search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலி சாமியார்"

    • காட்டுப் பகுதியில் இருந்து பெண் அலறல் சத்தம் கேட்ட உறவினர்கள் மற்றும் கிரிவலப் பாதையில் சென்றவர்கள் காட்டு பகுதிக்கு சென்றனர்.
    • வழிப்பறியில் ஈடுபட்டவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

    திருவண்ணாமலை:

    ஆந்திர மாநிலம் திருப்பதியை சேர்ந்தவர் லாவண்யா. தனது உறவினர்களுடன் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வந்தார். அவர் இன்று காலை கிரிவலம் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது செங்கம் செல்லும் சாலையை அடுத்து தூர் வாசகர் முனிவர் கோவில் அருகில் இயற்கை உபாதையை கழிக்க சாலையின் ஓரமாக இருந்த காட்டுப் பகுதிக்குள் சென்றார்.

    இருளில் மறைந்திருந்த ஒருவர் அவரை கத்தியால் தாக்கி நகைகளை பறிக்க முயற்சித்தார். இதனைக்கண்டு லாவண்யா கூச்சலிட்டார்.

    காட்டுப் பகுதியில் இருந்து பெண் அலறல் சத்தம் கேட்ட உறவினர்கள் மற்றும் கிரிவலப் பாதையில் சென்றவர்கள் காட்டு பகுதிக்கு சென்றனர். கொள்ளையனிடமிருந்து லாவண்யாவை மீட்டனர்.

    கொள்ளையனை பொதுமக்கள் மடக்கி பிடித்து சரமாரியாக அடித்து உதைத்தனர். திருவண்ணாமலை தாலுகா போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    வழிப்பறியில் ஈடுபட்டவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

    முதற்கட்ட விசாரணையில் வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையன் திருக்கோவிலூரை சேர்ந்த பாபு என்பது தெரியவந்தது. அவர் போலி சாமியாராக வலம் வருவது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

    கிரிவலப் பாதையில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வருவதால் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கிரிவலப் பாதையில் உள்ள அனைத்து கழிவறைகளையும் திறந்து வைத்து பராமரிக்க வேண்டும்.

    கிரிவலப்பாதையில் கடந்த சில தினங்களாகவே சாதுக்கள் போர்வையில் ஆன்மீக பக்தர்களை மிரட்டுவதும், தாக்குவதும், கத்தியை காட்டி வழிப்பறியில் ஈடுபடுவதும் வாடிக்கையாக உள்ளது.

    உண்மையான சாதுக்கள் யார் என்று அறிந்து அவர்களை அடையாளப்படுத்துவதுடன் போலி சாமியார்களை கைது செய்ய வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர். 

    • சில நாட்களுக்கு முன்பு திருவண்ணாமலையிலிருந்து 2 மனைவிகளுடன் தெலுங்கானாவிற்கு வந்தார்.
    • சந்தோஷ் தன்னை மகா விஷ்ணுவாகவும், தனது மனைவிகளை ஸ்ரீதேவி, பூதேவி எனவும் கூறினார்

    சாமியார்கள் பலர் பொதுமக்களை ஏமாற்ற பல்வேறு விதமான வேடங்களில் வாக்கு சொல்லும் சம்பவங்கள் ஏராளம்.

    ஆனால் நானே மகாவிஷ்ணு.... நானே பாண்டுரங்கன்.... எனக் கூறிக்கொண்டு மகாவிஷ்ணு வேடத்திலேயே பொதுமக்களை ஏமாற்றி தெலுங்கானாவை ஒரு கலக்கு கலக்கி உள்ளார் திருவண்ணாமலையை சேர்ந்த போலி சாமியார் சந்தோஷ் குமார்.

    திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் சந்தோஷ் குமார். இவருக்கு 2 மனைவிகளும், ஒரு மகனும் உள்ளனர்.

    போலி சாமியரான இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருவண்ணாமலையிலிருந்து 2 மனைவிகளுடன் தெலுங்கானாவிற்கு வந்தார்.

    அப்போது சந்தோஷ் தன்னை மகா விஷ்ணுவாகவும், தனது மனைவிகளை ஸ்ரீதேவி, பூதேவி எனவும் கூறினார். மக்களை காக்க மனித உருவில் வந்த கடவுள் என தன்னை சந்திக்க வருபவர்களிடம் கூறினார்.

    மேலும் 5 தலைகள் கொண்ட பாம்பு போன்று கட்டில் அமைத்து அதில் விஷ்ணுவை போல் படுத்துக் கொண்டு தனது 2 மனைவிகள் கால் அமுத்தி விடுவது போன்றும், திருப்பதி ஏழுமலையான் போன்று வேடம் அணிந்தும் நான் கடவுள் என கூறி வந்தார்.

