search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வடமாநிலத் தொழிலாளர்கள் குறித்து வதந்தி விவகாரம் : பனியன் நிறுவனங்களில் போலீசார் தொடர் விழிப்புணர்வு
    X

    வடமாநில தொழிலாளர்களிடையே திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசியபோது எடுத்தபடம்.

    வடமாநிலத் தொழிலாளர்கள் குறித்து வதந்தி விவகாரம் : பனியன் நிறுவனங்களில் போலீசார் தொடர் விழிப்புணர்வு

    • நம்மவர்கள் வதந்தி வீடியோக்கள், புகைப்படங்கள் மற்றும் செய்திகளை யாருக்கும் பகிர வேண்டாம்.
    • குறைகள் ஏதேனும் இருந்தால் பகிரங்கமாக தெரியப்படுத்துங்கள் என போலீஸார் தெரியப்படுத்தி வருகின்றனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகரில் வடமாநிலத்தவர்களை தாக்குவதாக வதந்திகள் சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், பிஹார் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த அரசு குழுவினர் இரண்டு நாட்கள் ஆய்வு செய்து, களத்தின் உண்மை நிலையை அங்குள்ளவர்கள் தெரிந்துகொள்ளும் வகையில் வீடியோ பதிவெடுத்து சென்றனர். அதன் ஒருபகுதியாக தொழிலாளார்கள் பலரும், 'நாங்கள் தமிழகத்தில் அமைதியாக வாழ்ந்து வருகிறோம். எங்களுக்கு யாராலும் பிரச்சினை இல்லை. குடும்பத்தினர், சமூகவலைதளங்களில் பரப்படுப்படும் வதந்திகளை நம்பவேண்டாம். எங்களுக்கு மிகவும் அமைதியான வாழ்க்கையை தமிழ்நாடு தந்துள்ளது. இங்கு யாராலும் எந்த பிரச்சினையும் இல்லை. நம்மவர்கள் வதந்தி வீடியோக்கள், புகைப்படங்கள் மற்றும் செய்திகளை யாருக்கும் பகிர வேண்டாம் என பதிவிட்டு வருகின்றனர்.

    அதன் ஒருபகுதியாக திருப்பூர் மாநகரில் உள்ள ஏராளமான பனியன் நிறுவனங்களில் வடமாநிலத் தொழிலாளர்கள் அதிகளவில் பணியாற்றி வருவதால் அவர்களுக்கு தொடர் விழிப்புணர்வை மாநகர் மற்றும் மாவட்ட போலீஸார் மேற்கொண்டுள்ளனர்.

    அதன் ஒருபகுதியாக 2 மாநிலங்களை சேர்ந்த அதிகாரிகள் குழுவுக்கு பின்னர், தற்போது மாநகர் எல்லைக்கு உட்பட்ட நிறுவனங்களில் வடமாநிலத் தொழிலாளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். அப்போது அவர்களிடம் குறைகள் ஏதேனும் இருந்தால் பகிரங்கமாக தெரியப்படுத்துங்கள் என போலீஸார் தெரியப்படுத்தி வருகின்றனர்.

    அதேபோல் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணி ப்பாளர் கோ.சசாங் சாய் பல்லடம் காவல் எல்லைக்கு உட்பட்ட அருள்புரம் பகுதியில் உள்ள ஏற்றுமதி நிறுவனத்தில் அங்கு பணிபுரியும் 2000 வடமாநிலத் தொழிலாளர்களுக்கு சமூக வலைதளங்களில் சமீப நாட்களாக பரவிய வதந்தி தொடர்பாக நேற்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அதேபோல் 24 மணிநேரமும் அமைக்கப்பட்டுள்ள காவல்துறையின் உதவியை பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ள தனி கட்டுப்பாட்டு அறையின் தொடர்பு எண்களை தொழிலாள ர்களுக்கு வழங்கினார். இதனால் தொழிலா ளர்கள் நிம்மதி அடைந்திரு ப்பதாக தெரிவித்தனர். வடமாநிலத் தொழிலா ளர்களின் பாதுகாப்பு க்காக ஏற்படுத்தப்ப ட்டுள்ள தனிப்பிரிவு கட்டுப்பாட்டு அறை தொடர்பு எண்களான 94981-01320, 0421-2970017 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தப்ப ட்டுள்ளது.

    Next Story
    ×