search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பனியன் நிறுவனம்"

    • கைவசம் உள்ள உள்ளூர் தொழிலாளர் மற்றும் வடமாநில தொழிலாளரை கொண்டு கடந்த வாரம் முழுவதும் பணிகளை செய்தனர்.
    • ஜாப் ஒர்க் நிறுவனங்களும் தங்கள் இயக்கத்தை தொடங்கும் என பின்னலாடை உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களில் வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் உட்பட 6 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர். தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகையை தங்கள் சொந்த ஊரில் கொண்டாடுவதையே வெளி மாவட்ட மக்கள் விரும்புகின்றனர்.

    இந்நிலையில் தீபாவளி பண்டிகைக்கு கடந்த 10-ந்தேதியே புறப்பட்டு சென்றனர். பின்னலாடை நிறுவனங்களில் வழக்கம் போல் அவசரகதியில் முடிக்க வேண்டிய ஆர்டர்கள் இந்த முறை இல்லை. இயக்கம் சீராக இருப்பதால் நிறுவனங்களும் தாராளமாக 10 நாட்கள் வரை விடுமுறை அளித்தன. வடமாநில தொழிலாளர்களும் சொந்த ஊர் சென்றனர்.

    நிர்வாகம் மற்றும் அலுவலக பணியாளர்கள் ஏற்கனவே பணிக்கு வந்த நிலையில், கைவசம் உள்ள உள்ளூர் தொழிலாளர் மற்றும் வடமாநில தொழிலாளரை கொண்டு கடந்த வாரம் முழுவதும் பணிகளை செய்தனர்.

    விடுமுறையில் சென்ற தொழிலாளர்கள் பலர் இன்று திருப்பூர் திரும்பியுள்ளதால் பின்னலாடை நிறுவனங்கள் இயல்பான இயக்கத்தை தொடங்கி உள்ளன. ஜாப் ஒர்க் நிறுவனங்களும் தங்கள் இயக்கத்தை தொடங்கும் என பின்னலாடை உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.மேலும் தொழிலாளர்கள் திரும்பிவிட்டதால் இன்று முதல் அனைத்து கடைகளும் விடுமுறை முடிந்து பரபரப்பான இயக்கத்தை தொடங்கின.

    • இந்தியாவின் பின்னலாடை மையமான திருப்பூர், தற்போது பொருளாதார மந்த நிலையில் உள்ளது.
    • நிலுவையில் இருக்கும் மின்கட்டணத்துக்கான வட்டி அபராத தொகையை ரத்து செய்து மேலும் நிலுவையில் உள்ள மின் கட்டணத்தை செலுத்த தவணை வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.

    திருப்பூர்,ஜூலை.24-

    திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க அலுவலக திறப்பு விழாவுக்கு தமிழக தொழில்துறை அமைச்சர் ராஜா வந்திருந்தார். விழாவில், அனைத்து பனியன் தொழில் அமைப்புகள் சார்பில் பொது கோரிக்கைகள் அடங்கிய மனு அளிக்கப்பட்டது.

    தொழில் அமைப்பினர் அளித்த கோரிக்கை மனு விவரம் வருமாறு:-

    இந்தியாவின் பின்னலாடை மையமான திருப்பூர், தற்போது பொருளாதார மந்த நிலையில் உள்ளது. திருப்பூரின் பின்னலாடை ஏற்றுமதி சரிந்துள்ளது. கடந்த ஆண்டு நூல்விலை அபரிமிதமாக உயர்ந்ததால், பின்னலாடை தொழில் பாதிக்கப்பட்டது.

    வங்கதேசம், வியட்நாம், சீனா போன்ற நாடுகளுடன் போட்டியிட்டு ஏற்றுமதி ஆர்டர்களைப் பெற முடியவில்லை. பின்னலாடை உற்பத்தி மட்டுமல்லாது, நிட்டிங், சாயத்தொழில், காம்பாக்டிங், ரைசிங் போன்ற சார்புடைய தொழில்களும் பாதித்தன.திருப்பூரில் இயங்கும் நிறுவனங்களில் 75 சதவீதம் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள்.

    சங்கிலி தொடர் போன்ற ஜாப் ஒர்க் சேவை கிடைத்தால் மட்டுமே தரமான ஆடைகளை தயாரிக்க முடியும். திருப்பூர் ஆடைத் தொழிலின் நிலைமை மாறுபட்டுள்ளதால் தேவையான உள்கட்டமைப்பு, மின்சாரம், தண்ணீர் போன்ற வசதிகள் சலுகை விலையில் வழங்கப்பட வேண்டும்.

