search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "quarry water"

    சென்னை மக்களின் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க சிக்கராயபுரம் கல்குவாரி நீர், காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள போர்வெல் கிணற்று நீரை பெறவும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. #Drinkingwater #Shortage
    சென்னை:

    சென்னையில் வழக்கமாக வடகிழக்கு பருவமழை காலத்தில் சராசரியாக 757.6 மி.மீட்டர் மழை பெய்ய வேண்டும். ஆனால் கடந்த ஆண்டு பருவமழை காலத்தில் வெறும் 343.7 மி.மீட்டர் மழை மட்டுமே கிடைத்தது. இது 54 சதவீதம் மழை குறைவு ஆகும்.

    பருவமழை பொய்த்ததால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளான சோழவரம், பூண்டி, செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளில் நீர் நிரம்பவில்லை.

    தற்போதைய நிலவரப்படி பூண்டி ஏரியில் 200 மி.கனஅடியும், (மொத்த கொள்ளளவு 3231 மி.கனஅடி), சோழவரம் ஏரியில் 48 மி.கனஅடி (1081 மி.கனஅடி), புழலில் 741 மி.கனஅடியும் (3300 மி.கனஅடி), செம்பரம்பாக்கத்தில் 53 மி.கனஅடியும் (3645 மி.கனஅடி) தண்ணீர் உள்ளது.

    இந்த நான்கு ஏரிகளிலும் மொத்தம் 11 ஆயிரத்து 257 மி.கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். இன்று காலை நிலவரப்படி வெறும் ஆயிரத்து 42 மி.கனஅடி தண்ணீர் மட்டுமே இருக்கிறது. இது மொத்த கொள்ளளவில் 9 சதவீதம் ஆகும்.

    இதில் சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகளில் நீர் இருப்பு மிகவும் குறைந்த அளவே இருப்பதால் விரைவில் வறண்டு விடும் நிலையில் இருக்கிறது. இதேபோல் மற்ற ஏரிகளிலும் தண்ணீர் இருப்பு வேகமாக குறைந்து வருகிறது.

    ஏரிகளில் தற்போது இருக்கும் நீரை கொண்டு வருகிற மார்ச் மாதம் வரை மட்டுமே தண்ணீர் சப்ளை செய்ய முடியும். எனவே இந்த ஆண்டு சென்னை மக்கள் கடும் குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்நோக்கி உள்ளனர்.

    குடிநீர் தட்டுப்பாட்டை போக்க இப்போதே அதிகாரிகள் நடவடிக்கையை தீவிரப்படுத்தி வருகிறார்கள். சிக்கராயபுரம் கல்குவாரி நீர், காஞ்சீபுரம்- திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள போர்வெல் கிணற்று நீரை பெறவும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

    இதேபோல் புதிதாக போர்வெல் அமைக்கும் இடங்களையும், மற்ற ஏரிகளில் உள்ள தண்ணீரை பயன்படுத்தவும் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் புதிதாக 200 குடிநீர் தொட்டிகள் அமைக்கவும் திட்டமிட்டு இருக்கின்றனர். இதனை வைத்து சென்னை மக்களின் குடிநீர் தேவையை ஓரளவு சமாளிக்க முடியும் என்ற நம்பிக்கையில் அதிகாரிகள் உள்ளனர்.

    இப்போதே சென்னையில் பல இடங்களில் தண்ணீர் சப்ளை குறைக்கப்பட்டு விட்டது. தென்சென்னையில் இந்த மாதம் 2-வது வாரத்தில் இருந்து சில பகுதிகளில் தண்ணீர் வினியோகம் செய்யப்படவில்லை.

