என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ரெயில்கள் ரத்து"
- சென்னை - நெல்லை இடையேயான வந்தே பாரத் ரெயில் இரு மார்க்கங்களிலும் நாளை ரத்து செய்யப்படுகிறது.
- பல்வேறு ரெயில்கள் வேறு மார்க்கமாக செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை:
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
* விழுப்புரம் - திருச்சி இடையே நடைபெறும் பராமரிப்பு பணி காரணமாக நாளை 6 ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
* சென்னை - நெல்லை இடையேயான வந்தே பாரத் ரெயில் இரு மார்க்கங்களிலும் நாளை ரத்து செய்யப்படுகிறது.
* விருத்தாசலம் - திருச்சி, திருப்பாதிரிப்புலியூர் - திருச்சி, திண்டுக்கல் - விழுப்புரம் ரெயில்களும் நாளை ரத்து செய்யப்படுகிறது.
* மேலும் பல்வேறு ரெயில்கள் வேறு மார்க்கமாக செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பட்டாபிராமில் இருந்து சென்ட்ரலுக்கு வெள்ளி மற்றும் சனிக்கிழமை அதிகாலை 3.50 மணிக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படும்.
- பயணிகள் வசதிக்காக இந்த தேதிகளில் அதிகாலை 4 மற்றும் அதிகாலை 4.05 மணிக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும்.
சென்னை:
சென்னை ரெயில்வே கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை கடற்கரையில் இருந்து பட்டாபிராமுக்கு இரவு 11.15 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில், பட்டாபிராமில் இருந்து ஆவடிக்கு இரவு 11.55 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் இன்று மற்றும் நாளை (வெள்ளிக்கிழமை) முழுவதுமாக ரத்து செய்யப்படும்.
பட்டாபிராமில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு (மூா் மாா்க்கெட் வளாகம்) அதிகாலை 3.20 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் நாளை (வெள்ளிக்கிழமை) மற்றும் நாளை மறுநாள் (சனிக்கிழமை) முழுவதுமாக ரத்து செய்யப்படும்.
இதற்கு பதிலாக பட்டாபிராமில் இருந்து சென்ட்ரலுக்கு வெள்ளி மற்றும் சனிக்கிழமை அதிகாலை 3.50 மணிக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படும். இதுபோல் ஆவடியில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு அதிகாலை 3.50 மற்றும் அதிகாலை 4 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில்கள் நாளை (வெள்ளிக்கிழமை) மற்றும் நாளை மறுநாள் (சனிக்கிழமை) முழுவதுமாக ரத்து செய்யப்படும்.
பயணிகள் வசதிக்காக இந்த தேதிகளில் அதிகாலை 4 மற்றும் அதிகாலை 4.05 மணிக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும். மேலும், பட்டாபிராமில் இருந்து சென்னை கடற்கரைக்கு இரவு 10.25 மணிக்கு செல்லும் மின்சார ரெயில் இன்று மற்றும் நாளை (வெள்ளிக்கிழமை) ஆவடியுடன் நிறுத்தப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் ஆற்று கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- சென்னை-குருவாயூர், திருச்சி-திருவனந்தபுரம், நாகர்கோவில்-கோவை ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னை:
தென் மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருதால் ஒருசில இடங்களில் ரெயில்களை இயக்க முடியாத அளவிற்கு தண்டவாளத்தில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் தென் மாவட்ட பகுதிகளில் இருந்து ரெயில்கள் சென்னைக்கு இயக்க முடியவில்லை.
இதே போல சென்னையில் இருந்து மதுரைக்கு மேல் ரெயில்களை இயக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் இன்று பெரும்பாலான ரெயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.
எழும்பூரில் இருந்து இன்று காலை 9.40 மணிக்கு கொல்லம் செல்லும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது. பகல் 3 மணிக்கு நெல்லைக்கு புறப்படக்கூடிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த ரெயில் நெல்லையில் இருந்து எழும்பூருக்கு புறப்பட முடியாத நிலை இருந்ததால் ரத்து செய்யப்பட்டன.
அதே போல மாலை 4.05 மணிக்கு புறப்படக்கூடிய திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் ரத்தாகிறது. இந்த ரெயில் திருச்செந்தூரில் இருந்து எழும்பூருக்கு வரவில்லை. அதனால் இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
- பல ரெயில்கள் சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு வராத வகையில் நிறுத்தம் செய்யப்பட்டது.
