search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண் சித்ரவதை"

    • புவனா தற்போது சித்ரவதைக்குள்ளான வீட்டில் இருந்து மீட்கப்பட்டு உள்ளார்.
    • புவனா தனியார் ஏஜெண்டுகளின் பொறுப்பில் பாதுகாப்பாக இருப்பதாக என்னிடம் செல்போனில் பேசினார்.

    ராயபுரம்:

    தண்டையார்பேட்டை, கருணாநிதிநகர், 4-வது தெருவை சேர்ந்தவர் ஜேம்ஸ்பால். இவரது மனைவி புவனா (வயது 37). இவர் வீட்டு வேலைக்காக கடந்த 8 மாதத்துக்கு முன்பு குவைத்துக்கு சென்றார்.

    இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு புவனா தனது கணவருக்கு செல்போனில் வீடியோ ஒன்றை அனுப்பி இருந்தார். அதில் தன்னை கழிவறையில் அடைத்து வைத்து சித்ரவதை செய்வதாக கதறி அழுதார். மேலும் தன்னை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்து இருந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஜேம்ஸ்பால், குவைத்தில் சிக்கி சித்ரவதைபடும் மனைவி புவனாவை மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

    இதற்கிடையே குவைத்தில் உள்ள தனியார் ஏஜென்டுகளிடம் புவனா குறித்து தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து வீட்டில் அடைக்கப்பட்டு இருந்த புவனாவை மீட்டனர். பின்னர் அவரை பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்தனர்.

    எனினும் புவனாவின் பாஸ்போர்ட்டை ஏற்கனவே அந்த வீட்டின் உரிமையாளர் வாங்கிக் கொண்டதாக தெரிகிறது. அதனை அவர் திருப்பி கொடுக்கவில்லை. இதனால் புவனா சென்னை திரும்புவது தாமதமாகி உள்ளது. பாஸ்போர்ட்டை பெற தனியார் ஏஜெண்டுகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து புவனாவின் கணவர் ஜேம்ஸ்பாலிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    புவனா தற்போது சித்ரவதைக்குள்ளான வீட்டில் இருந்து மீட்கப்பட்டு உள்ளார். அவர் தனியார் ஏஜெண்டுகளின் பொறுப்பில் பாதுகாப்பாக இருப்பதாக என்னிடம் செல்போனில் பேசினார்.

    ஆனால் அவர் வேலைபார்த்த வீட்டின் உரிமையாளர் புவனாவின் பாஸ்போட்டை வைத்து உள்ளார். அதனை இன்னும் பெறவில்லை. பாஸ்போர்ட் கிடைத்ததும் மனைவி புவனா சென்னை திரும்புவார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தினமும் அதிகாலை 5 மணிக்கு எழுந்து வேலை செய்ய வேண்டும்.
    • தொடர்ந்து நள்ளிரவு 1 மணிவரை ஓய்வே இல்லாமல் வேலை செய்ய வேண்டும்.

    சென்னை:

    சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்தவர் புவனா. இவரது கணவர் ஜேம்ஸ்பால். கூலித் தொழிலாளி. இவர்களுக்கு விசினா (16), விதியா (14) என்ற இரண்டு மகள்கள்.

    குடும்பத்தில் போதிய வருமானம் இல்லாமல் தவித்த புவனா வெளிநாடுகளுக்கு வேலைக்கு ஆட்களை அனுப்பும் சூளைமேட்டை சேர்ந்த ஏஜெண்டை சந்தித்துள்ளார்.

    அந்த நபர் குவைத்தில் வீட்டு வேலைக்கு ஆட்கள் தேவை என்று கூறி இருக்கிறார். மாதம் 150 குவைத்தினார் (இந்திய மதிப்பில் ரூ.39,528) சம்பளம் பேசி கடந்த பிப்ரவரி மாதம் துபாய் அனுப்பி இருக்கிறார்கள். அங்கு ஒரு போலீஸ் அதிகாரியின் வீட்டு வேலைக்காக நியமித்துள்ளார்கள்.

