search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேர்தல் அதிகாரிகள்"

    • 3 மண்டலங்களிலும் துணை கமிஷனராக செயல்பட்டு வருகிற அதிகாரிகள் இந்த பொறுப்பை மேற்கொண்டு வருகின்றனர்.
    • தபால் ஓட்டுகள் பற்றிய விவரங்களை சேகரித்து வழங்கும் பணியில் இவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    சென்னை:

    சென்னை மாவட்டத்தில் உள்ள 3 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தும் அதிகாரிகளாக ஏற்கனவே 3 பேர் நியமிக்கப்பட்டனர். 3 மண்டலங்களிலும் துணை கமிஷனராக செயல்பட்டு வருகிற அதிகாரிகள் இந்த பொறுப்பை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்நிலையில் 16 சட்டமன்ற தொகுதிகள் அடிப்படையில் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மற்றும் கூடுதல் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகளை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.

    16 உதவி தேர்தல் அதிகாரிகள் பெயர் விவரம் மற்றும் தொடர்பு கொள்ளும் எண்களுடன் தொகுதி வாரியாக விவரம் வருமாறு:-

    ஆர்.கே.நகர் தொகுதி

    எஸ்.வாசுகி, இணை இயக்குனர் ஆதி திராவிட நலத்துறை. செல்-73388 01243

    அனுஷ்யாதேவி, மாவட்ட வருவாய் அதிகாரி, சென்னை. செல்-94450 00901.

    வி.முத்துசாமி, இணை கமிஷனர், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை, செல்-90951 54565

    மகாலட்சுமி, பொது மேலாளர், தமிழ்நாடு சர்க்கரை கழகம், செல்-80155 02885.

    எஸ்.தனலிங்கம், பொது மேலாளர், டான்சிட்கோ, செல்-94450 06554.

    எம்.கலைச்செல்வி, பொது மேலாளர், மாநில தொழில்கள் முன்னேற்ற கழகம், செல்-96778 51335.

    குழந்தைசாமி, செட்டில் மெண்ட் அதிகாரி, சர்வே மற்றும் செட்டில்மெண்ட், செல்-99449 14120.

    பி.மணிவண்ணன், கூடுதல் இயக்குநர், ஊரக சுகா தார மருத்துவ சேவை, செல்-73581 44619.

    வி.சங்கர நாராயணன், பொது மேலாளர், தமிழ்நாடு சிமெண்ட் கார்ப்பரேஷன், செல்-94865 91402.

    என்.ராகவேந்திரன், பொது மேலாளர், டாம்கால், செல்-90477 99947.

    செந்தில்குமார், பொது மேலாளர், அரசு கேபிள் நிறுவனம், செல்-82704 89470.

    ஆர்.பன்னீர்செல்வம், சீனியர் மண்டல மேலாளர், டாஸ்மாக், செல்-96293 28933.

    துர்காதேவி, செயலாளர் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம், செல்-94450 74956.

    சரவணமூர்த்தி, மாவட்ட வருவாய் அலுவலர், சென்னை மாநகராட்சி, செல்-94451 90740.

    விஜயலட்சுமி, பொது மேலாளர், தமிழ்நாடு பெண்கள் வளர்ச்சி கழகம். செல்-70100 34495.

    கவிதா, பொது மேலாளர், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம், செல்-99629 55626.

    85 வயதுக்கு மேற்பட்ட வயதானவர்கள், மாற்றுத் திறனாளிகள், தபால் ஓட்டுகள் பற்றிய விவரங்களை சேகரித்து வழங்கும் பணியில் இவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    • சுங்க சாவடியில் தேர்தல் கண்காணிப்பாளர்கள் தில்லேஸ்வரராவ், கிருஷ்ணாராவ் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து சாலையில் பணத்தை வீசி சென்றவர்கள் யார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலத்தில் தற்போது எம்.எல்.சி. தேர்தல் நடைபெற உள்ளது. அரசியல் கட்சியினர் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த நிலையில் ஸ்ரீகாகுளத்தில் இருந்து நரசன்னபேட்டை வழியாக மடபம் சுங்கசாவடி நோக்கி இரவில் ஆட்டோ வேகமாக வந்தது.