    இப்போது வரை சென்னை மக்களின் ஒரே நம்பிக்கையாக வீராணம் ஏரி மட்டுமே உள்ளது. வீராணம் ஏரி முழு கொள்ளளவான 1,375 மி.கனஅடியை எட்டி நிரம்பி காணப்படுகிறது. அங்கிருந்து சென்னை குடிநீர் தேவைக்கு தொடர்ந்து தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது. #Drinkingwater #Shortage
    சென்னை நகர மக்களுக்கு புதிய நீர் ஆதாரமான ஏரி-குவாரிகளில் இருந்து தண்ணீர் சப்ளை செய்யப்படும் பட்சத்தில் குடிநீர் சப்ளை முழுமையாக பூர்த்தியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #ChennaiWater

    சென்னை:

    சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகள் உள்ளன. கோடை காலத்தில் ஏரிகளில் நீர் இருப்பு குறையும் போது சென்னைக்கு குடிநீர் சப்ளை பாதிக்கப்படுகிறது.

    கடந்த ஆண்டு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்ட போது போரூர் ஏரி, சிக்கராயபுரம் கல்குவாரியில் இருந்து தண்ணீர் எடுத்து சுத்திகரித்து வினியோகிக்கப்பட்டது. இதனால் குடிநீர் தட்டுப் பாட்டை சமாளிக்க முடிந்தது.

    இதைத் தொடர்ந்து சென்னை குடிநீர் ஆதாரங்களை விரிவுபடுத்தவும் புதிய நீர் ஆதாரங்களை கண்டறியவும் சென்னை குடிநீர் வாரியத்தின் மேலாண்மை இயக்குனர் அசோக் டோஸ்ரே, செயல் இயக்குனர் பிரபு சங்கர் ஆகியோரின் கீழ் சிறப்பு குழு ஏற்படுத்தப்பட்டது.

    அவர்கள் பொதுப்பணித் துறை, மத்திய நிலத்தடி நீர் ஆணையம், அண்ணா பல்கலைக்கழகம், கிங் இன்ஸ்டிடியூட் ஆகியவற்றுடன் இணைந்து ஆய்வு மற்றும் திட்டம் வகுக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    இதில் சென்னையின் புதிய குடிநீர் ஆதாரங்களாக போரூர் ஏரி, ரெட்டேரி, மணிமங்கலம் அயனம்பாக்கம், திருநீர்மலை, நேமம், அயப்பாக்கம், ஸ்ரீபெரும்புதூர், தென்னேரி, தையூர், சிட்லபாக்கம், மாம்பாக்கம், அரசன் கழனி, பெரும்பாக்கம், கொரட்டூர் ஆகிய 15 ஏரிகள் கண்டறியப்பட்டு உள்ளன.

    இதே போல சிக்கராயபுரம், எருமையூர், நன்மங்கலம், பம்மல், பல்லாவரம், திருநீர்மலை, நல்லம்பாக்கம் ஆகிய இடங்களில் உள்ள 7 கல்குவாரி நீரையும் பயன் படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    புதிதாக கண்டறியப்பட்டுள்ள நீர் ஆதாரங்களான ஏரிகள் மற்றும் கல்குவாரிகளில் இருந்து தண்ணீரை ஆய்வுக்கு அனுப்பி உள்ளனர். இதன் முடிவை வைத்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

    இதற்கிடையே பலகட்ட ஆய்வுக்கு பிறகு ரெட்டேரியில் உள்ள நீரை சுத்திகரித்து குடிநீருக்கு பயன்படுத்தலாம் என்று பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.

    அதன்படி சென்னை குடிநீருக்கு தினசரி 1 கோடி லிட்டர் பெறும் வகையில் ரெட்டேரியில் புதிய சுத்திகரிப்பு நிலையம் அமைக்க திட்டம் சமர்ப்பிக்கப்பட்டு இருக்கிறது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்க உள்ளன.

    சென்னை நகர மக்களுக்கு புதிய நீர் ஆதாரமான ஏரி-குவாரிகளில் இருந்து தண்ணீர் சப்ளை செய்யப்படும் பட்சத்தில் குடிநீர் சப்ளை முழுமையாக பூர்த்தியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #ChennaiWater

    ×