    சுவாமிஜியின் மகிமையால் வாய் பேச முடியாத பலர் பேசவும், நடக்க முடியாதவர்கள் நடக்கவும் முடிந்தது என சுற்றுவட்டார கிராம மக்களிடையே சிலர் தகவல் பரப்பினார்கள். இதனால் மக்கள் கூட்டம் அதிகரித்தது.

    சந்தோஷ் சுவாமியை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் வரிசையில் நின்றனர். பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததால் அந்த இடத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் கொடிதொட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சந்தோஷ் சுவாமியை அங்கிருந்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அப்போது ஆவேசமான சாமியார் நானே மகாவிஷ்ணு.... நானே பாண்டுரங்கன்.... என கத்தினார். போலீசார் அவரை எச்சரித்து அனுப்பினர்.

    சித்தர்களின் பூமியான திருவண்ணாமலையில் ஏராளமான சாமியார்கள் உள்ளனர். அதில் ஒரு சிலர் பொதுமக்களை எளிதில் கவர வேண்டும் என்பதற்காக பல்வேறு கோமாளி வேலைகளில் ஈடுபட்டு காமெடி சாமியார்களாக மாறி உள்ளனர்.

    அந்த வரிசையில் தற்போது போலி சாமியார் சந்தோஷ் குமார் இடம் பிடித்துள்ளார்.

    மகாவிஷ்ணு வேடத்தில் 2 மனைவிகளை காலடியில் அமர வைத்துக் கொண்டு இருக்கும் படங்கள் வாட்ஸ் அப் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதில் சினிமா பாடல்கள் பின்னணியில் காமெடியாக பரவ விட்டுள்ளனர்.

    இந்த வீடியோ படங்கள் திருவண்ணாமலை பொது மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவங்க வேற குறுக்க மறுக்க ஓடிக்கிட்டு... மொத்தமும் திருவண்ணாமலை பக்கம் இருந்தே வருவீங்களா... எங்கள பாத்தா என்ன வேற மாதிரி தெரியுதா என சமூக வலைதளங்களில் கண்டன குரல்களை எழுப்பி வருகின்றனர்.

    தெலுங்கானாவை கலக்கிய போலி சாமியார் தற்போது காமெடி போர்வையில் திருவண்ணாமலையிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

    • பெண் ஒருவர் 3 இளம்பெண்களிடம் அதிக அளவில் பணம் கொடுப்பதாக ஆசை வார்த்தை கூறி அழைத்து வந்தார்.
    • போலி சாமியார் தங்களை ஏமாற்றியதால் விரக்தி அடைந்த இளம்பெண்கள் சாலையோரம் நின்று அழுது கொண்டிருந்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டம், பொன்னே கல்லுவை சேர்ந்தவர் 35 வயது போலி சாமியார். இளம் பெண்களை வைத்து நிர்வாண பூஜை செய்தால் அதிக அளவில் பணம் கிடைக்கும் என கூறி வந்தார். இதுகுறித்து சமூக வலைத்தளங்களில் பதிவு செய்தார்.

    இதனை கண்ட சிலக்கலூருபேட்டையை சேர்ந்த பெண் ஒருவர் போலி சாமியாரை தொடர்பு கொண்டார். அப்போது போலி சாமியார் நிர்வாண பூஜைக்காக பெண்களை அழைத்து வந்தால் அதிக அளவில் பணம் கொடுப்பதாக தெரிவித்தார்.

    அந்த பெண் கர்னூல் மாவட்டம், ஆத்மகூரு பகுதியை சேர்ந்த 3 இளம்பெண்களிடம் அதிக அளவில் பணம் கொடுப்பதாக ஆசை வார்த்தை கூறி அழைத்து வந்தார்.

    இதையடுத்து போலி சாமியார் 3 இளம்பெண்களையும் விஜயவாடா, ஓங்கோல், குண்டூர், பொன்னே கல்லு உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்துச் சென்று அங்கு நிர்வான பூஜை செய்து பலாத்காரம் செய்தார்.

    பின்னர் போலி சாமியார் இளம்பெண்களை காரில் ஏற்றி கொண்டு குண்டூர் அருகே உள்ள அமராவதி சாலையில் இறக்கி விட்டு தப்பி சென்றார்.

