search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mannambandal"

    • பிரச்சனை தொடர்பாக இவர்களது வீட்டிற்கு சென்று வீட்டை காலி செய்ய கூறி பொருட்களை உடைத்து சேதப்படுத்தியதோடு தமிழ்ச்செல்வன், சுதா ஆகியோரை பழனிவேல் தாக்கி உள்ளார்.
    • ஓய்வுபெற்ற ராணுவவீரர் பழனிவேல் இவர்கள் இருவரிடையே தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை அருகே மன்னம்பந்தல் ஊராட்சி திருக்குளத் தெருவில் குடியிருந்து வருபவர்கள் தமிழ்செல்வன் -சுதா தம்பதியினர்.

    குடியிருந்த வீட்டை கங்கா என்பவரிடம் ரூ.12 லட்சம் கொடுத்து வாங்கியதாக அதை காலிசெய்ய வலியுறுத்தி மூங்கில் தோட்டம் மெயின்ரோட்டை சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவவீரர் பழனிவேல் இவர்கள் இருவரிடையே தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த பிரச்சனை தொடர்பாக இவர்களது வீட்டிற்கு சென்று வீட்டை காலி செய்ய கூறி பொருட்களை உடைத்து சேதப்படுத்தியதோடு தமிழ்ச்செல்வன், சுதா ஆகியோரை பழனிவேல் தாக்கி உள்ளார்.

    மேலும் துப்பாக்கியை காட்டி மிரட்டியுள்ளார்.

    இதில் காயமடைந்த தமிழ்ச்செல்வன், சுதா ஆகியோர் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து சுதா கொடுத்த புகாரின் பேரில் மயிலாடுதுறை போலீசார் துப்பாக்கியை பறிமுதல் செய்து பழனிவேலை கைது செய்தனர்.

    ×