search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Banyan Company"

    • கைவசம் உள்ள உள்ளூர் தொழிலாளர் மற்றும் வடமாநில தொழிலாளரை கொண்டு கடந்த வாரம் முழுவதும் பணிகளை செய்தனர்.
    • ஜாப் ஒர்க் நிறுவனங்களும் தங்கள் இயக்கத்தை தொடங்கும் என பின்னலாடை உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களில் வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் உட்பட 6 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர். தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகையை தங்கள் சொந்த ஊரில் கொண்டாடுவதையே வெளி மாவட்ட மக்கள் விரும்புகின்றனர்.

    இந்நிலையில் தீபாவளி பண்டிகைக்கு கடந்த 10-ந்தேதியே புறப்பட்டு சென்றனர். பின்னலாடை நிறுவனங்களில் வழக்கம் போல் அவசரகதியில் முடிக்க வேண்டிய ஆர்டர்கள் இந்த முறை இல்லை. இயக்கம் சீராக இருப்பதால் நிறுவனங்களும் தாராளமாக 10 நாட்கள் வரை விடுமுறை அளித்தன. வடமாநில தொழிலாளர்களும் சொந்த ஊர் சென்றனர்.

    நிர்வாகம் மற்றும் அலுவலக பணியாளர்கள் ஏற்கனவே பணிக்கு வந்த நிலையில், கைவசம் உள்ள உள்ளூர் தொழிலாளர் மற்றும் வடமாநில தொழிலாளரை கொண்டு கடந்த வாரம் முழுவதும் பணிகளை செய்தனர்.

    விடுமுறையில் சென்ற தொழிலாளர்கள் பலர் இன்று திருப்பூர் திரும்பியுள்ளதால் பின்னலாடை நிறுவனங்கள் இயல்பான இயக்கத்தை தொடங்கி உள்ளன. ஜாப் ஒர்க் நிறுவனங்களும் தங்கள் இயக்கத்தை தொடங்கும் என பின்னலாடை உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.மேலும் தொழிலாளர்கள் திரும்பிவிட்டதால் இன்று முதல் அனைத்து கடைகளும் விடுமுறை முடிந்து பரபரப்பான இயக்கத்தை தொடங்கின.

    • ஏ.டி.எம்., எந்திரத்தில் ரூ.10 ஆயிரம் பணத்தை எடுத்து கொண்டு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
    • இரண்டு பைக்கில் வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் வழி மறித்தனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் பெருமாநல்லுார் அருகேயுள்ள வட்டாலபதி கிராமம், கருணாம்பதியை சேர்ந்தவர் பிரபு (வயது 44), பனியன் தொழிலாளி.இவர் பெருமாநல்லுாரில் உள்ள ஏ.டி.எம்., எந்திரத்தில் ரூ.10 ஆயிரம் பணத்தை எடுத்து கொண்டு தனது மோட்டார் சைக்கிளில் குன்னத்தூர் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். கொண்டத்துக்காளியம்மன் கோவில் அருகே சென்ற போது இரண்டு பைக்கில் வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் பிரபுவை வழி மறித்தனர்.

    பின்னர் மறைத்து வைத்திருந்தகத்தியை காட்டி மிரட்டி அவரிடமிருந்த, ரூ.10 ஆயிரம் பணத்தை பறித்து கொண்டு தப்பினர்.இதனால் அதிர்ச்சி அடைந்த பிரபு, பெருமாநல்லூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து, பணம் பறிப்பில் ஈடுபட்ட ஈட்டி வீரம்பாளையம் ஊராட்சி லட்சுமி நகரை சேர்ந்த அரவிந்த் (23), சிவசங்கர் (22), முட்டியங்கிணறு பகுதியை சேர்ந்த சாரதி,(21), அணைப்பதியை சேர்ந்த பரசுராமன், (24) ஆகிய நான்கு பேரை கைது செய்தனர் மேலும் அவர்களிடமிருந்து இரண்டு மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர்.

    • ரூ.5 கோடி குறைந்த வட்டியில் வங்கியில் கடன் பெற்றுக்கொடுப்பதாக தெரிவித்தனர்.
    • கடன் கிடைக்கா விட்டால் ஆவணசெ லவுக்கான பணத்தை திருப்பி கொடுப்பதாக கூறினார்கள்.

    திருப்பூர் :

    திருப்பூர் பல்லடம் ரோட்டை சேர்ந்தவர் சரவணன் (வயது37). பனியன் நிட்டிங் நிறுவனம் வைத்துள்ளார். இவர் திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதில்தனக்கு தெரிந்த கணபதிபாளையத்தை சேர்ந்த ராஜா (44),திண்டு க்கல்லை சேர்ந்த பாபு (53) ஆகியோர் தொழில் நிமித்தமாக ரூ.5 கோடி குறைந்த வட்டியில் வங்கியில் கடன் பெற்றுக்கொடுப்பதாக தெரிவித்தனர். மேலும் ஆவண செலவுக்காக ரூ.20 லட்சம் கேட்டனர். நான் ரூ.19 லட்சத்து 66 ஆயிரத்தை வங்கிக்கணக்கில் அவர்களுக்கு கடந்த பிப்ரவரி மாதம்அனுப்பி வைத்தேன். கடன் கிடைக்கா விட்டால் ஆவணசெ லவுக்கான பணத்தை திருப்பி கொடுப்பதாக கூறினார்கள்.அதன்பிறகு அவர்கள் கடன் தொகையை பெற்றுக்கொடுக்கவில்லை.

    நான் அனுப்பி வைத்த பணத்தையும் திருப்பி க்கொடுக்காமல் ஏமாற்றி, எனக்கு கொலைமி ரட்டல் விடுத்தனர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியு ள்ளார். புகாரை பெற்ற போலீசார் ராஜா, பாபு ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • இருதரப்புக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.
    • பனியன் நிறுவனத்துக்குள் கட்டை, கத்தி ஆகியவை எடுத்து கொண்டு அத்துமீறி நுழைந்தனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் ராதா நகரை சேர்ந்தவர் அபிஷேக் ( வயது 21). பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது நிறுவனத்தில் வேலை செய்யும் தமிழ்செல்வம் என்பவர் பனியன் நிறுவனத்துக்கு வெளியே நின்றிருந்தார். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வசந்த், ரமணா, முரளி ஆகியோர் தமிழ்செல்வத்தை உரசுவது போல் சென்றனர்.

    இதனால் இருதரப்புக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. அதன்பின் மூவரும் தனது நண்பர்கள் சிலரை அழைத்து பனியன் நிறுவனத்துக்குள் கட்டை, கத்தி ஆகியவை எடுத்து கொண்டு அத்துமீறி நுழைந்தனர். வாக்குவாதம் தொடர்பாக, அங்கிருந்தவர்களை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.

    இதுதொடர்பான புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த திருப்பூர் வடக்கு போலீசார் கேசவன், ரமணா, அருண்குமார், மோகன்ராஜ், தனுஷ்,வசந்த், சந்துரு, முரளி என 8 பேர் கொண்ட கும்பலை கைது செய்தனர்.

    ×