- ரெயில்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகளிடமிருந்து வந்த வருமானத்தில் ரூ.35 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை:
மிச்சாங் புயல் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களை புரட்டி போட்டது. புயல் காரணமாக 650 மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் 4 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டன.
40 ரெயில்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டன. பல ரெயில்கள் சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு வராத வகையில் நிறுத்தம் செய்யப்பட்டது.
ரெயில்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகளிடமிருந்து வந்த வருமானத்தில் ரூ.35 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
ரத்து செய்யப்பட்ட ரெயில்களில் கட்டணத்தை பயணிகள் திரும்ப பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கு வசதியாக ரெயில் நிலையங்களில் சிறப்பு கவுண்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் பயணிகள் தங்களது டிக்கெட் மூலம் பணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என தென்னக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் ஆவடி ,கொருக்குப்பேட்டை, சென்னை கடற்கரை ,எழும்பூர், சென்னை சென்ட்ரல் ஆகியவை வெள்ளத்தால் பாதிக்கப்படும் பகுதிகள் என அடையாளம் காணப்பட்டுள்ளன.
குறிப்பாக பேசின் பாலத்தில் உள்ள 14-வது எண் பாலத்தின் உயரம் கனமழை பாதிக்காத வகையில் 2 ஆண்டுகளில் புனரமைக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
- கனமழையால் தண்டவாளத்தில் தண்ணீர் தேங்கியுள்ளது.
- சென்ட்ரல், எழும்பூரில் இருந்து புறப்படும் ரெயில்கள் தொடர்ந்து 2-வது நாளாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
சென்னையில் பெய்த அதிகன மழையால் தண்டவாளம் மற்றும் ரெயில்வே பாலத்தில் தேங்கிய மழை வெள்ளம் மெதுவாக வடிந்து வருகிறது. இதனால் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இன்று 2-வது நாளாக ரத்து செய்யப்பட்டுள்ளன. சில ரெயில்கள் விழுப்புரத்தில் இருந்து இயக்கப்படுகிறது.
சில ரெயில்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளது. பயணிகள் பாதுகாப்பு கருதி தெற்கு ரெயில்வே இந்த மாற்றங்களை செய்துள்ளது.
எண். 22637 சென்ட்ரல்- மங்களூரு எக்ஸ்பிரஸ், எண். 16116 புதுச்சேரி- எழும்பூர், எண். 06028 விழுப்புரம்- தாம்பரம், எண். 12664 திருச்சி- ஹவுரா ஆகிய ரெயில்கள் இன்று முழுமையாக ரத்து செய்யப்பட்டன.
எண். 06059 கோவை- பாராயுனி, எண். 06034 வேலூர்-சென்னை கடற்கரை, எண். 16054 திருப்பதி- சென்ட்ரல் ரெயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டன.
சென்ட்ரல்- மும்பை லோக்மன்யா எக்ஸ்பிரஸ் சென்ட்ரல் மற்றும் ரேணி குண்டா இடையே ரத்து செய்யப்பட்டுள்ளன.
சென்ட்ரல்- மும்பை சத்திரபதி நிலையத்திற்கு புறப்பட்டு செல்லும் எக்ஸ்பிரஸ் சென்ட்ரல்- ரேணிகுணிடா இடையே ரத்து செய்யப்பட்டு ரேணி குண்டாவில் பிற்பகல் 3.55 மணிக்கு புறப்பட்டன.
இதே போல எழும்பூர்- குருவாயூர் எக்ஸ்பிரஸ், எழும்பூர்- விழுப்புரம் இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது. விழுப்புரத்தில் இருந்து புறப்பட்டு சென்றது. மதுரை பாண்டியன் எக்ஸ்பிரசும் ரத்து செய்யப்பட்டு விழுப்புரத்தில் இருந்து இரவு 9.40 மணிக்கு செல்லும்.
எழும்பூர்- மங்களூரு எக்ஸ்பிரஸ் எழும்பூர்- விழுப்புரம் இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த ரெயில் அதிகாலை 1.37 மணிக்கு விழுப்புரத்தில் இருந்து புறப்பட்டு செல்லும். சென்ட்ரல்- பெங்களூர் லால்பார்க் எக்ஸ்பிரஸ் பகல் 3.30 மணிக்கு பதிலாக மாலை 5.30 மணிக்கு புறப்பட்டு செல்லும்.
