search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சென்னை குடிநீர்"

    • வீராணம் ஏரியின் மொத்த கொள்ளளவு 1465 மில்லியன் கனஅடியாகும்.
    • தற்போது நீர்மட்டம் 2 மில்லியன் கனஅடியாக குறைந்துள்ளதாக தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது.

    சென்னை மக்கள் குடிநீருக்காக புழல், செம்பரம்பாக்கம் உள்ளிட்ட ஏரிகளில் இருந்து தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. கூடுதல் குடிநீர் கிடைக்க வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு ராட்சத குழாய் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டு, சென்னை மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் வீராணம் ஏரி நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளதால் வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்புவது நிறுத்தப்பட்டுள்ளது.

    வீராணம் ஏரியின் மொத்த கொள்ளளவு 1465 மில்லியன் கனஅடியாகும். மேட்டுர் அணை திறக்கப்பட்டு, அதன்மூலம் வீராணம் ஏரிக்கு காவிரி நீர் வந்தடைந்தபோது ஏரி முழுக் கொள்ளளவை எட்டியது. சுமார் 30 ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட விளைநிலங்களுக்கு வீராணம் ஏரியில் இருந்து நீர் திறந்து விடப்பட்டது.

    மேலும் சென்னைக்கு தினந்தோறும் 76 கனஅடி நீர் குடிநீருக்காக அனுப்பி வைக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில்தான் தற்போது ஏரியின் கொள்ளளவு 2 மில்லியன் கனஅடி நீராக குறைந்துள்ளது. நேற்று சென்னைக்கு அனுப்பப்பட்ட நீர் 3 அடியாக குறைக்கப்பட்டது.

    இந்த நிலையில்தான் இன்று முழுவதுமாக நிறுத்தப்பட்டுள்ளது. விவசாயி நிலங்களுக்கு திறந்து விடப்பட்ட தண்ணீரும் நிறுத்தப்பட்டுள்ளது.

    வடலூர் வாலாஜா ஏரியில் இருந்து நீர் எடுக்க மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாலாஜா ஏரியின் நீர் ஆதாரம் என்எல்சி சுரங்கங்களில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தேங்கிய மழைநீர் பயன்படுத்தும் வகையிலும் புதிய திட்டத்தை சென்னை குடிநீர் வாரியம் உருவாக்கி உள்ளது.
    • தண்ணீரை செம்பரம்பாக்கத்துக்கு கொண்டு செல்ல ராட்சத இரும்பு குழாய்கள் பதிக்கும் பணி நடந்து வருகிறது.

    சென்னை:

    மாங்காடு அருகே உள்ள சிக்கராயபுரம் பகுதியில் ஏராளமான கல் குவாரிகள் உள்ளன. 25க்கும் மேற்பட்ட கல்குட்டைகளில் சமீபத்தில் பெய்த மழையால் தண்ணீர் தேங்கி குளம் போல் காட்சி அளிக்கிறது.

    இந்த தண்ணீரை பயன்படுத்தாமல் விட்டு விடுவதால் பருவமழை காலங்களில் அதிக அளவில் வரும் தண்ணீர் அந்த பகுதியில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்து பெரிய அளவில் வெள்ளப் பாதிப்புகளை ஏற்படுத்தும்.

    இதை தவிர்க்கும் வகையிலும், தேங்கிய மழைநீர் பயன்படுத்தும் வகையிலும் புதிய திட்டத்தை சென்னை குடிநீர் வாரியம் உருவாக்கி உள்ளது.

    இந்திட்டத்தின் படி கல்குட்டைகளில் தேங்கி கிடக்கும் மழைநீரை குழாய்கள் மூலம் செம்பரம்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டு சென்று சுத்திகரித்து சென்னைக்கு குடிநீராக சப்ளை செய்யப்படும்.

    தற்போது குடிநீர் வாரியம் ஆய்வு செய்ததில் 25 கல்குட்டைகளில் 0.350 டி.எம்.சி. தண்ணீர் தேங்கி இருப்பது தெரியவந்து உள்ளது.

    இந்த தண்ணீரை செம்பரம்பாக்கத்துக்கு கொண்டு செல்ல ராட்சத இரும்பு குழாய்கள் பதிக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணிகள் இன்னும் 2 நாளில் முடிந்து விடும். அதன் பிறகு தினமும் 30 மில்லியன் லிட்டர் அளவுக்கு செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டு செல்லப்படும் என்று குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

    வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பு கல்குட்டைகளில் இருக்கும் தண்ணீரை எடுத்துவிட திட்டமிட்டு உள்ளனர். இதனால் மழை காலங்களில் பெருமளவு தண்ணீர் கல் குட்டைகளில் தேங்கும். கிராமங்களுக்குள் வெள்ளம் புகுவது தவிர்க்கப்படும்.

    சென்னையில் 15 ஆண்டுகளுக்குப்பின் மழையளவு 55 சதவீதம் குறைந்துள்ளதால் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.
    சென்னை:

    தமிழ்நாட்டில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை பொய்த்துவிட்டது. மழை சீசன் முடிவடையும் தருவாயில் உள்ளது. பல மாவட்டங்களில் மழை குறைவாகவே பெய்துள்ளது. இருந்தாலும் சென்னையில் மிகவும் குறைந்த அளவே மழை பெய்து இருக்கிறது.

    சென்னையில் இதுவரை வடகிழக்கு பருவமழை 84 செ.மீ. பெய்து இருக்க வேண்டும். ஆனால் 35 செ.மீ. மட்டுமே பெய்துள்ளது. கடந்த 2003-ம் ஆண்டில் 31 செ.மீ. மழைதான் பெய்து இருந்தது. தற்போது 15 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அதே நிலை ஏற்பட்டுள்ளது.

    பொதுவாக சென்னை மாவட்டத்தில் ஆண்டுக்கு சராசரியாக 140 செ.மீ. மழை பெய்ய வேண்டும். ஆனால் இந்த ஆண்டு 83 செ.மீ. மட்டுமே மழை பெய்துள்ளது.

    கடந்த 2003-ம் ஆண்டில் 31 செ.மீ. மழையே பெய்து இருந்ததால் அப்போது கடுமையான குடிநீர் தட்டுப்பாடு உருவானது. அதே நிலை தற்போதும் ஏற்படும் என நிபுணர்கள் கருதுகின்றனர். சென்னைக்கு குடிநீர் தரும் ஏரிகள் மூலம் இன்னும் 2 மாதங்களுக்கு மட்டுமே தண்ணீர் வழங்க முடியும்.



    எனவே குன்றத்தூர் அருகே உள்ள சிக்கராயபுரம் மற்றும் எருமையூரில் உள்ள கல்குவாரிகள், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள விவசாய கிணறுகள் மற்றும் ரெட்டேரி, அயனம்பாக்கம், பெரும்பாக்கம் ஏரிகளில் இருந்து குடிநீர் வழங்க சென்னை மெட்ரோ நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

    மேலும் நெய்வேலியில் 240 மீட்டர் ஆழத்தில் 9 ஆழ்துளை குழாய் கிணறுகள் அமைத்து அதன்மூலம் சென்னைக்கு குடிநீர் கொண்டு வரவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
    ×