    ரஷ்யா - -உக்ரைன் போர் காரணமாக ஜவுளி உற்பத்தி நடவடிக்கை மந்தமாகி விட்டது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில், பொருளாதாரம் மந்தமாக இருப்பதால் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகிறோம். இக்கட்டான இந்நிலையில் தமிழக அரசு மின் கட்டணத்தை உயர்த்தியது கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

    தொழில்நிலை மந்தமாக இருக்கும் போது மின்கட்டணம் உயர்ந்தது ஸ்தம்பிக்க செய்துள்ளது. நிலை கட்டண உயர்வும், பீக் ஹவர் கட்டணமும், தொழிலை சரிவு நிலைக்கு தள்ளிவிடும். மின்சாரத்தை பயன்படுத்தாத நேரத்திலும் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. மீண்டும் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளது. எனவே மின் கட்டணத்தை குறைத்து தொழில் சீராக இயங்க உதவிட வேண்டும். தமிழக அரசு கோரிக்கையை பரிசீலித்து திருப்பூர் பனியன் தொழிலை பாதுகாக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

    விசைத்தறிகள்

    கடந்த ஆண்டு செப்டம்பர் 10-ந்தேதி அனைத்து வகை மின்கட்டணமும் உயர்த்தப்பட்டது. இதில் விசைத்தறிகளுக்கு 3ஏ-2 பிரிவின் கீழ் யூனிட்டுக்கு 4.50 ரூபாயில் இருந்து 6.40 ரூபாயாக உயர்த்தப்பட்டது.இதனால் அதிர்ச்சியடைந்த விசைத்தறியாளர்கள், மின்கட்டணத்தை குறைக்க வேண்டும், அதுவரை மின்கட்டணம் செலுத்தப்போவதில்லை எனக்கூறி பல கட்ட போராட்டம் நடத்தினர். இது தொடர்பாக மின்வாரிய அதிகாரிகள் மற்றும் துறை அமைச்சர்களுடன் விசைத்தறியாளர் சங்கத்தினர் நடத்திய பலகட்ட பேச்சுவார்த்தையின் விளைவாக கடந்த மார்ச் 3-ந்தேதி மின் கட்டணத்தில் யூனிட்டுக்கு 1.10 ரூபாய் குறைக்கப்பட்டது. இதற்கிடையில் விசைத்தறி யாளர்கள், மின் கட்டணம் குறைப்பு தொடர்பாக மாநில முதல்வருக்கு மனு வழங்கி வருகின்றனர். இதற்காக பிரத்யேகமாக மனு ஒன்றையும் அச்சடித்துள்ளனர்.

    அந்த மனுவில் கூறியுள்ளதாவது:-

    விசைத்தறிகளுக்கு விலையில்லா மின்சாரம் போக, அனைத்து சிலாப்களுக்கும் யூனிட்டுக்கு 70 பைசா மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது என அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டது. ஆனால் மின் கட்டண பயன்பாடு அடிப்படையில் 70 பைசாவில் இருந்து 1.40 ரூபாய் வரை யூனிட்டுக்கு மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் 10 முதல் கடந்த மார்ச் முதல் தேதி வரை கூடுதல் கட்டணமே வசூலிக்கப்பட்டுள்ளது.

    எனவே அனைத்து சிலாப்களுக்கும், யூனிட்டுக்கு 70 பைசா மட்டுமே உயர்த்த வேண்டும். நிலுவையில் இருக்கும் மின்கட்டணத்துக்கான வட்டி அபராத தொகையை ரத்து செய்ய வேண்டும். நிலுவை மின் கட்டணத்தை செலுத்த தவணை வசதி ஏற்படுத்தி தர வேண்டும். ஆண்டுக்கு 6 சதவீதம் மின் கட்டண உயர்வு என்பதில் இருந்து விசைத்தறிகளுக்கு விலக்களிக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    • ஏ.டி.எம்., எந்திரத்தில் ரூ.10 ஆயிரம் பணத்தை எடுத்து கொண்டு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
    • இரண்டு பைக்கில் வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் வழி மறித்தனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் பெருமாநல்லுார் அருகேயுள்ள வட்டாலபதி கிராமம், கருணாம்பதியை சேர்ந்தவர் பிரபு (வயது 44), பனியன் தொழிலாளி.இவர் பெருமாநல்லுாரில் உள்ள ஏ.டி.எம்., எந்திரத்தில் ரூ.10 ஆயிரம் பணத்தை எடுத்து கொண்டு தனது மோட்டார் சைக்கிளில் குன்னத்தூர் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். கொண்டத்துக்காளியம்மன் கோவில் அருகே சென்ற போது இரண்டு பைக்கில் வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் பிரபுவை வழி மறித்தனர்.

