search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உளுந்தூர்பேட்டை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில்  தனியார் பள்ளி வாகனங்களை கோட்டாட்சியர் ஆய்வு
    X

    உளுந்தூர்பேட்டை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் தனியார் பள்ளி வாகனங்களை கோட்டாட்சியர் ஆய்வு

    • உளுந்தூர்பேட்டை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் தனியார் பள்ளி வாகனங்களை கோட்டாட்சியர் ஆய்வு செய்தார்.
    • பெற்றோர்கள் உங்களை நம்பி தான் மாணவர்களை அனுப்பி வைக்கிறார்கள் அது கருத்தில் கொண்டு பேருந்து பாதுகாப்பாக இயக்க வேண்டும் என்று கூறினார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட் டம் உளுந்தூர்பேட்டை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட 50-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளி வாகனங்களை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் திருக் கோவிலூர் கோட்டாட்சி யர் ஆர்.டி.ஓ. யோக ஜோதி ஆய்வு மேற்கண்டார். அப்போது பள்ளி வாக னங்களை மேல் கூரை டயர் அனைத்தும் சரி வர உள்ளதாக இருக்கிறதா அவசர கால கதவுகள் உள்ளதா முதலுதவி மருத்துவ வசதிகள் இருக்க வேண்டும் விபத்து ஏற்படும் நேரத்தில் முதலுதவி எப்படி பயன்படுத்த வேண்டும் என்றும் கூறி ஆய்வு மேற்கொண்டு ஓட்டுனர்களுக்கு மெதுவாக செல்ல வேண்டும் மாணவர்களை தவிர வேறு யாரும் ஏற்றிச் செல்லக் கூடாது.

    மாணவர்களை தங்கள் பிள்ளைகள் போல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறி மோட்டார் வாகன சட்டத்திற்கு உட்பட்டு வாகனங்களை இயக்க வேண்டும் கண்டிப்பாக ஓட்டுநர்கள் உரிமம் மற்றும் வாகனத்தின் ஆர்.சி. புக் இன்சூரன்ஸ் முறையாக அந்தந்த வாகனங்களில் இருக்க வேண்டும் என்று கூறியதோடு பெற்றோர்கள் உங்களை நம்பி தான் மாணவர்களை அனுப்பி வைக்கிறார்கள் அது கருத்தில் கொண்டு பேருந்து பாதுகாப்பாக இயக்க வேண்டும் என்று கூறினார். நிகழ்ச்சிக்கு உளுந்தூர்பேட்டை வட்டார போக்குவரத்து அலுவலர் செந்தூர் வேல் உளுந்தூர்பேட்டை டி.எஸ்.பி. மகேஷ், தாசில்தார் கோபாலகிருஷ்ணன் மோட்டார் வாகன ஆய்வாளர் முருகவேல், மாவட்ட கல்வி அலுவலர் பொறுப்பு கலைச்செல்வன், தீயணைப்பு நிலைய அதிகாரி சக்கரவர்த்தி மற்றும் ஓட்டுநர்கள் ஆய்வின் போது இருந்தனர்.

    Next Story
    ×