சென்ட்ரல்- மைசூர் எக்ஸ்பிரஸ் தாமதமாக பிற்பகல் 3.45 மணிக்கு புறப்பட்டு சென்றது. சென்ட்ரல்- ஜோலார் பேட்டை ஏலகிரி எக்ஸ்பிரஸ் இன்று மாலை 5.55 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக அரக்கோணத்தில் இருந்து இரவு 7.05 மணிக்கு புறப்பட்ட செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்ட்ரல், எழும்பூரில் இருந்து ரெயில்கள் ரத்து மற்றும் வேறு இடங்களில் இருந்து புறப்பட்டு செல்வதால் பயணிகள் சிரமத்துக்கு ஆளானார்கள். குறிப்பாக வட மாநில பயணிகள் காத்து கிடந்தனர்.
- மிச்சாங் புயல் காரணமாக சென்னையில் கனமழை கொட்டுகிறது.
- இதன் காரணமாக கோவையில் இருந்து இன்று சென்னைக்கு இயக்கப்படும் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன.
கோவை:
மிச்சாங் புயல் காரணமாக சென்னையில் கனமழை கொட்டுகிறது. இதன் காரணமாக கோவையில் இருந்து இன்று சென்னைக்கு இயக்கப்படும் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன.
இன்று காலை 6 மணிக்கு கோவையில் இருந்து சென்னைக்கு புறப்பட வேண்டிய வந்தே பாரத் ரெயில் (எண் 20644) ரத்து செய்யப்பட்டது. காலை 6.20 மணிக்கு புறப்பட வேண்டிய கோவை-சென்னை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயிலும் (எண் 12680) ரத்தானது.
இதேபோல சென்னையில் இருந்து கோவைக்கு காலை 6.10 மணிக்கு புறப்பட வேண்டிய சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயிலும் (எண் 12675), காலை 7.10 மணிக்கு சென்னையில் இருந்து கோவைக்கு புறப்பட வேண்டிய கோவை எக்ஸ்பிரஸ் ரெயிலும் (எண் 12675) ரத்து செய்யப்பட்டன.
இதுதவிர மிச்சாங் புயல் காரணமாக கோவை வழியாக இயக்கப்படும் 23 ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக சேலம் கோட்ட ரெயில்வே அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மிச்சாங் புயல் காரணமாக கோவையில் இருந்து வருகிற 6-ந் தேதி பரௌனி புறப்பட்டுச் செல்லும் சிறப்பு ரெயில் (எண் 03358), கோட்டயத்தில் இருந்து இன்று நரசாபூர் புறப்பட்டுச் செல்லும் சிறப்பு ரெயில் (எண் 07120), கொல்லத்தில் இருந்து நாளை செகந்திராபாத் புறப்பட்டுச் செல்லும் சிறப்பு ரெயில் (எண் 07130), கொச்சுவேலியில் இருந்து வருகிற 6-ந் தேதி கோரக்பூர் புறப்பட்டுச் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (எண்12512), திருவனந்தபுரத்தில் இருந்து இன்று புதுடெல்லி புறப்பட்டுச் செல்லும் கேரளா எக்ஸ்பிரஸ் ரெயில் (எண் 12625), புதுடெல்லியில் இருந்து நாளை மற்றும் 6-ந் தேதிகளில் திருவனந்தபுரம் புறப்பட்டு வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (எண் 12626) ஆகியவை ரத்து செய்யப்படுகின்றன.
மேலும் ஷாலிமரில் இருந்து வருகிற 6-ந் தேதி நாகர்கோவில் புறப்பட்டு வரும் குருதேவ் எக்ஸ்பிரஸ் ரெயில் (எண் 12660), தன்பாத்தில் இருந்து இன்று ஆலப்புழா புறப்பட்டு வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (எண் 13351), ஆலப்புழாவில் இருந்து வருகிற 6,7-ந் தேதிகளில் தன்பாத் புறப்பட்டுச் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (எண் 13352), செகந்திராபாத்தில் இருந்து இன்றும், நாளையும் திருவனந்தபுரம் புறப்பட்டு வரும் சபரி எக்ஸ்பிரஸ் ரெயில் (எண் 17230), திருவனந்தபுரத்தில் இருந்து வருகிற 5,6,7-ந் தேதிகளில் செகந்திராபாத் புறப்பட்டுச் செல்லும் சபரி எக்ஸ்பிரஸ் ரெயில் (எண் 17229), எர்ணாகுளத்தில் இருந்து நாளை டாடா நகர் புறப்பட்டுச் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (எண் 18190) ஆகியவை ரத்து செய்யப்படுகின்றன.