    பின்னர் மறைத்து வைத்திருந்தகத்தியை காட்டி மிரட்டி அவரிடமிருந்த, ரூ.10 ஆயிரம் பணத்தை பறித்து கொண்டு தப்பினர்.இதனால் அதிர்ச்சி அடைந்த பிரபு, பெருமாநல்லூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து, பணம் பறிப்பில் ஈடுபட்ட ஈட்டி வீரம்பாளையம் ஊராட்சி லட்சுமி நகரை சேர்ந்த அரவிந்த் (23), சிவசங்கர் (22), முட்டியங்கிணறு பகுதியை சேர்ந்த சாரதி,(21), அணைப்பதியை சேர்ந்த பரசுராமன், (24) ஆகிய நான்கு பேரை கைது செய்தனர் மேலும் அவர்களிடமிருந்து இரண்டு மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர்.

    • ரூ.5 கோடி குறைந்த வட்டியில் வங்கியில் கடன் பெற்றுக்கொடுப்பதாக தெரிவித்தனர்.
    • கடன் கிடைக்கா விட்டால் ஆவணசெ லவுக்கான பணத்தை திருப்பி கொடுப்பதாக கூறினார்கள்.

    திருப்பூர் :

    திருப்பூர் பல்லடம் ரோட்டை சேர்ந்தவர் சரவணன் (வயது37). பனியன் நிட்டிங் நிறுவனம் வைத்துள்ளார். இவர் திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதில்தனக்கு தெரிந்த கணபதிபாளையத்தை சேர்ந்த ராஜா (44),திண்டு க்கல்லை சேர்ந்த பாபு (53) ஆகியோர் தொழில் நிமித்தமாக ரூ.5 கோடி குறைந்த வட்டியில் வங்கியில் கடன் பெற்றுக்கொடுப்பதாக தெரிவித்தனர். மேலும் ஆவண செலவுக்காக ரூ.20 லட்சம் கேட்டனர். நான் ரூ.19 லட்சத்து 66 ஆயிரத்தை வங்கிக்கணக்கில் அவர்களுக்கு கடந்த பிப்ரவரி மாதம்அனுப்பி வைத்தேன். கடன் கிடைக்கா விட்டால் ஆவணசெ லவுக்கான பணத்தை திருப்பி கொடுப்பதாக கூறினார்கள்.அதன்பிறகு அவர்கள் கடன் தொகையை பெற்றுக்கொடுக்கவில்லை.

    நான் அனுப்பி வைத்த பணத்தையும் திருப்பி க்கொடுக்காமல் ஏமாற்றி, எனக்கு கொலைமி ரட்டல் விடுத்தனர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியு ள்ளார். புகாரை பெற்ற போலீசார் ராஜா, பாபு ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • இருதரப்புக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.
    • பனியன் நிறுவனத்துக்குள் கட்டை, கத்தி ஆகியவை எடுத்து கொண்டு அத்துமீறி நுழைந்தனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் ராதா நகரை சேர்ந்தவர் அபிஷேக் ( வயது 21). பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது நிறுவனத்தில் வேலை செய்யும் தமிழ்செல்வம் என்பவர் பனியன் நிறுவனத்துக்கு வெளியே நின்றிருந்தார். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வசந்த், ரமணா, முரளி ஆகியோர் தமிழ்செல்வத்தை உரசுவது போல் சென்றனர்.

    இதனால் இருதரப்புக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. அதன்பின் மூவரும் தனது நண்பர்கள் சிலரை அழைத்து பனியன் நிறுவனத்துக்குள் கட்டை, கத்தி ஆகியவை எடுத்து கொண்டு அத்துமீறி நுழைந்தனர். வாக்குவாதம் தொடர்பாக, அங்கிருந்தவர்களை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.

    இதுதொடர்பான புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த திருப்பூர் வடக்கு போலீசார் கேசவன், ரமணா, அருண்குமார், மோகன்ராஜ், தனுஷ்,வசந்த், சந்துரு, முரளி என 8 பேர் கொண்ட கும்பலை கைது செய்தனர்.

