாடங்களை அவர்களே செய்வதற்கு உற்சாகப்படுத்தும் சில விஷயங்கள் இங்கே..

    * குழந்தைகளை அவர்கள் விரும்பும் இடத்தில் இருந்தபடி வீட்டுப்பாடம் செய்ய அனுமதியுங்கள். அந்த இடத்தில் டி.வி, மொபைல் போன்ற கவனத்தை திசைத்திருப்பும் பொருட்கள் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

    * குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் வீட்டுப் பாடம், அவர்களின் வயதிற்கு மிக அதிக என்று நினைத்தால், அதை ஆசிரியர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள், மாறாக, வீட்டுப்பாடத்தை, நீங்களே செய்யாதிர்கள். இது குழந்தைக்கு வீட்டுப் பாடங்கள் மீது அலட்சியத்தை ஏற்படுத்தும்.

    * வீட்டுப்பாடம் என்பது குழந்தைகளுக்கு புதியதொரு விசயத்தை கற்றுக்கொடுக்க உதவுகிறது. அதை உரையாடலின் வழியாகவும், வழிநடத்தலின் மூலமாகவும் நீங்களே அவர்களுக்கு சுற்றுக்கொடுக்கள், வீட்டுப்பாடம் செய்யும்போது குழந்தையோடு பாடம் தொடர்பாக அவர்களிடம் உரையாடிக் கொண்டே இருங்கள்.

    * வீட்டுப்பாடத்தை குழந்தைகள் சரியாக செய்ய வில்லை என்பதற்காக அவர்களை தண்டிக்காதீர்கள். 'உன்னால் இதை செய்ய முடியும்' என்று கூறி ஊக்கப்படுத்தி அவர்களுக்கு உறுதுணையாக இருங்கள்.

    * வீட்டுப்பாடத்தை குழந்தைகள் நல்லமுறையில் செய்தால், அவர்களை பாராட்டி பரிசளியுங்கள். காபி மக், ஸ்டடி டேபிள், பழக்கூடைகள், புத்தகப்பை என அவர்களுக்கு உதவும் விஷயங்களை மட்டும் கொடுக்கலாம்.

    • வீட்டுப்பாடம் செய்யும்போது குழந்தைகளுக்கு சிறிதுநேரம் இடைவெளி கொடுங்கள். நண்பர்களோடு இணைந்து வீட்டுப்பாடம் செய்ய வேண்டுமென குழந்தை விரும்பினால், அதற்கேற்ற சூழலையும் உங்கள் மேற்பார்வையில் ஏற்படுத்திக் கொடுங்கள். குழு உணர்வு மேலோங்க, இது சிறந்த பயிற்சியாகும்.

    அத்தகைய சமயங்களில், உங்கள் குழந்தையை மற்ற குழந்தைகளுடன் ஒப்பிடாதீர்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தனித்திறன் இருக்கும். அதில் அவர்களை மேம்படுத்துங்கள். எப்போதும் குழந்தைகளை கட்டாயப்படுத்தாதீர்கள். அடிக்கடி ஆசிரியரை சத்தித்து, பள்ளியில் உங்கள் குழந்தைகள் எவ்வாறு படிக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ளுங்கள்.

    மத்திய அரசின் பாடத்திட்டமான சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் பயிலும் 1,2 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் கொடுக்க கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #cbse #chennaihighcourt
    சென்னை:

    மத்திய அரசின் பாடத்திட்டமான சி.பி.எஸ்.இ. பள்ளிகள் நாடு முழுவதும் இயங்கி வருகின்றன. இப்பள்ளிகளில் மாணவர்களுக்கு அதிக அளவில் வீட்டுப்பாடங்கள் கொடுக்கப்படுகின்றன. இதனால் மாணவர்கள் வீட்டிற்கு வந்த பின்னரும் வெகுநேரம் படிக்க வேண்டியதாக உள்ளது.



    இதையடுத்து, சென்னை ஐகோர்ட்டில் எம்.புருஷோத்தமன் என்ற வக்கீல் மனுதாக்கல் செய்துள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-

    ‘தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்.சி.இ.ஆர்.டி.,) பாடத்திட்ட விதிகளை மீறி சி.பி.எஸ்.இ. பள்ளிகள் 1 முதல் 3-ம் வகுப்பு வரை 8 பாடங்களைப் போதிக்கின்றன. சின்ன குழந்தைகளுக்கும் வீட்டுப்பாடம், ‘அசைன்மெண்ட்’ போன்றவையும் கட்டாயமாக்கப்பட்டுள்ள.

    தனியார் நிறுவனங்களிடம் இருந்து புத்தகங்களை வாங்க வேண்டும் என்பதற்காக இந்தப் பாடங்களை தனியார் பள்ளிகள் குழந்தைகளிடம் திணிக்கின்றன. இதனால் குழந்தைகள் தங்களது எடையைக் காட்டிலும் கூடுதல் சுமையாக புத்த கங்களை சுமந்து செல்கின்றனர். அவர்கள் மனதளவிலும் பாதிக்கப்படுகின்றனர். எனவே என்.சி.இ.ஆர்.டி., பாடத்திட்டத் தின்படி சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் குறிப்பிட்ட பாடங்களை மட்டுமே நடத்த வேண்டுமென உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

    இந்த வழக்கை நீதிபதி என்.கிருபாகரன் விசாரித்தார். மத்திய அரசு, என்.சி.இ.ஆர்.டி., சி.பி.எஸ்,இ., ஆகியவை பதில் மனுக்களை தாக்கல் செய்தன. என்.சி.இ.ஆர்.டி. சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், ‘குழந்தைகள் மத்தியில் எவ்வித கல்வி பாகுபாடும் பார்க்கக்கூடாது. ஒவ்வொரு குழந்தைக்கும் கல்வி எந்தவொரு மன அழுத்தத்தையும் தரக்கூடாது என பள்ளிகளை அறிவுறுத்தியுள்ளோம்.