இதுதவிர கன்னியாகுமரியில் இருந்து வருகிற 6,7-ந் தேதிகளில் திப்ருகர் புறப்பட்டுச் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (எண் 22503) ரத்து செய்யப்படுகிறது. பிலாஸ்பூரில் இருந்து நாளை நெல்லை புறப்பட்டு வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (எண் 22619), எர்ணாகுளத்தில் இருந்து இன்று பாட்னா புறப்பட்டுச் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (எண் 22643), பாட்னாவில் இருந்து வருகிற 7-ந் தேதி எர்ணாகுளம் புறப்பட்டு வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (எண் 22644), கொச்சுவேலியில் இருந்து இன்று கோர்பா புறப்பட்டுச் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (எண் 22648), கோர்பாவில் இருந்து வருகிற 6-ந் தேதி கொச்சுவேலி புறப்பட்டு வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (எண் 22647), பாட்னாவில் இருந்து நாளை எர்ணாகுளம் புறப்பட்டு வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (எண் 22670), பிலாஸ்பூரில் இருந்து இன்று எர்ணாகுளம் புறப்பட்டு வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (எண் 22815), எர்ணாகுளத்தில் இருந்து வருகிற 6-ந் தேதி பிலாஸ்பூர் புறப்பட்டுச் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (எண் 22816), ஹதியாவில் இருந்து இன்று எர்ணாகுளம் புறப்பட்டு வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (எண் 22837), எர்ணாகுளத்தில் இருந்து வருகிற 6-ந் தேதி ஹதியா புறப்பட்டுச் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (எண் 22838) ஆகியவை ரத்து செய்யப்படுகின்றன.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- ரெயில் எண்.12688 சண்டிகர்-மதுரை எக்ஸ்பிரஸ் ஜனவரி 15, 19, 22, 26, 29 மற்றும் பிப்ரவரி 2, 5 ஆகிய தேதிகளில் முழுவதும் ரத்து செய்யப்படுகிறது.
- மதுரை மார்க்கத்தில் ரெயில் எண்.16788 ஸ்ரீமத் வைஷ்ணவ் தேவி கத்ரா எக்ஸ்பிரஸ்-திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் ஜனவரி 11, 18, 25 மற்றும் பிப்ரவரி 1 ஆகிய தேதிகளில் முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னை:
வடக்கு ரெயில்வேயில் ஆக்ரா பிரிவின் மதுரா-பல்வால் பிரிவில் யார்டு மறுவடிவமைப்பு பணியை முடிப்பதற்காக மதுரா சந்திப்பில் இன்டர்லாக் செய்யப்படாத பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இதனால் மதுரையில் இருந்து இந்தியாவின் பிற பகுதிகளுக்கு இயக்கப்படும் பல ரெயில்கள் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் ரத்து செய்யப்படுகின்றன. ரெயில் எண்.12641 கன்னியாகுமரி-டெல்லி நிஜாமுதின் திருக்குறள் எக்ஸ்பிரஸ் ஜனவரி 10, 12, 17, 19, 24, 26, 31 மற்றும் பிப்ரவரி 2 ஆகிய தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
ரெயில் எண்.12642 டெல்லி நிஜாமுதின்-கன்னியாகுமரி திருக்குறள் எக்ஸ்பிரஸ் ஜனவரி 13, 15, 20, 22, 27, 29 மற்றும் பிப்ரவரி 3, 5 ஆகிய தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. ரெயில் எண்.12651 மதுரை-டெல்லி நிஜாமுதின் எக்ஸ்பிரஸ் ஜனவரி 14, 16, 21, 23, 28, 30 மற்றும் பிப்ரவரி 4 ஆகிய தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதேபோல ரெயில் எண்.12652 மதுரை-டெல்லி நிஜாமுதின்-மதுரை எக்ஸ்பிரஸ் ஜனவரி 16, 18, 23, 25, 30 மற்றும் பிப்ரவரி 1, 6 ஆகிய தேதிகளில் ரத்தாகிறது.
