search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பிளஸ்-2 மாணவி பாலியல் பலாத்காரம்: போலி சாமியார் கைது
    X

    பிளஸ்-2 மாணவி பாலியல் பலாத்காரம்: போலி சாமியார் கைது

    • நன்றாக படிக்க வைப்பதாக கூறி பிளஸ்-2 மாணவியை பலமுறை போலி சாமியார் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
    • இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து போலி சாமியாரை கைது செய்தார். பின்னர் அவரை செங்கல்பட்டு போக்சோ கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.

    ஸ்ரீபெரும்புதூர்:

    சுங்குவார்சத்திரம் அடுத்த ராமானுஜபுரம் பகுதியை சேர்ந்தவர் பிரசாந்த். சாமியாரான இவர் அதே பகுதியில் உள்ள கோவிலில் குறி சொல்லி வந்தார்.

    இவரிடம் அப்பகுதி மக்கள் தங்களது குறைகளை கூறி பரிகாரம் கேட்டு வந்தனர். இதனால் சாமியார் பிரசாந்த் அப்பகுதியில் பிரபலமாக இருந்தார்.

    இந்த நிலையில் அப்பகுதியை சேர்ந்த பிளஸ்-2 மாணவி ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு குறி கேட்பதற்காக சாமியார் பிரசாந்திடம் சென்றார்.

    அப்போது மாணவியை நன்றாக படிக்க வைப்பதாக ஆசைவார்த்தை கூறி தன்வசப்படுத்தினார். இதனால் மாணவி அடிக்கடி பிரசாந்தை சந்தித்து வந்தார்.

    ஆனால் சாமியார் பிரசாந்துக்கு மாணவி மீது ஆசை ஏற்பட்டது. அவரை நன்றாக படிக்க வைப்பதாக கூறி வசப்படுத்தி மாணவியை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்தார். மேலும் இதுபற்றி யாரிடமும் கூறக்கூடாது என்று சாமியார் பிரசாந்த் மிரட்டியதாகவும் தெரிகிறது.

    இதற்கிடையே சாமியார் பிரசாந்த்தின் பாலியல் தொல்லை எல்லை மீறியதால் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து மாணவி தனது பெற்றோரிடம் கூறி அழுதார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் ஸ்ரீபெரும்புதூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர்.

    விசாரணையில் போலி சாமியார் பிரசாந்த் ஆசை வார்த்தை கூறி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

    இதையடுத்து இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து போலி சாமியார் பிரசாந்த்தை கைது செய்தார். பின்னர் அவரை செங்கல்பட்டு போக்சோ கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.

    Next Story
    ×