search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பள்ளி வாகனங்கள்"

    • 10 ஆண்டுகள் அனுபவம் உள்ள கனரக வாகன ஓட்டுநர்களை நியமிக்க வேண்டும்.
    • பள்ளி வாகனங்களில் இனி ஒரு பெண் உதவியாளர் கட்டாயம் இருக்க வேண்டும்.

    சென்னை:

    பள்ளி வாகனங்களில் மாணவிகளுக்கு எதிராக பாலியல் குற்றங்கள் நடப்பதை தடுக்கும் வகையில் புதிய உத்தரவை பள்ளிக்கல்வித்துறை பிறப்பித்துள்ளது.

    பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டு நெறிமுறைகளில்,

    * பள்ளி வாகனங்களில் இனி ஒரு பெண் உதவியாளர் கட்டாயம் இருக்க வேண்டும்.

    * 10 ஆண்டுகள் அனுபவம் உள்ள கனரக வாகன ஓட்டுநர்களை நியமிக்க வேண்டும்.

    * ஓட்டுநர் மற்றும் உதவியாளர் மீது குற்ற நடவடிக்கை இல்லை என்பதை பள்ளி நிர்வாகங்கள் சரி பார்க்க வேண்டும்.

    * வாகன ஓட்டுநர், உதவியாளர் மது அருந்தியுள்ளார்களா என்பதை தினமும் பரிசோதிக்க வேண்டும்.

    * போக்சோ சட்ட விதிகள் பற்றி ஓட்டுநர் மற்றும் உதவியாளருக்கு தெளிவாக விளக்கப்பட வேண்டும்.

    * பள்ளி வாகனங்களில் ஜிபிஎஸ் மற்றும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்.

    * பள்ளி வாகனங்களில் ஓட்டுநர், உதவியாளர் குறித்த விவரங்களை பள்ளி தகவல் மேலாண்மை இணைய பக்கத்தில் நாளை மாலைக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

    • தமிழகத்தில் கடந்த ஆண்டு 46 ஆயிரத்து 734 பள்ளி குழந்தைகளை ஏற்றி செல்லும் ஆட்டோக்கள் உள்பட அனைத்து பள்ளி வாகனங்களும் ஆய்வு செய்யப்பட்டது.
    • பொதுமக்கள் சாலைகளில் அதிவேகமாக பள்ளி குழந்தைகளை ஏற்றி செல்லும் வாகனங்களை கண்டால் புகார் அளிக்கலாம்.

    சென்னை:

    நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் கடந்த 14-ந் தேதி பள்ளி மாணவர்கள் சென்ற ஆட்டோ விபத்துக்குள்ளாகி பிரதீப் என்ற 5-ம் வகுப்பு மாணவன் பலியானான். இந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழக போக்குவரத்து ஆணையர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் கடந்த ஆண்டு 46 ஆயிரத்து 734 பள்ளி குழந்தைகளை ஏற்றி செல்லும் ஆட்டோக்கள் உள்பட அனைத்து பள்ளி வாகனங்களும் ஆய்வு செய்யப்பட்டது. இதில் 6,754 பள்ளி வாகனங்கள் மீது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. ரூ.1.36 கோடி அபராதம் தொகை வசூலிக்கப்பட்டது.

    பள்ளி மாணவ-மாணவிகளை விதிமுறைகளை மீறி மிக அதிகமாக ஏற்றி செல்லும் வாகனங்கள் தொடர்ந்து கடுமையான சோதனைக்கு உள்ளாக்கப்பட்டு, அவர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெற்றோர்கள், பள்ளி நிர்வாகமும் அவ்வப்போது தங்களது குழந்தைகளை பள்ளிக்கு ஏற்றிச்செல்லும் வாகனங்களின் டிரைவர்கள் பாதுகாப்பாக ஓட்டுகின்றனரா? சாலைவிதிகளை ஒழுங்காக கடைபிடிக்கிறார்களா? குழந்தைகளிடம் ஒழுங்காக நடந்து கொள்கிறார்களா? என்பதையும் விசாரித்து அந்தந்த மோட்டார் வாகன ஆய்வாளர்களுக்கோ அல்லது வட்டாரப்போக்குவரத்து அலுவலர்களுக்கோ நேரிலோ அல்லது தொலைபேசியிலோ, மின் அஞ்சல், வாட்ஸ் அப் மூலமாகவோ புகார்களை தெரிவிக்கலாம்.