    • நம்மவர்கள் வதந்தி வீடியோக்கள், புகைப்படங்கள் மற்றும் செய்திகளை யாருக்கும் பகிர வேண்டாம்.
    • குறைகள் ஏதேனும் இருந்தால் பகிரங்கமாக தெரியப்படுத்துங்கள் என போலீஸார் தெரியப்படுத்தி வருகின்றனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகரில் வடமாநிலத்தவர்களை தாக்குவதாக வதந்திகள் சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், பிஹார் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த அரசு குழுவினர் இரண்டு நாட்கள் ஆய்வு செய்து, களத்தின் உண்மை நிலையை அங்குள்ளவர்கள் தெரிந்துகொள்ளும் வகையில் வீடியோ பதிவெடுத்து சென்றனர். அதன் ஒருபகுதியாக தொழிலாளார்கள் பலரும், 'நாங்கள் தமிழகத்தில் அமைதியாக வாழ்ந்து வருகிறோம். எங்களுக்கு யாராலும் பிரச்சினை இல்லை. குடும்பத்தினர், சமூகவலைதளங்களில் பரப்படுப்படும் வதந்திகளை நம்பவேண்டாம். எங்களுக்கு மிகவும் அமைதியான வாழ்க்கையை தமிழ்நாடு தந்துள்ளது. இங்கு யாராலும் எந்த பிரச்சினையும் இல்லை. நம்மவர்கள் வதந்தி வீடியோக்கள், புகைப்படங்கள் மற்றும் செய்திகளை யாருக்கும் பகிர வேண்டாம் என பதிவிட்டு வருகின்றனர்.

    அதன் ஒருபகுதியாக திருப்பூர் மாநகரில் உள்ள ஏராளமான பனியன் நிறுவனங்களில் வடமாநிலத் தொழிலாளர்கள் அதிகளவில் பணியாற்றி வருவதால் அவர்களுக்கு தொடர் விழிப்புணர்வை மாநகர் மற்றும் மாவட்ட போலீஸார் மேற்கொண்டுள்ளனர்.

    அதன் ஒருபகுதியாக 2 மாநிலங்களை சேர்ந்த அதிகாரிகள் குழுவுக்கு பின்னர், தற்போது மாநகர் எல்லைக்கு உட்பட்ட நிறுவனங்களில் வடமாநிலத் தொழிலாளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். அப்போது அவர்களிடம் குறைகள் ஏதேனும் இருந்தால் பகிரங்கமாக தெரியப்படுத்துங்கள் என போலீஸார் தெரியப்படுத்தி வருகின்றனர்.

    அதேபோல் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணி ப்பாளர் கோ.சசாங் சாய் பல்லடம் காவல் எல்லைக்கு உட்பட்ட அருள்புரம் பகுதியில் உள்ள ஏற்றுமதி நிறுவனத்தில் அங்கு பணிபுரியும் 2000 வடமாநிலத் தொழிலாளர்களுக்கு சமூக வலைதளங்களில் சமீப நாட்களாக பரவிய வதந்தி தொடர்பாக நேற்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அதேபோல் 24 மணிநேரமும் அமைக்கப்பட்டுள்ள காவல்துறையின் உதவியை பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ள தனி கட்டுப்பாட்டு அறையின் தொடர்பு எண்களை தொழிலாள ர்களுக்கு வழங்கினார். இதனால் தொழிலா ளர்கள் நிம்மதி அடைந்திரு ப்பதாக தெரிவித்தனர். வடமாநிலத் தொழிலா ளர்களின் பாதுகாப்பு க்காக ஏற்படுத்தப்ப ட்டுள்ள தனிப்பிரிவு கட்டுப்பாட்டு அறை தொடர்பு எண்களான 94981-01320, 0421-2970017 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தப்ப ட்டுள்ளது.

    • தனிப்படை போலீசார் பனியன் நிறுவனத்திற்கு சென்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர்.
    • தலைமறைவாக இருந்த நாகேந்திரன் மற்றும் ஆறுமுகத்தை போலீசார் கைது செய்தனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மங்கலம் சாலையில் தனியார் பனியன் உற்பத்தி நிறுவனம் உள்ளது. இங்கு 700-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். பனியன் உற்பத்திக்கான துணிகளை வைப்பதற்காக நிறுவன வளாகத்தில் குடோன் உள்ளது. அங்கு சாயமேற்றப்பட்ட பனியன் துணிகள் வைக்கப்பட்டு இருந்தது.