    போலி சாமியார் தங்களை ஏமாற்றியதால் விரக்தி அடைந்த இளம்பெண்கள் சாலையோரம் நின்று அழுது கொண்டிருந்தனர். அந்த வழியாக சென்றவர்கள் இதனைக் கண்டு நல்ல பாடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அனைத்து மகளிர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இளம்பெண்களை மீட்டு விசாரணை நடத்தினர்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து போலி சாமியார், அவருக்கு உடந்தையாக இருந்த பெண் மற்றும் 3 வாலிபர்களை தேடி வருகின்றனர்.

    • நன்றாக படிக்க வைப்பதாக கூறி பிளஸ்-2 மாணவியை பலமுறை போலி சாமியார் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
    • இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து போலி சாமியாரை கைது செய்தார். பின்னர் அவரை செங்கல்பட்டு போக்சோ கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.

    ஸ்ரீபெரும்புதூர்:

    சுங்குவார்சத்திரம் அடுத்த ராமானுஜபுரம் பகுதியை சேர்ந்தவர் பிரசாந்த். சாமியாரான இவர் அதே பகுதியில் உள்ள கோவிலில் குறி சொல்லி வந்தார்.

    இவரிடம் அப்பகுதி மக்கள் தங்களது குறைகளை கூறி பரிகாரம் கேட்டு வந்தனர். இதனால் சாமியார் பிரசாந்த் அப்பகுதியில் பிரபலமாக இருந்தார்.

    இந்த நிலையில் அப்பகுதியை சேர்ந்த பிளஸ்-2 மாணவி ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு குறி கேட்பதற்காக சாமியார் பிரசாந்திடம் சென்றார்.

    அப்போது மாணவியை நன்றாக படிக்க வைப்பதாக ஆசைவார்த்தை கூறி தன்வசப்படுத்தினார். இதனால் மாணவி அடிக்கடி பிரசாந்தை சந்தித்து வந்தார்.

    ஆனால் சாமியார் பிரசாந்துக்கு மாணவி மீது ஆசை ஏற்பட்டது. அவரை நன்றாக படிக்க வைப்பதாக கூறி வசப்படுத்தி மாணவியை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்தார். மேலும் இதுபற்றி யாரிடமும் கூறக்கூடாது என்று சாமியார் பிரசாந்த் மிரட்டியதாகவும் தெரிகிறது.

    இதற்கிடையே சாமியார் பிரசாந்த்தின் பாலியல் தொல்லை எல்லை மீறியதால் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து மாணவி தனது பெற்றோரிடம் கூறி அழுதார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் ஸ்ரீபெரும்புதூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர்.

    விசாரணையில் போலி சாமியார் பிரசாந்த் ஆசை வார்த்தை கூறி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

    இதையடுத்து இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து போலி சாமியார் பிரசாந்த்தை கைது செய்தார். பின்னர் அவரை செங்கல்பட்டு போக்சோ கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.

    அசாம் மாநிலத்தில் முத்தமிட்டு ஆசி வழங்கினால் தீராத பிரச்சனைகளும் தீர்ந்துவிடும் எனக்கூறி பெண்களை அத்துமீறி முத்தம் கொடுத்த போலி சாமியாரை போலீசார் கைது செய்தனர்.
    கவுகாத்தி :

    அசாம் மாநிலம் மோரிகான் மாவட்டத்தில் ராமு பிரகாஷ் சவுகான் என்பவர் தான் ஒரு விஷ்ணு பக்தன் என்றும், தன் உடலில் கடவுள் விஷ்ணு இருப்பதாக கூறி  அதன் மூலம் ஆசி வழங்கி தீராத பிரச்சனைகளை தீர்ப்பதாகவும் பிரசாரங்களை மேற்கொண்டார்.

    இதனை நம்பி பலரும் அவரிடம் வந்து ஆசி பெற்று சென்றுள்ளனர்.  அவரிடன் வந்து ஆசி பெறுபவர்களை கட்டி அணைத்து முத்தம் கொடுத்து அருளாசி வழங்குவது அவரது வழக்கமாம்.

    பெண் பக்தர்களுக்கும் இவ்வாறு தான் அவர் ஆசி வழங்குவார்.  ஆனாலும், அதனை பொருட்படுத்தாத ஏராளமான பெண்கள் பிரச்சனைகள் தீர்ந்தால் சரி என்று அவரிடம் வந்து ஆசி பெற்று சென்றுள்ளனர்.

    இதன் மூலம் நோய்கள் தீருவதாகவும், வீட்டில் உள்ள பிரச்சனைகள் நீங்குவதாகவும், மனதளவில் பாதிப்புகள் குறைவதாகவும் பக்தர்கள் நம்பினார்கள்.
    ×