    மேலும் பொதுமக்களும் சாலைகளில் அதிவேகமாக பள்ளி குழந்தைகளை ஏற்றி செல்லும் வாகனங்களை கண்டால் புகார் அளிக்கலாம். மோட்டார் வாகன ஆய்வாளர்கள், வட்டார போக்குவரத்து அலுவலர்களை தொடர்புகொள்ள வேண்டிய அலுவலக எண்கள், செல்போன்கள் www.tnsta.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

    பள்ளி குழந்தைகளை ஏற்றிச்செல்லும் வாகனங்களுக்கு விரிவான வழிமுறைகளை கொடுப்பதற்கு குழு அமைக்கப்பட்டு அந்த குழுவும் பிற மாநிலங்களில் உள்ள சிறந்த நடைமுறைகளை ஆராய்ந்து ஒரு அறிக்கையை அளித்துள்ளது. அதனடிப்படையில் விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் துறையின் மூலம் வெளியிடப்படும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • பள்ளி வாகனங்களை பாதுகாப்பான முறையில் இயக்க வேண்டும் என டிரைவர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.
    • சிறப்பு விதி 2012-யை கடைபிடித்து இயக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் விஷ்ணுசந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    2023-24 பள்ளி வாகனங்கள் அனைத்தும் தமிழ்நாடு அரசு பள்ளி வாகனங்கள் சிறப்பு விதி 2012-யை கடைபிடித்து இயக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். இதன்படி பள்ளி வாகனங்களை தினந்தோறும் முழுமையாக பரிசோதித்து குறைகளை அறிந்து முறையாக பராமரித்து சீரிய முறையில் பள்ளி வாகனத்தினை இயக்க இம்மாவட்ட தனியார் பள்ளி வாகன உரிமையாளர்கள், பள்ளி பேருந்தின் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    பள்ளி பேருந்தின் நடத்துனர்கள் பள்ளி குழந்தைகளை பாதுகாப்பான முறையில் ஏற்றி இறக்கிச்செல்ல கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். மேலும், பள்ளி வாகனங்கள் நகர எல்லையில் 40 கி.மீ வேகத்தில் மிகாலும், பிற அனுமதிக்கப்பட்ட சாலைகளில் 50கி.மீ என்ற வேகத்தில் மிகாமலும் இயக்கப்பட வேண்டும். 2023-2024 கல்வி ஆண்டில் இம்மாவட்டத்தில் கூட்டாய்வு செய்து சரியாக உள்ள பள்ளி வாகனங்கள் கீழ்கண்ட ஸ்டிக்கர் மூலமாக வாகனத்தினுடைய காற்றுத்தடை கண்ணாடியில் ஒட்டப்பட அறிவுறுத்தி அதன்படி ஒட்டி இயக்கப்படுகிறது. சாலை விதிகளை முழுமையாக கடைபிடித்து விபத்தில்லா மாவட்டமாக உருவாக்க உறுதி ஏற்போம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பள்ளி வாகனங்களை கவனத்தோடு இயக்க வேண்டும் என டிரைவர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.
    • மேலும் ஓட்டுநர்கள் தீயணைப்பது குறித்த பயிற்சியும், முதலுதவி குறித்த பயிற்சியும் பெற்றிருக்க வேண்டும் என்றார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் நிறுத்தப்பட்டிருந்த பள்ளி வாகனங்களை கலெக்டர் ஆஷா அஜித் ஆய்வு செய்தார். பின்னர் பள்ளிக்கல்வித்துறை, போக்குவரத்துத்துறை அலுவலர்களின் ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்று கலெக்டர் பேசியதாவது:-

    சிவகங்கை மாவட்டத்தில் 388 பள்ளி வாகனங்கள் உள்ளன. அதில் இன்றைய தினம் 298 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள வாகனங்கள் விரைவில் ஆய்வு செய்யப்பட்டு சான்று வழங்கப்படும். பள்ளி குழந்தைகள் செல்லும் வாகனத்தின் டிரைவர்கள் அதனை இயக்குவதற்கு முன்பு உரிய பரிசோதனை செய்ய வேண்டும்.