    இந்தநிலையில் கடந்த சில மாதங்களாக இந்நிறுவனத்தில் உற்பத்தி செய்யப்படும் பனியன்களுக்கும், அதற்காக வாங்கி வைக்கப்பட்டு இருந்த துணிகளுக்கும் இடையே வித்தியாசம் ஏற்பட்டு வந்தது. குறிப்பாக ஒரு பனியன் ரோலில் இருந்து 50 பனியன்கள் வரை தயாரிக்கலாம். ஆனால் சில மாதங்களாக 20 முதல் 25 பனியன்கள் வரையே தயாரிக்க முடிந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பனியன் நிறுவனத்தினர் ஆய்வு செய்த போது குடோனில் இருந்த பனியன் துணிகள் திருட்டு போய் இருப்பது தெரியவந்தது.

    இது குறித்து அந்நிறுவனத்தின் மேலாளர் திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். இதையடுத்து திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு உத்தரவின் பேரில் உதவி கமிஷனர் கார்த்திக்கேயன் தலைமையில் இன்ஸ்பெக்டர் ஜமுனா, போலீஸ்காரர்கள் பிரசாந்த், பிரகாஷ், ராஜசேகர் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

    தனிப்படை போலீசார் பனியன் நிறுவனத்திற்கு சென்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர். மேலும் பனியன் நிறுவனம் மற்றும் குடோனில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்த போது, அதில் அந்நிறுவனத்தின் குடோன் மேற்பார்வையாளராக பணியாற்றி வந்த கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரை சேர்ந்த நாகேந்திரன் (வயது 51) என்பவர் அதிகாலை நேரத்தில் குடோனில் இருந்த பனியன் உற்பத்தி துணிகளை திருடி வாகனத்தில் ஏற்றி செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.

    இதைத்தொடர்ந்து நாகேந்திரனிடம் போலீசார் விசாரிக்க முயன்ற போது அவர் திடீரென தலைமறைவானார். தொடர்ந்து அவரை போலீசார் தேடி வந்தனர். மேலும் நாகேந்திரன் திருடிய பனியன் துணிகளை திருப்பூர் புதிய பஸ் நிலையம் அருகே நிறுவனம் நடத்தி வந்த ஆறுமுகம் என்பவரிடம் விற்பனை செய்து வந்துள்ளார். ரூ.600 மதிப்புள்ள துணியை ஆறுமுகத்திற்கு ரூ.200க்கு விற்பனை செய்துள்ளார். சுமார் 7300 கிலோ வரையிலான துணிகளை நாகேந்திரன் திருடி விற்றுள்ளார். அதன் மதிப்பு ரூ.50 லட்சம் இருக்கும்.

    இந்தநிலையில் தலைமறைவாக இருந்த நாகேந்திரன் மற்றும் ஆறுமுகத்தை போலீசார் கைது செய்தனர். மேலும் நாகேந்திரன் விற்பனைக்கு வைத்திருந்த ரூ.20 லட்சம் மதிப்புள்ள பனியன் துணிகள் மற்றும் வாகனத்தை பறிமுதல் செய்தனர். பனியன் துணிகளை திருடி விற்றதில் கிடைத்த ரூ.22 லட்சம் பணத்தை நாகேந்திரன் வங்கியில் டெபாசிட் செய்திருந்தார். அதனையும் போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து நாகேந்திரன், ஆறுமுகத்திடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பனியன் நிறுவனத்தில் மேற்பார்வையாளர் துணிகளை திருடி விற்ற சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    • இரண்டு துணி பண்டல்களை திருட்டுத்தனமாக காரில் ஏற்ற முயன்றுள்ளனர்.
    • போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள ஏ.பி., நகரில் தனியாருக்கு சொந்தமான பனியன் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தில் பொள்ளாச்சி, களியாபுரத்தைச் சேர்ந்த தர்மராஜ் (வயது 36) என்பவர் சூப்பர்வைசராக வேலை செய்து வந்தார்.

