search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இரணியல் பள்ளி வாகனங்கள் உட்பட 69 வாகன ஓட்டிகளுக்கு அபராதம்
    X

    இரணியல் பள்ளி வாகனங்கள் உட்பட 69 வாகன ஓட்டிகளுக்கு அபராதம்

    • திங்கள் நகர் சுற்று வட்டார பகுதிகளில் காலை மாலை வேளைகளில் போக்குவரத்து நெருக்கடி அதிக அளவில் உள்ளன
    • அதிகமாக மாணவர்கள் ஏற்றி வந்த 3 பள்ளி வாகனங்கள், தலை கவசம் அணியாத பின்னாடி இருப்பினும் தலை கவசம் அணியாத 30 மோட்டார் சைக்கிள்கள்

    கன்னியாகுமரி :

    அனுமதிக்க பட்ட நபர்களை விட அதிகமாக பள்ளி மாணவர்களை ஏற்றி வந்த பள்ளி வாகனங்கள் உட்பட 69 வாகனங்களுக்கு குளச்சல் போக்குவரத்து காவல்துறை அதிகாரி வில்லியம் அவர்களால் திங்கள் நகர் ரவுண்டானா அருகே வைத்து அபராதம் விதிக்கப்பட்டது.

    திங்கள் நகர் சுற்று வட்டார பகுதிகளில் காலை மாலை வேளைகளில் போக்குவரத்து நெருக்கடி அதிக அளவில் உள்ளன. இதனை அடுத்து குளச்சல் போக்குவரத்து காவல்துறை இன்ஸ்பெக்டர் வில்லியம் மற்றும் போலீசார் திங்கள் நகர் ரவுண்டானா அருகே அதிரடி சோதனை நடத்தினர்.

    அப்போது அதிகமாக மாணவர்கள் ஏற்றி வந்த 3 பள்ளி வாகனங்கள், தலை கவசம் அணியாத பின்னாடி இருப்பினும் தலை கவசம் அணியாத 30 மோட்டார் சைக்கிள்கள், ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனங்கள் இயக்கம் செய்த 3 நபர்கள், காப்பீடு இல்லாமல் 2 நபர்கள் செல்போன் பேசி கொண்டு வாகனம் ஓட்டுதல், கார்களில் கறுப்பு நிற காகிதம் ஒட்டியது போன்ற போக்குவரத்து விதிமுறைகள் மீறல்களுக்கு என்று மொத்தம் 69 வாகன உரிமையாளர் மீது அபராதம் விதிக்கப்பட்டது.

    Next Story
    ×