    அப்போது சுங்க சாவடியில் தேர்தல் கண்காணிப்பாளர்கள் தில்லேஸ்வரராவ், கிருஷ்ணாராவ் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர். இதனைக் கண்ட ஆட்டோவில் இருந்தவர்கள் தங்களிடம் இருந்த 500 ரூபாய் நோட்டுக்களை சாலையில் வீசிவிட்டு ஆட்டோவை நிறுத்தாமல் வேகமாக சென்றனர். இதனைக் கண்ட சுங்க சாவடி ஊழியர்கள் ஆட்டோவை பிடிக்க துரத்திச் சென்றனர்.

    ஆனால் ஆட்டோ வேகமாக சென்று இருட்டில் மறைந்தது.500 ரூபாய் நோட்டுகள் சாலையில் சிதறி கிடப்பதை கண்ட அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் ஆங்காங்கே வாகனங்களை நிறுத்திவிட்டு ஓடிச் சென்று பணத்தை எடுத்தனர்.

    இதனைக் கண்ட தேர்தல் கண்காணிப்பாளர்கள் சாலையில் இருந்த பணத்தையும் வாகன ஓட்டிகள் எடுத்த பணத்தையும் பறிமுதல் செய்தனர். அதில் ரூ.88 ஆயிரம் இருந்தது.

    இதையடுத்து பணத்தை ஸ்ரீ காகுளம் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து சாலையில் பணத்தை வீசி சென்றவர்கள் யார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமார் அனுமதி இன்றி திறக்கப்பட்ட தேர்தல் அலுவலகங்கள் குறித்து கணக்கெடுக்க உத்தரவிட்டார்.
    • தி.மு.க.வினர் 10 இடங்களிலும், அ.தி.மு.க.வினர் 4 இடங்களிலும் அனுமதி இன்றி தேர்தல் அலுவலகம் திறந்து இருப்பது தெரியவந்தது.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27-ந்தேதி நடக்கிறது. இதற்கான அறிவிப்பை கடந்த மாதம் 18-ந்தேதி தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அன்று மாலை முதலே கிழக்கு தொகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது.

    மேலும் தேர்தல் தொடர்பாக தேர்தல் ஆணையம் கடும் கட்டுப்பாடுகளை விதித்தது. அதன்படி ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் கொண்டு சென்றால், உரிய ஆவணங்கள் இருக்க வேண்டும். இல்லை என்றால் அவை பறிமுதல் செய்யப்படும் என்றும், மேலும் ரூ.10 ஆயிரத்துக்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் அறிவித்தனர்.

    மேலும் தேர்தல் அலுவலகம் திறப்பு, பிரசாரம், வாகனங்கள், பொதுக்கூட்டத்துக்கு முன் அனுமதி பெற வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் தேர்தல் பிரசாரம் தற்போது தீவிரமாக நடந்து வரும் நிலையில் தி.மு.க., அ.தி.மு.க.வினர் ஒருவர் மீது ஒருவர் மாறி, மாறி குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர். அ.தி.மு.க.வினர், தி.மு.க.வினர் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் அனுமதி இன்றி தேர்தல் அலுவலகம் திறந்து இருப்பதாக கூறினர்.

    இதே போல் அ.தி.மு.க.வினர் மீதும் தி.மு.க.வினர் புகார் கூறி வந்தனர்.

    இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமார் அனுமதி இன்றி திறக்கப்பட்ட தேர்தல் அலுவலகங்கள் குறித்து கணக்கெடுக்க உத்தரவிட்டார். அதன்படி தேர்தல் அலுவலர்கள் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது தி.மு.க.வினர் 10 இடங்களிலும், அ.தி.மு.க.வினர் 4 இடங்களிலும் அனுமதி இன்றி தேர்தல் அலுவலகம் திறந்து இருப்பது தெரியவந்தது.