    அங்கு புவனாவை வேலை வாங்கினார்கள் என்பதைவிட சித்ரவதை செய்திருக்கிறார்கள் என்பதே உண்மை. தினமும் அதிகாலை 5 மணிக்கு எழுந்து வேலை செய்ய வேண்டும். தொடர்ந்து நள்ளிரவு 1 மணிவரை ஓய்வே இல்லாமல் வேலை செய்ய வேண்டும்.

    கொஞ்சம் ஓய்வெடுத்தாலும் அடி விழும். அதையும் தாங்கி வேலை செய்த புவனாவுக்கு சம்பளமும் பேசியபடி கொடுக்கவில்லை. மாதம் ரூ.26,750 மட்டுமே கொடுத்துள்ளார்கள்.

    அவரை செல்போனிலும் பேசக்கூடாது என்று கட்டுப்பாடு விதித்துள்ளார்கள். ரத்தக்காயம் ஏற்படும் அளவுக்கு புவனாவை அடித்து துன்புறுத்தி இருக்கிறார்கள்.

    புவனா இரவில் ஓய்வெடுப்பது 2 அல்லது 3 மணிநேரம் தான். அதற்காக அவருக்கு ஒதுக்கப்பட்ட இடம் கழிவறை. அந்த அறையை படுக்கையறையாக மாற்றிக்கொள்ளும்படி கூறி இருக்கிறார்கள்.

    அந்த அறையிலேயே தங்கிய புவனா தனது நிலமையை வீடியோவாக பதிவு செய்து சென்னையில் உள்ள உறவினர்களுக்கு அனுப்பினார். அதை வைத்து தண்டையார்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது.

    புவனாவை மீட்டுத்தரும் படி முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கும் கோரிக்கை வைத்தனர். அதைத் தொடர்ந்து மத்திய அரசின் உதவியுடன் புவனாவை மீட்க முயற்சி எடுத்தனர். இதற்கிடையில் புவனா மீட்கப்பட்டு அங்குள்ள தமிழ் சங்கத்தில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளார்.

    அவர் இன்று அல்லது நாளைக்குள் சென்னை திரும்புவார் என்று அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறினார்.

    கூடுதல் வரதட்சணை கேட்டு மனைவியை சித்ரவதை செய்ததோடு 2-வது திருமணமும் செய்த கணவர் கைது செய்யப்பட்டார்.

    பேரையூர்:

    திருமங்கலம் அருகே சுந்தராம்பட்டியைச் சேர்ந்தவர் நாகேஸ்வரி என்ற சரண்யா (வயது27). இவர் மம்சாபுரத்தைச் சேர்ந்த சிவக்குமார் என்பவரை 8 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 5 வயதில் பெண் குழந்தை உள்ளது.

    ஓட்டல் நடத்தி வந்த சிவக்குமாருக்கும், சரண்யாவுக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் சரண்யா கணவரை பிரிந்து பெற்றோர் வீட்டிற்கு வந்து விட்டார்.

    இந்த நிலையில் திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசில் சரண்யா புகார் கொடுத்துள்ளார்.அதில் கூறி இருப்பதாவது:-

    கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்த நிலையில் அவர் மதுரை செல்லூரைச் சேர்ந்த ஒரு பெண்ணை கடந்த ஆண்டு 2-வதாக திருமணம் செய்துள்ளார்.

    இதுகுறித்து நான் கேட்டபோது 40 பவுன் நகை மற்றும் ரூ.8 லட்சம் மதிப்பிலான வீட்டை என் பெயருக்கு எழுதி தந்தால் உன்னுடன் வாழ்கிறேன் என மிரட்டல் விடுத்தார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இதுகுறித்து அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி சிவக்குமார், அவரது தந்தை சிவனாண்டி, தாய் வைரமணி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதில் சிவக்குமார் கைது செய்யப்பட்டார்.

    ×