search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Election officers"

    • பாராளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் நாளை (19-ம் தேதி) தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது
    • அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில், 2 மக்களவைத் தொகுதிகளுடன் சேர்த்து 60 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் நாளை தேர்தல் நடைபெறுகிறது

    பாராளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் நாளை (19-ம் தேதி) தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

    இதன்படி நாடு முழுவதும் முதல் கட்டமாக நாளை முதல் கட்ட தேர்தல் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம், அருணாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட 21 மாநிலங்களுக்கு உள்பட்ட 102 தொகுதிகளில் நடைபெறுகிறது.

    அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில், 2 மக்களவைத் தொகுதிகளுடன் சேர்த்து 60 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் நாளை தேர்தல் நடைபெறுகிறது.

    சட்டப்பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 2 ஆம் தேதியும், மக்களவைத் தோ்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4 ஆம் தேதியும் எண்ணப்படுகின்றன.

    இதையொட்டி, மாநிலத்தில் 2,226 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 228 மையங்களை தோ்தல் அதிகாரிகள் நடந்து மட்டுமே சென்றடைய முடியும். அந்த அளவிற்கு தேர்தல் அதிகாரிகளுக்கு சவால் நிறைந்த பணி, அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் உள்ளது. சீன எல்லையொட்டிய அருணாச்சலப் பிரதேசம் கடுமையான நிலப்பரப்புகளைக் கொண்டது. அதிலும் 61 வாக்குப்பதிவு மையங்களுக்கு 2 நாள்களும், 7 மையங்களுக்கு 3 நாள்களும் கால் நடையாக நடந்து செல்ல வேண்டியிருக்கும்.

    இந்நிலையில், அருணாச்சலப் பிரதேசம் மாநிலத்தின் கஷேங் என்ற மலைக்கிராம வாக்குச்சாவடிக்கு அதிகாரிகள் சிரமப்பட்டு பயணிக்கும் வீடியோவை தேர்தல் ஆணையம் பகிர்ந்துள்ளது.

    • புதுவை நகராட்சி ஆணையர்கள் தேர்தல் நடத்தும் அதிகாரியாக அறிவிக்கப் பட்டுள்ளனர்.
    • புதிய நடைமுறை உடனடியாக அமலுக்கு வர அரசாணை வெளி யிடப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவையில் பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தலை நடத்த வசதியாக நடைமுறையில் சில மாற்றங்களை அரசு மேற்கொண்டுள்ளது.

    பாராளுமன்ற தேர்தலை பொறுத்தவரை கலெக்டர் தேர்தல் அதிகாரியாக தொடர்கிறார். உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியாக இருந்து வந்த கலெக்டரின் சிறப்பு பணி அதிகாரி நீக்கப்பட்டு, துணை மாவட்ட தேர்தல் அதிகாரி, உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியாக இருப்பார் என அறிவிக்கப்பட்டுள்து.

    மற்ற 12 இ.ஆர்ஓ.,க்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

    சட்டசபை தேர்தலை பொறுத்தவரை சுற்றுலா, தொழில்துறை இயக்குனர்கள் கவனித்து வந்த சட்டசபை தொகுதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு பதிலாக உழவர்கரை, புதுவை நகராட்சி ஆணையர்கள் தேர்தல் நடத்தும் அதிகாரியாக அறிவிக்கப் பட்டுள்ளனர்.

    சில சட்டசபை தொகுதிகளிலும் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர். உழவர்கரை நகராட்சி ஆணையர் காமராஜர் நகர், காலாப்பட்டு, லாஸ்பேட்டை தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரியாகவும், புதுவை நகராட்சி கமிஷனர் முத்தியால்பேட்டை, ராஜ்பவன் தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரியாகவும், வடக்கு துணை கலெக்டர் அரியாங்குப்பம், மணவெளி தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த திருத்தங்களுடன் கூடிய புதிய நடைமுறை உடனடியாக அமலுக்கு வர அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

    திருத்தப்பட்ட பட்டியல் விபரம் வருமாறு:-

    வில்லியனூர் சப்-கலெக்டர்- மண்ணாடிப்பட்டு, திருபுவனை, ஊசுடு. நில அளவை துறை இயக்குனர்- மங்கலம், வில்லியனூர், உழவர்கரை, கூட்டுறவு பதிவாளர்- கதிர்காமம், இந்திராநகர், தட்டாஞ்சாவடி. உழவர்கரை நகராட்சி ஆணையர்- காமராஜர் நகர், லாஸ்பேட்டை, காலாப்பட்டு.