    விருதுநகர் மாவட்டம், கட்டளைபட்டியை சேர்ந்த முனியாண்டி (49) என்பவர் வேன் டிரைவராக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று பனியன் துணி பண்டல்களை இறக்கி கொண்டிருந்தபோது இரண்டு துணி பண்டல்களை திருட்டுத்தனமாக காரில் ஏற்ற முயன்றுள்ளனர். இதனை அப்பகுதியில் இருந்தவர்கள் கண்டுபிடித்து நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்தனர். உடனடியாக தர்மராஜ், முனியாண்டியை பிடித்து பல்லடம் போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்து நிறுவனத்தின் மேலாளர் முத்துகிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில் தர்மராஜ், முனியாண்டி ஆகியோரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் தடுப்புச் சுவற்றில் மோதி கீழே விழுந்தார்.
    • அக்கம் பக்கம் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள குன்னாங்கல்பாளையம் பிரிவில் பல்லடம்- திருப்பூர் மெயின் ரோட்டில், நேற்றுமுன்தினம் மாலை மோட்டார் சைக்கிளில் வந்த சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் ரோட்டின் நடுவில் வைக்கப்பட்டிருந்த தடுப்புச் சுவற்றில் எதிர்பாராத விதமாக மோதி கீழே விழுந்தார்.

    பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கம் உள்ளவர்கள் மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். போலீசார் விசாரணையில் மோட்டார் சைக்கிள் விபத்தில் பலியானவர் திருச்சி மாவட்டம் லால்குடியைச் சேர்ந்த ராமன் மகன் பிரபாகரன்(வயது 41) என்று தெரியவந்தது. அவர் பல்லடம் அருகே உள்ள அருள்புரம் அண்ணாநகர் பகுதியில் தங்கி கொண்டு திருப்பூர் பனியன் கம்பெனிக்கு வேலைக்கு சென்று வந்தபோது விபத்து ஏற்பட்டது தெரியவந்துள்ளது. இதையடுத்து பிரபாகரன் மனைவி ஜெயந்தி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விபத்து குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • ஜனாதிபதியின் கவுரவக்கொடி தமிழக போலீசுக்கு வழங்கப்பட்டது.
    • முதல் கட்டமாக 500 ‘பேட்ஜ்’ தயார் செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    ஜனாதிபதியின் கவுரவக்கொடி தமிழக போலீசுக்கு வழங்கப்பட்டது. இதன் நினைவாக, டி.ஜி.பி., முதல் போலீசார் வரை என, அனைவருக்கும், தமிழக அரசின் பதக்கம் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.ஜனாதிபதியின் கவுரவக்கொடி கிடைத்து–ள்ளதால், அனைத்து போலீசாரும், சீருடையிலும், இனி ஜனாதிபதியின் கொடியான 'நிஸான்' என்ற சின்னம் இடம் பெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இதற்காக, 'லோகோ' இடம்பெற்ற 'பேட்ஜ்' திருப்பூரிலும் தயாரிக்கப்ப–டுகிறது.இங்குள்ள 'எடர்நல் டெக்ஸ்டைல்ஸ்' மற்றும் 'ஷைன் டெக்ஸ்டைல்ஸ்' ஆகிய இடங்களில் தயாராகி வருகிறது. முதல் கட்டமாக, 500 'பேட்ஜ்' தயார் செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து போலீஸ்துறை நவீனமாயமாக்கல் கூடுதல் டி.ஜி.பி., சஞ்சய்குமார் கூறியதாவது:-

    டி.ஜி.பி., உத்தரவின் பேரில், 'லோகோ' தயாரிக்கும் பணி மேற்கொ–ள்ளப்பட்டது. பல 'லோகோ' தயாரிப்பாளர்களை அணுகி, மாதிரி தயார் செய்ய கூறினோம்.

    மும்பை, டில்லியில், தலா இருவர், சென்னையில் ஒருவர் மற்றும் திருப்பூரில் நால்வர் மாதிரி தயார் செய்தனர். அதில், தரம், கலர் உள்ளிட்ட அனைத்தையும் கவனத்தில் கொண்டு, சரியான 'லோகோ'வை முடிவு செய்தோம். 'லோகோ' வில் இடம்பெற்றுள்ள கலர், பஞ்சாப், மலர்கோட்லாவில் தயார் செய்யப்பட்டு, பின், இங்கு பேட்ஜ் தயார் செய்யப்பட்டது. 'லோகோ'வில், ஒன்பது கலர் இடம்பெற்றுள்ளது. இனி, மொத்தமாக ஊர்களுக்கு பிரித்து வழங்கி 'பேட்ஜ்' செய்யும் பணி நடக்க உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

    ×