என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "முன்னாள் ராணுவ வீரர்"
- திடீரென வேட்பாளர் ஒருவரை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார்.
- நபர் கலெக்டர் அலுவலகத்தில் தொடர்ந்து ரகளையில் ஈடுபட்டார்.
தஞ்சாவூா்:
தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று வேட்பு மனு பரிசீலனை நடைபெற்றது. அப்போது மத்திய பாதுகாப்பு படை வீரர் உடையில் ஒருவர் வந்து அமர்ந்து மற்றவர்களுடன் சகஜகமாக பேசிக் கொண்டிருந்தார். திடீரென வேட்பாளர் ஒருவரை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார்.
பின்னர் வேட்பாளர்கள் உறுதிமொழி எடுத்துக் கொள்ளும் மைக் முன்பு வந்து நின்று நான் 3-வது முறையாக போட்டியிடுகிறேன். இது காலத்தின் கட்டாயம். எனது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டால் யாரையும் ஓட்டு போட விடமாட்டேன் என கூறி ரகளை செய்தார். உடனே போலீசார் விரைந்து வந்து அவரை சமாதானப்படுத்தி வெளியே அழைத்து வந்தனர். அப்போதும் அந்த நபர் கலெக்டர் அலுவலகத்தில் தொடர்ந்து ரகளையில் ஈடுபட்டார்.
இதுகுறித்து போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில், அந்த நபர் திருவையாறு பகுதியை சேர்ந்தவர் என்பதும், ஓய்வு பெற்ற ராணுவ வீரர் என்பதும், சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரிய வந்தது. மேலும் அந்த நபர் வேட்பு மனுவும் தாக்கல் செய்யவில்லை.
தொடர்ந்து அந்த நபரை போலீசார் வெளியேற்றினர்.
இந்த சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- ராணுவ வீரர்களை கவுரவிக்கும் விதமாக அவர்களுக்கு வீட்டு வரி செலுத்துவதில் இருந்து விலக்கு
- பாரத பிரதமர் மோடி, மகளிருக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடுக்கு நன்றி
இரணியல் :
இரணியல் பேரூராட்சியில் நடந்த சாதாரண கூட்டம் தலைவர் ஸ்ரீகலாமுருகன் தலைமையில் நடந்தது. செயல் அலுவலர் அம்புஜம் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் ராணுவம் மற்றும் துணை ராணுவங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களை கவுரவிக்கும் விதமாக அவர்களுக்கு வீட்டு வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று 15-வது வார்டு கவுன்சிலர் செந்தில் ராமலிங்கம் கொடுத்த மனு மீது கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் பாரத பிரதமர் மோடி, மகளிருக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கியதற்கு 4-வது வார்டு கவுன்சிலர் கிரிஜா மற்றும் அனைத்து கவுன்சிலர்கள் சார்பாக நன்றியை தெரிவித்து கொண்டார்
- முன்னாள் ராணுவ வீரர் மகளிடம் ரூ.3 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது
- ரெயில்வேயில் வேலை வாங்கி தருவதாக
திருச்சி
திருச்சி காந்தி மார்க்கெட் கள்ளத்தெருவை சேர்ந்தவர் சுப்பையா. முன்னாள் ராணுவ வீரரான இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவருடைய மகள் மாலா (வயது 27).
இவரிடம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர், சென்னையில் மெட்ரோ ரெயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக கூறி கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பல்வேறு தவணைகளில் ரூ.3 லட்சத்தை பெற்றார். இதற்கு திருச்சியை சேர்ந்த வக்கீல் ஒருவரும் உடந்தையாக இருந்ததுள்ளார்.
அதன்பிறகு அவர்கள் கூறியபடி ரெயில்வேயில் வேலை வாங்கித் தரவில்லை. இதனால் மாலா அவரைத் தொடர்பு கொண்டு கேட்டார். அப்போது அவர் விரைவில் வேலைக்கான நேர்முகத் தேர்வுக்கு அழைப்பு வரும் என்று கூறி காலதாமதம் செய்து வந்தார்.
ஆனாலும் வேலை வாங்கித் தராததால் மாலா தன்னிடம் பணத்தை பெற்று கொண்டு மோசடி செய்து விட்டதாக திருச்சி மாநகர போலீஸ் துணை கமிஷனரை சந்தித்து கடந்த ஜூன் மாதம் புகார் அளித்தார். இந்த புகார் குறித்து விசாரணை நடத்த பாலக்கரை போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது.அதன்பேரில் பாலக்கரை போலீசார் மோசடியில் ஈடுபட்ட நபர்களை அழைத்து விசாரணை நடத்தினார்கள்.
ஆனால் அதன்பிறகு மேல் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்த மாலா, தனது புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி துணை கமிஷனர் சுரேஷ்குமாரை சந்தித்து மனு அளித்தார்.
- பிரச்சனை தொடர்பாக இவர்களது வீட்டிற்கு சென்று வீட்டை காலி செய்ய கூறி பொருட்களை உடைத்து சேதப்படுத்தியதோடு தமிழ்ச்செல்வன், சுதா ஆகியோரை பழனிவேல் தாக்கி உள்ளார்.
- ஓய்வுபெற்ற ராணுவவீரர் பழனிவேல் இவர்கள் இருவரிடையே தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை அருகே மன்னம்பந்தல் ஊராட்சி திருக்குளத் தெருவில் குடியிருந்து வருபவர்கள் தமிழ்செல்வன் -சுதா தம்பதியினர்.
குடியிருந்த வீட்டை கங்கா என்பவரிடம் ரூ.12 லட்சம் கொடுத்து வாங்கியதாக அதை காலிசெய்ய வலியுறுத்தி மூங்கில் தோட்டம் மெயின்ரோட்டை சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவவீரர் பழனிவேல் இவர்கள் இருவரிடையே தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த பிரச்சனை தொடர்பாக இவர்களது வீட்டிற்கு சென்று வீட்டை காலி செய்ய கூறி பொருட்களை உடைத்து சேதப்படுத்தியதோடு தமிழ்ச்செல்வன், சுதா ஆகியோரை பழனிவேல் தாக்கி உள்ளார்.
மேலும் துப்பாக்கியை காட்டி மிரட்டியுள்ளார்.
இதில் காயமடைந்த தமிழ்ச்செல்வன், சுதா ஆகியோர் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து சுதா கொடுத்த புகாரின் பேரில் மயிலாடுதுறை போலீசார் துப்பாக்கியை பறிமுதல் செய்து பழனிவேலை கைது செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்