    புதுவை நகராட்சி ஆணையர்- முத்தி யால்பேட்டை, ராஜ்பவன், உப்பளம். துணை தொழிலளார் ஆணையர்- உருளை யன்பேட்டை, நெல்லித் தோப்பு, முதலியார்பேட்டை, வடக்கு துணை கலெக்டர் - அரியாங்குப் பம், மணவெளி. துணை போக்குவரத்து ஆணையர்- நெட்டப்பாக்கம், ஏம்பலம், பாகூர்.

    காரைக்கால் துணை குடிமைப்பொருள் வழங்கல் அதிகாரி- நெடுங்காடு, திருநள்ளாறு. காரைக்கால் துணை கலெக்டர்- காரைக்கால் வடக்கு, தெற்கு, நிரவி, டிஆர்.பட்டினம்.

    மாகி நிர்வாக அதிகாரி- மாகி, ஏனாம் நிர்வாகி- ஏனாம்.

    • சேலம் மாவட்டத்தில் உள்ளாட்சி இடைத்தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது.
    • சேலம் ஒன்றிய கவுன்சிலர் உள்பட 6 பதவிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடக்கிறது. 6 பதவிகளுக்கு 29 பேர் போட்டியில் உள்ளனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் காலியாக உள்ள சேலம் யூனியன் வார்டு உறுப்பினர் மற்றும் 11 பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் தெத்திகிரிப்பட்டி, மின்னாம்பள்ளி, பூவனூர், புள்ளகவுண்டம்பட்டி, இலவம்பட்டி, நீர்முள்ளிக்–குட்டை பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியின்றி 6 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    மீதமுள்ள சேலம் ஒன்றிய கவுன்சிலர் உள்பட 6 பதவிகளுக்கு இன்று ( 9ந் தேதி ) வாக்குப்பதிவு நடக்கிறது. சேலம் யூனியன் வார்டு உறுப்பினர் பதவிக்கு 16 வேட்பாளர்கள் போட்டியில் உள்ளனர். தி.மு.க வேட்பாளராக முருகன் போட்டியிடுகிறார். மற்ற அனைவரும் சுயேட்சை வேட்பாளர்கள். வார்டு உறுப்பினர் பதவிகளில் நடுப்பட்டியில் 3 பேர், தேவியாக்குறிச்சியில் 2 பேர், கிழக்கு ராஜபாளையத்தில் 3 பேர், கூணான்டியூரில் 3 பேர், பொட்டனேரியில் 2 பேர் என மொத்தம் 6 பதவிகளுக்கு 29 பேர் போட்டியில் உள்ளனர்.

    இளம்பெண் ஓட்டு போட்ட காட்சி.

    இளம்பெண் ஓட்டு போட்ட காட்சி.

    இதற்கான தேர்தலை நடத்த தேர்தல் அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர். சேலம் ஒன்றியம் 8வது வார்டில் 10 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. 5 ஊராட்சி மன்ற வார்டுகளுக்கும் வார்டுக்கு ஒரு வாக்குச்சவாடி அமைக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகி–றார்கள். மாலை 6 மணி வரை இந்த தேர்தல் நடக்கிறது.