    கல்வி தரத்தை மேம்படுத்த தலைசிறந்த ஆசிரியர்களைக் கொண்டு நாங்களே பாடப்புத்ததங்களையும் வடிவமைத்து வழங்கி வருகிறோம். ஒவ்வொரு ஆண்டும் குறைந்த கட்டணத்தில் 364 தலைப்புகளில் தரமான புத்தகங்களை வெளியிடுகிறோம். ஒரு குழந்தைக்கு எவ்வளவு நேரம் போதிக்கவேண்டும்?. எவ்வளவு நேரம் அதுவாக படிக்க வேண்டும்? என்பதை வரையறுத்துதான் பாடத்திட்டமே உருவாக்கப்படுகிறது.

    அதன்படி ஆரம்பக்கல்வியில் இரண்டாம் வகுப்பு வரை வீட்டுப் பாடம் கண்டிப்பாக கொடுக்கக் கூடாது. மூன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை வாரத்தில் 2 மணிநேரம் மட்டுமே வீட்டுப் பாடம் கொடுக்க வேண்டும். 8-ம் வகுப்பு வரை உள்ள நடுநிலைப்பள்ளிகளில் தினமும் ஒரு மணி நேரம் வீதம் வாரத்தில் 5 முதல் 6 மணி நேரமும், 9ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை தினமும் 2 மணி நேரம் வீதம் வாரத்தில் 10 முதல் 12 மணி நேரம் மட்டுமே வீட்டுப்பாடம் அளிக்கப்படவேண்டும் என ஏற்கெனவே பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    புத்தகச் சுமையைக் குறைக்க முதல் மற்றும் இரண்டாம் வகுப்புக்கு மொழி, கணிதம் என 2 பாடங்களையும், மூன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை மொழி, சூழ்நிலையியல், கணிதம் என 3 பாடங்களை மட்டுமே போதிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    பள்ளிகளில் விநியோகம் செய்யப்படும் புத்தகங்களைத்தான் வாங்க வேண்டுமென மாணவர்  களை ஒருபோதும் நிர்பந்திக்கக் கூடாது.

    இது தொடர்பாக பெற்றோரும் பள்ளிநிர்வாகத்துடன் பேசவேண்டும். அதே போல எல்லா பாடத்தையும் ஒரேநாளில் போதிக்க வேண்டும் என்ற கட்டாயமும் கிடையாது. வாழ்க்கைக்கு தேவையான அறிவை போதிக்கும் இடமாகவே பள்ளிகள் திகழ வேண்டும்.

    தரமான கல்வியை மட்டுமே போதிக்க வேண்டும். கல்வி ஒருபோதும் சுமையாக இருக்கக் கூடாது என்பதை மட்டுமே தாரகமந்திரமாக வைத்து என்.சி.இ.ஆர்.டி. செயல்பட்டு வருகிறது. அதேபோல இபாத்சாலா என்ற மின்னணு வடிவிலான புத்தக திட்டத்தையும் வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறோம். இது கைபேசி செயலி வாயிலாகவும் பெற முடியும் என்று கூறிருந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்,கிருபாகரன், கோடை விடுமுறையான இன்று தீர்ப்பு அளித்தார். அதில், அவர் கூறியிருப்பதாவது-

    சி.பி.எஸ்.இ. பள்ளிகள் அனைத்தும் நடப்பு கல்வி ஆண்டு முதல், என்.சி. இ.ஆர்.டி. பரிந்துரைத்துள்ள புத்தகங்களை மட்டும் வாங்க வேண்டும். தனியார் நிறுவனங்கள் வெளியிடும் புத்தகங்களை வாங்கக் கூடாது. அந்த புத்தகங்களை பயன்படுத்தவும் கூடாது.

    இதுமட்டுமல்ல 1 மற்றும் 2-ம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு வீட்டு பாடம் கொடுக்கக்கூடாது. இந்த மாணவர்களுக்கு மொழி மற்றும் கணித பாடங்களை மட்டுமே நடத்த வேண்டும். தனியார் நிறுவன புத்தகங்களை வாங்கி வேறு எந்த பாடங்களையும் நடத்தக்கூடாது. 3 முதல் 5 வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு கூடுதலாக சுற்றுச்சூழல் படிப்புகளை நடத்தலாம்.

    இதை மீறி தனியார் பள்ளிகள் செயல்பட்டால், அந்த பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட அங்கீகாரத்தை உடனே ரத்து செய்து, அந்த பள்ளிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். இந்த பள்ளிகளை அடையாளம் காண தனியாக பறக்கும்படை ஒன்று மத்திய அரசு அமைக்க வேண்டும்.

    தனியார் நிறுவனங்கள் விற்பனை செய்யும் புத்தகங்களை வாங்கி, அதை தினமும் சுமக்க முடியாமல் மாணவர்கள் திணறுகின்றனர். அந்த குழந்தைகள் ஒன்றும் பளு தூக்கும் வீரர்கள் இல்லை என்பதை தனியார் பள்ளி நிர்வாகம் புரிந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். #cbse #chennaihighcourt

    ×