    ஓட்டுனர்கள் வாகனத்தை கவனத்துடனும், அனுமதிக் கப்பட்ட வேகத்துடன் மட்டுமே இயக்க வேண்டும். வாகனம் இயக்கும் போது மது அருந்துதல், கைப்பேசி பயன்படுத்துதல் போன்ற செயல்முறைகள் இருக்கக்கூடாது. குறிப்பிட்ட அளவு குழந்தைகளை மட்டுமே வாகனங்களில் ஏற்ற வேண்டும். மேலும் ஓட்டுநர்கள் தீயணைப்பது குறித்த பயிற்சியும், முதலுதவி குறித்த பயிற்சியும் பெற்றிருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வுக்கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ், வட்டார போக்குவரத்து அலுவலர் மூக்கன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுவாமி நாதன், போக்குவரத்து ஆய்வாளர் மாணிக்கம் மற்றும் பள்ளி வாகன ஓட்டுநகர் கலந்து கொண்டனர்.

    • தமிழக அரசு உத்தரவின் படி வரும் ஜூன் மாதத்தில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.
    • நாமக்கல் வடக்கு மற்றும் தெற்கு ஆர்.டி.ஓ. அலுவலக எல்லைக்குட்பட்ட தனியார் பள்ளி வாகனங்களை மாவட்ட கலெக்டர் உமா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    நாமக்கல்:

    தமிழக அரசு உத்தரவின் படி வரும் ஜூன் மாதத்தில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இதையொட்டி, நாமக்கல் வடக்கு மற்றும் தெற்கு ஆர்.டி.ஓ. அலுவலக எல்லைக்குட்பட்ட தனியார் பள்ளி வாகனங்களை மாவட்ட கலெக்டர் உமா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    நாமக்கல் மாவட்ட போலீஸ் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற ஆய்வில், வருவாய் துறை, பள்ளிக்கல்வித் துறை, காவல் துறை, போக்குவரத்து துறை ஆகிய துறைகளின் அலுவலர்களால் பள்ளி வாகனங்கள் அரசு விதிமுறைகளின்படி இயங்குகிறதா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    இந்த ஆய்வில் நாமக்கல் தெற்கு ஆர்.டி.ஓ அலுவலகத்திற்குட்பட்ட 27 பள்ளிகளை சேர்ந்த 269 பள்ளி வாகனங்களும், வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்குட்பட்ட 23 பள்ளிகளை சேர்ந்த 217 பள்ளி வாகனங்களும் என மொத்தம் 486 பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டது.

    இதில் 458 பள்ளி வாகனங்கள் தகுதியான நிலையில் உள்ளது என கண்டறியப்பட்டது. மீதமுள்ள 28 பள்ளி வாகனங்கள் குறைகள் கண்டறியப்பட்டு அவற்றை நிவர்த்தி செய்து, மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்திய பிறகே இயக்க வேண்டும் என்று கலெக்டர் அவற்றை திருப்பி அனுப்பினார்.

    மேலும், பள்ளி வாகன சிறப்பு சட்டத்தில் கூறப்பட்டுள்ள விதிகள் பின்பற்றப்பட்டுள்ளதா என்றும், எப்சி சர்டிபிகேட், பர்மிட், இன்சூரன்ஸ், புகைச்சான்று, வரி மற்றும் பசுமை வரி ஆகியவை நடப்பில் உள்ளதா என்றும் கலெக்டர் ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வில் பள்ளி வாகன டிரைவர்கள் மற்றும் வாகன பொறுப்பாளர் களுக்கு தீயணைப்பு துறையினரால் வாகனத்தில் உள்ள தீயணைப்பு கருவியை அவசர காலத்தில் எவ்வாறு கையாள்வது என்று செய்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.

    அதனைத்தொடர்ந்து 581 பள்ளி வாகன டிரைவர் களுக்கு உடல் மற்றும் கண் பரிசோதனைகள் செய்யப்பட்டது. முன்னதாக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரியை கலெக்டர் டாக்டர் உமா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வில் அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் சாந்தா அருள்மொழி, நாமக்கல் ஆர்.டி.ஓ. (பொ) சுகந்தி, ஆர்.டி.ஓ.க்கள் முரு கேசன், முருகன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    • பள்ளி வாகனங்களை கவனமுடன் இயக்க ஓட்டுநர்களுக்கு,கலெக்டர் அறிவுரை வழங்கினார்.
    • வாகனத்தில் முதலுதவி பெட்டிகள், மருந்துகள் சரியாக இருக்கிறதா என்றும் சரிபார்க்கப்பட்டது.