    மாலை 5 மணி முதல் 6 மணி வரை கொரோனா நோயாளிகள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் 9 ஆயிரத்து 510 வாக்காளர்கள் வாக்களிக்கிறார்கள். இதற்கான வாக்கு எண்ணிக்கை வருகிற 12ந் தேதி நடக்கிறது. இதையொட்டி அந்த பகுதியில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    ஓட்டு எண்ணும் மையத்தில் தேர்தல் பார்வையாளர்கள் ஆய்வு செய்தனர்.
    சிவகங்கை:

    காரைக்குடி அழகப்பா அரசு என்ஜினீயரிங் கல்லூரி மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் அமைத்துள்ள ஓட்டு எண்ணும் மையங்களை தேர்தல் பார்வையாளர் ஹர்பிரீத்சிங் பார்வையிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விளக்கம் அளித்தார். சிவகங்கை பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சிவகங்கை, காரைக்குடி, திருப்பத்தூர், மானாமதுரை, திருமயம், ஆலங்குடி சட்டசபை தொகுதிகளில் நாளை (வியாழக் கிழமை) ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது.

    இது தவிர மானாமதுரை சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தலும் நடக்கிறது. ஓட்டுப்பதிவு முடிந்ததும் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் ஓட்டு எண்ணும் மையமான காரைக்குடி அழகப்பா அரசு என்ஜினீயரிங் மற்றும் அழகப்பா அரசு பாலிடெனிக் கல்லூரிகளில் வைக்கப்படும்.

    அடுத்த மாதம் (மே) 23-ந் தேதி அன்று ஓட்டுகள் எண்ணும் பணி நடைபெறுகிறது. ஓட்டு எண்ணும் மையங்களை பாராளுமன்றதேர்தல் பொது பார்வையாளர் ஹர்பிரீத்சிங், மானாமதுரை சட்டமன்ற தொகுதி பொது பார்வையாளர் சீனிவாசலு ஆகியோர் ஆய்வு செய்தனர்.

    தொடர்ந்து கலெக்டர் ஜெயகாந்தன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் மற்றும் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் கண்ணன் ஆகியோர்களிடம் ஓட்டு எண்ணும் மையத்தில் செய்யப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும், ஓட்டு எண்ணும் மையங்களில் தடுப்புகள் அமைப்பது குறித்தும் ஆலோசனை செய்தனர். காரைக்குடி தாசில்தார் பாலாஜி உள்பட அதிகாரிகள் உடனிருந்தனர். 
    மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கோவையில் உரிய அனுமதியின்றி கலந்துரையாடல் நடத்தியது தொடர்பாக பள்ளிக்கு விளக்கம் கேட்டு தேர்தல் அலுவலர்கள் இன்று நோட்டீசு அனுப்ப உள்ளனர். #LSPolls #KamalHaasan
    கோவை:

    மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கோவையில் நேற்று பாராளுமன்ற தேர்தல் அறிக்கையை வெளியிட்டு, வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தார்.

    முன்னதாக சிங்காநல்லூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் நேற்று மதியம் டாக்டர்களுடன் கலந்துரையாடினார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு சிங்காநல்லூர் தொகுதி பறக்கும் படை அலுவலர்கள் சென்றனர்.

    உரிய அனுமதி இல்லாமல் கூட்டம் நடத்தக்கூடாது என்று அதிகாரிகள் கூறினர். இதையடுத்து கலந்துரையாடல் கூட்டம் பாதியிலேயே முடித்துக் கொள்ளப்பட்டது. இதனால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.

    இந்நிலையில், உரிய அனுமதியின்றி கூட்டம் நடத்த அனுமதி வழங்கியது ஏன்? என விளக்கம் கேட்டு விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு கலெக்டர் ராஜாமணி, சிங்காநல்லூர் தொகுதி தேர்தல் உதவி அலுவலருக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில் பள்ளிக்கு விளக்கம் கேட்டு தேர்தல் அலுவலர்கள் இன்று நோட்டீசு அனுப்ப உள்ளனர்.

    இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், உரிய அனுமதியின்றி கூட்டம் நடத்தியது தொடர்பாக விளக்கம் கேட்டு சம்பந்தப்பட்ட பள்ளிக்கு இன்று நோட்டீசு அனுப்பப்படும். அதன் பேரில் அவர்கள் விளக்கம் அளிப்பார்கள். விளக்கம் திருப்திகரமாக இல்லையென்றால் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். #LSPolls #KamalHaasan
    ×