ரெயில் எண்.12687 மதுரை-சண்டிகர் எக்ஸ்பிரஸ் ஜனவரி 10, 14, 17, 21, 24, 28 மற்றும் 31-ந்தேதியில் முழுவதும் ரத்து செய்யப்படுகிறது. ரெயில் எண்.12688 சண்டிகர்-மதுரை எக்ஸ்பிரஸ் ஜனவரி 15, 19, 22, 26, 29 மற்றும் பிப்ரவரி 2, 5 ஆகிய தேதிகளில் முழுவதும் ரத்து செய்யப்படுகிறது.
இதேபோல ரெயில் எண்.16787 திருநெல்வேலி-ஸ்ரீமத் வைஷ்ணவ் தேவி கத்ரா எக்ஸ்பிரஸ் ஜனவரி 8, 15, 22, 29 ஆகிய தேதிகளில் ரத்தாகிறது. மதுரை மார்க்கத்தில் ரெயில் எண்.16788 ஸ்ரீமத் வைஷ்ணவ் தேவி கத்ரா எக்ஸ்பிரஸ்-திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் ஜனவரி 11, 18, 25 மற்றும் பிப்ரவரி 1 ஆகிய தேதிகளில் முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
- வடக்கு ரெயில்வேயில் மேம்பாட்டு பணி நடந்து வருகிறது.
- ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் டெல்லி செல்லும் ரெயில்கள் ரத்து செய்யப்படும்.
மதுரை
ரெயில்களை பாதுகாப்பாக இயக்க, வடக்கு ரெயில்வே ஆக்ரா கோட்டத்தில் உள்ள மதுரா ரெயில் நிலையம் மற்றும் மதுரா - பல்வால் ரெயில் நிலைய பிரிவில் ரெயில் பாதை மற்றும் சிக்னல் மேம்பாட்டு பணிகள் நடைபெற இருக்கிறது.
இதன் காரணமாக வருகிற ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் தென் மாவட்டங்களில் இருந்து டெல்லி செல்லும் ரெயில் கள் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. அதன்படி ஜனவரி 10, 12, 17, 19, 24, 26, 31 பிப்ரவரி 2 ஆகிய நாட்களில் கன்னியா குமரியில் இருந்து புறப்பட வேண்டிய கன்னியாகுமரி -டெல்லி நிஜாமுதீன் திருக்குறள் எக்ஸ்பிரஸ் (12641), ஜனவரி 14, 16, 21, 23, 28, 30 பிப்ரவரி 4 ஆகிய நாட்களில் மதுரையில் இருந்து புறப்பட வேண்டிய மதுரை-டெல்லி நிஜா முதீன் எக்ஸ்பிரஸ் (12651), டிசம்பர் 6,
ஜனவரி 10, 14, 17, 21, 24, 28, 31 ஆகிய நாட்களில் மதுரையில் இருந்து புறப்பட வேண்டிய மதுரை - சண்டிகர் எக்ஸ்பிரஸ் (12687), ஜனவரி 8,15, 22, 29 ஆகிய நாட்களில் திருநெல்வேலியில் இருந்து புறப்பட வேண்டிய திரு நெல்வேலி-ஸ்ரீ வைஷ்ண தேவி கட்ரா எக்ஸ்பிரஸ் (16787) ஆகியவை முழுமை யாக ரத்து செய்யப்படுகிறது.