    தென்காசி:

    தென்காசி இ.சி.சங்கரன்பிள்ளை அரசினர் ஆண்கள் மேல் நிலைப்பள்ளி மைதானத்தில் தென்காசி வட்டார போக்கு வரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட பள்ளி பஸ்களை மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் பார்வையிட்டு பாதுகாப்பு வசதிகள் சரியாக உள்ளனவா? என ஆய்வு மேற்கொண்டார்.

    ஒவ்வொரு ஆண்டும் புதிய கல்வி ஆண்டை தொடங்குவதற்கு முன்னர் பள்ளி பஸ்களை ஆய்வு செய்வது போன்று இந்த ஆண்டும் தென்காசி வட்டார போக்குவரத்து அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள 450 பள்ளி வாகனங்களில் 136 பள்ளி வாகனங்களை கலெக்டர் ரவிச்சந்திரன் ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து அவர் பள்ளி வாகனங்களை கவனமுடன் இயக்க ஓட்டுநர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார். அதுமட்டுமின்றி வாகனத்தில் படிக்கட்டு, அவசர வழி, சி.சி.டி.வி. காமிரா,வேக கட்டுப்பாட்டு கருவிகள் உள்ளதா என்றும், முதலுதவி பெட்டிகள், மருந்துகள் சரியாக இருக்கிறதா என்றும் சரிபார்க்கப்பட்டது.

    வாகனத்தில் முன்புறமும், பின்புறமும் யாரும் இல்லை என்பதை உறுதி செய்த பின்னர் ஓட்டுநர் வாகனத்தை இயக்குவதற்கு வசதியாக முன்பும், பின்பும் தெரியும் படி காமிரா பொருத்தப்பட்டுள்ளதா என்பதையும் ஆய்வு செய்தார். அப்போது வட்டார போக்குவரத்து அலுவலர் கண்ணன், மாவட்ட கல்வி அலுவலர் ராமசுப்பு, துணை போலீஸ் சூப்பிரண்டு நாகசங்கர், உதவி மாவட்ட அலுவலர் பிரதீப் குமார், தீயணைப்பு துறை அலுவலர் மகா லிங்கம், நேர்முக உதவி யாளர் முருகன், கண்கா ணிப்பாளர் சிவன் ஆறுமு கம், உதவியாளர் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் நிலை-2, வட்டார போக்குவரத்து அலுவலகம் மணிபாரதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • 110 வாகனங்களில் குறைபாடுகள் கண்டறியப்பட்டது.
    • 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் முதலுதவி சிகிச்சை குறித்து செயல் விளக்கம் அளித்தனர்.

    பல்லடம் :

    திருப்பூர் தெற்கு வட்டார போக்குவரத்து துறையின் கீழ் உள்ள பள்ளி வாகனங்கள் ஒவ்வொரு ஆண்டும் ஆய்வு செய்யப்பட்டு தகுதி சான்று வழங்கப்படுகிறது. அந்த வகையில் திருப்பூர் வட்டார போக்குவரத்து துறைக்கு உட்பட்ட பல்லடம்,காங்கயம் பகுதியைசேர்ந்த 350 பள்ளி வாகனங்களுக்கான தகுதி ஆய்வு பல்லடம் கரையாம் புதூர் கோவில் மைதானத்தில் நடைபெற்றது. இதில் வாகனங்களை திருப்பூர் சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன், திருப்பூர் தெற்கு வட்டார போக்குவரத்து அதிகாரி ஆனந்த் ஆகியோர் ஆய்வு செய்தனர்.இதில் பள்ளி வாகனங்களில் படிக்கட்டுகளின் உயரம், அதன் நிலை, டிரைவர் அமரும் பகுதி, வாகனத்தின் உள்ளே நடைமேடை பகுதி, தீயணைப்பு கருவி, முதலுதவி கருவி, மாணவர்கள் அமரும் இருக்கை வசதி, தீயணைப்பு சாதனம் மற்றும் அவசரவழி ஆகியவை அமைக்கப்பட்டு உள்ளதா? கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளதா? வாகனத்தின் முன்னால், பின்னால் பள்ளியின் பெயர், தொடர்பு எண், இ-மெயில் முகவரி எழுதப்பட்டுள்ளதா என்றும் ஆய்வு செய்யப்பட்டது.