    தி.மு.க. சார்பில் கே.எஸ்.நகர், கே.என்.கே. ரோடு, பி.பி.அக்ரஹாரம் பகுதியில் உள்ள வன்னியர் தெரு, வைராபாளையத்தில் உள்ள மாரியம்மன் கோவில் அருகே உள்ள பணிமனை, அன்னை சத்யா நகர் பகுதியில் உள்ள பணிமனை, சிந்தன் நகர், வரதப்பா தெரு, பெரியார் நகர் அருகே சாந்தன் கரடு, கருங்கல்பாளையம், கள்ளுக்கடை மேடு ஆகிய இடங்களில் தி.மு.க தேர்தல் அலுவலகமும்,

    திருவள்ளுவர் நகர், கல்யாண சுந்தரம் வீதியில் உள்ள அலுவலகம், ஆலமரத்து தெரு, மணல் மேடு ஆகிய இடங்களில் அ.தி.மு.க. தேர்தல் அலுவலகமும் அனுமதி இன்றி செயல்படுவது தெரிய வந்தது.

    இதையடுத்து அந்த அலுவலகங்களுக்கு சீல் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    அதன்படி இன்று காலை தேர்தல் அதிகாரிகள் கள்ளுக்கடை மேட்டில் திறக்கப்பட்டு இருந்த தி.மு.க. தேர்தல் பணிமனையை பூட்டி சீல் வைத்தனர். தொடர்ந்து ஒவ்வொரு இடமாக சென்று சீல் வைக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    மேலும் அனுமதி இன்றி தேர்தல் அலுவலகம் திறந்த கட்சியினர் மீதும் போலீசார் வழக்குப்பதிவும் செய்து உள்ளனர்.

    • சேலம் மாவட்டத்தில் உள்ளாட்சி இடைத்தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது.
    • சேலம் ஒன்றிய கவுன்சிலர் உள்பட 6 பதவிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடக்கிறது. 6 பதவிகளுக்கு 29 பேர் போட்டியில் உள்ளனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் காலியாக உள்ள சேலம் யூனியன் வார்டு உறுப்பினர் மற்றும் 11 பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் தெத்திகிரிப்பட்டி, மின்னாம்பள்ளி, பூவனூர், புள்ளகவுண்டம்பட்டி, இலவம்பட்டி, நீர்முள்ளிக்–குட்டை பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியின்றி 6 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    மீதமுள்ள சேலம் ஒன்றிய கவுன்சிலர் உள்பட 6 பதவிகளுக்கு இன்று ( 9ந் தேதி ) வாக்குப்பதிவு நடக்கிறது. சேலம் யூனியன் வார்டு உறுப்பினர் பதவிக்கு 16 வேட்பாளர்கள் போட்டியில் உள்ளனர். தி.மு.க வேட்பாளராக முருகன் போட்டியிடுகிறார். மற்ற அனைவரும் சுயேட்சை வேட்பாளர்கள். வார்டு உறுப்பினர் பதவிகளில் நடுப்பட்டியில் 3 பேர், தேவியாக்குறிச்சியில் 2 பேர், கிழக்கு ராஜபாளையத்தில் 3 பேர், கூணான்டியூரில் 3 பேர், பொட்டனேரியில் 2 பேர் என மொத்தம் 6 பதவிகளுக்கு 29 பேர் போட்டியில் உள்ளனர்.

    இளம்பெண் ஓட்டு போட்ட காட்சி.

    இளம்பெண் ஓட்டு போட்ட காட்சி.

    இதற்கான தேர்தலை நடத்த தேர்தல் அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர். சேலம் ஒன்றியம் 8வது வார்டில் 10 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. 5 ஊராட்சி மன்ற வார்டுகளுக்கும் வார்டுக்கு ஒரு வாக்குச்சவாடி அமைக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகி–றார்கள். மாலை 6 மணி வரை இந்த தேர்தல் நடக்கிறது.

    மாலை 5 மணி முதல் 6 மணி வரை கொரோனா நோயாளிகள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் 9 ஆயிரத்து 510 வாக்காளர்கள் வாக்களிக்கிறார்கள். இதற்கான வாக்கு எண்ணிக்கை வருகிற 12ந் தேதி நடக்கிறது. இதையொட்டி அந்த பகுதியில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    ×