மறுமார்க்கத்தில் ஜனவரி 13, 15, 20, 22, 27, 29, பிப்ரவரி 3, 5 ஆகிய நாட்களில் டெல்லியில் இருந்து புறப்பட வேண்டிய டெல்லி நிஜாமுதீன் - கன்னியாகுமரி திருக்குறள் எக்ஸ்பிரஸ் (12642), ஜனவரி 16, 18, 23, 25, 30 பிப்ரவரி 1, 6 ஆகிய நாட்களில் டெல்லியில் இருந்து புறப்பட வேண்டிய டெல்லி நிஜாமுதீன் - மதுரை எக்ஸ்பிரஸ் (12652), டிசம்பர் 11, ஜனவரி 15, 19, 22, 26, 29, பிப்ரவரி 2, 5 ஆகிய நாட்களில் சண்டிகரில் இருந்து புறப்பட வேண்டிய சண்டிகர் - மதுரை எக்ஸ்பிரஸ் (12688), ஜனவரி 11, 18, 25, பிப்ரவரி 1 ஆகிய நாட்களில் ஸ்ரீ வைஷ்ண தேவி கட்ராவில் இருந்து புறப்பட வேண்டிய ஸ்ரீ வைஷ்ண தேவி கட்ரா - திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் (16788) ஆகியவை முழுமை யாக ரத்து செய்யப்படுகிறது.
இத்தகவலை தென்னக ரெயில்வே மதுரை கோட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது.
- சுரங்கப்பாதை பணி காரணமாக 14 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ரத்து செய்யப்பட உள்ளன.
- 6 ரெயில்கள் குறிப்பிட்ட நாட்களில் நேரம் மாற்றி இயக்கப்பட உள்ளன.
சென்னை:
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
ஜோலார்பேட்டை- கே. எஸ்.ஆர். பெங்களூரு மார்க்கத்தில், ஜோலார்பேட்டை- சோமநாயக்கன் பட்டிக்கு இடையே சுரங்கப்பாதை பணி காரணமாக 14 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ரத்து செய்யப்பட உள்ளன.
சென்னை சென்ட்ரல்-திருப்பதிக்கு வருகிற 12, 13, 14, 15, 20, 21, 23, 25 ஆகிய தேதிகளில் மாலை 4.35 மணிக்கு இயக்கப்படும் ரெயில் (16203), திருப்பதி- சென்னை சென்ட்ரலுக்கு 12, 13,14, 15, 21, 22, 24, 25 ஆகிய தேதிகளில் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16204), சென்னை சென்ட்ரல்- மைசூருக்கு 12, 13, 14, 20, 21, 23, 24 ஆகிய தேதிகளில் இரவு 9.15 மணிக்கு இயக்கப்படும் காவிரி எக்ஸ்பிரஸ் ரெயில் (16021), மைசூரு- சென்னை சென்ட்ரலுக்கு 13, 14, 15, 21, 22, 24 25 ஆகிய தேதிகளில் இரவு 9 மணிக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16022) உள்பட 14 ரெயில்கள் ரத்து செய்யப்பட உள்ளன. இது தவிர, 6 ரெயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட உள்ளன.
சென்னை சென்ட்ரல்- கே.எஸ்.ஆர். பெங்களூருவுக்கு 12-ந்தேதி இரவு 10.50 மணிக்கு புறப்பட வேண்டிய எக்ஸ்பிரஸ் ரெயில் (12657) 1½ மணி நேரம் தாமதமாக புறப்பட்டு செல்லும். இது தவிர 6 ரெயில்கள் குறிப்பிட்ட நாட்களில் நேரம் மாற்றி இயக்கப்பட உள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- அரக்கோணம் ரெயில் நிலையத்தில் அதிகாரிகள் மெத்தன போக்கை கடைபிடித்து வருவதாக பயணிகள் தெரிவித்தனர்.
- இன்று காலை 4 மணிநேரம் ரெயில்கள் இயக்கப்படாததால் பயணிகள் கடும் அவதியடைந்தனர்.
அரக்கோணம்:
சென்னை செண்ட்ரல் அரக்கோணம் இடையே தண்டவாள சீரமைப்பு பணிகள் இன்று நடந்தது.
இதனால் அரக்கோணம் ரெயில் நிலையத்தில் இன்று காலை 10 மணியிலிருந்து பிற்பகல் 2 மணி வரை சென்னைக்கு செல்லும் மின்சார ரெயில்கள்,எக்ஸ்பிரஸ் ரெயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது.
இதனால் சென்னை செல்ல திட்டமிட்டு இருந்த பயணிகள் அரக்கோணம் ரெயில் நிலையத்துக்கு வந்த போது டிக்கெட் கொடுக்கும் இடத்தில் டிக்கெட் வழங்கப்பட மாட்டாது என ஊழியர்கள் தெரிவித்தனர். முன் அறிவிப்பு இன்றி திடீரென அறிவித்ததால் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும் இதுபோன்று தொடர்ந்து அரக்கோணம் ரெயில் நிலையத்தில் அதிகாரிகள் மெத்தன போக்கை கடைபிடித்து வருவதாக பயணிகள் தெரிவித்தனர்.