    ஆய்வு செய்யப்பட்ட 350 வாகனங்களில், 110 வாகனங்களில் குறைபாடுகள் கண்டறியப்பட்டது. அந்த வாகனங்களில் உள்ள குறைகளை நீக்கி மீண்டும் வரும் 29ந் தேதி மறு ஆய்வுக்கு கொண்டு வர அறிவுறுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பல்லடம் தீயணைப்புத் துறையினர் தீ தடுப்பு முறை குறித்து ஓட்டுநர்களுக்கு செயல்முறை விளக்கம் அளித்தனர். 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் முதலுதவி சிகிச்சை குறித்து செயல் விளக்கம் அளித்தனர். இந்த ஆய்வில், பல்லடம் துணை போலீஸ் சூப்பிரண்ட் சவுமியா, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் (பொறுப்பு) ஆனந்தி, மோட்டார் வாகன ஆய்வாளர்கள் வேல்மணி, ஈஸ்வரன், மற்றும் பள்ளி வாகன ஓட்டுநர்கள், நடத்துனர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.இந்த ஆய்வுப்பணியில் சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன், ஒவ்வொரு பள்ளி வாகனங்களிலும் விறுவிறுவென ஏறி இறங்கினார். அவருக்கு ஈடு கொடுக்க முடியாமல் மற்ற அதிகாரிகள் ஓட்டமும் நடையுமாய் உடன் சென்றனர்.

    • திங்கள் நகர் சுற்று வட்டார பகுதிகளில் காலை மாலை வேளைகளில் போக்குவரத்து நெருக்கடி அதிக அளவில் உள்ளன
    • அதிகமாக மாணவர்கள் ஏற்றி வந்த 3 பள்ளி வாகனங்கள், தலை கவசம் அணியாத பின்னாடி இருப்பினும் தலை கவசம் அணியாத 30 மோட்டார் சைக்கிள்கள்

    கன்னியாகுமரி :

    அனுமதிக்க பட்ட நபர்களை விட அதிகமாக பள்ளி மாணவர்களை ஏற்றி வந்த பள்ளி வாகனங்கள் உட்பட 69 வாகனங்களுக்கு குளச்சல் போக்குவரத்து காவல்துறை அதிகாரி வில்லியம் அவர்களால் திங்கள் நகர் ரவுண்டானா அருகே வைத்து அபராதம் விதிக்கப்பட்டது.

    திங்கள் நகர் சுற்று வட்டார பகுதிகளில் காலை மாலை வேளைகளில் போக்குவரத்து நெருக்கடி அதிக அளவில் உள்ளன. இதனை அடுத்து குளச்சல் போக்குவரத்து காவல்துறை இன்ஸ்பெக்டர் வில்லியம் மற்றும் போலீசார் திங்கள் நகர் ரவுண்டானா அருகே அதிரடி சோதனை நடத்தினர்.

    அப்போது அதிகமாக மாணவர்கள் ஏற்றி வந்த 3 பள்ளி வாகனங்கள், தலை கவசம் அணியாத பின்னாடி இருப்பினும் தலை கவசம் அணியாத 30 மோட்டார் சைக்கிள்கள், ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனங்கள் இயக்கம் செய்த 3 நபர்கள், காப்பீடு இல்லாமல் 2 நபர்கள் செல்போன் பேசி கொண்டு வாகனம் ஓட்டுதல், கார்களில் கறுப்பு நிற காகிதம் ஒட்டியது போன்ற போக்குவரத்து விதிமுறைகள் மீறல்களுக்கு என்று மொத்தம் 69 வாகன உரிமையாளர் மீது அபராதம் விதிக்கப்பட்டது.

