search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரூ. 5 கோடி கடன் வாங்கி தருவதாக கூறி பனியன் நிறுவன உரிமையாளரிடம் ரூ.19 லட்சம் மோசடி - 2 பேருக்கு போலீஸ் வலைவீச்சு
    X

    கோப்புபடம்.

    ரூ. 5 கோடி கடன் வாங்கி தருவதாக கூறி பனியன் நிறுவன உரிமையாளரிடம் ரூ.19 லட்சம் மோசடி - 2 பேருக்கு போலீஸ் வலைவீச்சு

    • ரூ.5 கோடி குறைந்த வட்டியில் வங்கியில் கடன் பெற்றுக்கொடுப்பதாக தெரிவித்தனர்.
    • கடன் கிடைக்கா விட்டால் ஆவணசெ லவுக்கான பணத்தை திருப்பி கொடுப்பதாக கூறினார்கள்.

    திருப்பூர் :

    திருப்பூர் பல்லடம் ரோட்டை சேர்ந்தவர் சரவணன் (வயது37). பனியன் நிட்டிங் நிறுவனம் வைத்துள்ளார். இவர் திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதில்தனக்கு தெரிந்த கணபதிபாளையத்தை சேர்ந்த ராஜா (44),திண்டு க்கல்லை சேர்ந்த பாபு (53) ஆகியோர் தொழில் நிமித்தமாக ரூ.5 கோடி குறைந்த வட்டியில் வங்கியில் கடன் பெற்றுக்கொடுப்பதாக தெரிவித்தனர். மேலும் ஆவண செலவுக்காக ரூ.20 லட்சம் கேட்டனர். நான் ரூ.19 லட்சத்து 66 ஆயிரத்தை வங்கிக்கணக்கில் அவர்களுக்கு கடந்த பிப்ரவரி மாதம்அனுப்பி வைத்தேன். கடன் கிடைக்கா விட்டால் ஆவணசெ லவுக்கான பணத்தை திருப்பி கொடுப்பதாக கூறினார்கள்.அதன்பிறகு அவர்கள் கடன் தொகையை பெற்றுக்கொடுக்கவில்லை.

    நான் அனுப்பி வைத்த பணத்தையும் திருப்பி க்கொடுக்காமல் ஏமாற்றி, எனக்கு கொலைமி ரட்டல் விடுத்தனர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியு ள்ளார். புகாரை பெற்ற போலீசார் ராஜா, பாபு ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×