இது குறித்து உயர் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
இன்று காலை 4 மணிநேரம் ரெயில்கள் இயக்கப்படாததால் பயணிகள் கடும் அவதியடைந்தனர்.
- பயணிகள் கடும் அவதி
- புதிய கால அட்டவணை வெளியிடப்பட்டது
அரக்கோணம்:
சென்னை சென்ட்ரல் ரெயில்வே ஸ்டேஷனில் இருந்து அரக்கோணம், கும்மிடிபூண்டி மார்க்கத்துக்கும், சென்னை கடற்கரையில் இருந்து தாம்ப ரத்துக்கும் தினமும் 500-க்கும் மேற்பட்ட புறநகர் மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் ஆயிரக்க ணக்கான பயணிகள் பயனடைந்து வருகின்றனர்.
இந்நிலையில், புறநகர் மின்சார ரெயில்களின் கால அட்டவணை ஆண்டுதோறும் மாற்றி அமைக்கப்படுவது வழக்கம். இதன்படி, சில நாட்களுக்கு முன்பு புதிய கால அட்டவணை வெளியிடப்பட்டது. அதில் மொத்தமுள்ள புறநகர் மின்சார ரெயில் சேவையில் 54 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, சென்னை - அரக்கோணம் மார்க்கத்தில் ஆவடி, திருவள்ளூர் உள்ளிட்ட முக்கிய ரெயில் நிலையங்கள் வழியாக இயக்கப்படும் 16 புறநகர் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதில், சென்னை கடற்கரையில் இருந்து அரக்கோணத்துக்கும், பின்னர் அரக்கோணத்தில் இருந்து வேளச்சேரிக்கு செல்லும் ரெயில் சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதனால் அரக்கோணம், சென்னை சென்ட்ரல் மற்றும் கடற்கரை செல்லும் ரெயில்களில் அதிகளவு கூட்ட நெரிசல் காணப்படுகிறது.
இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள், பொதுமக்கள் கடும் சிரமத்துக்குள்ளா கியுள்ளனர்.
- கோரிக்கைகளை வலியுறுத்தி மேற்கு வங்காளத்தில் குர்மி சமூக மக்கள் தீவிரமாக போராடி வருகின்றனர்.
- குர்மலி மொழியை அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் இணைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
கொல்கத்தா:
மேற்கு வங்காளம், ஒடிசா, ஜார்க்கண்ட், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் குர்மி சமூக மக்கள் வசிக்கின்றனர். இவர்கள் தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்றும், தங்களது மொழியான குர்மலி மொழியை அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் இணைக்க வேண்டும் என்றும் நீண்ட நாட்களாக வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், பழங்குடியினர் அங்கீகாரம், சர்னா மதத்தை அங்கீகரித்தல் மற்றும் அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் குர்மலி மொழியைச் சேர்ப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மேற்கு வங்காளத்தில் குர்மி சமூக மக்கள் தீவிரமாக போராடி வருகின்றனர். அவர்களின் போராட்டம் மூன்றாவது நாளாக இன்றும் நீடிக்கிறது.
தென்கிழக்கு ரெயில்வேயின் முக்கியமான வழித்தடங்களான காரக்பூர்-டாடாநகர் மற்றும் ஆத்ரா-சண்டில் வழித்தடங்களில் பல்வேறு குர்மி அமைப்பினர் இன்று ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்காரணமாக 64 எக்ஸ்பிரஸ் மற்றும் பயணிகள் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டதாக தென்கிழக்கு ரெயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பல்வேறு இடங்களில் நடைபெற்ற ரெயில் மறியல் காரணமாக ஏப்ரல் 5ம் தேதி முதல் இதுவரை 225 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மாநிலத்தின் தக்க்ஷின் தினாஜ்பூர், புருலியா, ஜார்கிராம் மற்றும் பாஸ்சிம் மேதினிபூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் குர்மி அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. குர்மி சமூகத்தினர் தற்போது ஓபிசி என வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்