    • உளுந்தூர்பேட்டை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் தனியார் பள்ளி வாகனங்களை கோட்டாட்சியர் ஆய்வு செய்தார்.
    • பெற்றோர்கள் உங்களை நம்பி தான் மாணவர்களை அனுப்பி வைக்கிறார்கள் அது கருத்தில் கொண்டு பேருந்து பாதுகாப்பாக இயக்க வேண்டும் என்று கூறினார்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட் டம் உளுந்தூர்பேட்டை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட 50-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளி வாகனங்களை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் திருக் கோவிலூர் கோட்டாட்சி யர் ஆர்.டி.ஓ. யோக ஜோதி ஆய்வு மேற்கண்டார். அப்போது பள்ளி வாக னங்களை மேல் கூரை டயர் அனைத்தும் சரி வர உள்ளதாக இருக்கிறதா அவசர கால கதவுகள் உள்ளதா முதலுதவி மருத்துவ வசதிகள் இருக்க வேண்டும் விபத்து ஏற்படும் நேரத்தில் முதலுதவி எப்படி பயன்படுத்த வேண்டும் என்றும் கூறி ஆய்வு மேற்கொண்டு ஓட்டுனர்களுக்கு மெதுவாக செல்ல வேண்டும் மாணவர்களை தவிர வேறு யாரும் ஏற்றிச் செல்லக் கூடாது.

    மாணவர்களை தங்கள் பிள்ளைகள் போல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறி மோட்டார் வாகன சட்டத்திற்கு உட்பட்டு வாகனங்களை இயக்க வேண்டும் கண்டிப்பாக ஓட்டுநர்கள் உரிமம் மற்றும் வாகனத்தின் ஆர்.சி. புக் இன்சூரன்ஸ் முறையாக அந்தந்த வாகனங்களில் இருக்க வேண்டும் என்று கூறியதோடு பெற்றோர்கள் உங்களை நம்பி தான் மாணவர்களை அனுப்பி வைக்கிறார்கள் அது கருத்தில் கொண்டு பேருந்து பாதுகாப்பாக இயக்க வேண்டும் என்று கூறினார். நிகழ்ச்சிக்கு உளுந்தூர்பேட்டை வட்டார போக்குவரத்து அலுவலர் செந்தூர் வேல் உளுந்தூர்பேட்டை டி.எஸ்.பி. மகேஷ், தாசில்தார் கோபாலகிருஷ்ணன் மோட்டார் வாகன ஆய்வாளர் முருகவேல், மாவட்ட கல்வி அலுவலர் பொறுப்பு கலைச்செல்வன், தீயணைப்பு நிலைய அதிகாரி சக்கரவர்த்தி மற்றும் ஓட்டுநர்கள் ஆய்வின் போது இருந்தனர்.

    • விருத்தாசலத்தில் பள்ளி வாகனங்களை ஆய்வுசெய்த அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
    • விருத்தாச்சலம் மாவட்ட கல்வி அலுவலர் சுகப்பிரியா மற்றும் தீயணைப்பு துறை அலுவலர் மணி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்திற்கு உட்பட்ட பள்ளி வாகனங்கள் விருத்தாசலம் பைபாஸ் சாலையில் உள்ள சார்பதிவாளர் அருகில் உள்ள தனியார் இடத்தில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. இதில் 46 பள்ளிகளைச் சேர்ந்த 419 வாகனங்கள் சோதனை செய்யப்பட்டு தணிக்கை செய்யப்பட்டன. இந்த ஆய்வில் வேக கட்டுப்பாட்டு கருவி, அவசர வழிக்கதவு, தீயணைப்புக் கருவி, முதலுதவி பெட்டி உள்ளிட்ட அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்து பள்ளி வாகனங்கள் இருக்கின்றனவா என சோதனை செய்யப்பட்டது.

    மேலும்பள்ளி வாக னஓட்டுனர்கள் வாகன ங்களை இயக்கும்போது கவனமாகவும், பள்ளி மாணவர்கள் இறங்கு ம்போதும் ஏறும் போதும் சரியாக கவனி த்து வாகனங்களை இய க்குமாறும் அறிவுரைகளை மோட்டார் வாகன அதிகாரிகள் வழங்கினர். இதில் சிதம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலர் அருணாச்சலம், விருத்தாசலம் மோட்டார் வாகன ஆய்வாளர் முருகேசன், விருத்தாச்சலம் வருவாய் கோட்டாட்சியர் ராம்குமார், விருத்தாச்சலம் காவல் கோட்ட கண்காணிப்பாளர் அங்கித் ஜெயின், விருத்தாச்சலம் மாவட்ட கல்வி அலுவலர் சுகப்பிரியா மற்றும் தீயணைப்பு துறை அலுவலர் மணி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • மாவட்டம் முழுவதும் இருந்து கொண்டுவரப்பட்ட பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன
    • முறையாக இல்லாத பள்ளி வாகனங்களுக்கு ஒரு வாரம் அவகாசம் வழங்கப்பட்டது.

    காஞ்சிபுரம்:

    தமிழகம் முழுவதும் கடந்த 13ஆம் தேதி முதல் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் செயல்பட தொடங்கியுள்ளன. தனியார் பள்ளிகளுக்கு மாணவ, மாணவிகளை ஏற்றி செல்லும் பள்ளி பேருந்துகளை ஆண்டுதோறும் வட்டார போக்குவரத்து துறை சார்பில் ஆய்வு செய்வது வழக்கம்.

    அதன்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 46 தனியார் பள்ளிகளில் இயக்கப்படும் 272 பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யும் பணி இன்று காஞ்சிபுரம் வெள்ளைகேட் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

    மாவட்டம் முழுவதும் இருந்து கொண்டுவரப்பட்ட பள்ளி வாகனங்களை காஞ்சிபுரம் வருவாய்க் கோட்டாட்சியர் கனிமொழி, வட்டார போக்குவரத்து அலுவலர் தினகரன், தலைமையிலான குழுவினர் பள்ளி வாகனங்கள் முறையாக பராமரிக்கப்படுகின்றனவா, வாகன இன்சுரன்ஸ், வாகன ஓட்டுநர் உரிமம், வாகன உரிமம், பாதுகாப்பு உபகரணங்கள், தீயணைப்பு கருவிகள், அவசர வழி, உள்ளிட்டவைகளை முறையாக உள்ளதா என ஆய்வு செய்தனர்.

    ஆய்வின்போது முறையாக இல்லாத பள்ளி வாகனங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு ஒரு வார காலத்திற்குள் சரி செய்து கொண்டு வருமாறு அனுப்பி வைக்கப்பட்டது.

    • கோவை மாவட்டத்தில் தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் நடந்தது.
    • பள்ளி வாகனங்களை இயக்கும் டிரைவர்களுக்கு பாதுகாப்பாக வாகனங்களை எவ்வாறு இயக்க வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    கோவை:

    பள்ளி, கல்வி நிலையங்கள் ஆண்டு விடுமுறை காலம் முடிந்து 2022-2023-ம்கல்விஆண்டு தொடங்கி உள்ளது.

    சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு 2012ன் படி, கோவை மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி வாகனங்களில் பாதுகாப்பு வசதிகள் குறித்து ஆய்வு செய்யப்பட வேண்டும்.

    அதன்படி கோவை மாவட்டத்தில் தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் நடந்தது. இதில் மாவட்டத்தில் உள்ள 230 பள்ளிகளைச் சேர்ந்த 1,265 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டது.

    இந்த ஆய்வை மாவட்ட கலெக்டர் சமீரன் தொடங்கி வைத்தார். அப்போது, பள்ளி வாகனங்களை இயக்கும் டிரைவர்களுக்கு பாதுகாப்பாக வாகனங்களை எவ்வாறு இயக்க வேண்டும். போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் உள்ளிட்டவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    மேலும் ஆய்வுக்காக வந்திருந்த வாகன டிரைவர்களுக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. பள்ளி வாகனங்களில் அவசரகால வழியுள்ளதா? முதலுதவி பெட்டி உள்ளதா? தீயணைப்பான் 2 உள்ளதா? கண்காணிப்பு காமிராவில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டுள்ளதா? வேக கட்டுப்பாட்டு கருவி உள்ளதா? வாகனங்களில் மாணவர்கள் ஏறுவதற்கு வசதியாக தரையிலிருந்து 30 சென்டி மீட்டர் உயரத்தில் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் மாநகர போக்குவரத்து துணை கமிஷனர் மதிவாணன், மாவட்ட போக்குவரத்து இணை ஆணையர் செந்தில்நாதன், உதவி கமிஷனர் சரவணன், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் சத்தியகுமார் ,சிவகுருநாதன் பாலமுருகன் மற்றும் போக்குவரத்து இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.

    ×